வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Monday, April 20, 2015

காதல் கபடி !

Note : Inspired from பட்டுக்கோட்டை பிரபாகரின் “முதலாம் காதல் யுத்தம்” (சிறுகதை)


“விஷயம் தெரிஞ்சிடுச்சுல. அவன எப்படியாவது கட் பண்ணிடு” என்று போனின் எதிர்முனையில் குரல் கேட்டது. 

“என்ன.. கொலையா?” ஷாக்கானாள். 

 “கட் பண்ணனுமானா… கழட்டிவிடனும் சொன்னேன். இப்படி டியூப் லைட்டா இருக்க.அதான் அவன் உன் தலைமே நிக்குறான்” 

” சரி டி. “நாம லவ் பண்ண அப்புறம், எதுக்கு அவங்கள தனியா கொலை பண்ணனும்”. 

தனது தோழி இப்படி சொன்னதும் சொப்ணாவுக்கு சிரிப்பு வந்தது. எக்காரணத்திற்காகவும் தினேஷ்யிடம் சிரித்துவிடக் கூடாது என்பது தோழி யோசனை சொல்லியிருந்தாள். 

”சரி ! நா பேசிட்டு உனக்கு கால் பண்ணுறேன்.” என்று போன்னை துண்டித்தாள். சொப்ணாவுக்கு தினேஷ் மேல் கோபமாக இருந்தாள். அவள் தோழியின் யோசனை கேட்டப்பிறகு கோபம் அதிகமாகியிருந்தது. தினேஷ் பார்க்கிங் லாட்டில் வண்டியை வைத்துவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தான். அப்போது, கதவு திறக்கும் போது தினேஷ் மீது கதவு இடித்தது.

”சாரி சார்… சாரி சார்…” என்று பதட்டமாக ஹோட்டல் சேகியூரிட்டி கூறினான்.  
தினேஷ் கோபப்படாமல் சிரித்தப்படி “இட்ஸ்.. ஒகே” என்று நகர்ந்தான். எதையுமே கூலாக கையாள வேண்டும் என்று நினைப்பவன். தினேஷ் சொப்ணா அமர்ந்திருக்கும் டேபிள் நோக்கி வந்தான். 

 “ஹாய் ! சொப்ணா” என்று கூறி சிரித்துக் கொண்டே அமர்ந்தான். சொப்ணா முகத்தில் புன்னகையில் இல்லை. எரிச்சல் குடி புகுந்திருந்தது. எதோ விபரிதமாக பேசப் போகிறாள் என்பதை அவள் முகத்தில் தெரிந்தது. ஆனால், கோபத்தில் சொப்ணா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். 

”என்ன சொப்ணா ! வரச் சொல்லிட்டு எதுவும் பேசாம இருக்க” என்றான். 

 ”Can we breakup?” என்றாள் சொப்ணா. 

 “வாட் ?” தினேஷூக்கு அதிர்ச்சியாக இருந்தது. 



“நாம பிரிஞ்சடலாமானு இங்கிலீஷ்ல கேட்டேன்?” பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள். 

எந்த விஷயத்தையும் ஒன்று இரண்டு முறை சொன்னால் தான் தினேஷ் செய்வான் என்பது சொப்ணாவுக்கு தெரியும். ஆனால், பிரிய வேண்டும் என்பதை கூடவா இரண்டு முறை சொல்ல வேண்டும் என்பது சொப்ணாவுக்கு எரிச்சலாக இருந்தது. 

 ”நான் பேசிட்டேன் தினேஷ். நீ தான் இப்போ பேசமா இருக்க?” 

‘காபி சாப்பிடலாமா?’ என்கிற கேள்விக்கு ‘சரி’ என்றோ, ‘வேண்டாம்’ என்றோ, கேள்வி தன் கேள்விக் குறியை அணிவதற்கு முன்பே பதிலைச் சொல்லிவிட முடியும். பல நாள் கைகளை வருடி கடற்கரை ரசித்த காதலியை எந்த காரணம் இல்லாமல் பிரியவதற்கு என்ன பதில் கூற முடியும். எப்போதும் போன்ற சந்திப்பு என்று தான் தினேஷ் நினைத்தான். இறுதி சந்திப்புக்காக சந்திப்பு என்பதை தினேஷ் எதிர்பார்க்கவில்லை. 

 இப்படி ஒரு முடிவுக்கு வர காரணம் என்ன ? இந்தக் கேள்விக்கு எப்படி உடனே பதில் சொல்வது? அதற்குக்குள் சர்வர் வந்து நின்றான். 

”சார் ! யுவர் ஆர்டர்” 

இரண்டு கேள்விகளுக்கு எந்த கேள்விக்கு பதிலளிப்பது தினேஷ் முழித்தான். 

முதலில் சர்வரை அனுப்புவோம் என்று, “இரண்டு ஸ்வீட் கார்ன் சூப்” என்றான்.  
“இல்ல.. எனக்கு ஸ்வீட் கார்ன் வேண்டாம். டோமேட்டோ ஹாட் சூப்” என்றாள்.

சர்வர் இருவரை பார்த்து சிரித்தான். அவன் சொப்ணாயை பார்த்து வழிந்தது, தினேஷ் கோபத்தை வர வழைத்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தான். 

 “ஹலோ ! சொல்யாச்சுல. ஸ்விட் கார்ன், டோமேட்டோ ஹாட் சூப் கொண்டு வாங்க..” என்று கூறி தினேஷ் சர்வரை அனுப்பினான். 

சர்வர் சென்ற பிறகு, “என்னோட இண்டர்ஸ்ட் தெரியாம நீயே எப்படி ஆர்டர் பண்ணுவ” என்று சொப்ணா சீறினாள். 

“உனக்கு ஸ்வீட் கார்ன் பிடிக்குமே சொன்னேன்.” 

“இப்போ புடிக்கல..” 

 “ஸ்வீட் கார்ன் சூப்பா… இல்ல நானா ?” என்றான் தினேஷ். 

சொப்ணா முறைத்தாள். 

“ஏன் சொப்ணா. என்னாச்சு ?” சொப்ணா மௌனமாக இருந்தாள். 

தினேஷ் மீது இருக்கும் கோபத்தை வெளியே காட்டிவிடக் கூடாது எச்சரிக்கை உணர்வா அல்லது பொது இடம் என்கிற உணர்வா என்று தெரியவில்லை. பேசும் ஒவ்வொரு வார்த்தையை வீணாக்கக் கூடாது, அதே சமயம் சொல்ல வந்தது சரியாக சொல்லிவிட வேண்டும் என்பதில் சொப்ணா கவனமாக இருந்தாள். 

 ”நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”. கோபம் இப்போது அதட்டலாக மாறியிருந்தது. 

 ”நீயும் தான் சொல்லலை. பேசாம இரண்டு பேரும் காரணம் சொல்ல வேண்டாம். அப்படி சூப் குடிச்சுட்டு, பீச்சுக்கு போவோமா” என்றான். 

சொப்ணா தினேஷிடம் ரசிப்பது இந்த குணத்தை தான். எந்த பிரச்சனையையும் கேப்டன் தோனி போல் நடந்துக் கொள்வான். ஆனால், தற்சமயம் இந்த குணம் சொப்ணாவை கோபத்தை அதிகப்படுத்தியது. 

”நாம பிரியலாம் சொல்றேன். அதுக் கூட உனக்கு விளையாட்ட தெரியுதா..? 

“என்ன காரணம் சொல்லாம நீ பேசும் போது, எப்படி ரியாக்ட் பண்ணனும் தெரியல..” 

”காரணம் தெரியாதா?” 

”உன் மனதுசுல இருக்குற காரணம் தெரியாது.” 

” வசந்தி. அவ தான் காரணம். தோழி, தங்கச்சி மாதிரி சொல்லி தப்பிக்க பாக்காதே !” 

சொப்ணா கோபமாக பேசுவதை பக்கத்து டேபிள் இருக்கும் குழந்தை அமைதியாக பார்த்தது. தினேஷ் அந்த குழந்தையை பார்த்து சிரித்து ஒன்றும் நடக்காதது போல் காட்டிக் கொள்ள நினைத்தான். 

“கொஞ்சம் அமைதியா பேசு. இது ஹோட்டல். மத்தவங்க பாக்குறாங்க. அசிங்கமா நினைக்கப் போறாங்க” 

”நீ நடந்துக்கிட்டது அசிங்கமா இல்ல, நான் பேசறதுதான் அசிங்கமா இருக்கா?”

”ஒ.கே. ஒரு காலத்துல நா அவள காதலிச்சேன். அப்புறம் பிரிஞ்சிட்டோம். நா தேவதாஸ் அலையாம உன்ன காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கனும் நினைக்கிறது தப்பா ? ”

“நீ பண்ண தப்ப நியாயப்படுத்தா தினேஷ்?”

”தப்பே பண்ணல்ல. எப்படி நியாயப்படுத்த முடியும்!” சொப்ணாவின் கையில் ஹோட்டல் மேஜை மீது தட்டு மீது இருந்தது. கோபத்தில் தினேஷ் தலை உடைத்துவிடலாமா என்று யோசித்தாள். செய்த தவறை விட அவன் பேசிய நியாயம் தான் அவளுக்கு உருத்தலாக இருந்தது. சொப்ணா தினேஷிடம் இதற்கு மேல் பேச வேண்டுமா என்ற எண்ணம் தோன்றியது. 

”காதல் தப்பில்லனா. ரெண்டாவது காதல். மூனாவது காதல் எப்படி தப்பாகும் ?”

“பொறுக்கி தனத்துக்கு இப்படி ஒரு விளக்கத்த யாராலும் கொடுக்க முடியாது “

“இது பொறுக்கி தனம்னா. ஒரு கம்பேனியில வேலைவிட்டு அனுப்பும் போது இன்னொரு கம்பேனிக்கு வேலைக்கு போறவங்களும் பொறுக்கிங்களா ?”

 “அப்போ நா போனாலும் இன்னொருத்திய லவ் பண்ணுவ...” 

“சார் ! ஹார்ட் சூப் இல்ல. வேற ஏதாவது சூப் ?” சர்வர் இடையில் நுழைந்தான். மீண்டும் இரண்டு கேள்வி. எதற்கு பதில் சொல்வது ?. 

”சொப்ணா ! வேற எதாவது சூப் வேணும்னா சொல்லு…” என்று தினேஷ் கேட்டான். “நீ பதில் சொல்லாத வரைக்கும் சர்வர் உன்ன பார்த்து வழிவான்” என்று தினேஷ் மனதில் சொப்ணாக்கு சொல்லுவதுப் போல் சொல்லிக் கொண்டான். 

 “எனக்கு ஹாட் சூப் தான் வேணும்” என்று சொப்ணா உறுதியாக கூறினாள்.

“மேடம் ! எல்லா சூப்புமே ஹாட்டா தான் இருக்கும்”. சொப்ணா கோபம் இன்னும் தலைக்கேறியது. 

 “இருக்குற பிரச்சனையில் இவன் வேற நேரம் காலம் தெரியாம மொக்கை பொடுறான்.” ஒரு வேலை சொப்ணாவை பிரிய நேர்ந்தால் கண்டிப்பாக இந்த சர்வரை ஒரு வழி செய்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ”யோவ் ! நான் ஆர்டர் பண்ண ஸ்வீட் கார்ன் சூப் மட்டும் கொண்டு வா…” என்று சர்வரிடம் கோபமா கூறி அனுப்பினான். 

பக்கத்து டேபிள் குழந்தை கையில் இருப்பதை சாப்பிட்டப்படி கூர்மையாக கவனிக்கிறது. சர்வர் சென்றப் பிறகு, “பி பிராக்டிக்கல் சொப்ணா” தினேஷ் அவளை சமாதானப்படுத்த முயற்சித்தான். 

”நமக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் மறைச்சிருப்பியா?” மீண்டும் அதே கேள்வியை சொப்ணா கேட்டாள். 

”ஷ்யூர்! சொல்லுற அளவுக்கு இது பெரிய விஷயம் இல்ல.” 

”ஆமா. பல பேர காதலிக்கிறது ஆம்பளைகளுக்கு பெரிய விஷயம் இல்லாம இருக்கலாம். பொம்பளைக்கு அப்படியில்ல” 

”நீ எவ்வளவு கோபப்பட்டு பேசினாலும் இந்த விஷயத்துல எனக்கு கோபம் வராது சொப்ணா”. தினேஷ் சிரித்துக் கொண்டே கூறினான். 

”என் கோபம் நியாயமானது நீ ஒத்துக்கிற” 

”அர்த்தமில்லாத கோபம். நா பெரிசா எடுத்துக்கல” 

”முதல் காதல் விஷயத்த விட நீ பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு.” 

”உன் கேள்வி தாக்குதல்ல இருந்து என் தற்காப்பு பண்ணிக்குறேன்.” 

”செஞ்ச தப்புக்கு சாரி சொல்லும் நாகரிகம் இல்ல. குறைஞ்ச பட்சம் வசந்தி பிரிஞ்ச காரணத்தையாவது விளக்கி நியாயப்படுத்துவ எதிர்ப்பார்த்தேன். அதுவும் செய்யல. யூ டிஸ் அப்பாயிண்டட் மீ” 

”காரணத்த தெரிஞ்சு என்ன பண்ணப் போற சொப்ணா ?” 

“எந்த காரணத்துக்காக வசந்திய பிரிஞ்சியோ அதே காரணத்துக்காக என்ன பிரிய மாட்டேனு என்ன நிச்சயம் தினேஷ்.” 

 சொப்ணா வார்த்தையில் பிரிந்துவிடலாம் என்று கூறினாலும், உள்ளத்தில் அப்படி நினைக்கவில்லை என்பது இந்த கேள்வியில் உணர முடிகிறது. இன்செக்யூராக உணர்கிறாள். வசந்தி பிரிந்ததைப் போல அவளை பிரிந்துவிடக் கூடாது நினைக்கிறாள் என்பது தினேஷுக்கு புரிகிறது. தானும் எக்காரணத்திற்காகவும் கோபத்தில் வார்த்தையைக் கொட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். 

”முடிவா என்ன சொல்ல வர தினேஷ்.” 

 “பிரியுற முடிவ மாத்திக்க சொல்லுறேன். சேன்ஜ் யூவர் டிசிஷன் சொல்றேன்.”

“அவர்ஸ் இருந்து யுவர்ஸ் ஆயிடுச்சு. அது தான் டிசிஷன்.” 

”இந்த முடிவுல உனக்கு சந்தோஷம் இருக்குனு நீ சொல்லு.” 

“மனசுக்கு புடிச்ச பொண்ணுக்கிட்ட பொய் சொன்னது உன் மனச உருத்தவே இல்லை. இப்படிப்பட்ட ஆள் கூட வாழனும் நினைக்கிறியா?” 

”மனசுக்கு புடிச்ச பொண்ணு கஷ்டப்படக் கூடாது மறைச்சேன். தப்பு நீ நினைக்கிறீயா?” 

சொப்ணா மவுனமானாள். 

 “என் காதல் விஷயம் தெரிஞ்சுல நீ சந்தோஷ்ப்பட்டியா. இந்த நிமிஷம் வைக்கும் உன்னையும் கஷ்டப்படுத்தி, என்னையும் கஷ்டப்படுத்துற. அப்படிப்பட்ட விஷயத்த உன் கிட்ட எப்படி சொல்ல சொல்லுற.” 

 ”வாழ்க்கை முழுக்க உனக்கு சந்தோஷம் தரனும் நினைச்சேன். அது தப்புனு சொல்லுறீயா? நா சாரி சொல்லுறதுல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா, நா சொன்னது அப்புறம் நீ நார்மல்ல இருக்க மாட்ட. நா சொல்லப் போற சாரிய விட நா மறைச்சதுல இருந்த காதல்ல நீ மொதல்ல புரிஞ்சிக்கனும். ”

சொப்ணாவின் கண்கள் மெல்ல கலங்க தொடங்கியது. 

 ”வாழ்க்கை முழுக்க நாம நிறைய சாரி சொல்லுற தருணங்கள பாக்கனும் ஆசைப்படுறேன். ” சொப்ணாவால் எதுவும் பேசமுடியவில்லை. 

சர்வர், “ஒன் ஸ்வீட் கார்ன் சூப்” என்று தினேஷ் முன் வைக்கிறான். 

சொப்ணா தினேஷின் அனுமதியின்றி எடுக்கிறாள். ”இன்னொரு பவுல் கொண்டு வாங்க…" என்று சர்வரிடம் கூறினாள். 

சர்வர் , “இன்னொரு ஸ்வீட் கார்ன் சூப்பா?” “இல்ல... Empty bowl. நாங்க ஒன் பை டூ சாப்பிடுறோம்” என்று சிரித்தப்படி கூறினாள். தினேஷ்வும் சிரித்தான். சர்வர் தலை சொரிந்துக் கொண்டு சென்றான். 

“சூப் ஒன் பை டூ ஒ.கே. நீ கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்ல..”

”நாம என்ன பேசினோம்?” 

”பிரிஞ்சிடலாமானு கேட்டியே…” 

”அப்படி பேசுனோமா ?” என்று குறும்பாக சொல்லி பக்கத்து டேபிளை பார்த்தாள். பக்கத்து டேபிளில் இருக்கும் குழந்தை அவர்களை பார்த்து கைத்தட்டி சிரித்தது. 

சொப்ணா பிரெண்ட் போன் செய்தாள், அவள் எடுக்காமல் அந்த அழைப்பை தூண்டித்தாள்.

கல்லூரி நாட்களில் மனோகருடன் இருந்த காதலை தினேஷிடம் கூறிவிட வேண்டும் என்று சொப்ணா பல நாட்களாக நினைத்தாள். கடைசி வரை தினேஷிடம் சொல்லக் கூடாது என்று இப்போது முடிவெடுத்தாள். தினேஷ் மீது இருக்கும் காதல் ஒரு காரணம். ஆண்கள் என்றுமே ஆண்கள் என்பது இன்னொரு காரணம்.

Monday, March 10, 2014

உனக்காகவே மயங்குகிறேன் - யாத்விகா

காதல் கவிதைகள் எழுதுவதில் ஏன் பெண்களால் ஆண்களை மிஞ்ச முடியவில்லை என்று தெரியவில்லை. தபூ சங்கர், கட்டளை ஜெயா போன்ற காதல் கவிஞர்களுக்கு தனி வாசகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த அளவுக்கு ஏன் ஒரு பெண் எழுத்தாளர் ‘காதலை’ கொட்டி கவிதை எழுத முடியவில்லை.

’காதல்’ என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது தான். ஆனால், ஆண் கவிதைகளில் இருக்கும் காதல் ரசம் பெண் எழுதும் கவிதைகள் குறைவாக எனக்கு படுகிறது. (ஒரு வேளை இன்னும் அதற்கான கவிதை நான் தேடி படிக்கவில்லை என்றுக் கூட இருக்கலாம்.)

கவிதை எழுதுவதை துறந்தாலும், காதல் கவிதை, ஹக்கூ கவிதைகளை மட்டும் வாசித்து வருகிறேன். பத்து வருடம் பின்னோக்கி கல்லூரி நாட்களுக்கு செல்ல வேண்டும் என்றால் காதல் கவிதைப் போல் சிறந்த புத்தகம் இல்லை.

அப்படி சமீபத்தில் வாசித்தது யாத்விகா எழுதிய ” உனக்காகவே மயங்குகிறேன்”


காதல் கவிதைகளுக்கு டெம்ளேட்டான படங்களை நிரப்பிய கவிதை தொகுப்பு தான். கௌதம் மேனன் படங்களில் பெண்ணின் காதலையும், தவிப்பையும் அழகாக சொல்வது போல் ஒரு சில கவிதைகளில் யாத்விகா சொல்லியிருக்கிறார்.

ஐயோ 
அப்படி பார்க்காதே ! 
என் 20 வருட 
 அழகும் இம்சிக்கிறது
 என்னை…! 
 அடிக்கடி 
 கண்ணாடி பார்க்கச் சொல்லி ! 

 ** 

அசுரனே 
இப்படியா 
நினைப்பாய்… 
24 மணி நேரமும் 
விக்கல் எடுக்கிறது 
எனக்கு 

சில கவிதைகளில் ஆண்பால், பெண்பால் குழப்பம் ஏற்ப்படுகிறது. ஒரு பெண் பார்வையில் இந்த புத்தகம் நகர்கிறது என்று நினைத்தால், ஒரு ஆண்ணின் பார்வையில் சில கவிதைகள் வருகிறது. ஒரு சில கவிதைகள் எங்கோ கடந்த வந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

மற்ற கவிதைகள் எழுதுவதை விட காதல் கவிதைகளுக்கு பல சவால்கள் இருக்கிறது. இலக்கிய அந்தஸ்து கிடைக்காது. படிக்கும் பல வாசகர்களுக்கு காதல் பரிட்சயமானதாக இருக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காது. அதையும் மீறி படிக்கும் வாசகர்களுக்கு ஒரு சில கவிதைகள் அமெச்சூர் தனமாக இருக்கும். இதையெல்லாம் மீறி காதல் கவிதைகள் வெல்வது கடினம்.

யாத்விகா… கவிதை என்ற வட்டத்திற்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் சிறுகதை, நாவல் போன்ற முயற்சிகள் மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.


இணையத்தில் வாங்க..... இங்கே

Monday, September 10, 2012

கல்லூரி டைரியில் காதல் கவிதை !

எதற்கோ என் புத்தக அலமாரியில் புத்தகங்களை தேடி, எதோ பழைய புத்தகத்தை புரட்ட , அது கல்லூரி வகுப்பில் நோட்ஸ் எடுத்த டைரியாக இருந்தது.

எந்த வகுப்பில் உட்கார்ந்து எழுதிய கவிதை (?) என்று ஞாபகமில்லை. எந்த பெண்ணை நினைத்து எழுதினேன் என்று நினைவில் இல்லை. (ஒன்றா இரண்டா சொல்வதற்கு ?) . எல்லோவற்றிக்கும் மேலாக இது கவிதையா என்ற சந்தேகம் இப்போது படிக்கும் போது தோன்றியது.

சரி ! ஆனது ஆகட்டும். எத்தனையோ மொக்கை பதிவுகளில் நடுவில் என் கல்லூரி கவிதை (?) ஒரு பக்கம் இருந்து விட்டு போகட்டும்.

***

மௌனம் என்பது மொழி
சொன்ன கவிஞர்கள் நூறு உண்டு !
அது என்னைக்ம்கொள்ளும் ஆயுதம்
கண்டேன் உன்னிடத்தில் இன்று

ஒரு பெண் போனால் இன்னொரு பெண்
என்று இது வரை நான் இருந்தேன்
உன்னை பார்த்த பின்பு
மற்ற பெண்கள் பொய் என்று உரைத்தேன் !

பனித்துளிப் போல எந்தன் காதல்
பகலில் என்றும் தெரிவதில்லை
இரவில் மட்டும் கனவில்
எந்தன் காதல் தினம் தொல்லை !

**

பெண்கள் மனம் தேடுவது
காதலா ? நட்பா ?
ஆண்கள் மனமோ அறிவதில்லை.

நட்பை தேடினால் காதலை விரும்பும்
காதலை தேடினால் நட்பை விரும்பும்
புதிர் போடும் புதிர் நீங்கள் !

விலகிச் சென்றால் விரும்பி வரும்
விரும்பி சென்றால் விலகிப் போகும்
புரியாத வினாத்தாள் நீங்கள் !

விடை அறிந்த வினாக்களே !
எங்களை விரும்ப வைக்கும்
இயந்திரம் நீங்கள் !

உங்கள் மனம் தேவை என்ன ?
தெளிவாய் சொல்லிவிடுங்கள் !
ஆண்கள் தேடும் தேடலுக்கு
நீங்கள் கொஞ்சம் ஓய்வுக் கொடுங்கள் !

பெண்கள் அறிய நினைத்த அறிஞர்கள்
தலை நரைத்தே மடிந்தான் !
வாழுக்கின்ற இளைஞர்கள் நாங்களோ !
மடிவதற்காகவே பெண்களை தேடுகின்றான் !

Friday, April 27, 2012

கல்லூரி காதல் - டைரிக்குறிப்பு !!

ஒவ்வொருவனின் வாழ்க்கையில் மறக்க முடியாத புத்தகம் இருக்கும். கருத்தும், குணத்திற்கும் அந்த புத்தகம் மாறுபடலாம். ஆனால், எல்லோரும் மிக முக்கியமாக, பொக்கிஷமாக பாதுகாத்து வரும் ஒரு புத்தகம் ஒன்று உண்டு. அது, அவரவர் டைரி தான்.

பழைய புத்தகங்களை எல்லாம் எடுத்து வைக்கும் போது, கல்லூரியில் நான் எழுதிய ‘காதல் சோகப் பாடல்’ கண்ணில் பட்டது. என் நண்பன் ஒரு ட்யூன் சொல்ல, அதற்கு எதோ எழுதியிருக்கிறேன். நண்பன் சொன்ன ட்யூன் ஞாபகமில்லை. காதலை அதிகம் ரசிக்கும் பருவம் கல்லூரி காலங்கள் என்பது என் பழைய டைரிக்குறிப்புகளில் தெரிகிறது.

எல்லா உணர்வுகளை விட காதல் மட்டும் எப்படி கை ரேகைப் போல் உடம்பில் ஒட்டிக் கொள்கிறது என்று புரியவில்லை.

***


மனதென்பது அவளிலுள்ளது
காதலென்பது என்னிலுள்ளது
ஈருயிராலும் ஒர் காதல்
ஒருயிரானாலும் உயர்வனாது காதல்
காதலை நான் தான் சுமந்தேன்
கருத்தரிக்க சொன்னால்
உயிர் துறப்பேன்
(மனதென்பது



வந்தது வரட்டும் என்பதல்ல காதல்
வாழ்க்கையோடு வாழ தேவை காதல்
வருபவர்கள் எல்லாம் செய்வதல்ல காதல்
வலிக் கொடுத்தவளை செய்வது தான் காதல்

புதிரா ! புனிதாமா புரிவதில்லை
பலர் சொன்னாலும் விளங்குவதில்லை
தியாகம், துரோக,
தர்மம் , கர்மம்

எல்லாம் இருப்பது காதல் தான்...
காதல் தான்... காதல் தான் !
(மனதென்பது



ஓடி ஒதுங்கியவர்களை எல்லாம் விரும்பாது காதல்
விரும்பியவர்களை தேடி தேடி அழையும் காதல்
ஒப்பனை செய்தாலும் வருவதில்லை காதல்
வெற்றி தோல்வியிலும் இருப்பது காதல்

தொடங்கியது தொடங்கியது தான்
கல்லறை வரை தொடர்வது தான்
சொர்க்கம், நரகம்,
ஜனனம், மரணம்

எல்லாம் இருப்பது காதல் தான்
காதல் தான்... காதல் தான்...

(மனதென்பது


Monday, January 9, 2012

காதல் திருமண அழைப்பிதழ் !!



காட்சி 1

இடம் : சென்னை, தமிழ்நாடு.

கதாநாயகனாகிய நான் அண்ணா நகரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன்.

கதாநாயகியாகிய என்னவள் மைலாப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டதேயில்லை. இருவருக்கும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரியாது. மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டு இருந்தோம்.


காட்சி 2

இடம்: திருச்சி, தமிழ்நாடு.

நாயகன், நாயகியாகிய நாங்கள் ஆர்.ஈ.சி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தோம். இருவரும் ஒரே வகுப்பில் இருந்தாலும் எங்களுக்குள் எந்த பினைப்பும் தோன்றவில்லை. ஆனால், இறுதி ஆண்டில் தோன்றியது..... அந்த ‘காதல்’..... அதுவும் ஒரு சண்டையில். தொடங்கியது சண்டை என்றாலும்.... உறவு தொடர்ந்துக் கொண்டு இருப்பது காதலில்........

காட்சி 3

கதையின் இறுதி கட்டம்

நான் - ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.

என்னவள் - வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.

இப்பொது மீண்டும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று சண்டை போட முடிவு எடுத்திருக்கிறோம். இந்த முறை வாழ்நாள் முழக்க சண்டை போட போகிறோம். ஆனால், அது இனிமையான சண்டை !

இது வரை ரகசியமாக இருந்த காதல் கதை.... இன்று எல்லோரின் கண்களுக்கு.... உங்கள் ஆசிர்வாதத்தோடு இசை நிகழ்ச்சியுடன் !!

இருப்பதியோறாம் நூற்றாண்டில் ரோமியோ, ஜூலியட் நடிக்கும்

“மற்றுமொரு காதல் கதை”

நாங்கள் எங்களின் திருமணத்திற்கு அன்புடன் அழைக்கிறோம். இந்த முறை எங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத ஷேக்ஸ்பியர் இல்லை. எங்கள் தலையெழுத்தை நாங்களே எழுதிக் கொண்டோம்.

பெற்றோர்கள் ஆதரவில்லாத எங்கள் காதலுக்கு, ரசிகர்களாகிய நண்பர்களும், உறவினர்களும் வருகை தந்து இந்த காதல் கதை நீண்ட நாள் வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

இருப்பதியோறாம் நூற்றாண்டின் ரோமியோ, ஜூலியட்.

முதல் காட்சி ( திருமணம் நாள்) 21 ஆகஸ்ட், 2009. காலை 9 முதல் 10.30 மணி வரை

சிறப்பு காட்சி ( வரவேற்பு நாள்) 20 ஆகஸ்ட்,2009. மாலை 6.30 முதல் 9 மணி வரை

இடம் : இந்திரலோகம்

தலைமை : தேவந்திரன்

வாழ்த்தி ஆசிர்வதிப்பவர்கள் : பிரம்மா, சிவன், விஷ்ணு

திருமண மண்டப்பதிற்கு வரும் வழி

வேகமாக வண்டி ஓட்டி விபத்தில் வரலாம். விஷம் குடித்து எங்களை போல் தற்கொலை செய்துக் கொள்ளலாம். மலை உச்சிக்கு சென்று கீழே விழலாம்.

எங்கள் நண்பர் எமன் அங்கிருந்து சரியான நேரத்திற்கு திருமணத்திற்கு அழைத்து வருவார்.

அவசியம் குடும்பத்தோடு வாருங்கள் !!

****

நான் எழுதிய "என்னை எழுதிய தேவதைக்கு..." நூலில் இருந்த கதை.

35வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் கிடைக்கும் !!!

பாலவசந்தா பதிப்பகம் : ஸ்டால் எண் - 416 - 417
டிஸ்கவரி புக் பேலஸ் : ஸ்டால் எண் - 334
புதுப்புனல் : ஸ்டால் எண் - 442

Monday, December 26, 2011

காதல் பயணங்களில்.... – கு.சுரேஷ்

அன்புள்ள கு.சுரேஷ் அவர்களுக்கு,

தங்கள் அனுப்பிய கடிதமும், கவிதை புத்தகமும் கிடைத்தது. நூல் அனுப்பியதற்கு நன்றி.

கல்லூரி படிப்பு முடித்ததும் குறுகிய காலத்தில் புத்தகம் வெளியீட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். பல இடங்களில் உங்களின் கல்லூரி காதல் அழகாய் தெரிகிறது.

குறிப்பாக சில கவிதைகள்...

சந்திப்பு சலனமாகிறது (பக்.21)

முழுமையாய்க் காதலைச் சொன்னவள்
முதன் முதலாக என் காதலுக்கு
முடிவுரை எழுதிவிட்டாள்...

Pg.22
திருமணப் பத்திரிக்கையுடன்
என்னைப் பார்க்க வந்தவள்
என் காதல் பத்திரத்தைத் திருப்பி தந்துவிட்டாள்...
ஒரு இடைவேளையில் இந்தச்
சந்திப்பு சலமாகிறது

ஒரு செவ்விதழ் (pg. 30)

வேஸ்ட் பேப்பருக்குள்
ஒரு வேட்பு மனு
அவள் காதல் கையொப்பத்துடன்...

வார்த்தைகள் நடுவில் வண்ணங்கள்
சிதறிக்கிடந்தன என் இதயத்தின்
குப்பைத் தொட்டியில்...

நானும் – அவளும் (பக்.41)

அவள் தோன்றி – அவளுடன்
இன்னொரு காதலும் தோன்றியது
நான் இல்லாமல்...

மேல் சொன்ன கவிதைகள் என்னை கவர்ந்தாலும், ஒரு சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன். நூல் வடிவ அமைப்பு மிக சுமாராக உள்ளது (முன் அட்டையில் உங்கள் பெயர் இருப்பது கூட தெரியவில்லை). போதுவாக இதுப் போன்ற காதல் கவிதை நூல்களுக்கு கவிதைக்கு தகுந்தால் போல் படங்கள் இருப்பது நல்லது. வாசகனை வாங்க இது போன்ற படங்கள் மிகவும் உதவும்.

நெடுங்கவிதைகளை விட நான்கு வரி கவிதைகள் தான் அதிகம் வாசகர்கள் விரும்புவார்கள். நான் மேற்கோள் காட்டிய கவிதையே அதற்கு உதாரணம்.

எல்லா கவிதைகளும் ஆண் பார்வையில் இருந்த கவிதை, “கல்லறை பதிவு” கவிதை மட்டும் ஏன் திடீர் என்று பெண் வடிவில் மாறியது என்று தெரியவில்லை. நூல் தொகுக்கும் போது ஒத்த கருத்துள்ள கவிதைகளை தேர்வு செய்யுங்கள்.

எழுத்துக்களில் மிகவும் கடினமானது எழுத்துக்களை கோர்த்து கவிதை வடிவம் தருவது தான். ஆனால், பலர் முதல் நூலாக கவிதை நூல் எழுத தான் ஆசைப்படுகிறார்கள். அதையே தான் நீங்களும் முயற்சித்துள்ளீர்கள். உங்கள் முயற்சித்துக்கு என் வாழ்த்துக்கள்.
கவிதை என்ற குறுகிய வட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல், சிறுகதை, கட்டுரை என்று உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

அன்புடன்,
குகன்

**

வெளியீடு
கு.சுரேஷ்
சேனை தலைவர் மண்டபம்,
கட்த்தூர் (அஞ்சல்)
பாப்பிரெட்டிபட்டி (வட்டம்),
தருமபுரி மாவட்டம்.
பேசி : 04348 - 241169
விலை. ரூ.30/- பக் : 48

Monday, July 25, 2011

காதல் கவிதைகள் !

உன்னை வெற்றிக் கொள்ள
என் படைகள் திணறுதடி
நாம் சதுரங்கம் விளையாடும் போது !

*

உன் ஒவ்வொரு குறுந்தகவலும்
உன் விரல் ஸ்பரிசத்தை கொடுக்கிறது
உன் ஒவ்வொரு அழைப்பும்
பிரிவின் சுகத்தை மறக்க வைக்கிறது !

*

பல புத்தகங்களை படித்த
மனநிறைவு கொடுக்கிறாய்
உன்னிடம் பேசும் போது !

*

உன்னிடம் பேசிப் பழகும் போது
கடவுளுக்கு ‘நன்றி’ சொல்லி
ஆத்திகனாகிறேன் !
சண்டையிட்டு பிரியும் போது
கடவுளை மறுத்து பேசும்
நாத்திகனாகிறேன் !

*

நீ கொடுக்கும்
சக்கரையில்லாத தேநீரை
சுவைத்து குடிக்கிறேன்
உன் புன்னகையில்
அரைகிலோ சக்கரை இருப்பதால் !

Thursday, June 2, 2011

காதல் கவிதைகள் - 2

கோபத்தால்
என் இதயத்தை
துண்டு துண்டாக்குகிறாய் !

முத்தத்தால்
காந்தம் போல்
சிதறிய இதயத்தை
சேர்க்கிறாய் !

**

உன்னைப் பற்றி
எழுதும் போது
என் எழுத்துக்கள்
உன்னிடம் தவழ்ந்து வருகிறது
காரணம்
காதல் !

**



ஐம்பது கிலோ உருவம்
ஐந்து கிலோ காதல்
ஐந்து கிலோ காமம்
இரண்டு கிலோ கனவு
இரண்டு கிலோ ஆசை
ஒரு கிலோ முத்தம்
எல்லாம் சுமக்கிறேன்
எதையும் தாங்கும் இதயமடி !

**

சில சமயம் நான் முட்டாளாக இருக்கிறேன்
தெரிந்த பதிலுக்கு
வினா எழுப்புவதால்
முத்தமிடலாமா ?

**

மௌனம் முன்னுரை எழுத
கண்கள் அணிந்துரை வரைய
இதழ்கள் வாழ்த்துரை வழங்க
அச்சு செலவு இல்லாமல்
அரங்கெரிய புத்தகம்
காதல் !

Wednesday, June 1, 2011

காதல் கவிதைகள்

காதலர் தின வாழ்த்து மடல் வாங்குவதில்
உலகில் பெண்கள் 85 சதவிகிதமாம்
இந்த கணக்கை ஏற்ற
வாழ்த்து மடலை
என்று வாங்க போகிறாய் ?

**

என்னுடைய
சுறுசுறுப்பின் வடிவம் நீ
உன்னுடைய
சோம்பலின் வடிவம் நான் !



நம் இரண்டு வீட்டுக்கு நடுவில்
எழுப்பப்படும் சுவர்க் கூட
கண்ணாடியாய் தெரிகிறது
நீ சிரிப்பதால் !

**

உன்னை பார்த்ததும்
என் சைக்கில் டயர் வெடித்தது
அடைத்து வைத்த காற்றுக் கூட
பார்வையில் விடுதலை தருகிறாய்
எனக்கு ??

Monday, February 14, 2011

காதல் - பெண் பார்வையில்...!!

வெளியே செல்லும் போது
தும்பல் சத்தம்
நான் வெளியே செல்ல தடைவிதித்தேன்
என் அன்பை ரசித்தான்
நாத்திகனாகிய அவன் !

**
நான் கோபமாய் பேசும் போது
என் மீது கோபப்படாமல் அமைதியாய் இருக்கிறாய் !
உன் மேல் கோபம் அதிகமாகிறது
என் மீது உனக்கு இல்லாத உரிமையா !!

**



என் தோழியிடம் பழகாமல் இருக்க
பல பொய்கள் அவளைப் பற்றி சொன்னேன்
பொய் என்று தெரிந்தும்
என் தோழியிடம் பேசாமல் இருந்தாய்
என் காதலுக்காக !!

**

நீ எழுதிய கவிதைகளை
என் கவிதைகள் என்று
உன்னிடத்தில் கொடுக்கிறேன்
உன் கவிதைக்கு சொந்தக்காரி
நான் தானே !!

**

பத்து கடை அழைந்து
எனக்காக பரிசைக் கொடுத்து

”பிடிச்சிருக்கா..!” என்றாய்

”போடா...!
கொடுப்பது நீயாக இருக்கும் போது
எப்படி பிடிக்காமல் இருக்கும்.” என்றேன்

**

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !!!

நான் எழுதிய காதல் சிறுகதை நூலை வாங்க... இங்கே !

இணைய புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுயிருக்கும் புத்தகங்களை பார்க்க...!!

Tuesday, October 26, 2010

காதல் கவிதைகள்

இயற்கை செய்த
க்ளோனிங்
அவள் மேல் விழுந்த
மழைத் துளி !

**

உன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த
வைரமாலை கரைந்து விட்டதாக சொன்னாய் !
என் காதலை புரிந்து கொள்ளாத உனக்கு
என் கண்ணிர் துளியா தெரிய போகிறது !

**



உள்ளங்கையறித்தால்
பணம் வருமாம்
யார் சொன்னது ?
புதையல் நீ கை கொடுத்ததால்
எனக்கு
கை ரேகையே வந்தது !!

**

அதே புன்னகை
அதே காதல்
அதே மோகம்
அறுபது வயதில்... !

**

என் வீட்டு
எதிரே வந்த பிறகு
காலியாய் இருந்த
என் டைரி பக்கங்கள்
கவிதை வாசித்தது !!

**
என் பழைய கவிதைகளை
காட்டிய போது
ஒவ்வொரு பக்கமும்
தனியாக வருகிறது
என்று சொன்னாய் !

நன்றி கெட்ட கவிதை
எழுதியவனை விட்டுவிட்டு
எழுத தூண்டிய
உன்னை தேடி வருகிறது !!

Tuesday, October 5, 2010

காதல் கவிதைகள் !

காதல் என்ற போக்கிஷத்தை
கொடுக்க வந்தேன்
நட்பு என்ற பூட்டைப்போடு
முட வைத்தாய் !

கள்ள சாவி போட்டு
திறக்க நினைத்தேன்
உன் வசீகர பார்வையில்
நீயே திறந்து விட்டாய் !!




**
உன் புகைப்படம் என்று
வெள்ளை நிற அட்டையை நீட்டினேன்

நீ செல்லமாக முறைத்து பார்த்தாய்

"போட்டோ எடுக்கும் போது
சிரிக்காதே சொன்னேன் கேட்டியா !"

**

வெள்ளை, சிவப்பு
இரண்டு அணுக்கள் இல்லாமல்
புதிய அணுக்கள் தோன்றுதடி
உந்தன் காதலால் !

**
உன் நகங்களுக்கு
நெயில் பாலிஷூடன் வந்தேன்

நீ நகங்கள் வெட்டப்பட்ட
விரலை காட்டினாய் !

நேற்று
உன் நகத்தால் கீரப்பட
காயத்தை நான் ரசித்தேன் !

இன்று
நீ எனக்காக
உன் நகத்தை துறந்தாய் !

Friday, June 25, 2010

காதல் கவிதை !



"இலங்கை அதிபரின் பேத்தியோ
அழகாளே தமிழர் நெஞ்சை
கொலை செய்கிறாய்" என்றேன் அவளிடம்.

"பார்வையாலே கற்பழிக்கிறாய்
நீ என்ன இலங்கை இராணுவமா !!"
என்றாள் அவள்.

***

A +ve இரத்தமும்
A –ve இரத்தமும்
சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து
என்று விஞ்ஞானம் சொன்னது !

இரண்டு இரத்தம் சேர்ந்ததால் தானே
நம் காதலுக்கு சாட்சியாக
சிசு உருவானது !

***

நான் இவ்வளவு அழகாக கவிதை எழுதுவேன் என்று
உன்னை பற்றி எழுதும் போது தான் தெரிந்துக் கொண்டேன்.

Thursday, June 3, 2010

நட்பில் ஒரு காதல் !! - 2

முதல் பகுதி - 1



" பொளாரிஸ், டி.சி.எஸ் இரண்டு கிடைச்சா.. எதுலடா சேறது " என்றாள்.

" நான் டி.சி.எஸ்" என்றேன்.

" எனக்கு என்னவோ பொளாரிஸ் சேறலாம் தோனுது. டி.சி.எஸ் விட பெரிய கம்பேனி இல்லனாலும், சிட்டிக் குள்ள ஒரு ஆபிஸ் வெச்சிருக்கான். சீக்கிறம் வீட்டுக்கு போய்ட்டு வரலாம் "

அவள் என்னிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வது எவ்வளவு பிடிக்குமோ, அந்த அளவிற்கு அவள் முடிவு எடுத்துவிட்டு என் கருத்தை கேட்பது எனக்கு பிடிக்காது. அந்த முடிவை எந்த பதில் சொல்லியும் மாற்ற முடியாது. ரேகா எப்போதும் இப்படி தான். யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுப்பாள். நான் பேசாமல் அமைதியாக வந்தேன்.

நாங்கள் வீட்டுக்கு திரும்பும் போது நல்ல மழை. முன்பே பஸ்ஸில் ஏறிவிட்டதால் நனையவில்லை. ஆனால், நனையாமல் இருந்தது ரேகாவுக்கு வருத்தம் தான். ஜன்னலோர சீட்டில் அமர்ந்து மழை நீரை பிடித்து என் மீது தெளித்தாள். முதல் முறையாக அவள் கண்ணில் காதலை கண்டேன்.

" கை ரொம்ப ஜில்லுனு இருக்கு.... பாரேன்" என்று என் அனுமது கேட்காமலே கை பற்றினாள். அந்த ஸ்பரிஸ்த்தில் அவள் காதலை இன்னும் உணர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்தது. மழை விடாமல் பெய்தது. ரேகாவிடம் குடையிருந்ததால், மழையில் நனையாமல் இருவரும் குடைக்குள் நடந்தோம். பஸ்ஸில் அமர்ந்து வந்த நெருக்கத்தை விட குடைக்குள் எங்கள் நெருக்கம் அதிகமாகவே இருந்தது.

அவள் தப்பாக நினைத்து விடுவாளோ என்று பயந்து குடையில் இருந்து வெளியே வர நினைத்த போது, " ரொம்ப வெட்கப்படாத.. குடைக்குள்ள வாடா" என்றாள்.

இருவரும் அவள் வீட்டு தெரு முனை வரை பேசிக் கொண்டு நடந்தோம்.

" எனக்கு வர போற புருஷன் கூட இப்படி கொட புடிக்க மாட்டான்" என்று வெட்கத்தோடு சிரித்தாள்.

ரேகா சொன்னது போல் நான் ட்யூப் லைட் தான். அவளின் காதலை இப்போது கூட புரிந்து கொள்ளவில்லை என்றால் என்னை விட முட்டாள் யாருமில்லை.

மாடியில் தம் அடித்துக் கொண்டே யோசித்தேன்.

ரேகாவிடம் காதலை சொல்ல வேண்டும். ஆனால், அதற்குள் அம்மா எனக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்த தேதி குறித்துவிட்டாள். "உனக்கு புடிச்ச பொண்ண சொல்லு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று முன்பு சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தெரிந்தது. அம்மாவிடம் சொல்லி நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதை விட முதலில் ரேகாவிடம் காதலை சொல்ல வேண்டும்.


தம் முடித்து கீழே வந்தேன். நான் ரேகாவுக்கு போன் பேசலாம் என்று நினைக்கும் போதே, என் செல்போன் மணி ஒலித்தது. ரேகா தான்.

செல்போனை எடுத்து, " சொல்லு ரேகா ! " என்றேன்.

"உன்ன அவசரமா பார்க்கனும். என் வீட்டுக்கு வா " என்றாள்.

என்னது என்று கேட்க தோன்றவில்லை. அவள் அழைக்கவில்லை என்றாலும் நானே அவளை பார்க்க வேண்டும் என்று தான் இருந்தேன். பத்து நிமிடத்தில் உடைகளை மாற்றிவிட்டு அவள் வீட்டுக்கு சென்றேன்.

முகம் கடு கடுவென கோபத்தோடு இருந்தாள். கணவனுக்காக காத்திருக்கும் மனைவி கோபம் போல் எனக்கு தெரிந்தது.

" ஹாய் ரேகா... என்ன அவசரமா கூப்பிட்ட...." என்றேன்.

அவள் முகம் மாறவில்லை. எனக்கு என்னவோ போல் இருந்தது.

" ராஜா ! ஏன்டா என்கிட்ட உண்மைய மறைச்ச...." என்று கண்ணீருடன் கேட்டாள்.

அவளிடம் காதலை சொல்லாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு. அவள் என் மேல் எவ்வளவு காதல் இருந்தால், சொல்லாமல் இருந்ததற்கு கண்ணீர் சிந்துவாள்.

" ரேகா ! இதுக்கு போய்யா அழுவுற. நாம மூனு வருஷமா பிரண்ட்ஸா இருக்கோம். நம்ப லவ்வ சொல்லி தான் புரிஞ்சிக்கனுமா..." என்றேன்.

" நான் லவ்வ பத்தி கேட்கல. உன் நிச்சய தார்த்தம் பத்தி கேட்டேன் " என்றாள்.

இவளுக்கு எப்படி தெரியும். காதலனின் நிச்சய தார்த்தம் என்றால் கண்டிப்பாக அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால், என் காதலுக்கு அது தடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அவள் காதலுக்கு சம்மதம் சொல்லிவிட்டால், என் நிச்சயதார்த்ததை நிருத்திவிட போகிறேன். அம்மாவிடம் காதலை பற்றி சொன்னால், கொஞ்சம் மன வருத்தம் இருந்தாலும் ஏற்றுக் கொள்வாள்.

நான் மாடியில் தம் அடிக்கும், என் செல்போனுக்கு ரேகா தொடர்பு கொள்ள அம்மா போனில் என் கல்யாண விபரத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.

" ரேகா ! இது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல. நீ மட்டும் சரி சொல்லு. அம்மா கிட்ட நம்ப லவ்வ சொல்லி ஓ.கே வாங்கலாம்."

"அது எல்லாம் வேண்டாம். நீ உங்க அம்மா சொல்லுற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ..!! " என்றாள்.

பெரிய சுத்தியல் தலையில் விழுந்தது போல் இருந்தது. என் மேல் இருக்கும் காதலை பல சமயத்தில் உணர்த்தியவள் அவள் தான். அவளை என்னை காதலிப்பது நூறு சதவீத உண்மை. ஏன் இப்படி ஏற்க மறுக்கிறாள்.

" என்ன ஆச்சு உனக்கு ? நம்ப லவ் பண்ணுறதுக்கு முன்னாடி அம்மா பொண்ணு பார்த்தது. இப்ப நினச்சா கூட நிறுத்தலாம்."

" இல்ல வேண்டாம் ராஜா. எனக்கு என்னவோ சரியா வரும்னு தோணல்ல..."

வழக்கம் போல் முடிவு எடுத்து விட்டு என்னிடம் பேசுகிறாள் என்று புரிந்தது. அவள் முடிவை எப்படியாவது மாற்றிவிட்டுவேன். அந்த அளவிற்கு எங்கள் காதல் மீது நம்பிக்கை இருந்தது.

" நீ என்ன லவ் பண்ணா போதுமா. நா உன்ன லவ் பண்ணவே இல்ல. " என்றாள்.

அவள் சொன்னதை நான் மட்டுமல்ல படிக்கும் நீங்கள் கூட நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். அவளிடம் அதற்கு மேல் பேச எனக்கு விருப்பமில்லை. காதல் இல்லை என்று பொய் சொல்லுபவளிடம் என்ன பேசினாலும் வீண் தான். இவளாகவே முடிவு எடுத்து விட்ட பிறகு, என் பேச்சை மதித்ததில்லை. இப்போது மட்டும் என்னால் எப்படி எதிர்பார்க்கமுடியும்.

என் நிச்சயதார்தம் நன்றாக நடந்து முடிந்தது. இரண்டு மாதத்தில் திருமணமும் நடந்தது. சிரித்த முகத்துடன் ரேகா என்னை வாழ்த்தினாள். கொஞ்ச தூரம் சென்றதும் அவள் கண்ணில் நீர் துடைப்பதை பார்த்தேன். எந்த பதிலும் பேச முடியாமல் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு கை கொடுத்துக் கொண்டு இருந்தேன்.

இன்று முதலிரவு.

பல கனவுகள் சுமந்து ராதா அறைக்கு வந்தாள். அவளிடம் என் காதலை சொல்லிவிடலாம் என்று தோன்றியது. காதல் இல்லை என்று சொன்ன காதலை பற்றி ஏன் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னை உறுத்தியது. அமைதியாக அவள் கொடுக்கும் பாலை வாங்கி கொடுத்து, மீதி பாதிக் கொடுத்தேன்.

கொஞ்சம் நேரம் பேசினோம். மாற்று புடவை அணிய வேண்டும் என்றாள். என் கண்ணை முட சொன்னாள். புது வெட்கம் தெரிந்து திரும்பினேன்.

இருந்தாலும், பல ஆண்டுகள் சீடியில் பார்த்த ஆன்டிகளும், பியூட்டிகளும் கண்ணில் வளம் வர தொடங்கினர். என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என் மனைவியை கட்டிபிடித்து கட்டிலில் தள்ளினேன்.

"வலிக்குதுங்க...."

" ஸாரி.... ரேகா......!!"

Monday, August 24, 2009

எதிர் வீட்டு தேவதை



நான் குருடன் என்று உன்னை பார்த்த பிறகு தான் தெரிந்துக் கொண்டேன். எதிரில் இருந்த உன்னை இத்தனை நாள் பார்க்காமல் நான் இருந்திருக்கிறேனே....!! என் நண்பர்கள் இன்று தான் உருப்படியாக ஒரு நல்ல காரியம் செய்தனர். உன்னை கண்டெடுத்து எனக்கு காட்டியவர்கள் அவர்கள் தான். என் வண்டியை ஸ்டார்ட் செய்த அடுத்த நோடியில் தெரு முனையை தாண்டி விடுவேன். அதனால் என்னவோ எதிர் வீட்டில் தேவதை குடியிருந்தும் நான் பார்க்காமல் இருந்துவிட்டேன். அவள் எனக்காவே இந்த பூமியில் ஒதுக்கப்பட்டவள் போன்ற உணர்வு...! உன்னுடன் வாழ்வதற்காகவே நான் பிறவி எடுத்தேன் என்ற ரகசியத்தை புரிந்து கொண்டேன்.

அவள் கண்ணில் படும் படி பல முறை தெருவோரம் நடந்தேன். அவள் வீட்டை கடக்கும் போது தெருவில் அனைவரும் காதில் விழும் படி வண்டி ஹாரன் அடித்தேன். அவளை தவிர மற்றவர்கள் பார்வை தான் என் மீது விழுந்தது. அவள் வீட்டில் இருக்கிறாளா இல்லையா என்று தெரியாமல் இப்படி பல சேட்டைகள் செய்தேன். ஆனால், ஒன்றும் பலனில்லை.

எத்தனையோ காதல் படங்களை பார்த்தாலும், காதல் புத்தகங்கள் படித்தாலும்... எனக்காக ஒரு காதல்.. ஒரு பெண் என்று பார்க்கும் போது தான் நம் காதலுக்கு ஒரு உருவம் கிடைக்கிறது. என் காதலுக்கு உருவம் கொடுத்த தேவதை அவள் தானே.. !!

என் காதல் பார்வையை விட அவள் பார்வையில் காதல் அதிகமாகவே தெரிந்தது. நான் அவள் வீட்டை கடக்கும் போது பார்த்த பார்வையும், கன்ன குழி சிரிப்பும்.... யப்பா ! என்னை விழுங்கி விடும் அளவிற்கு இருந்தது. மேல் மாடியில் இருந்து அவள் என்னை எட்டி பார்ப்பதும், நான் தலையை கோதியப்படி அவளை பார்த்து சிரித்தும் தெருவை கடப்பேன்.

வேலி போட்டு பார்த்து ரசிக்கும் மாம்பழத்தை போல தினமும் அவளை பார்த்து பார்த்து ரசிக்க தான் முடிந்தது. அவள் எப்போது அம்மாவுடன் அல்லது அண்ணாவுடன் தான் வீட்டை விட்டு வருவாள். நான் சமிஞை செய்தும் புரிந்து புரியாமல் புன்னகைத்தப்படி நடப்பாள். ஒரு நிமிடம் நின்றால் போதும் நான் நினைத்ததை எல்லாம் சொல்லிவிடுவேன். சந்தர்ப்பம் அமையாமல் தவித்தேன்.

இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தால், அவள் வேறு ஒருவனுக்கு மாட்டிவிட்டால் என்ன செய்வது. ஒரு காகிதம் எடுத்தேன். கவிதை எழுத முயற்சித்தேன். முடியவில்லை. வீண் விபரிதத்தை செய்யாமல் என் செல் நம்பரை எழுதி அவள் பார்க்கும் படி வீசினேன். அவளும் எடுத்தாள். அந்த கணதில் இருந்து என் செல்போன் மணி எப்போது அடிக்கும் என்று காத்துக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போது அவளுடைய அழைப்பாக இருக்குமோ என்று ஆர்வமாக எடுத்தேன். அவள் அந்த காகிதத்தை கிலித்து போட்டாளா அல்லது எடுக்காமல் குப்பையில் விழுந்ததா என்று தெரியாமல் தவித்தேன்.

ஒரு வாரம் கடந்தது. அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையே போய்விட்டது.

செத்து கிடந்த என் நம்பிக்கைக்கு 'ஆக்ஸிஜன்' கொடுப்பது போல் மணி அடித்தது...

" நீங்க ராமசந்திர தானே..." என்று எதிர் முனையில் ஒரு பெண்ணின் குரல்.

அவளே தான். எத்தனை முறை அவள் அம்மாவிடம் பேசும் போது கேட்டிருப்பேன். என் பயரை அவள் உச்சரித்தபோது மெய் எழுத்துக்கள் எல்லாம் உயிர் கொண்டு வந்தது. உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் வாழ தொடங்கியது.

" சொல்லுங்க..." என்று ஆவலாக கேட்டேன்.

"ஒரு நிமிஷம் " என்று சொன்னாள். கொஞ்ச நேரத்தில் இன்னொரு பெண் குரல் கேட்டது.

"டேய்... நீ தான் ராமசந்திரனாடா...." என்று மிரட்டும்படி இருந்தது அந்த குரல். நிச்சயமாக அவள் அம்மா இல்லை. குரல் அச்சுருத்துவது போல் இருந்தாலும் இளமையாக தான் தெரிந்தது.

"டேய்...நாயே... லூசூ... பண்ணாட..." என்று இன்னும் வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளை இடியும் மின்னலுமாக பொழிந்தாள்.

அவள் பேசி முடித்ததும், இன்னொரு பெண் பேசினாள்.

" டேய் ! கசுமாலாம்.... டுபுக்கு...." என்று ஆண் சொல்ல கூச்சப்படும் வார்த்தைகளை சொல்லி திட்டினாள்.

அடுத்து இன்னொரு பெண் என்று தன் தோழி படைகளிடம் கொடுத்து என்னை மட்டுமில்லாமல் குடும்பத்தையே சேர்த்து வருத்தெடுத்தார்கள். கோபத்தில் போனை வைத்த போது கூட விடாமல் அவர்கள் அழைப்பு மணி, எனக்கு சாவு மணி போல் ஒலித்தது.

ஒரு பெண்ணின் செல் நம்பர் கிடைத்தால் ஒருவன் மட்டும் தான் பேச ஆசைப்படுவான். ஆனால், ஆணின் நம்பர் பெண்ணுக்கு கிடைத்தால் அவனை போட்டு தாக்க கொலைவெறியோடு பல பெண்கள் அலைவதை அன்று தான் உணர்ந்தேன்.

முகத்தில் வழியும் வேர்வையை துடைத்து விட்டு, என் செல்போனுக்கு புது சிம் வாங்க சென்றேன்.

Monday, July 6, 2009

தேவதை தோழி

நான் கல்லூக்கு வருவதே உனக்காகத் தான் என்று யாருக்கும் தெரியாது. நான் உன்னை மற்ற பெண்களை போல் நினைத்ததில்லை. நம் வகுப்பில் இருக்கும் மற்ற பெண்களும் நீயும் ஒன்று என்று யாரும் சொல்லமுடியாது. நான் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களிடம் பேசியிருக்கிறேன்.... உன்னிடம் தவிர. காரணம், என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. உன்னை பார்த்தா பிறகு உனக்காகவே வகுப்புக்கு வருகிறேன். உன்னிடம் பேச தொடங்கினால்...... என் வார்த்தைகள் உனக்காக மட்டும் தான் உயிர் வாழும்.

உனக்கு சொந்தமான வார்த்தைகளை எப்படி நான் எப்படி மற்றவர்களிடம் பேச முடியும். அப்படி பேச தொடங்கிவிட்டால் என் வார்த்தைகள் என்னோடு சண்டை போடாதா... தேவதை உனக்காக வாழ்ந்த வார்த்தைகள் மற்றவருக்கு பயன்பட்டால் யாருக்கு தான் கோபம் வராது.



நான் என் மீது நம்பிக்கை இல்லாததால் தான் உன்னிடம் பேசவில்லை. ஆனால், நீ என்னை சோதிப்பதற்காகவே என்னிடம் வந்து பேசுகிறாய். ஒவ்வொருவரும் உன்னிடம் பேச ஆசைப்படும் போது, நீயே என்னிடம் வந்து பேசினாய். என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் எல்லாம் தடுமாறி போய்விட்டது. விலகிச் செல்லத்தான் நினைக்கிறேன். உன் வலையில் விழுந்து விட வேண்டும் என்றே என்னிடம் பேச சூல்லுரைத்தாய்.

நீ என்னிடம் பேசுவதால் எத்தனை ஆண்களுக்ளின் பொறாமை சம்பாதித்தேன் தெரியுமா ? உன்னிடம் என்ன பேசினேன் என்று எத்தனை ஆண்கள் உன் தோழிகளிடம் விசாரித்தார்கள் தெரியுமா ? நாம் காதலர்களா என்று ஒரு தனிப்படை குழு நம் விசாரித்துக் கொண்டு இருப்பது நமக்கே தெரியாமல் போனது.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் உன்னை பற்றி கேட்கும் போது.... நீ என் தோழி மட்டுமே தான் என்று என் வாய் சொன்னது.... மனமோ போய் ஏன் சொல்கிறாய் ? என்று கேட்டது....

என் காதலை முதலில் உன்னிடம் தானே சொல்ல வேண்டும்.... மற்றவர்களிடம் சொன்னால் என்ன பயன் ? மூன்று ஆண்டுகள் காதலை சொல்லாமல் கழித்துவிட்டேன். நாட்கள் செல்ல செல்ல உன்னிடம் உள்ள காதல் வளர்ந்துக் கொண்டே இருந்தது. ஆனால், தைரியம் குறைந்துக் கொண்டே வந்தது.

ஒருவன் என்னிடம் வந்து உன்னை காதலிப்பதாக சொல்லி , அதற்கு தூதாக என்னை செல்ல சொல்கிறான். அவனை அடிக்க துடித்தது கைகள், ஆனால் ‘நட்பு’ என்று சொல்லிய வார்த்தை ‘காதல்’ என்று மாற்றிவிடும் கூட்டங்கள் என்னை சூழ்ந்து இருந்தது. அவனுக்கு உதவி செய்ய மறுத்த வந்துவிட்டேன். அவனோ தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்துக் கொண்டே இருந்தான்.

ஒரு முறை என் காதலை சொல்ல வந்த நேரத்தில் , அவனும் உன்னிடம் காதலை சொன்னான். எவ்வளவு நாள் தான் நான் சொல்வேன் என்று நீ எனக்காக காத்துக் கொண்டு இருப்பாய். நீ அவன் காதலை ஏற்கும் காட்சியை கண்டேன். என் மௌனத்திற்கு தண்டனை உன் காதலை இழந்ததை என் கண்ணில் கண்டேன். தோல்வி ஒன்றும் எனக்கு புதிதல்ல..... இது தண்டனை, என் மௌனத்திற்கு கிடைத்த தண்டனை. நட்பை கலங்க படுத்த கூடாது என்று நினைத்தற்கு தண்டனையாக உன் காதலை இழந்தேன். அது தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எண்ணிடம் பேச்சை குறைத்துக் கொண்டாய்.... அவனிடம் அதிகம் பேச தொடங்கிவிட்டாய்.... நானும் அதிகமாக பேசிக் கொண்டு இருக்கிறேன். உனக்காக நான் எழுதிய கவிதைகளுடன்.

Monday, June 22, 2009

Test tube தேவதை

வெள்ளை நிற தேவதை வெள்ளை நிற ஆடையில் Chemistry lab.... கையில் test tube ஏந்தி நின்று இரந்தாள்.

Test tube மூலம் குழந்தை பெறாலாம் கண்டு பிடித்தவன் கூட தன் ஆராய்ச்சி குறிப்புகளை அழித்துவிடுவான். காரணம், test tube ஏந்திய தேவதை அத்தனை அழகு.... Test tube குழந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி கூட அவனிடம் வாழ்ந்து குழந்தை பெற ஆசைப்படுவான். தன் தேசம் மறந்து இந்தியாவிலே தங்கி விடுவான். அவளிடம் பேசுவதற்காகவே தமிழை கற்றுக் கொள்வான்.



வேறு தேசத்தவன் கூட அவளுக்காக தமிழ் கற்ற வேண்டும் என்று சொல்லும் போது ..... தமிழ் தெரிந்த நான் சும்மாவா இருக்க முடியும்.... என் தோழர்கள் படையுகளுடன், test tube ஏந்திய தேவதையிடம் சென்றேன்.

Chemistry lab முழுக்க திரவம் நாற்றம்..... அங்கு நுழைந்ததற்காக என்னை தூற்றிய நண்பர்கள்.... நான் மட்டும் அந்த தேவதை குரல் கேட்கும் ஆவலில் கால்கள் நடந்தது. நண்பர்களில் வார்த்தைகளை கேட்க காதுகள் மறுத்தது.....

அவள் இருக்கும் இடத்தை அடைந்தேன். அங்கு மட்டும் மல்லிகை வாசம் தூக்கி வாரிப்பொட்டது. அவள் கைப்பட்டதால் திரவம் கூட மல்லிகை வாசம் விசுதோ என்ற சந்தேகம். ஒவ்வொரு bottle லும் ஒவ்வொரு திரவங்கள்..... sulphuric acid, hydrolic acid. Sodium chloride என்று திரவங்களின் பெயர்களை சொல்லி எல்லோருக்கும் விளக்கிக் கொண்டு இருந்தாள். திரவங்களின் பெயர் எனக்கு எதற்கு..... அந்த தேவதை பெயர் தெரிந்துக் கொள்ள தானே காத்துக் கொண்டு இருக்கிறேன். இத்தனை பெயர்களை சொன்னவள் அவள் பெயரை சொல்லவில்லை.

நண்பர்கள் என்று எண்ணி என் எதிரிகளை தான் அழைத்து சென்று இருக்கிறேன். அந்த தேவதை ரசிக்க விடாமல் அந்த இடத்தை விட்டு செல்ல உத்தரவிட்டார்கள். நான் மறுத்தும் என்னை இழுத்து சென்றார்கள். மனதில் நண்பர்களை திட்டிக் கொண்டு அந்த தேவதை இருக்கும் இடத்தை விட்டு சென்றேன்.

மறு நாள் அதே கல்லூரி பொருட்காட்சி..... மீண்டும் அந்த தேவதை சந்திக்க என் முழு எண்ணமாக இருந்தது. உடன் எந்த நண்பர்களையும் அழைத்து செல்லவில்லை. அவள் இருக்கும் Chemistry lab க்கு மனம் விரைந்து ஓடியது. அந்த தேவதை இருந்த இடத்தில் வேறொரு கோதை நின்றுக் கொண்டு இருந்தாள். எத்தனை கோதை அங்கு நின்றாலும் அந்த தேவதை போல் வருமா..... திரவத்துக்கு கூட வாசம் தரும் அவள் ஸ்பரிசம் கிடைக்குமா ? .... என்று மனதில் ஏக்கங்கள் மட்டுமே நிறம்பியது. கண்களில் வெருமை தெரிந்தது.

Test tube குழந்தையை கண்டு பிடித்தவன். cloning முறையில் அவளின் இன்னொரு உருவை செய்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை வந்தது. வானத்தில் ஒரு நிலவுக்கு தான் மதிப்புண்டு.... செயற்கை கோளுக்கு என்ன மதிப்பு ... தகவல் தருவதை தவிர செயற்கைகோளால் என்ன பயன்....? நிலவு மட்டுமே எல்லோராலும் ரசிக்க முடியும். இந்த பூமி ரசிக்க அந்த ஒரு தேவதை போதும்..... அவளை cloning முறையில் இன்னொரு உருவை உருவாக்கினாலும் அது செயற்கை தனமாக தான் இருக்கும்.... நிலவு பூமி கண்ணுக்கு தெரியாமலா போகும்.... அந்த தேவதை என்றோ ஒரு நாள் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் அந்த தேவதை நடந்த சுவடுகளை தேடி மனம் போனப் போக்கில் செல்கின்றேன்.

Tuesday, June 9, 2009

LKG பையனின் காதல்

க்ரேஸ்கல் கோட்டை இளவரசியே
ஷீலாவுக்கு நீ தான் போட்டியே !
பயணம் செய்யும் அழகிய டோரா
உன் புஜ்ஜியாக நான் வரவா !

மிக்கியாக நான் இருக்கிறேன்
உன் இதய டிஸ்னியில் இடம் தருவாயா !
பும்பாவாக கேள்வி கேட்கிறேன்
பதில் சொல்ல வருவாயா !



எலும்பு மனிதனின் மந்திரகோளா !
பவர் ரேன்ஜரின் லேசர் தூப்பாக்கியா !
ஜாக்கி சானின் அதிரடி சாகசம் போல்
இதயத்தை புரட்டி போட்டாயே !

ஹீமேன் கை வாளை போல்
உந்தன் விழி உள்ளதடி !
சுண்டி இழுக்கும் விழி வலையில்
ஸ்பைடர் மேனுன் விழ்வானடி !

வாண்டுப் போல் உன்னை சிரிக்க வைப்பேன்
நம் காதல் எரியாவுக்குள் யாரையும் விட மாடேன் !!

Thursday, April 2, 2009

தேடினேன் ஒரு தேவதை

சௌக்காரப்பேட்டை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது 'சேட்' பெண்கள் தான். அப்படிப்பட்ட 'சேட்' பெண்களை சைட் அடித்தப்படி குறுக்கும் நெருக்கான சந்துகளில் நடந்துக் கொண்டு இருந்தேன்.

வட இந்திய பெண்களை இறக்குமதி செய்தது போல் ஒவ்வொரு பெண்களும் இருந்தனர். ( வட இந்தியாவில் இருந்து இங்கு தயங்கியவர்கள் அப்படி தான் இருப்பார்கள்... இது கூடவா தெரியாதா..!!) வெள்ளை தோலை எல்லாம் அழகு என்று சொல்லும் முட்டாள் நானில்லை. ஒரு சிலர் பார்க்கும் படி இருந்தனர். ஒரு சிலர் சப்பாத்தி மாவு போல் தெரிந்தனர். எந்த பெண்ணையும் இரண்டு நிமிடம் மேல் பார்க்க முடியவில்லை.

என் கண்ணுக்கு மட்டும் என்னவோ சப்பாத்தி பெண்கள் தான் அதிகம் தெரிந்தனர். இப்படி வேடிக்கை பார்த்தப்படி நடக்கையில் ஒரு பெண் மீது தெரியாமல் இடித்துவிட்டேன்.

" ஸாரி..." என்ற சொல்லி அவள் முகத்தை பார்த்தேன்.

ஐஸ்வர்யா ராய்யின் மெழு சிலைக்கு உயிர் வந்தது போல் அவன் தேக நிறம் அவ்வளவு சிவப்பாக இருந்தது. நிச்சயமாக இவள் 'சேட்' பெண்ணாக இருக்க மாட்டாள் என்றே தோன்றியது.

காரணம், அவளை இடித்தவுடன் " முட்டாள்...உனக்கு கண்ணு தெரியல்ல..." என்று சுத்த தமிழில் திட்டினாள். ‘இந்தி’ கலப்படம் இல்லாமல் சுத்த தமிழில் பேசியதால் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன்.

அழகான பெண் நம்மை திட்டி விட்டு சென்றால் தமிழ் நாட்டில் எண்பது சதவீதம் ஆண்கள் கவலையில்லாமல் அவளை பின் தொடர நினைப்பார்கள். அதை தான் நானும் செய்ய நினைத்தேன். நான் நினைத்து முடிப்பதற்குள் கூட்டத்தில் அவள் தொலைந்து போனாள். இல்லை... இல்லை...நான் அவளை தொலைத்துவிட்டேன்.

இவள் இந்த இடத்தில் இருப்பவளாக இருந்தால் கண்டிப்பாக இதே சந்து வழியாக தான் செல்வான் என்று தோன்றியது.

அடுத்த நாள்...

அதே சந்தில் அவளுக்காக காத்திருந்தேன். அவள் வரவில்லை. ஒரு வேலை உடம்பு சரியில்லையோ...!!

அதற்கு அடுத்த நாள்...

இன்றும் அவள் வரவில்லை... வேறு சந்து வழியாக சென்று இருப்பாளோ...

அடுத்த வாரம்...

இன்றைக்கும் அவளை காணவில்லை. வீடு மாறி வேறு ஏரியாவுக்கு குடிபுகுந்திப்பாளோ...

அடுத்த மாதம்...

இதோ மைலாப்பூல் சாலையில் தேவதையை பின் தொடந்து சென்றுக் கொண்டு இருக்கிறேன்.

கபாலிஸ்வரன் கோவிலில் கடவுளை வணங்கும் அழகை பார்க்கும் போது... அம்மன் சிலையே கடவுளை வணங்குவது போல் இருந்தது.

" 'அம்மன்' கூட கடவுள் தான்.... ஒரு கடவுள் எப்படி இன்னொரு கடவுளை வணங்க முடியும்...முட்டாள்??" என்று யாரோ என்னை திட்டியது போல் இருந்தது.

யார் திட்டினால் நமக்கென்ன... தொடரு அந்த தேவதையை...

சௌக்காரப்பேட்டை தொலைத்த தேவதையை எப்படி மைலாப்பூரில் கண்டுபிடித்தேன் என்று வியப்பாக உள்ளதா....!

ஒரு மாதத்திற்கு மேல் தொலைந்த பெண்ணுக்காக காத்திருக்க நான் என்ன பைத்தியக்காரனா...!! இவள் வேறொரு தேவதை.... என்னுடைய தேவதை தேடல் தொடரும்...

Tuesday, March 10, 2009

காதலுடன் ஒரு உரையாடல்

பல வருடங்கள் பிறகு என்னை எழுத வைத்த காதலை இன்று தான் சந்தித்தேன். நீண்ட நாள் நண்பனை பிரிந்து இன்று தான் சந்தித்தது போல் ஒர் உணர்வு. இது வரை எத்தனையோ கிறுக்கல்கள் கிறுக்கியிருந்தாலும் அதற்கு எல்லாம் உத்வேகமாய் இருந்தது காதல் தான். அந்த காதலை பற்றி முழுமையாக நான் எழுதியதில்லை. நான் மட்டுமல்ல.. காதலை யாருராலும் முழுமையாக எழுத முடியாது. காரணம், காதல் அவ்வளவு அழகனாது.... அதே சமயத்தில் புதிரானது.

ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் காதல் ஒவ்வொரு விதமாக தொன்றும். அதை முழுமையாக அறிந்துக் கொண்டவர்கள் யாருமில்லை. உலகில் உள்ள எல்லா பெண்களில் மனதை அறிந்தவனாலே காதலை பற்றி அறிந்துக் கொள்ள முடியும். அப்படி இந்த உலகில் யாருமில்லை.

இதோ என்னை எழுத வைத்த காதலோடு சில உரையாடல்கள்.

நானும் காதலும்

காதல் : வா.. நண்பா பார்த்து நீண்ட நாட்கள் ஆனது.... நலம் தானா..?
நான் : நலம் தான்... உன் நலம் எப்படி ?

காதல் : என் நலம் உனக்கு தெரியாதா ?... என்னை ஒரு காதல் ஜோடி என்னை புனிதப்படுத்தினால்.... பத்து காதல் ஜோடிகள் காமத்திற்காகவே காதலிக்கிறார்கள். ‘காதல்’ என்றால் ‘காமம்’ என்று சொல்லும் நாள் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிட்டது.
நான் : உன் அச்சம் தேவையில்லாதது... காரணம், காதலுக்கு மறு பெயர் தான் காமம் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.

காதல் : என்ன சொல்கிறாய் ? வள்ளுவர் அப்படியா சொன்னார்...?
நான் : ஆமாம்... காமத்துப்பாலில் 25 ஆதிகாரங்களே எழுதியிருக்கிறார். அதில் ‘காதல்’ வார்த்தைக்கு அவர் ‘காமம்’ என்ற வார்த்தையை தான் தான் பயன் படுத்தியிருக்கிறார். காதலில் காமமில்லை என்றால் அதில் சுவையிருப்பதில்லை நண்பா...

காதல் : ஆனால்... காமம் மட்டும் காதல்ல... அன்பும் காதல் தான்.
நான் : உண்மை தான்.... அன்பு + காமம் = காதல். காதலில் இரண்டும் வேண்டும். இரண்டுமே சரிபாதியாக இருக்க வேண்டும். அன்பு அதிகமானால் அது நட்பு. காமம் அதிகமானால் அது வேறும் தேக உணர்வு.

காதல் : அடே அப்பா... காதலுக்கு நல்ல தான் விளக்கம் சொல்கிறாய்...
நான் : இன்று பல பேர் உன்னை தவறாக புரிந்துக் கொண்டு... தவறாகத் தான் நடந்துக் கொள்கிறார்கள்.... அதனாலே காதல் என்னவென்றால் உனக்கே மறந்து விட்டது...

காதல் : உண்மை தான். இன்று உண்மை காதல் என்னவென்று தெரியாமல் காதலிப்பதால்... எனக்கே உண்மை காதல் எதுவென்று தெரியாமல் மறக்கடித்து விட்டனர்.
நான் : சரி... என்ன செய்வது.... காலத்தின் மாற்றங்களில் இதுவும் ஒன்று தான்.

காதல் : நீ கூட என்னை கண்டுக் கொள்வது இல்லையே உன்னை என்ன செய்வது....
நான் : ஐய்யோ... நான் யாரை காதலித்து ஏமாற்ற வில்லையே... காதலை காதலிக்கும் காதலன் நான்.

காதல் : எனக்கு தெரியும். ஆனால் காதலை பற்றி இப்பொழுது எல்லாம் நீ எழுதவில்லையே....
நான் : உன்னை பற்றி எழுதினால் தான்... ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று அர்த்தமா.... என்னை எழுத வைத்ததே நீ தானே

காதல் : அந்த நன்றி இருப்பதால் தான் நீ என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய்... மற்றவர்கள் என்னை கண்டுக் கொள்ளவது இல்லை...
நான் : ஓ..அதான் என்னை கண்டுகொள்ள வில்லை என்றாயோ....

காதல் : ஆமாம்... எதோ தனிமை ஆகிவிட்ட உணர்வு.... என்னை வைத்து எழுத தொடங்கிய கவிஞர்கள் எல்லாம்.... இப்பொது பெண்னை பற்றி எழுதுவதும், கதாநாயகனுக்கு பாட்டு எழுதுவதும் தான் இருக்கிறார்கள்.
நான் : எல்லோரும் அப்படியில்லை... காலத்தால் அழியாத காதல் பாடல்களை எழுதிய கண்ணதாசன் தான்... இன்று எல்லா கவிஞர்களுக்கும் குரு....

காதல் : ஆ.. அவரா... என்னை அதிகமாக வாழ்த்தி பாடியவரும் அவரே.... என்னை அதிகமாக வதைத்து பாட்டு எழுதியவரும் அவரே....
நான் : கதைக்கு எற்ற சூழ்நிலைக்கு பாட்டு எழுதும் தலைமை பாடாசிரியர் அவர்... அவரை குறைக் கூறாதே...

காதல் : நான் யாரையும் குறைக் கூறவில்லை.... என் வேதனை கூறுகிறேன்.
நான் : அப்படி என்ன உன் வேதனை ?

காதல் : தமிழில் முதலில் ‘அ’ எழுதி தமிழை கற்றுக் கொள்வதுப் போல் கவிதை எழுத கற்று கொள்ளும் கவிஞர்கள் முதலில் என்னை பற்றி தான் எழுதுகிறான். ஆனால் வளர்ந்த பிறகு என்னை பற்றி கண்டு கொள்வதேயில்லை...வாழ்வியல், உரைநடை, சரித்திரம், விஞ்ஞானம் என்று தங்கள் திறமையை வேறொன்றில் நிருப்பிக்க நினைக்கிறார்கள். அதன் பிறகு என்னை பற்றி மீண்டும் எழுதுவதில்லை.
நான் : உன்னை பற்றி எழுதுவது சுலபம்...’கிறுக்கல்’ கூட காதலில் கவிதை தான். ஆனால், நீ சொன்ன வாழ்வியல், உரைநடை, சரித்திரம், விஞ்ஞானம் எல்லாம் படித்து உணர்ந்துக் கொள்ளும் அறிவு இருப்பவர்களாலே எழுத முடியும். தங்கள் திறமை உலகிற்கு காட்ட நினைப்பது தவறு ஒன்றும் இல்லையே...

காதல் : நான் தவறு என்று சொல்லவில்லை... ஆனால் மீண்டும் என்னை பற்றி எழுதுவதில்லை என்றே என் வருத்தம்...
நான் :அதை எல்லாம் எழுதிய பிறகு அவர்களுக்கு வயது ஐம்பதை தாண்டி இருக்கும்... அப்பொது அவர்களுக்கு காதலை விட ஆன்மீகம், சமுதாய சிந்தனை தான் மனதில் அதிகம் நிறைந்துயிருக்கும்....

காதல் : அப்படி என்றால் வளர்ந்த பிறகு என்னை பற்றி எழுதமாட்டார்களா....
நான் : அப்படி சொல்லவில்லை.... வளரும் சமயத்தில் ‘காதல்’ மட்டுமே மனதில் நிறைந்துயிருக்கும்... வளர்ந்த பிறகு உன்னை மருந்துக்கு என்று இரண்டு, மூன்று பக்கங்கள் மட்டுமே எழுதுவார்கள்... மற்ற பக்கங்களில் தங்கள் சமுதாய, அறிவியல் சிந்தனைக் காட்ட தான் நினைப்பார்கள்.

காதல் : இன்றைய தமிழ் திரைப்படத்தில் கவர்ச்சிக்கு நடிகை ஒரு பாடலில் ஆடிவிட்டு செல்வதுப் போல் சொல்கிறாய்.... என்னை முழுமையாக வளர்ந்தவர்கள் யாரும் எழுதுவதில்லை.... அதற்கு சமாதானம் கூறு....
நான் : உன் கடமையை மறந்து நீ பேசுகிறாய்....
காதல் : எது என் கடமை?
நான் : கவிஞர்களை உருவாக்குவதே உன் கடமை.... அதை நீ சரியாக செய்.... எந்த கவிஞனும் உன்னை மறக்க முடியாது. காரணம், நீ இல்லாமல் கவிதையில்லை... புரிந்துக் கொள் ! உன் வருத்தம் தேவையில்லாதது....

காதல் : அப்பொது ஏன்... காதல் கவிதை தொகுப்புகள் அதிகமாக வருவதில்லையே....
நான் : எனக்கு சிரிப்பு தான் வருகிறது... நீ பேசுவது சிறு பிள்ளை தனமாக உள்ளது ( வடிவேலு சொல்வது போல் ) ... ஒவ்வொரு கவிதையிலும் அன்னை மீது உள்ள காதல், மண்ணின் மீது உள்ள காதல், பெண்ணின் மீது உள்ள காதல் என்று உன்னை பற்றி தான் எழுதுகிறார்கள்...

காதல் : யாரோ மீது இருக்கும் காதலைத் தான் எழுதுகிறார்கள். என் மீது காதல் பற்றி யாரும் எழுதவில்லையே...
நான் : தண்ணீருக்கு தரையில் நடக்க ஆசை வந்ததுப் போல் உள்ளது... நீ மனித உறவுகளில் ஜீவ நாடி... உன்னையும், மனித உறவுகளையும் பிரித்துப் பார்க்க முடியாது... நீயும் உன்னை பிரித்துப் பார்க்காதே...

காதல் : ஆ.... நன்றாக பேச கற்றுக் கொண்டாய்.... உன்னை இப்படி பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி....
நான் : என்ன ...உன் கவலை திர்ந்ததா...?

காதல் : எனக்கு கவலையா... நீண்ட நாள் கழித்து உன்னை பார்க்கிறேனே... அன்று உன்னை பார்த்தது போல் அப்படியே இருக்கிறாயா... மாறிவிட்டாயா என்று சோதித்து பார்த்தேன்...
நான் : ஓ... இது உன் சோதனையா.... என்ன தெரிந்துக் கொண்டாய்...

காதல் : உன்னிடம் நல்ல மாற்றம் தெரிகிறது.... காதலை விட காலம் உன்னை நன்றாகவே மாற்றி இருக்கிறது... நம்பிக்கை இழக்காமல் என்னை தேற்ற பொறுமையாய் பதிலளித்தாய்.... தன்நம்பிக்கை வளர்த்துயிருக்கிறாய்....
நான் : மிக்க நன்றி.... உன்னை நான் மறக்கவில்லை என்று மிக விரைவில் தெரிந்துக் கொள்வாய்....

காதல் : எப்படி..?
நான் : இதோ... ‘என்னை எழுதிய தேவதைக்கு..’ தலைப்பில் ஒரு தொகுப்பை தொடங்கிள்ளேன்..... ஒவ்வொரு காதல் சூழ்நிலைகளை என்னை நாயகன் இடத்தில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறேன்...

காதல் : வாழ்த்துக்கள்... உன் எழுத்துப்பணி தொடரட்டும்....யார் அந்த தேவதை
நான் : நீ தான் அந்த தேவதை...

காதல் : நான் பெண்பால் இல்லை... எப்படி நான் தேவதையாக முடியும் ?
நான் : தெரியும். ஆண்ணுக்கு நீ பெண்பால். பெண்ணுக்கு நீ ஆண்பால். அதனால் தான் உன்னை இரு பால்களும் விரும்புகிறார்கள்.

காதல் : உன்னிடம் பேசிக் கொண்டு இருந்தால்... எனக்கே உன் மீது காதல் வந்துவிடும்... நான் வருகிறேன்.
நான் : சரி நன்றி காதலே.... உன்னை மீண்டும் சந்திக்கிறேன்.

காதல் : ஐய்யோ... மறுபடியும் உன்னை சந்திப்பதா....

பயந்தப்படி எங்கோ நீ எங்கோ மறைந்துக் கொண்டாய். நீ விளையாட்டாக அப்படி சொன்னாலும் உனக்கு என் மீதுள்ள காதலால் தானே என்னிடம் உரையாட வந்தாய்.

ஒவ்வொருவரிடம் காதல் உரையாடிக் கொண்டு தான் இருக்கிறது. அதை உணர்ந்தவர்கள் மட்டுமே கவிஞர்களாக உருமாருகிறார்கள். அதை உணராதவர்கள் கவிஞர்களின் கவிதையை படிக்கிறார்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails