வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, February 10, 2020

கலாவிக் ( அறிவியல் புனைவு)

சுஜாதா பிறகு தமிழில் அறிவியல் புனைவு இவ்வளவு ஜாலியாக யாரும் எழுதியில்லை.

இரண்டு மணி நேரத்தில் வாசித்து விடலாம்.ஆகஸ்ட், 2020 புவி கிரகத்தில் ஐந்து பேர் கொண்ட குழு அண்டார்டிக்காவில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். 2368 கி.பி ஆண்டில் கலாவிக் என்ற கிரகத்தில் இயந்திர மனிதனை டாக்டர் நீனா என்ற பெண் ஆராய்ச்சி செய்கிறாள். புவியில் இருக்கும் விஞ்ஞானியில் நினைவுகள் கலாவிக் கிரகத்தில் இருக்கும் இயந்திர மனிதனுக்கு வருகிறது. இயந்திர மனிதனுக்கு இருக்கும் நினைவுக்குள் புவி கிரகத்தில் இருக்கும் விஞ்ஞானிக்கு வருகிறது. இரண்டு நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் நடக்கிறது.

எதிர்காலத்தில் இருந்த ஒருவனுடைய நினைவு எப்படி நிகழ்காலத்தில் வாழும் மனிதனுக்கு வந்தது? நிகழ்காலத்தில் வாழும் மனிதனின் நினைவு எப்படி எதிர்காலத்தில் வாழும் இயந்திர மனிதனுக்கு வந்தது? டாக்டர் நீனா, விஞ்ஞானிகள் எல்லோரும் குழம்புகிறார்கள். அதன்பிறகு என்ன என்பதை நாவலை வாசிக்கவும்.

இலக்கிய நாவல், வரலாற்று நாவல், குடும்ப பெண்கள் நாவல் என்று அதற்காக தனி வாசகர் கூட்டம் இருக்கிறது. ஆனால், அறிவியல் புனைவுக்கு வாசகர்கள் இருந்தாலும் அவர்களுக்கான படைப்புகள் தொடர்ந்து வராமல் இருப்பது துரதிஷ்டம்தான். அந்த துரதிஷ்டத்தை போக்க “கலாவிக்” சரியான நாவலாக இருக்கும்.

நாவலின் குறை என்று சொன்னால் புத்தகத்திற்கு பயன்படுத்திய Fontம், பக்க வடிவமைப்பும் தான் சொல்ல வேண்டும். மிகவும் சுமார்.

ணையத்தில் வாங்க...

Wednesday, November 28, 2018

We Can Books இரண்டாம் ஆண்டில்

நாளை (நவம்பர் 29) We Can Books முதல் வருடத்தை நிறைவு செய்து இரண்டம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

ஒரு அலுவலகத்தில் பணிப்புரிந்து கொண்டு இதையெல்லாம் செய்கிறோமே என்ற சிறு உறுத்தல். ஒரே சமயத்தில் இரண்டு இன்னிங்ஸ் ஆடுபவன் மீது இந்த சமூகம் எப்போதும் பொறாமையை கண்ணோட்டத்தோடு பார்க்கும். இதையெல்லாம் மீறி புத்தகக் கடை எப்படி நடத்தப்போகிறோம் என்ற அச்சம் உள்ளூர இருந்தது. 





புத்தகக் கடை தொடங்கலாம் என்று யோசனை வரும் போது பலர் கூறியது கூட்டம் நடத்துவதற்கான இடமாக இருக்க வேண்டும். நூல் வெளியிட்டு விழா, விமர்சனக் கூட்டம் நடத்துங்கள். பிரபலங்களை அழையுங்கள். இன்று பல புத்தகக் கடை அப்படி தான் பிரபலமாகியிருக்கிறது. அப்ப்பப்பா.. எத்தனை யோசனைகள். அறிவுரைகள். 

முதலில் என்னால் புத்தகக் கடை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. மாத சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட கடைக்கு செலவு செய்யக் கூடாது என்று எனக்கு நானே வைத்துகொண்ட நிபந்தனை. முதலில் என் மேல் எனக்கு இருக்கும் சந்தேகத்தை தன்னம்பிக்கையாக மாற்ற வேண்டும். இரண்டாவது, எனக்கு நான் வைத்துகொண்ட நிபந்தனையை நான் மீறக் கூடாது. 

புத்தகக் கடை என்றால் வாடிக்கையாளர்கள் வர வேண்டும். அதுவும் தி.நகரில் கடை. வாடகை அதிகம். உதவிக்கு வேலை ஆள் ஒருவர். அவருக்கு சம்பளம். அதுவும் புத்தகத்துறையில் ஆர்வமானவராக இருக்க வேண்டும். எப்படியும் மாதம் ரூ.35000-40000 வரை செலவு இருக்கும். 

குகன். ஒரு தனி மனிதன். எந்த இலக்கிய அமைப்பின் ஆதரவில்லை. அரசியல் பின்னனி கிடையாது. பூர்வீக சொத்து என்று எதுவுமில்லை. இங்கிருந்து வந்தவன் என்று என்னை அடையாளம் காட்ட முடியாது. 

”ஒரு இலக்கிய அமைப்போடு சேர்ந்து செயல்படுங்கள். அவர்கள் மூலம் பல வாடிக்கையாளர்கள் வருவார்கள்” என்றார்கள். அது தற்காலிகமாக வருமானத்தை கொடுக்கும். ஆனால், நான் செல்லவிருக்கும் தூரத்திற்கு பயணத்திற்கு ஒரு இலக்கிய அமைப்பு ஆதரவு மட்டும் போதாது. அப்படி என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் விரும்பவில்லை. 

 பலர் கொடுத்த யோசனைகள், அறிவுரைகள் ஒதுக்கிவிட்டு எனக்கு தோன்றிய ஒரு யோசனை தான் “Book Distributors”. 

பெரிய பதிப்பகங்களில் புத்தகங்களை மொத்தமாக அதிக கழிவில் வாங்கி புத்தக விற்பனையாளர்களுக்கு விற்பது. எதிர்காலத்தில் பதிப்பகங்களை விட சொந்தமாக நூல் வெளியிடும் எழுத்தாளர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அவர்களால் எல்லாக் கடைகளுக்கும் புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாது. புத்தக விற்பனைக்கென்று ஒரு அலுவலகம் வைத்துகொள்ள முடியாது. அப்படி செய்ய முயற்சித்தால் அந்த எழுத்தாளரின் எழுதும் நேரத்தை பாதிக்கும். இந்த விஷயத்தை மனதில் வைத்து கொண்டு தொடங்கப்பட்டது தான் “We Can Books”. 

தற்போது வம்சி புக்ஸ், எதிர் வெளியீடு, மஞ்சுல், வளரி வெளியீடு என்று நான்கு பதிப்பக நூல்களை புத்தக விற்பனையாளர்களுக்கு (Cash & Carry Basisல்) கொடுத்து வருகிறோம். இன்னும் சில எழுத்தாளர்களில் புத்தகங்களை விநியோகம் செய்கிறோம். 

புத்தக விநியோகக்கடை என்பதால் வாசகர்கள் நேரடியாக வந்தால், புத்தகம் கொடுக்க மாட்டோம் என்பதில்லை. எங்களுக்கு புத்தக விற்பனையாளர்கள் எந்த அளவுக்கு தேவையோ, வாசகர்களில் நேரடி ஆதரவு தேவை. 

இரண்டாம் வருடத்தில் நுழைவது வெற்றி அல்ல… வெற்றியை நோக்கியப் பயணம். 

முகவரி : 
We Can Books 
57, Ground floor, PMG Complex, 
Near T.Nagar Bus Terminus 
T.Nagar, Chennai - 600017 
www.wecanshopping.com 
Ph : 9940448599, 044 - 4286 7570

Monday, October 9, 2017

நீயும் பொம்மை நானும் பொம்மை – ராஜேஷ் குமார்

முதல் இரண்டு அத்தியாயம் படித்ததும் ராஜேஷ் குமார் நாவல் தவறாக நினைத்து, இந்திரா சௌந்தரராஜன் நாவல் படிக்கிறோமோ என்ற சந்தேகம் வந்து அட்டைப்படத்தை திரும்பி பார்த்தேன். அத்தியாயம் செல்ல செல்ல எழுத்தாளர் பெயர் தவறாக அச்சடிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் கூட வந்தது. காரணம், கதை நடக்கும் களம் உச்சிமலைச் சித்தர் குறித்தக் கதை. நாவல் முடியும் போது அக்மார்க் ராஜேஷ் குமார் நாவலாக முடிந்தது. 



இறந்தப் பெண்ணின் உயிரை மீண்டும் கொண்டு வரும் சித்தர். அதை செய்தியாக வெளிகொண்டு வர நினைக்கும் பத்திரிகையாளர்கள். அவரை கொள்ள துடிக்கும் தீவிரவாதிகள் என்று கதை முழுக்க உச்சிமலை சுத்தியே நடக்கிறது. கடைசியில் எல்லா கேள்விக்கும் விடைக்கிடைக்கிறது. 

Low budget thriller படம் எடுக்க நினைக்கும் இளம் இயக்குனர்கள் ராஜேஷ்குமார் அவர்களிடம் அனுமதிப் பெற்று இதை திரைக்கதையாக்கலாம். கோரியன், ஹாலிவுட் படங்களில் இருக்கும் திரில் படங்களை சுடுவதை விட நம்மவூர் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் நாவல்களை உரிமைப் பெற்று திரைப்படமாக்கினால் Minimum Guanertee வெற்றிக்கிடைக்கும். 

உதாரணத்திற்கு, The Client என்ற கோரியன் படம். ஆரம்பத்தில் நடக்கும் கொலையும், அதை தொடர்பான வழக்கும் தான் கதை. இறுதியில் வரும் க்ளைமாக்ஸ் காட்சி நல்ல ட்விஸ்டாக இருக்கும். ஆனால், ட்விஸ்டை ராஜேஷ் குமார் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு பழக்கமான ஒன்று. 

திரைப்படங்களுக்கு நல்ல எழுத்தாளர் இல்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது பல இயக்குனர் நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். 

நம்மவூருக்கான கதை நிறைய எழுதப்பட்டிருக்கிறது. எழுத்தாளருக்கு Credit கொடுத்து திரைப்படமாக்கும் நல்ல இயக்குனர்கள் இல்லை என்பது தான் உண்மை. 

**
நீயும் பொம்மை நானும் பொம்மை
– ராஜேஷ் குமார்
- Rs.70

இணையத்தில் வாங்க....

Tuesday, October 3, 2017

வெட்டாட்டம் - ஷான்

சுஜாதாவின் அத்மா ஷான்னின் பேனா வழிப்புகுந்து எழுத வைத்திருக்கிறது. உண்மையில் சுஜாதா உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு நாவலை தொடராக எழுதியிருப்பார். வெட்டாட்டம் எழுதிய ஷானை ஆயிரம் முறை பாராட்டலாம் !! 

செம்பரப்பாக்கம், கூவத்தூர் ரெஸார்ட், மருத்துவமனையில் முதல்வர் என்று அனைத்து சமக்கால சம்பவ அரசியல் சம்பவங்களை புனைவுகளாக கோர்க்கப்பட்டு எழுதப்பட்ட த்ரில்லர் நாவல். 

ஆரம்பத்தில் நாவலின் ஒன் – லைன் பற்றி கேள்விப்படும் போது தெலுங்குபடம் Leader தான் நினைவுக்கு வந்தது. ( ஜகன் மோகன் ரெட்டி கொஞ்சம், ராகுல் காந்தி கொஞ்சம் மனதில் வைத்து எடுக்கப்பட்ட படம் அது). ஏறக்குறைய சில அத்தியாயங்கள் அந்தப்படத்தில் வரும் காட்சியை நினைவுப்படுத்தினாலும், பல விஷயத்தில் நாவலும், படமும் வேறுப்படுகிறது. 



பல முறை விளையாடிய தாயக்கட்டை விளையாட்டு, வெட்ட வெட்ட தாயக்கட்டை உருட்ட இன்னொரு வாய்ப்பு கிடைக்கிறது. எதிரிகளின் காய்களை வீழ்த்தும் போது ஒரு சந்தோஷம் பிறக்கிறது. எதிரிகள் முன்பு நமது காய்களை பழுக்க வைப்பதில் சுகம். 

நாம் வெற்றிப்பெற்றுவிட்டோம் என்பதை விட எதிரியை வீழ்த்திவிட்டோம் என்ற பூறிப்பு தான் தாயக்கட்டை விளையாட்டின் எல்லோருக்கும் பிடித்தமான விஷயம். அந்த அளவுக்கான சந்தோஷம் நாவலை முடிக்கும் போது வருகிறது. 

இப்படி ஒவ்வொரு அத்தியாய தொடக்கத்திலும் தாயக்கட்டை ஆட்டத்தின் விதிமுறைகள் கூறப்படுகிறது. அந்த விதிமுறையும், அந்த அத்தியாயத்திற்கும் தொடர்புடையதாக இருக்கிறது. அரசியல் சதுரங்க விளையாட்டில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் என்ன செய்யப்போகிறது, பிரச்சனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று விறுவிறுப்பாக செல்கிறது. மொத்தம் ஐந்து மணி நேரத்தில் வேகமாக படித்து முடிக்கலாம். ஒரு திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை இதில் இருக்கிறது. ஆனால், தற்போதிய ஆட்சி கலைக்கப்பட்டால் மட்டுமே இந்த நாவல் திரைப்படமாக மாறுவது சாத்தியம். 

ஷான்னுக்கு ஒரு வேண்டுக்கோள், 

தயவு செய்து தீவிர இலக்கியம் பக்கம் வந்துவிட வேண்டாம். அப்படி ஒரு ஆசை இருந்தால் மறந்துவிடுங்கள். தீவிர இலக்கிய எழுத்தை மேற்கொள்ள பலர் இருக்கிறார்கள். ஆனால், இதுப் போன்ற Pulf-Fiction எழுத ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள். 

**
வெட்டாட்டம் 
- ஷான்  
- யாவரும் பதிப்பகம்
- Rs.240
 

Wednesday, July 5, 2017

அஜ்வா – சரவணன் சந்திரன்

நபிகள் நாயகம் உண்ட பழத்தின் பெயரான ‘அஜ்வா’ பெயர் தாங்கி நாவல் பழமாக வந்திருக்கிறது. 

சென்னை புத்தகக் கண்காட்சியில் பல வாசக நண்பர்களிடம் ஜீவ கரிகாலன் “அஜ்வா” நாவலை பற்றி சொல்லும் போது எனக்கும் அந்த நாவலை படிக்க வேண்டும் என்பது போல் இருந்தது. ஒரு இனிய மாலைப் பொழுதில் ‘அஜ்வா’ வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. 


போதை மருந்து உட்கொள்பவனும், அவனை சுற்றி நடக்கும் உலகமான கதையில் நம்மை அறியாமல் போதை மருந்து மீது விருப்பத்தை வளர வைக்கிறார். போதை மருந்துக்கும், குடிப் போதைக்கும் கொடுக்கும் ஒப்பீடு ரசிக்க முடிகிறது. ஆனால், கருத்தளவில் என்னால் ஏற்க முடியவில்லை. 

”எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாக பெருதன்மையுடன் நடந்துகொள்வதும் பழிவாங்கும் உணர்ச்சிதான்.” இப்படி பல இடங்களில் பாத்திரங்கள் பேசும் வசனம் போதை மருந்தை உண்பதற்கான பல நியாயங்களை கற்பிக்கிறது. 

குறிப்பாக 16வது அத்தியாயத்தில் கிண்டி சமாதியில் போதை மாஃபியா எப்படி இயங்குகிறது சொல்கிறார். 

80களில் சிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை” குடிப்போதையில் பாதிக்கப்பட்ட தியாகு பாத்திரத்தை பேசியதோ, போதை மருந்தால் பாதிக்கப்பட்ட இளைஞனின் வாழ்க்கையை பேசுவதில் “அஜ்வா” முக்கிய நாவலாக திகழ்கிறது. 

வாழ்த்துகள் சரவணன் சந்திரன் !! 

இணையத்தில் வாங்க...

Friday, June 2, 2017

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ஆண்டில் எழுதப்பட்டது என்று சரியான குறிப்புகள் இல்லை. 18ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

பல நூற்றாண்டு முன் இலக்கியமல்லாத ஒரு புத்தகம் இவ்வளவு முக்கியத்துவம் பெரும் காரணம், இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையை எப்படி சீர்குழைக்க வேண்டும் என்று பிரிட்டன் பேரரசு இரகசியமாக சேகரித்த முக்கியமான ஆவணமாக இருப்பதால் தான். 



18ஆம் நூற்றாண்டில் ஓட்டோமன் பேரரசை சீர்குழைக்க இஸ்லாமிய வேடத்தில் பிரிட்டிஷ் உளவாளியான ஆலிவர் ஹெம்பர் ஊடூருவினார். அங்கு அவர் மேற்கொண்ட அனைத்து வழிமுறைகளை தனது நினைவுக்குறிப்புகளாக இந்த நூலில் எழுதியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், இஸ்லாமிய நாடுகளை தகர்க்க பிரிட்டன் அரசு ஆவணப்படுத்தியிருக்கும் ரகசிய அறிக்கையும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அந்த அறிக்கையில் இஸ்லாமிய தேசங்களை தகர்ப்பதற்கு ஒரு நூற்றாண்டு காலம் தேவைப்பட்டாலும், தங்களுக்கு அடுத்து வரும் பிரிட்டன் அதிகாரிகளுக்கும், பேரரசுக்கும் உதவியாக இருக்கும் என்பது தான் அந்த உளவாளியின் நோக்கம். ஏற்கக்குறைய அவர்களின் நோக்கப்படி சில இஸ்லாமிய தேசங்களை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். பாகிஸ்தான் அமெரிக்க அனுதாபியாக இருக்கிறது. ஓட்டோமன் சாம்ராஜ்ஜியத்தில் இஸ்ரேல் தேசம். இன்னும் சில இஸ்லாமிய தேசங்கள் அமெரிக்காவுக்கு அஞ்சி அமைதியாக இருக்கிறது. 

பிரிட்டனுக்கு பதிலாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இஸ்லாமிய தேசங்களை தகர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது. இதில் பிரிட்டன் தயாரித்த இரகசிய அட்டவனையில் எந்த மாற்றம் செய்யாமல் திட்டம் போட்டு செயல்படுத்திவருகிறார்கள். 

இஸ்லாமிய தேசம் ஒன்றுப்படாமல் இருப்பதற்கு ஏகாப்பத்திய நாடுகளில் இரகசிய அறிக்கையாகவே இந்தப் புத்தகம் இருக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய நூல்… !!! 


***
பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் 
- ஆலிவர் ஹெம்பர் ( தமிழில் : நாஞ்சிலான்)
- அடையாளம் வெளியீடு
 - ரூ.80

இணையத்தில் வாங்க...

Friday, March 31, 2017

சாப்பாட்டு இதிகாசம் : மதுரை பாண்டியன் மெஸ்

அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் அ.தி.மு.க தலைமை செயலகம் அருகில் இருக்கிறது மதுரை பாண்டியன் மெஸ்


 
மதியம் சாப்பாடு ரூ.90 மட்டும் தான். அசைவ உணவகத்தில் வெறும் சாப்பாடு மட்டும் எப்படி சாப்பாடுவது ? கொஞ்சம் சிக்கன், மட்டன் சேர்த்து கொண்டால் தானே முழுமையான சாப்பாட்டாக இருக்கும். 

இங்கு ஒரு விஷயம். அன்று சனிக்கிழமை. Officialy நான் Non-Veg சாப்பிடவதில்லை. இருந்தாலும், சைவ சாப்பாடு சாப்பிடவா இங்கு வந்தோம். மட்டன் சுக்கா, மட்டன் கோலா உருண்டை சொன்னேன். சாப்பிடும் போது எதோ குறையுதே என்று தோன்றியது. ஆமாம், ஒரு ஆம்லேட் ப்ளிஸ். 

இருவர் சாப்பிடுவதை நான் ஒருவன் சாப்பிடுகிறேன் என்பதை பக்கத்தில் இருப்பவரின் ரியாக்‌ஷேனில் தெரிந்தது. இருந்தாலும், கவலையில்லாமல் ஒரு கட்டுகட்டினேன். மொத்தம் பில் ரூ.335 மட்டும் தான். 

ராயப்பேட்டை வழியாக செல்பவர்கள் ஒரு முறை மதுரை பாண்டியன் மெஸ் சென்று சுவைத்துப் பாருங்கள்.

Thursday, March 30, 2017

கேளிக்கை இரவுகள் - நக்ஷத்ரா

சென்னையின் இரவு வாழ்க்கையைப் பற்றிய புத்தகம். குடி, செக்ஸ் பற்றி தான் அதிகம் பேசுகிறது. தலைவர் சாரு பேசாததா என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு பெண் இவ்வளவு வெளிப்படையாக சொல்லும் போது இந்தப் புத்தகம் அதிக முக்கியத்துவம் பெருகிறது. 

தான் குடிப்பதாக இருந்தால், தனது பார்டனை குடிக்கக்கூடாது என்று சொல்லிவிடுவாராம். செக்ஸின் போது இருவருமே போதையில் இருந்தால் முழுமையான உறவு பெற முடியாது என்பதை கூறுகிறார். ( நான் உடன்படாத கருத்து. செக்ஸ் இருவருமே சுயநினைவில் அனுபவிக்க வேண்டிய ஒன்று. ஒருவர் போதையில் சுயநினைவில்லாமல் இருக்கும் போது செக்ஸ் என்பது கற்பழிப்புக்கு சமம்.) 



இப்படி நூல் முழுக்க கருத்தளவில் நீங்கள் மறுக்கும் பகுதிகள் ஏராளமாக இருக்கிறது. ஆனால், ஒரு பெண் குடியின் ரசனையோடு எழுதியதால் எனக்கு இந்தப் புத்தகம் பிடித்திருந்தது. வாசிக்கும் போது இரண்டு பேக் அடிக்க வேண்டும் என்று கூட தோன்றியது. 

 ஒரு முறை ஜெயமோகன் தமிழை ஆங்கிலத்தில் எழுதலாம் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பியது நினைவில் இருக்கலாம். ‘கேளிக்கை இரவுகள்’ ஆங்கிலத்தை தமிழில் எழுதிய நூல். அதிகமான ஆங்கில வார்த்தை தவிர்த்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். முகம் தெரியாத ’ நக்ஷத்ரா’ வுக்கு என் வாழ்த்துகள். 

**

கேளிக்கை இரவுகள்
- நக்ஷத்ரா
- Rs.50
- மின்னம்பலம் வெளியீடு

நூலை இணையத்தில் வாங்க....

Wednesday, March 22, 2017

இளையராஜாவும், காப்புரிமையும்

ஒரு பாடலுக்கு உயிர் கொடுப்பதில் இருவரின் முக்கிய பங்கு இருக்கிறது. ஒருவர் இசையமைப்பாளர். மற்றொருவர் பாடலாசிரியர். 

இருவரும் தான் ஒரு பாடலுக்கான Creators. 

அந்த வகையில் ‘பாடகர்’ என்பவர் இசையமைப்பாளர் சொன்னதை செய்ய வேண்டும். பாடலாசிரியர் எழுதிய வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும். அதில் பாடகர் தனது Creative தன்மை அவர்களின் அனுமதியில்லாமல் உள்ளே புகுத்தமுடியாது. அவருடைய Creative மூளைக்கு வேலை கிடையாது. 

தயாரிப்பாளர், இயக்குநர் இசையமைப்பாளரின் இசை பயன்படுத்துவதற்கு தான் சம்பளம் கொடுக்கிறார். அவரது கற்பனையையோ, படைப்பையோ முழுமையாக வாங்கியவர்கள் என்று கருதமுடியாது. 

படத்தின் சொந்தக்காரர்களாக அவர்கள் பாடலின் இசையை ஏற்கலாம், ஏற்காமல் போகலாம், படத்தில் இருந்து நீக்கலாம். ஆனால், தங்களுக்கு தான் சொந்தம் என்று தயாரிப்பாளர், இயக்குநர் உரிமை கேட்க முடியாது. இளையராஜா தனது பாடலுக்கு சொந்தம் கொண்டாடுவதும் அதற்கான ராயல்டி கேட்பது தவறில்லை. அது படைப்பாளிக்கான உரிமை. 

ஆனால், அதில் பாடலாசிரியருக்கும் பங்கு இருக்கிறது என்பதை அவரால் மறுக்கமுடியாது. பெரும்பாலான இளையராஜா இசையில் பாடல் எழுதியது அவரது சகோதரன் கங்கை அமரனாக இருந்தாலும், வைரமுத்து, இன்னும் சில பாடலாசிரியர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள். 

தனக்கு கிடைக்கும் ராயல்டியை இளையராஜா உரிய முறையில் பாடலாசிரியர்களுக்கு கொடுக்க வேண்டும். கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

Sunday, March 5, 2017

Dietin Vegetarian Restaurant

எப்போதும் சமோசா, பஜ்ஜி என்று ஒரே மாதிரியான சிற்றுண்டி உண்கிறோம். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று டயட்-இன் (Dietin Vegetarian Restaurant ) உணவகத்திற்கு நுழைந்தேன். 


சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு முறை. மெனுக்காடு எடுத்ததுமே என் கண்ணில் பட்டது. வாழைப்பூ வடை தான். 

ஒரு ப்ளேட் சொன்னேன். நாம் ஆர்டர் சொல்லும் போது தான் செய்ய தொடங்குவார்கள். அதனால் கொஞ்சம் காத்திருப்பு அவசியம்.அது வரை கடைக்காரரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில் வாழைப்பூ வடை (Nos.4) வந்தது. வாழைப்பூவுக்கான கசப்பு மிக குறைவாகவும், வடை சாப்பிட்ட திருப்தியும் இருந்தது. 

 
 
திடீர் என்று இரவு டிபனை இங்கையே முடித்துவிட்டால் என்ன என்று தோன்ற, ஒரு செட் அடை சொல்லலாம் என்று கூறினேன். நவதானிய அடை. 

மொத்தம் ரூ.140ல் அன்றைய இரவு டிபன் முடிந்தது. 


ஒரு Changeக்கு வித்தியாசமான உணவு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு முறை இங்கு முயற்சி செய்துபார்க்கலாம். பாரம்பரிய உணவு, இயற்கையான உணவு விரும்புபவர்கள் அவசியம் செல்ல வேண்டிய இடம் டயட்-இன் என்று சொல்வேன். 

இடம் : 
7/12, West Sivan Koil St, 
Vadapalani, chennai - 600026

Saturday, March 4, 2017

இரண்டு நகைச்சுவை அனுபவம்

இன்று ஒரு பா.ஜ.க நண்பரிடம், “என்னங்க உங்க ஆளு இல. கணேசன் காஷ்மீர தியாகம் பண்ணலாம் சொல்லாரு” என்றேன். 

அவர் கோபமாக, “யோவ். அவரு எப்பய்யா அப்படி சொன்னாரு...?” 

”ஆமாங்க... ’ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஒரு மாநிலத்தை தியாகம் செய்யலாம்’ சொன்னாரே!” 

“அவரு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக சொன்னாரு... நீங்க இல்லாத கதை ஏன் கட்டுறீங்க...?”

 “மாநிலத்த தியாகம் பண்ணனும் முடிவு பண்ணிட்டீங்க... அது தமிழ்நாடா இருந்தா என்ன, காஷ்மீரா இருந்தா என்ன...? ” 

“உங்கள மாதிரி ஆளுங்க தான், கருத்த திசைத்திருப்பி பிரச்சனைய உருவாக்குறீங்க...” 

“ஏன் கருத்த திசைத்திருப்புற Copyrights முழுக்க உங்ககிட்ட மட்டும் தான் இருக்கா ? “ என்றேன். 

அதற்கு மேல் அவர் பேசவில்லை. அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்.

**

எங்கள் அலுவலகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவன், “உங்க ஊரில சாமியார்களுக்கு இவ்வளவு மரியாதையா? பிரதமர் எல்லாம் வந்து பார்க்குறாங்க.” என்று தனது சக நண்பரிடம் கேட்டிருக்கிறார். 

“அப்படியெல்லாம் இல்ல. அந்த சாமியார் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் இருக்கு. அவரு அவ்வளவு பெரிய ஆளு இல்ல” என்று அந்த நண்பர் பதிலளித்திருக்கிறார்.

“அப்போது எதுக்காக கவர்மெண்ட் பஸ்ல அந்த சாமியார் படம் மாட்டியிருக்கு” என்று வட மாநிலத்தை சேர்ந்தவன் கேட்க, அந்த நண்பர் அதிர்ந்துவிட்டார். 

”எதோ நோட்டீஸ், விளம்பரம் ஒட்டியிருக்கும். நீ தப்பா புரிஞ்சிருப்ப...” என்று சொல்ல, அவன் ஆணித்தரமாக எல்லா பஸ்ஸிலும் அந்த சாமியார் போட்டோ பார்த்திருப்பதாகக் கூறினான். 

ஒரு நிமிடம் யோசித்த நண்பர் Googleல் ஒரு படத்தை தேடிக் காட்ட “இவர் படமா பாரு?” என்று கேட்க, “ஆமாம்.” என்று வட மாநிலத்தவன் பதிலளித்தான்.

 “அடப்பாவி ! இது திருவள்ளுவர் படம்டா..” என்று நண்பர் கூறினார். 

வள்ளுவருக்கு இப்படியெல்லாம் சோதனை வர வேண்டும்.

Thursday, February 23, 2017

ஜிந்தாபாத் ஜிந்தாபாத் – ச.தமிழ்ச்செல்வன்

தனிப்பட்ட முறையில் எனக்கு கம்யூனிசக் கொள்கையில் பெரிய ஈடுபாடு கிடையாது. காரணம், நான் நாளைய முதலாளி. என்றாவது ஒரு நாள் முதலாளியாகிவிடுவோம் என்று நம்பிக்கையில் உழைப்பவர்களால் கம்யூனிசத்தை ஏற்பது கடினம். முதலாளி கனவோடு இயங்குபவர்கள் எட்டு மணி நேரத்திற்கு மேல் உழைக்கத் தயாரானவர்கள். அவர்களுக்கு கம்யூனிசக் கொள்கை ஏற்புடையதாக இருக்காது.

ஆனால், ஒரு தொழிலாளருக்கு பிரச்சனை என்று வரும்போது அவர்களுக்காக களம் இறங்கிப்போராடும் தொழிற்சங்க இயக்கம் என்பதை மறுக்க முடியாது. அதனால், அவர்கள் மீது ஒரு சாப்ட்கார்னர். 

முக்கியமாக அரசாங்க ஊழியர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளையும், இயக்கங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். சம்பளம், போனஸ், பஞ்சப்படி போன்ற எல்லா விஷயத்திலும் அவர்களுக்காக பேசக்கூடியவர்கள், போராடக்கூடியவர்கள் இவர்கள் தான். அதனால், ஊழியர்கள் தங்கள் நலனுக்காக இதில் இணைத்துக்கொள்வதில் நன்மை இருக்கிறது. 




ச.தமிழ்ச்செல்வன் அஞ்சல்துறையில் பணியாற்றும் தொழிலாளர் சங்கத்தின் ஏற்ப்பட்ட அனுபவங்கள், சங்கத்தோழர்கள் குணாதியங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் என்று பல தரப்பை சொல்கிறது. ஒவ்வொருத்தரோடு பற்றிய அனுபவக் கட்டுரையும் தனி சிறுகதையாக வர வேண்டியது என்று சொல்லலாம். 

தோழர்களின் தத்துவம் சாமான்யங்களுக்கு ஏதார்த்தத்திற்கு ஏற்புடையதாக தெரியாது. ஆனால், தோழர்களுக்கு தத்துவம் தப்புக்கிடையாது, அது நடைமுறை கோளாறு என்பார்கள். 

இந்தப் புத்தகம் அவர்களின் போராட்டத்தை மட்டும் பேசவில்லை. அவர்களுக்குள் இருக்கும் அன்பு, பழக்கம், உதவும் மனப்பான்மை போன்ற பல விஷயங்கள் பேசுகிறது. சொந்தப் பணத்தில் கூட்டம் நடத்துபவர்களைப் பார்த்து அனுதாபப்படவில்லை. ”சங்கத்துக்கு கைப்பணத்தை செலவழிப்பதும், சங்கப்பணத்தை சொந்தச் செலவுக்கு எடுப்பது ஒரே விளைவைத்தான் ஏற்படுத்தும்” என்ற அறிவுரை கூறுகிறார். 

ஒரு தோழன் வீழ்ந்தால்… இன்னொரு தோழன் எழுவான் என்ற வாசகம் என்ற வாசகத்தோடு முடிக்கும் போது, “அது நான் தான்” என்று தமிழ்ச்செல்வன் சொல்லும்போது வாசகன் சத்தமாக ” ஜிந்தாபாத் ஜிந்தாபாத்” என்று சொல்லத்தோன்றும். 

பிறந்த நாள் பரிசாக இந்தப் புத்தகத்தை பரிசளித்த உரத்த சிந்தனை அமைப்புக்கும், உதயம்ராமுக்கும் நன்றி !! 

** 

ஜிந்தாபாத் ஜிந்தாபாத் 
– ச.தமிழ்ச்செல்வன் 
- Rs.130 

Monday, February 13, 2017

இல்லுமினாட்டி – கார்த்திக் ஸ்ரீநிவாஸ்

ஒரு நாட்டை ஆட்சி செய்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. கார்ப்ரேட் நிறுவனங்கள். அவர்களின் மகுடிக்கு அதிகாரவர்கம் ஆடுகிறது என்று நினைத்திருந்தேன். ஆனால், அந்த அம்பானி, அதானி போன்ற கார்ப்ரேட் நிறுவனங்களையே ஆட்டி வைக்கும் ஒரு குழு இருக்கிறது. பில் கேட்ஸ், வாரன் ஃபவர்ட் போன்று உலகின் நம்பர் 1 பணக்காரர் பந்தயத்தில் அவர்கள் கலந்து கொள்ளவதில்லை. அந்த நம்பர் 1 பணக்காரர் யார் என்பதை தீர்மானிப்பவர்கள் !! 

நம்பர் 1 பணக்காரர்களை விட அதிகப் பணம் வைத்திருப்பவர்கள். அதிகாரம் வைத்திருப்பவர்கள். உலகத்தை நோட்டம் விடுபவர்கள். இந்த உலக அரசியலை தங்களுக்காக மாற்றுபவர்கள். தங்களுக்கு எதிராக இருப்பவர்களை ஒழித்து கட்டுபவர்கள். எல்லா சம்பவங்களுக்கு பின்னால் அவர்கள் இருக்கிறார்கள். 

அவர்களின் பெயர் ”இல்லுமினாட்டி”. 



இவர்களின் அருளில்லாமல் எதுவும் நடவாது. யாராவது எதிர்த்தால் அவர்களுடைய உடலில் ஒரு அணுவும் அசையாது. அடையாளம் தெரியாமல் தொலைந்து போவார்கள். அல்லது திட்டமிட்ட விபத்தில் இறப்பார்கள். வழக்கு, நீதி மன்றம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். 

ராக் ஃபெல்லர், ஜான் எஃப்.கென்னடி, லீ குவான் யூ என்று இல்லுமினாட்டி பெயர்களை இந்த நூல் பட்டியலிடுகிறது. ஒரு கட்டத்தில் இந்த உலகத்தில் யார் தான் உண்மையான உழைப்பில் உயர்ந்தார்கள் என்ற சந்தேகத்தை இந்த நூல் விதைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம்மை சுற்றியிருக்கும் உலகத்தை சந்தேகப்பட வைக்கிறது. 

ஒவ்வொரு அத்தியாயம் மிக ஸ்வாரசியமாக இருக்கிறது என்பதை விட மிக அதிர்ச்சியான தகவல் கொண்டிருக்கிறது. 

அவசியம் வாசிக்க வேண்டிய நூல். 

** 
இல்லுமினாட்டி 
– கார்த்திக் ஸ்ரீநிவாஸ் 
- Rs.133 

Thursday, February 2, 2017

மாண்புமிகு உளவுத்துறை - வே.இராமநாதன்

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது உளவுத்துறை ரிப்போர்ட்டை விடக்கட்சிக்காரர்களைத்தான் அதிகமாக நம்புவார். செல்வி ஜெயலலிதாவோ உளவுத்துறையையும் நம்பமாட்டார், கட்சிக்காரர்களையும் நம்பமாட்டார். தனக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யக் கூடியவர். 


தமிழகத்தின் வரலாற்றில் கலைஞருக்கு மிக முக்கிய இடமுண்டு. மிகச்சிறந்த ஞாபக சக்தியும், கூர்மையான அறிவும் உடைய தலைவர்கள் அவருக்கு நிகராக இந்திய வரலாற்றில் யாரையேனும் சொல்ல வேண்டுமென்றால் வெகுநேரம் யோசிக்க வேண்டியிருக்கும். 


தன் பாதுகாப்பு அதிகாரிகளை நல்ல முறையில் நடத்துவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். அவர்கள் சாப்பிட்டார்களா ? என்ன சாப்பிட்டார்கள் ? எது அவர்களுக்கு பிடிக்கும் என்பதையெல்லாம் கவனித்துக்கொள்வார். ஏதாவது விசேஷம் என்றால் அன்பளிப்புகளைத் தாராளமாக வழங்குவார். எம்.ஜி.ஆரின் பாதுகாப்புக்குப் போவதென்றால் போலீஸாருக்குக் குஷிதான். ஆனால், ஒரு விஷயம். எம்.ஜி.ஆரின் மேடைப்பேச்சு அவரது புகழுக்கு ஏற்ற வகையில் தெளிவாக இருக்காது. 




இப்படி முக்கியமான அரசியல் தகவலை கொடுத்திருப்பவர் தமிழகத்தை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி. 1964 – 1999 வரை 35 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய வே.இராமநாதன் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அரசியல் ஆர்வமுள்ளவர்கள், உளவுத்துறை பற்றி தெரிந்துகொள்ள விருப்பமுடையவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

இணையத்தில் வாங்க....

Tuesday, November 29, 2016

Demonetization நகைச்சுவை !!

செந்தில் : அண்ணே ! நிலைமை சரியாயிடிச்சு. பாருங்க ATMல கூட்டமே இல்ல...

கவுண்டமணி : டேய் ! அந்த ATM காசே இல்லடா !!

செந்தில் : அதனால என்ன அண்ணே ! ATMல கூட்டமே இல்லல்ல.... அப்போ எல்லாருக்கிட்டையும் பணம் வந்திடுச்சு தானே அர்த்தம்.

கவுண்டமணி : டேய் ! ATMல பணம் இருந்தா தானே காசு எடுக்க ஆளுங்க வருவாங்க...

செந்தில் : நீங்களே சொல்லுங்க... ATMல கூட்டம் இருக்கா ? இல்லையா ? ... கூட்டம் இல்லனு போது எல்லாருக்கிட்டையும் பணம் வந்திடுச்சு அண்ணே ! 

கவுண்டமணி : ஐய்யோ ராமா $#$#$ !!



**
கைதி 1 : எதுக்கு உன்ன கைது பண்ணாங்க... ?

கைதி 2 : அரசாங்கத்துக்கு உதவி பண்ணேன். கைது பண்ணிட்டாங்க...

கைதி 1: அட பாவமே ! அப்படி என்ன உதவி பண்ண..?

கைதி 2 : கவர்மெண்ட் கிட்ட பணமில்லனு அவங்களுக்கு உதவியா நானே சொந்தமா ரூ.2000 நோட்ட பிரிண்ட் பண்ணேன். அதுக்கு கைது பண்ணிட்டாங்க...

**
இன்று பாரத் பந்த் (28.11.16) சொன்னாங்க....

எத்தன மணி, எந்த சேனல்ல படம் போடுறாங்கனு சொல்லவே இல்ல..



**
ரூபாய் நோட்டு அடிக்கும் ஆர்டரை சிவகாசி பிரிண்ட்டிங்க்கு கொடுத்திருந்தால் இரண்டு நாட்களில் தேவையான பணத்தை அச்சடித்திருப்பார்கள்.

**
இன்று ஒருப் பெண் personal loanக்காக போன் செய்ய... “ Rs.XXX Amount லோன் வேண்டும்..” என்றேன்.

“உங்கக்கிட்ட Pay slip, PAN card, Bank details எல்லாம் இருக்கா சார்...” என்று கேட்டார்.

“இருக்கு. லோன்ன Cash தானே தருவீங்க...” என்று கேட்டேன்.
"இல்ல சார்... உங்க அக்கவுண்ட்ல போட்டுடுவோம். நீங்க Withdraw பண்ணிக்கலாம்...”

“ஏம்மா... Bankல இருக்குற என் காச Withdraw பண்ண முடியலைனு தான் லோன் கேக்குறேன்” என்றேன்.

போன் கட்...

**


ரேஷன்ல
அரசிக் கொடுத்து பார்த்திருப்ப
பருப்பு கொடுத்து பார்த்திருப்ப
சக்கரை கொடுத்து பார்த்திருப்ப
மண்ணணெய் கொடுத்து பார்த்திருப்ப

ரேஷ்னவிட பேங்க்ல
கூட்டத்த பார்த்திருக்கிறியா...
வெறித்தனமா
அடிச்சுட்டுப் பார்த்திருக்கிறா...
நம்ப பணத்த ரேஷன்ல கொடுக்குற மாதிரி
அளவா கொடுப்பாங்க...
ஒரு நாளைக்கு ரூ.4000 தான் தருவாங்க...
பார்க்குறியா... பார்க்குறியா... !

 **
பள்ளி நாட்களில் India is My Country என்று உறதிமொழி எடுக்கச்சொன்னார்கள். இனி ’India is Mai (மை) Country’ என்று சொல்ல கட்டளையிடுவார்கள்.

**
வீட்டிலிருக்கும் 500, 1000 நோட்டுகளைக் என் மனைவி கொடுத்தார். எனக்கு தெரியாமல் வீட்டில் நடந்த ஊழல் இப்போது தெரிய வந்திருக்கிறது

**

மோடி வெளிநாட்டு போறாரு கவலைப்பட்டாங்க. ஒரு அறிவிப்பு கொடுத்தாரு, அவரு வெளிநாட்டுலேயே இருந்திருக்கலாம் நினைக்க வச்சிட்டாரு

Tuesday, November 22, 2016

காதலன் : ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு - பா. தீனதயாளன்

ஜெமினியை வைத்துப் படம் எடுப்பது சின்னக் குழந்தையை வெச்சு முடிவெட்டற மாதிரி” – நாகேஷ். 

திரையுலகின் மூவேந்தர் நடிகர்களில் ஒருவர். அரசியல் சாயம் இல்லாத நடிகர். காதலை வாழ்க்கையாகக் கொண்டவரின் வாழ்க்கை வரலாறு. திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து பல நூல்கள் இருக்கிறது. காரணம், எம்.ஜி.ஆர் அரசியல் பிரமுகர். சிவாஜி நடிப்பின் அகராதி. ஆனால், ஜெமினி கணேசன் அப்படியில்லை. கிசுகிசு தவிர எதிலும் சிக்காதவர். பல ஆண்களின் பொறாமையை சம்பாதித்தவர். மக்கள் நடிகர்களுக்கு மத்தியில் இவர் இயக்குனர்களின் நடிகராக இருந்தவர். இயக்குனர் எது தேவையோ அதை மட்டுமே தனது நடிப்பில் கொடுப்பவர். அதனால், ஸ்ரீதர், கே.பாலசந்தர் போன்றவர்களின் விருப்பதிற்குரிய நடிகராக இருந்தார். 



 “எப்படி பெண்கள் உங்களிடம் தேடி வந்து பேசுகிறார்கள்” என்று ஜெமினியிட கேட்டப்போது, “பொதுவாக செட்டில் சுமாரான அழுகுள்ள பெண்களிடம் முதலில் பேச்சு கொடுப்பேன். அழகான பெண்கள் தானாகவே வந்து என்னிடம் பேச ஆரம்பித்து விடுவார்கள். எப்படி என் ட்ரிக் !” என்றார். (Hunterrr Style அறிமுகப்படுத்தியவர் இவரே !!  ) 

மனம் போல் மாங்கல்யத்தில் பைத்தியக்காரன் வேடத்தில் ஜெமினி பிரமாதமாக நடித்திருப்பார். அதைப் பற்றி அவரது முதல் மனைவி பாப்ஜி, “அது ஒன்றும் அவருக்கு க்ஷ்டமானது அல்ல ! அவர் சுபாவமே அப்படித்தானே!” என்று சொல்லிவிட்டார். எவ்வளவு கடுமையான – உண்மையான விமர்சனம். 

சிவாஜி அளவுக்கு நடிப்பு வராது என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டவர். அதேச் சமயம், சிவாஜியின் கால்ஷீட் கிடைக்கவில்லைஎன்றால் அடுத்து தயாரிப்பாளர் அனுகுவது ஜெமினி கணேசனை தான். 

ஒரு மனிதன் செக்ஸ் எப்போது அற்றுப் போகிறதோ அதற்கு மேல் வாழ்க்கை பயனற்றதுதான். ஆனால் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்றால் எத்தனை வயதானாலும் இளமையாக வாழலாம்” – இதை தனது அதிகார பூர்வமான நான்காவது திருமணம் செய்யும் போது கூறியது. அப்போது அவருக்கு வயது 79 !!! 

”1934ல் பதிமூன்று வயதில் பள்ளியில் நாடகம் போட்டார்கள். அப்போதும் கிருஷ்ணன் வேஷம்தான் எனக்கு முதன்முதலாக வந்து சேர்ந்தது. நாடகத்தில் குட்டி கிருஷ்ணனாக நடித்த என்னை நிஜ வாழ்க்கையிலும் கிருஷ்ணனாகவே வாழச் செய்துவிட்டது விதி. 

இப்போது ‘காதல் மன்னன்’ என்ற பட்டப் பெயரைக் கேட்டாலே மனத்தில் வெறுப்புதான் எழுகிறது.” – தனது கடைசிக் காலத்தில் தனது ‘காதல் மன்னன்’ பட்டத்தை வெறுத்த தருணத்தை அவரே கூறியது. 

ஜெமினி யாரையும் விரட்டி விரட்டிக் காதலித்ததில்லை. பெண்கள் அவரைத் தேடி வந்து காதலிப்பார்கள். பின்பு, அவர்களாகவே பிரிந்து செல்வார்கள். அவர் எப்போதும் போல இயல்பாகவே இருப்பார். 

பிராமணராக பிறந்ததால் பிராமணப்பாத்திரத்தை ஏற்றுகொள்வதில் தயக்கம் காட்டினார். ’கௌரவம்’ படத்தில் ஆரம்பத்தில் ஜெமினிக்கு சொல்லப்பட்ட கதை. ஆனால், தன்னை விட சிவாஜி சிறப்பாக செய்வார் என்று கூறியவர் ஜெமினி கணேசன். 

 “Youth is not a time of Life. It’s a state of mind. 85 வயசுலயும் இளைஞனைப் பார்க்கலாம் 35 வயசுலயும் கிழவனைப் பார்க்கலாம். நான் இதுல முதல் ரகத்தைச் சேர்ந்தவன்.” – ஜெமினி கணேசன்.

குறிப்பு : கிழக்கு பதிப்பகத்தின் பழைய வெளியீடு.

கிடைப்பது சிரமம். பழையப் புத்தகக்கடையில் அல்லது Lending Library யில் கிடைத்தால் வாசிக்கவும்.


Thursday, November 10, 2016

திரும்பப் பெற்ற ரூ.500, ரூ.1000 நோட்டு – யார் பாதிக்கப்படப் போகிறார்கள் ?

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவுப்பு மூலம் கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக குறையும். கறுப்பு பணம் முழுவதுமாக ஓழியாவிட்டாலும் ஒரளவு குறையும். 

கார்ப்ரேட் முதலாளிகள், அமைச்சர்கள் பாதிக்கப்படுவார்களா ? 

மோடியின் அறிவிப்பில் கார்ப்ரேட் நிறுவனமும், பெரிய அரசியல்வாதிகளும் இல்லை. இவர்கள் Higher Upper-Class வகையினர்கள். அவர்களிடம் பெரிய ஆடிட்டர், வழக்கறிஞர் டீம் இருக்கிறது. இதை எளிதில் கையாள்வார்கள். ஏற்கனவே அவர்களின் கறுப்புப் பணம் தங்கமாகவோ, வெளிநாட்டில் சொத்துகளாகவோ வாங்கியவர்கள். அவர்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர இந்த அறிவிப்பு உதவப் போவதில்லை. (அவர்கள் மீது எதிர்ப்பாராத ஐ.டி ரைட் மட்டுமே சிறந்த வழி.) 

அப்போது, யார் பாதிக்கப்படுவர்கள் ? 

அமைச்சர் போன்ற பெரிய அரசியல்வாதிகள் பாதிப்பு இல்லையென்றாலும் கவுன்சிலர், எம்.எல்.ஏ அளவுக்கு இருக்கும் அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு கடையிலும் வாங்கிய கமிஷன் வருமானத்தை எப்படி மாற்றியாக வேண்டும். பலரை ஏமாற்றி சம்பாதித்தது, சில கொலைகள் செய்து, சில பல உறவுகள் வேண்டாம் என்று பணத்தின் பின்னால் சென்றவர்கள் இந்த தருணத்தில் யோசிக்க வேண்டும். 

இருபது வருடம் மேல் இருக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைகள். வட்டிக்கு விட்டு சம்பாதித்தவர்கள். அவர்கள் வருமான வரி கட்டியிருக்கமாட்டார்கள். அவர்கள் தங்கள் வருமானத்தை இப்போது வங்கியில் செலுத்தியாக வேண்டும். பத்து லட்சம் மேல் வங்கியில் செலுத்தினால் வரி ஏய்ப்பு செய்ததாக கருதப்படும். அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.



தாசில்தாரர் அளவில் இருக்கும் அரசாங்க ஊழியர்கள் தங்கள் பணத்தை வங்கியில் போட்டால் மட்டுமே பயன்படுத்த முடியும். 

அதேப் போல், திரைத்துறை, ரியர் எஸ்டேட், காய்கறிப வணிகம் போன்ற Unorganized துறையினர் சிரமப்படுவார்கள். குறிப்பாக, கறுப்புப் பணத்தில் கட்டவிருந்த ப்ளாட் கட்டும் பிராஜெக்ட் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள். பணத்தேவைக்காக ஏற்கனவே கட்டப்பட்ட ப்ளாட்டுக்கு அதிக விலை சொன்னவர்கள் குறைக்க வேண்டியதாக இருக்கும். 

வரிக்கட்டாமல் பல கோடி வைத்திருப்பவர்கள் வங்கியிலோ அல்லது குறுக்கு வழியிலோ மாற்ற முயற்சிப்பார்கள். இவர்கள் எத்தனை வழி கண்டுப்பிடித்தாலும், என்ன செய்தாலும் கடைசியில் அத்தனைப் பணமும் வங்கியில் செலுத்தினால் மட்டுமே பயன்படுத்த முடியும். யாருக்கும் பயன்படாமல் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தப் பணம் வங்கிக் கணக்குக்கு வருகிறதென்றால் அரசாங்கக் கணக்குக்கு வருகிறது என்று அர்த்தம்.

மொத்தத்தில், வருமான வரி கட்டாத Upper Class, Upper Middle-class வர்கத்தினர்களுக்கு சம்பாதித்தவர்களுக்கு இதுப் பெரிய Check. 


மோடியின் நல்லிரவு அறிவிப்பை பலர் எதிர்க்கிறார்கள். கால அவகாசம் கொடுத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு நேரம் கொடுத்தால், தங்கள் பணத்தை தங்கத்திலோ அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்து வெள்ளையாக மாற்றிவிட வாய்ப்பு இருக்கிறது. நல்லிரவு அறிவிப்பு என்பது சரியானது தான். 


அடுத்தது அரசு என்ன செய்ய வேண்டும் ? 

எந்த அளவுக்கு விரைவாக அறிவிப்பு கொடுத்தாரோ, அதை சரிசெய்யும் விதமான சரியாக திட்டமிடல் இருக்க வேண்டும். 

அடுத்த இரண்டு மாதத்திற்கு 80C பெற்ற N.G.O கணக்குகளை வருவாய் துறையினர் கவனிக்க வேண்டும். யார் யார் எவ்வளவு நன்கோடை கொடுக்கிறார்கள் என்பதையும், அவர்கள் கணக்கில் இருந்து எந்த வங்கிக் கணக்குக்கு பணப்படுவாட நடக்கிறதது என்பதை கண்காணிக்க வேண்டும்.

வங்கி ஊழியர்கள், குறிப்பாக மேனேஜர் அளவில் இருப்பவர்களையும் கண்காணிக்க வேண்டும். ரூ.4000 மாற்ற வரும் வாடிக்கையாளரின் PAN Cardயை அடையாள அட்டையை நகல் எடுத்து, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் உதவி செய்ய வாய்ப்பு இருக்கிறது. 

அடுத்து , தங்கம் மார்க்கெட்டின் அதிக முதலீடு வரும். தங்க முதலீட்டார்களையும் கண்காணிக்க வேண்டும். 

இதைச் செய்யாதப் பட்சத்தில் 500, 1000 நோட்டுகளை திரும்பப் பெற்ற உத்தரவில் எந்த பயனும் இருக்காது. 

** 

சரி… அதற்காக, அன்றாடம் வாழும் மக்கள் பாதிக்கப்படலாமா ? இயல்பு வாழ்க்கை பாதிக்கபடலாமா ? 

ஒழுங்காக வருமான வரிக் கட்டியவர்கள் இரண்டு நாள் தான் அவஸ்தை. இவர்கள் Middle-Class, Lower Middle-Class, Lower-Class வகையினர். சிறு வியாபாரிகள், தினக்கூலிகள் என்று தொடங்கி வெளியூருக்கு செல்பவர்கள் வரை அனைவருக்கும் இரண்டு நாள் அவஸ்த்தை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வருமான வரிக்கட்டாதவர்களுக்கு அடுத்த இரண்டு மாதம் அவஸ்தைப்பட போகிறார்கள். 

கவுன்சிலர்கள், ரியல் எஸ்டேட் வாதிகள், அரசாங்க ஊழியர்கள் போன்றவர்கள் நமது பணத்தை லஞ்சமாகவோ, கமிஷனாகவோ கொடுத்தது பழக்கப்படுத்தி நாம் தவறு செய்கிறோம். குறைந்தப்பட்சம் வேடிக்கைப்பார்த்து கொண்டு அமைதியாக இருந்திருக்கிறோம். அந்த தவறுக்கு இரண்டு நாள் அனுபவிப்போம். 

நமது பணத்தை ஆட்டையப் போட்டவர்கள் இரண்டு மாதம் அவஸ்தைப்படட்டும். வருமான வரி துறையினரிடம் மாட்டி நஷ்ட ஈடுக்கட்டடும். 

மோடி அரசு எடுத்து வைத்திருப்பது முதல் அடியாக இருந்து, தொடர்ந்து கார்ப்பிரேட் ஆசாமிகள் மீது சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் கறுப்புப்பணம் ஒழிப்பு நடவடிக்கையில் நிச்சயம் பலன் தரும். கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த ஒரு நடவடிக்கைப் போதும் என்று நினைத்தால், புது ரூ.500, ரூ.2000 நோட்டு வந்ததும் ஆறு மாதத்தில் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும்.

Wednesday, November 9, 2016

ரூ.500 - ரூ.1000 நோட்டு இல்லாத முதல் நாள் அனுபவம் !

காலையில் வண்டி டயர் பஞ்சராகி, மெக்கானிக் டயர்–டுயூப் இரண்டையும் மாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார். ரூ.1500 ஆகும். கையில் பணம் இருந்தும் அதற்கு மதிப்பில்லை.



“கிரெட் கார்ட் வாங்குவியானு” கேட்டேன். 

“இந்தியாவுலேயே பஞ்சர் கடைக்கு வந்து கிரெட் கார்ட் வாங்குவியானு கேட்ட முதல் ஆள் நீங்க தான்!” என்று கேட்பது போல் ரியாக்‌ஷன் கொடுத்தார். 

1.5. கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் MRF Dealer ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் கிரெட் கார்ட் மூலம் டயர் வாங்கிட்டு வாங்க என்று மெக்கானிக் கூறினார். 

MRF Dealer யிடம் நிலைமையை சொல்ல, என் கையில் இருக்கும் ஒரு ஆயிரம், ஒரு ஐந்நூறு நோட்டை வாங்கி புது டயர் கொடுத்தார். 

** 

பெட்ரோல் பங்க்கில் அவரவர் ரூ.100, ரூ.200 க்கு பெட்ரோலுக்கு ரூ.500 நீட்ட, சில்லரை குறைவாக இருக்கும் வேலை செய்யும் பெண் ”சில்லரை அதிகமா இல்லை. மத்தவங்களுக்கு கொடுக்கனும். இரண்டு மூனுப் பேர் ஷேர் பண்ணிக்கோங்க..” என்றாள். 

500/1000 ரூபாய் வாங்க மறுப்பது, பெட்ரோல் பங்க்யை மூடி வைப்பதை விட இது நல்ல யோசனையாக இருக்கிறது. 

அடுத்த இரண்டு நாளுக்கு பெட்ரோல் பங்க்கு இரண்டு, மூன்று வண்டியில் சென்று பெட்ரோல் போடுவது நல்லது. அவர்கள் சில்லரைத் தர வேண்டியதில்லை. உங்கள் தேவையும் நிறைவேறுகிறது. 

இதுப் போன்ற சூழ்நிலையில் எதிர்ப்பு, ஆதரவு என்ற இரண்டு குரலும் உங்களுக்கு உதவப் போவதில்லை. பேஸ்புக், டிவிட்டரில் லைக் மட்டுமே பெற்று தரும். 

ஒருவருக்கு ஒருவர் உதவி, நம்பிக்கை, பரஸ்பர ஒப்புதல் மட்டுமே இதுப் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மீண்டு வர முடியும்.

Thursday, November 3, 2016

அரசு அலுவலகச் சிஸ்டம்

எங்கள் பகுதி தபால் நிலையத்தில் ஸ்பீட் போஸ்ட், ரெஜிஸ்டர் பார்சல் கவுண்டரில் வயதானப் பெண்மணி ஒருவர் வேலை செய்கிறார். போன் பில், EB Bill போன்ற விஷயத்திற்கு தனி கவுண்டரெல்லாம் கிடையாது. எல்லாரும் அந்த கவுண்டரை தான் பயன்படுத்த வேண்டும். 

அந்த வயதானப் பெண்மணிக்கு கம்யூட்டர் ஆப்ரேட் செய்வதைப் பார்த்தால் ஆமையை விட மெதுவாக இயக்குவார் (வீடியோவில் இருக்கும் பெண்மணி மேல்). ஒவ்வொரு நாளும் அந்த கவுண்டரில் நிற்பவர்கள் அவரை வசவுப்பாடாமல் இருக்கமாட்டார்கள். கூட்டத்தின் கோபத்தை கட்டுப்படுத்த அந்தச் சமயத்தில் வேறு ஒருவரை உட்கார வைத்து வேலையை முடிப்பார்கள். சில சமயம் வசவு வார்த்தைகளை காதில் வாங்கி கொண்டு வேலை செய்வார். 

இது போதாதென்று அந்த பெண்மணிக்கு தமிழ் தெரியாது. வாடிக்கையாளர்கள் ஸ்பீட் போஸ்ட், ரெஜிஸ்டர் பார்சல் முகவரியை தமிழில் எழுதி வந்தால், அந்த அம்மாவின் நிலை அவ்வளவு தான். 

அவருக்கு கணக்கும் சரியாக தெரியாது. பல சமயம் சில்லரை கொடுக்கும் போது அதிகமாகவே கொடுப்பார். நியாயமாக இருப்பவர்கள் திருப்பி கொடுத்துவிடுவார்கள். சிலர் வந்தது லாபம் என்று எடுத்துச் செல்வார்கள். அந்த அம்மா தனது கை காசைப் போட்டு கணக்கு முடிப்பார். 

பல முறை தலைமை தபால் ஆபிஸரிடம் சொல்லியும் அந்தப் பெண்மணியை மாற்றவில்லை. காரணம், அவரை தவிர அந்த வேலையை செய்ய யாரும் முன் வரவில்லை. வாடிக்கையாளரை சந்திக்கும் கவுண்டரின் ஓய்வு கிடைப்பது குறைவு. மத்தியச் சாப்பாடு வரை கூட்டம் வந்துக் கொண்டே இருக்கும். மாதக்கடைசியில் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த பெண்மணி ஏமாந்தவர் என்பதால் இந்த வேலையை அவர் தலையில் கட்டிவிட்டார்கள். 

அவரைப் பற்றி விசாரித்தப் போது தான் தெரிந்தது கணவர் சர்வீஸில் இருக்கும் போது இறந்ததால் அவருக்கு தபால்துறையில் வேலை கொடுத்திருக்கிறார்கள். மகன் பத்தாவதோ, +1 படிக்கிறான். கணவர் இருக்கும் வரை வீடு தான் உலகம் என்று இருந்தவர், அவரின் மறைவுக்கு பிறகு தனது மகனையும், தன்னையும் காப்பாற்றுவதற்காக தெரியாத வேலையை கஷ்டப்பட்டு செய்கிறார். 

ஒரு வருடமாக அவரை கவனிக்கிறேன். முன்பைவிட பராவாயில்லை. அவர் தட்டுத்தடுமாறி எப்படியோ கம்யூட்டரை ஒரளவுக் கற்றுக் கொண்டுள்ளார். பாவம் தமிழ் படிக்கத்தான் தெரியவில்லை. கணக்கு போடுவதற்கு Calculator பக்கத்திலேயே வைத்திருக்கிறார். 

நியாயமாக அந்தப் பெண்மணி மீது கோபப்படுவது சரியா ? 


பொதுவாக, ஐ.டியில் வேலை செய்யாதவனுக்கு விழும் திட்டை விட அவர்களது மேலாளருக்கு தான் அதிக திட்டு விழும். காரணம், வேலை தெரியாதவனுக்கு வேலை கொடுத்தது அந்த மேலாளரின் தவறு. யாருக்கு என்ன வேலைக் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது தான் மேலாளரின் வேலை. அதை செய்யத் தெரியாதவன் நல்ல மேலாளராக இருக்க முடியாது. இப்படித்தான் எல்லா தனியார் நிறுவனங்களிலும் இப்படி தான் நடக்கிறது. 

அரசு அலுவலகத்தில் மேலாளர்கள் விதிவிளக்காக வேலை செய்வார்கள். யார் ஏமாந்தவர்களோ அவரின் தலையில் வேலையை கட்டிவிடுவார்கள். அவர்களும் தனக்கு தெரிந்த வேலையை கொடுங்கள், தெரியாத வேலை கொடுக்காதீர்கள் என்று எதிர்த்து மேலாளரிடம் பேசமுடியாது. 

இன்று ஒரு நாள் பலு குறைவான வேலையை கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தால், அவரது வேலை செய்ய யாராவது ஒருவர் முன்வர வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த வேலையை அவர்கள் தான் செய்தாக வேண்டும். அப்போது தான், அவர்களது பிழைப்பு ஓடும். 

வங்கியில் இருக்கும் காஷியர் முதல் பேரூந்தை மெதுவாக ஓட்டும் ஓட்டுநர் வரை அவர்களது நிலைமை இது தான். தனக்கு கீழ் இருப்பவர்கள் எப்படி வேலைச் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் ஏசி அறையில் இருக்கும் அரசு மேலாளர்களை பொதுமக்கள் எளிதாக சந்திக்க முடியாத அரசு அலுவலகச் சிஸ்டம் செயல்படுகிறது. 

சொல்லப்போனால் பிரச்சனை அவர்களிடத்தில் மட்டும் இல்லை. இந்த சிஸ்டம் இப்படி தான் இயங்குகிறது என்று ஏற்க மறுக்கும் நம்மிடத்திலும் இருக்கிறது.

Monday, October 24, 2016

எப்படி ? இப்படி ? - பட்டிக்கோட்டை பிரபாகர்

ஒவ்வொரு மர்ம நாவலுக்கு பின்னால் எதோ உண்மையான குற்றம் ஒழிந்திருக்கிறது. உண்மையும், புனைவும் கலந்த ஒரு புள்ளி தான் மர்ம நாவலின் அடித்தளமாக இருக்கிறது. அப்படி மர்ம நாவலின் ஆசானான பட்டிக்கோட்டை பிரபாகர் புனைவு அல்லாத உண்மை சம்பவங்களின் குற்றத்தைப் பற்றி எழுதியிருக்கும் நூல் ‘எப்படி ? இப்படி ?’. 



தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சுடப்பட்டதில் இருந்து அமெரிக்காவின் மர்லின் மன்றோ மரணம் பின் வரை நடந்த சம்பவங்கள், வழக்கு விசாரணை, தீர்ப்பு என்று 31 உண்மை குற்றச் சம்பவங்களை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சம்பவம் மர்மமான சிறுகதை போல் இருக்கிறது. சில வழக்கின் தீர்ப்புகள் இந்திய நீதிமன்றத்தில் பணம் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. 

உண்மை குற்றவியல் சம்பவங்களை வாசிக்க விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நூல்… 

LinkWithin

Related Posts with Thumbnails