வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, August 11, 2017

House of the Disappeared ( 2013 - Thriller / Korean )

Direction : Lim Dae-woong 
Language : Korean 
Year : 2013 

வாழ்க்கை முடிந்தப்பிறகும், தள்ளாத வயதிலும் நாம் பாசம் வைத்த மனிதர்களை மறப்பதில்லை. அவர்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் அன்பும் குறைவதில்லை. அப்படி நாம் அன்பு செலுத்திய ஒருவர் என்னவானார் தெரியாமல் இருக்கும் போது அவர்களின் நலன் குறித்தும், இருப்பை குறித்தும் தெரிந்துக் கொள்ள வேண்டும் அக்கரை இருக்கும். அதுவே, ஒரு தாய் மகன் மீது இருக்கும் அன்பென்றால் மற்றவர்களை விட பத்து மடங்கு அக்கரையும், பரிதவிப்பும் இருக்கும். அப்படி தன் கண்முன்னால் மறைந்த மகனை ஆபத்து நிறைந்த அமானுஷ்ய வீட்டில் ஒரு தாயின் தேடல் தான் படத்தின் கதை.

ஆரம்பக் காட்சியில் மயக்கநிலையில் இருந்து ஒரு பெண் விழிக்கிறாள். சிதரப்பட்ட கண்ணாடி துண்டை எடுத்துக்கொண்டு வீட்டின் கீழ் பகுதிக்கு அவள் செல்ல, அங்கு தன் கணவன் கொலையானதை பார்க்கிறாள். அஞ்சியப்படி அவளது மகன் கதவருகே நிற்க, கொஞ்ச நேரத்தில் ஒரு உருவம் அவளது மகனை இழுத்துச் சென்று கதவை மூடிக்கொள்கிறது. தன் மகனை காப்பாற்ற அவள் கதவை திறக்கும் போது அங்கு பாறை மட்டுமே இருக்கிறது. 



கணவனை கொலை செய்த காரணத்திற்காக அவள் கைது செய்யப்படுகிறாள். 25 வருடங்கள் கழித்து கூன் விழுந்த கிழவியாக மீண்டும் அதே வீட்டுக்கு வருகிறாள். அமானுஷ்யம் நிறைந்த அந்த வீட்டில் தனது மகன் இன்னும் உயிருடன் இருக்கிறான் என்று நம்புகிறாள். அப்போது அவளிடம் பேட்டிக்காண்பதற்காக ஒரு பாதரியார் வர, அவரிடம் நடந்ததை கூறுகிறாள். இரவு நேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள் அவளை வெளியே போகச் சொல்லியும் வெளியேறாமல் தனது மகனை தேடுகிறாள். 

அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய விஷயங்களுக்கு காரணத்தை பாதரியார் கண்டுப்பிடிக்க, கடந்தகாலப் பாத்திரங்கள் நிகழ்காலப் பாத்திரங்கள் ஒன்று சேர்ந்து நம்மை குழப்பாமல் தெளிவான செண்டிமென்ட் காட்சியோடு படம் முடிகிறது. 

ஒரு வட்டத்தில் எது தொடக்கம், எது முடிவு என்று சொல்ல முடியாதோ அதுப்போலவே திரைக்கதை அமைந்திருக்கிறது. எந்த இடத்தில் எந்த பாத்திரங்கள் கொண்டு படம் தொடங்கியதோ அதே இடத்தில் படம் முடிகிறது. இது தான் படத்தின் தொடக்கக் காட்சி என்று காட்டப்பட்டாலும், கதையின் தொடக்கம் இது தான் என்று உங்களால் சொல்ல முடியாது. அப்படி அழகிய வட்டமான திரைக்கதை. 

பாதிப்படத்திற்கு மேல் வயதான பெண்மணி அந்த வீட்டில் தனது மகனை தேடுவதாக இருக்கிறது. எண்பது சதவீதம் ஒரே வீட்டை சுற்றி தான் படம் நகர்கிறது. பார்வையாளனுக்கு கொஞ்சம் கூட சலிப்பு தட்டவில்லை. ஒவ்வொரு காட்சியின் போது நமக்கு திகிலூட்டும் வகையிலாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இப்படி திகிலூட்டும் காட்சிகளோடு ஒரு செண்டிமெண்ட் கலந்தப்படத்தை பார்த்ததில்லை. 

இந்தப்படத்தை குறித்து இன்னும் எழுதினால் படத்தின் ஸ்வரஸ்யம் குறைந்துவிடும். கண்டிப்பாக பார்க்க வேண்டியப் படம்.

1 comment:

அருவி said...

விமர்சனம் அருமை எனக்கு படம் வேண்டும்

LinkWithin

Related Posts with Thumbnails