வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, September 24, 2013

நேதாஜி உயிரோடு இருக்கிறார் !!

”நேதாஜி உயிரோடு இருக்கிறார்” என்று கல்கத்தாவில் இவர் பேசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், நேருவுக்கு எவ்வளவு பெரிய தலைவலியாக இருந்திருக்கும் பேசியவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

நேதாஜி உயிருடன் இருப்பதை நேருவுக்கு தெரிந்திந்தும் அமைதியாக இருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் விமர்சனம் எழுந்தது. இரண்டாம் உலகப் போரின் குற்றவாளியான நேதாஜியை நேரு மறைக்கிறாரா என்ற சந்தேகம் உலக நாடுகளுக்கு வந்தால் இந்தியாவின் பெயர் கெட்டுவிடும் என்று நேரு பயந்தார். நேதாஜியின் அபிமானிகள் நேதாஜி உயிருடன் தான் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘இவர்’ பேசிய பேச்சு இன்னும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.

காரணம், ஒரு பொது கூட்டத்தில் “நேதாஜி பத்திரமாக இருக்கிறார். சீனா, திபெத் எல்லையோரமாக இருக்கிற சிக்காங் என்ற இடத்தில் இருக்கிறார். அவரைத் தேடித்தான் நான் போனேன். அவரை நேரடியாகச் சந்தித்தேன்” என்று பேசியிருந்தார். நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை இன்னும் மேலும் வலுவடைந்தது.

நேரு நேதாஜி மரணத்தை பற்றிய செய்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால், ஷா நவாஸ்கான் என்பவரின் தலைமையில் நேதாஜி மரணத்தை பற்றி விசாரிக்க ஒரு கமிஷனை அமைத்தார். அந்த கமிஷனில் அந்தமான் ஹை கமிஷனராக இருந்த மொய்தார, நேதாஜியின் மூத்த சகோதரர் சுரேஷ் சந்திரபோஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கமிஷன் அமைத்ததும் முதன் முதலில் அழைத்தது ‘இவரை’ தான். அவரும் வந்தார்.

“நேதாஜி அவர்கள் உயிருடன் இருக்கிறாரா என்ற செய்தியை விசாரிக்க உங்களை அழைத்தோம்.”

“நேதாஜி பற்றிய உண்மையை அவ்வளவு எளிதில் உங்களால் வெளியே கொண்டு வர முடியாது. தற்போது பதவியிலிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக் கமிஷன் இருக்க வேண்டும். உலகம் முழுக்க எந்த இடத்துக்கும் வேண்டுமானாலும் போய் விசாரணை செய்யும் அதிகாரம் கமிஷனுக்கு வழங்கப்பட வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது,. அப்போதுதான் அது சாத்தியப்படும்”

இவர் கூறிய ஆலோசனை விசாரணை கமிஷன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

“அதைப் பற்றி எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நேதாஜியை பார்த்ததாக சொல்கிறீர்களே ! அவர் எங்கு இருக்கிறார் ? “ என்று கேட்டனர்.

அதற்கு அவர், “இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, அமெரிக்க அரசு அறிவித்த போர் குற்றவாளி பட்டியலில் நேதாஜி பெயர் இருக்கிறதா ? அப்படி ஒரு வேளை அவர் பெயர் இருந்து, தலைமறைவாக இருக்கும் நேதாஜி, இந்தியாவுக்கு வந்தால் அவரை அந்த நாடுகளிடம் காப்பாற்ற இந்திய அரசு உறுதியாக இருக்குமா ?” என்று கேள்வி எழுப்பினார்.

”போர்க் குற்றவாளிகள் பட்டியல் பற்றி இந்த கமிஷனுக்குத் தெரியாது. இந்திய அரசின் சார்பாக கமிஷனால் எந்த உறுதிமொழியும் வழங்கும் அதிகாரமில்லை. ஒரு வார காலத்தில் பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகளிடம் விசாரித்து போர்க் குற்றவாளிப் பற்றிய பட்டியலை சொல்கிறோம்” என்று ஷா நவாஸ்கான் கூறினார்.

“ நல்லது. நீங்கள் கேட்டு சொல்லுங்கள். அதன் பிறகு எனது சாட்சியத்தைச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்,

ஒரு வாரம் காலம் டெல்லியில் தங்கியிருந்தார். பிறகு, ஷா நவாஸ்கானே தொலைப்பேசியில் இவரை தொடர்பு கொண்டார்.

“நேதாஜியின் பெயர் உலகப் போர் குற்றவாளிகளின் பட்டியலில் இருக்கிறதா ? இல்லையா ? என்ற விவரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை.” என்றார்.

“அப்படி என்றால் என்னால் கமிஷனுக்கு முன்பாக சாட்சியம் அளிக்க முடியாது. மன்னிக்கவும்” என்று சொல்லி தொலைப்பேசி வைத்திவிட்டார்.

கமிஷனின் விசாரணைக்கு உதவவில்லை என்றால் கூட பரவாயில்லை. இந்த விஷயத்தை அப்படியே விடாமல் டெல்லி பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி கொடுத்தார்.

“நேதாஜி இறக்கவில்லை. உயிருடன் ஆரோக்கியமாக இருக்கிறார். அவருடன் இன்று வரை எனக்குத் தொடர்பு இருக்கிறது. இந்த விஷயத்தில் பிரதமருக்கு சந்தேகம் இருந்தால், அவரோ அல்லது அவருடைய பிரதிநிதியோ என்னுடன் வந்தால், நேதாஜி அவர்கள் இருக்கும் இடத்தை நான் அவரை அழைத்துப் போகிறேன்” என்றார்.

அடுத்த நாள் டெல்லி பத்திரிக்கைகளில் இவர் கொடுத்தப் பேட்டி தான் தலைப்பு செய்தியாக இருந்தது. “ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ என்ற ஆங்கில பத்திரிக்கை ‘இவருடைய’ புகைப்படத்தை போட்டு இந்த விஷயத்தை தலையங்கமாகவே எழுதினார்கள்.

” இவர் சொல்கிறபடி, நேரு ஒரு பிரதிநிதியை அனுப்பி, நேதாஜியைப் பற்றிய உண்மையை அறிந்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நேதாஜி விஷயத்தில் நேருவுக்கு அக்கரையில்லை என்று மக்கள் நினைப்பார்கள்” என்று எழுதியிருந்தனர்.

முற்றுப் புள்ளி வைக்க நினைத்த விஷயத்திற்கு தொடர்கதை போல் தொடர்வது நேருவுக்கு பிடிக்கவில்லை. அதே சமயம், நேருவோ கமிஷனோ இவருடன் எந்த பிரநிதியையும் அனுப்பவில்லை. மற்ற சாட்சிகளை விசாரித்து கமிஷன் அறிக்கையை நேருவிடம் கொடுத்தனர்.

“நேதாஜி இறந்தது உண்மைதான்” என்ற அறிக்கையை பார்லிமெண்ட்டில் வைத்து நேரு நிறைவேற்றினார்.

நேதாஜி விவகாரம் அத்தோடு முடியவில்லை. இந்திர காந்தி பிரதமரானதும் இந்த விவகாரம் பூதமாக கிளம்பியது. “நவாஸ்கான் கமிஷன் அறிக்கை நம்ப முடியாத ஒன்று. பிரதமர் மீண்டும் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்” என்று 250 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு கொடுத்தனர்.

1971ல் இந்திரா காந்தி கோஸ்வா கமிஷனை நியமித்தார். அப்போது முக்கிய சாட்சியாக அழைக்கப்பட்ட ’இவர்’ உயிருடன் இல்லை. இவர் கூறிய இருந்த சீனா, திபெத் என்று போகாமல் உள்ளூரில் இருந்தவர்களை விசாரித்து “நேதாஜி இறந்தது உண்மை’ என்ற அறிக்கையை சமர்பித்தனர். ஒரு வேளை இரண்டாம் உலகப் போரில் நேதாஜி தப்பித்து உயிருடன் இருந்தாலும் 1971 வாக்கில் முதுமைக்காரணமாக இறந்திருந்திருக்கலாம்.

இறந்ததாக நம்பப்பட்ட நேதாஜிப் பற்றியை விசாரணை நடத்த இவருடைய பேச்சு இருந்திருக்கிறது. முருகன் பக்தாரான இவர் பெரியாருடன் மேடையில் அரசியல் பிரச்சாரம் செய்திருக்கிறார். கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். நேதாஜி மீது கொண்ட அபிமானத்தில் ‘நேதாஜி’ என்ற பத்திரிக்கை தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். சட்டசபை தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் ஒரே சமயத்தில் வென்றுயிருக்கிறார்.

இன்று இவரை ஜாதி தலைவராக மாற்ற நினைத்தவர்களின் முயற்சிகள் தோல்வி அடைந்து தமிழகத்தின் தலைவராக இருக்கிறார். இன்றைய தேதி வரை அவரை நினைவுகூராமல் தமிழகத்தில் அரசியல் நடத்தமுடியாது .



அபாரமான பேச்சு திறமை, தெய்வ பக்தி, மக்கள் மீதான அக்கரை என்று பொன் போல் ஜோலிச்சவர். அவர் தான் பசும்பொம் முத்துராமலிங்க தேவர் அவர்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails