வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, March 18, 2013

ஐ.எஸ்.ஐயிடம் மாட்டிய ரா உளவாளிகள் !

அடுத்த ஒரு மாதத்திற்கு பத்திரிக்கைகளுக்கு பரப்பரப்பான செய்தி கிடைத்திருக்கிறது என்று தான் முதலில் நினைத்தார்கள். ஆனால், தங்கள் நாட்டையே வேவு பார்க்கும் வேலை நடக்கிறது ஒரு சிறு பொறி தட்டியதில் ஐ.எஸ்.ஐ உஷாராகிவிட்டார்கள்.

இஸ்லாமாபாத்தில் ஒர் இந்திய பள்ளிக்கூடம். பெரும்பாலும் இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். பொதுவாக, அந்நிய நாட்டு அலுவலகங்கள், இடங்கள் எல்லாம் கொஞ்சம் சந்தேக கண்ணோடு பார்ப்பது தான் அந்த நாட்டின் உளவுத்துறையின் வேலை. அதையே தான், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பும் செய்தது.

அந்த இந்திய பள்ளியில் ஒரு அழகானப் பெண். பார்த்த மாத்திரத்தில் கொஞ்சம் தடுமாற வைக்கும் அழகு. ஐ.எஸ்.ஐ உளவாளி அவள் அழகை ரசிப்பதற்காகவோ அல்லது நிஜமாக அவளை உளவு பார்க்க சென்றார்களோ தெரியாது. ஆனால், அவள் அடிக்கடி ஒரு பெரிய ஹோட்டலில் ஒரு பாகிஸ்தானியனிடம் சிரித்து பேசும் செய்தியை கண்டுபிடித்தனர்.

இந்தியப் பெண் பாகிஸ்தானியர் ஒருவரை காதலிக்கிறாரா ? இன்னொரு சானியா – சோயிப் மாலிக் ஜோடி. ஐ.எஸ்.ஐ உளவுத்துறை பத்திரிக்கைக்கான தலையங்கத்தை யோசிக்க தொடங்கினர். எதற்கும் கொஞ்சம் விசாரித்து பார்க்கலாம் என்று விசாரித்தார்கள்.

அந்தப் பெண் சந்திக்கும் பையனின் ஜாதகத்தை கொண்டு வந்தார்கள். ராகு, கேது இல்லாத ஜாதகம். அவன் இது வரை வேலை செய்த இடங்கள், படிப்பு என்று எல்லா விபரங்களும் இருந்தது. அவன் வேலை செய்தது எல்லாம் தனியார் நிறுவனங்கள். காதலாக தான் இருக்கும் என்றே உறுதி செய்யும் நிலையில்… ஒரு இடம் அவர்கள் கண்ணை உறுத்தியது. அவன் இதற்கு முன் கொஞ்ச நாட்கள் அணு ஆய்வு மையத்தில் வேலைப் பார்த்திருக்கிறான்.

இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள் அந்த இந்தியப் பெண் வீட்டுக்கு சென்றே விசாரித்தனர். முதலில், எதையும் சொல்ல மறுத்த அவள், பிறகு உண்மையை சொல்லத் தொடங்கினாள். அவள் ஒரு இந்திய உளவாளி. Research and Analysis Wing என்கிற ராவில் பணி செய்பவள்.

வேறு நாட்டு உளவாளி என்றால் சுட்டுவிடலாம். இல்லை என்றால் கைது செய்து அந்த நாட்டின் தூதரக சொல்லியிருக்கலாம். மாட்டியது இந்திய உளவாளியாயிற்றே !!

விஷயம் சர்வதேச மீடியாவுக்கு கொண்டு சென்றார்கள். இந்தியா மறுத்தது. இரண்டு பரப்பரப்புக்கு பின் மீடியா நீயூஸ் குறைந்தது. அந்தப் பெண் இந்தியா திரும்பவில்லை. ஐ.எஸ்.ஐ அந்தப் பெண் பேசி, மிரட்டி தங்கள் நாட்டுக்கு வேலை செய்ய வைத்தனர். டபுள் ஏஜெண்ட் வேலை. தன்னை காப்பாற்றாத இந்திய அரசு, மாட்டிக்கொண்டது பாகிஸ்தானிடம். வேறு என்ன செய்வது ?

**

கொண்டாட்டங்கள் நிறைந்த தினம். இராணுவ அணி வகுப்பு, கலை நிகழ்ச்சி, கோலாக்கலம், ஆயுத எந்திய வீரர்களின் ஊர்வலம். அப்படி சுபயோக தினம். மார்ச் 23. பாகிஸ்தான் தினம்.

அன்றைய நிகழ்ச்சி தொடங்கும் முன் அதிகாலை இரண்டு பேர் எல்லைக்கடக்க முயற்சித்தனர். மாட்டியவர்கள் இந்தியர்கள். அதுவும் பாகிஸ்தான் அரசு நிகழ்ச்சி நடக்கும் அன்று !!

ஐ.எஸ்.ஐ அடித்து விசாரிக்க அதிக நேர எடுத்துக் கொள்ளவில்லை. இருவரும் இந்திய உளவாளிகள். இன்றைய நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் புதிய ஆயுதங்கள், வாகனங்கள் பற்றிய விபரங்களை சேகரித்து ஒரு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்றனர். மாட்டிய இந்திய உளவாளிகளை அவர்கள் ஒன்றும் செய்ய விரும்பவில்லை. அதற்கு மாறாக அவர்களே ஒரு ஆயுதப்பட்டியலை தயார் செய்து சீல் வைத்த ஒரு ரிப்போர்ட்டை கொடுத்து இந்தியாவுக்கு அனுப்ப சொன்னார்கள்.

அதில் என்ன ஆயுதம் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று அந்த இருவருக்கும் தெரியாது. உயிருக்கு ஆபத்து இல்லாததால், அவர்கள் கொடுத்த பட்டியலை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். இப்படி, மாட்டிய இந்திய உளவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக, அவர்களை வைத்து தவறான தகவல்களை அனுப்பி வைத்தது ஐ.எஸ்.ஐ.


 உதவிய நூல் :

ISI :  நிழல் அரசின் நிஜமுகம்.


1 comment:

Anonymous said...

இது ஒரு நல்ல புத்தகம். டபுள் உளவாளியாகி ஒரு அம்மாவை திரும்ப இந்தியா அழைத்து சிறையில் போட்டார்கள். அம்மணியார் தற்சமயம் எங்கே என்று தெரியலை.

LinkWithin

Related Posts with Thumbnails