வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, August 11, 2014

இராக் : அமெரிக்காவின் மௌனம் கலைந்தது !!

திரைப்படங்களுக்கு இரண்டாம் பாகம் வருவது போது, இன்று ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் இரண்டாம் பாகம் வரத் வந்துக் கொண்டு இருக்கிறது. சதாம்மை அழித்ததோடு இராக்கில் தங்கள் பணி முடிந்தது என்று அமெரிக்கா இராணுவம் மூட்டைக் கட்டிக் கொண்டு தங்கள் நாட்டுக்கு திரும்பிவிட்டார்கள். தங்களுக்கு சாதகமான ஷியா முஸ்லிம் தலைமையிலான ஆட்சி அமைந்தது, குர்துஸ்தான் தன்னாட்சியானது என்று எல்லாம் சுபமயமாகும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது நடப்பது எல்லாம் நேர் எதிர்.

Islamic State of Iraq and the Levant (ISIL) என்று அழைக்கலாம். Islamic State of Iraq and Syria (ISIS) என்று அழைக்கலாம். சுருக்கமாக ISIS என்று கூட அழைக்கலாம். எப்படி அழைத்தாலும் இவர்களின் நோக்கம் லெபனான், சைப்ரஸ், சிரியா, பாலஸ்தீன், ஜோர்டன், இஸ்ரேல், துருக்கியின் சில தென் பிராந்தியங்களை உள்ளடக்கிய பகுதிகள் ஒருங்கிணைத்து ”இஸ்லாமிய தேசம்” உருவாக்க வேண்டும் என்பது தான்.

இன்னொரு ஜிஹாத்தி அமைப்பு தான். ஆனால், மற்றவர்களை போல் இவர்கள் என்று நினைத்து விட முடியாது. இவர்கள் முன்வைக்கும் கனவு “”இஸ்லாமிய தேசம்” தான் பலரை ஈர்க்கிறது.

கூகிள் இணையத்தில் ‘isis’ என்று அடித்து பார்த்தால் எகிப்திய காலத்து காவல் தெய்வத்தின் பெயர் வந்து நிற்கும். அதை வழிபடும் முறை, அதன் அருள், பாரப்பரங்கள் எல்லாம் சொல்லும். அதை அடுத்து இப்போது வரும் இன்னொரு லிக் இராக்கில் இருக்கும் “ISIS” அமைப்பைப் பற்றியதாக இருக்கும்.

இவர்களின் பிராதான நோக்கம் இராக்கையும், சிரியா, இன்னும் பல இஸ்லாமிய நாடுகளை கலந்தடித்து ஒரு அகண்ட இஸ்லாமிய தேசத்தை உருவாக்க வேண்டும். இராக், சிரியா இரண்டுமே இஸ்லாமிய தேசம் தான்.

ஒரு மதத்தில் சேர்ந்தவர்கள், உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று தோன்றலாம். அனால், இரண்டு தேசத்திலும் பெரும்பான்மை ஷியா முஸ்லீம் சேர்ந்தவர்கள். ISIS அமைப்பு சன்னி முஸ்லிம் அமைப்பு.

சன்னி முஸ்லிம். இராக் ஐந்தில் ஒரு பங்கு தான். சன்னி முஸ்லீம் சேர்ந்த சதான் ஹூசைன் மட்டும் அங்கு அதிபர் பதவி ஏற்கவில்லை என்றால், இவர்கள் ஆயுத ஏந்தி இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். அமெரிக்கவால் ஷியா முஸ்லிம் ஆட்சி அமைந்த பிறகு சன்னி முஸ்லிம்களை ராணுவ, அரசு வேளை ஒதுக்காமல் இருந்திருந்தால் இவர்கள் ஆயுதம் சண்டையிட்டுயிருக்கமாட்டார்கள் என்று வாதிடலாம். அந்த அமைப்பு இத்தனைப் ஷியா முஸ்லீம்களை கொன்று குவித்திருக்க மாட்டார்கள் என்று பேசலாம். முடிந்த சம்பவங்களுக்கு இப்படி பல யூகங்கள், கருத்துக்கள் சொல்லிக் கொண்டு இருப்பதில் எந்த பலனுமில்லை. நடந்துக் கொண்டு இருக்கும் மரணங்களை யாராலும் தடுக்க முடியாது.

ISIS அல் கொயிதாவின் மறு உருவமா, ஆசிர்வாதம் பெற்ற அமைப்பா, நெருக்கமான தொடர்பு உடையவர்களா என்று அமெரிக்க உளவுத்துறை மண்டையை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒன்று உறுதி. இவர்களின் செயல்பாடுகள் இரண்டு அமைப்புகளுக்கும் அவர்களின் சாயல் இருக்கிறது. இவர்கள் இராக்கின் அல் கொயிதா !!

*

இரண்டு ப்ளாஷ்பேக்

அல் கொயிதாவின் நட்பு அமைப்பான தாலிபன் ஆகஸ்ட் 8, 1998ல் மஸார் ஏ ஷரீஃப்ல் 8000 பேரை சுட்டு கொன்றுள்ளார்கள். இறந்தவர்கள் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள். அல் கொயிதாவோ, மற்ற அமைப்போ தாலிபனின் இந்த செயலை கண்டித்ததாக தெரியவில்லை. (உபயம் பா.ராவின் ’தாலிபன்’ நூல்)

சதாம் ஹூசைன் காலம். பாக்தாத்துக்கு வடகிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் இரான் எல்லையோரம் இருக்கும் ஹல்ப்ஜா என்கிற குர்திஷ் நகரம். இராக் இராணுவம் சுற்றி வளைத்து குண்டு மழைகளை பொழிந்தது. வீடுகள், சாலைகள் அனைத்தையும் அழித்தது. ரசாயன ஆயுதங்களாளும் தாக்கினர். ஐயாயிரம் பேர் மேல் இறந்தனர். பதினெட்டாயிரம் பெயர் மேல் பாதிக்கப்பட்டனர். அனைவரும் ஷியா முஸ்லிம் பிரிவினை சேர்ந்தவர்கள். 

சதாம் காலத்தில் ஷியா வகுப்பினர் கொத்து கொத்துக்காக கொல்லப்பட்டது ஒரு உதாரணம். சந்தேகமே இல்லாத ஒரு இனப்படுகொலையை சதாம் அப்போது செய்திருக்கிறார். (உபயம் பா.ராவின் ’சதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும்’ நூல்) 

சதாம் ஹூசைன் பத்து வருடம் முன் கலாவதியான பெயர் தான். அவர் இறந்து ஏழு வருடங்களாகிவிட்டது. ஆனால், அவர் விட்டு சென்ற எச்சம், அறிவிக்கப்பட்டாத வாரிசுகாளத் தான் இந்த ISIS அமைப்பாக செயல்ப்படுகிறது.

ISISயின் எழுச்சி, தாக்குதல், படுகொலைகள் பார்த்து அமெரிக்காவுக்கு கலங்கி போய்யிருப்பது மறுக்க முடியாது. மத்திய கிழக்கில் இவர்கள் ஆதிக்கம் வளரத் தொடங்கினால், இஸ்ரேல் போன்ற தேசத்தில் ஆபத்து நிச்சயம். அதனால், ISIS தங்கள் சமூகத்தை சார்ந்தவர்களை காக்க வந்த ஆபத்தாண்டனாக தெரியலாம்.

காஸா காப்பாற்றப்படலாம். அங்கு நடக்கும் இனப்படுகொலை தடுக்கப்பட்டும். ஆனால், ஷியா முஸ்லீம், கிறிஸ்த்துவர்கள், மற்ற மதத்தினர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பது கேள்விக்குறி தான். கொசுவுக்கு பயந்து வீட்டை எரிக்கும் கதையாக மாறலாம். இன்னொரு இனப்படுகொலை அரங்கேறாது என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

முன்பு அமெரிக்க தனது படையை அனுப்பாமல் இருந்ததற்கு பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் போன்ற பல பிரச்சனைகள் உள்ளுக்குள் இருந்தது (இப்போதும் இருக்கிறது). ஆனால், யுத்தம் என்பது அவர்களுக்கு சக்கரை பொங்கல். அதை அவர்கள் விட மாட்டார்கள். அப்படி இருந்தும் அமெரிக்கா தனது இராணுவத்தை அனுப்பாமல் மௌனமாக இருப்பது முக்கியக் காரணம் இருக்கிறது.

ஆட்டம் நடந்துக் கொண்டு இருப்பது சன்னி முஸ்லிம் vs ஷியா முஸ்லிம். ISIS சன்னி முஸ்லிம். இராக் அரசு, இராக் இராணுவம் ஷியா முஸ்லிம். அண்டை நாடுகளான சிரியா, லெபானன் பெரும்பான்மை ஷியா மக்கள். ஷியா அரசு. ஒரு போதும் ISIS ஆதரவு தர மாட்டார்கள். லெபானனில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பும் ISISவை ஆதரிக்கவில்லை.

இராக்கில் தங்கள் வேலை முடிந்த கையோடு Round 2வில் ISISயின் அடுத்த டார்கெட்டாக சிரியா இருக்கும். அங்கு உள்நாட்டு கலவரம் நடப்பதாலும், அதிபர் பதவியை விட்டு பஷர் அல் ஆஸாத் இறங்க மாட்டேன் அடம் பிடிப்பதாலும் ISISயின் டார்கெட் சுலபமாக இருக்கலாம். ISISயின் நடவடிக்கையால் உலகளவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு நடுவில் பெரிய பிரிவினையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது அமெரிக்காவுக்கு லாபமே !!

அமெரிக்கா தனது இராணுவத்தை அனுப்பினால், ஆட்டம் அமெரிக்கா vs இஸ்லாமியர்கள் என்று மாறிவிடும் என்று யோசித்தது. அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு எதிராக போரிடுகிறார்கள் என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்படலாம். இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்கப்படலாம். அதனால், அமெரிக்கா எந்த சேதாரம் இல்லாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது.

ஆனால், இப்போது அமெரிக்கா அந்த மனநிலையில் இல்லை.

காரணம், ஒவ்வொரு வெற்றியிலும் இராக்கின் இராணுவ ஆயுதங்களை கைப்பற்றி போர் செய்கிறார்கள். ஆதாவது, அமெரிக்க இராக்க்கு அனுப்பிய இராணுவ ஆயுதங்களை கைப்பற்றுகிறார்கள். இராக் இராணுவமும் அவர்கள் பெறும் வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஒரு நாட்டின் இராணுவம் எந்த வேகத்தில் பாக்தாத்தை நெருங்க முடியுமோ அந்த அளவுக்கு ISIS வேகமாக நெருங்கியதை உதாரணமாக சொல்லலாம். இப்போது ISIS அடுத்த டார்க்கெட் குர்துஸ்தான் !!

பல போராட்டங்களுக்கு பிறகு குர்துஸ்தான் தன்னாட்சி அடைந்திருக்கிறது. அதை இழந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ISISயை எதிர்த்து முழு மூச்சோடு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ISIS தாக்குதலில் இஸ்லாமியர்களோடு பல கிறிஸ்துவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் அவர்கள் பெரும் வெற்றி ஆயுதப்பலமாக மாறிவருகிறது. குர்துஸ்தான்னில் இருக்கும் அமெரிக்க தூதுரகத்தில் இருப்பவர்களுக்கும் பிரச்சனை. இனி அமைதியாக இருந்தால் நல்லது இல்லை. தங்கள் விமானத்தை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கா ISISவுக்கு எதிரான தாக்குதல் குர்து வீரர்களுக்கு உத்வேகமாய் அமைந்திருக்கிறது. தங்களுக்கு பின் அமெரிக்கா ஆதரவு இருக்கிறது என்ற நம்பிக்கையில் ISISவை எதிர்த்து போரிட தொடங்கியிருக்கிறார்கள்.

எண்ணெய் அரசியலில் மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவோடு கூட்டு என்பது சாத்தியமில்லை தான். ஆனால், யுத்த அரசியலில் எதுவும் சாத்தியம்.

கட்டுரைக்கு உதவியது 

பா.ராகவன் நூல்கள் – 
1. ஆடிப்பாரு மங்காத்தா 
2. சதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும் 
3. தாலிபன் 

இணையதளம்

http://en.wikipedia.org/wiki/Islamic_State_of_Iraq_and_the_Levant
http://www.independent.co.uk/news/world/middle-east/iraq-crisis-american-intervention-against-isis-boosts-kurdish-morale-as-president-obama-launches-more-air-strikes-9659493.html http://edition.cnn.com/2014/08/09/world/meast/iraq-crisis/
http://www.vox.com/2014/8/7/5980595/iraq-crisis-bombing

1 comment:

pradeep kumar said...

clean analysation excellent

LinkWithin

Related Posts with Thumbnails