வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, September 23, 2010

மூன்று புத்தக விமர்சனங்கள்

சண்டைத்தோழி
கட்டளை ஜெயா
விலை.ரூ. 30. பக்கங்கள் : 80
கற்பகம் புத்தகாலயம்

வேலூர் புத்தகக் கண்காட்சியில் கட்டளை ஜெயா என்ற நண்பர் அறிமுகமானார். அதிகமாக காதல் கவிதைகள் எழுதும் இவர், இதுவரை நான்கு நூல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய 'சண்டைத்தோழி' படிக்கலாம் என்று வாங்கினேன்.

"என் கழுத்துக்கு
நெக்லெஸ் போன்றவன்
என்றும் எல்லை தாண்டியதில்லை"

"உன் விடுமுறை கடிதம் கொடுக்கவே
பள்ளிக்கு செல்கிறேன் "

பெண்களை கவரும் தோழி கவிதைகள் இந்த புத்தகம் முழுக்க நிரம்பியிருந்தது. அவர் எழுதிய ஒரு புத்தகம் நான்காம் பதிப்பு வரவிருப்பதாக கூறினார். மாடல் அழகிகள் நிரம்பிய ஐந்து வரி கவிதைகளுக்கு இவ்வளவு வரவேற்பு உள்ளதா என்று வேலூர் புத்தகக் கண்காட்சி உணர்த்தியது. ஆனால், இது போல் நூல் வடிவம் அமைத்து அச்சிடுவதற்கு மற்ற நூல்களை விட அதிக செலவாகும் என்ற உண்மை தான் கசக்கிறது.

**
மனசே டென்ஷன் ப்ளீஸ் !
நளினி
விலை. ரூ.10. பக்கங்கள் : 32
பாரதி புத்தகாலயம்

எதிர்மறையான தலைப்பு எப்போதுமே வாசகனை ஒரு நிமிடம் கவரும். இரண்டு நிமிடம் புத்தகத்தை புரட்ட வைக்கும். அந்த வகையில் தலைப்பில் கவரப்பட்டு வாங்கிய புத்தகம்.

வாழ்க்கையில் இருந்து விடுப்பு எடுத்தால் தான் டென்ஷனில் இருந்து விடுப்பட முடியும் என்பதை ஆரம்பத்திலே சொல்லிவிடுகிறார். டென்ஷன் இல்லாமல் எப்படி வாழ வேண்டும், எப்படி பொறுமையாக இருக்க வேண்டும் என்ற பொய் உபதேசங்கள் இந்த புத்தகத்தில் எங்கும் இல்லை.

டென்ஷனால் வரும் விளைவுகள், டென்ஷன் எப்படி எல்லாம் வருகிறது, எதனால் டென்ஷன் ஆகிறோம் போன்ற விளக்கங்களை இந்த புத்தகம் விளக்கியுள்ளது. எல்லோரும் வாங்கும் படியான விலையில் பயனுள்ள நூல் என்று சொல்லலாம்.

**
மறக்க முடியுமா ?
புரட்சிப்பாடகர் கத்தார்
விலை.ரூ.40. பக்கங்கள் : 64
நக்கீரன் பதிப்பகம்

தேசியம், ஒருமைப்பாடு என்ற போலி பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தெலுங்கானா பழங்குடி மக்களில் இருந்து ஒரு புரட்சி குரல். தனது பாட்டால் பாரதி எப்படி ஆங்கிலேயரை மிரட்டினாரோ, தன் குரலால் ஆதிக்க வர்கத்தினரை பயமுருத்தியவர் கத்தார். அவரது அனுபவத்தை பேட்டியை தொகுக்கப்பட்ட புத்தகம்.

தனது பிறப்பில் இருந்து இன்றைய தெலுங்கானா போராட்டம் வரை கூறியுள்ளார். போலீஸாரால் தாக்கப்பட்டது, முகம் தெரியாத மனிதரால் சுடப்பட்டது, தன் ஆசை மகனை இழந்தது என்று ஒரு புரட்சியாளருக்கு கிடைக்கும் எல்லா பரிசும் இவருக்கும் கிடைத்திருக்கிறது.

அவர் பாடிய பாடலில் ஒரு சில வரிகள்...

எல்லா வண்டியும் பெட்ரோலில் ஓடுது
ரிக்ஷா வண்டி என் இரத்தத்தில் ஓடுது
பெட்ரோல் விலை மட்டும் ஏறுது
என் இரத்தத்தின் விலை மட்டும் மூழ்குது !


பெட்ரோல் விலை எவ்வளவு ஏறினாலும் விலை கொடுத்து வாங்கும் நாம், இவர்கள் உழைப்புக்கான ஊதியத்தை கொடுக்க நினைக்கிறோமா என்ற கேள்வி என்னை தொற்றிகொண்டது.

இன்று மேடை அரசியல் பேச்சாக அமைந்திருக்கும் தெலுங்கானா மாநிலப் பிரச்சனையை, ஒருமைப்பாடு என்ற வார்த்தில் மூட நினைப்பவர்கள் கத்தார் போன்ற போராளிகளுக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும்.

4 comments:

thiyaa said...

அருமையான அறிமுகம்
படிக்கத் தூண்டும் விமர்சனம்

Anonymous said...

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html

(dont miss to place this tell a friend button mentioned in above link)

vasan said...

/"என் கழுத்துக்கு
நெக்லெஸ் போன்றவன்
என்றும் எல்லை தாண்டியதில்லை"/
கொக்கி அவிழ்ந்தால்,அதே நெக்லெஸ் ந‌ழுவும் கீழ்நோக்கி,
எல்லை தாண்டி !!

Anonymous said...

create an archive and site map for your blogger blog in two separate static pages

http://ramasamydemo.blogspot.com/2010/09/create-archive-and-site-map-for-your.html

(please write an essay by yourself in your blog about the content in the above link links which are about creating archive and site for blogger. many blogger will be benefited)

LinkWithin

Related Posts with Thumbnails