வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, December 20, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - 6

நான் இப்படி சொன்னதும் அம்மா கண்கள் சிவந்தது. இதுவரை அவரை எதிர்த்து எதையும் செய்ய வேண்டும் என்று நினைத்ததில்லை. பி.ஏ படிப்பு வேண்டாம் என்று சொன்ன போது கூட மாமாவுக்காக படிக்க சம்மதித்தேன். இப்போது அம்மா 'வேண்டாம்' என்று சொன்ன பெண்ணை போட்டோ கூட பார்க்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறேன்.

 " என்னடா...! ராசியில்லாத பொண்ணு இந்த குடும்பத்துக்கு மருமகளா வரணுமா....?" என்று ரௌத்திர குரலில் கத்தினார்.

" ராசி எல்லாம் ஒண்ணும் கிடையாது. எல்லாம் நம்ப மனசு தான். அது மட்டுமில்ல ! மாமா இந்த பொண்ணு எனக்கு பொருத்தமா இருக்கும்னு வேற சொல்லியிருக்காரு...." என்று சொல்லி இழுத்த போது அம்மா முகம் மாறியிருந்தது. என் வீடு ஒரு நிமிடத்தில் நிசப்தமாக இருந்தது.

"அவரோட கடைசி ஆசை. இது கூட நான் நிறை வேத்தலைன்னா. நாம மனுஷங்களே இல்லமா...." என்றேன்.

மாமாவின் கடைசி ஆசை என்றுவுடன் அம்மா பதில் எதுவும் சொல்லவில்லை. அதே சமயம் அந்த ‘ராசியில்லாதவள்’ என்ற எண்ணம் அவர் மனதில் அழமாய் பதிந்து விட்டது.

மாணிக்கம் மாமா அந்த குடும்பம் சொல்லி கொள்ளும் படி வசதி இல்லை என்றும், சீர் வரிசை எல்லாம் பெரிதாக செய்ய முடியாது என்று எல்லாம் சொன்னார். இதுஎல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. என் மனதில் இருந்த ஒரு நிபந்தனை மட்டும் சொன்னேன். அதற்கு பெண் வீட்டார்கள் சம்மதித்தால், உடனே திருமணம் என்றேன்.

என் திருமணம் தாலியில்லாமல் 'சுய மரியாதை' திருமணமாக இருக்க வேண்டும்.

அம்மா, மாணிக்கம் மாமா இதற்கு மறுப்பு தெரிவித்தும் என் எண்ணத்தில் உறுதியாக இருந்தேன். என் திருமணத்தில் தாலி, சடங்கு எதுவும் இருக்க கூடாது.

" உங்க மாமா போனதும் அப்புறம் எல்லாம் உன் இஷ்டப்படி செய்யுற" என்று சொல்லி கோபமாக அறைக்குள் சென்றார். மாணிக்கம் மாமா எதுவும் பேசமால் பெண் வீட்டார்களிடம் பேசிவிட்டு பதில் சொல்வதாக சொல்லி சென்றார்.

இரண்டு நாள் கலித்து மாணிக்கம் மாமா வீட்டுக்கு வந்து, பெண் வீட்டில் 'சுய மரியாதை' திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாக கூறினார்.

"என்னது தாலியில்லாத கல்யாணத்துக்கு சரி சொல்லுறாங்களா... என்ன குடும்பம் இது !" என்று முகத்தை சுளித்து கொண்டு அம்மா கேட்டார்.

" அங்க பொம்பளைங்க யாரும் இல்ல. பொண்ணுக்கு அப்பா மட்டும் தான். அவரும் தி.க இருக்குறவரு. சுய மரியாதை கல்யாணம்னு சொன்னவுடனே அவருக்கு சந்தோஷம். மாப்பிளைய பார்த்தே ஆகனும் துடிச்சாரு...." என்று பெண் வீட்டில் நடந்ததை ஒவ்வொன்றாக மாணிக்கம் மாமா சொன்னார்.

" தாலிக்காக ஒவ்வொரு பொண்ணும் விரதம் இருக்காங்க. நீங்க எல்லாம் தாலியில்லாம கல்யாணம் பண்ணுறத சொல்லுறீங்க..." என்ற அம்மா கோபமாக கேட்டார்.

மாணிக்கம் மாமா எதுவும் பேசவில்லை. உள்ளே இருந்த வெளியே வந்து, " யாரும் தாலிக்காக விரதம் இருக்குறது இல்ல. புருஷனுக்காக தான் விரதம் இருக்காங்க. பொண்ணுங்க விரதம் இருக்குறது புருஷன் இருந்தா போதும். தாலி தேவையில்ல...." என்றேன். என் நாத்திக வாதத்தை கேட்டவுடன் அம்மாவுக்கு கோபம் தலைக்கேறியது. மாணிக்கம் மாமா முன்பு என்னை திட்ட அம்மாவுக்கு மனம் வரவில்லை.

 "எப்படியோ செஞ்சிட்டு போங்க !!" என்றப்படி அம்மா உள்ளே சென்றார். எப்படியோ நான் நினைத்தது போல் எந்த பிரச்சனையில்லாமல் 'சுய மரியாதை' நடக்க பெண் வீட்டார் சம்மதித்துவிட்டனர்.

 என் திருமணத்தை பாலசுந்தரம் ஐயா தான் நடத்தி வைக்க வேண்டும். அவர் தான் என் மனதில் 'பகுத்தறிவு' பற்றிய விதையை மனதில் போட்டார்.’ பெரியா’ர் சொற்பொழிவை கேட்க வைத்து முழு பகுத்தறிவாதியாக என்னை மாற்றினார். எனக்கு அவர் திருமணம் நடத்தி வைத்தால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.

 நான் கும்பகோணத்திற்கு சென்று என் திருமணத்தை பற்றி சொன்னேன். 'சுய மரியாதை' திருமணம் செய்துக் கொள்ள போகிறேன் என்று சொன்னவுடன் சந்தோஷப்பட்டார். நடத்தி வைக்கவும் சம்மதித்தார்.

எங்கள் வீட்டில் நிச்சயதார்த்தம், சீர்வரிசை, அர்ச்சகர், அக்னி குண்டம் என்று எதுவுமில்லாமல் முழுக்க முழுக்க 'சுய மரியாதை'யுடன் நடக்கும் முதல் திருமணம் என்னுடையது தான். எனக்கு மனைவியாக வர போகிறவளை திருமணத்தன்று தான் பார்த்தேன். நல்ல அழகு. அவள் கண்களில் கணிவும், பணிவும் நன்றாக தெரிந்தது. ரம்யாவிடம் இப்படி ஒரு பார்வை இருந்ததா என்ற சந்தேகம். இப்போழுது அவளை பற்றிய நினைப்பு எதற்கு ? இனி என் வாழ்நாள் முழுக்க பயணம் செய்ய போகிறவள் இவள் தான்.... இந்த 'சிவகாமி' என்ற என் புது தேவதை.

பாலசுந்தரம் ஐயா திருமண பத்திரம் படித்து முடித்ததும், நானும், சிவகாமி 'ஒன்றாய் வாழ்வதாக' உறுதி மொழி எடுத்து திருமண பத்திரத்தில் கையெழுத்து போட்டோம். என் சுயமரியாதை திருமணத்திற்கு நான் எதிர்பார்த்தது போலவே, எங்கள் வீட்டில் இருந்து சொந்தங்கள் பலர் வரவில்லை. நண்பர்கள் தான் அதிகப் பேர் வந்திருந்தார்கள். என் மரியாதை இழந்து சொந்தங்களை வரவழைப்பதை விட, சுயமரியாதையோடு இருப்பது மேல் என்ற எண்ணம் வழுவாக இருந்தது.

எங்கள் திருமணம் முடிந்ததும் முதலில் அம்மா காலில் தான் விழுந்தேன். தான் விதவை என்று முதலில் ஒதுங்கிய அம்மா, பிறகு எங்களை ஆசிர்வதித்தார். என் மாமானார் என்னை பார்த்து பெருமை பட்டுக் கொண்டார். தங்கள் மகள் திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்ததை நினைத்து பூரிப்படைந்தார்.

 என்னதான் 'சுய மரியாதை' திருமணம் செய்துக் கொண்டாலும், தன் மருமகளுக்கு ஆரத்தி எடுத்து தான் என் அம்மா வரவேற்றார். சாமிப்படத்துக்கு பூ போட்டு விளக்கேற்ற சொன்னார். என் மனைவிக்கும் கடவுள் பக்தி அதிகம் என்று நினைக்கிறேன். அம்மா சொல்ல சொல்ல மறு பேச்சு பேசாமல் முன்பே பழகியவள் போல் எல்லா வேலைகளை செய்தாள். அவள் தந்தை தான் பகுத்தறிவாளர். ‘அவளில்லை’ என்பதை பார்த்துமே புரிந்து கொண்டேன்.

முதல் இரவு எங்கள் வீட்டுலே இருக்கட்டும் என்று மாமனாரிடம் முன்பே சொல்லியிருந்ததால், எங்கள் வீட்டு படுக்கையறை தேவையான அழங்காரம் செய்து இருந்தனர். என் திருமணத்து வந்த பரூக், ஜோசப் தம்பதியர்களாக வந்திருந்தனர். அவர்களிடம் பேசி கொண்டு இருந்தேன். இன்று இரவே அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் அவர்களை வழி அனுப்பி விட்டு வீட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தேன். எனக்கு முன்பே என் மனைவி அங்கு இருந்தாள். நல்ல நேரம் முடிவதற்குள் அறைக்குள் போக வேண்டும் என்பது அம்மாவின் கட்டளையாம்.

 கொஞ்சம் பதட்டமாகவே அவள் காணப்பட்டாள். நானும் பதட்டமாக தான் இருந்தேன். ஒரு தலை காதல் தவிர வேறு எந்த அனுபவமும் இல்லை. என்ன பேசுவது, எதில் இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. முதலில் என்னை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

 "ம்ம்.. சிவகாமி ! என்ன பயமா இருக்கா...." என்றேன்.

 " அப்படியில்ல...! உங்களுக்கு.... " என்று கிண்டலாக கேட்டாள்.

இவள் அமைதியான பெண்ணா ? .... சந்தர்ப்பம் கிடைத்தால் கேலியும், கிண்டலும் செய்யும் பெண்ணா ? என்று என் மனதில் கேட்டுக் கொண்டேன்.

 "கொஞ்சம் பயமா தான் இருக்கு...." என்றேன்.

பயம் இருந்தாலும் அதை தைரியமாக சொல்லும் மனம் பக்குவம் என்னிடம் உண்டு. என் பயத்தை தைரியமாகவே சொன்னேன். முதலில் எனக்கு ஏற்ப்பட்ட ஒரு தலை காதலை சொன்னேன். முதலிரவு அன்று அவள் அழகை பற்றி பேசாமல் என்னை பற்றி உண்மைகளை அவள் தெரிந்து கொண்டால் வாழ்க்கை சுமுகமாக போகும். இந்த இரவு கசப்பாக இருந்தாலும் வர போகும் எல்லா இரவுகளும் இனிக்கும்.

என் ஒரு தலை காதல் கதை கேட்டவுடன் அவள் முகம் வாடிவிட்டது. அவளை பிரிந்து வந்த காரணத்தை சொன்னாலும், நாம் தான் கணவர் மனதில் முதலில் குடி புகுந்தோம் என்ற விருப்பம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும். அது பொய்யாகி போனது அவள் முகத்தில் தெரிந்தது.

நான் அவளை பார்த்து, " கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய ஒரு தலை காதல் இருக்கலாம். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தலை காதல் இருக்க கூடாது. கணவன், மனைவி இரண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் விரும்பினா தான் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் " என்றேன்.

அறை முழுக்க நிசப்தமாக இருந்தது. முதலிரவு அறைப் போல் இல்லை. இன்று தான் முதன் முதலில் இருவரும் சந்தித்தோம். இன்றே ‘உறவு’ வைத்து கொள்ள முடியும் என்பது எனக்கு அபத்தமாக இருந்தது. அதே சமயம் முதலிரவில் மனைவி ஒன்றும் செய்யாமல் இருக்க முடியவில்லை. அவளை அணைத்து முத்தமிட்டு படுத்துக் கொண்டேன். முதல் முறையாக வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கேன். அந்த உணர்ச்சியிலே அவளிடம் எல்லை தாண்ட வேண்டும் போல் இருந்தது. என் ஒரு தலை காதலில் அதிர்ச்சியில் இருப்பவளை என்னால் கட்டாயப்படுத்த முடியவில்லை.

இரண்டு நாள் சென்றது. சிவகாமி கோயிலுக்கு போக வேண்டும் என்றாள். நம்பிக்கையில்லாத இடத்துக்கு சென்று என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. மறுத்தேன். அவளுடைய அப்பாவும் என்னை போல் நாத்திகன் என்பதால் நிச்சயம் அவரோடு அவள் கோயிலுக்கு சென்றியிருக்க மாட்டாள். திருமணம் ஆன புதிதில் கணவனோடு கோயிலுக்கு போக வேண்டும் என்று எல்லா பெண்களுக்கும் ஆசையிருக்கும். முதலிரவில் அவளை வாடியது போல் மீண்டும் வாடி நின்றாள்.

வாடிய அவள் முகத்தை பார்க்க எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரு நிமிடம் யோசித்தேன். கோயிலுக்கு வருவதாக சம்மதித்தேன். என் சிவகாமிக்காக....!!! 

என்னை பொருத்தவரை கோயிலில் இருப்பது 'கல்' தான். தன்னை திருடர்களிடம் இருந்து காப்பாற்ற தெரியாத கறுப்பு கல். அவ்வளவு தான். ஆனால், அந்த கல்லை வணங்குவதில் சிவகாமிக்கு எவ்வளவு சந்தோஷம். இதுவரை தன் தோழிகளுடன் தான் கோயிலுக்கு சென்றியிருக்கிறாள். முதல் முறையாக ஒரு ஆண் துணையோடு கோயிலுக்கு வருவதை சொன்னாள். அதுவும் நான் சம்மதிப்பேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லையாம். அவளை கோயிலுக்கு அழைத்து வந்த சந்தோஷத்தில் என்னிடம் பேசிக் கொண்டே இருந்தாள். நான் அவள் பேசும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தேன்.

ஒரு மாதம் உருண்டோடியது. அவள் மனம் ஒரு நிலையடைந்து எங்களுக்கு சந்தோஷமும், இயல்பான தம்பதியர்கள் போல் நாங்களும் வாழ தொடங்கினோம்.

மாமா இறந்த பிறகு ஹோட்டலை சரியாக பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் முடிவைத்திருந்தோம். என்னால் மீண்டும் ஹோட்டல் வேலை எல்லாம் எடுத்து செய்ய முடியும் என்று தோன்றவில்லை. வழக்கறிஞர் வேலை தான் செய்வதென்று முடிவெடுத்து விட்டேன். ஹோட்டலை பார்க்கும் போதெல்லாம் மாமா சமையல் அறைக்கு செல்வது, கல்லா பெட்டியில் இருந்து பணம் வாங்குவது போல் தெரிந்தது. அங்கு இருக்கும் ஒவ்வொரு செங்கல்லும் மாமாவை தான் நினைவுப்படுத்தியது.

அம்மாவிடம் ஹோட்டலை விற்று விட்டு சென்னைக்கு போகலாம் என்று சொன்னேன். முதலில் அம்மா சம்மதிக்கவில்லை. நான் கட்டாயப்படுத்திய பிறகு சம்மதித்தார். இவ்வளவு நாள் எங்களை வாழ வைத்த ஹோட்டலை விற்று தருமாறு மாணிக்கம் மாமாவிடம் சொன்னேன். சிதம்பரத்தில் நன்றாக போன ஹோட்டல் என்பதால் இரண்டே நாளில் வாங்குபவரை அழைத்து வந்தார்.

நான் வழக்கறிஞராகி எழுதும் முதல் பத்திரம் எங்கள் ஹோட்டல் விற்பதனை பத்திரம் தான். ஹோட்டலை ஐம்தாயிரத்திற்கு விற்றோம். ஜோசப்பிடம் சென்னையில் ஒரு வீடு வாங்க சொல்லியிருந்தேன். அவனும் சென்னைக்கு ஒதுக்கு புறமான அண்ணா நகரில் ஒரு வீடு விலைக்கு இருப்பதாக சொன்னான். அங்கு சென்று வர மாமாவின் புல்லட் இருப்பதால் ஒதுக்குபுரமாக அந்த வீட்டை வாங்குவதாக ஜோசப்பிடம் கூறினேன். 


ஹோட்டல் விற்ற பணத்தில் சென்னையில் வீடு வாங்கி அங்கே குடிபுகுந்தோம். நானாவது மூன்றாண்டுகள் இங்கே படித்திருக்கேன். ஆனால், அம்மா திருமணமானதில் இருந்து சிதம்பரதை விட்டு வந்த்தில்லை. முதல் முறையாக சிதம்பரத்தை விட்டு வருகிறாள். அதுவும் நிரந்தரமாக வருகிறாள். இவ்வளவு நாள் வாழ்ந்த ஊரை மனமில்லாமல் காலி செய்து வந்தோம். ஆனால், மாமாவின் நினைவுகள் எங்களோடு தான் வந்தது.

அண்ணா நகர் வீட்டில் முதல் அடி வைத்ததும் முதல் இடி சத்தம் கேட்டது. 'பெரியார் இறந்து விட்டார்' என்று தலையில் அடித்து கொண்டு பலர் அழுதனர்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails