வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, May 8, 2013

RAW (6) : சொந்த விமானத்தை எரித்த இந்தியா -2

 இந்திய – பாகிஸ்தான் பிரிவினை விவாதத்தின் போது ஜின்னாவிடம் கேட்கப்பட்ட கேள்வி, “ இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து தனி தேசம் உருவானால், ஏதேனும் ஒரு முன்றாவது நாடு இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தால், பாகிஸ்தான் இராணுவம் என்ன செய்யும்?” என்று கேட்டனர்.

அதற்கு, ஜின்னா “எதிரிகளைத் தோற்கடிக்க, பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவோடு கைகோர்த்து போரிடும்” என்றார். இன்றைய அரசியல் சூழ்நிலை இதற்கு நேர் எதிராக இருக்கிறது. உனக்கு இந்தியாவை பிடிக்காதா, அப்படி என்றால் எனக்கு நீ நண்பன் என்ற தத்துவத்தில் தான் பாகிஸ்தான் நடந்துக் கொள்கிறது.



பங்களாதேஷ் தேசத்தை உருவாக்க இந்தியா உதவியது என்பது சரித்திரம் மட்டுமல்ல. ரா என்ற உளவு நிறுவனத்தை உருவாக்கிய வெற்றி என்றும் கூட சொல்லலாம். காரணம், இந்தியா பாகிஸ்தான் என்ற ஒற்றை எதிரியை மட்டும் சமாளிக்கவில்லை. தெற்காசியப் பகுதியில் இந்தியா மாபெரும் சக்தியாக வளர்வதை அனுமதிக்கக் கூடாது என்ற பார்வையில் இருக்கும் அமெரிக்கா மற்றும் சீனாவையும் சமாளிக்க வேண்டியதாக இருந்தது.

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனுக்கும், சீனா அதிபர் மா சே துங் இடையிலான ரகசிய உறவு அப்போது தான் உதயமானது. இந்த தொடர்புகளுக்கு பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்களும் உதவினார்கள். இந்திய வடகிழக்கு பகுதியில் கலவரத்தை உருவாக்கி இந்திய இராணுவத்தின் கவனத்தை திசை திருப்ப சீனா உதவியது. கிழக்கு பாகிஸ்தானில் இந்தியா வன்முறையை தூண்டிவிடுகிறது என்று சர்வதேச அளவில் எதிர்ப்பலைகளும் அமெரிக்கா பரப்பியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்தியா வெற்றிப்பெற்றுயிருக்கிறது.

ஐ.நா சபையில் இந்தியா கிழக்கு பாகிஸ்தானில் வன்முறையை தூண்டிவிடுவதாக அமெரிக்க, சீனா தீர்மானம் கொண்டு வந்தப் போது ரஷ்யா தனது “வீட்டோ” அதிகாரத்தை பயன்படுத்தி அதை முறியடித்து இந்தியாவுக்கு உதவியது. இதனால், அமெரிக்கா இந்தியாவை ரஷ்யாவின் நட்பு தேசமாக பார்த்ததோடு இல்லாமல், இந்தியாவை பற்றின ரகசிய தகவல்களை சேகரிக்க தனது உளவுப்பிரிவையும் பயன்படுத்தியது.

இந்தியாவுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். எந்த உளவு நிறுவனம் நினைத்தாலும் ஒரு தேசத்தை உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. தகவலை சேகரிக்க முடியும். அதை செயல்படுத்த வழிகள் வகுக்க முடியும். செயல்படுத்த ரகசியமாக முறைகளை கையாள முடியும். ரா உளவுத்துறையும் அதை தான் செய்தது.

 1971ல் மேற்கு பாகிஸ்தான் எதிராக யுத்தத்தில் ரா கிழக்கு பாகிஸ்தானுக்கு செய்த உதவிகள் :-
1. அரசுக்கும் இராணுவத்திற்கு தகவல்களை சரியான நேரத்தில் கொடுத்தது.
2. வங்கதேசப் போராட்ட வீரர்களுக்கு ரகசியமான பயிற்சி முகாமில் பயிற்சி அளித்தது.
3. மேற்கு பாகிஸ்தானில் பணியாற்றிய வங்க மொழி பேசும் அரசு ஊழியர்களை தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வங்கதேசப் போராட்ட வீரர்களுக்கு உதவுவதாக கூறி ரகசிய தகவல் பெற்றது.
4. கிழக்கு பாகிஸ்தானில் கொல்லப்படும் வங்காளிகள், இந்தியாவுக்கு அகதிகளாக வெளியேறுபவர்கள் போன்றோர்களை ஊடகத்திற்கு முன் நின்றுத்தி மேற்கு பாகிஸ்தான் எதிராக பிரச்சாரம் மேற்கொண்டது.

அதுமட்டுமில்லாமல், மேற்கு – கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையான ரகசிய தகவல் பரிமாற்றத்தை இந்தியாவின் மானிட்டரிங் பிரிவு வெகு சிறப்பாக இடைமறித்து கேட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் தொலைத்தொடர்பில் ஏகப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததால், அவர்கள் பயன்படுத்தும் ரகசிய குறியீடுகள் சர்வ சாதாரணமாக உடைக்கப்பட்டன. இன்னும் சில தகவல்கள் ராவை தேடி வந்துக் கொடுத்தார்கள். தங்களிடம் இருக்கும் தகவலை இந்திய உளவுத்துறைக்கு கொடுப்பது தங்கள் கடமை என்று வங்க தேச மக்கள் முன்வந்தார்கள்.

பாகிஸ்தானுடன் நடந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றிக்கு கிழக்கு பாகிஸ்தான் மக்கள் பங்கு முக்கிய காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. வங்கதேசத்திற்கு விடுதலையை இந்தியா வாங்கித் தந்தது என்று சொல்லுவது தவறு. இந்தியா உதவியது என்று தான் சொல்ல வேண்டும். சுதந்திரமாக இருக்கும் ஆசையும், உறுதியும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு இல்லாவிட்டால் அவர்களால் இதை அடைந்திருக்க முடியாது.

1968ல் உருவான ரா, இரண்டரை வருடத்தில் ரகசிய நடவடிக்கைகளில் திறமைப் பெற்றுவது என்பது குறைவான காலம். இருந்தும் ரா அமைப்பு மிக சிறப்பாக செயல்ப்பட்டது.

அமெரிக்கா, சீனா போன்ற பெரிய நாடுகளின் மறைமுக பகையையும், பாகிஸ்தான் என்ற நேரடி எதிரியை சமாளித்து தான் இந்திய வங்க தேசத்திற்கான போரில் வெற்றிப்பெற்றது.

'பங்களாதேஷ்' என்ற தேசத்தை உருவாக்கியதோடு பிரச்சனை முடிந்ததுவிட வில்லை. அமெரிக்காவின் நிக்ஸன் நிர்வாகத்தின் நல்லாசியுடன் யாஹ்யா இந்தியாவை சிதறடிக்கும் ரகசிய முயற்சியில் இறங்கியது. அதற்கு தோதாக பஞ்சாபில் உள்ள சீக்கியர்களின் ‘காலிஸ்தான்’ என்ற தனி தேசக் கோரிக்கை இருந்தது.

Tuesday, May 7, 2013

நான் இலக்கியவாதி அல்ல !

ஒரு முறை எழுத்துலக நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தேன். என்னை தவிர மற்றவர் அனைவரும் இலக்கியவாதிகள். நான் இலக்கிய நூலை வாசிப்பவன். அப்போது “விபச்சாரத்தை” பற்றின பேச்சு வந்தது.

ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம், “நீ எத்தன தடவ போயிருக்க ?” என்று விளையாட்டாக கேட்டார்.

 “நா எதுக்கு போனும், அதை விட சுவையான இலக்கியம் படிக்கிறேனே ! ” என்றார்.

“ நல்ல இலக்கியத்தை விட ஒரு பெண் கொடுக்கும் சுகம் பெருசில்ல… ” என்று விளக்கம் தந்தார்.

ஒரு பெண் கொடுக்கும் சுகம் ஒரு இரவு வரைக்கும் தான். ஆனால், நல்ல இலக்கிய நூல் கொடுக்கும் பாதிப்பு வாழ்நாள் வரை தொடர்ந்து வரும். குறைந்த பட்சம் இரண்டு நாளாவது நம்முள்ளே அந்த பாத்திரங்கள் குடித்தனம் நடத்தும். கதையை மாற்றியமைக்க தோன்றும். சில பாத்திரங்களோடு பேசுவோம். இருந்தாலும், அந்த நண்பர் கொடுத்த விளக்கம் எனக்கு கொஞ்ச நெருடலாக இருந்தது.

“ நீங்க சொல்லுறத எத்துக்குறேன். ஆனா , நீங்க சொல்லுற நல்ல இலக்கியம் ஏதாவது பெண்ண தாங்கி தான் இருக்கு. ஒரு பெண்ணோட உணர்வு, பெண் மேல இருக்குற உணர்வு ஒதுக்கி வச்சி நல்ல இலக்கிய நூல் யாரும் கொடுத்ததில்ல. அப்படி கொடுக்கனும் நினச்சா அது ஆன்மீக புத்தகமா தான் இருக்கும்.” என்றேன்.

“குகன் ! நீங்களும் இலக்கியவாதி வந்துட்டு இருக்கீங்க…” என்றார்.

இலக்கியவாதிகளின் பிரச்சனையே இது தான், ஒருத்தன் நல்ல இருந்தா அவனையும் இலக்கியவாதியாக்கிடுவாங்க…. எஸ்கேப்… !!

Monday, April 29, 2013

RAW (5) : சொந்த விமானத்தையே எரித்த இந்தியா !

கங்காவை கடத்த வேண்டும் என்பது தான் குரேஷி, அஷ்ரபின் திட்டமாக இருந்தது. இரண்டு பேர் ஒரு பெண்ணை கடத்தப் போவது ரா அத்தியாயத்தில் பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், கங்கா என்பது பெண் அல்ல. விமானம்.

ஒரு நாட்டில் பெண்கள் கடத்துப்படுவதும், பாலியல் தொல்லையில் அவதைப்படுவதும் அன்றாடம் நடக்கும் சம்பவமாக இருக்கிறது. எத்தனையோ ‘கங்கா’ க்கள் ஏதாவது ஒரு பகுதியில் கடத்தப்படுகிறார்கள். ஆனால், விமானக் கடத்தல் என்பது அப்படி இல்லை. ஒரு நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயம். எங்காவது விமானம் கடத்தப்பட்டால், அந்த நாடு உலக ஊடகங்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். அதில் பயணம் செய்த வெளிநாட்டு பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் தர வேண்டியது இருக்கும். கடத்தப்பட்ட விமானம் மீட்கும் வரை, அந்த நாட்டின் மானம் செய்திதாளில் பறந்துக் கொண்டு இருக்கும்.

30 ஜனவரி, 1970ல் குரேஷியும், அஷ்ரபும் ‘கங்கா’ என்கிற இந்திய போக்கர் 27 விமானத்தை எந்த பிசுரு இல்லாமல் கடத்தினர். கடத்தப்பட்ட விமானம் பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் தரையிறக்கினர். இந்தியா பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கு விமானக்கடத்த சதி திட்டத்தில் பங்கு இருப்பதாக கூறியது. ஆனால், பாகிஸ்தான் இதை செய்தவர்கள் JKLFயை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதியது. கடத்தியவர்கள் தங்கள் நிபந்தனைகள் எதுவும் சொல்லவில்லை. இரண்டு நாள் பரப்பரப்பாக இருந்த விமான கடத்தல், பயணிகள் ஒன்றன் பின் ஒன்றாக பிப்ரவரி 1ல் விடுவிக்கப்பட்டனர். கடப்பட்ட விமானமும் கொளுத்தப்பட்டு தீக்கு இறையானது.




இந்திய விமானம் கடத்தப்பட்டு எரிக்கப்பட்டுயிருக்கிறது. இந்திய எப்படி பதில் அடிக் கொடுக்க போகிறது யோசித்து மண்டை உடைத்துக் கொண்டு இருக்க, பிரதமர் இந்திரா காந்தி இந்திய எல்லை மேல் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதித்தார். மீறி பறந்தால் சுட்டு விழ்த்தப்படும் என்று எச்சரித்தார்.

மீண்டும் ஒரு யுத்தம் வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு…. ‘இவ்வளவு தானா உங்க டக்கு’ என்று சொல்லும் அளவிற்கு இந்திரா காந்தியின் அறிவிப்பு இருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் பிரச்சனை நடக்கும் சமயத்தில் இந்திரா காந்தி இந்த அறிவிப்பு எரிச்சலை வரவழைத்தது.

பாகிஸ்தான் இந்தியாவின் ரா இக்கடத்தல் நாடகத்தை நடத்தியதாக கூற, இந்தியா இதை மறுத்தது.காரணம், கடத்திய இரண்டு பேரை கைது செய்து பாகிஸ்தான் விசாரித்ததில், இரண்டு பேரும் கஷ்மீர் போராளிகள் அல்ல ‘ரா ‘ உளவாளிகள் என்று தெரிவந்தது. குரேஷி இந்திய காவல்துறையில் பயணியாற்றியவர். இந்திரா காந்தி லேசுப்பட்ட அம்மையார் அல்ல என்பது ஐ.எஸ்.ஐக்கு புரிந்தது.

கிழக்கு பாகிஸ்தானுடன் பிரச்சனை தலைக்கு மேல் இருக்கும் சமயத்தில் ராவின் இந்த சதி திட்டம் மேலும் அவர்களுக்கு பிரச்சனைக்குள்ளாகியது. அதாவது, மேற்கு பாகிஸ்தான் தனது இராணுவத்தை கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்புவதாக இருந்தால் ஆப்கான், சீனா என்று சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியா கிழக்கு பாகிஸ்தான் பகுதி உதவுவதற்காக ஏன் தங்களது விமானத்தை கடத்தி அவர்களே எரிக்க வேண்டும் கேள்வி எழுந்தது. இந்தியாவுக்கு பிரச்சனை தருபவர்கள் யாராக இருந்தாலும் ஐ.எஸ்.ஐ எப்படி வழி காட்டி உதவுமோ, பாகிஸ்தானுக்கு பிரச்சனை தருபவர்கள் யாராக இருந்தாலும் ரா உதவும். அந்த வகையில் இந்தியா வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தானுக்கு உதவ தீர்மானித்திருந்தது.

அது மட்டுமில்லாமல், கங்கா விமானத்தின் சேவையை இந்தியா நிறுத்தி பல வருடங்கள் ஆனது. யாரும் பயன்படுத்தாமல் இருந்த விமானத்தை, கடத்தப்பட்ட சிறிது நாட்கள் முன்பு தான், மீண்டும் கங்கா விமான சேவையைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்தார்கள்.

கிழக்கு பாகிஸ்தானுடன் மேற்கு பாகிஸ்தானுக்கு இருக்கும் பிரச்சனையின் வரலாற்று பின்னனியை கொஞ்சம் பார்த்தால், ராவின் திட்டம் எந்த அளவுக்கு துள்ளியமானது என்பது புரியும். இந்திரா காந்தி அரசியல் தொலை நோக்கு பார்வை பாராட்டாமல் இருக்க முடியாது.

வெள்ளையன் இந்தியாவை விட்டு சென்ற பொது இந்தியா – பாகிஸ்தான் என்று இரண்டு நாட்டை உருவாக்கினான். ஆனால், இந்தியாவில் இருந்த ஒற்றுமை பாகிஸ்தானில் இல்லை. கிழக்கு பாகிஸ்தானில் பெங்கால மொழியும், மேற்கு பாகிஸ்தானில் உருது மொழியும் பேசுபவர்கள். மதத்தால் முஸ்லிம்களாக இருந்தாலும், மொழியால் வேறுப்பட்டு இருந்தது அவர்களின் பிரிவுக்கு ஒரு காரணமாக இருந்தது.

1948ல் மார்ச் மாதம், டாக்கா உள்ள கர்ஸான் மன்றத்தில் பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்காக, பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா அவர்கள் பேசும் போது, “ பாகிஸ்தான் தேசிய மொழி உருது மட்டும் தான்” என்றார். அப்போது, “இல்லை… இல்லை” என்று எதிர்க்குரல் மக்கள் எழும்பினர். அன்றைய தேதியில் பாகிஸ்தானில் உருது பேசுபவர்களை விட வங்காள மொழி பேசுபவர்கள் தான் அதிகம்.

1949ல் மௌலான பஷானி, கிழக்கு பாகிஸ்தானில் “அவாமி முஸ்லிம் லீக்” என்ற கட்சியை தொடங்கி, ‘வங்காளி மொழி முன்நிறுத்தி’ ஷேக் முஜிபுர் ரஹ்மான் என்பவர் முதல் முதலாக கூட்டம் நடத்தினார்.

அரசியல் ரீதியாக மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானைக் காட்டிலும் பலன்களை அனுபவித்து வந்தது. மதத்தை காட்டிலும் கிழக்கு - மேற்கு பாகிஸ்தானில் உருது - வங்களாம் மொழி அவர்கள் பிரிவினைக்கு காரணமாக இருந்தது.

1971ம் ஆண்டு மார்ச் மாதத்தில், கிழக்கு பாகிஸ்தான் படையினரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டாக்காவில் விமானம் மூலம் படைகள் இறங்கத் தொடங்கின. முதல் குண்டு வெடித்தது.

கிழக்கு பாகிஸ்தான் படையில் பலர் கைது செய்யப்பட்டார்கள். மேற்கு பாகிஸ்தான் இராணுவம் தீவிரமான அடக்குமுறையில் இறங்கியது.

“முக்தி ஃபௌஜ்” என்ற பெயரில் 10,000 வங்க வீரர்கள் தாய் நாட்டைக் காக்கும் பணியில் இறங்கினார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை ரா மேற்க்கொண்டது. ஆயுதங்களும் வழங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிவாரப்பணிகளும் செய்தது.

முக்தி ஃபௌஜ் பாகிஸ்தானுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்படும் போது, மேற்கு பாகிஸ்தானில் இருந்த உதவி கிடைக்காமல் இருக்கவும், அப்படி கிடைக்க இருந்தாலும் காலதாமதமாக இருக்கவும் தான் இந்திய உளவுத்துறை ‘கங்கா’ விமான கடத்தல் திட்டத்தை போட்டது என்று கூறப்படுகிறது.

இந்தியாவை எதிர்க்காமல் கிழக்கு பாகிஸ்தானை கட்டுப்படுத்த முடியாது என்று பாகிஸ்தான் முடிவு செய்தது. விளைவு…. டிசம்பர் 3 அன்று, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போரை அறிவித்தது, இந்திய எல்லைக்குள் விமான தாக்குதலை நிகழ்த்தியது. இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த யுத்தத்தின் முடிவில் பாகிஸ்தான் தோல்வியுற்று, “பங்களாதேஷ்” என்ற தேசம் உருவானது நம் பள்ளிப்பாடங்களில் படித்தக் கதை.

பங்களாதேஷ் என்ற தேசம் உருவாகாமல் இருந்திருந்தால், இந்தியா மேற்கு – கிழக்கு பாகிஸ்தான் என்று இரண்டு பக்கம் எதிரிகளை சமாளிக்க வேண்டிய இருந்திருக்கும். இப்போது, வட கிழக்கு இந்திய பகுதியில் பாகிஸ்தான் உடுருவல் பிரச்சனை இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் கிழக்கு பாகிஸ்தானுக்கு உதவியது தான் காரணம். ( இன்று, அந்த பகுதியில் வேறு பிரச்சனைகள் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.)

‘பங்களாதேஷ்’ என்ற தேசம் உருவாக இந்தியா உதவி செய்தது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்தியாவுக்கு ‘உதவியாக ராவின் செயல்பாடு மிகவும் முக்கியமானது என்பது யாராலும் மறுக்க முடியாது.

Friday, April 26, 2013

அந்த மூன்று பெண்கள் (2) - 8

எம்.ஜி.ஆர் முதல்வரானதை கொண்டாட தெருவோரம் இருந்தவர்கள் எல்லாம் பட்டாசு வெடித்து கொண்டாடினர். எனக்கு நல்லது நடக்கும் போது தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்கின்றது என்பது போல் தெரிந்தது. முதல் நாள் பள்ளியில் ரகுவை விட்டேன். முதல் நாள் என்பதால் அரை நாள் தான் பள்ளி வகுப்பு இருந்தது. ஜோசப்பிடம் சொல்லிவிட்டு என் மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.



தன் பள்ளியில் நடந்தை எல்லாம் அம்மாவிடமும், சிவகாமியிடம் சொல்லிக் கொண்டு இருந்தான். அம்மா அவன் பேசும் போதெல்லாம் "உங்க மாமா இப்படி தான் பேசுவாரு" என்று சொல்வார். அம்மா ஒரு முறை கூட அப்பாவை பற்றி சொல்லவேயில்லை. மாமா அந்த அளவிற்கு அப்பாவை மறக்கடித்து குடும்பத்தை பார்த்திருகிறார்.

சீனியர் முத்தையாவிடம் சேர்ந்து ஒரு வருடத்தில் தனி அலுவலகம் வைக்க வேண்டும் என்று நானும் ஜோசப்பும் முடிவு செய்திருந்தோம். ஆனால், நீதிதுறையில் எல்லாம் ஒரே ஆண்டில் எப்படி கற்பது ? நான்கு வருடம் கலித்து இப்போது எங்களுக்கு தனி அலுவகம் வைக்க முடிவு செய்தோம்.

அலுவலத்திற்காக பல இடங்கள் பார்த்தோம். சில இடங்களில் வாடகை அதிகமாக இருந்தது. வாடகை சரியான இடத்தில் 'வழக்கறிஞருக்கு இடமில்லை' என்றனர். நான் என்ன தீண்டதகாதவர்களா தெரியவில்லை. வழக்கறிஞருக்கு இடம் கொடுத்தால் பிரச்சனை தன்னுடன் வைத்துக் கொள்வது போல் ஒரு சிலர் நினைக்கிறார்கள்.

பல அலைச்சலுக்கு பிறகு, எங்களுக்கு எழும்பூர் அருகே இடம் கிடைத்தது. மாத வாடகை ஆற நூறு ரூபாய். இரண்டு நாற்காலி, மேஜை எல்லாம் வைத்து எங்கள் அலுவலகத்தை அமைத்தோம். ஒரு அலமாரியில் எங்களுக்கு தேவையான சட்ட புத்தகங்களையும் அடுக்கி வைத்தோம்.

ஜோசப் கடவுள் நம்பிக்கை இருப்பவன் என்பதால் அவன் நாற்காலிக்கு மேல் சிலுவையில் அறைந்த இயேசு படம் மாட்டினான். எனக்கு நாற்காலிக்கு மேல் பெரியார், அண்ணா படத்தை மாட்டி வைத்தேன். அலுவலகம் அமைத்து விட்டோம். இனி வழக்குகள் தான் வர வேண்டும்.

எங்கள் சீனியரும் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தன்னிடம் வரும் கட்சிகாரர்களை எல்லாம் எங்களிடம் அனுப்பி அவர் உதவி செய்தார். அதனால், புது அலுவகம் வைத்ததும் சீனியரால் எங்களுக்கு கட்சிக்காரர்கள் வர தொடங்கினர்.

முதல் நட்பு, முதல் காதல், முதல் முத்தம்.... எப்படி இதை எல்லாம் மறக்க முடியாதோ முதல் முதலில் நமக்கு கிடைத்த வேலையும் மறக்க முடியாது. நாங்கள் அலுவலகத்தை ஆரம்பித்து எங்களுக்கு வந்த முதல் வழக்கு 'சொத்து விவகாரம்'.

வழக்கு போட்டவர் என் கட்சிக்காரர் மகாதேவன். அவரின் அப்பா தேவராஜனின் வப்பாட்டியான சுந்தரிக்கு எதிராக வழக்கு. தேவராஜன் இறக்கும் போது எந்த உயிலும் எழுதாததால் சொத்துக்காக மகாதேவனுக்கும். சுந்தரிக்கும் பிரச்சனை. சிவில் வழக்கு. எப்படியும் குறைந்தது பத்து வருடம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், எங்கள் முதல் வழக்கை அவ்வளவு நாள் நீடிக்க எங்களுக்கு விருப்பமில்லை.


சட்டப்படி தேவராஜனின் சொந்துக்களுக்கு என் கட்சிக்காரர் மகாதேவன் தான் வாரிசு. தன் சந்தோஷத்திற்காக வைத்துக் கொண்ட சுந்தரி எக்காரணத்தாலும் வாரிசாக நியமிக்க முடியாது. தேவராஜன் மூலம் சுந்தரிக்கு எந்த குழந்தையும் பிறக்கவில்லை. குறிப்பிட்டு எந்த சொத்தும் சுந்தரி மேல் உயில் எழுதாததால் எல்லா சொத்துகளும் மகாதேவனுக்கு தான் சென்று அடைய வேண்டும். அடையும். அது தான் சட்டம்.

தேவையில்லாமல் பிரதிவாதி சுந்தரி சொத்தில் பங்கு கேட்டு எதிர் வழக்கு போட்டுருப்பது நேரத்தையும், பணத்தையும் விரணயம் செய்வது போல் ஆகும். அவளின் வக்கிலும் வழக்கில் வெற்றி பெறலாம் என்று நம்ப வைத்து அவளிடம் இருந்து அதிக பணம் வாங்குவதிலும், வாய்தா வாங்குவதிலும் தான் கவனமாக இருந்தான். தீர்ப்பு என்று வந்தால் மகாதேவனுக்கு தான் ஆதரவாக இருக்கும் என்று தெரிந்தும் அந்த வக்கில் முடிந்தவரை சுந்தரியிடம் இருந்து பணத்தை கரந்தான்.

நானும், ஜோசப்பும் சுந்தரியிடம் தனியாக மகாதேவனுகாக பேச சென்றோம். அப்போது அவளுடைய வக்கில் எங்களை பேச விடவில்லை. வேறு வழியில்லாமல் அந்த வக்கிலை வைத்தே சுந்தரியிடம் சமாதானம் பேசினோம். அவள் கேட்கவில்லை. வழக்கு கோர்ட் ஹியரிங்க்கு(Hearing) வந்தது.

சுந்தரி மகாதேவனின் அப்பா தேவராஜனை சட்டப்புர்வமாகவோ, சம்பிரதாய முறைப்படியோ திருமணம் செய்யவில்லை. இவர்கள் சேர்ந்து வாழ்ந்ததை சொல்ல இரண்டு சாட்சிகளை எதிர் கட்சி வக்கில் கொண்டு வந்தார். நான் இவர்களை ‘Hearsay evidence’ என்று சொல்லி வாதாடினேன்.

Hearsay evidence என்றால் தனக்கு நேரடியாகச் செய்தி அறியாது, பிறர் கூற அது பற்றிக் கேள்விப்படுதல் ஆகும். சிவில் வழக்குகளில் இது போன்ற சாட்சிகள் ஏற்றுக் கொள்ளப்படாது. எல்லாம் பத்திரத்தில் இருந்தால் தான் நீதிபதி ஏற்றுக் கொள்வார்.

சுந்தரி, தேவராஜன் சேர்ந்து வாழ்ந்ததற்கு குழந்தைகளோ, உறவினர்களோ என்று வேறு சாட்சிகள் இல்லை. எதிர் கட்சி கொண்டு வந்த இரண்டு சாட்சிகளும் பலவீனமானது என்று சொல்லி நீதிபதி வேறு ஆதாரங்களை கேட்டார். வழக்கம் போல் எதிர்கட்சி வக்கில் தனக்கு நேரம் வேண்டும் என்று சொல்லி வாய்தா வாங்கினார்.

எதிர்கட்சி வக்கில் சுந்தரியிடம் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தை பார்த்ததாக ஒரு பொய் சாட்சியை தயார் செய்ய சொன்னார். ஆனால், சுந்தரிக்கு பொய் சாட்சி ஏற்பாடு செய்வதில் கொஞ்சம் பயம் இருந்தது. எதிர் கட்சி வக்கில் 'பொய் சாட்சி இல்லை என்றால் இந்த வழக்கில் வெற்றி பெற முடியாது' என்று கூறிவிட்டார். அப்போது தான் சுந்தரி தன் வழக்கில் பலவீனமாக இருப்பதை உணர்ந்தாள்.

பிரதிவாதி சுந்தரி எங்கள் அலுவலகத்திற்கு வந்து தான் போட்ட வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறினாள். அதற்கு தான் தங்கி இருக்கும் வீட்டை மட்டும் தனக்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையும் வைத்தாள். நான் இதை என் கட்சிக்காரர் மகாதேவனிடம் சொன்னேன். முதலில் சுந்தரிக்கு ஒரு பைசா கூட கொடுக்க முடியாது என்று முரண்டு பிடித்தார். நான் மகாதேவனிடம் " உங்க பக்கம் தான் நியாயம் இருக்கு. இருந்தாலும் இந்த கேஸோட தொடர்ந்தா, சொத்த உங்க பேரன் பிள்ளைங்க தான் அனுபவிக்க முடியும். அதனால கொஞ்ச விட்டு கொடுங்க ! " என்றேன்.

நான் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்த மகாதேவன் சுந்தரி இருக்கும் வீட்டை மட்டும் அவளுக்கு விட்டு கொடுத்தார். அதற்கு சுந்தரி மற்ற சொத்துக்களில் தனக்கும், தன்னை சேர்ந்தவர்களுக்கு சம்மந்தமில்லை என்று எழுதிக் கொடுத்தாள். குறுகிய காலத்தில் நாங்கள் எடுத்த சிவில் வழக்கை வெற்றிகரமாக முடித்தோம். எங்கள் முதல் வெற்றியை சீனியர் முத்தையா அவர்கள் வாழ்த்தினார். மகாதேவனும் நல்ல பீஸ் கொடுத்ததோடு இல்லாமல், தன் வியாபாரத்திற்கு லீகல் அட்வைஸராக எங்களை நியமித்தார்.

முதல் வழக்கு சிவில் வழக்காக இருந்ததால் என்னவோ எங்களுக்கு வந்த பெரும்பாலான வழக்குகள் சிவில் வழக்குகளாகவே இருந்தன.

Wednesday, April 24, 2013

அந்த மூன்று பெண்கள் (2) - 7

என் பக்குத்தறிவுக்கு மட்டுமல்ல, தமிழர்களின் பகுத்தறிவுக்கு விளக்கேற்றியவர் பெரியார். என்னை வாழ வைத்த மாமாவை இழந்த இதே நேரத்தில், பெரியாரின் மரணம் என்னை மேலும் பாதித்தது. அரசு மரியாதையோடு அவர் உடல் தகனம் செய்ய போவததை என் மாமனார் சொன்னார்.

முதுமையிலும் கம்பிரமாக பேசக்குடியவர், எங்கள் சுய மரியாதையின் தந்தை என்று கண்கலங்கி சொன்னார். என் மாமாவின் மரணத்தை எப்படி என்னை பாதித்ததோ அதை விட பெரியாரின் மறைவு தமிழ் நாட்டை பாதிக்கும்.

பெரியாரின் சுய மரியாதை கொள்கையை ஏற்றுக் கொண்டதால், உறவினர்கள் எத்தனைப் பேர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். எத்தனைப் பேர் மன உலைச்சல் ஆளாகியிருக்கிறார்கள். மனைவி, பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு தினமும் பதில் வேண்டியிருக்கும். இத்தனையும் கடந்து ஒருவன் சுய மரியாதை கொள்கையை ஏற்றுக் கொள்கிறான் என்பதை இந்த சமூகம் உணரும் போது தான், சுய மரியாதைக்காரர்களை மதிப்பார்கள்.

பார்ப்பனர்கள் இதை அரசியலாக பார்ப்பதால், அவர்களின் தாக்கம் மற்றவர்களையும் சுய மரியாதைக்காரர்களையும் அரசியல்வாதியாக பார்க்க வைக்கிறது. பல வலிகளை சுமந்து ஏன் சுயமரியாதைக் கொள்கையை ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற கேள்வியை தங்களுக்குள்ளே ஒவ்வொருவனும் கேட்டு கொண்டால், சுயமரியாதையில் இருக்கும் சுகத்தை புரியும். பெரியார் இறந்து ஒரு வாரம் கலித்து, ஜோசப்பும், நானும் முத்தையா என்பவரிடம் ஜூனியராக பணிக்கு சேர்ந்தோம்.

 சீனியர் முத்தையா ஐம்பது வயது தாண்டியவர். சட்டத்துறையில் நல்ல அனுபவமுடையவர். வழக்குகளை அவர் கையாளுவதை பார்த்து நாங்கள் இருவரும் பிரம்மித்து விட்டோம். மாதம் ஐந்நூறு சம்பளம் கொடுப்பதாக சொன்னார். எனக்கு சம்பளம் பெரிதாக தெரியவில்லை. வழக்குகளை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான். ஒரு வருடம் கலித்து தனி அலுவகம் வைக்கலாம் என்று ஜோசப் கூறினான். எனக்கும் அது தான் சரி என்று பட்டது.

 சிதம்பரத்தை விட்டு வந்தது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. நான் சொல்வதற்கெல்லாம் 'சரி சரி' என்று சொல்லிவிட்டு மனதில் ஏதோ போட்டு குழப்பிக் கொண்டே இருந்தார். அம்மாவுக்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டதில் இருந்து நான் என்ன செய்தாலும் எந்த மாற்று கருத்தும் சொல்வதில்லை. கடவுள், பூஜை என்று இருந்து விடுவார். முன்பு போல் என்னிடம் அதிகம் பேசுவதில்லை.

அம்மா சாப்பிடுவதற்கு மட்டும் தான் பூஜை அறையை விட்டு வருவாள். என் மனைவி சிவகாமி சமைப்பதில் ஏதாவது குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருப்பாள். ஆரம்பத்தில் அம்மா பேசுவதது சிவகாமிக்கு கஷ்டமாக இருந்தது. பிறகு அம்மாவின் குணம் அவளுக்கு பழகிவிட்டது. ஒரு நாள் கூட அம்மாவை பற்றி தவறாக சொன்னதில்லை. தாயில்லாமல் அவள் வளர்ந்ததால் என் அம்மாவை தன் அம்மாவாக தான் பார்த்தாள். ஆனால், அம்மா தான் இன்னும் அவளை ராசியில்லாதவளாக பார்த்தாள். ஹோட்டலை விற்று சென்னைக்கு வந்ததும், அந்த எண்ணம் மேலும் அதிகமானது. சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக சொல்லி கொண்டு இருந்தாள்.

என் மனைவிக்காக பணிந்து பேசும் போதெல்லாம், " இது வரைக்கும் என்ன எதிர்த்து ஒரு வார்த்த பேசுவியா. இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் நா பண்ணுறது தப்புனு சொல்லுற அளவுக்கு நீ வளர்ந்திட்ட...." என்பாள். இன்னும் நான் ஏதாவது பேசினால், கண்களில் நீர் வைத்துக் கொண்டு நான் 'செத்து போறேன்' என்பாள். அதனால், அம்மாவிடம் அதிகம் பேசாமல் இருந்து வந்தேன்.

சிவகாமியிடம் அம்மா எது பேசினாலும் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்று சொல்லி வந்தேன். அம்மா அடிக்கடி சிவகாமியை குறை சொன்னாலும், மாமியார் கொடுமை என்று சொல்லும் அளவிற்கு இல்லை.

ஒரு முறை, பரூக் தன் குடும்பத்துடன் எங்கள் புது வீட்டுக்கு வந்திருந்தான். பாத்திமா எங்கள் வீட்டுக்கு வாங்கி வந்த பலகாரங்களை சிவகாமியிடம் கொடுத்து சமையல் அறைக்கு சென்றார்கள். இருவரும் சேர்ந்து சமைத்து ஒரு குடும்பமாக சாப்பிட வேண்டும் என்று முன்பே பரூக்கிடம் சொல்லியிருந்தேன். சிவகாமியும், பாத்திமாவும் சேர்ந்து சமைத்துக் கொண்டு இருக்க சாப்பிட போகும் எங்கள் நிலைமை நினைத்து பயந்திருந்தோம்.

என் அம்மா பரூக்கின் அம்மா ஆயிஷாவிடம் என்னை பற்றி சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தார். நான் முன்பு போல் இல்லையாம். மனைவிக்கு அதிகம் பணிந்து பேசுகிறேனாம். அவர்கள் என் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அம்மா என்னை பற்றி இப்படி சொன்னதற்கு எனக்கு வருத்தமாக தான் இருந்தது. ஆனால், நான் வருத்தப்பட்டு வந்த விருந்தாளிகளுக்கு தெரிய கூடாது என்பதில் அமைதியாக இருந்தேன். போக போக அம்மா மனம் மாறிவிடும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. இதே போல் ஒரு நாள், ஜோசப் தன் மனைவி ஜாஸ்மின் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தான்.

நேரம் கிடைக்கும் போது நண்பர்கள் வீட்டுக்கு வருவதும், நாங்கள் அவர்கள் வீட்டுக்கு செல்வதுமாக இருந்தோம். புது ஊருக்கு வந்த உணர்வு, கொஞ்ச கொஞ்சமாக மறைய தொடங்கியது.

நாங்கள் சென்னை வந்து இரண்டு மாதமானது.

கோர்ட் வேலை எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது அம்மா வாயில் சக்கரை தினித்தார்.

"டேய் ! நீ அப்பாவாக போற...." என்றார்.

சென்னைக்கு வந்து அம்மா சிரிப்பதை இன்று தான் நான் பார்க்கிறேன். மாமாவின் மரணம், ஹோட்டல் விற்றது, சிதம்பரத்தை காலி செய்தது என்று தன் எல்லா கவலைகளை மறந்து பேர குழந்தை பிறக்க போவதை நினைத்து சந்தோஷமாக இருந்தார். நான் அப்பாவாக போவதை விட அம்மாவை பழையப்படி சந்தோஷமாக பார்த்தது தான் எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது.

அம்மா வழக்கம் போல் கருவுற்ற என் மனைவிக்காக கடவுளிடம் நன்றி சொல்ல பூஜையறைக்கு சென்றார். அவளை கருவுற செய்தவன் எனக்கு வாழ்த்துக்கள் மட்டுமே !! எப்படியோ அம்மா பழையப்படியானதே எனக்கு போதும் என்று இருந்தது.

என் அறைக்கு சென்று சிவகாமியை பார்த்தேன். வெட்கப்பட்டு திரும்பிக் கொண்டாள். நான் அவளை கட்டியனைத்தேன். எத்தனையோ முறை அவளை கட்டி அணைத்திருந்தும், இப்போது இரண்டு பேரை சேர்த்து கட்டியணைப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. நாளை, எங்கள் அணைப்பை ஒரு குழந்தை வந்து தடுக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். சிவகாமியின் வயிற்றை தடவி பார்த்தேன். இப்போதே குழந்தை வெளியே வந்து என்னிடம் பேச கூடாதா என்று தோன்றியது.

என் மாமனார் இனிப்புகளோடு வந்திருந்தார். தலைபிரசவம் அம்மா வீட்டில் பார்க்க வேண்டும் என்ற போதிலும் அங்கு பெண்கள் யாரும் இல்லாததால் எங்கள் வீட்டிலே பார்த்து கொள்கிறோம் என்றோம்.

அம்மா சிவகாமியை அன்போடு கவனித்து கொண்டார். அவள் மீது உள்ள கோபம், வெறுப்பு எல்லாம் மறைந்திருந்தது. அவளை பூ போல் பார்த்துக் கொண்டார். பிரசவ நாள் நெருங்க நெருங்க சிவகாமி பயம் அதிமானது. அம்மா அவளுக்கு தைரியமுட்டினாள்.

கோர்ட் வேலையாக ஜோசப்பிடம் ஒரு பத்திரத்தை பற்றி பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது அலுவகத்திற்கு போன் வந்தது. என் மாமனார் தான் பேசினார். சிவகாமிக்கு பிரசவ வழி வந்திருப்பதாக கூறினார். நான் அந்த பத்திர வேலையை ஜோசப்பிடம் கொடுத்து விட்டு சிவகாமியை பார்க்க சென்றேன்.

 மாலை ஆறு மணி.

சிவகாமி பிரச வேதனையில் நாக்கை கடித்து கத்தி கதறுவது காதில் கேட்டது. உடம்பில் இருக்கும் நாடி, நரம்பு இழுத்துக் கொண்டு கத்தினாள். அவள் ஒவ்வொரு முறையும் கத்தும் போதும் என் கண்களில் இருந்து நீர் துளி தரையில் விழுந்துக் கொண்டு இருந்தது.

இரவு ஒன்பது மணி.

முதலில் கத்தியதை விட இன்னும் அதிகமாக கத்தினாள். இடையில் சத்தம் கேட்காமல் இருந்தது. திடீர் என்று சத்தம் போட்டாள். ஏன் இவ்வளவு நேரம் குழந்தை பிறக்காமல் இருக்கிறது. பிரசவ அறையில் இருந்து வந்த சிப்பந்தியிடம் " எதுக்கு விட்டு விட்டு கத்துறாங்க...."

"பிரசவ வலினா அப்படி தான். வலி எடுக்கும் போது கத்துவாங்க. கொஞ்ச வலி தாங்கிட்டு இருப்பாங்க. எங்கள கேள்வி கேட்காம வேல செய்ய விடுங்க" என்று சொல்லி மருத்துவரின் அறையில் இருந்து எதோ எடுக்க சென்றாள்.

நல்லிரவு 12 மணி.

நீண்ட நேரம் மருத்துவமனையில் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு இருந்தேன். பிரசவம் என் மனைவிக்கு என்றாலும், வலி எனக்கு இருந்தது. ஆறு மணி நேரமாக நடந்திருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. உடல் முழுக்க வேர்வையுமாக இருந்தது. மருத்துவமனையில் இருக்கும் மின் விசிரியில் கீழ் நின்றேன். வேர்வை தனிந்தது. மனதில் படபடப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இரவு 2 மணி

மருத்துவமனையில் அப்படியே இரண்டு மணி நேரம் உடகார்ந்தப்படி தூங்கிவிட்டேன். என் மாமனார் என்னை தட்டி எழுப்பி டீ குடிக்க அழைத்தார். என்னால் எதுவும் சாப்பிட முடியவில்லை. எட்டு மணி நேரம் பிரசவ வலி எடுத்திருக்கிறது. இன்னும் ஏன் குழந்தை பிறக்காமல் இருக்கிறது ? பத்து தடவைக்கு மேல் வெளியே வந்த சிப்பந்தியிடம் கேள்வி கேட்டுவிட்டேன். என்னை பார்த்தாலே முறைத்து கொள்ளும் அளவிற்கு கேள்விகள் கேட்டுயிருக்கிறேன்.

கொஞ்ச நேரத்தில்.... ஒரு சிப்பந்தி வெளியே வந்தாள். நான் மீண்டும் அவளிடம் சென்று கேட்க ஒரு மாதிரியாக இருந்தது. அந்த பெண்ணே சிரித்தப்படி எங்கள் அருகில் வந்தாள். " ஆண் குழந்தை பொறந்திருக்கு....." என்று மருத்துவ சிப்பந்தி சொன்னாள்.

அம்மாவின் கண்களில் ஆனந்த கண்ணீர். என் மாமனாருக்கு சந்தோஷம்.

அம்மா என்னிடம், "உங்க மாமா உனக்கு குழந்தையா பொறந்திருக்காரு" என்று சொன்னார்.

நான் மாமாவுக்கு செய்ய நினைத்தை எல்லாம் என் மகனுக்கு செய்ய வேண்டும். அவன் ஆசைப்பட்டதை எல்லாம் நான் செய்து தர வேண்டும். என் வாழ்க்கையில் நான் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று இருக்கிறேன் என்று மகன் பிறந்த போது புரிந்தது.

அம்மா, சிவகாமி மகனை புதிதாய் பூத்த மல்லிகை பூ போல் ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்தனர். என் மாமாவின் நினைவாக என் மகனுக்கு அவர் பெயரையே வைத்தேன். 'ரகுராம்'.

நாட்கள் உருண்டோடியது. என் மகனுக்கு மூன்று வயது வந்தவுடன் அவனை பள்ளியில் சேர்க்க நினைத்தேன். அம்மா விஜயதசமி அன்று பள்ளி சேர்த்து விடு என்றார். அதில் எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும், அம்மாவிடம் இதைப்பற்றி வாதம் செய்திருக்க முடியாது. ஐந்தாறு வருடங்களாக ஏற்றுக் கொண்ட பகுத்தறிவு பேசுகிறேன். ஆனால், அம்மா பிறந்ததில் இருந்து கடவுள் நம்பிக்கை உடையவர். என்னால் எப்படி மாற்ற முடியும். சுயமரியாதைக்காரர்கள் குடும்பத்தில் சந்திக்கும் மிக பெரிய சவால் என்பது என்னைப்போல் இருப்பவர்களுக்கே தெரியும்.

ஜோசப்பின் நண்பர் ஒருவரின் சிபாரிசு மூலம் ரகுவுக்கு பள்ளியில் இடம் கிடைத்தது. அவனை முதல் நாள் பள்ளிக்கு அழைத்து செல்லும் போது பட்டாசு வெடிகள் எல்லாம் வெடித்து சந்தோஷமாக பலர் ஆரவாரம் செய்தனர். இன்று தீபாவளி கூட இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"வாத்தியார் முதலமைச்சராயிட்டார்...." கோஷங்கள் பலர் எழுப்பினர்.

LinkWithin

Related Posts with Thumbnails