
தசாவதாரம் கதை படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம். கோபாலன் வழக்கு போட்டுள்ளார். அவருக்காக இந்த தசாவதாரம் கதையை வெளியிடுகிறேன்.
வயதை குறைத்து இளமையாக காட்டிக் கொள்வதில் கமலுக்கு நிகர் கமல் தான்.
12 ஆம் நூற்றாண்டில் இருந்து கதை துவங்குகிறது. குலோத்துங்க மன்னன் ( நெப்போலியன் ) போரில் தோல்வியுற்ற விரக்தியில் தன் நகரத்தில் இருக்கும் பெருமாள் சிலையை கடலில் தூக்கி ஏறிய சொல்கிறார். கோயிலில் பணி புறியும் கமல் இதை எதிர்க்கிறார். அதனால், அவரையும் சேர்த்து பெருமாள் விக்கிரகத்தை கடலில் எறிகிறார்கள்.
இப்போது கதை 12ஆம் நுற்றாண்டில் இருந்து 21ஆம் நூற்றாண்டுக்கு நகர்கிறது. அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜேன்டுக்கள் மல்லிகா உட்பட கடலில் விழுந்த பெருமாள் விக்கிரகத்தை தேடி இந்தியா வருகிறார்கள். காரணம், அந்த விக்கிரகத்தில் விஞ்ஞானப் பூர்வமான சக்திகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அங்கு பணி புறியும் விஞ்ஞானி கமல் சி.ஐ.ஏ எஜேன்டுக்கு தெரியாமல் விக்கிரகத்தை காப்பற்ற இந்தியா வருக்கிறார். அசின் அவருக்கு உதவியாக இருக்கிறார். பாட்டி கமல் பல நூற்றாண்டுக்கள் முன் நடந்த சம்பவந்தை கூறி விஞ்ஞானி கமலுக்கு உதவி செய்து, பெருமாள் விக்கிரகத்தை இந்தியாவை விட்டு தூக்கி செல்லாமல் காப்பற்றுவது தான் மீது கதை. இதில் அமெரிக்க அதிபர் வேடத்தில் வருவதும் கமல் தான்.
கதையை உறுதி செய்துக் கொள்ள திரைப்படத்தை பார்க்கவும். :)
படம் பார்க்காமல் சர்ச்சை செய்து பெயர் வாங்வதில் அரசியல்வாதிகளுக்கு அடுத்து, ஆன்மீகவாதிகளும் இறங்கிவிட்டனர்.