வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 4, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 4

ஆறு மாதம் பிறகு மீண்டும் அந்த மூன்று பெண்கள் நாவல் தொடர்கிறது....!!!
**
"அந்த மூன்று பெண்கள்" நாவலை முழுவதும் வாசிக்க

'கடவுள் இல்லை' என்று யாரும் யாரையும் ஏமாற்றுவதில்லை. 'கடவுள் உண்டு' என்று சொல்பவர்கள் தான் ஒருவனை ஒருவன் ஏமாற்றிக் கொள்கிறான். கடவுள் இல்லை என்று சொல்பவன் தன் கருத்தை மற்றவர்கள் மீது தினிப்பதில்லை. பிரச்சாரம் மற்றுமே செய்கிறான். ஆனால், 'கடவுள் உண்டு' என்று சொல்பவர்கள் கடவுளை வணங்க கட்டாயப்படுத்துகிறார்கள். கடவுளை வணங்கவில்லை என்று 'சாமி கண்ண குத்தும்' என்று சிறுவயதிலே பயமுறுத்துகிறார்கள்.

தெளிவான மனதோடு இரண்டாம் ஆண்டு சட்ட கல்லூரி வகுப்பில் எடுத்து வைத்தேன். முடிவு எடுத்து விட்டேன். 'கடவுளை வணங்க போவதில்லை', 'கோயிலுக்கு செல்ல போவதில்லை' இது தான் என் முடிவு. நான் ஒரு முழுமையான நாத்திகனாக மாறிவிட்டேன் என்று என்னால் உணர முடிந்தது.

வகுப்புக்குள் நுழைந்தவுடன் ரம்யா, லக்ஷ்மி தான் என் கண்ணில் பட்டார். இருவரையும் பார்த்து சிரித்து விட்டு என் இடத்திற்கு சென்று அமர்ந்தேன். ஜோசப், ஜாஸ்மின் வகுப்பு தொடங்கும் கொஞ்ச நேரத்திற்கு முன்பு உள்ளே வந்தனர். வகுப்பில் பாடத்தை கவனமாக குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தேன். என்னை அறியாமல் சில சமயம் ரம்யாவை பார்த்தேன். விரும்பும் பெண்ணை கொள்கைக்காக வெறுக்கும் ஒரே முட்டாள் நானாக தான் இருப்பேன் என்று நினைத்துக் கொண்டேன்.

பார்ப்பனர்கள் எல்லாம் இப்படி என்று முடிவுக்கு வந்த பிறகு ரம்யா மட்டும் விதிவிளக்காக எப்படி இருக்க முடியும். இனி ரம்யாவோடு தொடர்ந்து பேசலாமா ? வேண்டாமா ? என் மனதில் பட்டி மன்றமே நடத்தினேன். தீர்ப்பு கிடைக்கும் வரை அவளோடு பேசலாம் என்று தீர்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

வகுப்பு நடக்கும் போது ரம்யா என்னை திரும்பி திரும்பி பார்த்தாள். ஒரு மாதம் கலித்து என்னை பார்த்த ஏக்கம் அவள் கண்ணில் தெரிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவளுக்கு என் மீது காதல் வந்திருக்குமோ என்ற ஆசையும் மனதில் இருந்தது. கொள்கைக்கும், காதலுக்கும் நடுவில் போராட்டமே நடத்தினேன்.

வகுப்பு முடிந்ததும் ரம்யாவே என்னிடம், ' சந்திரு ! எப்படி இருக்க...? லீவ் எல்லாம் எப்படி போச்சு...? " என்று என்னை பற்றி விசாரித்தாள்.

" நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க... லீவ்ல என்ன பண்ண ? ".

" நான் புதுசா என்ன பண்ண போறேன். சாண்டில்யன் எழுதின 'கடல் புறா' புஸ்தகம் படிச்சேன். அவ்வளவு தான்." என்றாள்.

அவளாக பேச தொடங்கட்டும். ஒவ்வொரு முறையும் நான் ஒரு கேள்வி கேட்பதும், அதற்கு அவள் பதில் சொல்வதுமாக தான் எங்கள் சந்திப்பு இருந்தது. முதல் முறையாக அவள் என்னிடம் கேள்வி கேட்டுயிருக்கிறான். இது அப்படியே தொடர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

" ஆமா, லீவ்ல என்ன பண்ண...?" என்று கேட்டாள்.

"ரொம்ப நாள் கலிச்சு அம்மா கையால சாப்பிட்டேன். ஃபிரண்டோட கும்பகோணம் போனேன். அங்க 'பெரியார் பார்த்தேன். அவர் பேசுனது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..." என்று அவளிடம் சொன்னேன். வேண்டுமென்றே பெரியாரை பற்றின பேச்சை அவள் முன் எடுத்தேன்.

திராவிட கொள்கையை பற்றி அவளுடைய எண்ணம் என்னவென்று தெரிந்துக் கொள்ள ஆசையாக இருந்தது.

"என்ன பெரியார் பேச்ச போய் நல்லா இருக்குனு சொல்லுற..." என்று முகத்தை சுலித்துக் கொண்டு கேட்டாள்.

‘பெரியார் பேச்சை நன்றாக இல்லை’ என்றால் யார் பேச்சை நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியும். அவர் பேச்சை கேட்க எத்தனை பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் பேச்சை கேட்டது என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். அவள் இப்படி சொன்னவுடன் எனக்கு கோபம் தலைக்கேறியது.

" அவர் இல்லனா பொண்ணுங்க படிப்பப்பத்தி நினைச்சு கூட பார்த்திருக்க முடியாது. " என்றேன்.

"கடவுள் இல்லனு சொல்லுறவருக்கு வக்காளத்து வாங்குற..." என்று இழுத்து எதோ சொல்ல வந்தாள். அவள் சொல்வதை முடிக்க விடாமல், நான் " நா இப்ப இருந்தே வக்கில். அதான் நல்லவங்களுக்கு வக்காளத்து வாங்குறேன்" என்றேன்.

அவள் வாதத்தை தொடர விரும்பவில்லை. என்னிடம் பேசாமல் சென்று விட்டாள். இரண்டாம் ஆண்டு, முதல் நாளே இப்படியானதும் கொஞ்சம் சூடாக தான் இருந்தது. இருந்தாலும், ‘பெரியார்’ மீது எந்த அளவுக்கு எனக்கு பற்று வந்திருக்கிறது என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

பரூக் வீட்டில் கல்யாண வேலை எல்லாம் பரபரப்பாக நடந்தது. மணபெண் பாத்திமா வாணியம்பாடி ஊரை சேர்ந்தவள். மணபெண் வீட்டார்கள் எல்லாம் சென்னைக்கு வரவழைத்து 'நிக்கா' நடத்தினர். பரூக் புது மாப்பிள்ளையாகி விட்டான். இதற்கு மேல் அவன் வீட்டில் நான் தங்கினால் புது தம்பதியர்களுக்கு சங்கடமாக இருக்கும்.

நான் செய்த உதவிக்கு பரூக் என்னை அவன் வீட்டில் தங்க வைத்தான். அதே நன்றி அவன் மனைவியிடம் நான் எதிர் பார்ப்பது நியாயமில்லை. முன்பே ஜோசப்பிடம் ஒரு வீடு பார்க்க சொல்லியிருந்தேன். அவனும் எனக்கு ஒரு வீடு பார்த்து வைத்திருப்பதாக சொன்னான்.

'நிக்கா' முடிந்த கையோடு அவனிடம் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வான் என்பதால் நான் செல்வதை பற்றி எதுவும் அவனிடம் சொல்லவில்லை. நான் அவன் வீட்டில் இருந்தது பெண் வீட்டாரை கவனித்துக் கொள்ள உதவியாக இருந்தது. நிக்கா முடிந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. மணபெண் பாத்திமாவின் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லாம் வாணியம்பாடிக்கு சென்றனர்.

" பரூக் ! என் காலேஜ் பிரண்ட் ஜோசப் எனக்கு ஒரு தனி ரூம் பார்த்திருக்கான். நான் அங்க போய் தங்கிடலாம் இருக்கேன்..." என்றேன்.

அவன் அம்மா ஆயிஷா என்னை புரியாமல் பார்த்தார். " என்னடா ஆச்சு...! நிக்காவுல யாராவது உன்ன தப்பா பேசுனாங்களா....இல்ல உன்ன சரியா நடத்தலையா...." என்றான்.

"ச்சச்சே.... இது நம்ம வீட்டு கல்யாணம். என்ன யார் கவனிக்கனும். நான் எல்லாரையும் கவனிச்சேன்." என்றேன்.

"அப்புறம் எதுக்கு என்ன விட்டு தனியா போய் தங்குறேனு சொல்லுற...."

"இல்லடா ! உனக்கு கல்யாணமாடிச்சு. உங்களுக்கு தனிமை தேவப்படும். நான் இருந்தா நல்லா இருக்காது. அதான்...." என்று இழுத்தேன்.

அப்போது பரூக்கின் மனைவி பாத்திமா, " பையா ! நீங்க சொல்லுறத பார்த்தா நாங்க தனி குடுத்தனம் போகனும்னு சொல்லுற மாதிரி இருக்கு..." என்றாள். அவள் என்னை 'அண்ணன்' நினைத்தோடு மட்டுமில்லால் 'அண்ணன்' உரிமையில் பேசியதை என்னால் உணர முடிந்தது.

"நா இந்த வீட்டுக்கு வந்தது வாழுறதுக்கு. அவர் கூட இருக்குறவங்கள பிரிக்கிறதுக்கு இல்ல. நீங்க இப்போ போனா என்னால தான் நீங்க வீட்ட விட்டு போணீங்கனு அவரு என் கிட்ட சரியா பேசமாட்டாரு..." என்றாள்.

பரூக், அவனின் அம்மாவை விட அவன் மனைவி பாத்திமாவின் அன்பு கட்டளையில் இருந்து என்னால் தட்டி கலிக்க முடியவில்லை. நான் அவர்களோடு தங்க சம்மதித்தேன். மறு நாள், கல்லூரியில் ஜோசப்பிடம் நான் புது வீட்டுக்கு வரவில்லை என்பதை தெரிவித்தேன். அப்போது தன் புத்தகம் காணோம் என்று ஜாஸ்மின் அங்கும், இங்கும் தேடிக் கொண்டு இருந்தாள். தன் புத்தகத்தை பற்றி லக்ஷ்மி, ரம்யாவிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள். பெண்கள் உட்காரும் ஒவ்வொரு இடமாக தேடி பார்த்தாள்.



" என்ன ஆச்சு ஜாஸ்மின். என்ன தேடுற..." என்று ஜோசப் அவள் தேடுவதை பற்றி கேட்டான்.

" என்.டி.கப்பூர் எழுதுன 'மெர்க்கன்டைள் லா' பூக் வச்சிருந்தேன். காணோம். நாளைக்கு முக்கியமான நோட்ஸ் எடுக்கனும். இப்ப என்ன பண்ணுறதுனு தெரியல்ல..." என்று பதரினாள்.

விலை உயர்ந்த புத்தகம். ஜாஸ்மின் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. பாவம் எந்த இடத்தில் புத்தகம் வைத்தாளோ தெரியவில்லை.

" இதுக்கு போய் ஏன் அழுவுற. என் கிட்டையும் என்.டி.கப்பூர் புக் இருக்கு. தரேன்." என்று அவளை சமாதானம் சொல்லி ஜோசப் அழைத்து சென்றான். அவர்கள் சென்றவுடன் நான் வழக்கம் போல் பஸ் நிலையத்துக்கு சென்றேன். 

அங்கு ரம்யா, லக்ஷ்மி இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தேன். ரம்யாவிடம் இருந்து லக்ஷ்மி ஒரு புத்தகம் வாங்கினாள். அந்த புத்தகம் பார்த்ததும் அதிர்ந்தே விட்டேன்.

 அது ஜாஸ்மின் வைத்திருந்த என்.டி.கப்பூரின் 'மெர்க்கன்டைள் லா' புத்தகம் !!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails