வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 22, 2013

RAW (4) : மாலத்தீவு ஆக்கிரமிப்பு

“நம் கொள்கை என்ன ? செய்துக் கொண்டு இருக்கும் காரியம் என்ன ?” 

 எதற்காக இந்த விஷப்பரிட்சையில் இறங்க வேண்டும் ? 

யாரை நம்பி ஒரு தீவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இவர் இறங்குகிறார். 

தீவை ஆக்கிரமிப்பு செய்தால், நாளை உலகம் நம் போராட்டத்தைப் பற்றி தவறாக பேசுமே ! இவர்களுக்கு ஆளும் ஆசையில் தான் போராட்ட குழு நடத்துகிறார்கள் என்று எல்லா பத்திரிக்கைகளும் எழுதுமே ! 

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மற்ற நாடுகள், தீவுக்கு ஆதரவாக வந்தால் நம்மால் சமாளிக்க முடியுமா ? 

- இப்படி பல கேள்விகள், விவாதங்கள் அந்தப் போராட்ட குழுக்களுக்குள் நடைப்பெற்றது. என்ன கேள்வி கேட்டாலும், யார் கேட்டாலும் மாலத்தீவின் ஆட்சியை கவிழ்த்து, ஆக்கிரமிக்கப் போவதில் உறுதியாக இருந்தார் உமா மகேஸ்வரன்.

உமா மகேஸ்வரன் ? எங்கோ ஈழப் போராட்டத்தில் கேள்விப்பட்ட பெயர் தெரிகிறதா ? சந்தேகம் வேண்டாம். புளோட் (PLOTE) போராட்டக் குழுவின் தலைவன் உமா மகேஸ்வரன் தான் மாலத்தீவில் கலகம் செய்து, ஆக்கிரமிக்க நினைத்தார்.

இலங்கை அரசுக்கு எதிராக போராட வேண்டிய ஈழப்போராளிகள் ஒரு தீவை ஆக்கிரமிக்க திட்டமிட்டது முரணாக தெரியலாம். தங்களை இரண்டாம் தர குடிமகன்களாக நடத்தும் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி, விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து, தனக்கென்று தனியாக ஒரு போராட்டக் குழுவை உருவாக்கியவர் தான் உமா மகேஸ்வரன். சிங்களர்களிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற நினைக்கும் தலைவன், எப்படி ஒரு தன்னாட்சி புரியும் தீவை ஆக்கிரமிக்க நினைக்கிறார் என்று அவர் கூட்டத்தில் இருப்பவர்களே கேள்வி கேட்டனர்.

மாலத்தீவை ஆக்கிரமித்தால், தங்கள் போராட்டம் உலகளவில் பேசப்படும், மற்ற நாடுகளின் நட்பு கிடைக்கும், தங்கள் ஆயுதங்களை சேகரித்து வைக்க தளமாக இருக்கும் என்று திடமாக நம்பினார் உமா மகேஸ்வரன்.

தங்கள் உரிமைக்காக தங்கள் எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் வரை தான் அவர்கள் போராளிகள். தங்களுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு இடத்தில், எல்லை தாண்டி தாக்குதல் நடத்தினால், அது தீவிரவாதம் என்று தான் சொல்வார்கள். உரிமைக்காக போராடுகிறோம் என்று சொன்னால் யார் நம்புவார்கள். இந்த உண்மை உமா மகேஸ்வரனுக்கு புரிந்ததா ? இல்லை அவருக்கு பின் பக்கத்தில் இருந்து ஆட்டி வைத்தவர்களுக்கு தெரிந்ததா ? என்று தெரியாது. மாலத்தீவில் ஆட்சி செய்தும் அப்துல் கயூம் கவிழ்க்க வேண்டும். அது தான் முடிவு என்றார்.

மாலத்தீவு. இலங்கைக்கு அருகில் இருக்கும் தீவு. இந்தியாவுடன் அதிக நெருக்கமில்லாத, பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்கும் அப்துல் கயூம் ஆட்சி செய்கிறார். ஏற்கனவே, ஆட்சி செய்தவர்களை கவிழ்த்து, விரட்டி அடித்து ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையே வைத்து ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று நினைத்தார் உமா மகேஸ்வரன்.

ஐ.பி.கே.எப் கண்காணிப்பில் இருந்து எப்படி கப்பலில் ஏறுவது ? இந்திய கடல் வழியாக தான் மாலத்தீவுக்கு செல்ல வேண்டும். இந்திய இராணுவம் நம்மை தாக்கினால் என்ன செய்வது ? உமா மகேஸ்வரனின் திட்டம் புளோட் குழுவுக்கே பைத்தியக்காரத்தனமாக தான் தெரிந்தது.

 “வழியில் எந்த பிரச்சனை வராது. நமக்கு உதவ பல நண்பர்கள் இருக்கிறார்கள். நம் போராட்டத்திற்கு ஒரு தனி தளம் வேண்டும். அதற்கு மாலத்தீவு தான் சரி. அதை அடைந்துவிட்டால், பிறகு இலங்கை அரசை ஆட்டிப்படைக்கவும், மற்ற நாடுகளின் உதவிக் கோரவும் வசதியாக இருக்கும்” என்றார்.

எந்த நம்பிக்கையில் உமா மகேஸ்வரன் இப்படி செய்கிறார் என்று கொஞ்சம் வியப்பாக தான் இருந்தது. ஆனால், உமா மகேஸ்வரன் சொல்லுவதுப் போல் நடந்துவிட்டால் மாலத்தீவில் இருந்தப்படி இலங்கை அரசுக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்று போராட்டக்காரர்கள் நினைத்தார்கள்.

1988 நவம்பர் 2… ‘அல் அகமத்’ என்ற போலிப் பெயர் கொண்ட கப்பலில், ப்ளோட் போராளிகள் ஆயுதங்களுடன் பிரயாணம் செய்தனர். வழியில் எந்த ஆபத்தும் இல்லை. தாக்குதல் நடத்த வழி வகுத்து தருவது போலவே சிறு பிரச்சனை இல்லாமல் மாலத்தீவை அடைந்தனர். அமைதியான சுற்றுலா பயணிகள் போலவே மாலத்தீவில் மேல் நகரத்துக்குள் நுழைந்தனர். இதற்கு முன், சுற்றுலா பயணிகள் போலவே சிலர் அங்கு இருந்ததால், அவர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை விரைவாக நடந்தது.

வானொலி, விமான நிலையம் , தொலைக்காட்சி, அரசு கட்டிடங்கள் என்று ஒன்றன் பின் ஒன்றாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். முழுத் தீவும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம் என்று நினைத்த நேரத்தில் தான் அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. அதிபர் கயூம் அதிபர் மாளிகையில் இல்லை. அவரைக் கைது செய்யாமல் இந்தப் ஆக்கிரமிப்பு வெற்றி முழுமைப் பெறாது. அடுத்து எதைத் தாக்குவது என்ற குழப்பத்தில் வேறு இருந்தனர். அவர்களின் குழப்பம் தீருவதற்குள், அதிபர் கயூம் தான் தங்கியிருந்த இடத்தில் இருந்தே வானொலியில் சர்வதேச உதவிக் கேட்டார்.

உதவிக்கு அவர்களின் நட்பு நாடான பாகிஸ்தான் வரும் என்று நினைத்த அதிபருக்கு, இந்தியாவிடம் இருந்து உதவி கிடைத்தது. ரா உதவியுடன் 2000 பேர் கொண்ட இந்திய விமான வீரர்கள், கப்பல் படையினர்கள் மாலத்தீவுக்கு அனுப்பினார். 12 மணி நேரத்திற்குள், விமான நிலையம், வானொலி என்று போராட்டக்காரர்களிடம் இருந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதிபர் கயூம் மீட்கப்பட்டார். இந்தியாவின் இந்த மீட்பு பணிக்கு ‘ஆப்ரேஷன் காக்டஸ் (Operation Cactus) என்ற பெயரிட்டனர்.



இலங்கைக்காக விடுதலைப் புலிகள், புளோட் போன்ற போராட்ட அமைப்புகளைப் பற்றிய தகவல் சேகரித்து வைத்திருந்ததால், இந்திய இராணுவத்திற்கு ரா தகவல் கொடுப்பதில் பெரிய சிக்கல் இருக்கவில்லை. ரா உளவு அமைப்பின் உதவியில்லை என்றால், இவ்வளவு விரைவில் ஆக்கிரமிப்புக் ரர்களை இந்தியப்படையால் வெளியேற்றியிருக்க முடியாது.

உமா மகேஸ்வரனின் இந்த தாக்குதலுக்கு பின் புலமாக இருந்தது முன்னாள் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் நசீர் என்று அப்துல் கயூம் கூறினார். ( இரண்டு வருடத்திற்கு பிறகு, நசீர் மீது குற்றம் சுமத்தியற்கு வருத்தம் தெரிவித்தார்.)

இந்த தாக்குதலில் உமா மகேஸ்வரனுக்கு உதவியாக இலங்கையில் வசிக்கும் ‘அப்துல்லா’ என்ற மாலத்தீவு வியாபாரி பணமும், ஆயுதமும் கொடுத்ததாக கண்டறியப்பட்டது. 1988ல் 8.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்து வந்த மாலத்தீவு 1989ல் 5.8 மில்லியனாக குறைத்துக் கொண்டது. அதுமட்டுமில்லாமல், இந்திய – மாலத்தீவு உறவு வலுவடைந்தது.

 “ நட்பு நாடுக்கு உதவக் கூடிய நல்ல வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது” என்று இராஜீவ் காந்தி பேசினார். ஆனால், மேலை நாட்டு ஊடகங்கள் இந்தியாவின் தலையீட்டை வேறு விதமாக விமர்சித்தது.

“ ஐ.பி.கே.எப் கண்காணிப்பில் இருக்கும் இலங்கையில் இருந்து எப்படி கலகக்காரர்கள் வெளியே வந்தார்கள். இந்தியாவுக்கு தெரியாமல் இவர்கள் வந்திருக்க முடியாது” என்றனர். மேலும், கலகக்காரர்கள் இந்தியாவுக்கு தெரியாமல் இந்திய கடல் பகுதி வழியாக எப்படி வந்திருக்க முடியும் ? என்று கேட்டனர். ரா உதவியுடன் தான் உமா மகேஸ்வரன் மாலத்தீவை ஆக்கிரமிக்க திட்டமிட்டார் போன்ற குற்றச்சாட்டுகள் வைத்தனர்.

“தெற்கு ஆசியாவின் தங்கள் கை ஓங்கியிருக்க இந்தியா நடத்திய சதியே “ என்றார்கள்.

இன்று வரை, கேள்விகளுக்கு இந்தியா மறுத்ததே தவிர அவர்கள் கேள்விக்கு இந்திய அரசோ, ரா உளவு நிறுவனமோ பதில் அளிக்கவில்லை.

ரா உளவு அமைப்பு தூண்டுதலால் உமா மகேஸ்வரன் மாலத்தீவு ஆக்கிரமிக்க நினைத்தாரோ அல்லது வேறு ஒருவர் தூண்டுதலில் உமா மேஸ்வரன் ஆக்கிரமிக்க நினைத்தாரோ என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. பின்னாளில், உமா மகேஸ்வரன் கொல்லப்பட்டப் போது விடுதலைப்புலிகள் உமாவை இந்தியாவின் கைக் கூலி என்று குற்றம் கூறியதும், மாலத்தீவின் ஆக்கிரமிப்பின் சந்தேகத்தை மேலும் வலுவூட்டியது. ரா தான் உமா மகேஸ்வரனை கொன்றது என்ற இன்னொரு சர்ச்சையும் உண்டு.

உளவுத்துறையில் எல்லாம் மர்மமான விஷயம். எல்லாவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியாது. எல்லா யூகங்களுக்கும் உளவுத்துறை பதில் அளிக்காது. அதன் செயல்பாடு எப்போதுமே மர்மமாக இருக்கும்.

எது எப்படி இருந்தலும் இந்திய – மாலத்தீவு உறவு மலர்ந்ததற்கு ராவின் பங்கு மிக முக்கியம். அந்த அளவில் ரா உளவு நிறுவனத்திற்கு Operation Cactus மிக பெரிய வெற்றி என்பது குறிப்பிட தக்கது.

Thursday, April 18, 2013

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் – 4: ஜெர்மானியர்கள் நடத்திய யூத இனப்படுகொலை

பாகம் - 1, பாகம் -2, பாகம் -3 

யாரோ ஒரு கும்பல் ஒரு தலைவரை கொல்லப்படுகிறார் என்றால் அந்த குழுவுக்கு எதிராக அந்த தலைவர் செயல்ப்படுகிறார் என்று அர்த்தம். அல்லது அந்த குழுவுக்கு எதிரான கொள்கைக்கு ஆதரவு அளிக்கிறார் என்று அர்த்தம். மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, லிங்கன் என்று எல்லா அரசியல் கொலைகளும் இந்த இரண்டு காரணங்களில் அடங்கிவிடும். மூன்றாவது ஒரு காரணம் இருக்கிறது. கொலை முயற்சி வெற்றி பெற்றால் பெரும்பாலும் இந்த காரணங்கள் வெளியே தெரிவதில்லை. ( உதாரணத்திற்கு, சஞ்சய் காந்தி மரணம்). அதே கொலை முயற்சி தோல்வி அடைந்தால் அதற்கான காரணம் வெளியே தெரிய வரும், அப்படி கொலை முயற்சி தோல்வி அடைந்ததில் ஹிட்லருக்கு தன்னை சுற்றி இருப்பவர்கள் புரிய வைத்தது.

ஹிட்லரை கொல்ல நினைத்தது யூதர்களோ, கம்யூனிஸ்டுகளோ, நேச நாட்டு உளவாளிகளோ இல்லை. ஹிட்லருடன் பக்க பலமாக இருந்த ஜெர்மனிய ஜெனரல். அதிஷ்டவசமாக ஹிட்லர் தப்பினாலும், அவருடன் இருக்கும் சில பாதுகாவலகளும், இராணுவ தளபதிகளும் கொல்லப்பட்டார்கள்.

அந்த சம்பவத்துக்கு பிறகு ஹிட்லரின் அழிவை விரும்புபவர்கள் ஏராளமான அதிகாரிகளும் இராணுவ தளபதிகளும் இருக்கிறார்கள் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் நிரூபணாமாகியிருக்கிறது. ஆனால், அந்த தளபதிகள் போருக்கு எதிரானவர்கள் என்பதை ஆராய வேண்டும்.

மனித உயிர்களுக்கு மதிப்பு கொடுப்பதாக இருந்தால், ஹிட்லரின் தளபதிகள் யூத உயிர்களை கொல்லுவதற்கு பல தொழிற்நுட்பத்தை கண்டுபிடித்திருக்க மாட்டார்கள். வதை முகாம்களுக்கு ஹிட்லர் எள் என்றால் எண்ணெய்யாக நின்று இருக்க மாட்டார்கள். ஹிட்லரின் கட்டளைக்கு ஆதரவு தெரிவிக்காமல் போராட்டமோ, கிளர்ச்சியிலோ யாரும் இறங்கவில்லை. ஹிட்லரின் கட்டளையை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் மனதில் இருக்கும் வன்மத்தையும் சேர்த்து தான் யூதர்கள் மேல் செலுத்தினார்கள்.


ஹிட்லர் தவறு செய்யவில்லை, அவர்கள் தளபதிகள் தவறு செய்தார்கள் என்கிறீர்களா ? என்று கேட்கலாம். அப்படி சொல்லவில்லை. ஒரு நல்ல திட்டத்தை அரசு கொண்டு வருவதாக அதை செயல்படுத்த அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிதாக இருக்கும் போது யூத அழிவு திட்டத்தை எப்படி அவ்வளவு கட்சிதமாக நிறைவேற்ற முடிந்தது என்பதை யோசிக்க வேண்டும்.

இன்று, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை எடுத்துக் கொள்வோம். ராஜபக்ஷே என்ற தனி மனிதனை எதிர்த்தா போராட்டம் நடக்கிறது. ராஜபக்ஷே இல்லை என்றால் தமிழர்களுக்கு விடிவுக்காலம் பிறந்துவிடுமா ? பல வருடங்கள் மேல் நடக்கும் ஈழப் போராட்டத்தில் எத்தனையோ அதிபர், பிரதமர்கள் சந்தித்துவிட்டார்கள். யாரும் தமிழர்கள் உயிர்களை மதிக்கவில்லை என்பது தான் உண்மை. தங்கள் நாட்டிலே பல உயிர்கள் இறப்பதை எந்த சிங்கள கட்சியோ, அமைப்போ எதிர்த்து பேசவில்லை. ஆக, சிங்களர்களின் எண்ணத்தை ராஜபக்ஷே பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறார். தமிழர்களின் இனப்படுகொலையில் ‘ராஜபக்ஷே’ என்ற தனிமனிதன் மீது சிங்களர்கள் தப்பித்துவிட முடியாது.

அதேப் போல், யூத இனப்படுகொலையில் ‘ஹிட்லர்’ என்ற தனி மனிதன் மீது ஒட்டு மொத்த பழியையும் போட முடியாது. யூத இனப்படுகொலையை நடத்தியது ஜெர்மனியர்கள்…. ஹிட்லர் என்ற தனிமனிதன் அல்ல.

கொலைவெறி, யூத வன்மம் கொண்ட ஜெர்மனிய இராணுவ தளபதிகள் ஹிட்லரை கொன்று அமைதியா கொண்டு வந்திருப்பார்கள் ? இன்னொரு இராணுவ அதிகாரியை சர்வதிகாரியாக பதவியில் அமர்த்தி நேச நாடுகளோடு உடன்படிக்கை செய்து மேலும் பல கொடுமைகள் செய்திருப்பார்கள்.

ஹிட்லர் மீது இருக்கும் மிக பெரிய பழியே யூத இனப்படுகொலை தான். ஆனால், இந்த பழியை ஒட்டுமொத்த ஜெர்மானியர்கள் சுமக்க வேண்டும், ஹிட்லர் என்ற தனிமனிதனில்லை என்பதை விளக்கியிருக்கிறேன்.

தமிழர்கள் ஒரு பக்கம் இனப்படுகொலையில் இறக்கிறார்கள். பலர் இனப்படுகொலைக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இவன் என்ன காலவதியான யூத இனப்படுகொலைக்கும், அதுவும் ஹிட்லருக்கு வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கிறான் என்பதை உங்கள் உள் உணர்வு கேட்பது புரிகிறது. முந்தைய இனப்படுகொலையின் சரியான புரிதல் இல்லாமல் இருந்ததற்கான காரணம் தான், இன்று இனப்படுகொலை உலகமயமாக்கி விட்டது. இன்று, ஒவ்வொரு கண்டத்திலும் இனப்படுகொலை சம்பவம் நடந்திருக்கிறது. நடந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், இனப்படுகொலைக்காக ஹிட்லர் மட்டும் தான் இதில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

உயிருடன் இருந்து இனப்படுகொலையில் எத்தனையோ பேர் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். ஐ.நா முதல் கொண்டு பல உலக நாடுகள் அமைதியாக இருக்கிறது. இவர்களை காட்டிலும் ஹிட்லர் நல்லவர் தான்.

**

குறிப்பு :

ஒரு பக்கம் இனப்படுகொலை பற்றி கட்டுரை எழுதுபவன், இன்னொரு பக்கம் யூத இனப்படுகொலை செய்த ஹிட்லருக்கு ஆதரவாக எழுதுகிறான் என்று நீங்கள் என்னை விமர்சிக்கலாம். இனப்படுகொலையை எந்த உருவத்தில் நடந்தாலும் அதை என்னால் ஆதரிக்க முடியாது.

யூத இனப்படுகொலையின் நம்முடைய தவறான புரிதலும், ஹிட்லரையே நல்லவராக்கிவிட்டவர்கள் இன்றைய அரசியல் சூழலில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டவே "ஹிட்லரும் நல்லவர் தான்" என்ற தொடரின் நோக்கம். 


Monday, April 15, 2013

RAW என்ன செய்கிறது ?

இந்திரா காந்தி புன்னியத்தில் உளவுத்துறை உருவாகிவிட்டது. 'ரா' என்று அழகிய நாமகரனமும் சூட்டிவிட்டார்கள். அவர்களுக்கு என்ன வேலை ? என்ன நோக்கங்கள், கொள்கைகள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் வரைமுறைப்படுத்த வேண்டுமே ! மனித உயிர்களை கொள்ளும் தீவிரவாத இயக்கமே கொள்கையோடு இயங்கும் போது ஒரு நாட்டை பாதுகாக்கும் பொருப்பில் இருக்கும் உளவுத்துறை செயல்பாடுகள் எப்படி இருக்கும் ? பாதுகாப்பில் மட்டுமல்லாமல் எதிர் நாட்டை உளவு பார்க்கும் வேலையில், திட்டம் மிகவும் அவசியம்.

‘ரா’வின் செயல்பாடுகளைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

ராவின் முக்கிய வேலைகள்

1. அண்டை நாடுகளில் நிகழும் - அரசியல், ராணுவ மாற்றங்களைக் கண்காணிப்பது.
2. சர்வதேச கம்யூனிசத்தின் வளர்ச்சியை கண்காணிப்பது. அந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ள தொடர்புகளைக் கண்காணிப்பது.
3. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ராணுவம் நவீன ஆயுதங்களை கண்காணிப்பது. ஏதாவது புது ஆயுதம் வாங்குவதாக தகவல், அதன் ரிஷிமூலத்தை மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் ஆராய வேண்டும்.
4. சர்வதேச நாடுகளில் வாழும், இந்திய சமூகத்தினைப் பயன்படுத்தி, அந்த நாடுகளில் கருத்துருவாக்கம் மற்றும் அரசியல் அழுத்தங்களை உருவாக்குதல்.

உலகில் எந்த ஒரு உளவு நிறுவனம் தொடங்குவதாக இருந்தாலும், அவர்களுக்கு பயிற்சி அளிக்க முதலில் அணுகுவது அமெரிக்க அண்ணனின் ‘சி.ஐ.ஏ’ என்பது மாற்றப்படாத விதி. அடுத்து பயிற்சிக்கு தொடர்பு கொள்வது அமெரிக்காவின் தம்பி இஸ்ரேலின் உளவு நிறுவனமான ‘மோஸாட்’. அதே விதியை தான் ரா விஷயத்திலும் பின்ப்பற்றப்பட்டது.



ராவில் பணியாற்றுபவர்கள் அமெரிக்கா, இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றவர்கள். ‘ரா’ வின் தலைமை அமைச்சரவை செயலாளருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அமைச்சரவை செயலாளர் பிரதமருடன் தொடர்பு கொண்டுள்ளார். ஆனாலும், ஒவ்வொரு நாளும் – ‘ரா’ செயலாளர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இரண்டு சிறப்பு செயலாளர்கள் மற்றும் ஒரு சிறப்பு இயக்குனரின் கீழ் ‘ரா’வின் விமான ஆய்வு மையங்கள் இயங்குகின்றன. பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கூடுதல் செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் விடப்பட்டுள்ளன. பல்வேறு தலைப்புகளின் கீழ் ‘ரா’ பிரச்சினைகளை கையாளுகிறது.

புது டெல்லி மட்டுமல்லாமல் வேறு பல இடங்களிலும் ‘ரா’விலும் மண்டல தலைமையகங்கள் உண்டு. சர்வதேச நாடுகளில், ரகசியமாக தகவல்கள் திரட்டி அனுப்பும் வேலைகளை கள அதிகாரிகளும் மற்றும் அவர்களது உதவியாளர்களும் கவனித்து வருகிறார்கள். திரட்டப்பட்ட தகவல்கள் இறுதியாக, ‘ஆய்வு அதிகாரிகளின்’ பார்வைக்கு வரும். திரட்டப்படும் தகவல் சரிபார்த்து, உண்மையானதா என்பதை உறுதி செய்துக் கொண்டு பிறகு அதற்கான செயல் திட்டங்கள் இறங்குவார்கள்.

என்ன தகவல் திரட்டுகிறார்கள் ?

தகவல் சேகரிப்பு : இந்தியாவின் நலன் தொடர்பான தகவல்கள் – முறையான வழிகளிலும், முறைகேடான வழிகளிலும் திரட்டப்படுகிறது.

தகவல் பகுப்பு : சேகரிக்கப்பட்ட தகவல்கள் – தலைப்பு வாரியாக பகுக்கப்பட்டு, கணினி வழியாக பதிவு செய்யப்படுகின்றன. புதுடில்லியிலுள்ள குண்டு துளைக்காத 13 அடுக்கு தலைமையகத்தில், இதற்கென்று தனித்தளம் உண்டு.

அதிரடி நடவடிக்கைகள் : உளவு பார்த்தல், கவிழ்ப்பு நடவடிக்கைகள், சதித் திட்டம், கலகக் குழுக்களை உருவாக்குதல் ஆகியவையும், ‘ரா’வின் செயல்பாடுகள் ஆகும்.

ஊடுருவல் : எதிரிகளின் உளவு நிறுவனங்களில் ஊடுருவி செயல்படும் முறையையும் ‘ரா’ பின்பற்றி வருகிறது. ஒரு காலத்தில் ‘ரா’ நிறுவனத்தின் முக்கிய பணியாக ‘ஊடுருவல்’ கருதப்பட்டது. ‘ரா’ உளவு நிறுவனங்களிலிருந்து பல முக்கிய அதிகாரிகள் வேறு நாடுகளின் உளவு நிறுவனங்களுக்கு தாவி விடுவது அதிகரித்து வருவதால், ‘ஊடுருவல்’ வேலைகளை இப்போது அதிகமாக ‘ஐ.பி’ மேற்கொண்டு வருகிறார்கள். 

( அண்மைக்காலமாக ‘ரா’ நிறுவனம், பாகிஸ்தானை விட சீனாவிடமிருந்து தகவல்களை திரட்டுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.)

 ‘ரா’ உளவு நிறுவனத்தின் உளவாளிகள் – தூதரகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்களான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆப்கானின் “காட்” (KHAD), இஸ்ரேலின் மொஸாத் அமெரிக்காவின் சி.ஐ.ஏ ஆகிய உளவு நிறுவனங்களோடு தொடர்பு கொண்டும் செயல்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட உளவு நிறுவனங்கள் – பாகிஸ்தானின் அணு ஆயுதக் கொள்கைகளையும், அது தொடர்பான செயல்பாடுகளையும் கண்காணிப்பதும் ஒத்த கருத்துள்ளவையால் அவர்களின் ஆதரவு ‘ரா’ வுக்கு உண்டு.

ஆப்கானிஸ்தான், பிரிட்டன், ஹாங்காங், மியான்மர், சிங்கப்பூர் போன்ற நாடுகளைத் தளமாகக் கொண்டு, தீவிரமாக ‘ரா’ உளவு நிறுவனம் செயல்படுகிறது. தங்களது உளவு வேலைகளுக்கு, உள்ளூர் பகுதிகளிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். மது, மங்கை, பணம் போன்ற பலவீனங்களையும் பயன்படுத்தி, தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. சில நேரங்களில் மிரட்டியும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இனம் , பிரிவு, பிரிந்து போகும் கொள்கை போன்ற உணர்வு ரீதியான பிரச்சனைகளை முன்வைத்து பணிபுரிவோரின் பலவீனங்களுக்கு தீனி போட்டு தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

இதை எல்லாம் செய்வதால் ரா கெட்ட நிறுவனமோ, மக்களுக்கு எதிரான அமைப்போ இல்லை. எல்லா அரசு நிறுவனம் போல் ரா உளவு அமைப்பும் இந்திய நாட்டு மக்களுக்கான உருவாக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை பணயமாக வைத்து, அந்நிய நாட்டை உளவு பார்த்து தகவல் திரட்டியிருக்கிறார்கள். அந்நிய நாட்டில் இவர்கள் மாட்டிக் கொண்டால், இந்தியாவுக்கும் இவர்களுக்கும் சம்மந்தமில்லை என்று இந்தியாவும் மறுத்திருக்கிறது. இராணுவ சிப்பாய்க்கு கிடைக்கும் இறுதி மரியாதைக் கூட நாட்டு பாதுக்காக்க தகவல் சேகரிக்கு உளவாளிக்கு கிடைப்பதில்லை.

பிரதமர், அமைச்சர்களின் கருத்துக்கு இவர்களின் செயல்பட வேண்டி இருப்பதாலும், அவர்களின் கருத்தை பிரதிபலிக்கும் தகவலை திரட்ட வேண்டியிருப்பதால் அரசியல்வாதிகள் மேல் இருக்கும் கோபம் இவர்கள் மீதும் வருகிறது.

பண்டைய காலத்திலும் சரி, தற்காலத்தில் சரி ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் உளவுத்துறை மிகவும் முக்கியம். அதற்கான பணியில் ‘ரா’ உளவு நிறுவனம் மிகவும் அவசியம். ஆனால், முழுமையாக மக்கள் பாதுகாப்புக்கு செயல்படுகிறதா ? என்பதை வரும் அத்தியாயங்களின் பார்ப்போம்.

உதவிய நூல்

விடுதலை க.ராசேந்திரன். எழுதிய "ஈழப் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி" பின் சேர்கை கட்டுரை.

Thursday, April 11, 2013

ஆட்டிசம் சில புரிதல்கள்

எல்லா புத்தகங்களும் வாசிப்பதற்காக மட்டுமே எழுதப்பட்டதல்ல. எல்லா புத்தகங்களும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமே தயாரிக்க பட்டதுமல்ல. அதையும் தாண்டி நம் சிந்தனையை தூண்டவும், மற்றவர் உணர்வுகளை புரிந்துக் கொள்ள உதவவும் புத்தகங்கள் வெளிவருகிறது. அந்த எண்ணத்தில் எழுதப்பட்டப் புத்தகம் தான் யெஸ்.பாலபாரதி எழுதிய "ஆட்டிசம் சில புரிதல்கள்".

"அந்த குழந்தைக்கு பைத்தியம், மனநிலை சரியில்லை" என்று சுற்றி இருக்கும் சமூகத்தினர் நினைத்தார்கள். அவர்களை ஒதுக்கிவைத்தார்கள். பெற்றோர்கள் மீது இரக்கம் காட்டினார்கள். இப்படி தான் ஆட்டிசம் பற்றி தெரியாமல் பலர் இருந்தோம். ஆனால், இதை எல்லாம் மாற்றி அமைக்க முடியும் என்பதை சமிபத்தில் ஆட்டிச குறைபாடு உள்ளவர்களின் இயல்பான வாழ்க்கை புரிய வைத்திருக்கிறது.

ஹிந்தியில் பிரியங்கா சோப்ரா நடித்த ‘பர்பி’, சமிபத்திய தமிழ்ப்படம் ‘ஹரிதாஸ்’ போன்ற திரைப்படங்களுக்கு ‘ஆட்டிசம்’ பற்றி நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில மக்களுக்கு "ஆட்டிசம்" என்றால் என்ன என்பது தெரிய ஆரம்பித்திருக்கிறது.


ஆனால், ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வது என்பது வேறு; புரிந்துக் கொள்வது வேறு. 'ஆட்டிசம்' பற்றி தெரிந்தவர்களுக்கு இந்த நூல் மிக எளிமையாக புரிதலை தரும். 'ஆட்டிசம்' என்ற சொல்லுக்கு யதார்த்ததிலிருந்து விலகி ஒடுவது என்பது அர்த்தம். இது ஒரு குறைபாடே அன்றி, நோயல்ல என்பதை புரிந்துக் கொள்ள உதவுகிறது.

1943ல் டாக்டர் வியோ கானர் 'ஆட்டிசம்' பற்றி ‘Nervous Child’ என்ற பெயரில் வெளியிட்டார். முதலில் பெற்றோரின் அரவணைப்பு இல்லாத குழந்தைகள் இதில் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், அதே காலக்கட்டத்தில் ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் என்பவர் வளர்ந்த குழந்தைகளிடமும் இதே குறைபாடு இருப்பதை கண்டறிந்தார். ( பின்னாளில், பேசக்கூடிய ஆனால் மற்றவர்களோடு பழகுவதில் சிரமம் உடைய குறைபாடுக்கு இவர் பெயரே ( Asperger ) வைத்தனர்).

எதார்த்தத்தில் இருந்து விலகி இருக்கும் குழந்தை எப்படி 'ஆட்டிசம்' என்கின்றோமோ, அதேப் போல் அதற்கான மருத்துவ சிகிச்சையும் வித்தியாசமானது. மருந்து, மாத்திரை, அருவை சிகிச்சை என்று எதானாலும் சரி செய்ய முடியாது. காரணம், 'ஆட்டிசம்' போலவே அதற்கான சிகிச்சையும் முறைகளையும் இதுவென்று சரியாக வரையற்றுக்க படவில்லை. ஒரு குழந்தைக்கு பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கு பயன் தரும் என்பதில்லை. இதற்கான சிகிச்சை தேர்வை மருத்துவர்களை விட பெற்றோரிடமே அதிகமாக இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கான தேவை, ஆசை, வெறுப்பு, சந்தோஷம் எல்லாவற்றையும் புரிந்துக் கொண்டு அதையே தங்கள் குழந்தைக்கு தர வேண்டும். இயல்பான குழந்தைகளை விட ‘ஆட்டிசம்’ குறைபாடு உள்ள குழந்தை மீது பெற்றோர்கள் அதிக அக்கரை செலுத்த வேண்டும்.

முன்பெல்லாம் எதோ ஒரு குழந்தைக்கு தான் குறைபாடு இருக்கிறது என்று இருந்ததை உடைத்து 88 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சமிபத்திய புள்ளி விபரம் சொல்கிறது.

மற்ற குழந்தைகளிடம் ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்துப் பேசுவதை தவிர்ப்பது, அச்சம், ஆபத்து உணராதது, வித்தியாசமான முறையை திரும்ப திரும்ப செய்வது, அதீதமான பதட்டம், தேவைகளை கையைப் பிடித்து சொல்லுவது, வலியை உணராது இருப்பது என்று ஆட்டிச குறைபாடு குழந்தைகள் நடவடிக்கையில் நாம் தெரிந்துக் கொள்ளலாம்.

நடத்தைக்கான பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சி, கல்விக்கான பயிற்சி, பேச்சுக்கான பயிற்சி என்று அடிப்படை சிகிச்சைகள் ஆட்டிச குழந்தைகளுக்கு இருந்தாலும், பெற்றோர்களின் பங்களிப்பே ஆட்டிசத்தில் இருந்து ஒரு குழந்தையை மீட்டெடுக்க முடியும். பத்திய உணவு பழக்கங்களை சரியாக கொடுக்க வேண்டும். பதட்டம் அடையும் போது கவனத்தை திசை திருப்ப வேண்டும். சரி, தவறு என்று உணர்த்த வேண்டும். தங்கள் செயல்களை அவர்களாகவே செய்து கொள்ள பக்குவப்படுத்த வேண்டும்.

மற்ற குழந்தைகள் போல் வேகமாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதைப் போல் ஆட்டிச குழந்தைகள் கற்று கொள்வதில் சிரமம் இருக்கும். ஆனால், கற்றுக் கொள்ள முடியும் என்பதை முதலில் பெற்றோர்கள் நம்ப வேண்டும். 

ஒருவரை நிராகரிப்பதம் மூலம் நாம் எதையும் சாதித்து விட முடியாது எங்கிற போது ஆட்டிச குழந்தைகளை ஒதுக்கி என்ன சாதிக்க போகிறோம். அவர்களுக்கு தேவை நாம் அவர்களை புரிந்துக் கொள்வதும், அவர்களுக்கு தகுந்தாற்போல் நாம் செயல்படுவதும் தான்.

ஆட்டிச குறைபாடுள்ளவர்களும் மற்றவர்களைப் போல் இயல்பாக வாழ முடியும் என்பதை ஆட்டிச குழந்தையின் பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

**
ஆட்டிசம் சில புரிதல்கள் 
யெஸ்.பாலபாரதி 
ரூ.50. பக்கங்கள் : 80
பாரதி புத்தகாலயம்

 இணையத்தில் வாங்க….

Tuesday, April 9, 2013

அப்பா !

அந்த பிஞ்சு மனதில் இத்தனை பெரிய ஏமாற்றத்தை ராஜா எப்படி விதைத்தான் ? வாங்கும் சம்பளத்தில் இப்போது அவனால் வாங்கி தர முடியாதவனில்லை. ‘இது தேவையில்லை’ என்று நினைத்த எண்ணம் தான் அவன் மகன் அவன் மீது நம்பிக்கையில்லாமல் போனது.

ஒவ்வொரு மகனுக்கும் அப்பா தான் முதல் கதாநாயகன். முதல் வில்லன். ஆனால், ஏனோ ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு வில்லனாக மட்டுமே இருந்திருக்கிறான் என்று நினைக்கும் போது அவன் மீது அவனுக்கே கோபமாக இருந்தது.

 “அப்பா ! வாங்கி தரமாட்டார்” என்ற எண்ணம்.



மகனிடம் ‘முடியும்’ என்று சொல்ல முடிந்த விஷயத்தை ‘முடியாது’ என்று சொல்லுவது அப்பாவுக்கு மட்டுமே தெரியும் அவனுடைய வலி. ஆரம்பத்தில் தனது சம்பளத்தில் இயலாமையை மகன் மீது கோபமாக காட்டியிருக்கிறான். ‘பணம் இல்லை’ என்று சொல்ல தைரியமில்லாமல் அடித்திருக்கிறான். ஒரு வேலை தன் மகனுக்கு வாங்கி தராமல் இருக்க பலகிவிட்டேனோ என்ற சந்தேகம் அவனுள் எழுந்தது.

உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் வெளியில் எதிரிப் போல் பழகுவது அப்பா – மகன் உறவில் தான். தருணுக்கு எட்டு வயது தான் ஆகிறது. அவன் கேட்பது எல்லாம் தந்து விட வேண்டும் என்றே ஆசை. ஆனால், தன் சம்பளத்தில் ஒரு பங்கை அம்மா, அப்பாவுக்கும், இன்னொரு பங்கை தன் குடும்ப செலவுக்கும் சரியாக இருக்கிறது. காதலித்து திருமணம் செய்ததால் சொந்த வீட்டிலே தனிக்குடித்தனம். அப்பா, அம்மா மாடியில், ராஜாவின் குடும்பம் கீழ் வீட்டில்.

அம்மா தனது மகனை தட்டி பறித்த எண்ணத்தில் ராஜாவின் மனைவியிடம் பேசமாட்டாள். அப்பா ராஜாவுக்கு சாதகமாக பேசவும் மாட்டார். எதிர்க்கவும் மாட்டார். சொந்த வீட்டில் அப்பா அம்மாவுடனே மூன்றாவது மனிதன் போல் வாழ்க்கிறான். அவர்களுக்கும் பணம் கொடுத்து, தங்களுக்கும் பணம் செலவு செய்து மீதி பணம் சேர்த்து வைப்பது என்பது மன்மோகன் இரண்டு மணி நேரம் பேச சொல்வதற்கு சமம். இப்படி, இருக்கும் நிலையில் மகன் கேட்பதெல்லாம் ராஜாவால் எப்படி வாங்கி தர முடியும்.

ஓடி ஆடி விளையாடும் வயதில் மடியில் கணிணியை வைத்து விளையாடுகிறார்கள். ஆனால், தருண் கேட்டது சைக்கிள்.

ஒரு முறை மனைவியுடன் வெளியே செல்லும் போது தருணை அழைத்து சென்று இருந்தான். அப்போது ஒரு கடையில் சைக்கிளை ஆசையாக தடவிப்பார்த்துக் கொண்டு இருந்தான். மனைவி "சைக்கிள் வேண்டுமா ?" என்று கேட்டதற்கு, "அப்பா வாங்கி தரமாட்டார்" என்று அவன் சொன்ன பதில் அவனை மிகவும் பாதித்தது.

மற்ற வீட்டில், எழு எட்டு வயது குழந்தைகள் ஒரு பொருளை எப்படியாவது அடம் பிடித்து வாங்கிவிடுவார்கள். ஆனால், தருண் தன்னிடம் ஆசையாய் சாக்கலெட் கூட கேட்டதில்லை. அவன் கேட்ட பொருளெல்லாம் மறுத்ததற்கு, அவனிடம் இருந்து அவன் எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு இருக்கிறான் என்று புரிந்திருந்தது.

இதுவரை கடன் அட்டை வேண்டாம் என்று இருந்த அவன், தன் மகனுக்காக கடன் அட்டை வாங்கினான். மகளிடம் / மகனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றால், பெரும்பாலும் அப்பாக்கள் கடன் வாங்க வேண்டியதாக இருக்கிறது.

தன் நண்பன் ஒருவன் சைக்கிள் ஹோல்சேல் கடைக்கு 'சைக்கிள் விலை குறைவாக இருக்கும் என்று அழைத்து சென்றான். தருண் ஆசையாய் தடவிப் பார்த்த சைக்கிளை விட விலை உயர்ந்த, அழகான சைக்கிள் அங்கு இருந்தது.
 முதல் முதலாக வாங்கிய கடன் அட்டையில், தருணுக்காக சைக்கிள் வாங்கினான்.

கடன் அட்டை தேய்க்கும் போது கொஞ்சம் உருத்தலாக இருந்தாலும், தருணின் சந்தோஷத்திற்கும் எதுவும் பெரிதாக தெரியவில்லை. வாங்கிய புது சைக்கிலை என் நண்பன் வண்டி பின் அமர்ந்து எடுத்து வந்தேன்.

கடைசி தேர்வு முடித்து வீட்டுக்கு வந்த தருணின் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க மிகந்த ஆசையாக இருந்தது.

புது சைக்கிளைப் பார்த்ததும் அப்பா "என்னடா ! தருணுக்கா சைக்கிள்"

“இந்த சைக்கிள் ஓட்டுறதுக்கு வீட்டுல வேற பசங்க இருக்காங்களா....” என்றான் ராஜா.

 “நல்ல இருக்குடா.. !”

அப்பாவிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, என் மனைவி கீழ வர "என்னங்க புது சைக்கிள் வாங்குனீங்களா ?"

ஆமாம் என்பது போல் தலையாட்டினான். "நேத்து வீட்டு செலவுக்கு பணம் கேட்கும் போது இல்ல சொன்னீங்க.. இப்போ எப்படி ? "

"கிரடிட் கார்ட் வச்சி வாங்கினேன்".

"எதுக்கு கடன் வாங்கி சைக்கிள் வாங்குன... என் கிட்ட கேட்டுருந்தா நா தந்திருக்க மாட்டேன்" என்று ராஜாவின் அப்பா பாசமாய் கூற, “நீயா..! உன்னால எனக்கு எந்த உதவியும் பண்ண முடியாது. நீ எனக்கு பணம் தரப் போறீயா ? " என்று அப்பாவை ஏளனமாகப் பார்த்துவிட்டு தருணின் பள்ளியில் இருந்து வருவதற்காக காத்திருந்தான்.

LinkWithin

Related Posts with Thumbnails