வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, June 17, 2013

தப்பு !!

எதோ பெயர் தெரியாத கிராமத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் கண்மணியும், கருப்பனும் பள்ளி முடிந்து மரத்தடி நிழலை நோக்கி நடந்தனர்.

“கண்மணி ! இப்போ எல்லாம் என் கூட நடந்து வரவே மாட்டீங்கர...”

 “போடா... ! குத்த வெச்சதில்ல இருந்து அம்மா எந்த பசங்களோட பேசாத பலகாதனு சொல்லிக்கிட்டே இருக்கா....” வாடிய முகத்துடன் கருப்பன்,

“நா வேணும்னா பொண்ணா மாறட்டா....!”

 “போடா கிறுக்கா... கொஞ்சமாவது அறிவிருக்கா....”

 “ஏன் அப்படி சொல்லுற”

 “குத்த வெச்சதுல இருந்து எவ்வளவு கஷ்டம் தெரியுமா. உடம்பு வலிக்கும். சில சமயம் நடக்குறதுக்கு கஷ்டமா இருக்கும். எங்க போனாலும் துணைக்கு யாராவது கூட்டிட்டு போகனும்னு சொல்லுறாங்க... பையனா இருந்தா எவ்வளவு ஜாலி தெரியுமா !!”

 கருப்பன் அமைதியாக கண்மணி சொல்லுவதை கேட்டு கொண்டு இருந்தான். 

“சரி விடு ! எங்க வீட்டுல இருந்து ஜிலேப்பி கொண்டு வந்திருக்கேன். சாப்பிடு.” 

கருப்பன் கண்மணியிடம் இருந்து ஜிலேப்பி வாங்கி சாப்பிட்டான்.

 “என்டா ! நா பெரிய மனுஷியானா மாதிரி, நீ எப்போ பெரிய மனுஷனாவ...” 

“தெரியுல்ல... அப்படி நடந்தா உனக்கு செஞ்ச மாதிரி எனக்கு செய்வாங்களா ?” 

கருப்பன் சொன்னதை கேட்டு கண்மணிக்கு சிரிப்பு வந்தது. இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது கண்மணி அருகில் தேள் வருவதை கருப்பன் பார்த்தான்.

 “கண்மணி தேளு !!!”

 தேளை பார்த்ததும் கண்மணி எழுந்திருக்கும் போது கீழே விழுந்தாள். அவள் பாவாடை மேல வர, தேள் அவளை கண்மணியின் காலை நோக்கி வருகிறது. கருப்பன் தேளை கையில் எடுத்து வீசினான்.

 அப்போது அவர்கள் பள்ளி ஆசிரியை ஜமுனா வர, அவரின் பார்வைக்கு கருப்பன் கண்மணியை தொடுவதுப் போல் தெரிகிறது.

 “டேய் ! என்னடா பண்ணுற. மொலச்சு மூனு இலக் கூட விடல்ல... பொண்ணுக்கிட்ட இப்படி நடந்துக்குற..” என்று சொல்லி கருப்பனை அடிக்கிறாள். அவனின் பதிலுக்காக அவள் காதிருக்கவில்லை.

 “நா ஒண்ணும் பண்ணல்ல மிஸ்... நா ஒண்ணும் பண்ணல்ல....”

 ஜமுனா மாணவனை அடிப்பதை பார்த்த தலைமை ஆசிரியர் அவரை தடுகிறார். 

“மேடம்...! என்னாச்சு... ஏன் அவன இப்படி போட்டு அடிக்கிறீங்க..?”

 “இவன் செஞ்ச காரியத்துக்கு அடிக்காம என்ன பண்ணுறது...”

 மேலும் கருப்பனை அடித்தாள்.

 “ அவன எதுக்காக அடிக்கிறேனு சொல்லிட்டு அடிங்க...?”

 “அந்த பொண்ணு பாவடா விலகியிருக்கு அத தொட போண்ணான்..”

 “ ஐயோ இல்ல மிஸ். கண்மணி கால் கிட்ட தேள் வந்துச்சு அத எடுக்க போண்ணேன். வேணும்னா கண்மணி கிட்ட கேளுங்க...”

 “ஆமாம் மிஸ். தேள் என்ன கடிக்க வந்திச்சு. கருப்பன் தான் தூக்கிப் போட்டான்.”

ஜமுனாவுக்கு தன் தவறு புரிகிறது.

 “மேடம் ! பார்த்தீங்களா இப்ப நீங்க தான் தப்பு பண்ணியிருக்கிங்க. அப்படியே இவங்க தப்பு பண்ணுறதா நினைச்சா. கூப்பிட்டு நம்பிக்கையா நாலு வார்த்த பேசுங்க. சந்தேகப்பட்டு அடிக்கிறதால நாலு பேருக்கு தெரியாம தப்பு செய்ய தோணும். இதுவே அவங்க மேல நம்பிக்கை வச்சு பேசுங்க... அந்த நம்பிக்கையே அவங்க தப்பு பண்ண விடாது !” என்றார்.

 ஜமுனா தன் தவறை உணர்ந்து, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். தலைமை ஆசிரியரும் கருப்பனுக்கும், கண்மணிக்கும் இதைப் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி சென்றார்.

 "கண்மணி ! நீ பெரிய மனுஷியாகமலே இருந்திருக்கலாம் "

 "எல்லாரும் ஒரு நாள் பெரியவங்களாக தானே பொறாங்க. ஆமா, அங்க கை வெச்சா என்னடா தப்பு ?" என்றாள் கண்மணி.

Friday, June 14, 2013

ஈழம் : ஹைக்கூ கவிதைகள் - 14

கடவுளிடம்
ஜாமீன் மனு
பாவ மன்னிப்பு !


**

மனிதனே
மனிதனை நினை
கடவுளின் வேண்டுதல் !

**

சாத்தனை பார்த்தும்
சிலையாய் நின்ற கடவுள்
திருப்பதில் ராஜபக்ஷே !!


**

வாழும்
ஒவ்வொரு நாளும் சாதனையே
ஈழத்தில் !

**

தினம் தினம்
தீபாவளி
யாழ் மண்ணில் !

**

Wednesday, May 29, 2013

சாயாவனம் - சா.கந்தசாமி

ஒரு படைப்பு காலம் கடந்து நிற்கும் என்பதற்கு இந்த படைப்பு ஒரு உதாரணம். சுமார் நாற்பது வ்ருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நாவல், இன்றைய காலக்கட்டத்தில் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது.

விஞ்ஞானிக்கு பிறகு நடக்கப்பதை கணித்து சொல்பவன் படைப்பாளியாக தான் இருக்க முடியும். விஞ்ஞானி கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கணித்து சொல்கிறான். ஆனால், ஒரு படைப்பாளி மனிதர்களை வைத்து எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடக்க கூடும் என்ற சாத்தியங்களை முன்பே கணித்து எழுதுகிறான். அந்த காலக்கட்டத்தில் வாசிக்கும் போது ஒரு கற்பனை கதையாய் தெரியலாம். ஆனால், அந்த சம்பவம் நிகழும் போது எப்படி இவர் முன்பே கணித்து இருக்கிறார் என்பது எல்லோரையும் வியக்க வைக்கும்.


'சாயாவனம்' - அந்த வகையில் சேர்ந்த நாவல்.

ஒரு மனிதன் வனத்தை அழித்த கதையை, நாற்பது ஐந்து  ருடங்கள் முன்பே எழுதப்பட்டிருக்கிறது. இன்று மனிதன் தனது சுயநலத்திற்காக எத்தனையோ மரங்களை, செடி கொடிகளை வெட்டி சாய்ப்பதற்கு நவீன கருவிகளை கண்டுபிடித்திருக்கிறான். ஆனால், நாற்பது ஐந்து வருடங்கள் முன்பு கோடாளி, அருவாள் மட்டுமே நம்பி வனத்தை அழிக்கும் காட்சியை கண் முன்னே கொண்டு வருகிறார்.

சக்கரை ஆலை தொடங்குவடற்காக சாயாவனத்தின் மரங்களை அழிக்கும் வேலையில் ஈடுப்படுகிறான் சிதம்பரம். அவனுக்கு உதவியாக அந்த ஊரில் தேவர் நட்பு கிடைக்கிறது. தனக்கு வேலை ஆக வேண்டும் என்பதற்காக தேவரின் அக்கா மகன் என்ற போர்வையில் சிதம்பரம் வருகிறான். தனது வனத்தில் வேலை செய்ய வெளியூரில் இருந்து ஆட்கள் கொண்டு வராமல், ஐயர் பண்ணையில் வேலை செய்பவர்களை வைத்து வேலையை முடிக்கிறான்.

முங்கில் மரங்களை வெட்ட காலத்தை குறைக்க, முங்கில் காட்டை எரிக்கிறான். அதற்கு, தேவரும் உதவி செய்கிறார். 'கறும்பு இந்த நிலத்தில் விளையாது' என்று ஆரம்பத்தில் ஒரு சிலர் சொல்லுவதை புரக்கணித்து, சக்கரை ஆலைக்காக வனம் அழிக்கப்படுகிறது. ஆனால், அந்த சக்கரை ஆலைக்காக கறும்பு கொண்டு வர நடை முறை சிக்களை சந்திக்கிறான். 

மனிதனுக்கும், மரத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் மனிதன் தான் வெல்கிறான். ஆனால், மரம் இறுதிவரை போராடி மனிதனை தோற்கடிக்க விரும்புகிறது. மரம் மனிதனை எளிதாக வெற்றிப் பெற செய்வதில்லை என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது.

சாகித்திய விருது பெற்ற சா.கந்தசாமி அவர்களின் 'முதல் நாவல்' என்பது குறிப்பிடதக்கது.


வாங்க....

சாயாவனம்

சா.கந்தசாமி
காலச்சுவடு  பதிப்பகம்
ரூ.150


Tuesday, May 28, 2013

ஹைக்கூ கவிதைகள் - 13

உன்னை வெற்றிக் கொள்ள
என் படைகள் திணறுதடி
சதுரங்கங்கத்தில் !

**

ஊழலை ஒழிக்க
மக்கள் தற்கொலை
முந்தைய ஆட்சிக்கு ஓட்டு !!

**

குடும்பங்கள்
காந்தி வழியில்
பிரச்சனைக்கு உண்ணாவிரதம் !!

**

சமூகத்தில்
அங்கிகரிக்கப்படாத விதவை
முதிர்கன்னி !

**

என்னோடு இருந்தும்
என்னை தனிமையாக்கி விடுகிறாய்
செல்போன் உரையாடலில் !

Friday, May 24, 2013

ஹைக்கூ கவிதைகள் - 12

கூடாங்குளம்
ஒரு அரசியல்வாதியை உருவாக்கியது
அப்துல் கலாம் !

**

கூடாங்குளம்
ஒரு தலைவனை உருவாக்கியது
உதயகுமார் !

**

இருபதாம் நூற்றாண்டின்
ராஜபக்சே
ஹிட்லர் ! 

**
இருப்பதியன்றாம் நூற்றாண்டின்
ஹிட்லர்
ராஜபக்சே !

**
இரண்டு நாடுகள் ஆடும்
டென்னிஸ் பந்து
அகதி !

**
இன்றைய தேவை
இஸ்லாம் மதத்தில்
பெரியார்.

**
பல புத்தகங்களை படித்த
மனநிறைவு
பெரியாரின் பேச்சு !

LinkWithin

Related Posts with Thumbnails