வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, October 7, 2008

இந்திரா நூயி – இந்தியர்களை நிமிர வைத்த பெண்

'இந்திரா நூயி' பெயரை கேட்டால் எதோ வெறு மாநிலத்தில் பிறந்தவர் போல் தெரியும். இவர் 100% தமிழச்சி. இவரின் முழுப் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. 1955 ஆம் ஆண்டு சிங்கார சென்னையில் பிறந்தவர். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் 'B.Sc' படிப்பும், 'IIM'- கல்கத்தாவில் MBA படிப்பும், யெல் பல்கலைக்கழகத்தில் 'Public & Private Management' முதுநிலை பட்டம் பெற்றவர். 1976ல் 'Beardsell' டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின் ‘Asea Brown Boveri, Motorala, Bostan Consulting Group, Johnson & Johnson' என்று பல நிறுவங்களில் பணி புரிந்துள்ளார்.



பெப்ஸி நிறுவனத்தில் 1994ல் Vice-President, Strategic Planning & Development' ஆக சேர்ந்தார். தன் கடின உழைப்பால், இன்று பெப்ஸி நிறுவனத்தில் 'Chairman & CEO’ வாக பணிபுரிந்து வருகிறார். ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் மேல் சம்பாதிக்கிறார். உலகில் பெப்ஸி நிறுவனம் இரண்டாம் இடத்தில் வர மிக முக்கிய பங்கு வகித்தவர். பெப்ஸி என்றவுடன் குளிர்சாதனம் பொருள் மட்டும் தயாரிக்கும் நிறுவனம் மட்டுமில்லை. உடல் ஆரோக்கியத்திற்காக கொழுப்பு சத்து குறைவுள்ள எண்ணெய், உப்பு போன்ற பொருட்களை கூட தயாரிக்கிறார்கள்.

இந்திரா நூயி யார் என்று தெரியாதவர்களுக்கு இது சிறு முன்னுரை மட்டுமே ( எனக்கும் பெரிய அளவில் அவரை பற்றி ஒன்றும் தெரியாது ) ! நான் சொல்ல வந்த விஷயமே வேறு !!
சமிபத்தில் பிஸ்னஸ் வோல்ட் இதழில் அவர் அளித்த பேட்டியை படித்தேன். அவர் பேட்டி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு புறம், பெப்ஸி குளிர்பானத்தை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டம் இருக்க, பெப்ஸி குளிர்பான விற்பனையில் 'இந்தியா' முதல் ஐந்தாம் இடத்தில் உள்ளது. சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

2015ல் பெப்ஸி நிறுவனம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவர் 2015ல் தன் நிறுவனம் அடைய போகும் லாபத்தை பற்றி பேசவில்லை. தன் குளிர்பான தயாரிப்பில் 20 சதவிகிதம் தண்ணீர், 20 சதவிகிதம் எண்ணெய், 25 சதவிகிதம் பெட்ரோல் குறைக்கப்படும் என்றார். அது மட்டுமில்லாமல். 25 சதவிகிதம் பெப்ஸி பாட்டில்களை ரீஸைக்கில் (Re-cycle) செய்து மீண்டும் பயன்படுத்துவதாக கூறினார்.
இப்போது அமெரிக்காவில் உள்ள பொருளாதார வீழ்ச்சியை பற்றி கேட்ட போது தங்கள் நிறுவனத்துக்கும் ஒரளவு பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்டார். உலகில் பல இடங்களில் தங்கள் நிறுவனங்கள் இருப்பதால் ஒரு இடத்தில் இறங்குமுகமாக இருந்தாலும், மற்றொரு இடத்தில் ஏறுமுகமாக இருப்பதை கூறினார். உலகளவில் பெப்ஸி விற்பனை இந்தியா அதிக உள்ளது என்பதை தெரிவித்தார். இந்தியர்கள் Purchase Capacity மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளதையும் கூறினார்.

100 % வியாபாரியாக இல்லாமல் சுற்றுப்புறத்தை பற்றி நினைத்து செயல்ப்படுவதும், இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் எளிமையாக இருப்பதும், அதிக சம்பளம் வாங்கும் CEO என்ற கர்வமில்லாமல் இருக்கிறார். உலகளவில் இந்தியர்களை தலை நிமிர வைத்த பெண்களில் இவருக்கு தனி இடம் கண்டிப்பாக உண்டு.

1 comment:

சரவணகுமரன் said...

அவருடைய நிறுவனம் விமர்சனத்துக்கு உட்பட்டதாக இருந்தாலும், அவரின் தனிப்பட்ட மேலாண்மை திறமை பாராட்டுக்குரியது.

அவர் பற்றிய தகவல்களுக்கு நன்றி..

LinkWithin

Related Posts with Thumbnails