வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, March 1, 2011

நன்றி... நன்றி... !!!

இணைய புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடந்து முடிந்தது.

இணையத்தில் புத்தகம் வாங்குபவர்கள் குறைவாக இருப்பதால் ஐந்து பேர் வாங்கினாலே மிக பெரிய விஷயம் என்று இருந்தோம். ஆயிரம் ரூபாய்க்கு நூல் விற்றாலே 'புத்தகக் கண்காட்சி' வெற்றி என்று கருதுதினோம். ஆனால், ஒன்பது பேர் இந்த புத்தகக் கண்காட்சியில் ஆர்வமாக புத்தகம் ஆர்டர் கொடுத்திருந்தார்கள். ரூ.2000 வரை புத்தகம் விற்பனையாகியது. (இதில், கோரியர் மற்றும் பதிப்பாளர்களுக்கு கொடுக்க வேண்டியது போக 300 ரூபாய் கிடைத்தது.)

இந்த ரூ.300 க்கா இவ்வளவு குவ்வல் என்று பலர் நினைக்கலாம்.

புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டுவது ஒரு பதிப்பாளரின் கடமையோ, புத்தகத்தை வாங்க தூண்டுவது ஒரு விற்பனையாளரின் கடமை. இது வரை தேடி சென்று புத்தகம் வாங்கினால் தான் கழிவு விலையில் புத்தகம் கிடைக்கும் என்ற நிலையில் இருந்து, வீட்டில் இருந்துக் கொண்டே 10% கழிவுடன், மேலும் கோரியர் செலவு இல்லாமல் புத்தகம் பேரலாம் என்று ’We Books’ அறிமுகப்படுத்தியுள்ளது. இதை புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் எதிர்காலத்தில் பின்பற்றலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

ரூ.1000 மேல் மளிகை சமான் வாங்கினால் பொருட்கள் வீடு தேடி வரும் போது ரூ.1000 மேல் வாங்கும் புத்தகம் ஏன் வீடு தேடி வரக் கூடாது ?

ஒரு முன்னனி பதிப்பகம் தவிர இந்த புத்தக கண்காட்சியில் இடம் பெற்ற சிறு பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை 50% கழிவுடன் கொடுத்தது இந்த புத்தகக் கண்காட்சி யோசனைக்கு உருதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுயிருக்கிறேன்.

இந்த புத்தகக் கண்காட்சி பற்றி தங்கள் பதிவில் வெளியிட்ட நண்பர்களுக்கும், குறிப்பாக கேபிள் சங்கர் (புத்தக கண்காட்சி பற்றி இவர் ‘கொத்து போரோட்டா’வில் எழுதிய பிறகு மூன்று ஆர்டர் கிடைத்தது) அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

அடுத்த முறை இணைய புத்தகக் கண்காட்சி நடத்தும் போது 100 புத்தகளோடு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஒரு மாதத்தில் தினமும் மின்னஞ்சல் பார்த்து பதில் அனுப்பி தூங்குவதற்கு 11, 11:30 யானது. இனி கொஞ்சம் நிம்மதியாக தூங்குவேன்.

2 comments:

எல் கே said...

நல்ல விஷயம்

Unknown said...

பாராட்டுக்கள் தல...

LinkWithin

Related Posts with Thumbnails