வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label என்னை எழுதிய தேவதைக்கு. Show all posts
Showing posts with label என்னை எழுதிய தேவதைக்கு. Show all posts

Monday, January 9, 2012

காதல் திருமண அழைப்பிதழ் !!



காட்சி 1

இடம் : சென்னை, தமிழ்நாடு.

கதாநாயகனாகிய நான் அண்ணா நகரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன்.

கதாநாயகியாகிய என்னவள் மைலாப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டதேயில்லை. இருவருக்கும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரியாது. மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டு இருந்தோம்.


காட்சி 2

இடம்: திருச்சி, தமிழ்நாடு.

நாயகன், நாயகியாகிய நாங்கள் ஆர்.ஈ.சி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தோம். இருவரும் ஒரே வகுப்பில் இருந்தாலும் எங்களுக்குள் எந்த பினைப்பும் தோன்றவில்லை. ஆனால், இறுதி ஆண்டில் தோன்றியது..... அந்த ‘காதல்’..... அதுவும் ஒரு சண்டையில். தொடங்கியது சண்டை என்றாலும்.... உறவு தொடர்ந்துக் கொண்டு இருப்பது காதலில்........

காட்சி 3

கதையின் இறுதி கட்டம்

நான் - ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.

என்னவள் - வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.

இப்பொது மீண்டும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று சண்டை போட முடிவு எடுத்திருக்கிறோம். இந்த முறை வாழ்நாள் முழக்க சண்டை போட போகிறோம். ஆனால், அது இனிமையான சண்டை !

இது வரை ரகசியமாக இருந்த காதல் கதை.... இன்று எல்லோரின் கண்களுக்கு.... உங்கள் ஆசிர்வாதத்தோடு இசை நிகழ்ச்சியுடன் !!

இருப்பதியோறாம் நூற்றாண்டில் ரோமியோ, ஜூலியட் நடிக்கும்

“மற்றுமொரு காதல் கதை”

நாங்கள் எங்களின் திருமணத்திற்கு அன்புடன் அழைக்கிறோம். இந்த முறை எங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத ஷேக்ஸ்பியர் இல்லை. எங்கள் தலையெழுத்தை நாங்களே எழுதிக் கொண்டோம்.

பெற்றோர்கள் ஆதரவில்லாத எங்கள் காதலுக்கு, ரசிகர்களாகிய நண்பர்களும், உறவினர்களும் வருகை தந்து இந்த காதல் கதை நீண்ட நாள் வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

இருப்பதியோறாம் நூற்றாண்டின் ரோமியோ, ஜூலியட்.

முதல் காட்சி ( திருமணம் நாள்) 21 ஆகஸ்ட், 2009. காலை 9 முதல் 10.30 மணி வரை

சிறப்பு காட்சி ( வரவேற்பு நாள்) 20 ஆகஸ்ட்,2009. மாலை 6.30 முதல் 9 மணி வரை

இடம் : இந்திரலோகம்

தலைமை : தேவந்திரன்

வாழ்த்தி ஆசிர்வதிப்பவர்கள் : பிரம்மா, சிவன், விஷ்ணு

திருமண மண்டப்பதிற்கு வரும் வழி

வேகமாக வண்டி ஓட்டி விபத்தில் வரலாம். விஷம் குடித்து எங்களை போல் தற்கொலை செய்துக் கொள்ளலாம். மலை உச்சிக்கு சென்று கீழே விழலாம்.

எங்கள் நண்பர் எமன் அங்கிருந்து சரியான நேரத்திற்கு திருமணத்திற்கு அழைத்து வருவார்.

அவசியம் குடும்பத்தோடு வாருங்கள் !!

****

நான் எழுதிய "என்னை எழுதிய தேவதைக்கு..." நூலில் இருந்த கதை.

35வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் கிடைக்கும் !!!

பாலவசந்தா பதிப்பகம் : ஸ்டால் எண் - 416 - 417
டிஸ்கவரி புக் பேலஸ் : ஸ்டால் எண் - 334
புதுப்புனல் : ஸ்டால் எண் - 442

Tuesday, January 12, 2010

காதல் திருமண அளைப்பிதழ் !!



காட்சி 1

இடம் : சென்னை, தமிழ்நாடு.

கதாநாயகனாகிய நான் அண்ணா நகரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன்.

கதாநாயகியாகிய என்னவள் மைலாப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டதேயில்லை. இருவருக்கும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரியாது. மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டு இருந்தோம்.


காட்சி 2

இடம்: திருச்சி, தமிழ்நாடு.

நாயகன், நாயகியாகிய நாங்கள் ஆர்.ஈ.சி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தோம். இருவரும் ஒரே வகுப்பில் இருந்தாலும் எங்களுக்குள் எந்த பினைப்பும் தோன்றவில்லை. ஆனால், இறுதி ஆண்டில் தோன்றியது..... அந்த ‘காதல்’..... அதுவும் ஒரு சண்டையில். தொடங்கியது சண்டை என்றாலும்.... உறவு தொடர்ந்துக் கொண்டு இருப்பது காதலில்........

காட்சி 3

கதையின் இறுதி கட்டம்

நான் - ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.

என்னவள் - வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.

இப்பொது மீண்டும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று சண்டை போட முடிவு எடுத்திருக்கிறோம். இந்த முறை வாழ்நாள் முழக்க சண்டை போட போகிறோம். ஆனால், அது இனிமையான சண்டை !

இது வரை ரகசியமாக இருந்த காதல் கதை.... இன்று எல்லோரின் கண்களுக்கு.... உங்கள் ஆசிர்வாதத்தோடு இசை நிகழ்ச்சியுடன் !!

இருப்பதியோறாம் நூற்றாண்டில் ரோமியோ, ஜூலியட் நடிக்கும்

“மற்றுமொரு காதல் கதை”

நாங்கள் எங்களின் திருமணத்திற்கு அன்புடன் அழைக்கிறோம். இந்த முறை எங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத ஷேக்ஸ்பியர் இல்லை. எங்கள் தலையெழுத்தை நாங்களே எழுதிக் கொண்டோம்.

பெற்றோர்கள் ஆதரவில்லாத எங்கள் காதலுக்கு, ரசிகர்களாகிய நண்பர்களும், உறவினர்களும் வருகை தந்து இந்த காதல் கதை நீண்ட நாள் வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

இருப்பதியோறாம் நூற்றாண்டின் ரோமியோ, ஜூலியட்.

முதல் காட்சி ( திருமணம் நாள்) 21 ஆகஸ்ட், 2009. காலை 9 முதல் 10.30 மணி வரை

சிறப்பு காட்சி ( வரவேற்பு நாள்) 20 ஆகஸ்ட்,2009. மாலை 6.30 முதல் 9 மணி வரை

இடம் : இந்திரலோகம்

தலைமை : தேவந்திரன்

வாழ்த்தி ஆசிர்வதிப்பவர்கள் : பிரம்மா, சிவன், விஷ்ணு

திருமண மண்டப்பதிற்கு வரும் வழி

வேகமாக வண்டி ஓட்டி விபத்தில் வரலாம். விஷம் குடித்து எங்களை போல் தற்கொலை செய்துக் கொள்ளலாம். மலை உச்சிக்கு சென்று கீழே விழலாம்.

எங்கள் நண்பர் எமன் அங்கிருந்து சரியான நேரத்திற்கு திருமணத்திற்கு அழைத்து வருவார்.

அவசியம் குடும்பத்தோடு வாருங்கள் !!

****

"என்னை எழுதிய தேவதைக்கு..." நூலில் இருந்த கதை.

புத்தகத்தை வாங்க இங்கே !

Sunday, January 3, 2010

எதிர் வீட்டு தேவதை !



நான் குருடன் என்று உன்னை பார்த்த பிறகு தான் தெரிந்துக் கொண்டேன். எதிரில் இருந்த உன்னை இத்தனை நாள் பார்க்காமல் நான் இருந்திருக்கிறேனே....!! என் நண்பர்கள் இன்று தான் உருப்படியாக ஒரு நல்ல காரியம் செய்தனர். உன்னை கண்டெடுத்து எனக்கு காட்டியவர்கள் அவர்கள் தான். என் வண்டியை ஸ்டார்ட் செய்த அடுத்த நோடியில் தெரு முனையை தாண்டி விடுவேன். அதனால் என்னவோ எதிர் வீட்டில் தேவதை குடியிருந்தும் நான் பார்க்காமல் இருந்துவிட்டேன். அவள் எனக்காவே இந்த பூமியில் ஒதுக்கப்பட்டவள் போன்ற உணர்வு...! உன்னுடன் வாழ்வதற்காகவே நான் பிறவி எடுத்தேன் என்ற ரகசியத்தை புரிந்து கொண்டேன்.

அவள் கண்ணில் படும் படி பல முறை தெருவோரம் நடந்தேன். அவள் வீட்டை கடக்கும் போது தெருவில் அனைவரும் காதில் விழும் படி வண்டி ஹாரன் அடித்தேன். அவளை தவிர மற்றவர்கள் பார்வை தான் என் மீது விழுந்தது. அவள் வீட்டில் இருக்கிறாளா இல்லையா என்று தெரியாமல் இப்படி பல சேட்டைகள் செய்தேன். ஆனால், ஒன்றும் பலனில்லை.

எத்தனையோ காதல் படங்களை பார்த்தாலும், காதல் புத்தகங்கள் படித்தாலும்... எனக்காக ஒரு காதல்.. ஒரு பெண் என்று பார்க்கும் போது தான் நம் காதலுக்கு ஒரு உருவம் கிடைக்கிறது. என் காதலுக்கு உருவம் கொடுத்த தேவதை அவள் தானே.. !!

என் காதல் பார்வையை விட அவள் பார்வையில் காதல் அதிகமாகவே தெரிந்தது. நான் அவள் வீட்டை கடக்கும் போது பார்த்த பார்வையும், கன்ன குழி சிரிப்பும்.... யப்பா ! என்னை விழுங்கி விடும் அளவிற்கு இருந்தது. மேல் மாடியில் இருந்து அவள் என்னை எட்டி பார்ப்பதும், நான் தலையை கோதியப்படி அவளை பார்த்து சிரித்தும் தெருவை கடப்பேன்.

வேலி போட்டு பார்த்து ரசிக்கும் மாம்பழத்தை போல தினமும் அவளை பார்த்து பார்த்து ரசிக்க தான் முடிந்தது. அவள் எப்போது அம்மாவுடன் அல்லது அண்ணாவுடன் தான் வீட்டை விட்டு வருவாள். நான் சமிஞை செய்தும் புரிந்து புரியாமல் புன்னகைத்தப்படி நடப்பாள். ஒரு நிமிடம் நின்றால் போதும் நான் நினைத்ததை எல்லாம் சொல்லிவிடுவேன். சந்தர்ப்பம் அமையாமல் தவித்தேன்.

இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தால், அவள் வேறு ஒருவனுக்கு மாட்டிவிட்டால் என்ன செய்வது. ஒரு காகிதம் எடுத்தேன். கவிதை எழுத முயற்சித்தேன். முடியவில்லை. வீண் விபரிதத்தை செய்யாமல் என் செல் நம்பரை எழுதி அவள் பார்க்கும் படி வீசினேன். அவளும் எடுத்தாள். அந்த கணதில் இருந்து என் செல்போன் மணி எப்போது அடிக்கும் என்று காத்துக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போது அவளுடைய அழைப்பாக இருக்குமோ என்று ஆர்வமாக எடுத்தேன். அவள் அந்த காகிதத்தை கிலித்து போட்டாளா அல்லது எடுக்காமல் குப்பையில் விழுந்ததா என்று தெரியாமல் தவித்தேன்.

ஒரு வாரம் கடந்தது. அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையே போய்விட்டது.

செத்து கிடந்த என் நம்பிக்கைக்கு 'ஆக்ஸிஜன்' கொடுப்பது போல் மணி அடித்தது...

" நீங்க ராமசந்திர தானே..." என்று எதிர் முனையில் ஒரு பெண்ணின் குரல்.

அவளே தான். எத்தனை முறை அவள் அம்மாவிடம் பேசும் போது கேட்டிருப்பேன். என் பயரை அவள் உச்சரித்தபோது மெய் எழுத்துக்கள் எல்லாம் உயிர் கொண்டு வந்தது. உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் வாழ தொடங்கியது.

" சொல்லுங்க..." என்று ஆவலாக கேட்டேன்.

"ஒரு நிமிஷம் " என்று சொன்னாள். கொஞ்ச நேரத்தில் இன்னொரு பெண் குரல் கேட்டது.

"டேய்... நீ தான் ராமசந்திரனாடா...." என்று மிரட்டும்படி இருந்தது அந்த குரல். நிச்சயமாக அவள் அம்மா இல்லை. குரல் அச்சுருத்துவது போல் இருந்தாலும் இளமையாக தான் தெரிந்தது.

"டேய்...நாயே... லூசூ... பண்ணாட..." என்று இன்னும் வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளை இடியும் மின்னலுமாக பொழிந்தாள்.

அவள் பேசி முடித்ததும், இன்னொரு பெண் பேசினாள்.

" டேய் ! கசுமாலாம்.... டுபுக்கு...." என்று ஆண் சொல்ல கூச்சப்படும் வார்த்தைகளை சொல்லி திட்டினாள்.

அடுத்து இன்னொரு பெண் என்று தன் தோழி படைகளிடம் கொடுத்து என்னை மட்டுமில்லாமல் குடும்பத்தையே சேர்த்து வருத்தெடுத்தார்கள். கோபத்தில் போனை வைத்த போது கூட விடாமல் அவர்கள் அழைப்பு மணி, எனக்கு சாவு மணி போல் ஒலித்தது.

ஒரு பெண்ணின் செல் நம்பர் கிடைத்தால் ஒருவன் மட்டும் தான் பேச ஆசைப்படுவான். ஆனால், ஆணின் நம்பர் பெண்ணுக்கு கிடைத்தால் அவனை போட்டு தாக்க கொலைவெறியோடு பல பெண்கள் அலைவதை அன்று தான் உணர்ந்தேன்.

முகத்தில் வழியும் வேர்வையை துடைத்து விட்டு, என் செல்போனுக்கு புது சிம் வாங்க சென்றேன்.

***

"என்னை எழுதிய தேவதைக்கு..." நூலில் இருந்த கதை.

புத்தகத்தை வாங்க இங்கே !

Monday, August 24, 2009

எதிர் வீட்டு தேவதை



நான் குருடன் என்று உன்னை பார்த்த பிறகு தான் தெரிந்துக் கொண்டேன். எதிரில் இருந்த உன்னை இத்தனை நாள் பார்க்காமல் நான் இருந்திருக்கிறேனே....!! என் நண்பர்கள் இன்று தான் உருப்படியாக ஒரு நல்ல காரியம் செய்தனர். உன்னை கண்டெடுத்து எனக்கு காட்டியவர்கள் அவர்கள் தான். என் வண்டியை ஸ்டார்ட் செய்த அடுத்த நோடியில் தெரு முனையை தாண்டி விடுவேன். அதனால் என்னவோ எதிர் வீட்டில் தேவதை குடியிருந்தும் நான் பார்க்காமல் இருந்துவிட்டேன். அவள் எனக்காவே இந்த பூமியில் ஒதுக்கப்பட்டவள் போன்ற உணர்வு...! உன்னுடன் வாழ்வதற்காகவே நான் பிறவி எடுத்தேன் என்ற ரகசியத்தை புரிந்து கொண்டேன்.

அவள் கண்ணில் படும் படி பல முறை தெருவோரம் நடந்தேன். அவள் வீட்டை கடக்கும் போது தெருவில் அனைவரும் காதில் விழும் படி வண்டி ஹாரன் அடித்தேன். அவளை தவிர மற்றவர்கள் பார்வை தான் என் மீது விழுந்தது. அவள் வீட்டில் இருக்கிறாளா இல்லையா என்று தெரியாமல் இப்படி பல சேட்டைகள் செய்தேன். ஆனால், ஒன்றும் பலனில்லை.

எத்தனையோ காதல் படங்களை பார்த்தாலும், காதல் புத்தகங்கள் படித்தாலும்... எனக்காக ஒரு காதல்.. ஒரு பெண் என்று பார்க்கும் போது தான் நம் காதலுக்கு ஒரு உருவம் கிடைக்கிறது. என் காதலுக்கு உருவம் கொடுத்த தேவதை அவள் தானே.. !!

என் காதல் பார்வையை விட அவள் பார்வையில் காதல் அதிகமாகவே தெரிந்தது. நான் அவள் வீட்டை கடக்கும் போது பார்த்த பார்வையும், கன்ன குழி சிரிப்பும்.... யப்பா ! என்னை விழுங்கி விடும் அளவிற்கு இருந்தது. மேல் மாடியில் இருந்து அவள் என்னை எட்டி பார்ப்பதும், நான் தலையை கோதியப்படி அவளை பார்த்து சிரித்தும் தெருவை கடப்பேன்.

வேலி போட்டு பார்த்து ரசிக்கும் மாம்பழத்தை போல தினமும் அவளை பார்த்து பார்த்து ரசிக்க தான் முடிந்தது. அவள் எப்போது அம்மாவுடன் அல்லது அண்ணாவுடன் தான் வீட்டை விட்டு வருவாள். நான் சமிஞை செய்தும் புரிந்து புரியாமல் புன்னகைத்தப்படி நடப்பாள். ஒரு நிமிடம் நின்றால் போதும் நான் நினைத்ததை எல்லாம் சொல்லிவிடுவேன். சந்தர்ப்பம் அமையாமல் தவித்தேன்.

இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தால், அவள் வேறு ஒருவனுக்கு மாட்டிவிட்டால் என்ன செய்வது. ஒரு காகிதம் எடுத்தேன். கவிதை எழுத முயற்சித்தேன். முடியவில்லை. வீண் விபரிதத்தை செய்யாமல் என் செல் நம்பரை எழுதி அவள் பார்க்கும் படி வீசினேன். அவளும் எடுத்தாள். அந்த கணதில் இருந்து என் செல்போன் மணி எப்போது அடிக்கும் என்று காத்துக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போது அவளுடைய அழைப்பாக இருக்குமோ என்று ஆர்வமாக எடுத்தேன். அவள் அந்த காகிதத்தை கிலித்து போட்டாளா அல்லது எடுக்காமல் குப்பையில் விழுந்ததா என்று தெரியாமல் தவித்தேன்.

ஒரு வாரம் கடந்தது. அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையே போய்விட்டது.

செத்து கிடந்த என் நம்பிக்கைக்கு 'ஆக்ஸிஜன்' கொடுப்பது போல் மணி அடித்தது...

" நீங்க ராமசந்திர தானே..." என்று எதிர் முனையில் ஒரு பெண்ணின் குரல்.

அவளே தான். எத்தனை முறை அவள் அம்மாவிடம் பேசும் போது கேட்டிருப்பேன். என் பயரை அவள் உச்சரித்தபோது மெய் எழுத்துக்கள் எல்லாம் உயிர் கொண்டு வந்தது. உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் வாழ தொடங்கியது.

" சொல்லுங்க..." என்று ஆவலாக கேட்டேன்.

"ஒரு நிமிஷம் " என்று சொன்னாள். கொஞ்ச நேரத்தில் இன்னொரு பெண் குரல் கேட்டது.

"டேய்... நீ தான் ராமசந்திரனாடா...." என்று மிரட்டும்படி இருந்தது அந்த குரல். நிச்சயமாக அவள் அம்மா இல்லை. குரல் அச்சுருத்துவது போல் இருந்தாலும் இளமையாக தான் தெரிந்தது.

"டேய்...நாயே... லூசூ... பண்ணாட..." என்று இன்னும் வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளை இடியும் மின்னலுமாக பொழிந்தாள்.

அவள் பேசி முடித்ததும், இன்னொரு பெண் பேசினாள்.

" டேய் ! கசுமாலாம்.... டுபுக்கு...." என்று ஆண் சொல்ல கூச்சப்படும் வார்த்தைகளை சொல்லி திட்டினாள்.

அடுத்து இன்னொரு பெண் என்று தன் தோழி படைகளிடம் கொடுத்து என்னை மட்டுமில்லாமல் குடும்பத்தையே சேர்த்து வருத்தெடுத்தார்கள். கோபத்தில் போனை வைத்த போது கூட விடாமல் அவர்கள் அழைப்பு மணி, எனக்கு சாவு மணி போல் ஒலித்தது.

ஒரு பெண்ணின் செல் நம்பர் கிடைத்தால் ஒருவன் மட்டும் தான் பேச ஆசைப்படுவான். ஆனால், ஆணின் நம்பர் பெண்ணுக்கு கிடைத்தால் அவனை போட்டு தாக்க கொலைவெறியோடு பல பெண்கள் அலைவதை அன்று தான் உணர்ந்தேன்.

முகத்தில் வழியும் வேர்வையை துடைத்து விட்டு, என் செல்போனுக்கு புது சிம் வாங்க சென்றேன்.

Wednesday, July 15, 2009

கணினி தேவதை

தந்தையின் கட்டாயத்திற்காக தான் கணினி கற்கும் இடத்திற்கு வந்தேன். கணினி வகுப்பு வரும் போது மனதில் எத்தனை முறை வெடித்துக் கொண்டேன் தெரியுமா..... தேவதை நீ அங்கு வந்து சேர்ந்த பிறகு தான் நான் அங்கு சேர்ந்ததற்கு அர்த்தம் பிறந்தது.

கணினி கற்க வந்த எனக்கு கன்னி மனதை கற்க ஆவல் வந்தது. கன்னி மனதை படிப்பதற்கு உலகத்திலே இதற்கு மட்டும் தான் எந்த கல்லூரிகளும் இல்லை, பல்கலைக்கழகங்களும் இல்லை. அவரவர் சொந்த முயற்சியில் கற்கிறார்கள். எந்த தேர்வில் தோல்வி அடைந்தாலும் வருந்தாத இளைஞர் படைகள் இதற்கு மட்டும் வருந்தும்.

ஐய்யோ...தோல்வியா ... இதில் மட்டும் தோல்வியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எதிலும் தோற்றாலும் அடுத்த முயற்சியில் வென்று விடலாம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்..... காதலில் அடுத்த முயற்சி என்பது வெறோரு பெண்ணாகத் தான் இருக்கும்.... அவளை மறந்து வேறொரு பெண்ணா...? அப்படி நினைத்து கூட பார்க்க முடியவில்லை....

பெண்ணை காதலித்து தோல்வி அடைந்தால் காதலிக்க வேறொரு பெண்ணை தேடலாம். தேவதை காதலித்து தோற்றவன் வேறோரு தேவதையை எங்கு போய் தேடுவது. கிளியோபட்ரா அழகில் கூட மூக்கு நீளம் என்ற குறை உண்டு. உன் அழகில் நிறைகள் மட்டுமே உள்ளன. எனக்கு தெரிந்து இந்த மண்ணில் இருப்பது ஒரு தேவதை .... அதுவும் அவள் மட்டும் தான்.... இதில் தோல்வியே இருக்க கூடாது... தோற்றாலும் என் மரணத்திலே தான் முடிய வேண்டும்.



நீ தீண்டுவதற்கு அந்த Keyboard என்ன தவம் செய்ததோ.... உன் விரல் நுணி படுவதற்கு ஒவ்வொரு ஆங்கில எழுத்துக் கூட தமிழ் கற்குமடி.... உன்னிடம் பேசுவதற்காக... தமிழை வளர்க்க சங்கங்கள் தேவையில்லை. உன்னை போல் தேவதை போதும் தமிழ் வளர்ந்து விடும். உன்னால் எல்லோரும் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள்..... உலகம் முழக்க தமிழ் பறப்புவதற்கு உன்னை போன்ற தேவதைகளே மண்ணில் பிறக்க வேண்டும்.

வீட்டில் எலி என்றால் அஞ்சுவாய் என்று சொன்னாவளே.... ஆனால் கணினிப்பொறி முன் எலியைத் (Mouse) தான் பிடித்துக் கொண்டு இருக்கிறாய். உன்னை பயமுட்டிய எலி, பல்லி, பூச்சிகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும்.... உன்னை பய முட்டியதற்காக ! அவைகள் எல்லாம் உன்னை தரிசிக்க வந்தது என்று உனக்கு புரியவில்லையா... எலி, பூச்சிகளுக்கு வாயில்லை உண்மையை சொல்வதற்கு.... அதற்கு வாய் இருந்தால் அது கூட உன்னை பற்றி கவிதை பாடும்...
இந்த கணினி கூட ஐந்து நிமிடத்தில் பதில் அளிக்கும். ஆனால் நீ ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவேளை விடுவது தான் என்னை பாதிக்கும். Sherlock நாவலில் கூட அடுத்தது என்ன நடக்கும் என்று கனித்து விடலாம். நீ அடுத்தது என்ன பேசுவாய் என்று கனிப்பதே மிகவும் கடினம். கணினி இயங்கும் வேகம் தெரியும். ஆனால், உன் இதயம் இயங்கும் வேகத்தை அறிய கணினிக் கூட தோற்கும்.

உன் அறிமுகம் கிடைத்தற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால்..... நீ எனக்கு கிடைத்தால்... உலகில் இருக்கும் அத்தனை ஆண்களின் பொறாமைக்கும் நான் தான் சொந்தக்காரனாக இருப்பேன். நீ எனக்கு கிடைத்த பிறகு மற்றவர் பொறாமை என்னை என்ன செய்யும்.

மானிடனாய் பிறத்தல் அறிது என்ற வாக்கியம் உண்மை என்று இன்று தான் புரிந்துக் கொண்டேன். இந்த பல்லி, எலிகளுக்கு இல்லாத பாக்கியம் எனக்கு கிடைத்தே.....!
பெண்ணைப்பார்த்தால் காதல் கவிதை தான் வரும்.... தேவதை உன்னை பார்த்தால் காதல் காவியமே வரும். உன்னை பார்த்த இக்கணம் தோன்றிய கவிதை இது...

246 தமிழ் எழுத்துக்கள் வாடுது....
'நீ' என்ற எழுத்து மட்டும்
புன்னகை சிந்தியது...
உன் பெயரை விட அதிகம்
உன்னிடம் உச்சரிப்பவர்கள்
அந்த எழுத்தை தானே ...

கவிதை எழுத கற்று தந்த உன் அழகு.... கொடுக்க தைரியத்திற்கும் தடைப் போட்டது. தடைகள் எல்லாம் தகர்க்கும் வரை உன்னை வர்ணிக்கும் என் கவிப்பணி தொடரும்.....

Monday, July 6, 2009

தேவதை தோழி

நான் கல்லூக்கு வருவதே உனக்காகத் தான் என்று யாருக்கும் தெரியாது. நான் உன்னை மற்ற பெண்களை போல் நினைத்ததில்லை. நம் வகுப்பில் இருக்கும் மற்ற பெண்களும் நீயும் ஒன்று என்று யாரும் சொல்லமுடியாது. நான் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களிடம் பேசியிருக்கிறேன்.... உன்னிடம் தவிர. காரணம், என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. உன்னை பார்த்தா பிறகு உனக்காகவே வகுப்புக்கு வருகிறேன். உன்னிடம் பேச தொடங்கினால்...... என் வார்த்தைகள் உனக்காக மட்டும் தான் உயிர் வாழும்.

உனக்கு சொந்தமான வார்த்தைகளை எப்படி நான் எப்படி மற்றவர்களிடம் பேச முடியும். அப்படி பேச தொடங்கிவிட்டால் என் வார்த்தைகள் என்னோடு சண்டை போடாதா... தேவதை உனக்காக வாழ்ந்த வார்த்தைகள் மற்றவருக்கு பயன்பட்டால் யாருக்கு தான் கோபம் வராது.



நான் என் மீது நம்பிக்கை இல்லாததால் தான் உன்னிடம் பேசவில்லை. ஆனால், நீ என்னை சோதிப்பதற்காகவே என்னிடம் வந்து பேசுகிறாய். ஒவ்வொருவரும் உன்னிடம் பேச ஆசைப்படும் போது, நீயே என்னிடம் வந்து பேசினாய். என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் எல்லாம் தடுமாறி போய்விட்டது. விலகிச் செல்லத்தான் நினைக்கிறேன். உன் வலையில் விழுந்து விட வேண்டும் என்றே என்னிடம் பேச சூல்லுரைத்தாய்.

நீ என்னிடம் பேசுவதால் எத்தனை ஆண்களுக்ளின் பொறாமை சம்பாதித்தேன் தெரியுமா ? உன்னிடம் என்ன பேசினேன் என்று எத்தனை ஆண்கள் உன் தோழிகளிடம் விசாரித்தார்கள் தெரியுமா ? நாம் காதலர்களா என்று ஒரு தனிப்படை குழு நம் விசாரித்துக் கொண்டு இருப்பது நமக்கே தெரியாமல் போனது.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் உன்னை பற்றி கேட்கும் போது.... நீ என் தோழி மட்டுமே தான் என்று என் வாய் சொன்னது.... மனமோ போய் ஏன் சொல்கிறாய் ? என்று கேட்டது....

என் காதலை முதலில் உன்னிடம் தானே சொல்ல வேண்டும்.... மற்றவர்களிடம் சொன்னால் என்ன பயன் ? மூன்று ஆண்டுகள் காதலை சொல்லாமல் கழித்துவிட்டேன். நாட்கள் செல்ல செல்ல உன்னிடம் உள்ள காதல் வளர்ந்துக் கொண்டே இருந்தது. ஆனால், தைரியம் குறைந்துக் கொண்டே வந்தது.

ஒருவன் என்னிடம் வந்து உன்னை காதலிப்பதாக சொல்லி , அதற்கு தூதாக என்னை செல்ல சொல்கிறான். அவனை அடிக்க துடித்தது கைகள், ஆனால் ‘நட்பு’ என்று சொல்லிய வார்த்தை ‘காதல்’ என்று மாற்றிவிடும் கூட்டங்கள் என்னை சூழ்ந்து இருந்தது. அவனுக்கு உதவி செய்ய மறுத்த வந்துவிட்டேன். அவனோ தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்துக் கொண்டே இருந்தான்.

ஒரு முறை என் காதலை சொல்ல வந்த நேரத்தில் , அவனும் உன்னிடம் காதலை சொன்னான். எவ்வளவு நாள் தான் நான் சொல்வேன் என்று நீ எனக்காக காத்துக் கொண்டு இருப்பாய். நீ அவன் காதலை ஏற்கும் காட்சியை கண்டேன். என் மௌனத்திற்கு தண்டனை உன் காதலை இழந்ததை என் கண்ணில் கண்டேன். தோல்வி ஒன்றும் எனக்கு புதிதல்ல..... இது தண்டனை, என் மௌனத்திற்கு கிடைத்த தண்டனை. நட்பை கலங்க படுத்த கூடாது என்று நினைத்தற்கு தண்டனையாக உன் காதலை இழந்தேன். அது தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எண்ணிடம் பேச்சை குறைத்துக் கொண்டாய்.... அவனிடம் அதிகம் பேச தொடங்கிவிட்டாய்.... நானும் அதிகமாக பேசிக் கொண்டு இருக்கிறேன். உனக்காக நான் எழுதிய கவிதைகளுடன்.

Monday, June 22, 2009

Test tube தேவதை

வெள்ளை நிற தேவதை வெள்ளை நிற ஆடையில் Chemistry lab.... கையில் test tube ஏந்தி நின்று இரந்தாள்.

Test tube மூலம் குழந்தை பெறாலாம் கண்டு பிடித்தவன் கூட தன் ஆராய்ச்சி குறிப்புகளை அழித்துவிடுவான். காரணம், test tube ஏந்திய தேவதை அத்தனை அழகு.... Test tube குழந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி கூட அவனிடம் வாழ்ந்து குழந்தை பெற ஆசைப்படுவான். தன் தேசம் மறந்து இந்தியாவிலே தங்கி விடுவான். அவளிடம் பேசுவதற்காகவே தமிழை கற்றுக் கொள்வான்.



வேறு தேசத்தவன் கூட அவளுக்காக தமிழ் கற்ற வேண்டும் என்று சொல்லும் போது ..... தமிழ் தெரிந்த நான் சும்மாவா இருக்க முடியும்.... என் தோழர்கள் படையுகளுடன், test tube ஏந்திய தேவதையிடம் சென்றேன்.

Chemistry lab முழுக்க திரவம் நாற்றம்..... அங்கு நுழைந்ததற்காக என்னை தூற்றிய நண்பர்கள்.... நான் மட்டும் அந்த தேவதை குரல் கேட்கும் ஆவலில் கால்கள் நடந்தது. நண்பர்களில் வார்த்தைகளை கேட்க காதுகள் மறுத்தது.....

அவள் இருக்கும் இடத்தை அடைந்தேன். அங்கு மட்டும் மல்லிகை வாசம் தூக்கி வாரிப்பொட்டது. அவள் கைப்பட்டதால் திரவம் கூட மல்லிகை வாசம் விசுதோ என்ற சந்தேகம். ஒவ்வொரு bottle லும் ஒவ்வொரு திரவங்கள்..... sulphuric acid, hydrolic acid. Sodium chloride என்று திரவங்களின் பெயர்களை சொல்லி எல்லோருக்கும் விளக்கிக் கொண்டு இருந்தாள். திரவங்களின் பெயர் எனக்கு எதற்கு..... அந்த தேவதை பெயர் தெரிந்துக் கொள்ள தானே காத்துக் கொண்டு இருக்கிறேன். இத்தனை பெயர்களை சொன்னவள் அவள் பெயரை சொல்லவில்லை.

நண்பர்கள் என்று எண்ணி என் எதிரிகளை தான் அழைத்து சென்று இருக்கிறேன். அந்த தேவதை ரசிக்க விடாமல் அந்த இடத்தை விட்டு செல்ல உத்தரவிட்டார்கள். நான் மறுத்தும் என்னை இழுத்து சென்றார்கள். மனதில் நண்பர்களை திட்டிக் கொண்டு அந்த தேவதை இருக்கும் இடத்தை விட்டு சென்றேன்.

மறு நாள் அதே கல்லூரி பொருட்காட்சி..... மீண்டும் அந்த தேவதை சந்திக்க என் முழு எண்ணமாக இருந்தது. உடன் எந்த நண்பர்களையும் அழைத்து செல்லவில்லை. அவள் இருக்கும் Chemistry lab க்கு மனம் விரைந்து ஓடியது. அந்த தேவதை இருந்த இடத்தில் வேறொரு கோதை நின்றுக் கொண்டு இருந்தாள். எத்தனை கோதை அங்கு நின்றாலும் அந்த தேவதை போல் வருமா..... திரவத்துக்கு கூட வாசம் தரும் அவள் ஸ்பரிசம் கிடைக்குமா ? .... என்று மனதில் ஏக்கங்கள் மட்டுமே நிறம்பியது. கண்களில் வெருமை தெரிந்தது.

Test tube குழந்தையை கண்டு பிடித்தவன். cloning முறையில் அவளின் இன்னொரு உருவை செய்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை வந்தது. வானத்தில் ஒரு நிலவுக்கு தான் மதிப்புண்டு.... செயற்கை கோளுக்கு என்ன மதிப்பு ... தகவல் தருவதை தவிர செயற்கைகோளால் என்ன பயன்....? நிலவு மட்டுமே எல்லோராலும் ரசிக்க முடியும். இந்த பூமி ரசிக்க அந்த ஒரு தேவதை போதும்..... அவளை cloning முறையில் இன்னொரு உருவை உருவாக்கினாலும் அது செயற்கை தனமாக தான் இருக்கும்.... நிலவு பூமி கண்ணுக்கு தெரியாமலா போகும்.... அந்த தேவதை என்றோ ஒரு நாள் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் அந்த தேவதை நடந்த சுவடுகளை தேடி மனம் போனப் போக்கில் செல்கின்றேன்.

Thursday, April 2, 2009

தேடினேன் ஒரு தேவதை

சௌக்காரப்பேட்டை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது 'சேட்' பெண்கள் தான். அப்படிப்பட்ட 'சேட்' பெண்களை சைட் அடித்தப்படி குறுக்கும் நெருக்கான சந்துகளில் நடந்துக் கொண்டு இருந்தேன்.

வட இந்திய பெண்களை இறக்குமதி செய்தது போல் ஒவ்வொரு பெண்களும் இருந்தனர். ( வட இந்தியாவில் இருந்து இங்கு தயங்கியவர்கள் அப்படி தான் இருப்பார்கள்... இது கூடவா தெரியாதா..!!) வெள்ளை தோலை எல்லாம் அழகு என்று சொல்லும் முட்டாள் நானில்லை. ஒரு சிலர் பார்க்கும் படி இருந்தனர். ஒரு சிலர் சப்பாத்தி மாவு போல் தெரிந்தனர். எந்த பெண்ணையும் இரண்டு நிமிடம் மேல் பார்க்க முடியவில்லை.

என் கண்ணுக்கு மட்டும் என்னவோ சப்பாத்தி பெண்கள் தான் அதிகம் தெரிந்தனர். இப்படி வேடிக்கை பார்த்தப்படி நடக்கையில் ஒரு பெண் மீது தெரியாமல் இடித்துவிட்டேன்.

" ஸாரி..." என்ற சொல்லி அவள் முகத்தை பார்த்தேன்.

ஐஸ்வர்யா ராய்யின் மெழு சிலைக்கு உயிர் வந்தது போல் அவன் தேக நிறம் அவ்வளவு சிவப்பாக இருந்தது. நிச்சயமாக இவள் 'சேட்' பெண்ணாக இருக்க மாட்டாள் என்றே தோன்றியது.

காரணம், அவளை இடித்தவுடன் " முட்டாள்...உனக்கு கண்ணு தெரியல்ல..." என்று சுத்த தமிழில் திட்டினாள். ‘இந்தி’ கலப்படம் இல்லாமல் சுத்த தமிழில் பேசியதால் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன்.

அழகான பெண் நம்மை திட்டி விட்டு சென்றால் தமிழ் நாட்டில் எண்பது சதவீதம் ஆண்கள் கவலையில்லாமல் அவளை பின் தொடர நினைப்பார்கள். அதை தான் நானும் செய்ய நினைத்தேன். நான் நினைத்து முடிப்பதற்குள் கூட்டத்தில் அவள் தொலைந்து போனாள். இல்லை... இல்லை...நான் அவளை தொலைத்துவிட்டேன்.

இவள் இந்த இடத்தில் இருப்பவளாக இருந்தால் கண்டிப்பாக இதே சந்து வழியாக தான் செல்வான் என்று தோன்றியது.

அடுத்த நாள்...

அதே சந்தில் அவளுக்காக காத்திருந்தேன். அவள் வரவில்லை. ஒரு வேலை உடம்பு சரியில்லையோ...!!

அதற்கு அடுத்த நாள்...

இன்றும் அவள் வரவில்லை... வேறு சந்து வழியாக சென்று இருப்பாளோ...

அடுத்த வாரம்...

இன்றைக்கும் அவளை காணவில்லை. வீடு மாறி வேறு ஏரியாவுக்கு குடிபுகுந்திப்பாளோ...

அடுத்த மாதம்...

இதோ மைலாப்பூல் சாலையில் தேவதையை பின் தொடந்து சென்றுக் கொண்டு இருக்கிறேன்.

கபாலிஸ்வரன் கோவிலில் கடவுளை வணங்கும் அழகை பார்க்கும் போது... அம்மன் சிலையே கடவுளை வணங்குவது போல் இருந்தது.

" 'அம்மன்' கூட கடவுள் தான்.... ஒரு கடவுள் எப்படி இன்னொரு கடவுளை வணங்க முடியும்...முட்டாள்??" என்று யாரோ என்னை திட்டியது போல் இருந்தது.

யார் திட்டினால் நமக்கென்ன... தொடரு அந்த தேவதையை...

சௌக்காரப்பேட்டை தொலைத்த தேவதையை எப்படி மைலாப்பூரில் கண்டுபிடித்தேன் என்று வியப்பாக உள்ளதா....!

ஒரு மாதத்திற்கு மேல் தொலைந்த பெண்ணுக்காக காத்திருக்க நான் என்ன பைத்தியக்காரனா...!! இவள் வேறொரு தேவதை.... என்னுடைய தேவதை தேடல் தொடரும்...

Tuesday, March 10, 2009

காதலுடன் ஒரு உரையாடல்

பல வருடங்கள் பிறகு என்னை எழுத வைத்த காதலை இன்று தான் சந்தித்தேன். நீண்ட நாள் நண்பனை பிரிந்து இன்று தான் சந்தித்தது போல் ஒர் உணர்வு. இது வரை எத்தனையோ கிறுக்கல்கள் கிறுக்கியிருந்தாலும் அதற்கு எல்லாம் உத்வேகமாய் இருந்தது காதல் தான். அந்த காதலை பற்றி முழுமையாக நான் எழுதியதில்லை. நான் மட்டுமல்ல.. காதலை யாருராலும் முழுமையாக எழுத முடியாது. காரணம், காதல் அவ்வளவு அழகனாது.... அதே சமயத்தில் புதிரானது.

ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் காதல் ஒவ்வொரு விதமாக தொன்றும். அதை முழுமையாக அறிந்துக் கொண்டவர்கள் யாருமில்லை. உலகில் உள்ள எல்லா பெண்களில் மனதை அறிந்தவனாலே காதலை பற்றி அறிந்துக் கொள்ள முடியும். அப்படி இந்த உலகில் யாருமில்லை.

இதோ என்னை எழுத வைத்த காதலோடு சில உரையாடல்கள்.

நானும் காதலும்

காதல் : வா.. நண்பா பார்த்து நீண்ட நாட்கள் ஆனது.... நலம் தானா..?
நான் : நலம் தான்... உன் நலம் எப்படி ?

காதல் : என் நலம் உனக்கு தெரியாதா ?... என்னை ஒரு காதல் ஜோடி என்னை புனிதப்படுத்தினால்.... பத்து காதல் ஜோடிகள் காமத்திற்காகவே காதலிக்கிறார்கள். ‘காதல்’ என்றால் ‘காமம்’ என்று சொல்லும் நாள் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிட்டது.
நான் : உன் அச்சம் தேவையில்லாதது... காரணம், காதலுக்கு மறு பெயர் தான் காமம் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.

காதல் : என்ன சொல்கிறாய் ? வள்ளுவர் அப்படியா சொன்னார்...?
நான் : ஆமாம்... காமத்துப்பாலில் 25 ஆதிகாரங்களே எழுதியிருக்கிறார். அதில் ‘காதல்’ வார்த்தைக்கு அவர் ‘காமம்’ என்ற வார்த்தையை தான் தான் பயன் படுத்தியிருக்கிறார். காதலில் காமமில்லை என்றால் அதில் சுவையிருப்பதில்லை நண்பா...

காதல் : ஆனால்... காமம் மட்டும் காதல்ல... அன்பும் காதல் தான்.
நான் : உண்மை தான்.... அன்பு + காமம் = காதல். காதலில் இரண்டும் வேண்டும். இரண்டுமே சரிபாதியாக இருக்க வேண்டும். அன்பு அதிகமானால் அது நட்பு. காமம் அதிகமானால் அது வேறும் தேக உணர்வு.

காதல் : அடே அப்பா... காதலுக்கு நல்ல தான் விளக்கம் சொல்கிறாய்...
நான் : இன்று பல பேர் உன்னை தவறாக புரிந்துக் கொண்டு... தவறாகத் தான் நடந்துக் கொள்கிறார்கள்.... அதனாலே காதல் என்னவென்றால் உனக்கே மறந்து விட்டது...

காதல் : உண்மை தான். இன்று உண்மை காதல் என்னவென்று தெரியாமல் காதலிப்பதால்... எனக்கே உண்மை காதல் எதுவென்று தெரியாமல் மறக்கடித்து விட்டனர்.
நான் : சரி... என்ன செய்வது.... காலத்தின் மாற்றங்களில் இதுவும் ஒன்று தான்.

காதல் : நீ கூட என்னை கண்டுக் கொள்வது இல்லையே உன்னை என்ன செய்வது....
நான் : ஐய்யோ... நான் யாரை காதலித்து ஏமாற்ற வில்லையே... காதலை காதலிக்கும் காதலன் நான்.

காதல் : எனக்கு தெரியும். ஆனால் காதலை பற்றி இப்பொழுது எல்லாம் நீ எழுதவில்லையே....
நான் : உன்னை பற்றி எழுதினால் தான்... ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று அர்த்தமா.... என்னை எழுத வைத்ததே நீ தானே

காதல் : அந்த நன்றி இருப்பதால் தான் நீ என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய்... மற்றவர்கள் என்னை கண்டுக் கொள்ளவது இல்லை...
நான் : ஓ..அதான் என்னை கண்டுகொள்ள வில்லை என்றாயோ....

காதல் : ஆமாம்... எதோ தனிமை ஆகிவிட்ட உணர்வு.... என்னை வைத்து எழுத தொடங்கிய கவிஞர்கள் எல்லாம்.... இப்பொது பெண்னை பற்றி எழுதுவதும், கதாநாயகனுக்கு பாட்டு எழுதுவதும் தான் இருக்கிறார்கள்.
நான் : எல்லோரும் அப்படியில்லை... காலத்தால் அழியாத காதல் பாடல்களை எழுதிய கண்ணதாசன் தான்... இன்று எல்லா கவிஞர்களுக்கும் குரு....

காதல் : ஆ.. அவரா... என்னை அதிகமாக வாழ்த்தி பாடியவரும் அவரே.... என்னை அதிகமாக வதைத்து பாட்டு எழுதியவரும் அவரே....
நான் : கதைக்கு எற்ற சூழ்நிலைக்கு பாட்டு எழுதும் தலைமை பாடாசிரியர் அவர்... அவரை குறைக் கூறாதே...

காதல் : நான் யாரையும் குறைக் கூறவில்லை.... என் வேதனை கூறுகிறேன்.
நான் : அப்படி என்ன உன் வேதனை ?

காதல் : தமிழில் முதலில் ‘அ’ எழுதி தமிழை கற்றுக் கொள்வதுப் போல் கவிதை எழுத கற்று கொள்ளும் கவிஞர்கள் முதலில் என்னை பற்றி தான் எழுதுகிறான். ஆனால் வளர்ந்த பிறகு என்னை பற்றி கண்டு கொள்வதேயில்லை...வாழ்வியல், உரைநடை, சரித்திரம், விஞ்ஞானம் என்று தங்கள் திறமையை வேறொன்றில் நிருப்பிக்க நினைக்கிறார்கள். அதன் பிறகு என்னை பற்றி மீண்டும் எழுதுவதில்லை.
நான் : உன்னை பற்றி எழுதுவது சுலபம்...’கிறுக்கல்’ கூட காதலில் கவிதை தான். ஆனால், நீ சொன்ன வாழ்வியல், உரைநடை, சரித்திரம், விஞ்ஞானம் எல்லாம் படித்து உணர்ந்துக் கொள்ளும் அறிவு இருப்பவர்களாலே எழுத முடியும். தங்கள் திறமை உலகிற்கு காட்ட நினைப்பது தவறு ஒன்றும் இல்லையே...

காதல் : நான் தவறு என்று சொல்லவில்லை... ஆனால் மீண்டும் என்னை பற்றி எழுதுவதில்லை என்றே என் வருத்தம்...
நான் :அதை எல்லாம் எழுதிய பிறகு அவர்களுக்கு வயது ஐம்பதை தாண்டி இருக்கும்... அப்பொது அவர்களுக்கு காதலை விட ஆன்மீகம், சமுதாய சிந்தனை தான் மனதில் அதிகம் நிறைந்துயிருக்கும்....

காதல் : அப்படி என்றால் வளர்ந்த பிறகு என்னை பற்றி எழுதமாட்டார்களா....
நான் : அப்படி சொல்லவில்லை.... வளரும் சமயத்தில் ‘காதல்’ மட்டுமே மனதில் நிறைந்துயிருக்கும்... வளர்ந்த பிறகு உன்னை மருந்துக்கு என்று இரண்டு, மூன்று பக்கங்கள் மட்டுமே எழுதுவார்கள்... மற்ற பக்கங்களில் தங்கள் சமுதாய, அறிவியல் சிந்தனைக் காட்ட தான் நினைப்பார்கள்.

காதல் : இன்றைய தமிழ் திரைப்படத்தில் கவர்ச்சிக்கு நடிகை ஒரு பாடலில் ஆடிவிட்டு செல்வதுப் போல் சொல்கிறாய்.... என்னை முழுமையாக வளர்ந்தவர்கள் யாரும் எழுதுவதில்லை.... அதற்கு சமாதானம் கூறு....
நான் : உன் கடமையை மறந்து நீ பேசுகிறாய்....
காதல் : எது என் கடமை?
நான் : கவிஞர்களை உருவாக்குவதே உன் கடமை.... அதை நீ சரியாக செய்.... எந்த கவிஞனும் உன்னை மறக்க முடியாது. காரணம், நீ இல்லாமல் கவிதையில்லை... புரிந்துக் கொள் ! உன் வருத்தம் தேவையில்லாதது....

காதல் : அப்பொது ஏன்... காதல் கவிதை தொகுப்புகள் அதிகமாக வருவதில்லையே....
நான் : எனக்கு சிரிப்பு தான் வருகிறது... நீ பேசுவது சிறு பிள்ளை தனமாக உள்ளது ( வடிவேலு சொல்வது போல் ) ... ஒவ்வொரு கவிதையிலும் அன்னை மீது உள்ள காதல், மண்ணின் மீது உள்ள காதல், பெண்ணின் மீது உள்ள காதல் என்று உன்னை பற்றி தான் எழுதுகிறார்கள்...

காதல் : யாரோ மீது இருக்கும் காதலைத் தான் எழுதுகிறார்கள். என் மீது காதல் பற்றி யாரும் எழுதவில்லையே...
நான் : தண்ணீருக்கு தரையில் நடக்க ஆசை வந்ததுப் போல் உள்ளது... நீ மனித உறவுகளில் ஜீவ நாடி... உன்னையும், மனித உறவுகளையும் பிரித்துப் பார்க்க முடியாது... நீயும் உன்னை பிரித்துப் பார்க்காதே...

காதல் : ஆ.... நன்றாக பேச கற்றுக் கொண்டாய்.... உன்னை இப்படி பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி....
நான் : என்ன ...உன் கவலை திர்ந்ததா...?

காதல் : எனக்கு கவலையா... நீண்ட நாள் கழித்து உன்னை பார்க்கிறேனே... அன்று உன்னை பார்த்தது போல் அப்படியே இருக்கிறாயா... மாறிவிட்டாயா என்று சோதித்து பார்த்தேன்...
நான் : ஓ... இது உன் சோதனையா.... என்ன தெரிந்துக் கொண்டாய்...

காதல் : உன்னிடம் நல்ல மாற்றம் தெரிகிறது.... காதலை விட காலம் உன்னை நன்றாகவே மாற்றி இருக்கிறது... நம்பிக்கை இழக்காமல் என்னை தேற்ற பொறுமையாய் பதிலளித்தாய்.... தன்நம்பிக்கை வளர்த்துயிருக்கிறாய்....
நான் : மிக்க நன்றி.... உன்னை நான் மறக்கவில்லை என்று மிக விரைவில் தெரிந்துக் கொள்வாய்....

காதல் : எப்படி..?
நான் : இதோ... ‘என்னை எழுதிய தேவதைக்கு..’ தலைப்பில் ஒரு தொகுப்பை தொடங்கிள்ளேன்..... ஒவ்வொரு காதல் சூழ்நிலைகளை என்னை நாயகன் இடத்தில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறேன்...

காதல் : வாழ்த்துக்கள்... உன் எழுத்துப்பணி தொடரட்டும்....யார் அந்த தேவதை
நான் : நீ தான் அந்த தேவதை...

காதல் : நான் பெண்பால் இல்லை... எப்படி நான் தேவதையாக முடியும் ?
நான் : தெரியும். ஆண்ணுக்கு நீ பெண்பால். பெண்ணுக்கு நீ ஆண்பால். அதனால் தான் உன்னை இரு பால்களும் விரும்புகிறார்கள்.

காதல் : உன்னிடம் பேசிக் கொண்டு இருந்தால்... எனக்கே உன் மீது காதல் வந்துவிடும்... நான் வருகிறேன்.
நான் : சரி நன்றி காதலே.... உன்னை மீண்டும் சந்திக்கிறேன்.

காதல் : ஐய்யோ... மறுபடியும் உன்னை சந்திப்பதா....

பயந்தப்படி எங்கோ நீ எங்கோ மறைந்துக் கொண்டாய். நீ விளையாட்டாக அப்படி சொன்னாலும் உனக்கு என் மீதுள்ள காதலால் தானே என்னிடம் உரையாட வந்தாய்.

ஒவ்வொருவரிடம் காதல் உரையாடிக் கொண்டு தான் இருக்கிறது. அதை உணர்ந்தவர்கள் மட்டுமே கவிஞர்களாக உருமாருகிறார்கள். அதை உணராதவர்கள் கவிஞர்களின் கவிதையை படிக்கிறார்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails