வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, December 19, 2013

முசோலினி

இந்த வருடம் பதிப்பக வேலைகளுக்கு ஓய்வு கொடுத்ததில் என்னுடைய எழுத்துப்பணியில் அதிகம் கவனம் செலுத்த முடிந்தது. சென்னை 2014 புத்தகக் கண்காட்சிக்கு வரிசையாக என்னுடைய நூல் வர இருக்கிறது.

ஜனவரி 2013, உலக சினிமா ஓர் பார்வை வெளியானது. கௌதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது, சென்ற சென்னை புத்தகக் கண்காட்சியிலே வெளியாகி, பதிப்பாளருக்கு நஷ்டமாகாமல் விற்பனையானது.

ஆக்டோபர் 2013, பெரியார் ரசிகன் நாவல் வெளியானது. உதயகண்ணன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்த வருடத்தில் என்னுடைய மூன்றாவது புத்தகமாக முசோலினி வெளியாகியுள்ளது. இதனை சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் இன்னொரு பிரிவான வானவில் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.




நூலைப் பற்றிய விபரம்:

இத்தாலியில் அரசியல் இருந்தது, அதிகாரம் இருந்தது, ஆட்சி இருந்தது.  ஆனால், எதிர்க்கட்சிகள் கிடையாது. பத்திரிகைகள் கிடையாது. தேர்தல்கள் கிடையாது. அத்தனைக்கும் காரணம் ஒற்றை மனிதர்,

அதிகார வெறியும் யுத்தப் பசியும் கொண்ட ஒரு மனிதன் எத்தனை உயரத்துக்கு வளர்வான், எத்தனை ஆழத்துக்கு வீழ்வான் என்பதற்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியே முதன்மையான உதாரணம்.

பயந்துகொண்டு வியந்துகொண்டும் வாசிக்க வேண்டிய வாழ்க்கை !!

இணையத்தில் வாங்க...

மேலும் என்னுடைய மூன்று நூல் வர விருக்கிறது. அதைப் பற்றிய விபரங்களை பின்னர் அறிவிக்கிறேன்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

LinkWithin

Related Posts with Thumbnails