வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Ethiran. Show all posts
Showing posts with label Ethiran. Show all posts

Sunday, October 3, 2010

எந்திரன் மற்றும் ரஜினி பழைய படங்கள்

முதல் முறையாக சன் டி.வி படத்தை தியேட்டரில் பார்த்தேன்.

படத்தின் கதை.... எல்லோருக்கு தெரிந்திருக்கும். மனிதனின் உணர்ச்சிகள் எந்திரத்திற்கு கொடுக்கும் போது அது எவ்வளவு வன்மமாக நடந்துக் கொள்ளும் என்பதை ஷங்கர் காட்டியிருக்கிறார்.(நல்ல வேளை, மெசேஜ் சொல்ல வேண்டும் என்று கோர்ட் காட்சியை நீண்ட நேரம் இழுக்கவில்லை)கிளைமாக்ஸ், பாடல் காட்சியில் தனது பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் ஷங்கர்.

ரஜினி அறிமுக பாடலில்லை. பன்ச் டையலாக் இல்லை. ஸ்டைல் இல்லை. முழுக்க முழுக்க இயக்குனர் ஷங்கரின் படமாக தான் 'எந்திரன்' இருந்தது.



நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி கதையின் நாயகனாக நடித்த படம் என்று சொல்லலாம். 'ஆறில் இருந்து அறுபது வரை', 'முள்ளும் மலரும்' படங்களில் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்தது போல் இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். அதுவும் 'காயத்ரி', 'ஆடு புலியாட்டம்' படத்தில் பார்த்த வில்லன் ரஜினியை 'ரோபோ' கதாபாத்திரத்தில் பார்க்க முடிந்தது.

இதுவரை லாஜிக் இல்லாமல் எத்தனையோ படத்தில் ரஜினி செய்ய ஹீரோயிசத்தை 'ரோபோ' என்ற லாஜிக் பாத்திரத்தில் ஹீரோயிசத்தை காட்டியுள்ளார். குறிப்பாக, எந்திரகளுக்கு நடுவில் விஞ்ஞானி ரஜினியை தேடும் போது ரஜினி நடிப்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

ரஜினியே கதையின் நாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு மற்ற நடிகர்களும் அதைப்போல் செய்ய தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

கணிப்பொறியைக் கூட காதலிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராயை கிழவியான பிறகு அழகாக காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரை விட்டால் இந்த அளவுக்கு கூட அழகான நாயகி இல்லை என்பதால் நமக்கு வேறு வழியில்லை. ( ரஜினிக்கு பொருத்தமாக இருக்க அப்படி செய்தார்களோ என்னவோ !)

பாடல்கள்... இரண்டு பாடல்கள் தான் நன்றாக இருந்தாலும் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது.

ரோபோ பாத்திரம் ஐஸ்வர்யாவிடம் காதலை சொல்லும் போதும், லீவ், வேலை நிறுத்தம் பற்றி விஞ்ஞானி ரஜினியிடம் பேசும் போது, 'காதல் ரத்து' என்ற புதிய வார்த்தையை ஊடலில் பயன்படுத்தும் போதும் என்னையும் அறியாமால் 'சுஜாதா' கண் முன் வந்து நிற்க்கிறார். முழுக்க முழுக்க அவர் வசனம் எழுதியிருந்தால் இந்த படத்தை இன்னும் அதிகமாக ரசித்திருப்போமோ என்று தோன்றியதியது. மனிதனுக்கும், எந்திரத்திற்கும் ஒப்பீட்டு வசனம் இவரை தவிர இவ்வளவு அழகாக யாராலும் எழுத முடியாது. (சுஜாதா ஸார்... வீ மிஸ் யூ !!)

படத்தின் முதல் காட்சி திரையிடும் முன்பே முன் பதிவு, ஆடியோ டி.சி, வெளினாட்டு உரிமை, மற்ற மாநில உரிமை என்று சன் டி.விக்கு 200 கோடி வசூலாகிவிட்டதாக ஒரு நண்பர் சொன்னார். இனிமேல், என்ன தான் நவீனத்துவம், பின் நவீனத்துவ விமர்சணம் எழுதினாலும் படம் சன் டி.விக்கு லாபம் தான். ( லாபத்தில் 'சுறா', 'வேட்டைக்காரன்' போன்ற நல்ல படங்களை தைரியமாக வாங்குவார்கள்).

குடும்பத்தோடு ஜாலியாக பார்க்க வேண்டிய படம். மூன்று மணி நேரம் நன்றாக ரசிக்க முடிந்தது.

சுருக்குனு...

தன் மகள் திருமணத்திற்கு வந்தால் போக்குவரத்து பாதிக்கும் என்று ரசிகர்களை அழைக்காத ரஜினி, விடியற்காலை 3:30 மணிக்கு பட்டாசு கொளுத்தி கொண்டாடியதை ரஜினி எதுவும் சொல்லவில்லையே ! தனது பட வியாபாரத்திற்காக பொது மக்களை மறந்துவிட்டாரோ !

எங்கோ ஒருவர் 'வருங்கால முதல்வர் ரஜினி' என்று கோஷம் போட்டார். இன்னுமா இவர் அரசியலுக்கு வருவாரு நம்புறாங்க..

Monday, August 9, 2010

படித்ததும் பார்த்ததும் - 9.8.10

'எந்திரன்' பாடல் வெளியீட்டு விழாவில் படத்திற்கு 150 கோடி செலவு செய்ததாக சங்கர் கூறியிருந்தார். விளம்பரம், பாடல் வெளியீட்டு என்று இன்னும் போஸ்ட் பிரோடக்ஷன் வேலையில் 20, 30 கோடி செலவு செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்க படுகிறதாம். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழியில் வெளியாகும் படங்களுக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் கிடையாது என்று கருத்து நிலவிவருகிறது. அதற்கான விடை செப்டம்பர் மாதம் தெரிந்துவிடும்.

**

திரும்ப வராத கடந்த காலம்
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துகள்களில் அடிக்கடி கேள்ப்படும் எழுத்தாளரின் பெயர் 'தஸ்தயேவ்ஸ்கி'. நூலகங்களுக்கு சென்ற போது தஸ்தயேவ்ஸ்கியின் 'திரும்ப வராத கடந்த காலம்' புத்தகம் கிடைத்தது. கற்பனை உலகில் வாழும் இளைஞன் ஓர் இரவில், நாஸ்தென்கா என்ற பெண்ணை பார்க்கிறான். அவர்களுக்குள் ஏற்ப்படும் உரையாடல் அடுத்த மூன்று நாள் இரவு அவளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. மூன்றாவது நாளில் நாஸ்தென்காவின் காதலை கேள்விப்படும் அந்த இளைஞன், அடுத்த நாள் இரவு தன் காதலை சொல்கிறான். இறுதியில் அவள் காதலை ஏற்ற்க் கொள்கிறாளா என்பது முடிவு. நான்கு இரவுகள் நடக்கும் கதையில் இருவருக்கு நடக்கும் உரையாடல் கவிதை நடையில் உள்ளது. ஆரம்பத்தில், கற்பனை உலகில் வாழும் போது வீடு, மரம் அவனிடம் பேசுவது போன்ற வரிகள் அஃறினைக்கு கூட உயிர் கொடுத்திருக்கிறார்.

விலை : 60, பக்:112
பரத் பதிப்பகம்
1-A, விஸ்வாஸ் ப்ளாட்ஸ்
2,3, பிள்ளையார் கோயில் தெரு,
நெசப்பாக்கம், சென்னை - 78
Pக்: 24719795

***

ஒரு படம் பண்ணனும்

நாளைய இயக்குனர்களுக்கு இன்ஸ்பிரேஷக்காக நின்ஜா டீம் இயக்கிய படம். தன்னமிக்கையை பற்றி சொல்லும் ஒரு நகைச்சுவை குறும்படம். விரைவில் 'கருணா'வுக்கு ரசிகர் மன்றம் இணையத்தில் தொடங்கினாலும் தொடங்குவார்கள் என்று தெரிகிறது. அந்த அளவிற்கு மனிதன் இயல்பாக சிரிக்க வைக்கிறார்.

LinkWithin

Related Posts with Thumbnails