வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, September 21, 2012

நடுரோட்டில் ஆபத்தான குழி !! (தொடர்ச்சி)

 நம்மிடம் இருக்கும் மிக பெரிய குறையே.... அரசாங்கத்தை ஈசியாக குறை சொல்லிவிடுகிறோம். ஆனால், அவர்கள் சரி செய்ததை பாராட்டவோ அல்லது சரியாகி விட்டது என்று சொல்லவோ செய்வதில்லை.இதே தவறை தான் நானும் மூன்று நாட்களாக செய்திருக்கிறேன்.

சென்ற திங்கள் அன்று பதிவிட வேண்டும் என்று இருந்தேன். நேரமின்மைக் காரணமாக இன்று பதிவிடுகிறேன்.


அதன் பின் TN CM cell க்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஒரு வாரம் பொருத்திருந்து பார்த்தேன். பெரிதாக பலனில்லை. இரண்டு நாள் கலித்து, 'கேபிள்' சங்கர் அவர்கள் மேயரின் முக நூலில் போஸ்ட் போட்டதற்கு சரியான பதில் கிடைத்தது என்று கூறியிருந்தார். CM cell சரியாக வேலை செய்யாத போது, மேயர் மின்னஞ்சல் மட்டும் சரியாக வேலை செய்யுமா என்ற அவ நம்பிக்கையோடு தான் மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால், அடுத்த இரண்டு நாளில் ஒரு குழி முடப்பட்டது. ( இதில் இருக்கும் அரசியலுக்கு நாம் போகாமல் இருப்பது நல்லது.)

இந்த குழியில் தான் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு ஆபத்தாக இருந்தது. அப்படியும், இரண்டாவது குழியை அவர்கள் மூடவில்லை. ஐந்து நாளாகியும் ஒரு குழி மட்டும் மூடப்படாமல் இருந்தது.

ஏ.ஈ தொடர்பு கொண்டு கேட்டேன். கொஞ்சம் வேலை இருந்தது. இன்று முடிந்துவிடும் என்று அன்றே குழியை முடிவிட்டார். 


நான்கு தெருவும் சேரும் முனை என்பதால் இந்த குழி மூடியதும் ஒரளவு போக்குவரத்து பரவாயில்லை.

 குழி தொண்டிய சுவடு மட்டும் சாலையில் உள்ளது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான சாலையின் கதி அது தானே !!!

2 comments:

Cable சங்கர் said...

கேட்டால் கிடைக்கும் குகன்.

krish said...

well done sir.

LinkWithin

Related Posts with Thumbnails