வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label சுய முன்னேற்றம். Show all posts
Showing posts with label சுய முன்னேற்றம். Show all posts

Friday, June 10, 2016

மிருகம் சொல்லும் Management கதைகள் - 12

பெரிய காட்டை ஆளும் சிங்கம், உலகில் தான் தான் பெரிய நீதிபதி என்ற கர்வம் இருந்தது. தவறு செய்பவர்கள் தண்டிக்க விதவிதமான தண்டமை முறையை கண்டுப்பிடித்து வந்தது.

முக்கியமான பொய் சொல்பவர்களை வெறிப்பிடித்த காட்டு நாய் ஒன்றை கடிக்க வைத்துக் கொன்று வந்தது. அதனால், அந்த காட்டில் சிங்கத்திற்கு எதிராக தவறு செய்யவே மற்ற மிருகங்கள் அஞ்சியது.

ஒரு முறை, சிங்கத்தின் மந்திரியான நரி பொய் சொன்னதை சிங்கம் கண்டுப்பிடிக்க, அதை கட்டி வைத்து வெறிப்பிடித்த நாய்யிடன் அடைக்க வேண்டும் என்கிறார். அப்போது, நரி “நான் தங்களிடம் நீண்ட நாட்களாக விஸ்வாசமாக இருந்திருக்கிறேன். என் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டும். “ என்றது.



”உன் ஆசை என்ன ?”

“என்னை கொல்லப்போகும் நாய்க்கு நான் சேகவம் செய்து இறக்க விரும்புகிறேன். அதற்கு அனுமதி தாருங்கள்” என்றது.

சிங்கமும் சம்மதித்தது. நரி தினமும் அந்த நாய்க்கு உணவளித்து, குளிப்பாட்டி நட்போடு பலகியது.

பத்து நாள் கலித்து, சிங்கம் நரிக்கு தண்டனை அளிக்க வெறிப்பிடித்த நாய்யிடம் விட, அது கடிக்காமல் நரியின் கட்டை கடித்து காப்பாற்ற முயற்சித்தது.

சிங்கம் வியப்பாக பார்த்தது. நரி, “சிங்க ராஜா ! பல வருடங்களாக உங்களுக்கு சேவை செய்தேன். மரண தண்டனை வழங்கினீர்கள். இந்த நாய்க்கு பத்து நாட்கள் தான் சேவை செய்தேன். தனது நன்றியை காட்டியிருக்கிறது. பார்த்தீர்களா ?” என்றது.

சிங்கம் தன் தவறை உணர்ந்தது.

“உண்மை தான் மந்திரி. இனி பொய் சொல்பவர்கள் நாயிடம் விட மாட்டேன். அதற்கு பதிலாக முதலைகளிடம் விடுகிறேன்.” என்றது.

நரி அதிர்ச்சியடைய, தனது எடுப்பிடி சிங்கத்திடம் நரியை முதலை இருக்கும் இடத்தில் வீச உத்தரவிட்டது.

மேனேஜ்மெண்ட் நீதி : 

மேலாளர் முடிவெடுத்துவிட்டால் அதை எப்படியாவது நிறைவேற்ற தான் நினைப்பார்.

Thursday, May 12, 2016

மிருகம் சொல்லும் Management கதைகள் - 11

புலியும் , சிங்கமும் தங்களுக்கு வேலை செய்ய நான்கு நரியை வேலைக்கு வைத்திருந்தது. நான்கு நரிகளும் சிங்கம், புலி வேட்டைக்கு உதவியாக இருந்தார்கள். இருந்தாலும், நான்கில் யார் திறமையானவர்கள் என்பதில் தேர்வு செய்ய கடினமாக இருந்தது. அதனால், சிங்கமும், புலியும் நான்கு நரிகளுக்கு ஒரு சோதனை நடத்த முடிவெடுத்தது.



சிங்கம் நரிகளிடம், “இன்று நாங்கள் இருவரும் வேட்டைக்கு வரப் போவதில்லை. நீங்கள் தான் முயலை வேட்டையாடி கொண்டு வரப் போகிறீர்கள். ஒவ்வொருவரும் பத்து முயலாவது கொண்டு வர வேண்டும்” என்றது சிங்கம்.

முதல் நரி, “ஒருவரே பத்து முயல் கொண்டு வருவது கடினமானது. நாங்கள் குழுவாக செல்கிறோம்.”

புலி அதை ஏற்கவில்லை. உங்களிடம் இருக்கும் திறமையை கொண்டு வருவதற்கே இந்த சோதனை என்றது.

நான்கு நரிகளும் தங்களால் முடிந்த அளவுக்கு முயலை வேட்டையாடி வேட்டைக்கு சென்ற இடத்தில் 26 முயல்கள் மட்டுமே இருந்தது. இரண்டு நரி விரைவாக முயல்களை தாக்கி ஆளுக்கு பத்து முயலை கொண்டு கொண்டு வந்தது. மூன்றாவது முயல் கிடைத்த 6 முயலை கொண்டு சென்றது. நான்காவது வெறும் கையோடு திரும்பி வந்தது.

முதல் இரண்டு நரியைப் பார்த்ததும் புலிக்கு மகிழ்ச்சி. மூன்றாவது நரி, “மன்னிக்கவும் என்னால் மீதம் நான்கு முயலை கொண்டுவர முடியவில்லை என்று வருத்தமாக கூறியது.

வெறும் கையோடு வந்த நரி, “நாங்கள் நால்வரும் 26 முயலை கொன்று, உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறோம்” என்றது.

சிங்கம் அந்த நான்காவது நரியை மேலாளராக்கியது. மூன்றாவது முயலை மேற்பார்வை பார்ப்பவனாகாக்கியது. முதல் இரண்டு நரியை வேட்டையாடுவதற்கு வேலை செய்பவனாக மாற்றியது.

மேனேஜ்மெண்ட் நீதி :
வேலை செய்ய தெரிந்தவர்களுக்கு வேலைக் கொடுக்க வேண்டும். வேலை செய்யத்தெரியாதவர்களுக்கு, வேலை செய்பவர்களை கண்காணிக்கும் ’மேலாளர்’ பொறுப்பை கொடுக்க வேண்டும்.

Monday, December 14, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 10

அடர்ந்த காடு.

புலி தனது இறையை தேடும் போது ஒரு நரியை தனியாக இருப்பதை பார்த்தது.

மறைந்திருந்து புலி நரியை தாக்கி உண்ணும் போது நரி கோபமாக “எவ்வளவு துணிவு இருந்தால், இந்த காட்டின் அரசனை தாக்குவாய்” என்றது.

புலிக்கு திகைப்பாக இருந்தது. எப்படி ஒரு நரி காட்டின் அரசனாக இருக்க முடியும். “நீ ஒரு நரி. எப்படி இந்த காட்டின் அரசன் என்று நம்புவது” என்று புலி கேட்டது.

“என் பின்னால் வா. நா நிருபித்துக் காட்டுகிறேன்” என்றது நரி.



நரி முன்னே செல்ல, புலி பின்னால் வந்தது.

இருவரும் மான் கூட்டம் விளையாடிக் கொண்டு இடத்தில் சென்றார்கள். மான் கூட்டம் நரி பின்னால் புலி இருப்பதை பார்த்து அஞ்சி ஓடியது.

“பார்த்தாயா ! என்னைப் பார்த்து எல்லா மான்களும் பயந்து ஓடியது.” என்றது. இதை புலியால் நம்ப முடியவில்லை.

”என்னோடு வா. மீண்டு நிறுபித்துக் காட்டுகிறேன்” என்று குரங்குகள் இருக்கும் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றது.

 குரங்குகளும் புலியைப் பார்த்து மிரண்டு மரத்துக்கு மரம் தாவி ஓடியது. “இப்போது புரிந்ததா ! நான் தான் காட்டின் அரசன்” என்று நரி கூறியது.

“மன்னித்து விடுங்கள் அரசே ! உங்கள் பெருமை தெரியாமல் உங்களை தாக்கிவிட்டேன்” என்றுது புலி.

Management நீதி : 

நிர்வாகத்தில் பெரிய ஆளாக இருக்க  நாம் புலியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ‘புலி’ யை வேலைக்கு நியமித்தால் போதும்.

Thursday, December 10, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 9

நாம் சிறு வயதில் படித்த கதை தான். 

நூறு பறவைகள் கூட்டமாக வானில் பறந்துக் கொண்டு இருக்கும் போது கீழே தானியங்கள் பரவி கிடப்பதைப் பார்க்கிறது. தானியங்களை உண்ணும் போது, வேடனின் வலை அவர்களை சிறைப்படுத்துகிறது. வேடன் வருவதை பார்த்த பறவைகள் ஆளுக்கு ஒரு பக்கம் பறக்க முற்படுகிறது. ஆனால், யாராலும் பறக்கமுடியவில்லை.

அப்போது, ஒரு பறவை தலைமை ஏற்று, “ நாம் அனைவரும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியாக முழு பலத்தோடு பறக்க வேண்டும்” என்றது. 

அப்படியே, எல்லா பறவைகளும் பறக்க முயற்சிக்கும் போது வலையோடு சேர்ந்து வானத்தில் பறந்தது. பறவை தப்பித்ததோடு இல்லாமல் வேடன் தனது வலையை இழந்தான். 

”ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு” என்ற நீதிக்கு இந்த கதையை படித்திருப்போம். ஆனால், இந்த கதை இத்தோடு முடியவில்லை. 



வேடனிடம் இருந்து பறவைகள் தப்பித்தாலும், காலில் சிக்கிய வலையோடு முன்பு போல் சுதந்திரமாக பறக்க முடியவில்லை. தங்கள் காலில் மாட்டிய வலையை அருக்க யாருடைய உதவியை நாடலாம் என்று பறந்தப்படி பறவையின் தலைவன் கேட்டான். 

“எலியின் உதவியை நாட்டலாம்” என்று ஒரு பறவைக் கூறியது. 

ஒரு சில பறவை அந்த கருத்தை ஆதரித்தாலும், “நாம் கூட்டமாக வருவதை பார்த்து எலி பார்த்து பயந்து ஓடிவிடும். இது சாத்தியமாகாது” என்றது. 

“சிங்கம், நரி போன்ற பெரிய மிருகங்களிடம் உதவிக் கேட்கலாம்.” என்று இன்னொரு பறவைக் கூறியது. 

இந்த கருத்தை ஒரு சில பறவைகள் ஆதரித்தாலும், “வேடனிடம் மாட்டியிருந்தால் ஒரு சிலராவது தப்பித்திருக்க முடியும். சிங்கம், நரி போன்ற கொடிய மிருகத்திடம் இருந்து யாரும் உயிருடன் தப்பிக்க முடியாது” என்றது.

பறவைகளின் தலைவன், “நம்மால் நீண்ட நேரம் இப்படியே பறக்க முடியாது. அதனால், முதலில் எலியிடம் உதவிக் கேட்போம்” என்றது. 

 ஆனால், 30 பறவைகள் அந்த கருத்தை ஏற்கவில்லை. சிங்கத்தின் உதவி பெறலாம் என்பதில் முடிவாக இருந்தார்கள். தங்கள் கருத்துக்கு அதிக பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும், அவர்களின் கருத்தில் பிடிவாதமாக இருந்தார்கள். 

நேரமாக ஒவ்வொரு பறவைகளின் காலில் வலு குறைந்துக் கொண்டே வந்தது. “தறையில் இறங்கிய பிறகு, யாருடைய உதவிப் பெறலாம்” என்று தலைமை பறவை கூறியது. 

 “முடிவெடுத்த பிறகு தரையில் இறங்கலாம்” என்று இன்னொரு 20 பறவைகள் கூறியது. 

இப்படியே பறந்தப்படி பேசிக் கொண்டு வரும் போது கடல் மத்தியில் பறந்துக் கொண்டு இருந்தது. ஒரு சில பறவையால் பறக்க முடியவில்லை. வலையில் இருந்த பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழ இறங்கி கடலில் விழுந்தது. 

தப்பிக்கும் போது இருந்த ஒற்றுமை தங்களை விடுவித்துக் கொள்ளும் போது இல்லாததால் எல்லா பறவைகளும் மடிந்தது. 

 Management நீதி : 

 ஒரு குழு (Team) ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருப்பது பெரிய விஷயமில்லை. அந்த ஒற்றுமையை கடைசி வரைக்கும் தக்க வைத்துக் கொண்டால் தான் எடுத்த வேலையை சரியாக முடிக்க முடியும்.

Monday, June 15, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 8

ஒரு மாலை நேரத்தில் எலி ஒன்று மும்முரமாக எழுதிக் கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த நரி, “ என்ன செய்துக் கொண்டு இருக்கிறாய் ?” என்று கேட்டது.

அதற்கு எலி, ”என் கண்டுபிடிப்பின் செய்முறை விளக்கத்தை எழுதிக்கிறேன்” என்றது.

மிகவும் ஆச்சரியமடைந்த நரி, “அப்படி என்ன கண்டுபிடித்தாய் ?” என்று கேட்டது.

”எலி எப்படி நரியை சாப்பிடும் என்பதை பற்றியது.” என்று பதிலளித்தது.

அதைக் கேட்டதும் நரி சிரிக்கத் தொடங்கியது. ”நீ என்ன முட்டாளா ! யாராவது இதை நம்புவார்களா ?” என்றது.



எலி நரியின் சிரிப்பைப் பற்றி கவலைப்படவில்லை.

“நீ என்னுடன் வா ! நான் உனக்கு காட்டுகிறேன்.” என்று கூறி தன்னுடன் அழைத்துச் சென்றது. நரியும், எலியும் ஒரு மரத்தின் பின்னால் சென்றது. சிறிது நேரம் கழித்து எலி நரியின் எழும்போடு வெளியே வந்தது. அதன் பின் தன் எழுதும் வேலையை செய்யத் தொடங்கியது.

அப்போது நரியைப் போலவே, அங்கு வந்த ஓநாய் எலிடம் விசாரித்தது.

”எலி எப்படி ஓநாய்யை சாப்பிடும் என்பதை பற்றி எழுதுகிறேன்” என்றது.

”உனக்கு என்ன பைத்தியமா ? இதை யாரும் நம்ப மாட்டார்கள்.” என்று ஓநாய் கூறியது.

”என்னுடன் வா ! உனக்கு காட்டுகிறேன்.” என்று கூறி நரியை அழைத்துச் சென்றது போலவே ஓநாய்யையும் அழைத்து சென்றது.

ஓநாயும், எலியும் அதே மரத்தின் பின்னால் சென்றது. சற்று நேரம் கழித்து எலி ஓநாயின் எழும்போடு வெளியே வந்தது.

அடுத்ததாக அந்த வழியாக வந்த ஒரு கரடி எலியிடம் இதே கேள்வியை கேட்டது. எலி அந்த கரடியை மரத்தின் பின் அழைத்து சென்றது. அங்கே, மரத்தின் பின் இருக்கும் சிங்கத்திடம் கரடியை அறிமுகம் செய்து வைக்கிறது. சிங்கம் – எலி கூட்டனி கதை கரடிக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

 எலி வெளியே வரும் போது கரடியின் எழும்போடு வந்தது.

 Management நீதி : 

நாம் மற்றவர்கள் நம்பும் படி வேலை செய்வதை விட நம் மேலாளருக்கு பிடித்த மாதிரி வேலை செய்தால் வேலையில் உயர்வு நிச்சயம். அடுத்தவர் பலியாவதை நினைத்து வருந்தக் கூடாது.

Thursday, June 11, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 7

அதிகாலை வேளை சூரியன் சுடும் நேரத்தில் சிங்கம் தனது குகையில் உறக்கம் கலைந்து வெளியே வந்தது. அப்போது அந்த வழியாக நரி வாக்கிங் வர ” இப்போது நேரம் என்னவென்று தெரியுமா ? என் கை கடிகாரம் ஒட வில்லை.” என்று கேட்டது. 

”என்னிடம் கொடு. உனக்காக நான் சரி செய்து தருகிறேன்” என்று சிங்கம் பதிலளித்தது.



நரி தனது கடிகாரத்தின் நலன் கருதி, “மிகவும் கஷ்டமான காரியம்... நகங்கள் கொண்ட கையில் செய்தால்... அந்த கடிகாரம் அழிந்துவிடும்” என்றது. 

ஆனால், சிங்கம் விடுவதாக இல்லை. “ஒன்றும் ஆகாது.... நான் சரி செய்வேன்” ”இது முட்டாள் தனமாக உள்ளது. நீண்ட நகங்கள் கொண்ட கையால் சரி செய்ய முடியாது.” என்று நரி எவ்வளவோ சொல்லியும் சிங்கம் கேட்பதாக இல்லை. 

"என்னால் சரி செய்ய முடியும்" என்று சொல்லி அந்த கடிகாரத்தை எடுத்துக் கொண்டு தன் குகைக்குள் நுழைந்தது. சற்று நேரத்தில் வேளியே வந்தது. நரிக்கு ஒரே அதிர்ச்சி. ஓடாத கடிகாரம் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது நரி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து தன் கடிகாரத்தை வாங்கி சென்றது. சிங்கம் சோம்பலை முறித்துக் கொண்டு மீண்டும் தன் உறங்க தொடங்கியது. 

அப்போது ஒரு ஓநாய் சிங்கத்தின் குகைக்கு வந்தது. ”இன்று உன் குகைக்குள் தொலைக்காட்சி பார்க்க வரலாமா ? என் தொலைக்காட்சிப் பேட்டி உடைந்து விட்டது.” என்று ஓநாய் கேட்டது. 

”என்னிடம் உன் தொலைக்காட்சி பெட்டியை கொடு. நான் சரி செய்து தருகிறேன்” என்று சிங்கம் கூறியது. ஓநாய் சிங்கம் சொன்னதை நம்பவில்லை. 

“இதை நான் நம்புவேன் என்று நினைக்கிறாயா? எப்படி உன் நீண்ட நகங்கள் கொண்ட கையினால் சரி செய்வாய் ?” 

”கவலை வேண்டாம். என்னால் முடியும். ” என்று கூறியது. 

ஓநாய் தன் தொலைக்காட்சி பெட்டியை சிங்கத்திடம் கொடுத்தது. சிங்கம் அந்த தொலைக்காட்சி பெட்டியை தன் குகைக்குள் எடுத்து சென்றது. சற்று நேரத்தில் சரி செய்து தொலைக்காட்சி பெட்டியை ஓநாய்யிடம் கொடுத்தது. தொலைக்காட்சியில் நன்றாக படம் தெரிந்தது. ஓநாய் மிகழ்ச்சியுடன் வாங்கி தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தது. 

 இதில் நமக்கு தெரியாத காட்சி : 

சிங்கத்தின் குகைக்குள் ஆறு முயல்கள் இருந்தன. ஆறு முயல்களும் மென்னையான கைகளையும், நல்ல அறிவு திறனும் இருப்பதால் அந்த பணியை செம்மையாக முடித்தன. சிங்கம் அவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை மட்டுமே பார்த்தது. 

Management நீதி : 

மேலாளர் எல்லா வேலையையும் தானே செய்து முடிக்க வேண்டும் என்பதில்லை. அவர் சொல்வதை சரியாக வேலை செய்பவர்களை நிர்வாகித்தால் போதும். தான் செய்தது போல் பெயர் எடுக்கலாம்.

Tuesday, May 19, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 6

கரடி கூட்டத்தின் தலைவனும், சிறுத்தை கூட்டத்தின் தலைவனும் ஒரு உடன்படிக்கை மேற்கொண்டனர். அதில், சிறுத்தை வேட்டையாடும் மிரங்களில் பாதி கரடி கூட்டத்திற்கும், கரடி வேட்டையாடும் மிருங்களில் பாதி சிறுத்தை கூட்டத்திற்கும் கொடுக்க வேண்டும்.

இதனால், ஒரு நாளுக்கு இரண்டு விதமான மிருங்களை இரண்டு கூட்டமும் சுவைக்க முடியும். இந்த உடன் படிக்கை இரண்டு கூட்டத்திற்கும் பிடித்திருந்தது. இரண்டு கூட்டத்திற்கும் பரம திருப்தி.



ஒவ்வொரு நாளும் இரண்டு மிருக இறைச்சியை சுவைத்த சந்தோஷத்தில் இரண்டு மிருகக் கூட்டங்களும் இருந்தன. ஆனால், நாளாக நாளாக சிறுத்தையின் தலைவன் மனம் மாறத்தோடங்கியது.

பழைய மிருக இறைச்சி , சுவையில்லாத பாகத்தை கரடியிடம் கொடுத்து நல்ல மிருக இறைச்சியை வாங்க தொடங்கியது. தரமில்லாத இறைச்சிக்கு சுவையான இறைச்சி கிடைப்பதால் சிறுத்தை நமக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என்று மகிழ்ந்தது. ஆனால், அது நீண்ட நாள் நீடிக்கவில்லை.

முதலில் கரடியின் தலைவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், கரடி கூட்டத்தினர் சுவையில்லாத இறைச்சிக்கு தங்கள் உழைப்பை வீணாக்குகிறோம் என்று கூற தொடங்கினர்.

இதனால், கரடி கூட்டத்தினர் சிறுத்தையிடம் இறைச்சி மாற்றத்தை நிறுத்திக் கொண்டது. அது மட்டுமில்லாமல் தங்கள் கூட்டத்தினரை இரண்டாக பிரிந்து சென்று இரண்டு விதமான மிருகங்களை வேட்டையாட தொடங்கியது. அதனால், எப்போதும் போல கரடி கூட்டத்திற்கு இரண்டு மிருக இறைச்சி கிடைத்தது.

 Management நீதி : 

இன்றைய லாபத்திற்காக வாடிக்கையாளரை ஏமாற்றத் தொடங்கினால், நாளைய வியாபாரம் இல்லாமல் போகும்.

Monday, May 11, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 5

ஒரு நாள் சுப்பிரமணி என்கிற குரங்கு ( சுப்பிரமணி நாய்க்கு தான் பெயர் வைக்க வேண்டும் என்று இல்லை. குரங்குக்கு வைக்கலாம்.) இயற்கை அழகை வரைய விரும்பியது. மலை சார்ந்த இடத்திற்கு சென்று மலை, ஆறு, பறவை என்று அழகாக அனைத்து இயற்கை காட்சியையும் படம் போல் வரைந்தது. 

முதல் முறையாக வரைந்தப்படம் என்பதால் தனது நண்பர், உறவினரிடம் படத்தை காட்டி, 

"நான் முதல் முறையாக வரைந்த படம். உங்கள் கருத்தை தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்க தவறாக அல்லது நன்றாக இல்லாததை சுட்டிக் காட்டினால், நன்றாக இருக்கும்" என்றது. 



ஒவ்வொரு குரங்கும் தங்கள் கண்ணில் பட்ட குறைகளை எடுத்துக் கூறியது. ஒரு கட்டத்தில் சுப்பிரமணிக்கு நம்பிக்கையற்று போனது. இனி நம்மால் எந்த ஓவியமும் வரைய முடியாது என்று நம்பிக்கை இழந்தது. தனியாக அழுதுக் கொண்டு இருந்தான்.

அப்போது, சுப்பிரமணிக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுத்த குருநாதர் வருகிறார். 

"தாங்கள் கற்றுக் கொடுத்த ஓவியம் பயனில்லாமல் போயிவிட்டது. அனைவருக்கும் பிடித்ததுப் போன்ற ஓவியத்தை என்னால் வரைய முடியவில்லை" என்று வருந்தியது. 

குருநாத குரங்கு எவ்வளவு சொல்லியும் சுப்பிரமணி ஆருதல் அடையவில்லை. குரு குரங்கு சுப்பிரமணி வரைந்த ஓவியத்தை அவனது நண்பர்கள், உறவினர்களிடம் எடுத்து சென்றார். 

"சுப்பிரமணி வரைந்த ஓவியத்திற்கு தாங்கள் கூறிய கருத்து உதவியாக இருந்தது. ஆனால், எப்படி இருக்க வேண்டும் என்று வரைந்து காட்டினால், தனது ஓவியத்தை சுப்பிரமணி சரி செய்துக் கொள்ள உதவியாக இருக்கும்" 
என்று குரு குரங்கு கூறியது.

குறை கூறிய எந்த குரங்கும் அந்த ஓவியம் எப்படி இருக்க வேண்டும் வரைய முடியவில்லை. 

Management நீதி : 

நிர்வாக முடிவுகளையும், திட்டங்களையும் குறைக் கூறுவது மிக எளிது. ஆனால், அதற்கான மாற்று யோசனை, செயல் திட்டம் இல்லை நம்மிடம் இல்லாத பட்சத்தில் குறைக் கூறக்கூடாது.

Friday, May 8, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 4

கதிரேசன் என்கிற சிங்கக்குட்டி காட்டில் வழி தெரியாமல் தவித்தது. அப்பா சிங்கம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்பா சிங்கமும் தனது குட்டி கதிரேசனை தேடி அலைந்தது. 

அப்போது, சிங்கக்குட்டி தன்னை போன்ற குட்டி கரடியைப் பார்த்தது. இரண்டும் நேருக்கு நேர் முறைத்தது. அப்பா சிங்கம் வேட்டையாடும் போது சண்டைப் போட்டிருப்பதை கதிரேசன் பார்த்திருக்கிறான். தனியாக மாட்டியிருக்கிறோம் என்று அஞ்சாமல் சண்டைப் போட வேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டது. குட்டி கரடி தாக்கும் முன்பே கதிரேசன் தாக்கத் தொடங்கினான். குட்டி கரடி வலியில் துடித்தது. கத்தியது. நம்மால் பிரச்சனையை சமாளிக்க முடியும். 



வேட்டையாட முடியும் என்று கதிரேசனுக்கு நம்பிக்கை வந்தது. ஆனால், வலியில் அலரிய குட்டி கரடியின் குரல் கேட்ட அப்பா கரடி அந்த இடத்துக்கு வந்தது.. முன்பு கிடைத்த வெற்றியில் கதிரேசன் உருவத்தில் பெரிய கரடியிடம் மோத சென்றது. 

ஒரே அடி... குட்டி கதிரேசன் பறந்து விழுந்தான். தன்னால் பெரிய கரடியிடம் மோதி வெற்றிப் பெற முடியாது என்று புரிந்துக் கொண்டான். ஆனால், அப்பா கரடி விடுவதாக இல்லை. தன் குட்டியை தாக்கிய குட்டி சிங்கத்தை கொல்ல வந்தது.

நல்ல வேளை. அப்பா சிங்கம் அந்த இடத்தில் வர, கதிரேசன் தப்பித்தான். குட்டி கதிரேசனுக்கு விழுந்த அடிப்போல், பெரிய கரடிக்கு விழுந்தது. குட்டி கரடியும், பெரிய கரடியும் ஓடிப்போனது. 

 Management நீதி :

சிறு பிரச்சனை தீர்வு காணும் போது சில நம்பிக்கை பிறக்கும். அந்த நம்பிக்கையில் பெரிய பிரச்சனையை கையாளக் கூடாது. மேலாளரிடம் கூறி பெரிய பிரச்சனைக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த பிரச்சனைக்கு நம்மால் முடிவு எடுக்க தகுதியிருக்கோ அதற்கு மட்டுமே முடிவு எடுப்பது நல்லது.

Monday, May 4, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 3

அதே காடு. அதே சிங்க ராஜா. தலைமை நரி. அதற்கு கீழ் இரண்டு நரி. அதற்கு கீழ் பண்ணிரண்டு வேட்டை நாய்கள்.



முன்பை விட அளவுக்கு அதிகமாகவே உணவு கிடைக்கிறது. பண்ணிரண்டு வேட்டை நாய்களுக்கு பதிலாக பத்து வேட்டை நாய் இருந்தாலே போதுமானதாக இருக்கும். இரண்டு வேட்டை நாய்யை வெளியே அனுப்பிவிடலாம் என்று சிங்கம் கருதியது. தலைமை நரி எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்கவில்லை.

தலைமை நரிக்கு கீழ் இருக்கும் இரண்டு நரிகளை சிங்கம் அழைத்தது.

"பண்ணிரண்டு வேட்டை நாய்களில் வேலை சரியாக அல்லது குறைவாக செய்யும் வேட்டை நாய்யைப் பற்றி சொல்லுங்கள். அதை நமது கூட்டத்தை விட்டு விளக்கிவிடலாம். தேவையில்லாமல் அதற்கு நாம் ஏன் வேலை, உணவு கொடுக்க வேண்டும்" என்று கூறியது.

சிங்கத்தை எதிர்த்து அந்த இரண்டு நரிகள் எதுவும் பேசவில்லை. பேசினாலும், எடுப்படாது என்பது அதற்கு நன்கு தெரியும். அதனால், ஒரு காகிதத்தில் இரண்டு பேரை எழுதி சிங்கத்திற்கு நரி அனுப்பியது.

அதில், அந்த இரண்டு நரிகளின் பெயர் இருந்தது.

இந்த இரண்டு நரியை நீக்கிவிட்டால், பண்ணிரண்டு வேட்டை நாய்களை தான் வேலை வாங்க வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பதை சிங்கம் உணர்ந்தது. அதனால், யாரையும் கூட்டத்தை விட்டு சிங்கம் அனுப்பவில்லை.

Management நீதி : :

உண்மையான மேலாளர் தனது வேலை காப்பாற்றிக் கொள்ள தனது கீழ் இருப்பவர்களை பலியாடாக்க கூடாது. தனது வேலையை விட அவர்களின் வேலை பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உணர்ந்தால் தான், அவர்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியும். தங்கள் வேலைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து உண்டு என்று தெரிந்தால், அவர்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியாது. மேலாளர்களால் வேலை வாங்குவதும் சிரமம்.

Thursday, April 30, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 2

ஒரு அடர்ந்த காடு. மற்றக் காட்டைப் போல இந்த காட்டிலும் சிங்கம் தான் ராஜாவாக இருந்தது. அதன் கீழ் மூன்று தந்திர நரிகள், ஒவ்வொரு நரிக்கும் கீழ் நான்கு வேட்டை நாய்கள் இருந்தது. 

சிங்கத்தின் ஆணைக்கிணங்க ஒரு நரியின் தலைமையில் நான்கு வேட்டை நாய்கள் வேட்டைக்கு சென்று வேடையாடி வர வேண்டும். இந்த பதினைந்து மிருகம் ( 3 நரி + 12 வேட்டை நாய்) கொண்டு வரும் உணவை மற்ற விலங்குகள் உணவாக உண்டு வந்தது. அதற்காக மற்ற விலங்குகள் வேலை செய்யாமல் இல்லை. தங்கள் தகுதிக்கு தகுந்த உணவை வேட்டையாடுவதும், மீதி உணவை பராமரித்து அடுத்த வேளைக்கு உணவாக பயன்படுத்தும் வேலையை செய்து வந்தது. ஆனால், உணவுக்கு இந்த பதினைந்து பேர் பங்களிப்பு மிக அதிகமாக இருந்தது. 



மூன்று நரிகளில் யார் சிறந்த நரி என்று தேர்வு செய்து, அதில் ஒன்றை தலைமை மேலாளராக நிர்வாகம் செய்ய சிங்கம் தீர்மாணித்தது. அதனால், ஒவ்வொரு குழுவிற்க்கு உணவு இவ்வளவு கொண்டு வர வேண்டும் என்று நிர்ணயம் செய்தது. 

மூன்று நரி குழுவும் தங்கள் திறமையை பயன்படுத்தி வேட்டை நாய் உதவியோடு பல விலங்களுகளை வேட்டையாடி உணவாக கொண்டு வந்தது. சிங்கத்தை சந்தோஷப்பட்டு நரிகளும் வேட்டை நாய்யை முடிந்த வரை வேலை வாங்கியது. 

எந்த நரி சிறந்தது என்று சிங்கத்தால் தீர்மாணிக்க முடியவில்லை. மூன்று நரிகளும் திறமையால் ஒன்றுக்கு ஒன்று சலைத்தது கிடையாது. பிறகு ஒரு யோசனை தோன்றியது. நரிக்கு கீழ் வேலை செய்யும் வேட்டை நாய்யை தனியாக அழைத்து பேசியது. 

அதில், முதல் நரி கீழ் வேலை செய்யும் வேட்டை நாய்கள் நரி தங்களில் ஒருவரகாக பழகுகிறது. அதனால், அவரின் தோழமைக்காக அவர் சொல்லும் வேலையை செய்கிறோம் என்றது. 

இரண்டாவது நரியின் கீழ் வேலை செய்யும் வேட்டை நாய்கள், தங்கள் வேட்டையாடிய விலங்குகளில் இருந்து ஒரு பகுதியை வெகுமதியாக கொடுக்கும். அதனால், வேட்டையாட உத்வேகமாக இருந்தது என்றது. 

மூன்றாவது நரியின் கீழ் வேலை செய்யும் வேட்டை நாய்கள், தங்களை விட நரி தான் அதிக மிருங்களை வேட்டையாடும். தலைமையில் இருப்பவர் இவ்வளவு வேட்டையாடும் போது, அவருக்கு கீழ் இருக்கும் நாம் எவ்வளவு விலங்களுகளை வேட்டையாடிக் காட்ட வேண்டும் என்று கூறியது. 

சிங்கம் மூன்றாவது நரியை தலைமை நரியாக அறிவித்தது. 

Management நீதி : 
தோழமையோடு பழகுவதும், லாபத்தில் பங்கு தருவது எல்லா தலைமையில் இருப்பவர்களால் செய்ய முடியும். ஆனால், தங்கள் கீழ் வேலை செய்பவர்களுக்கு நிகராக உழைத்து, அவர்களுக்கு உத்வேகம் அளிப்பது போல் உழைத்துக் காட்டுவது மிக அரிதான தலைமை பண்பு.

Tuesday, April 21, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 1

வேலையை மாற்றிக் கொடுப்பது

ஒரு வியாபாரி தனது வீட்டில் குதிரையும், கழுதையும் வைத்திருந்தான். வியாபாரத்திற்காக தனது பொருட்களை கழுதையின் முதுகு மீது கட்டுவான். குதிரை மீது தான் அமர்ந்தவாறு கழுதையின் இழுத்துச் செல்வான்.

பொருட்கள் எடுத்து செல்லும் எல்லா ஊரிலும் வியாபாரியின் பொருட்கள் நன்றாக விற்பனையானது. அந்த வியாபாரிக்கு நல்ல லாபம் கிடைத்தது. அதனால், வழக்கத்திற்கு மாறாக விற்பனைக்கு அதிகப் பொருட்கள் எடுத்துச் செல்லலாம் என்று தீர்மாணித்தான். 



அடுத்த நாள் வியாபாரத்திற்கு கழுதையின் மூதுகில் ஒரு மூட்டைக்கு பதிலாக இரண்டு மூட்டையை கட்டினான். கழுதையால் சுமக்க முடியாமல் பாதி வழியில் திணறியது. வேறு வழியில்லாமல் ஒரு மூட்டையை தான் சுமந்தவாறு குதிரையில் பயணம் செய்தான். சிறுது தூரம் சென்றதும் குதிரை கடிவாளம் பிடித்துக் கொண்டு மூட்டையை வியாபாரியால் சுமக்க முடியவில்லை. அதனால், இரண்டு மூட்டையை குதிரை மீது கட்டினான். 

குதிரையின் முதுகில் விற்பனை பொருட்கள் இருந்ததால் அந்த வியாபாரி குதிரை மீது அமர முடியவில்லை. வேறுவழியில்லாமல் கழுதை மீது அமர்ந்துக் கொண்டு பயணம் செய்தான். 

வியாபாரியின் எடையையை விட இரண்டு மூட்டைகளின் எடை குறைவாக இருந்ததால் குதிரை சந்தோஷமாக நடந்து வந்தது. ஆனால், இரண்டு மூட்டையை சுமக்க முடியாமல் கஷ்டப்பட்டு நடந்து வந்த கழுதை, வியாபாரியை சுமக்க முடியாமல் அங்கையே சோர்ந்து விழுந்தது. அதன் பிறகு வழக்கமாக சுமக்கும் ஒரு மூட்டை எடையைக் கூட சுமக்க முடியவில்லை. 

வியாபாரத்திற்கு சரியான நேரத்தில் சென்றால் தான் இரண்டு மூட்டை பொருட்களையும் அந்த வியாபாரியால் விற்பனை செய்ய முடியும். இப்போது ஒன்றுக்குமே உதவாக கழுதை என்ன செய்வது என்று யோசித்தான். 

வேறு வழியில்லாமல் கழுதையை அங்கேயே விட்டுவிட்டு குதிரையோடு நடந்து பயணம் செய்தான். யார் உதவி செய்ய முடியாததல் கழுதை அங்கையே இருந்தது. வியாபாரி நடந்து சென்றதால் நேரத்திற்கு செல்ல முடியவில்லை. 

Management நீதி : 
கழுதைக்கு கொடுக்க வேண்டிய வேலையை குதிரைக்கும், குதிரைக்கு கொடுக்க வேண்டிய வேலையை கழுதைக்கு கொடுத்தாலும் அந்த வேலை உருப்படாது. மேலும் அதிக வேலை தான் நமக்கு கொடுக்கும்.

Tuesday, September 27, 2011

சுயமுன்னேற்ற நூலின் அவசியம்

ஒவ்வொரு புத்தக்க் கண்காட்சியிலும் அதிகமாக விற்பனையாகும் நூல் என்றால் ஜோதிடம், சமையல் என்பார்கள். ஆசிரியர் யாராக இருந்தாலும் இந்த இரண்டு பிரிவு நூல்களை வாங்கும் கூட்டம் இருந்துக் கொண்டு தான் இருக்கும். இந்த இரண்டை தவிர்த்து அடுத்து அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் சுயமுன்னேற்றம் தான். குட்டி கதை, தன்னம்பிக்கை தரும் வரிகள், உத்வேகம் தரக்கூடிய தலைப்பு இருந்தால் போதும் சுயமுன்னேற்ற நூல்கள் விற்பனையாகிவிடும்.

ஒரு முறை ஆதிஷா, லக்கியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு நடிகர் சுயமுன்னேற்ற நூலை கடுமையாக சாடினார் என்பதை கூறிப்பிட்டார்கள். ”சுயமுன்னேற்ற நூல் எழுதுபவர்கள் எல்லோரும் என்ன சாதித்துவிட்டார்கள் ? பணம் சம்பாதிப்பது எப்படி ? என்று புத்தகம் போட்டு பணம் சம்பாதிக்க பார்க்கிறார்கள். புத்தகம் வாங்குபவன் அப்படியே தான் இருக்கிறான்” என்பதை அந்த நடிகர் குறிப்பிட்டதாக கூறினார். அப்போது அவரிடம் பதில் கூறும் நிலையில் இல்லை. ஆனால், அதற்கு பதில் இந்த கட்டுரையில் சொல்லியாக வேண்டும்.

வாழ்க்கையில் முன்னேறி அதிகம் பணம் சம்பாதித்தவர்கள் தான் சுயமுன்னேற்ற நூல் எழுத வேண்டும் என்றால் அம்பானி, பில் கேட்ஸ் மட்டுமே நூல் எழுத முடியும். ஆனால், அவர்கள் வாழ்க்கையை படித்து, அறிந்து எத்தனையோ பேர் தன்னம்பிக்கை வளர்த்திருக்கிறார்கள். அப்படி பலரது தன்னம்பிக்கை வளர்த்த அம்பானி, பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர் பங்கு இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.

சுயமுன்னேற்ற நூல் எல்லாம் பேத்தல் என்று சொல்லும் அந்த நடிகர் எத்தனை வெற்றிகளை குவித்துவிட்டார். சோர்வு பெற்ற மனதிற்கு குடி, தற்கொலை என்று காட்டிலும் தன்னம்பிக்கை தரக் கூடிய சுயமுன்னேற்ற நூல்கள் மிகவும் நல்லது.

பொதுவாக, சுயமுன்னேற்ற நூல் ஒரு பொழுதுபோக்கு நூல் இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். பத்திரிகை செய்திப் போல் அல்லது சிறுகதை, நாவல் போல் பரபரப்பாக வாசிக்க முடியாது. வாசிக்கவும் கூடாது. தோல்வி அடைந்தவர்களுக்கு வெற்றி அவர்கள் காலடியில் ஒளிந்திருப்பதை காட்டுவது சுயமுன்னேற்ற நூலின் தலையாத கடமை.

உண்மையில், சுயமுன்னேற்ற நூலை வாசிக்கும் போது ஏற்கனவே நமக்கு தெரிந்து விஷயத்தை வாசிப்பது போல் தான் இருக்கும். புதிதாக இல்லாத ஒன்றுக்காக பணம் கொடுத்து புத்தகம் வாங்கினோம் என்று கூட தோன்றும். ஆனால், ஒன்று நாம் மறந்துவிடுகிறோம். இந்த புத்தகம் படிக்கும் வரை நமக்கு தெரிந்த விஷயம் ஏன் ஞாபகத்திற்கு வரவில்லை. ஒவ்வொரு வரியும் வாசிக்கும் போது நமக்கு தெரியாத புதுசா என்ன சொல்லிவிட்டான் ? என்ற எண்ணத்துடன் எந்த புத்தகத்தை அணுக்க கூடாது.

சுயமுன்னேற்ற நூல்களை நல்ல நண்பனாக அணுக வேண்டும். கருத்துக்கள் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ முழுமையாக படித்துவிட வேண்டும். அதன் பிறகு அதற்கு எதிர்வாதங்கள், கேள்விகளும் கேட்கலாம். மன சோர்வு அடையும் போது தன்னம்பிகையுட்டும் நண்பர்கள் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்படி அமையாதவர்களுக்கு சுயமுன்னேற்ற நூல் ஒரு வரப்பிரசாதம்.

ஆரம்பக்காலத்தில் எனக்கு அதிகம் தன்னம்பிக்கைம் கொடுத்தது ‘You Can Win’ புத்தகம் தான். இதுவரை, நானே பதினைந்து பேருக்கு பரிசாக இந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறேன். இதை விட சிறந்த தன்னம்பிக்கை புத்தகங்கள் (Neopolean Hill, Richard Templar புத்தகங்கள்) பல இருந்தாலும், நான் தோல்வி விலும்பில் இருக்கிறேன் என்று நினைக்கும் போது ‘You Can Win’ புத்தகத்தை தான் வாசிப்பேன்.

ஒவ்வொரு பூஜையறையில் பகவத் கீதை, குரான், பைபிள் என்று இருப்பது போல் உங்கள் புத்தக அலமாரியில் உங்கள் விருப்பமான சுயமுன்னேற்ற நூல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் நல்லது மட்டும் சொல்லி, நல்லதே செய்யக் கூடிய நண்பர்கள் அமைவது கடினம். நல்ல சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பது சுலபம். உங்கள் வாழ்க்கைக்கான விடை உங்களிடம் இருக்கிறது எனபதை உணர உதவுவது சுயமுன்னேற்ற புத்தகங்கள் தான்.

Tuesday, August 16, 2011

நினைப்பது முடியும் – ஒரு நாள் கருத்தரங்கம்

மனித வளம் மற்றும் சுயமுன்னேற்ற பயிற்சி நிறுவனமான Vision Unlimited தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதை கொண்டாடும் விதமாக ஒரு நாள் கருத்தரங்கத்தை ஹோட்டல் சவேராவில் வரும் 20ஆம் தேதி,ஆகஸ்ட் அன்று ஏற்பாடு செய்துள்ளார்கள்.

நினைப்பது முடியும் – ஒரு நாள் கருத்தரங்கம்

Self Concept – Focus in Life
புது வரம் நீ உனக்கு

- என்ற தலைப்பில் பேசவிருப்பவர் ’ Vision Unlimited’ நிறுவனத்தின் தலைவர் டாக்டர். பாலசாண்டில்யன்

Enhancing & Empowering Personality
தொடங்கட்டும் ஒரு மகிழ்ச்சிப் பயணம்

- என்ற தலைப்பில் பேசவிருப்பவர் திரு. லேனா தமிழ்வாணன்

Work Life Balance
பெரிய பூட்டு சின்ன சாவி

- என்ற தலைப்பில் பேசவிருப்பவர் கே.சுமதி, வழக்கறிஞர்

It’s now or never !
நாளை எனும் நம்பிக்கை

- என்ற தலைப்பில் பேசவிருப்பவர் திரு.உதய சான்றோன்


ரூ.3000/- மதிப்புள்ள் இந்த ஒரு நாள் கருத்தரங்கம் ரூ.1200/- க்கு தரவிருக்கிறார்கள். இதில், ரூ.600 மதிப்புள்ள சவேரா ஹோட்டல் உணவு, சிற்றுண்டி, தேநீர் மற்றும் ரூ.600 மதிப்புள்ள பயிற்சி பொருட்கள் வழங்கவிருக்கிறார்கள்.


விருப்பமுள்ள நண்பர்கள் Vision Unlimited த்தின் தலைவர் திரு. பாலசாண்டில்யன் – 9840027810 மற்றும் உதய சான்றோன் – 91711 71473 தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல் : balasandilyan@yahoo.com
இணையம் : www.visionunlimited.in

Thursday, July 28, 2011

நியாயமான முடிவு ?

ஒரு கிராமத்தில் இரண்டு ரயில் தண்டவாளம் இருக்கிறது. முதல் தண்டவாளம் பழுதடைந்து, இயங்கப்படாமல் இருக்கிறது. மற்றொன்று சீராக இயங்கிக் கொண்டு இருக்கிறது. தினமும் ரயில் இரண்டாவது தண்டவாளத்தில் தான் வந்து செல்லும்.

கூட்டமாக நான்கு குழந்தைகள் ரயில் வே தண்டவாளத்தில் விளையாட வருகிறார்கள். ஒரு குழந்தை பழுதடைந்த தண்டவாளத்தில் விளையாடலாம் என்று சொல்ல, மற்ற மூன்று குழந்தைகள் மறுத்ததோடு இல்லாமல் இயங்கிக் கொண்டு இருக்கும் தண்டவாளத்தில் விளையாட செல்கிறார்கள். முதல் குழந்தை மட்டும் இயங்கும் தண்டவாளத்தில் விளையாட பயந்து, பழுதடைந்த தண்டவாளத்தில் விளையாடுகிறது.



குழந்தைகள் அழகாக சிரித்து விளையாடிக் கொண்டு இருக்கும் போது ரயில் ஒன்று வேகமாக வருகிறது. விளையாடிக் கொண்டு இருக்கும் மூன்று சிறுவர்களும் ரயில் வருவதை கவனிக்கவில்லை. அடுத்த தண்டவாளத்தில் தனியாக இருக்கும் சிறுவனும் ரயில் வருவதை பார்க்கவில்லை. ரயில் வேகமாக மூன்று சிறுவர்களை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது.

அந்த சமயத்தில் நீங்கள் அங்கு வருகிறீர்கள். வேகமாக வரும் ரயிலை பக்கத்து தண்டவாளத்தில் மாற்ற வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி செய்தால் தனியாக இருக்கும் சிறுவன் இறந்து விடுவான். எதுவும் செய்யவில்லை என்றால் மூன்று சிறுவர்கள் இறந்துவிடுவார்கள். இப்போது, மூன்று சிறுவர்களை காப்பாற்ற நினைப்பீர்களா ? ரயில் போகட்டும் என்று சும்மா இருப்பீர்களா ?

என்ன முடிவு நீங்கள் எடுப்பீர்கள் ??

மூன்று சிறுவர்கள் உயிரை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு சிறுவன் உயிர் பெரியதில்லை. ஒரு சிறுவன் உயிர் போனாலும் மூன்று சிறுவர்களை காப்பாற்றுவேன் என்று பலர் பதில் அளிப்பார்கள். நானும் அப்படிதான் பதிலளித்தேன். ஆனால், அது தவறான முடிவு.

அஜாக்கிரதையாக ரயில் இயங்கும் தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்களுக்காக பாதுகாப்பாக விளையாடும் சிறுவனை எப்படி நாம் பலிக் கொடுக்க முடியும் ? ஆபத்தான தண்டவாளத்தில் விளையாடியது அந்த மூன்று சிறுவர்களின் தவறு. அதற்கான தண்டனை மரணம் என்றால் அதை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். இரண்டாவது தண்டவாளம் பழுதடைந்து இயங்கப்படாமல் இருக்கிறது. மூன்று சிறுவர்களை காப்பாற்றும் முயற்சியில் ரயில் பாதையை மாற்றினால், ரயிலில் வரும் நூறு பேர் உயிர்களுக்கும் யார் உத்தரவாதம் கொடுப்பார்கள்.

மூன்று முட்டாள் சிறுவர்களுக்காக ஒரு சிறுவனை பலிக் கொடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. ரயில் இயங்கும் தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்கள் ரயில் எந்த நேரமும் வரலாம் என்பதை அறிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் பொறுப்பு.

இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல... ஒரு அலுவகத்திலும், அரசியலிலும், நாட்டிலும் பெரும்பான்மையில் லாபத்திற்காக சிறுபான்மை நசுக்கப்படுகிறார்கள் இல்லையென்றால் தண்டிக்கப்படுகிறார்கள். எந்த பக்கம் நியாயம் இருக்கிறது என்று அலசப்படுவதில்லை.

**

மின்னஞ்சல் அனுப்பிய நண்பர் தங்கரங்கனுக்கு நன்றி :)

Friday, October 29, 2010

Reaction and Response



ஹோட்டலில் ஒரு பெண் மீது கரப்பான்பூச்சி அவள் மீது விழ, கத்தி ஆரபாட்டம் செய்துவிட்டாள். கத்தக்கள்ளி, குச்சுபுடி என்று பல நடனங்கள் ஆடியும் அவள் உடலில் இருந்து அது அகரவில்லை. அவள் பக்கத்தில் இருக்கும் கணவன் தட்டி விட, அந்த கரப்பான் இன்னொரு பெண் மீது பவ்வியமாக அமர்ந்தது.

அந்த பெண் செய்தது இரண்டு மடங்கு நடனமாடி கரப்பான்பூச்சி தள்ளிவிடுகிறாள். அந்த கரப்பான் காபி கப் எடுத்து வரும் சர்வர் மீது கால் மேல் கால் போடாத குறையாக ஏறிக்கொண்டது.

அவன் அசரவில்லை. பொறுமையாக இருந்தான். அதன் அசைவுகளை தீவிரமாக கவனித்தான். தன் கையில் காபி கப்பை வைத்துவிட்டு, அது தப்பிக்க முடியாத நேரம் பார்த்து பிடித்து தூக்கி வெளியே ஏறிந்தான்.

அந்த ஹோட்டலில் நடந்த கலாட்டாவுக்கும் கரப்பான்பூச்சிக்கும் ஏதாவும் சம்மந்தமுண்டா ? இல்லை.

கரப்பான்பூச்சி தூக்கி ஏறிய சர்வர் காட்டிய நிதானத்தை அந்த இரண்டு பெண்மணிகள் காட்டவில்லை.

எந்த பிரச்சனையையும் நம் உடனே எதிர்விளைவை காட்டுவதிற்கு பதிலாக நாம் பொறுமையாக கையாள வேண்டும்.

வீட்டில் அப்பா திட்டுயதும், வாடி சென்று குழந்தைகள் அழுகிறது.

முதலாளி நம்மை திட்டிய பிறகு வேலையில் கோபத்தை காட்டி மேலும் தவறுகள் செய்கிறோம். நாம் தவறுகள் செய்வதற்கும், நம்மை திட்டியவர்களுக்கு எந்த சம்மந்தமில்லை. நாம் காட்டிய எதிர்விளைவு தான் காரணம்.

மேல் குறிப்பிட்ட பிரச்சனையில் பெரிதாக தெரிந்தது. காரணம், அந்த பெண் எதிர்விளைவை உடனே காட்டியது தான். சர்வர் பொறுமையாக கையண்டதால் பிரச்சனை மேலும் வளராமல் இருந்தது.

வரி விலக்கில்லாத ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால்

We should not react in life, we should always respond.
Reactions are always instinctive whereas responses are always intellectual


***

மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் சந்திருவுக்கு நன்றி :)

Thursday, July 22, 2010

வேகமாக செயல்படு அல்லது மிக வேகமாக செயல்படு !

இந்தியாவில் அதிக கேமிரா விற்கும் நிறுவனம் எது ?

நீங்கள் சோனி, கேனான், நிக்கான் என்று பதிலளித்தால், அது தவறு. இதில் யாருமே இல்லை. நோகியா தான் அதிக கேமிரா விற்கிறார்கள். ஆனால், அவர்கள் கேமிரா விற்பனையாளர்களாக தெரிவதில்லை. செல்போன் விற்பனை செய்பவர்களாக தெரிகிறார்கள்.

செல்போனோடு கேமிராவருவதால் கேமிரா விற்பனை குறைந்து போயிருக்கிறது. செல்போனிலே கேமிரா இருப்பதால் பலர் தனியாக கேமிராவை வாங்குவதில்லை. கேமிரா வாங்க வேண்டும் என்று இல்லை. செல்போனை கூட வாங்கலாம் என்பது தான் இன்றைய நிதர்சனம்.

இந்தியாவில் அதிக கேமிரா இசை பாடல்கள் விற்பனை செய்யும் நிறுவனம் எது ?

HMV இல்லை. ச-ரி-க–ம. அதும் இல்லை. ஏர்டெல் தான். காலர் டுயூன் என்ற பெயரில் ஒவ்வொரு நொடிக்கு பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். பல இசை ஆல்பம் நிறுவனங்களை விட ஏர்டெல் அதிகமாக சம்பாதிக்கிறது. அதுவும் நிமிடங்களில்..!



ஏர்டெல் இசை நிறுவனமில்லை. தொலைப்பேசி சேவை நிறுவனம் மட்டுமே. காலர் டியூன் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கொடுக்கும் சேவை. ஆனால், மற்ற இசை நிறுவனங்களை விட காலர் டியூனில் ஏர்டெல் லாபம் சம்பாதிக்கிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐ-போன்', கூகிள் நிறுவனத்தின் 'அன்திராய்ட்' போன்ற வரவால் தங்கள் விற்பனை பாதிக்க படலாம் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகிள், ஆப்பிள் செல்போன் விற்கும் நிறுவனமாக மாறபோகிறதா என்ன ? இல்லை.

நோக்கியாவுக்கும், கேனானுக்கு என்ன சம்பந்தம் ? ஏர்டெலுக்கும், எச்.எம்.விக்கும் என்ன சம்பந்தம் ? ஆனால் இதில் ஒரு நிறுவனத்தால் இன்னொரு நிறுவனத்தின் விற்பனை பாதிக்கிறது. மறைமுகமான போட்டியாளராக இருக்கிறார்கள்.

இந்தியாவின் மிக பெரிய யுத்த காவியம் என்று கேட்டால் 'மகாபாரதம்' என்று சொல்லுவார்கள். ஆனால், நாளை மிக பெரிய யுத்தம் இதுவாக தான் இருக்க முடியும். ஆம்... யார் நம் போட்டியாளர் ?

என் மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் " ஆப்பிள் நிறுவனம் சோனி நிறுவனத்துக்கு என்ன செய்தது, சோனி நிறுவனம் கோடாக் நிறுவனத்துக்கு என்ன செய்தது ?" . பதிலிது தான். சோனி நிறுவனம் ஒலியை விற்பனை செய்கிறார்கள். கோடாக் நிறுவனம் ஒளியால் படத்தை விற்பனை செய்கிறார்கள். ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த இரண்டையும் உள்வாங்கி கொண்டு தனது கணினியில் ஒலி (sound) மற்றும் ஒளி (Light)யை காட்டுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் கணினி சோனி, கோடாக் நிறுவனத்தை விழுங்கும் ஆபாயம் உள்ளது.



முன்பெல்லாம் கோடாக் பிலிம் வாங்கி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு இருந்தோம். டிஜிட்டல் காமிரா வந்ததும் கோடாக் பிலிம் வாங்குவது குறைந்துவிட்டது. காமிராவுக்காக தான் கோடாக் நிறுவனம் பிலிம் தயாரித்தது. ஆனால், பிலிம் இல்லாமல் காமிரா வரும் என்று கோடாக் நிறுவனம் யூகித்திருப்பார்களா ??

2008 ஆண்டில், பிரிட்டிஷ் ஆர்வேஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் யார் போட்டியாளராக இருந்தார்கள் தெரியுமா ? சிங்கபூர் ஆர்லைன்ஸ். இல்லை. இந்தியன் ஆர்லைன்ஸ். அதுவும் இல்லை. எச்.பி , சிஸ்கோ நிறுவனத்தின் டெலி கான்பிரன்ஸ் தான் பதில். யூகிக்க முடியாத பதில் தான். ரெசிஷன் சமயத்தில் நிறுவனங்களின் செலவுகளை குறைக்க பல மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் மேலதிகாரிகளை வெளியூர் அனுப்புவதற்கு பதிலாக, டெலிகான்பிரன்ஸ் முறையில் பேசி தங்கள் வேலையை முடித்துக் கொண்டனர். ரெசிஷன் சரியாகி மீண்டும் பழைய நிலையில் திரும்பினாலும், ஆர்லைன்ஸ்யை விட டெலிகான்பிரஸ் முறையை தான் பயன்படுத்துவார்கள்.

இந்திய மக்களுக்கு இரண்டு பொழுது போக்கு விஷயம், ஒன்று சினிமா. இன்னொன்று கிரிக்கெட். டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி நடந்த வரையில் சினிமாவுக்கும், கிரிக்கெட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கிரிக்கெட்டில் ஷேவாக், தோனி கடவுள் என்றால், சினிமாவில் ரஜினி, கமல் கடவுள். இரண்டும் வெவ்வேறாக தான் இருந்தது. ஆனால், 20-20 ஓவர் IPL ஆட்டம் வந்ததும் பல படங்கள் வெளியிட தயங்கினர். சில திரையரங்குகளில் 20-20 IPL கிரிக்கெட் ஆட்டத்தை பிரத்தியேக முறையில் ஒளிபரப்பினர். படங்களை திரையிட கூட திரையரங்கு கிடைக்கவில்லை. காரணம், 20-20 கிரிக்கெட், சினிமாவும் மூன்று மணி நேர பொழுது போக்கும் அம்சம் கொண்டது. 3 மணி நேரம் படம் பார்த்தால் என்ன ? கிரிக்கெட் பார்த்தால் என்ன ? ரசிகர்களின் எண்ணம் சினிமாவை ஓறம் கட்டியது.

முப்பது வருடங்களுக்கு முன்பு, கருப்பு வெள்ளை படம், டைப் ரைட்டர், ஃபௌன்ட்டன் பேன் பயன்படுத்தினர். இப்போது அது எல்லாம் நினைவு சின்னம் தான். கணினி வந்த பிறகு டைப் ரைட்டரை யாரும் பயன்படுத்துவதில்லை. விஞ்ஞான வளர்ச்சி பல கருவிகள் உருவாக்குகிறது மட்டுமல்ல, உருவாக்கின கருவிகளை அழித்தும் இருக்கிறது.

இன்று காலையில் சிக்கிரம் விழிக்க யார் ஆலாரத்தை நாடுகிறார்கள். எத்தனை பேர் வீட்டில் ஆலார கடிகாரம் இருக்கிறது. செல்போன் எடுத்தோமா , நேரத்தை செட் செய்தோமா... அவ்வளவு தான். காலையில் திரைப்பட பாடலோடு விழிக்கலாம். ஆனால், இதில் பாதிக்க பட்டது டைட்டன் நிறுவனம் தான். ஆலார கடிகாரத்தை டைட்டன் நிறுவனம் இப்போது தயாரிப்பது இல்லை.

நாளைய புத்தகங்களுக்கு பதிலாக ஈ -புக் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். ஏன் பாடம் சொல்லி தரும் ரோபோவாக இருக்க கூடாது ? ஆசிரியர், புத்தகம் இரண்டுமே தேவையில்லை. நினைத்தமாத்திரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் சந்தேகம் கேட்கலாம்.

நாளை ஆப்பிள் நிறுவனம் கதை சொல்லி இயந்திரத்தை தயாரித்தால் என்னாகும். எழுத்தாளர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளும். வணிகத்தில் தங்கள் போட்டியாளர்களை வைத்து தான் தங்கள் தயாரிப்பை நிர்ணயம் செய்தார்கள். ஆனால், இப்போது போட்டியாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது..... ‘யார் நம் போட்டியாளர் ?’ என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

வேகமாக செயல்படு அல்லது மிக வேகமாக செயல்படு !!

***

மேல் சொன்ன கட்டுரை ஐ.ஐ.எம், பெங்களூர் பிரோபஸர் டாக்டர் ஒய்.எல்.வி. மூர்த்தி அவர்கள் “Have breakfast .. or be breakfast” என்ற தலைப்பில் எழுதியது. இந்த கட்டுரை ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தமிழ் வடிவமாக்கியுள்ளேன்.

நான் படித்த சிறந்த தன்னம்பிக்கை கட்டுரைகளில் இதுவும் ஒன்று. பத்து முறைக்கு மேல் வாசித்தேன்.

Saturday, December 19, 2009

80/20 - ஒரு புதிய ஆட்டம் - (பகுதி - 2)

முதல் பகுதி

சென்ற பதிவில் 80/20 தத்துவத்தை பற்றி எழுதியிருந்தேன். பலர் அதை ஒரு ‘Business Principle’ ஆக தான் பார்க்கிறார்கள். நாம் வாழ்க்கையில் பினைந்து விட்ட ஒன்று என்பதற்கு சில உதாரணங்கள் பார்ப்போம்.

நீங்கள் வேலை முன்னேற 100 சதவீத முழு மூச்சோடு உழைக்க வேண்டும் என்று இல்லை. 20 சதவீதம் செலவழிக்கும் முயற்சியில் தான் உங்கள் 80 சதவீத வெற்றி அடங்கி இருக்கிறது. உதாரணத்திற்கு, வேலைக்கு சரியான நேரத்திற்கு செல்லுதல், வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியாக முடித்தல், நாகரிகமான உடை அணிந்து அலுவலகம் வருதல் போன்ற சின்ன சின்ன விஷ்யங்கள் உங்கள் மேல் மேலாளருக்கு நல்ல எண்ணம் வரும். அதுவே உங்கள் 80 சதவீத வெற்றிக்கு காரணமாக இருக்கும்.



20 சதவீத உற்பத்தி பொருள் நிறுவனத்திற்கு 80 சதவீத லாபத்தை தருகிறது. ஒரு பொருளை விற்றால் நான்கு மடங்கு லாபம் சம்பாதிக்கும் படி தான் பொருளின் விலையை நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும்.

20 சதவீத வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் 80 சதவீத வருமானத்திற்கு காரணமாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, எல்.ஐ.சி முகவர் தொடர்பில் இருக்கும் வாடிக்கையாளர் தெரிந்தவர்களுக்கு சிபாரிசு செய்வதை சொல்லலாம்.

நாட்டில் இருக்கும் 20 குற்றவாளிகள் தான், 80 குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறார்கள். 20 மோட்டார் வாகனங்களால் தான் 80 விபத்துகள் நடக்கிறது. 20 சதவீதம் வீட்டை அழகு படுத்தினால் 80 சதவீதம் பார்க்க அழகாக இருக்கும்.

80 சதவீத ஓட்டுகளில், இருபது சதவீத ஓட்டுகளை பெற்று தொகுதி வெட்பாளர் வெற்றி பெருகிறான்.

இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம்.இவ்வளவு எதற்கு... ஒரு பாரில் 20 குடிகாரர்கள் 80 பாட்டில் சரக்கு குடிக்கிறார்கள். ( இது ரொம்ப எளிமையான உதாரணம் ! )

சரி...! 80/20 நம் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கிற ஒன்று என்று ஏற்றுக் கொண்டு இருப்பீர்கள். அது என்ன 80/20.... ஏன் 50/50, 60/40 என்று இருக்க கூடாதா...?? இருக்க முடியாது என்பது தான் வல்லுநர்களின் கருத்து.

ஒவ்வொரு பிரிவில் சேர்ந்த வல்லுநர்கள் தங்களிடம் இருக்கும் தகவல்களை வைத்து ஆய்வு செய்த போது, முடிவில் 80/20 நெருக்கமாகவோ அல்லது அதற்கு மேலாக தான் வந்தது. அதனால், 80/20 என்று இந்த தத்துவதிற்கு பெயர் வைத்துவிட்டார்கள்.

அப்படி என்ன தகவல்கள் வைத்து ஆய்வு செய்தார்கள்...??? அடுத்த பதிவில்.

Friday, December 11, 2009

80/20 - ஒரு புதிய ஆட்டம்

9 மணிக்கு ராமேஷ் அலுவலகத்தில் இருக்க வேண்டும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, 8மணிக்கு சென்றால் தான் முடியும். உடல் அசதியில் 7 மணி வரை தூங்கிவிடுகிறான். அவசர அவசரமாக குளித்து பாத்ரூம் விட்டு வெளியே வரும் போது காலில் அடிப்பட்டு விடுகிறது. எப்போதும் பொறுமையாக இருப்பவன், அன்று மனைவி சமையல் சரியில்லை என்று கரித்து கொட்டினான். வண்டியை வேகமாக ஓட்டும் போது ஒருவர் மீது மோதி சாலையில் சிறு பிரச்சனை யாகிறது. கடைசியில் ஒரு வழியாக அலுவகத்திற்கு 9.30 மணிக்கு வந்து சேருகிறான். அரை மணி நேரம் காலதாமதமாக வந்ததிற்கு, மேலாளரிடம் ‘அர்ச்சனை’ வாங்குகிறான். அன்று முழு அவன் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.



ரமேஷ்யின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் ? காலையில் சரியான நேரத்தில் எழுந்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது. ஒரு இடத்தில் தவறு நடந்ததால், பல இடங்களில் அதனின் பாதிப்பு தெரிகிறது. இதே சூழ்நிலையை எதிர்மறையாக சிந்திக்காமல், நேர்மறையாக சிந்தித்து பாருங்கள்.

ரமேஷ் சரியான நேரத்தில் எழுந்து சீக்கிரம் அலுவலகத்துக்கு தயாராகுகிறான். மனைவியின் சமையலில் குறை இருந்தாலும் சிரித்தப்படி சொல்லுகிறான். நேரம் அதிகமாக இருப்பதால் பொறுமையாக வண்டி ஓட்டி மேலாளருக்கு முன் செல்கிறான். மேலாளர் எதுவும் சொல்லலாததால் அன்றைய தினம் தன் வேலையில் தவறும் நடக்காமல் பார்த்துக் கொண்டான்.

சிறு புள்ளி தான். அதில் இருந்து சரியாக போனால் நேரான கோடு வரும். இல்லை என்றால் அது கிறுக்கல் தான். இதை தான், " முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்று பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். 80/20 தத்துவம் என்னவென்றால், முதல் புள்ளி சரியாக இருந்தால் போதும். கோடு என்ன… ஒரு பெரிய வீடே கட்டி விடலாம்.

"குறைந்த ஆட்களை வைத்து, அதிகமாக உற்பத்தி செய்தல்.
சிறிய நட்பு வட்டத்தில் இருந்து, பெரிய நட்பு வட்டத்தை உருவாக்குதல்.
குறைவாக முதலீடு செய்து பெரிதாக லாபம் பார்ப்பது"
- 80/20 அடிப்படை தத்துவம் இது தான்.

80/20 என்பது வியாபார தத்துவம் அல்ல.... நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் சந்திப்பது. சந்தித்துக் கொண்டு இருப்பது. சந்திக்க போவது....

20/20. 50/50 என்று எத்தனையோ ஆட்டம் பார்த்துவிட்டோம். இதுவும் ஒரு ஆட்டம் தான். ஆடி பார்த்துவிடுவோம்.

சினிமா, வியாபாரம், கல்வி, எழுத்து என்று நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் இந்த தத்துவத்தை தெரிந்துக் கொண்டால்.... சிகரத்தை தொட்டுவிடலாம்.

இதற்கு உதாரணம் அடுத்த பதிவில்........

LinkWithin

Related Posts with Thumbnails