வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, June 11, 2014

மஞ்சப்பை - திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்தவருக்கு நகர வாழ்க்கை எவ்வளவு அந்நியமாக இருக்கிறது என்பதை இந்த படம் காட்டுகிறது. ஒரு சில காட்சிகள் நாடகத்தனமாக இருந்தாலும், மனிதனுக்கு மனிதன் சராசரி புரிதலில் கூட எத்தனை இடைவேளை இருப்பதை உணர முடிகிறது.


ராஜ்கிரண் முகத்தில் கோபம், பாசம் தவிர பெரிய ரியாக்ஷன் எதிர்பார்க்க முடியாது என்று இருந்தவர்களுக்கு, அப்பாவித்தனமாக முகபாவனை பார்த்து அதிர்ந்து போயிருப்பார்கள்.

அவருக்கு நகைச்சுவைக்கான நடிப்பு வரவில்லை என்றாலும், தனது செய்கையால் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார். பாசத்துடன் விமலுக்கு செய்யும் ஒவ்வொரு விஷயமும், அவருக்கு பாதகமாக முடிய கோபப்படாமல் விமல் அமைதியாக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து விமல் கோபப்படும் போது ராஜ்கிரண் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது.

படத்தை ராஜ்கிரண் மட்டுமே தூக்கி நிறுத்துகிறார். மிகவும் அப்பாவியான கிராமத்து தாத்தாவாக நன்றாக பொருந்தியிருக்கிறார். விமல், லட்சுமி மேனன் இருவரும் துணை பாத்திரங்கள் தான். பெரிதாக வேலையில்லை.

மரணத்தில் படம் முடித்துவிடுவார்களோ என்று நினைக்கும் போது, வேறு மாதிரியான சோக முடிவை வைத்திருக்கிறார்கள்.

இரண்டாம் பாதி வழக்கம் போல் சினிமாத்தனமாக தெரிந்தாலும், ராஜ்கிரணின் முதல் பாதி சேட்டைக்காக ஒரு முறை பார்க்கலாம்

1 comment:

makka said...

this is remake movie from Hindi. original version "atithi tum kab jaoge". its nice movie

LinkWithin

Related Posts with Thumbnails