“அறிவுக்கும் மனசுக்கும்
சிக்கல் எற்படும் போது
நீ மனசு சொல்வதை மட்டும் கேள்
அறிவு சொல்வதை கேட்காதே !
அறிவுக்கு அனைத்தும் தெரியும்
மனசுக்கும் உன்னை மட்டும் தான் தெரியும் !”
- விவேகானந்தர்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “Mind is fater than wind”. காற்றை விட அதி வேகமாய் மனம் செல்லும். சென்னையில் சில மணி நேரங்கள் தேவைப்படும். ஆனால், மனிதன் மனம் சென்னையில் இருந்துக் கொண்டு அமெரிக்காவுக்கு செல்வதைப் பற்றி யோசிப்பான்.
நூறு கிராம் தான் இதயம். ஆனால் அதில் டன் கணக்கில் ஆசைகள். பதவி, பெண், பொருள், பொன், புகழ், பணம், நிலம் இதிலேயே தன் மனதில் கவனம் செலுத்தி வருகிறான்.இவைகளை அடைவதற்காகவே பல முயற்சிகள் செய்து வருகிறான்.
விழித்திருக்கும் போது இதயத்துடிப்பு அதிகமாய் துடிக்கும். உறங்கும் போது அதை விட சற்றுக் குறைவாகவே இதயதுடிப்பு துடிக்கும். ஆனால், மனதில் இருக்கும் ஆசைகள் உறங்கும் போது கனவாய் உலாவருகிறது. விழித்த பிறகு அந்த ஆசைகள் மனதில் இரட்டிப்பாய் வளர்கிறது.
ஒரு முனிவர் பத்து வருடங்களாக தவம் செய்து தண்ணீரில் நடப்பதற்கு வரம் வாங்குகிறார்.வரம் வாங்கிய பிறகு யமுனை கரையை நடந்து சென்று நண்பனைப்பார்க்க செல்கிறார். முனிவர் நண்பனிடம் “நான் பத்து வருடங்களாக கடும் தவம் புரிந்து நீரில் நடந்து செல்ல வரம் வாங்கி வந்துள்ளேன். இப்பொதுக் கூட யமுனைக் கரையை நடந்தே கடந்து வந்தேன்” என்றார். அதற்கு அந்த நண்பர் “அவ்வளவுதானா .. இதற்கு பத்து ரூபாய் ஓடக்காரரிடம் கொடுருந்தால் அவன் யமுனைக் கரையை கடக்க உதவியிப்பான். இதற்காக பத்து வருடம் வீணாய் செலவு செய்து விட்டீரே” என்றார். அந்த முனிவர் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டார்.
மற்றவர் நம்மை பாராட்டவே மனம் செயல் படுகிறது. நாம் செய்யும் வேலையை மற்றவர்கள் வியக்க வேண்டும் என்று ஒவ்வொரு வேலையும் செய்கிறோம். அதை யாரும் பாராட்டாத போது மனம் வாடுகிறோம்.
இளம் வயதில் உடலை வருத்திக் கொண்டு பணத்திற்காக மனம் உழைக்க சொல்லும். சற்று நரை வளர்த்த பிறகு உடல் நலத்திற்காக மனம் பணத்தை செலவு செய்ய சொல்லும். காலத்திற்கு ஏற்றதுப் போல் நம்மை அறியாமலே நம் மனது இயங்கும்.
நாம் மனதை ஆலயமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். குறைந்தது ஆலயத்தில் வெளியே கிடக்கும் செருப்பாக நம் மனம் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாரி, அசோகன், சோழ நாட்டு மன்னர்கள் இவர்கள் எல்லாம் நாட்டை ஆண்டு பெயர் எடுத்தவர்கள். விவேகானந்தர், ராம கிருஷ்ணர், சாக்ரடீஸ் இவர்கள் எல்லாம் தங்கள் மனதையாண்டு பெயர் எடுத்தார்கள். இன்றைய காலக் கட்டத்தில் நாட்டை ஆட்சி செய்து பெயர் எடுப்பதை விட மனதை ஆட்சி செய்து பெயர் எடுப்பது சுலபம். ஆதலால், மனதர்களே மனதை ஆட்சி செய்யுங்கள்.
( நன்றி : 'தாய் மண்' இலக்கிய மாத இதழில் ஜூலை,2006 வெளிவந்தது )
வீடு நெடுந்தூரம் - Short film
Book, Movies Offers
To Buy my books in flipkart
Monday, November 3, 2008
Friday, October 31, 2008
தொலைந்து போன தொழிற்கல்வி
'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற ஒர பழமொழி உண்டு. இது எதுக்கு பொருந்துதோ இல்லையோ .... நம் நாட்டின் கல்விக்கு பொருந்தும்.
எல்லா தேர்வு முடிவுகளை விட 10வது, 12வது தேர்வு முடிவுகளே மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்ப்பார்ப்aர்கள். இந்த தேர்வு மதிபெண்கள் வைத்தே எந்த கல்லூரியில் சேரலாம், என்ன படிப்பு படிக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும். அந்த மதிபெண்கள் வைத்து தான் கல்லூரியில் இடம் கிடைக்கும்.
ஒரு புறம் ஜாதி, மதம் இட ஒதிக்கீட்டில் திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும். மறுபுறம் தேர்வின் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது. தேர்வு முடிவு ஒரு சில மாணவர்களுக்கு வாழ்க்கை முடிவாகிவிடுகிறது. அந்த முடிவுக்கு வர காரணமாக இருப்பது மாணவர்களின் மனநிலை என்று சொல்லலாம். அந்த மனநிலை அவர்களுக்கு ஏற்பட்டது மிக பெரிய காரணம் அவர்களின் பெற்றோர்களும், கல்வி முறைதான் காரணம்.
தங்கள் பிள்ளைகளை ஊக்கவிக்க தெரியாத பெற்றோர்கள் கையாலும் முறையே மிக அபத்தமாக இருக்கும்.
“உன்னை யாருடனும் ஒப்பிடாதே .. அப்படி ஒப்பிட்டால் உன்னை நீயே அவமானம் படுத்திக் கொள்கிறாய்” - ஓஷோ
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு தங்கள் பிள்ளைகளை அவர்களே அவமானப்படுத்துகிறார்கள். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் தன்னை நல்ல முறை ஊக்கவித்தார்கள். அதனால் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன் என்று சொல்கிறார்களே ! தவிர, மற்றவரோடு ஒப்பிட்டார்கள் அதனால் நல்ல படித்தேன் என்று யாரும் சொல்வதில்லை. பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளை மனதில் தாழ்வு மனப்பான்மை வருவதற்கு மிக முக்கிய காரணம். படிப்பு இல்லை என்றால் வவாழ்க்கையில்லை என்றுமங, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் ஆசையில் மன ஆழுத்தம் ஏற்படும் அளவிற்கு பேசுவதும் என்று பெற்றோர் செய்கிறார்கள். அதனால் ஒரு சில தோல்வி அடைந்த மாணவர்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். பெற்றோர்களுக்கு அவமானத்தை தேடி கொடுத்து விட்டோமே என்று வருந்தி தற்கொலை செய்துக் கொள்கிறார்கள்.
ஒரு குற்றவாளி பெற்றோர் என்றால், இன்னொரு குற்றவாளி கல்வி முறைகள். புத்தகத்தில் இருப்பதை அப்படியே ஒரு வார்த்தை விடாமல் எழுதினால் அதிக மதிப்பெண்கள் என்ற கல்விமுறை. சிந்தனைகளுக்கு வேலைக் கொடுக்காமல், நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றலுக்கு முதலிடம் கொடுக்கும் கல்விமுறை மாற்ற வேண்டும். பெற்றோர்கள் ஒரு புறம் மன அழுத்தத்தை கொடுக்க, படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள தங்களை தாங்களே மன அழுத்ததிற்கு உள்ளகுகிறார்கள்.
இந்த முறைகளை மாற்றவே தொழிற்கல்வி தொடங்கப்பட்டது. தொழிற்கல்வி முலம் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. ஓய்வு நேரத்தில் மாணவர்கள் வேலை செய்வார்கள்.
எனக்கு பள்ளி வகுப்பெடுத்த ஆசிரியர் ஒருவர் தொழிற்கல்வி கற்றவர். பள்ளி விடுமுறையில் ஓய்வு நேரங்களில் வாட்ச் பழுது பார்த்து சிறு வருமானம் வந்ததை சொல்லிக் கொண்டு இருந்தார். தொழிற்கல்வி பெருமைகளை பற்றி சொல்லிக் கொணடடி இருந்த ஆசிரியர், என் வகுப்பு நண்பர் ஒருவர் “நீங்க பேசாம்ம வாட்ச் கடையல வேலை பார்த்து இருக்கலாம்.. நாங்க உங்க கிட்ட மாட்டமா தப்பிச்சு இருப்போம்” என்று சொன்னான். அதன் பிறகு அந்த மாணவன் ஆசிரியரிடம் உதை வாங்கியது வேறு விஷயம்.
இப்படி எந்த கவலையில்லாமல் வாழும் மாணவர்கள், தற்கொலை செய்துக் கொள்ள ஆசையா படுவார்கள். அதில் வரும் தோல்விகளை பற்றி கவலைப்பட மாட்டார்கள். நற்றாக படித்து தேர்வு எழுதி, தேர்வு முடிவு எதிராக வரும் போது மாணவர்கள் தற்கொலை வெய்துக் கொள்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு பெற்றோர்களில் கனவுகளை சிதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி இருக்கும். அந்த குற்ற உணர்ச்சியே தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.
ஒரு வேலை தொழிற்கல்வி கற்ற மாணவர்களாக இருந்தால், எப்படியாவது தொழில் செய்தாவது பெற்றோர்களின் கனவுகளை நிஜமாக நினைத்து இருப்பார்கள்.அவர்கள் மன அழுத்தங்களும் குறைந்திருக்கும். என்ன செய்வது பெற்றோர்கால் வரும் மன அழுத்தம், சிந்திக்க வைக்காத கல்வி கொடுக்கும் மன அழுத்தம், பெற்றோர்களில் கனவுகளை சிதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி.... முடிவு. பக்குவம் இல்லாத மனது தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.
( நன்றி : 'செங்கரும்பு' இலக்கிய மாத இதழில் பிப்ரவரி, 2007 வெளிவந்தது )
எல்லா தேர்வு முடிவுகளை விட 10வது, 12வது தேர்வு முடிவுகளே மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்ப்பார்ப்aர்கள். இந்த தேர்வு மதிபெண்கள் வைத்தே எந்த கல்லூரியில் சேரலாம், என்ன படிப்பு படிக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும். அந்த மதிபெண்கள் வைத்து தான் கல்லூரியில் இடம் கிடைக்கும்.
ஒரு புறம் ஜாதி, மதம் இட ஒதிக்கீட்டில் திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும். மறுபுறம் தேர்வின் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது. தேர்வு முடிவு ஒரு சில மாணவர்களுக்கு வாழ்க்கை முடிவாகிவிடுகிறது. அந்த முடிவுக்கு வர காரணமாக இருப்பது மாணவர்களின் மனநிலை என்று சொல்லலாம். அந்த மனநிலை அவர்களுக்கு ஏற்பட்டது மிக பெரிய காரணம் அவர்களின் பெற்றோர்களும், கல்வி முறைதான் காரணம்.
தங்கள் பிள்ளைகளை ஊக்கவிக்க தெரியாத பெற்றோர்கள் கையாலும் முறையே மிக அபத்தமாக இருக்கும்.
“உன்னை யாருடனும் ஒப்பிடாதே .. அப்படி ஒப்பிட்டால் உன்னை நீயே அவமானம் படுத்திக் கொள்கிறாய்” - ஓஷோ
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு தங்கள் பிள்ளைகளை அவர்களே அவமானப்படுத்துகிறார்கள். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் தன்னை நல்ல முறை ஊக்கவித்தார்கள். அதனால் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன் என்று சொல்கிறார்களே ! தவிர, மற்றவரோடு ஒப்பிட்டார்கள் அதனால் நல்ல படித்தேன் என்று யாரும் சொல்வதில்லை. பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளை மனதில் தாழ்வு மனப்பான்மை வருவதற்கு மிக முக்கிய காரணம். படிப்பு இல்லை என்றால் வவாழ்க்கையில்லை என்றுமங, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் ஆசையில் மன ஆழுத்தம் ஏற்படும் அளவிற்கு பேசுவதும் என்று பெற்றோர் செய்கிறார்கள். அதனால் ஒரு சில தோல்வி அடைந்த மாணவர்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். பெற்றோர்களுக்கு அவமானத்தை தேடி கொடுத்து விட்டோமே என்று வருந்தி தற்கொலை செய்துக் கொள்கிறார்கள்.
ஒரு குற்றவாளி பெற்றோர் என்றால், இன்னொரு குற்றவாளி கல்வி முறைகள். புத்தகத்தில் இருப்பதை அப்படியே ஒரு வார்த்தை விடாமல் எழுதினால் அதிக மதிப்பெண்கள் என்ற கல்விமுறை. சிந்தனைகளுக்கு வேலைக் கொடுக்காமல், நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றலுக்கு முதலிடம் கொடுக்கும் கல்விமுறை மாற்ற வேண்டும். பெற்றோர்கள் ஒரு புறம் மன அழுத்தத்தை கொடுக்க, படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள தங்களை தாங்களே மன அழுத்ததிற்கு உள்ளகுகிறார்கள்.
இந்த முறைகளை மாற்றவே தொழிற்கல்வி தொடங்கப்பட்டது. தொழிற்கல்வி முலம் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. ஓய்வு நேரத்தில் மாணவர்கள் வேலை செய்வார்கள்.
எனக்கு பள்ளி வகுப்பெடுத்த ஆசிரியர் ஒருவர் தொழிற்கல்வி கற்றவர். பள்ளி விடுமுறையில் ஓய்வு நேரங்களில் வாட்ச் பழுது பார்த்து சிறு வருமானம் வந்ததை சொல்லிக் கொண்டு இருந்தார். தொழிற்கல்வி பெருமைகளை பற்றி சொல்லிக் கொணடடி இருந்த ஆசிரியர், என் வகுப்பு நண்பர் ஒருவர் “நீங்க பேசாம்ம வாட்ச் கடையல வேலை பார்த்து இருக்கலாம்.. நாங்க உங்க கிட்ட மாட்டமா தப்பிச்சு இருப்போம்” என்று சொன்னான். அதன் பிறகு அந்த மாணவன் ஆசிரியரிடம் உதை வாங்கியது வேறு விஷயம்.
இப்படி எந்த கவலையில்லாமல் வாழும் மாணவர்கள், தற்கொலை செய்துக் கொள்ள ஆசையா படுவார்கள். அதில் வரும் தோல்விகளை பற்றி கவலைப்பட மாட்டார்கள். நற்றாக படித்து தேர்வு எழுதி, தேர்வு முடிவு எதிராக வரும் போது மாணவர்கள் தற்கொலை வெய்துக் கொள்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு பெற்றோர்களில் கனவுகளை சிதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி இருக்கும். அந்த குற்ற உணர்ச்சியே தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.
ஒரு வேலை தொழிற்கல்வி கற்ற மாணவர்களாக இருந்தால், எப்படியாவது தொழில் செய்தாவது பெற்றோர்களின் கனவுகளை நிஜமாக நினைத்து இருப்பார்கள்.அவர்கள் மன அழுத்தங்களும் குறைந்திருக்கும். என்ன செய்வது பெற்றோர்கால் வரும் மன அழுத்தம், சிந்திக்க வைக்காத கல்வி கொடுக்கும் மன அழுத்தம், பெற்றோர்களில் கனவுகளை சிதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி.... முடிவு. பக்குவம் இல்லாத மனது தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.
( நன்றி : 'செங்கரும்பு' இலக்கிய மாத இதழில் பிப்ரவரி, 2007 வெளிவந்தது )
Wednesday, October 15, 2008
பங்குச்சந்தை ஆலோசனை
'பங்குச்சந்தை ஆலோசனை' என்று என் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பங்கு சந்தை விழுந்திருக்கும் இச்சமயத்தில் பெரிய யோசனை சொல்ல போகிறார் என்று ஆர்வமாக மின்னஞ்சலை படித்தேன்.
அதில்....
ஒரு வருடம் முன்பு $1000 Delta Airlines பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $33.
ஒரு வருடம் முன்பு $1000 AIG பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $46.
ஒரு வருடம் முன்பு $1000 Lehmann Brothers பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $0.
ஆனால்,
ஒரு வடும் முன்பு $1000 டின் பீர் ( Tin Beer) வாங்கி இருந்தால் , அதை குடித்ததோடு இல்லாமல், ரீசைக்கில் செய்ய பழைய கடையில் போட்டிருந்தால் $214 கிடைக்கும் என்று இருந்தது.
'எது சிறந்த முதலீட்டு என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்?' என்று இருந்தது.
பழைய பேப்பர் கடைக்காரன் கொடுக்கும் பணம் கூட பங்கு சந்தையில் கிடைப்பதில்லை என்று நகைச்சுவையாக அந்த மின்னஞ்சில் கூறியிருந்தார்கள். அந்த நண்பருக்கு நன்றி.
இப்போது முதலீடு செய்வது சரியான நேரம் என்று ஒரு சிலர் கூறிகிறார்கள். என்னை பொருத்த வரையில் இப்போது வெடிக்கை பார்ப்பது தான் நல்லது. BSE 9500 புள்ளிகள் இறங்கலாம் என்று இன்னொரு கருத்து உள்ளது என்பது காதில் வாங்கிக் கொண்டு முதலீடு செய்யுங்கள்
அதில்....
ஒரு வருடம் முன்பு $1000 Delta Airlines பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $33.
ஒரு வருடம் முன்பு $1000 AIG பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $46.
ஒரு வருடம் முன்பு $1000 Lehmann Brothers பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $0.
ஆனால்,
ஒரு வடும் முன்பு $1000 டின் பீர் ( Tin Beer) வாங்கி இருந்தால் , அதை குடித்ததோடு இல்லாமல், ரீசைக்கில் செய்ய பழைய கடையில் போட்டிருந்தால் $214 கிடைக்கும் என்று இருந்தது.
'எது சிறந்த முதலீட்டு என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்?' என்று இருந்தது.
பழைய பேப்பர் கடைக்காரன் கொடுக்கும் பணம் கூட பங்கு சந்தையில் கிடைப்பதில்லை என்று நகைச்சுவையாக அந்த மின்னஞ்சில் கூறியிருந்தார்கள். அந்த நண்பருக்கு நன்றி.
இப்போது முதலீடு செய்வது சரியான நேரம் என்று ஒரு சிலர் கூறிகிறார்கள். என்னை பொருத்த வரையில் இப்போது வெடிக்கை பார்ப்பது தான் நல்லது. BSE 9500 புள்ளிகள் இறங்கலாம் என்று இன்னொரு கருத்து உள்ளது என்பது காதில் வாங்கிக் கொண்டு முதலீடு செய்யுங்கள்
Tuesday, October 7, 2008
இந்திரா நூயி – இந்தியர்களை நிமிர வைத்த பெண்
'இந்திரா நூயி' பெயரை கேட்டால் எதோ வெறு மாநிலத்தில் பிறந்தவர் போல் தெரியும். இவர் 100% தமிழச்சி. இவரின் முழுப் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. 1955 ஆம் ஆண்டு சிங்கார சென்னையில் பிறந்தவர். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் 'B.Sc' படிப்பும், 'IIM'- கல்கத்தாவில் MBA படிப்பும், யெல் பல்கலைக்கழகத்தில் 'Public & Private Management' முதுநிலை பட்டம் பெற்றவர். 1976ல் 'Beardsell' டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின் ‘Asea Brown Boveri, Motorala, Bostan Consulting Group, Johnson & Johnson' என்று பல நிறுவங்களில் பணி புரிந்துள்ளார்.

பெப்ஸி நிறுவனத்தில் 1994ல் Vice-President, Strategic Planning & Development' ஆக சேர்ந்தார். தன் கடின உழைப்பால், இன்று பெப்ஸி நிறுவனத்தில் 'Chairman & CEO’ வாக பணிபுரிந்து வருகிறார். ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் மேல் சம்பாதிக்கிறார். உலகில் பெப்ஸி நிறுவனம் இரண்டாம் இடத்தில் வர மிக முக்கிய பங்கு வகித்தவர். பெப்ஸி என்றவுடன் குளிர்சாதனம் பொருள் மட்டும் தயாரிக்கும் நிறுவனம் மட்டுமில்லை. உடல் ஆரோக்கியத்திற்காக கொழுப்பு சத்து குறைவுள்ள எண்ணெய், உப்பு போன்ற பொருட்களை கூட தயாரிக்கிறார்கள்.
இந்திரா நூயி யார் என்று தெரியாதவர்களுக்கு இது சிறு முன்னுரை மட்டுமே ( எனக்கும் பெரிய அளவில் அவரை பற்றி ஒன்றும் தெரியாது ) ! நான் சொல்ல வந்த விஷயமே வேறு !!
சமிபத்தில் பிஸ்னஸ் வோல்ட் இதழில் அவர் அளித்த பேட்டியை படித்தேன். அவர் பேட்டி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு புறம், பெப்ஸி குளிர்பானத்தை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டம் இருக்க, பெப்ஸி குளிர்பான விற்பனையில் 'இந்தியா' முதல் ஐந்தாம் இடத்தில் உள்ளது. சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.
2015ல் பெப்ஸி நிறுவனம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவர் 2015ல் தன் நிறுவனம் அடைய போகும் லாபத்தை பற்றி பேசவில்லை. தன் குளிர்பான தயாரிப்பில் 20 சதவிகிதம் தண்ணீர், 20 சதவிகிதம் எண்ணெய், 25 சதவிகிதம் பெட்ரோல் குறைக்கப்படும் என்றார். அது மட்டுமில்லாமல். 25 சதவிகிதம் பெப்ஸி பாட்டில்களை ரீஸைக்கில் (Re-cycle) செய்து மீண்டும் பயன்படுத்துவதாக கூறினார்.
இப்போது அமெரிக்காவில் உள்ள பொருளாதார வீழ்ச்சியை பற்றி கேட்ட போது தங்கள் நிறுவனத்துக்கும் ஒரளவு பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்டார். உலகில் பல இடங்களில் தங்கள் நிறுவனங்கள் இருப்பதால் ஒரு இடத்தில் இறங்குமுகமாக இருந்தாலும், மற்றொரு இடத்தில் ஏறுமுகமாக இருப்பதை கூறினார். உலகளவில் பெப்ஸி விற்பனை இந்தியா அதிக உள்ளது என்பதை தெரிவித்தார். இந்தியர்கள் Purchase Capacity மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளதையும் கூறினார்.
100 % வியாபாரியாக இல்லாமல் சுற்றுப்புறத்தை பற்றி நினைத்து செயல்ப்படுவதும், இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் எளிமையாக இருப்பதும், அதிக சம்பளம் வாங்கும் CEO என்ற கர்வமில்லாமல் இருக்கிறார். உலகளவில் இந்தியர்களை தலை நிமிர வைத்த பெண்களில் இவருக்கு தனி இடம் கண்டிப்பாக உண்டு.

பெப்ஸி நிறுவனத்தில் 1994ல் Vice-President, Strategic Planning & Development' ஆக சேர்ந்தார். தன் கடின உழைப்பால், இன்று பெப்ஸி நிறுவனத்தில் 'Chairman & CEO’ வாக பணிபுரிந்து வருகிறார். ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் மேல் சம்பாதிக்கிறார். உலகில் பெப்ஸி நிறுவனம் இரண்டாம் இடத்தில் வர மிக முக்கிய பங்கு வகித்தவர். பெப்ஸி என்றவுடன் குளிர்சாதனம் பொருள் மட்டும் தயாரிக்கும் நிறுவனம் மட்டுமில்லை. உடல் ஆரோக்கியத்திற்காக கொழுப்பு சத்து குறைவுள்ள எண்ணெய், உப்பு போன்ற பொருட்களை கூட தயாரிக்கிறார்கள்.
இந்திரா நூயி யார் என்று தெரியாதவர்களுக்கு இது சிறு முன்னுரை மட்டுமே ( எனக்கும் பெரிய அளவில் அவரை பற்றி ஒன்றும் தெரியாது ) ! நான் சொல்ல வந்த விஷயமே வேறு !!
சமிபத்தில் பிஸ்னஸ் வோல்ட் இதழில் அவர் அளித்த பேட்டியை படித்தேன். அவர் பேட்டி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு புறம், பெப்ஸி குளிர்பானத்தை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டம் இருக்க, பெப்ஸி குளிர்பான விற்பனையில் 'இந்தியா' முதல் ஐந்தாம் இடத்தில் உள்ளது. சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.
2015ல் பெப்ஸி நிறுவனம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவர் 2015ல் தன் நிறுவனம் அடைய போகும் லாபத்தை பற்றி பேசவில்லை. தன் குளிர்பான தயாரிப்பில் 20 சதவிகிதம் தண்ணீர், 20 சதவிகிதம் எண்ணெய், 25 சதவிகிதம் பெட்ரோல் குறைக்கப்படும் என்றார். அது மட்டுமில்லாமல். 25 சதவிகிதம் பெப்ஸி பாட்டில்களை ரீஸைக்கில் (Re-cycle) செய்து மீண்டும் பயன்படுத்துவதாக கூறினார்.
இப்போது அமெரிக்காவில் உள்ள பொருளாதார வீழ்ச்சியை பற்றி கேட்ட போது தங்கள் நிறுவனத்துக்கும் ஒரளவு பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்டார். உலகில் பல இடங்களில் தங்கள் நிறுவனங்கள் இருப்பதால் ஒரு இடத்தில் இறங்குமுகமாக இருந்தாலும், மற்றொரு இடத்தில் ஏறுமுகமாக இருப்பதை கூறினார். உலகளவில் பெப்ஸி விற்பனை இந்தியா அதிக உள்ளது என்பதை தெரிவித்தார். இந்தியர்கள் Purchase Capacity மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளதையும் கூறினார்.
100 % வியாபாரியாக இல்லாமல் சுற்றுப்புறத்தை பற்றி நினைத்து செயல்ப்படுவதும், இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் எளிமையாக இருப்பதும், அதிக சம்பளம் வாங்கும் CEO என்ற கர்வமில்லாமல் இருக்கிறார். உலகளவில் இந்தியர்களை தலை நிமிர வைத்த பெண்களில் இவருக்கு தனி இடம் கண்டிப்பாக உண்டு.
Thursday, September 11, 2008
"மனசாட்சி சொன்னது" - பரிசு வென்ற சிறுகதை
இந்த முறையாவது கிடைக்குமா... இது நம்முடைய மூன்றாவது முயற்சி... ஏன் இரண்டு முறை கிடைக்கவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது....? பல சிந்தனைகளை மனதில் ஓட்டிக் கொண்டு இருந்தான் ரமேஷ். ரமேஷ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பொறியாளர். மூன்று வருடங்களாக கண்ட கனவு நாளை நிறைவேறுமா என்ற அச்சம். இது அவனுக்கு மூன்றாவது முறை... என்ன நடக்க போகிறது....?
ரமேஷின் பிராஜெக்ட் மேனேஜர் ராமன் அங்கு வருகிறான்.
"ஹெலோ ரமேஷ்.... என்ன ரொம்ப டென்ஷனா இருக்க..." என்றான்.
" ஆமா சார்.... ரொம்ப டென்ஷனா இருக்கு... இந்த தடவை கிடைச்சா..என் லைப்பே மாறிடும்..."
"கவலை படாத... இந்த பிராஜக்ட் சக்ஸஸ் ஆனதற்கு காரணம் நீ தான்.... கண்டிப்பா கிடைக்கும்... டோட் வொரி..."
யார் வேண்டுமானாலும் அறிவுரை சொல்லலாம்... ஆனால், நடந்து காட்டுவது வேறு... இரண்டு தடவை விசா கிடைக்கவில்லை... இது எனக்கு மூன்றாவது தடவை. கிடைத்தால், இரண்டு வருஷம் நல்ல சம்பளம்....இனி வாழ்க்கையில் வேலை கூட செய்ய வேண்டியதில்லை.... ஆனால், விசா கிடைத்த பிறகே எல்லாம் சாத்தியம்.
2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக மையம் இடிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது. எந்த காரணத்திற்காக விசா மறுக்கப்படுகிறது என்ற காரணம் கூட தெரிவதில்லை.நாம் கொடுக்கும் தகவல்களில் ஒரு சிறு தவறு இருந்தால் கூட விசா கொடுக்க மறுத்துவிடுகிறார்கள்.
மறுநாள்....
அமெரிக்கா தூதரகத்தில் ரமேஷ் காத்துக்கொண்டு இருந்தான். மூன்று மணி நேரம் கழிந்தது, ஒவ்வொரு முறையும் இப்படி தான் பல மணி நேரம் பலருக்கு செலவாகிறது. விசா மறுக்கப்பட்டால் பல மணி நேரம் காத்து கிடந்ததற்கு பலன் இல்லாமல் போய்விடுகிறது.
"ரமேஷ்...." - என்று ஒரு வெள்ளைக்காரன் குரல் அழைப்பு.
ரமேஷ் உள்ளே செல்கிறான். அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வெளியே வரவில்லை.
"சோ... மிஸ்டர் ரமேஷ்... யூவர் எச்1பி விசா இஸ் கிரன்டட் ...."
"தாங்க் யூ சார்...."
"ஒ.கே.... ஆல் தி பெஸ்ட்...."
ரமேஷின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.... பல நாள் கனவு இன்றே நிஜமானது... இரண்டு வருடம் கஷ்டப்பட்டு வேலை செய்தால் போதும், வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம்.
தனக்கு விசா கிடைத்துவிட்டதை தன் நிறுவனத்திற்கு போன் செய்து சொல்கிறான். தன் நண்பர்களுக்கு விருந்துகள் எல்லாம் கொடுத்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டான்.
அவன் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அமெரிக்காவுக்கு புறப்பட நல்ல துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான். 2007ஆம் ஆண்டு தன் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஆண்டாக இருக்கும் என்றே இருந்தான். அந்த நேரத்திலா அவன் தொலைக்காட்சியில் அதை பார்க்க வேண்டும்.. அதை பார்த்ததும் மிகவும் மனம் வேதனையுடன் அன்று இரவு பொழுது அவனுக்கு கழிந்தது.
மறு நாள் தன் அலுவலகதில் தன் மேனேஜர் ராமனை பார்க்கிறான்.
"சார்... நான்... அமெரிக்காவுக்கு போகல... நான் இங்கேயே இருந்து வேலை செய்றேனே.."
"என்ன... ரமேஷ்... என்ன ஆச்சு உங்களுக்கு... விசாக்காக ரொம்ப கஷ்டப்பட்டீங்க... இப்போ ஏன் இந்த தீடிர் முடிவு? "
"இல்ல...என க்கு அமெரிக்கா போக மனசு இல்ல... நான் இந்தியாவிலே இருந்து வேலை செய்யனும்னு ஆசை படுறேன்..."
சிரித்துக்கொண்டே ராமன் " அமெரிக்கா போயி வேலை செய்தா தேச திரோகம்னு யாராவது அட்வைஸ் பண்ணாங்கள...? அப்படி யாராவது சொன்னா நம்பாதிங்க... அமெரிக்கா போயி வேலை செய்தா இரண்டு நாட்டுக்கும் நல்ல லாபம் தான்.... யாரோ உங்கள நல்லா குழப்பி இருக்காங்க..."
"யாரும் என்ன குழப்பலை...இது நானா எடுத்த முடிவு தான்... அது மட்டும் இல்லாம நான் வேறொரு காரணத்திற்காக தான் போகலைனு சொன்னேன்"
" அப்படியா....சரி..! என்ன காரணம்... எனி பர்சனல் ரீசன்.."
" சொந்த காரணம் இல்லை... உலக காரணம்... அதான் போகலை...."
"புரியல..."
" நேத்து டி.வியில சதாம் ஹுசைனை தூக்குல போடுறத பார்த்தீங்களா...."
"பார்த்தேன்... ஆனா அதுக்கும் நீங்க சொல்ல வந்ததுக்கும் என்ன சம்மந்தம் இப்போ.."
" நம்மல மாதிரி சாப்ட்வேர் ஆளுங்க சம்பாதிச்சு... இரண்டு நாட்டுக்கும் நல்ல லாபம் வாங்கி தரோம்... ஆன அமெரிக்கா அந்த பணத்தை நல்ல வழியில செலவு செய்யல... மத்த நாடு கிட்ட சண்ட போடுரதுல தான் செலவு பண்றாங்க.."
"அதுனால நமக்கு என்ன ?... நம்ம இந்தியா மட்டும் என்ன... நல்ல விஷயத்துக்கா பணம் செலவு பண்றாங்க.... எத்தனையோ அரசியல்வாதி நம்ப வரி பணத்தை கொள்ளை அடிக்கிறாங்க.."
" நம்ம இந்தியாவால எந்த நாடும் கஷ்டப்பட்டது இல்ல.... ஒரு பிலைட் ஹைஜாக் பண்ணி தீவிரவாதிகளை விட சொன்னா கூட... எந்த உயிரும் சாகக் கூடாதுனு நாம தீவிரவாதியை விடுதலை பண்ணியிருக்கோம்.... ஆனா ஒரு பிரதமர கொன்னு.. ஈராக்ல கலவரத்த உண்டு பண்ணிட்டாங்க அமெரிக்கா.."
"ரமேஷ்... எனக்கும் விஷயம் தெரியும்... ஆனா உலக அரசியல் பேசி இவ்வளவு வருஷம் காத்திருந்து வாங்கின விசாவ தூக்கி எறியப் போறிங்களா"
"கண்டிப்பா நான் தூக்கி ஏறியதான் போறேன்.... அமெரிக்கா பண்ணுற காரியத்திற்கு மறைமுகமா நாம சம்மந்தம் படுறோம்... க்யூபா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், இப்போ ஈராக் இன்னும் எவ்வளவு நாட்டை அழிக்க போறாங்கனு தெரியலை.... ஆனா இவங்க பண்ணுரதுக்கு தைரியம் கொடுக்குறது நாம சம்பாதிச்சு கொடுக்கும் பணம் தான்...."
" அப்போ.. உங்க முடிவுல இருந்து மாறப் போறதில்லையா..."
" கண்டிப்பா மாற மாட்டேன்... நீங்க என்னை வர்புறுத்தி அமெரிக்கா போக சொன்னா வேலையை விட்டு தான் மாறுவேன்..."
ராமன் என்ன பேசுவது என்று தெரியவில்லை... ஆனால், இறுதியாக ராமன் "நான் வேற யாராவது இந்த பிராஜக்ட்காக அனுப்பிடுவேன்... உங்களுக்கு கிடைச்ச நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிடுறீங்க... அது தான் என்னால சொல்ல முடியும்"
"சந்தர்ப்பத்தை நழுவவிட்டா பரவாயில்லை... ஆனா, மத்தவங்க சாகுறதுக்கு நாம மறைமுகமாக காரணம் நினைக்கும் குற்ற உணர்ச்சியை விட பரவாயில்லைனு தோன்னுது..."
சரி..உங்க இஷ்டம்..." என்று சொல்லி ராமன் தன் குழுவில் இருக்கும் வேறொருவரை தேர்ந்தெடுத்து அமெரிக்கா செல்ல விசா வேலைகளை தொடங்க சொல்கிறான்.
ரமேஷ் செய்தது முட்டாள் தனமாக தெரிந்தாலும்..அதில் இருக்கும் உண்மை ராமனின் மனிதநேயம், அந்த குழுவில் வேலை செய்யும் எல்லோருக்கும் புரிந்தது. புரிந்தும் இந்த சுயநல உலகில் சுயநலமான முடிவைத்தான் எடுக்க வேண்டியுள்ளது. அந்த குழுவில் ஒருவன் அமெரிக்கா செல்கிறான்.
( "நம் உரத்தசிந்தனை" சிற்றிதழ் நடத்திய சிறுகதை போட்டியில் ரூ.250 பரிசுவென்றது. என்னுடைய "நடைபாதை" நூலில் ஐந்தாவது கதையாக இடம் பெறுகிறது.
என்னுடைய "நடைபாதை" நூலில் ஐந்தாவது கதையாக இடம் பெறுகிறது. "நடைபாதை" நூல் வெளியீட்டு விழா செப்.14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு.....
http://tamilbookreview.blogspot.com/2008/09/14.html பார்க்கவும்)
ரமேஷின் பிராஜெக்ட் மேனேஜர் ராமன் அங்கு வருகிறான்.
"ஹெலோ ரமேஷ்.... என்ன ரொம்ப டென்ஷனா இருக்க..." என்றான்.
" ஆமா சார்.... ரொம்ப டென்ஷனா இருக்கு... இந்த தடவை கிடைச்சா..என் லைப்பே மாறிடும்..."
"கவலை படாத... இந்த பிராஜக்ட் சக்ஸஸ் ஆனதற்கு காரணம் நீ தான்.... கண்டிப்பா கிடைக்கும்... டோட் வொரி..."
யார் வேண்டுமானாலும் அறிவுரை சொல்லலாம்... ஆனால், நடந்து காட்டுவது வேறு... இரண்டு தடவை விசா கிடைக்கவில்லை... இது எனக்கு மூன்றாவது தடவை. கிடைத்தால், இரண்டு வருஷம் நல்ல சம்பளம்....இனி வாழ்க்கையில் வேலை கூட செய்ய வேண்டியதில்லை.... ஆனால், விசா கிடைத்த பிறகே எல்லாம் சாத்தியம்.
2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக மையம் இடிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது. எந்த காரணத்திற்காக விசா மறுக்கப்படுகிறது என்ற காரணம் கூட தெரிவதில்லை.நாம் கொடுக்கும் தகவல்களில் ஒரு சிறு தவறு இருந்தால் கூட விசா கொடுக்க மறுத்துவிடுகிறார்கள்.
மறுநாள்....
அமெரிக்கா தூதரகத்தில் ரமேஷ் காத்துக்கொண்டு இருந்தான். மூன்று மணி நேரம் கழிந்தது, ஒவ்வொரு முறையும் இப்படி தான் பல மணி நேரம் பலருக்கு செலவாகிறது. விசா மறுக்கப்பட்டால் பல மணி நேரம் காத்து கிடந்ததற்கு பலன் இல்லாமல் போய்விடுகிறது.
"ரமேஷ்...." - என்று ஒரு வெள்ளைக்காரன் குரல் அழைப்பு.
ரமேஷ் உள்ளே செல்கிறான். அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வெளியே வரவில்லை.
"சோ... மிஸ்டர் ரமேஷ்... யூவர் எச்1பி விசா இஸ் கிரன்டட் ...."
"தாங்க் யூ சார்...."
"ஒ.கே.... ஆல் தி பெஸ்ட்...."
ரமேஷின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.... பல நாள் கனவு இன்றே நிஜமானது... இரண்டு வருடம் கஷ்டப்பட்டு வேலை செய்தால் போதும், வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம்.
தனக்கு விசா கிடைத்துவிட்டதை தன் நிறுவனத்திற்கு போன் செய்து சொல்கிறான். தன் நண்பர்களுக்கு விருந்துகள் எல்லாம் கொடுத்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டான்.
அவன் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அமெரிக்காவுக்கு புறப்பட நல்ல துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான். 2007ஆம் ஆண்டு தன் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஆண்டாக இருக்கும் என்றே இருந்தான். அந்த நேரத்திலா அவன் தொலைக்காட்சியில் அதை பார்க்க வேண்டும்.. அதை பார்த்ததும் மிகவும் மனம் வேதனையுடன் அன்று இரவு பொழுது அவனுக்கு கழிந்தது.
மறு நாள் தன் அலுவலகதில் தன் மேனேஜர் ராமனை பார்க்கிறான்.
"சார்... நான்... அமெரிக்காவுக்கு போகல... நான் இங்கேயே இருந்து வேலை செய்றேனே.."
"என்ன... ரமேஷ்... என்ன ஆச்சு உங்களுக்கு... விசாக்காக ரொம்ப கஷ்டப்பட்டீங்க... இப்போ ஏன் இந்த தீடிர் முடிவு? "
"இல்ல...என க்கு அமெரிக்கா போக மனசு இல்ல... நான் இந்தியாவிலே இருந்து வேலை செய்யனும்னு ஆசை படுறேன்..."
சிரித்துக்கொண்டே ராமன் " அமெரிக்கா போயி வேலை செய்தா தேச திரோகம்னு யாராவது அட்வைஸ் பண்ணாங்கள...? அப்படி யாராவது சொன்னா நம்பாதிங்க... அமெரிக்கா போயி வேலை செய்தா இரண்டு நாட்டுக்கும் நல்ல லாபம் தான்.... யாரோ உங்கள நல்லா குழப்பி இருக்காங்க..."
"யாரும் என்ன குழப்பலை...இது நானா எடுத்த முடிவு தான்... அது மட்டும் இல்லாம நான் வேறொரு காரணத்திற்காக தான் போகலைனு சொன்னேன்"
" அப்படியா....சரி..! என்ன காரணம்... எனி பர்சனல் ரீசன்.."
" சொந்த காரணம் இல்லை... உலக காரணம்... அதான் போகலை...."
"புரியல..."
" நேத்து டி.வியில சதாம் ஹுசைனை தூக்குல போடுறத பார்த்தீங்களா...."
"பார்த்தேன்... ஆனா அதுக்கும் நீங்க சொல்ல வந்ததுக்கும் என்ன சம்மந்தம் இப்போ.."
" நம்மல மாதிரி சாப்ட்வேர் ஆளுங்க சம்பாதிச்சு... இரண்டு நாட்டுக்கும் நல்ல லாபம் வாங்கி தரோம்... ஆன அமெரிக்கா அந்த பணத்தை நல்ல வழியில செலவு செய்யல... மத்த நாடு கிட்ட சண்ட போடுரதுல தான் செலவு பண்றாங்க.."
"அதுனால நமக்கு என்ன ?... நம்ம இந்தியா மட்டும் என்ன... நல்ல விஷயத்துக்கா பணம் செலவு பண்றாங்க.... எத்தனையோ அரசியல்வாதி நம்ப வரி பணத்தை கொள்ளை அடிக்கிறாங்க.."
" நம்ம இந்தியாவால எந்த நாடும் கஷ்டப்பட்டது இல்ல.... ஒரு பிலைட் ஹைஜாக் பண்ணி தீவிரவாதிகளை விட சொன்னா கூட... எந்த உயிரும் சாகக் கூடாதுனு நாம தீவிரவாதியை விடுதலை பண்ணியிருக்கோம்.... ஆனா ஒரு பிரதமர கொன்னு.. ஈராக்ல கலவரத்த உண்டு பண்ணிட்டாங்க அமெரிக்கா.."
"ரமேஷ்... எனக்கும் விஷயம் தெரியும்... ஆனா உலக அரசியல் பேசி இவ்வளவு வருஷம் காத்திருந்து வாங்கின விசாவ தூக்கி எறியப் போறிங்களா"
"கண்டிப்பா நான் தூக்கி ஏறியதான் போறேன்.... அமெரிக்கா பண்ணுற காரியத்திற்கு மறைமுகமா நாம சம்மந்தம் படுறோம்... க்யூபா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், இப்போ ஈராக் இன்னும் எவ்வளவு நாட்டை அழிக்க போறாங்கனு தெரியலை.... ஆனா இவங்க பண்ணுரதுக்கு தைரியம் கொடுக்குறது நாம சம்பாதிச்சு கொடுக்கும் பணம் தான்...."
" அப்போ.. உங்க முடிவுல இருந்து மாறப் போறதில்லையா..."
" கண்டிப்பா மாற மாட்டேன்... நீங்க என்னை வர்புறுத்தி அமெரிக்கா போக சொன்னா வேலையை விட்டு தான் மாறுவேன்..."
ராமன் என்ன பேசுவது என்று தெரியவில்லை... ஆனால், இறுதியாக ராமன் "நான் வேற யாராவது இந்த பிராஜக்ட்காக அனுப்பிடுவேன்... உங்களுக்கு கிடைச்ச நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிடுறீங்க... அது தான் என்னால சொல்ல முடியும்"
"சந்தர்ப்பத்தை நழுவவிட்டா பரவாயில்லை... ஆனா, மத்தவங்க சாகுறதுக்கு நாம மறைமுகமாக காரணம் நினைக்கும் குற்ற உணர்ச்சியை விட பரவாயில்லைனு தோன்னுது..."
சரி..உங்க இஷ்டம்..." என்று சொல்லி ராமன் தன் குழுவில் இருக்கும் வேறொருவரை தேர்ந்தெடுத்து அமெரிக்கா செல்ல விசா வேலைகளை தொடங்க சொல்கிறான்.
ரமேஷ் செய்தது முட்டாள் தனமாக தெரிந்தாலும்..அதில் இருக்கும் உண்மை ராமனின் மனிதநேயம், அந்த குழுவில் வேலை செய்யும் எல்லோருக்கும் புரிந்தது. புரிந்தும் இந்த சுயநல உலகில் சுயநலமான முடிவைத்தான் எடுக்க வேண்டியுள்ளது. அந்த குழுவில் ஒருவன் அமெரிக்கா செல்கிறான்.
( "நம் உரத்தசிந்தனை" சிற்றிதழ் நடத்திய சிறுகதை போட்டியில் ரூ.250 பரிசுவென்றது. என்னுடைய "நடைபாதை" நூலில் ஐந்தாவது கதையாக இடம் பெறுகிறது.
என்னுடைய "நடைபாதை" நூலில் ஐந்தாவது கதையாக இடம் பெறுகிறது. "நடைபாதை" நூல் வெளியீட்டு விழா செப்.14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு.....
http://tamilbookreview.blogspot.com/2008/09/14.html பார்க்கவும்)
Subscribe to:
Posts (Atom)