வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, September 6, 2013

White Dog - 26 வருடங்கள் தடை செய்யப்பட்ட திரைப்படம்

தமிழ்நாட்டில், 'குற்றப்பத்திரிக்கை' திரைப்படம் அரசியல் காரணத்திற்காக தடை செய்தார்கள். 'விஸ்வரூபத்தை' மதத்தின் காரணமாக தடைச் செய்ய சொன்னார்கள். ’டாம் 999’ படத்தை தவறான கருத்தை கூறி, மக்களை அஞ்சக் கூடாது என்பதற்காக தடைச் செய்தனர். இன்னும், எத்தனையோ ஈழ தமிழர் அவலப்படங்கள் மக்கள் தெரிந்துக் கொள்ளமால் இருக்க தடைச் செய்யப்பட்டிருக்கிறது. அதேப் போல், அமெரிக்காவில் 'வெள்ளை நாய்' யை கறுப்பினத்தினர்களுக்கு எதிராக பயிற்சி அளிப்பதை தெரியாமல் இருக்க இந்த படத்தை தடை செய்திருக்கிறார்கள்.

காரில் செல்லும் போது ஜூலி என்ற நடிகை வெள்ளை நாய் மீது மோதிவிடுகிறாள். அந்த நாய்யை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வைத்தியம் பார்த்து, தன்னுடன் வைத்துக் கொள்கிறாள். அப்போது, அவள் வீட்டில் திருடன் நுழைய, அந்த வெள்ளை நாய் அவளை காப்பாற்ற, அந்த நாய் மீது அதிக பாசம் வைக்கிறாள். ஒரு நாள் அந்த வெள்ளை நாய் , நடு இரவில் சென்று ஒருவனை தாக்கி கொன்று விடுகிறது.



நாய் காணாமல் போனதாக நடிகை புகார் கொடுக்க, அந்த வீட்டை தேடி அதுவாக வந்து விடுகிறது. நாய்யை தன்னுடன் சினிமா ஷூட்டிங்க்கு அழைத்து செல்ல, அங்கு அவளுடன் நடிக்கும் நடிகையை தாக்குகிறது. அந்த ஜூலியின் காதலன் அவளிடம் அந்த நாய்க்கு எதோ கோளாறு இருக்கிறது, அதை கொன்று விட வேண்டும் என்கிறான். ஆனால், அவள் அவனிடம் இருந்து விலகி நாய்யை நாய் பயிற்சியாளரிடம் அழைத்து செல்கிறாள்.
பயிற்சியாளரான கருத்தரும் அந்த நாய்யை கொன்று விட சொல்கிறான். அங்கிருந்து கோபமாக ஜூலி நாய்யுடன் வெளியே வர, அப்போது அங்கு வேளை செய்பவனை தாக்குகிறது. அங்கு மிருகங்களுக்கு பயிற்சி அளிக்கும் கீஸ் என்ற கறுப்பர் “ இது வெள்ளை இன வெறி' நாய்” என்கிறான். ஆதாவது, கறுப்பர்களை மட்டும் தாக்க பயிற்சி அளிக்கப்பட்ட நாய்.

ஒரு நாய்யை குட்டியாக இருக்கும் போது, கறுப்பர்களை வைத்து அடிக்க வைத்து, கறுப்பர்கள் மீது வெறுப்பை வளர்த்து பய்ற்சி கொடுப்பார்கள். அந்த நாய் வளர்ந்ததும், கண்ணில் படும் கறுப்பர்களை தாக்கி சிறு வயதில் வாங்கிய அடியை பழி தீர்த்துக் கொள்ளும். இப்படி தான் ஒரு சாதான நாய்யை ‘வெள்ளை இன வெறி’ நாயாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை மாற்றுவது மிக கடினமான காரியம் என்று கீஸ் கூறுகிறான்.

ஆனால், ஜூலி தன் நாய்யை குணப்படுத்த எவ்வளவு பணம் செலவு செய்ய தயாராக இருப்பதாக கூறுகிறாள். நிற துவேஷமுள்ள நாய்யை மாற்றும் சவாலை விரும்பி ஏற்றுக் கொள்கிறான். மிருக விடுதியில் வைத்து அந்த நாய்க்கு பயிற்சி அளிக்கிறான். ஒரு நாள், அந்த நாய் மிருக விடுதியில் இருந்து தப்பித்து ஒருவனை கொன்று விடுகிறது. கீஸ் மயக்க உசிப்போட்டு அந்த வெள்ளை நாய்யை திரும்பி விடுதி கொண்டு வருகிறான். தனது தீராத முயற்சியால் நாய்யின் நிற துவேஷத்தை போக்குகிறான்.



ஜூலியை பாசமாக முத்தமிடுகிறது. ஆனால், வெள்ளை நிறத்தினரின் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்கிறது. கீஸில் பயிற்சியாளர் நண்பராக கருத்தரை தாக்க முயற்சிக்க, அந்த நாய்யை கீஸ் கொன்றுவிடுகிறான்.
கறுப்பர்களை தாக்கும் நாய்யின் தவறா ? அல்லது கறுப்பின மக்கள் மீது துவேஷத்தை வளர்த்த வெள்ளை நிற வெறியர்களின் தவறா ? என்ற நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். தவறு செய்தவர்கள் மனிதர்கள் தான்.இதில் இறந்தது மனிதனின் குப்பையை சுமந்த வெள்ளை நாய்.

உலகளவில் 1982ல் இந்த வெளிவந்தாலும், அமெரிக்காவில் வெள்ளை நிறத்தினற்கு எதிராக இருப்பதால் இந்தப் படம் தடை செய்ய பட்டது. அதிகாரப்பூர்வமாக டிசம்பர்,2008 ல் அமெரிக்காவில் இந்த படத்தில் டி.வி.டி கிடைக்க தொடங்கின. இருபத்தி ஆறு வருடங்களுக்கு மேல் ஒரு திரைப்படத்தை வல்லரசு அமெரிக்கா தடை செய்கிறது என்றால், இந்தியா இதில் பின்னோக்கி இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை.

விஸ்வரூபத்தின் தடையை எதிர்த்தவர்கள், ஏன் மெட்ராஸ் கபே, தலைவா படத்தின் தடையை ஏன் எதிர்க்கவில்லை என்று பல கேள்விகள் வருகிறது. ‘விஸ்வரூபத்தின் தடை மதத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்டது. மெட்ராஸ் கபே, தலைவா படங்களுக்கு தடை செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காக....!!

இங்கு மதத்தை விமர்சனம் செய்யும் இருக்கும் துணிச்சல் அரசியலை விமர்சனம் செய்வதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஆளும் கட்சியின் கருத்துக்கு எதிராக படம் எடுத்தால் ‘தடை’ என்ற பாஸிசக் கொள்கையில் அரசு இயங்குகிறது.

குற்றப்பத்திரிக்கை, செங்கடல், காற்றுக்கென்ன வேளி போன்ற ஈழப்படங்களை தடை செய்தவர்கள், ‘மெட்ராஸ் கபே தடையை தவறு என்று சொல்கிறார்கள். இவர்கள் தமிழ் நாட்டில் தடை செய்த தமிழ் ஈழப்படங்களை வெளியிட்ட பிறகு , ‘மெட்ராஸ் கபே’ தாராளமாக தமிழ் நாட்டில் வெளியிடலாம். தமிழ் நாட்டில் தமிழ்படங்களுக்கு தடைப்பொடுபவர்கள், ‘டாம் 999, மெட்ராஸ் கபே மாற்று மொழி படங்களின் தடைகளை விமர்சனம் செய்ய தகுதியில்லை.

தமிழ் ஈழபடங்களுக்கு தடை விதித்தது நியாயம் என்றால், மெட்ராஸ் கபே படத்தின் நியாயமாக தான் பார்க்க வேண்டும். மெட்ராஸ் கபே வெளியாக வேண்டும் என்றால்,  தடை செய்யப்பட்ட எல்லா ஈழப்படங்களை வெளியிட்ட பிறகு ‘மெட்ராஸ் கபே’ வெளியிடலாம்.

ஆளும் கட்சியின் கருத்தை தான் சினிமாவில் சொல்ல வேண்டும் என்றால், இனிமேல் தேர்தல் வெற்றிப் பெறும் போது ‘சினிமா’ ஆளும் கட்சியின் சொத்து என்று அறிவித்துவிடலாம். எதிர் கருத்து இருப்பவர்கள் சினிமா பக்கமே வர மாட்டார்கள்.

இன்றும், அரசியல்வாதிகள் ‘சினிமாவை கண்டு பயப்படுவது இவர்கள் போடும் தடைகள் எடுத்துக் காட்டுகிறது. ஆனால், பெரியார், அம்பேத்கார் சொல்லி வராத விழிப்புணர்வு ஒரு திரைப்படத்தில் வந்துவிடவா போகிறது....?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விழிப்புணர்வு வராது... அது அந்தக்காலம்....!

LinkWithin

Related Posts with Thumbnails