வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, January 6, 2015

மரண தண்டனை என்றொரு குற்றம் – ஆல்பெர் காம்யு

வாழ்க்கை துறந்தவன் தான் மரணத்தை பற்றி அதிகம் எழுதுவான். ஆனால், ஆல்பெர் காம்யு வாழ்க்கையை துறந்தவரில்லை. வாழும் ஆசை இருப்பவராகவே தெரிகிறது. தன்னைப் போல் மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் தான் மரணத்தை பற்றி எழுதியிருக்கிறார். ‘மரணத்தோடு’ இன்னொரு வார்த்தையான ‘தண்டனை’ சேர்த்தே எழுதியிருக்கிறார். 



மரண தண்டனை வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக இந்த வாசிக்க பரிந்துரைக்கிறேன். இந்த நூலுக்கு சரியான எதிர்வினை ஆற்றுபவரால் மட்டும் தான் மரண தண்டனையை ஆதரிக்க முடியும்.

மரண தண்டனை ஒருவன் திருந்துவதற்கான தண்டனை அல்ல. அதே சமயம் திருந்தாதவனுக்கு மரண தண்டனை ஒரு பொருட்டில்லை. ’மரண தண்டனை’ தவறு செய்ய நினைப்பவனுக்கு தவிறு செய்ய அஞ்சுருத்த தான் பயன்படுத்த நினைக்கிறார்கள். ஆனால், தவறு செய்ய மற்றவர்களை பயமுறுத்த வேண்டிய மரண தண்டனை ஏன் ரகசியமாக நடத்த வேண்டும் ? பொதுவில் வைத்து தூக்கிலிடும் போது தான் தவறு செய்ய மற்றவர்களுக்கு பயம் இருக்கும். 

பயமால் மட்டும் தான் தவறை தடுத்து நிறுத்துகிறது. மரணத்தால் மட்டுமே கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையில் ‘மரண தண்டனை’ இன்னும் பல நாடுகளில் இருக்கிறது. 

புத்தரைப் போல் மற்றவர்களை மன்னிக்கும் குணம் நமக்கில்லை. மிருகத்தின் குணங்கள் பாதி நம்மிடத்தில் இருப்பதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். அவர்களால் மரண தண்டனையை எதிர்க்க முடியாது. அதில் நானும் ஒருவன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். 

குற்றம் செய்தவர்களை மன்னிக்கும் மனதினை புரிந்துக் கொள்ள் அவசியம் இந்த நூலை வாசிக்க வேண்டும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails