வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, July 6, 2015

பாபநாசம் - அசலை மிஞ்சும் நகல் !!

நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலிடம் ஒரு ஹிட் படம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், பலர் சொல்லும் அளவிற்கு கமலின் 'Comeback movie' என்று சொல்வதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

கமல் என்ற நடிகர் எப்போது விழுந்தார் ? அவர் விழுந்தால் தானே மீண்டு எழுவதற்கு. கமல் வெற்றி, தோல்வி எல்லாம் கடந்த ஒரு கலைஞன். படத்தின் வணிக வெற்றி வைத்து கமலை எடைப்போடுவது நம்முடைய பேதமைத்தனத்தை காட்டுகிறது. 

நேற்று வந்த நடிகர், இயக்குனர்களால் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்கும் போது 50 வருடங்களாக சினிமாவுக்காக உழைத்தவருக்கு தெரியாதா வெற்றிப்படத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்பது ? அவர் நினைத்தால் ஒரு படத்தை ஹிட்டாக முடியும். தோல்வி அடையும் என்று தெரிந்து ஒரு படத்தை உருவாக்க முடியும். தமிழ் சினிமா அவரை வைத்து தான் பல சோதனை முயற்சிகள் செய்துகிறது. (சூப்பர் ஸ்டார்கள், தளபதிகள் எல்லாம் அரசியலில் வர சினிமாவில் சோதனை முயற்சி செய்பவர்கள்). 

இன்று சினிமாவில் பலர் கண்ட வெற்றிகள் அவர் காட்டிய பாதை என்பது நாம் மறக்க முடியவில்லை.



திரிஷ்யத்தை அப்படியே பாபநாசமாக எடுத்தாக சொல்கிறார்கள். திரைக்கதையில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள். ஆனால், நாயகன் நடிப்பில் மாற்றம் இருக்கிறது, அதை யாரும் கவனிக்கவில்லை என்றே தெரிகிறது. 

மலையாளத்தில் மகள் பயத்தில் அழும் போது மோகன்லால் திடமாக நிற்பார். குடும்பத்திற்கு தைரியம் கொடுப்பார். இறுதிக் காட்சியில், இறந்த மகனின் பெற்றோரிடம் தனது குற்றத்தை ஒத்துக்கொள்ளும் போது எந்த வித குற்றவுணர்ச்சியும் முகத்தில் இருக்காது. அதற்கு ஏற்றவாறு இறந்தவனின் அம்மாவின் பார்வையில் கோபம் கலந்த இயலாமை தெரியும். 

ஆனால், தமிழில் அப்படியில்லை. 

மகள் பயத்தில் அழும் போது கமல் கண்ணில் நீர்ப்பட ஆறுதல் கூறுவார். மகள் அழும்போது ஒரு தந்தையால் திடமாக இருக்க முடியாது என்பதை கமல் உணர்ந்து சரி செய்திருப்பார். அதேப் போல், இறந்த மகன் பெற்றோரிடம் தனது குற்றத்தை ஒத்துக் கொள்ளும் போது குற்றவுணர்வில் கூனி குறுகி பேசுகிறார்.

நான்காவது படித்தவனை கொலையை மறைக்கும் புத்திசாலி தனத்தை சினிமா கொடுக்கும் என்ற லாஜிக்கை ஒரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு நடுத்தர வர்க்கத்தில் வந்தவன் இறந்தவர்களின் பெற்றோரை சந்தித்து, கொலையை ஏற்றுக் கொள்ளும் போது எப்படி எந்த வித குற்றவுணர்வு இல்லாமல் நிற்க முடியும் ? இந்த இடத்தில் கமலின் நடிப்பு திறன் வெளிப்படுகிறது. 

மலையாளத்தில் மோகன்லாலின் உடல் மொழி பல கொலைகள் மறைத்த அனுபவசாலியை போன்ற தோன்றத்தை கொடுக்கும். ஆனால், தமிழில் மனைவியை கவலைப்பட வேண்டாம் என்று சொன்னாலும் கமல் முகத்தில் கவலை தெரியும். எப்படி மீண்டு வரப் போகிறோம் என்கிற பயம் இருக்கும். 

முதல் முறையாக அசலை மிஞ்சும் அளவிற்கு ஒரு நகல் படத்தை தமிழ் சினிமா எடுத்திருக்கிறது. ‪

4 comments:

Kp said...

yes.
best crime thriller family movie.
thanks for post your review.

Anbazhagan Ramalingam said...

அருமையாக சொன்னீர்கள்

Unknown said...

Good Review

https://www.facebook.com/TamilCineNewz?ref=hl
www.cinenewz.in

sen said...

குருதிப்புனல் அதன் ஒரிஜினல் டைரக்டரே பாராட்டிய படம் as better than original. So பாபநாசம் இரண்டாவது படம்.
உன்னைப் போல் ஒருவன்-ல் கமல் மேதாவி தனத்தால் சறுக்கியதும் யாவரும் அறிவர்

LinkWithin

Related Posts with Thumbnails