வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, August 30, 2012

நடுரோட்டில் ஆபத்தான குழி !!

பதினைந்து நாள் போராட்டத்திற்கு பிறகு மிகுந்த வெருப்புடன், மன வேதனையுடன் இந்த பதிவு எழுதுகிறேன்.

பெரம்பூர் வடிவேலு முதலி தெருவில் (நெல்வயல் நகர்) நான்கு அடிக்கு இரண்டு குழிகள் தோண்டி ஒன்றரை மாதங்களாக மூடப்படாமல் இருக்கிறது. விவேகானந்தா, மான்போர்ட், ஞானஜோதி, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி என்று பள்ளி மாணவர்கள் அந்த வழியாக பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்களுக்கு ஆபத்தாக அந்த குழி இருக்கிறது. வயதான முதியவர்களும் மார்க்கெட்டுக்கு அந்த வழியாக தான் செல்ல வேண்டும்.

அந்த குழிக்கு மிக அருகில் தமிழ அரசு குடி மக்கள் தஞ்சமடையும் டாஸ்மார்க் இருக்கிறது. இரவு குடி போதையில் செல்பவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

 குழி நெ.1 (வெளிப்புரம்)

 குழி நெ.1 (உள்புரம்)

 இப்படி, முக்கிய பகுதியில் பல நாட்களாக குழி மூடப்படாமல் இருக்கிறதே என்று விசாரிக்க, மெட்ரோ வாட்டர் தோண்டிப் போட்டதாக கூறினர். நானும் அவர்களிடம் சென்று புகார் கொடுத்தேன்.

எதோ எண்ணை அழுத்தினார். நான் பார்த்து முடித்து விடுகிறேன் என்றார். மூன்று நாட்கள் ஆனது. குழி முடப்படவில்லை. (அவர் பெயரை கேட்காமல் விட்டுவிட்ட தவறை இப்போது உணர்கிறேன்.)

மீண்டும் மெட்ரோ வாட்டர் சென்று புகார் கொடுத்தேன். இந்த முறை குரலை உயர்த்தி பேசினேன். "நீங்க போய் கவுன்ஸ்லர் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுங்க" என்றார். எதற்காக குழி தோண்டியிருக்கிறார்கள் என்று சரியான பதில் கூட சொல்லவில்லை.

குழி நெ.2


இவர்கள் குழி தோண்டுவார்கள், அதை மூடிவதற்கு கவுன்ஸ்லர், எம்.எல்.ஏவிடமா செல்ல வேண்டும் ? இதற்கிடையில் இன்னொரு எண் கொடுத்தார்கள். எப்போது போன் செய்தாலும் அவங்க சீட்டுல இல்ல... நாங்க பக்கத்து டிவிஷன் என்கிறார்கள்.

சரி ! இணையத்தில் தேடி http://www.chennaicorporation.gov.in/ ல் இருக்கும் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அடித்தேன்.

 “Digged road is not closed more than one month. Vadivelu mudali street and nelvayal road inter section point. ( Near vellayan market), perambur.

என்று 9789951111 எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன் (22 ஆகஸ்ட்). குழி மூடப்படாமல் இருந்ததால், இரண்டு நாள் கலித்து 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். யாரும் போன் எடுக்கவில்லை. இணையத்தில் போடும் முன்பு, ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று மீண்டும் 1913 எண்ணுக்கு போன் போட்டேன். என்னுடைய பெயர், முகவரி, போன் நம்பர் எல்லாம் வாங்கிக் கொண்டு புகார் எண் சொல்லாமல் இணைப்பை தூண்டித்துவிட்டார்.

இவர்கள் என் புகார் எடுத்துக் கொண்டார்களா ? என்று எதை வைத்து நம்புவது. ஒரு வாரம் கலித்து கேட்டால் இப்படி ஒரு புகார் வரவில்லை என்று சொல்லுவார்கள்.

பள்ளிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த .. மாணவர்கள் ஸ்ரூத்தி, ரஞ்சன் மரணமடைய வேண்டியிருக்கிறது.. அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய பிறந்த குழந்தை எலி கடித்து சாக வேண்டியிருக்கிறது. சென்னை கார்ப்ரேஷனில் எல்லோரும் ஒழுங்காக வேலை செய்ய... இன்னொரு சிறுவன்/சிறுமி உயிர் தேவைப்படுகிறதா ? என்று தெரியவில்லை.

உயிர் பலி வரும் இவர்கள் அலட்சிய போக்கு தொடரும் என்று நினைக்கிறேன்.

1 comment:

எல் கே said...

முதல்வரின் தளத்தில் புகார் கொடுத்து பாருங்களேன்

LinkWithin

Related Posts with Thumbnails