வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, June 15, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 8

ஒரு மாலை நேரத்தில் எலி ஒன்று மும்முரமாக எழுதிக் கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த நரி, “ என்ன செய்துக் கொண்டு இருக்கிறாய் ?” என்று கேட்டது.

அதற்கு எலி, ”என் கண்டுபிடிப்பின் செய்முறை விளக்கத்தை எழுதிக்கிறேன்” என்றது.

மிகவும் ஆச்சரியமடைந்த நரி, “அப்படி என்ன கண்டுபிடித்தாய் ?” என்று கேட்டது.

”எலி எப்படி நரியை சாப்பிடும் என்பதை பற்றியது.” என்று பதிலளித்தது.

அதைக் கேட்டதும் நரி சிரிக்கத் தொடங்கியது. ”நீ என்ன முட்டாளா ! யாராவது இதை நம்புவார்களா ?” என்றது.



எலி நரியின் சிரிப்பைப் பற்றி கவலைப்படவில்லை.

“நீ என்னுடன் வா ! நான் உனக்கு காட்டுகிறேன்.” என்று கூறி தன்னுடன் அழைத்துச் சென்றது. நரியும், எலியும் ஒரு மரத்தின் பின்னால் சென்றது. சிறிது நேரம் கழித்து எலி நரியின் எழும்போடு வெளியே வந்தது. அதன் பின் தன் எழுதும் வேலையை செய்யத் தொடங்கியது.

அப்போது நரியைப் போலவே, அங்கு வந்த ஓநாய் எலிடம் விசாரித்தது.

”எலி எப்படி ஓநாய்யை சாப்பிடும் என்பதை பற்றி எழுதுகிறேன்” என்றது.

”உனக்கு என்ன பைத்தியமா ? இதை யாரும் நம்ப மாட்டார்கள்.” என்று ஓநாய் கூறியது.

”என்னுடன் வா ! உனக்கு காட்டுகிறேன்.” என்று கூறி நரியை அழைத்துச் சென்றது போலவே ஓநாய்யையும் அழைத்து சென்றது.

ஓநாயும், எலியும் அதே மரத்தின் பின்னால் சென்றது. சற்று நேரம் கழித்து எலி ஓநாயின் எழும்போடு வெளியே வந்தது.

அடுத்ததாக அந்த வழியாக வந்த ஒரு கரடி எலியிடம் இதே கேள்வியை கேட்டது. எலி அந்த கரடியை மரத்தின் பின் அழைத்து சென்றது. அங்கே, மரத்தின் பின் இருக்கும் சிங்கத்திடம் கரடியை அறிமுகம் செய்து வைக்கிறது. சிங்கம் – எலி கூட்டனி கதை கரடிக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

 எலி வெளியே வரும் போது கரடியின் எழும்போடு வந்தது.

 Management நீதி : 

நாம் மற்றவர்கள் நம்பும் படி வேலை செய்வதை விட நம் மேலாளருக்கு பிடித்த மாதிரி வேலை செய்தால் வேலையில் உயர்வு நிச்சயம். அடுத்தவர் பலியாவதை நினைத்து வருந்தக் கூடாது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails