வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, July 27, 2012

மரியம் மிஸ்

ஏன் மரியம் மிஸ் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் ? எவ்வளவு கஷ்டப்பட்டு தேர்வு எழுதினேன். பிரசாத்துக்கு மட்டும் முழுசாக பத்து மதிப்பெண் போட்டிருக்க, எனக்கு மட்டும் 2 மதிப்பெண்.

மரியம் மிஸ் ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கிற பையன், படிக்காத பையன் என்று இரண்டாக பிரித்துவிடுவார். அப்படி அவர் மனதளவில் பிரித்துவிட்டால், வருடம் முடியும் வரை அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். அவர் பார்வையில் நான் படிக்காத பையன். படிக்கிற பையன் பேப்பரில் பார்த்து அதிக மார்க் போடுவார். என்னைப் போன்ற படிக்காத பையன் தப்பி தவறி நன்றாக எழுதினால் கூட குறைவான மார்க்கில் இருந்து கொஞ்சம் அதிகமாக போடுவார். அவ்வளவு தான்.


இந்த தேர்வுக்கு கஷ்டப்பட்டு தேர்வுக்கு வரக்கூடிய முக்கியமான கேள்கிகளை படித்து வந்தேன். என் நேரம். நான் படிக்காத கேள்விகள் வந்து தொலைத்தது. வழக்கம் போல் முன் பக்கம் அமர்ந்திருக்கும் நன்றாக படிப்பவன் பிரசாத் பேப்பரை காப்பி அடித்து எழுதினேன். அப்படி இருந்தும், மரியம் மிஸ் இருக்கும் ஒரு தலை பட்சத்தால் இந்த முறையும் பெயிலாகிவிட்டேன்.

ஐந்து மதிப்பெண் இருந்தால் போதும், பாஸ்ஸாகி விடுவேன். பேப்பரில் கையில் வைத்திருந்த போது, என் அருகில் வந்த பிரசாத் “என்ன பிரதாப் ! எவ்வளவு மார்க் ?” என்றான்.

அதிக மதிப்பெண் எடுத்தவர்களின் தொல்லையே இது தான். அடுத்த தேர்வு வரை அவர்கள் செய்யும் அலும்பு தாங்க முடியாது. என் பேப்பரை வாங்கி பார்த்தான்.

”என்னடா ! கரேட்டா தானே எழுதியிருக்க... “ என்றான்.உன்ன பார்த்து தானே எழுதினேன். கரேட்டா இல்லமா எப்படி இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

“மரியம் மிஸ் கிட்ட பேசி நான் மார்க் வாங்கி தரேன் வா !” என்று அவனாகவே மிஸ்ஸிடம் அழைத்து சென்றான். எதோ பாஸ்ஸானால் சரி தான்.

“மிஸ் ! பிரதாப் கரேட்டா தான் எழுதியிருக்கான். கம்மியா மார்க் போட்டிருக்கீங்க !!” என்று என் பேப்பரை கொடுத்தான்.

இதுவே நான் கொடுத்திருந்தால் என் பேப்பரை வாங்கிக் கூட பார்க்க மாட்டார்கள். படிக்கும் பையன் பேப்பர் கொடுத்தாலே மிஸ்ஸிடம் தனி மரியாதை தான். இரண்டு மூன்று பேப்பரை நன்கு ஏற இறக்க பார்த்தார். தான் ஏன் சரியான பதிலுக்கு குறைந்த மதிப்பெண் போட்டிருக்கிறோம் என்ற சந்தேகம் மிஸ்ஸுக்கு வந்ததிருக்கும்.

பிரசாத் இடது கையில் இருக்கும் அவனது பேப்பரை வாங்கி என் பேப்பரோடு ஒப்பிட்டு பார்த்தார்.

“ஏன்டா ! பிரசாத் பேப்பர பார்த்து காப்பி அடிச்சதும் இல்லமா. மார்க் கேக்க அவனை கூட்டிட்டு வர...”

படிக்கிற பையனுகளிடம் பிரச்சனையே இது தான். நமக்கு நல்லது செய்றேன் சொல்லி வம்பில் மாட்டிவிடுவார்கள்.

“ உன்ன அப்படியே விட்டுருலாம் பார்த்தேன். நட பிரின்ஸ்பல் ரூமுக்கு...”

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடப்பாவமே... உள்ளதும் போச்சே... ஹா... ஹா....
நன்றி..

கவி அழகன் said...

Vada poche

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கதை நல்லா இருக்கு

LinkWithin

Related Posts with Thumbnails