வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, August 13, 2013

பட்டு - அலெசாண்ட்ரோ பாரிக்கோ

உலகின் தலை சிறந்த நாவல். வாசித்திக்க வேண்டிய நாவல். மனிதனின் மகத்துவத்தை எடுத்துறைக்கும் கதை. என்று எந்த பெரிய வார்த்தைகள் மூலம் இந்த புத்தகத்தை அலங்கரிக்க போவதில்லை. மிக சிறந்த நாவல் பட்டியலிலும் இது இடம் பெற போவதில்லை. அதற்கு மாறாக உங்கள் ஆள் மனதை எதோ ஒன்று செய்யும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும்.



முன்னால் இராணுவ வீரனான ஹெர்வே ஜான்கர் தன் புதிய தொழிலுக்கான பட்டு வியாரத்துக்காக தன் மனைவி ஹெலனை விட்டு பிரிந்து உலகின் கடைசியான ஜப்பானுக்கு செல்கிறான். அங்கு, விலைமாதுவான பிளான்ச்சி என்ற பெண்ணை பார்க்கிறான். அவளை தொடாமலே அவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது. அவளிடம் இருந்து ஜப்பானிய மொழியில் ரகசியமான கடிதம் ஜான்கருக்கு கிடைக்கிறது. அந்த கடித்தத்தின் வார்த்தைகள் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. அந்த கடிதம் அவனை மீண்டும் கடல் கடந்து செல்ல வைக்கிறது. அந்த கடிதத்தின் அர்த்தம் புரிந்ததும், ஹெர்வே ஏற்பட்ட குற்றவுணர்வு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

ஆரம்பத்தில், யாரோ ஒருவரின் டைரிக் குறிப்புகளில் அனுமதிப் பெற்று கொண்டு நுழைந்த உணர்வு இருந்தது. ஹெர்வே பயணிக்கும் போது, நாம் அவனுடன் பயணிக்கவில்லை. ஆனால், அவனுள் பிளான்ச்சி மீது காதல்/காமம் மட்டும் நம்மிடம் தோன்றிவிடுகிறது. பிளான்ச்சி கடிதம் படிக்க படிக்க…. நாமும் ஹெர்வேவாக மாறிவிடுகிறோம். கடிதத்தின் ரகசியத்தை பிளான்ச்சி சொல்லும் ஹெர்வேவுக்கு இருக்கும் நமக்கும் வருகிறது.

சுகுமாரனின் மொழிபெயர்ப்பை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். குறிப்பாக கீழ் இருக்கும், வாசகங்கள் நம்மை பாதிப்புள்ளாக்குகிறது.

உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பறவைகளைக் கூண்டில் நிரப்பு. உனக்கு நல்லது ஏதாவது நடக்கும் நாளில் அவற்றைத் திறந்து விட்டு அவை பறந்து போவதை பார்.

என்னால் அவனை தடுக்க முடியாது. போக வேண்டும் என்று அவன் வற்புறுத்தும் போது என்னால் செய்யக்கூடியது அவன் திரும்பி வருவதற்கான இன்னொரு காரணத்தை அவனுக்குக் கொடுப்பதுதான்.

போர் விலையுயர்ந்த விளையாட்டு. உங்களுக்கு நான் தேவை. எனக்கும் நீங்கள் தேவை. 

ஏதோ ஒன்றைத் தீவிரமாக விரும்பி அதற்காக உயிரை விடுவதை நான் ஒரு போதும் அனுபவித்ததில்லை

நம் அருகில் இருப்பவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்பு, காதலை அவர்கள் மரணத்திற்கு பிறகு தெரிந்துக் கொள்ளும் வலியைத் தான் இந்த கதை உணர்த்துகிறது.

இந்நாவல் பிரெஞ்சு – கனடிய இயக்குநரான ஃப்ரான்ஸ்வா கியார்த் இயக்கத்தில் ‘SILK’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.


நூல் வாங்க 

விலை. ரூ. 95. பக். 120
காலச்சுவடு பதிப்பகம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails