வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, December 12, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 5

உலகத்திலே மிக கஷ்டமான அவஸ்தையான ஒன்று என்னவென்றால் நாம் அதிகம் நேசிப்பவர்களை வெறுப்பது தான். நாம் எந்த அவளவுக்கு ஒருவரை நேகிக்கிறோமோ அவர் நம்மை ஏமாற்றும் போது அந்த அளவிற்கு கோபம், வெறுப்பும் அதிகமாகிவிடுகிறது. அந்த நபரிடம் வெறுப்பை காட்டும் போதெல்லாம் நாம் முன்பு அவர்கள் மீது வைத்திருந்த அன்பு வந்துக் கொள்ளும். இப்படி ஒரு அவஸ்த்தையை தான் நான் அனுபவித்தேன்.

எனக்கு அவள் மீது நம்பிக்கை இல்லாமல் போனது. அவள் தன் தோழிக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறாள். கேவலம் ஒரு புத்தகத்திற்காக திருடியாக மாறுவாள் என்று நினைக்கவில்லை. இதை பற்றி அவளிடம் கேட்கவும் எனக்கு மனமில்லை. முடிந்தவரையில் அவளிடம் பேசாமல் தவிர்ப்பது தான் நல்லது. ஒரு வேளை கோபத்தில் என் மனதில் இருந்த காதலை கூட கொட்டி விட்டால், அதனால் தான் தன் மீது பழி போடுகிறான் என்று விஷயத்தை திருப்பிவிட்டாலும் விடுவாள்.

உலகத்தில் யாரை வேண்டுமானாலும் நம்பலாம். ‘பார்ப்பனர்களை நம்பக் கூடாது’ என்ற எண்ணம் மனதில் மேலும் ஆழமாக பதிந்தது. இப்படி சொல்வதால் நான் ஜாதி வெறி பிடித்தவன் என்று நினைக்க தோன்றும். நான் எல்லா மத இனத்தவர்களிடமும் அன்பாக பழக்கூடியவன். என் நண்பர் பரூக், ஜோசப் வேறு மதத்தை சேர்ந்தவர்கள். என்னை 'பையா' என்று அழைக்கும் 'பாத்திமா' வேறு மதம். இரண்டு ஆண்டுகளாக 'பாய்' வீட்டில் தான் தங்கி படித்திருக்கிறேன். எல்லா மதத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கும் போது ஏன் பார்ப்பனர்களின் சுயநலவாதிகளாகவே இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டு படிப்பு முடிந்து மூன்றாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை. இது தான் இறுதி ஆண்டு. இந்த வருடம் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மாமாவின் கட்டளை. ரம்யா மீது இருந்த காதல் உயிர்யில்லாமல் போனது. படிப்பு முடித்தபின் கல்யாணத்தை பற்றி யோசிக்கலாம் என்று இருந்து விட்டேன்.

ரம்யா கண்ணில் எதிர்படும் போதெல்லாம் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சென்று விடுவேன். என் சிரிப்பு முகத்தளவு மட்டுமே தெரிந்தது. அவளிடம் பேச எந்த விருப்பமும் இல்லை. அப்படியே அவள் பேச வந்தாலும் ஒரு வார்த்தையில் பதில் அளித்து விடுவேன். அவளும், லக்ஷ்மியும் சேர்ந்து வந்தால் ‘ஆளுங்கட்சியின் மேலுள்ள வெறுப்பினால் எதிர்கட்சிக்கு ஓட்டுப் போடுவது’ போல் நான் அவளிடம் பேச்சை குறைத்து லக்ஷ்மியிடம் பேசுவேன். இப்படியே தொடர்ந்துக் கொண்டு இருந்ததில் அவளும் என்னிடம் பேச குறைத்துக் கொண்டாள். நாங்கள் இருவரும் அறிமுகமானவர்கள். அவ்வளவு தான். ‘எங்களுக்குள் எதுவும் இல்லை’ என்று எனக்குள் சொல்லி நானே நம்ப தொடங்கினேன். அவளும் அப்படியே நடந்துக் கொண்டாள்.

பல போட்டி, பொறாமை, கோபங்களுக்கு நடுவில் இறுதி ஆண்டு படிப்பை படித்து முடித்தேன். இனி என் வாழ்நாளில் ரம்யாவை சந்திக்க கூடாது என்று தீர்மானமாக இருந்தேன்.

ஜோசப், ஜாஸ்மின் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாக கூறினார்கள். அவர்கள் காதலுக்கு வாழ்த்து தெரிவித்து, திருமணத்துக்கு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னேன்.

இந்த மூன்று ஆண்டுகளில் பரூக்கின் அம்மா சாப்பாடு என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. பாத்திமாவின் சகோதர பாசத்தையும் அளவிட முடியாது. பரூக் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் பாரதியார் எழுதிய ஒரு வரி ஞாபகம் வரும்.

"இங்கிவினை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்". 

என் வாழ்நாள் முழுக்க இவர்கள் என்னுடனே இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரே வீட்டில் இரண்டு பேரின் குடும்பமும் வாழ வேண்டும் என்ற ஆசை பிறந்தது. பரூக்கின் அம்மாவிடம் ஆசி பெற்றுக் கொண்டேன். பாத்திமா கண்ணில் நீர் நிரம்ப என்னை வழி அனுப்பி வைத்தாள்.

"பையா! எங்கள மறந்திட மாட்டீங்ளே...."

" நீங்க எப்போது என் கூடவே இருப்பீங்க.... எப்படி என்னால மறக்க முடியும் " கண்ணில் நிறம்ப பதில் சொன்னேன்.

பரூக் என்னை வாரி கட்டி அணைத்துக் கொண்டான். அவன் சிதம்ரத்தை விட்டு செல்லும் போது எனக்கு இந்த அளவுக்கு துயரம் வரவில்லை. ஆனால், இப்போது இந்த குடும்பத்தை விட்டு பிறிவது நினைத்தால் வேதனையில் வெந்து போகின்றேன். பிரிய முடியாமல் பிரியாவிடை பெற்றுக் கொண்டு பஸ் நிலையத்திற்கு சென்றேன்.

" நல்ல சாப்பிடுப்பா. உடம்ப பத்திரமா பார்த்துக்கோ..." என்று பரூக் அம்மாவின் குரலில் நான் பஸ் ஏறும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பரூக் என்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டான். கண்ணில் நீர் நிறம்ப பஸ்ஸில் ஏறி சிதம்பரத்திற்கு சென்றேன்.

மாத விடுமுறைக்கு வந்து கொண்டு இருந்த நான் மீண்டும் நிரந்தரமாக சிதம்பரத்தில் தங்க வந்துவிட்டேன். அதுவும் ஒரு வழக்கறிஞராக !!

பல லட்சிய கனவுகளுடன் என் ஊரில் கால் வைத்தேன். அம்மாவை ராணி போல் வாழ வைக்க வேண்டும். என்னக்காக மாமா வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். ஹோட்டலை விற்றுவிட்டு அவரை உட்கார வைத்து சோறு போட வேண்டும். இனி அவர் உழைக்கவே கூடாது. ஓய்வு தான் எடுக்க வேண்டும். இப்படி பல ஆசைகளோடு சைக்கிள் ரிக்ஷாவை நோக்கி சென்றேன்.

நான் வீட்டுக்கு செல்ல சைக்கிள் ரிக்ஷா பேசிக் கொண்டு இருக்கும் போது மாணிக்கம் மாமா மருந்து கடையில் மருத்து வாங்கி கொண்டு சென்றார். நீண்ட நாள் பிறகு இன்று தான் அவரை பார்க்கிறேன். சென்ற விடுமுறை கூட அவரை நான் பார்க்கவில்லை. வெளியூர் போய்யிருந்ததாக மாமா சொல்லியிருந்தார்.

" என்ன மாணிக்கம் மாமா ! எப்படி இருக்கீங்க.... போனவாட்டி கூட உங்கள பார்க்க முடியல..." என்று மலர்ந்த முகத்தோடு பேசினேன்.

அவர் கண்கள் அழுது சிருத்துக் கொண்டது போல் இருந்தது. அவர் உறவினர்களுக்கு உடல் சரியில்லாமல் இருக்கும் என்று நினைத்தேன். கையில் மருந்தெல்லாம் வைத்திருந்தார்.

" இப்ப தான் ஊருல இருந்து வந்தியா...." என்றார்.

 " ஆமா ..."

 " நல்ல வேல. நீ என் கூட வா..." என்று கை பிடித்து அழைத்து சென்றார்.

நான் என் துணி மணியை வீட்டில் வைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லியும் என்னை விடவில்லை. அவர் என்னை 'நடராஜர் மருத்துவமனை'க்கு அழைத்து சென்றார். ஏன் இப்படி செய்கிறார் என்று புரியவில்லை. எப்போதும் பேசி குழப்புபவர், இப்போது செய்கையால் குழப்பினார். எதாவது சொல்ல போகிறாரா, காட்ட போகிறாரா... எனக்கு குழப்பம் தான் அதிகமானது. ஒரு முறையாவது இவர் தெளிவாக எந்த வேலையும் செய்யமாட்டாரா என்று நினைத்துக் கொண்டேன்.

மருத்துவமனையில் நுழைந்தவுடன் அம்மா கண்ணில் தழும்ப நின்றுக் கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் கட்டி பிடித்து அழுதார். அப்பா இறந்த போது எப்படி கட்டி பிடித்து அழுதோரோ அதே போல் இருந்தது. அம்மா எதுவும் பேசமால் அழுதுக் கொண்டே இருந்தார்.

" உங்கள் மாமாவுக்கு மாரடைப்பு. நேத்து ராத்திரி தான் ஆஸ்பத்திரியில சேர்த்தோம்" என்றார். மாணிக்கம் மாமா சொன்னவுடன் திடுக்கிட்டேன்.

அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என்னை தனியாக விட்டு ஓய்ந்து போககிறார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. 

மாணிக்கம் மாமா என்னை தனியாக அழைத்து சென்று, " நானே உனக்கு தகவல் கொடுக்கனும்னு இருந்தேன். டாக்டர் காப்பத்த முடியாதுனு சொல்லிட்டாரு. அம்மாவுக்கு நீ தான் ஆருதல் சொல்லனும்..." என்றார்.

"ஐயோ...ஐயோ..." என்று புழம்ப வேண்டும் போல் இருந்தது. யாரை உட்கார வைத்து வாழ்நாள் முழுக்க சாப்பாடு போட்டு ராஜா மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேனோ அவர் நிரந்தரமாக படுக்கப்போககிறார் என்று சொன்னால் எனக்கு எப்படி இருக்கும். அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல நான் இருக்கிறேன். எனக்கு ஆறுதல் யார்...?

அப்பா இறந்த பிறகு மாமா தான் எங்களை வாழ வைத்தார். அப்பா இருந்திருந்தால் கூட எங்களை இப்படி கவனித்திருக்க மாட்டார் என்று பல முறை நினைத்திருக்கிறேன். அவர் வாழ்நாள் முழுக்க எங்களுக்கு செய்த உதவியில் திரும்பி செய்ய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டாரே...!

என் தலை அடித்துக் கொண்டு "ஐயோ...ஐயோ...." என்று அழுதேன். அம்மா மாமாவின் மரணத்தை பற்றி சொன்னதும் பிரஷர் அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். டாக்டர் அம்மா உடலை பார்த்து ஒரு நாள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க சொன்னார். மாமாவை பிணமாக பார்க்கும் சக்தி என்னகே இல்லாத போது அம்மாவால் எப்படி பார்க்க முடியும். அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மாமாவுக்கு நடக்க வேண்டிய காரியங்களை கவனித்தேன்.

"கடமைய முடிச்சிட்டுச்சு இவரு பாட்டுக்கு போய்ட்டாரே. இவருக்கு அப்படி என்ன அவசரம். அவருக்கு செய்யனும்னு நினைச்சது எல்லாம் எப்போ செய்ய முடியும்" என்று மாணிக்கம் மாமாவிடம் சொல்லி புலம்பினேன்.

மாமாவின் உடலை சாஸ்த்திரப்படி தகனம் செய்ய சில செய்ய சொன்னார்கள். இப்போது எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. ஆனால், மயக்க நிலையில் அம்மாவுக்கு இது தெரிந்தால் தாங்கிக் கொள்ள மாட்டார். கோபத்தில் என்ன செய்வார் என்று சொல்ல முடியாது. என் கொள்கைக்காக சாஸ்த்திரங்களை மதிக்காமல் தகனம் செய்தால், மாமா இறந்ததை விட பெரிய வலியை அம்மாவுக்கு கொடுப்பது போல் இருக்கும். எனக்காக வாழ்ந்த ஒரு உயிருக்கு என் கொள்கையை விட்டு கொடுப்பதில் எனக்கு பெரிதாக தெரியவில்லை. அப்படி தவறு என்று யார் சொன்னாலும் கவலையில்லை. என் மாமாவை அடக்கம் செய்ய சொன்ன இறுதி சடங்குகளை, சாஸ்த்திரங்களை செய்து அவர் உடலை மயானத்தில் தகனம் செய்தேன்.



என்னைப் போல் திராவிடக் கொள்கை ஏற்றுக் கொண்டவர்கள் இப்படி தான் பல இக்கட்டானா நிலைமை சந்தித்திருப்பார்களா ? அவர்கள் எல்லாம் எப்படி இதில் இருந்து மீண்டு இருப்பார்கள் ? சுற்றத்தின் வற்புருத்தலால் பழைய சாஸ்திரங்களை செய்யும் போது, திராவிட கொள்கை ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி எல்லாம் விமர்சிக்கப்பட்டிருப்பார்கள் ? கடவுளை வணங்குபவர்கள் கடவுள் சோதிப்பதாக சொல்வார்கள். ஆனால், திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சுற்றியிருப்பவர்கள் சோதனை செய்கிறார்கள்.

மாமா படத்திற்கு முன்பு விளக்கேற்றி அழுதப்படி அமர்ந்திருந்தேன். மருத்துவமனையில் இருந்து அம்மா மாமா படத்தை பார்த்து கதறி அழுதார்.

"கடைசி வரைக்கும் அவர் முகத்த பார்க்காம பண்ணிட்டீங்களே...." என்று சொல்லி என் தொடையில் படுத்து அழுதார். என் அம்மாவுக்கு நான் அம்மாவாக இருந்து ஆறுதல் சொன்னேன். இப்போது எனக்கென்று இருக்கும் ஒரே சொந்தம் அம்மா மட்டும் தான்.

மாமா இறந்து ஒரு வாரம் மேலானது. மாணிக்கம் மாமா கையில் ஒரு போட்டோவோடு வீட்டுக்கு வந்தார். அவரை உள்ளே வரவழைத்து உட்கார சொன்னேன். தன் கையில் இருக்கும் போட்டோவை அம்மாவிடம் கொடுத்தார்.

" இந்த பொண்ணு தான் ராமா சந்திருவுக்கு பொருத்தமா இருக்கும்னு சொன்னான். சம்மந்தம் பேசுறதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு...." என்றார்.

" வேண்டாம் அண்ணே. வேற பொண்ணு பாருங்க. இந்த பொண்ண பார்த்த நேரம். என் அண்ணனே என்ன விட்டு போய்ட்டார்" என்று சொல்லி தன் கையில் இருந்த போட்டோவை மாணிக்கம் மாமாவிடம் கொடுத்தார்.

எனக்கு ஏதோ சொல்ல வேண்டும் போல் இருந்தது. அம்மா, மாமா எனக்கு எது செய்தாலும் நன்மைக்காக தான் செய்வார்கள். அந்த அளவிற்கு நம்பிக்கை அவர்கள் மீது வைத்திருக்கிறேன். ஆனால், இப்போது இது பேசுவது தவறாக கூட இருக்கலாம். சொல்வது சரி என்று என் மனதில் பட்டது.

" மாணிக்கம் மாமா ! அந்த பொண்ணே கல்யாணம் பண்ணிக்கிறேன். பேசி முடிச்சிடுங்க " என்றேன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails