வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, September 11, 2012

தொடரும் கார்டூன் அரசியல் !!

அசீம் திரிவேதியை கைதுயை சரியா ? தவறா ? என்று விவாதிக்கும் முன் ஊழலுக்கு எதிரான இந்த இணையதளத்தை பாருங்கள். ஊழலுக்கு எதிரான பல கேலி சித்திரங்கள் இதில் உள்ளது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பது நியாயம் தான். ஜனநாயக கடமையும் கூட. ஆனால், தேசிய சின்னம், தேசிய கோடி அவமானப்படுத்தும் கேலி சித்திரத்தை என்னால் ஆதரிக்க முடியவில்லை.

ஊழலில் இடம் பெற்று இருக்கும் அரசியல்வாதிகளை, நீதி மன்ற இழுவையை விமர்சிக்கலாம். மன்மோகன் சிங், சோனியா, அத்வானி, மோடி, அன்னா ஹசாரே யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர்கள் இல்லை. காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க யாரும் ஊழல் இல்லாத ஆட்சி நடத்தவில்லை. ஜனநாயகத்தில் இவர்களை விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.




விமர்சனம்... தவறு செய்ததை திருத்த உதவ வேண்டும். நம்மை நாமே அவமானப்படுத்தும் படி இருக்கக் கூடாது.

 “பாராளமன்றத்தை கழிவறையாகிவிட்டார்கள்” என்று சொல்வது வேறு. “பாராளமன்றம் ஒரு கழிவறை” என்று சொல்வது வேறு.

நம் அரசியல் நிர்வாகத்தை விமர்சிக்கலாம். நம் அடையாளத்தை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. 

அதே சமயம், திரிவேதி மீது பாய்ந்த சட்டம், அவரை வரைய தூண்டிய ஊழல் அரசியல்வாதிகள் மேல் ஏன் பாயவில்லை என்ற நிதர்சனக் கேள்வியை கேட்காமல் இருக்கமுடியவில்லை.

***


இந்திய சின்னமான அசோக சின்னத்தை அவமானப்படுத்திய திருவேதியை கைது செய்தது எந்த அளவுக்கு நியாயமோ... அந்த அளவிற்கு இந்த போஸ்டர் வடிவமைத்த காங்கிரஸ் கட்சிக்காரரும் கைது செய்வதும் நியாயம் தான்.

இதை எதிர்த்து யாராவது வழக்கு போட்டார்களா ?

1 comment:

எல் கே said...

குகன், இதையெல்லாம் நியாயப்படுத்த பதிவுலகில் கூட ஆட்கள் இருக்காங்க

LinkWithin

Related Posts with Thumbnails