வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, January 24, 2013

சென்னை புத்தகக் கண்காட்சி – தோல்வியில் சில அனுபவங்கள்

36வது சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு வழியாக முடிந்தது. இன்னும் பத்து நாளைக்கு வாங்கிய புத்தகங்கள் படிக்க தோன்றும். அதன் பின் பிறகு படிக்கலாம் என்ற எண்ணமே வரும். இந்த முறை வாசகர்களை பெரிதாக ஈர்க்கக் கூடிய புத்தகம் எதுவும் இல்லை என்று தோன்றுகிறது. ஒரு புத்தகக் கண்காட்சி கோபிநாத்தின் முதல் புத்தம் சக்கைப் போடு போட்டது. இரண்டு வருடம் முன்பு ஈழ புத்தகங்கள் யார் எழுதினாலும் விற்றது. அப்படி, இந்த வருடம் சொல்லும் அளவிற்கு எந்த புத்தகம் வரவில்லை என்று நினைக்கிறேன்.

சென்னை புத்தகக் கண்காட்சியின் தோல்விக்கான காரங்கள் சில....

தொலைவு - பஸ் ஸ்டாண்டில் இருந்து இரண்டு கி.மீ நடந்து கண்காட்சிக்கு வர வேண்டும். வாங்கிய புத்தகங்களை சுமந்து மீண்டும் நடக்க வேண்டும். ஒரு முறை வருகை தந்த வாசகர்கள் மீண்டும் வர தடையாக இருந்தது தொலைவு மிக முக்கிய காரணம்.


தேதி - எப்போதும் ஜனவரி முதல் வாரத்தில் வைத்து பொங்கல் முடிந்து இரண்டு நாளில் கண்காட்சி முடியும். மாத சம்பளக்காரங்கள் வாங்க நினைத்த புத்தகங்கள் முதல் வாரத்திலே வாங்கிவிடுவார்கள். முதல் வாரத்தில் வாங்க நினைக்கும் எண்ணம் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் குறைந்துவிடும்.

அரங்குக்கு ஒரு புத்தகம் வாங்கினால் போதும் என்ற மனநிலையில் பல வாசகர்கள் இருந்ததற்கு தேதி முக்கிய காரணம். பொங்கல் விடுமுறை என்ற தங்க முட்டையை தேதியின் காரணமாக இந்த புத்தகக் கண்காட்சியில் சரியாக பயன்படுத்த முடியவில்லை.

அரங்க அமைப்பு - எப்போதும் புத்தகக் கண்காட்சி நுழைந்ததும் இடதுப்புறத்தில் இருந்து அரங்கம் தொடங்கும். ஆனால், இந்த முறை இரண்டு பக்கமும் பாதை அமைத்திருந்தார்கள். முதல் பத்து நபரில் அரங்கம் கிடைப்பவர்கள் பாக்கியசாலியாக இருந்த புத்தகக் கண்காட்சி, இந்த முறை பாவப்படவர்களாக அரங்க அமைப்பு மாற்றியிருக்கிறது.

கலைஞர் - சென்ற புத்தக கண்காட்சியும் சரி... இந்த புத்தகக் கண்காட்சியும் சரி, கலைஞர் தொடங்கி வைக்காதது மிக பெரிய குறையே !! சரியாக சொல்வதென்றால்... முதல்வர் தொடங்கி வைக்காதது !!

முதல்வர் ஒரு நிகழ்ச்சி தொடங்கி வைக்கும் போது அந்த நிகழ்வும், இடத்திற்கும் பெரிய விளம்பரம் கிடைக்கும். கடந்த இரண்டு புத்தகக் கண்காட்சியில் சபா நாயகர், மேயர் போன்றவர்கள் கலந்து கொண்டாலும், முதல்வருக்கு கிடைக்கும் விளம்பரம் கிடைக்கவில்லை.

வெளி அரங்கம் - முன்பெல்லாம் வெளி அரங்கத்தை கடந்து தான் கண்காட்சிக்கு செல்வதுப் போல் இருக்கும். இந்த முறை, வெளியிட்டு விழா அரங்கத்திற்கும், கண்காட்சிக்கு சம்பந்தமே இல்லாததுப் போல் இருந்தது. வெளியிட்டு விழா நடத்திய பதிப்பாளர்களுக்கு நஷ்டம் என்பது சந்தேகமில்லை.

அரங்க வாடகை - சென்ற வருடம் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ரூ.17000 இருந்த அரங்கம்... இந்த வருடம் ரூ.25000 !!!!! வாடகை ரேக், வேலை ஆள் சம்பளம், புத்தகங்கள் கொண்டு வரும் கூலி எல்லாம் சேர்த்து ரூ.35000 - 40000 வரை வரும். புத்தக விற்பனையாளர்கள் 25 - 30% கழிவில் வாங்கி விற்பனை செய்பவர்கள் இரண்டு லட்சம் மேல் விற்பனை செய்தால் தான் போட்ட காசு எடுக்க முடியும் என்ற நிலையில் தள்ளப்பட்டதற்கு இன்னொரு காரணம்.

சென்ற சனி, ஞாயிறு (19, 20 ஜனவரி) ஓரளவு நல்ல விற்பனை என்றாலும், பதிப்பாளர்களுக்கு கிடைத்த லாபம் விற்பனையாளர்களுக்கு இல்லை.

புத்தக விற்பனையாளர்கள் சொர்ப்பமாக இருக்கும் தமிழ் நாட்டில் மேலும் அவர்களை நஷ்டப்படுத்த வைப்பது புத்தகத்துறை வளர்ச்சிக்கு சரியாக இல்லை.

புத்தகக் கண்காட்சி தவிர்த்து, மற்ற நாட்கள் இவர்களை நம்பி தான் பதிப்பகம் நடத்துகிறோம் என்ற எண்ணம் இல்லாமல் பல பதிப்பகங்கள் செயல்படுகிறார்கள் என்பது இன்னொரு காரணம். வாசகர்களை உருவாக்கும் திறமை பதிப்பாளர்களை விட விற்பனையாளர்களுக்கு தான் அதிக பங்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

கழிப்பறை, நடைபாதை எப்போதும் போல மோசமாக இருந்ததால் அதைப் பற்றி ஒன்றும் குறிப்பிட விரும்பவில்லை.

ஒரே ஒரு நல்ல விஷயம் கண்ணில் பட்டது... இந்த முறை நான்கு ஸ்டால்களுக்கு பதிலாக மூன்று ஸ்டால்கள் சேர்த்து அரங்கம் அமைத்து, பல புதிய ஆட்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்கள். (ஒரு வேலை நஷ்டம் வரும் என்று முன்பே கனித்துவிட்டார்களோ !!)

1 comment:

James said...

நல்ல அலசல். ஆர்வத்தை தூண்டக்கூடிய புத்தகங்கள் எதுவும் இல்லை

LinkWithin

Related Posts with Thumbnails