வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, February 13, 2016

லாக்கப் ( விசாரணை) - விமர்சனம்

விசாரணை படம் எற்ப்படுத்திய பாதிப்பில் இருந்து மீள்வற்குள் லாக்கப் நூலை படித்துவிட வேண்டும் என்று ஒரே மூச்சில் படித்தேன். 

இருபது அத்தியாயத்தில் முதல், கடைசி அத்தியாயம் தவிர மற்ற எல்லா அத்தியாயத்தில் காவலர்களில் அடக்குமுறை தான் தெரிகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் எப்படி அடிவாங்கப் போகிறார்கள் என்ற பதட்டம் ஏற்படுகிறது. 



ஒரு கட்டத்தில் படிக்கும் நமக்கே குமார், ரவி, நெல்சன், மொஹதீன் நால்வர் அடிவாங்குவதை படிக்க சலிப்பு எற்பட்டுவிடுகிறது. ஆனால், சிறை கம்பிகளுக்கு நடுவே எப்படி சலிக்காமல் அடிவாங்கி, தாங்கள் செய்யாத தவறை ஒத்துக் கொள்ளாமல் மன உறுதியுடன் இருந்தார்கள் என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. 

இறுதியில் நீதிபதி, “எதற்காக சிரமப்படுகிறீர்கள் ? குற்றத்தை ஒத்துக் கொண்டிருந்தால் தண்டனைக் காலமே முடிந்திருக்கும்” என்கிறார். தீர்ப்பு எழுதும் நீதிபதிக் கூட இந்த சிஸ்டமில் இருந்து மீள முடியாதவராக இருக்கிறார் என்ற நிதர்சன உண்மையாக இருக்கிறது. 

பலர் Auto – fiction என்ற பெயரில் தமிழில் என்ன என்னவோ எழுதிகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், தமிழில் வந்த சிறந்த Auto – fiction நூலில் ’லாக்கப்’ முக்கிய நூலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

விசாரணை படத்தை பற்றி எப்படி எழுத வேண்டும் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு நாவலை இந்த அளவுக்கு கௌரவப்படுத்திய படம் வந்ததில்லை என்று சொல்லலாம். வெற்றிமாறன் லாக்கப் நாவலை வைத்து முதல் பாதியை தான் எடுத்திருக்கிறார். இரண்டாவது பாதியை இயக்குனருக்கான கற்பனை திறனில் திரைக்கதை அமைத்திருக்கிறார். 



அவர் நினைத்திருந்தால் “Inspired” என்ற வார்த்தை பயன்படுத்தி எழுத்தாளரை அப்படியே விட்டுவிட்டுருக்கலாம். ஆனால், தனக்கான பாராட்டு கிடைத்த இடத்தில் எழுத்தாளருக்கும் சேர்த்து அங்கிகாரத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதற்காகவே வெற்றி மாறனை பாராட்டியாக வேண்டும். 

காவலர்களை ஹீரோக்களாக காட்டி வந்த தமிழ் சினிமாவில் முதல் முறையாக அவர்களின் நிஜ முகத்தை காட்டியிருக்கிறது இந்தப் படம். 

லாக்கப் - அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். 
விசாரணை – அவசியம் பார்க்க வேண்டிய படம். 

Calendar Girls - திரை விமர்சனம்

சா.கந்தசாமியின் “தொலைந்து போனவர்கள்” போன்ற கதை தான். 

ஐந்து அழகிகளை மாடலாகக் கொண்டு பணக்கார நிறுவனம் ஒன்று தங்கள் வருடாந்திர கவர்ச்சி கேலண்டரை தயாரிக்கிறது. இதற்கு முந்தைய கேலண்டரில் நடித்தவர்கள் திரைப்படத்துறையில் பெயரிய நடிகையாக வந்திருப்பதால், அந்த ஐந்து அழகிகளும் கேலண்டர் வெளியானதும் தங்கள் வாழ்க்கையே மாறிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒவ்வொருத்தரின் வாழ்க்கை ஒவ்வொரு விதமாக செல்கிறது. 

 ஐந்து பெண்களில் யார் தங்கள் லட்சியத்தை அடைந்தார்கள் ? அவர்களின் வாழ்க்கை எப்படி திசை மாறிப் போனது என்பது தான் கதை. 



ஐந்து பேருக்கான அறிமுகக் காட்சியில் ஒன்றாக மாடலிங் செய்கிறார்கள். பிறகு, ஐந்து கதைகளாக பிரிகிறது. ஒரு பெண்ணின் திருமணத்தில் ஐந்து பேரும் சந்திக்கிறார்கள். இறுதியில், ஒருவர் மரணத்தில் மற்ற நால்வர் தங்கள் மீது இருக்கும் வெளிச்சம் மங்கியிருப்பதை உணர்கிறார்கள். 

படம் முடியும் போது, அடுத்த ஐந்து பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் கேலண்டர் மாட்டும் போது நாம் ரசிக்கும் அழகிகள் ஒவ்வொரு கட்டத்தில் மாறிக் கொண்டே இருப்பதை நிதர்சன உண்மையோடு படத்தை முடிக்கிறார்கள். 

ஆரம்பக் காட்சியில், ஐந்து பெண்கள் தங்களை தாங்களே ஒழிவு மறைவு இல்லாமல் அறிமுகம் செய்யும் காட்சியில், ஒருத்தி “ I am virgin" என்று சொல்லும் போது, அந்த பெண் செய்யக் கூடாத தவறை செய்ததைப் போல் மற்ற நால்வர் வாய்விட்டு சிரிக்கிறார்கள். ஆனால், அடுத்த அடுத்த காட்சிகள் இதேப் போல் ஸ்வாரஸ்யமாக இருக்கும் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. 

ஐந்து அழகிகளும் எந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்டியிருக்கிறார்கள். (பல பிகினி காட்சிகள் உண்டு). எதோ ஐந்து குறும்படங்களை தொகுக்கப்பட்ட படமாக தான் பார்க்க தோன்றுகிறது. 

பேஜ் 3, பேஷன் போன்ற படங்களை போல் “Calendar Girls” இருக்கும் என்று எதிர்பார்த்து பார்த்தப்படம். மாடலிங் மறுபக்கத்தை காட்டப் போகிறார்களோ, அதை தயாரிக்கும் நிறுவனத்தை நிஜ முகத்தை காட்டப்போகிறார்களோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. 

இந்தப் படத்தை பார்க்க பரிசீலனை செய்த நண்பனை தேடுகிறேன். இத்தன பெரு இருக்கும் போது என்ன மட்டும் இந்த படத்த எதுக்குடா பார்க்க சொன்ன ? ‪

Friday, February 12, 2016

Talvar - திரை விமர்சனம்

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இவ்வளவு கமர்ஷியலான திரில்லர் படத்தை சமிபத்தில் யாரும் கொடுத்ததில்லை. 

ஆருஷி கொலை வழக்கு தான் படத்தின் கதை. 

அந்த வழக்கில் ஊடகங்கள் கூறிய செய்தி, காவல் துறையினர் கொட்டை விட்ட சாட்சியங்கள், சி.பி.ஐ விசாரணை என்று அனைத்து விஷயங்களையும் குறிப்பிட்டு திரில்லான படத்தை கொடுத்திருக்கிறார்கள். 

ஆரம்பக் காட்சியில் கட்டிலில் மகள் கழுத்தருத்து கொல்லப்பட்டதை பார்த்து அம்மா கத்துகிறாள். வேலைக்காரி அதிர்ச்சியடைந்து போலீஸ்யை அழைக்கிறாள். போலீஸ் வீட்டு வேலைக்காரன் மீது சந்தேகப்படுகிறது. ஆனால், அவனுடைய பிணம் மொட்டை மாடியில் கிடப்பதை பார்க்கிறார்கள்.

மானத்திற்காக தங்கள் சொந்த மகளை கொன்றதாக பெற்றோரை காவலர்கள் கைது செய்கிறார்கள். அதற்கான சில ஆதாரங்களை சேகரிக்கிறார்கள். ஆனால், விடையளிக்கப்படாத பல கேள்விகள் அந்த இரட்டை கொலையில் இருக்கிறது என்பதை ஊடகங்கள் கூறிக் கொண்டு இருக்கிறது. 



இந்த இரட்டை கொலையைப் பற்றி விசாரிக்க இர்பான் கான் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படுகிறது. எல்லாம் முடிச்சுகள் அவிழ்ந்து கொலையாளிகள் கண்டுப்பிடிக்கப்பட்டார்கள் என்று நினைக்கும் போது, தலைமை அதிகாரி மாற்றத்தால் இர்பான் கான் விசாரணையில் சந்தேகம் வருகிறது. 

புதிய அதிகாரிகளோடு இன்னொரு முறை விசாரணை நடத்தப்படுகிறது. இர்பான் கான் கொடுத்த விசாரணை கமிஷன் ரிப்போட்டுக்கு நேர் எதிராக அந்த ரிப்போட் இருக்கிறது. கடைசி இருபது நிமிடம் இரண்டு குழுவும் விவாதித்து ’யார் குற்றவாளி’ என்று தீர்மானிக்கிறார்கள். அதையே கமிஷன் முடிவாக கோர்ட்டில் கொடுக்கப்படுகிறது. 

உண்மை சம்பவத்திற்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். திரைக்கதைக்கான பாடப்புத்தகம் உருவாகுவதாக இருந்தால், அதில் தல்வார் இடம் பெற வேண்டிய படம். 

விசாரணை – காவல்துறையின் அராஜக முகத்தை காட்டுகிறது என்றால், தல்வார் – காவல்துறையின் அஜாக்கிரதையை காட்டுகிறது. 

 அவசியம் பார்க்க வேண்டியப் படம் !!

Tuesday, December 22, 2015

மகன் தந்தைக்கு எழுதும் கடிதம் ! (நகைச்சுவைக்காக மட்டுமே)

ஒரு மகன் தன் பெற்றோருக்கு இப்படி கடிதம் எழுதுகிறான். 

 Disclaimer : நகைச்சுவைக்காக மட்டுமே.... 

** 

வணக்கம், 

உங்கள் அன்பு மகன் எழுதுகிறேன். 

கடந்த பதினைந்து ஆண்டுகளாக என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தீர்கள். என்னை படிக்க வைக்க நீங்கள் அடைந்துள்ள கஷ்டத்தை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். 

இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். ’படிப்பே வேண்டாம்’ என்று முடிவு செய்திருக்கிறேன். நான் உங்கள் மகன். எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள். அதனால், வீட்டு வாடகைக்கு வைத்திருந்த ரூ.10000 பணத்தை பீரோ உடைத்து சீட்டு விளையாட எடுத்திருக்கிறேன். 

உங்களுக்காக நான். உங்களோடு எப்போதும் நான் இருப்பேன். இப்போதைக்கு இரண்டு நாள் வீட்டுக்கு வர மாட்டேன். விரைவில் இப் பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி. 

உங்கள் மீது கொண்ட அன்பின் அடிப்படையில், நான் வீட்டு செலவுக்காக ரூ.1000 விட்டு வைத்திருக்கிறேன். இரண்டு நாட்களில் ரூ.10000யை ரூ.20000 மாற்ற முழு வீச்சில் செயல்படுவேன். 

என் அரிய முயற்சிக்கு தோள் கொடுக்கும் நண்பர்களாக நாய் சேகர், ப்ளேட் பக்கிரி, போகிரி ராஜா, புது நண்பனான அசால்ட் சேது என்னுடன் அயராது உழைப்பார்கள். அவர்களை முழுவதுமாக நம்புகிறேன். 

அதில் வெற்றிப் பெற்ற பிறகு, உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமப்பேன். எனக்கென்று தனி வாழ்க்கைக் கிடையாது. 

எனக்குச் பொதுநலம் அறவே கிடையாது. என் உறவு நீங்கள் தான். நான் வைத்திருக்கும் அனைத்து பொருட்களும் நீங்கள் வாங்கிக் கொடுத்தது. என் இல்லமும் உள்ளமும் என் பெற்றோராகிய நீங்கள் தான். 

நீங்கள் வைத்த பெயரை மறந்து போகும் அளவுக்கு, ’தண்டச்சோறு’, ’தருதலை’, ’உதவாக்கரை’ என்று அழைக்கின்ற சொல்லுக்காகவே என் வாழ்நாட்கள் முழுக்க வாழ விரும்புகிறேன். 

இது போன்ற சம்பவங்களில் பல முறை நான் மீண்டு வந்திருக்கிறேன். மீண்டும் ஒரு முறை மீண்டு வந்து, உங்கள் புகழை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தனயன் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். 

நன்றி! 

உங்கள் அன்பு மகன் 
தருதலை.

Friday, December 18, 2015

’இலக்கியச் சவடுகள்’ நூலை வெளியிட்ட ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகம் !

பெரம்பூரில் நண்பர் உதயகண்ணன் ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகம் நடத்தி வருகிறார். எங்கள் பகுதிக்காரர் என்பதாலோ என்னவோ இது என்னுடைய ‘பதிப்பகம்’ போன்ற உணர்வு. உரிமையாக எனக்கு தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்வேன். 

ம.காமுத்திரை எழுதிய ‘மில்’ நாவலுக்கு ’சுஜாதா’ விருது கிடைத்ததும், அதைப் படித்து விமர்சனம் எழுதிய முதல் ஆள் நானாக இருப்பேன். எஸ்.ஷங்கர்நாராயணன் நூல்களை பலருக்கு பரிந்துரை செய்திருக்கிறேன். இன்றைய இலக்கிய பதிப்புலகத்தில், இலக்கிய புத்தகத்திற்கு நியாயமான விலை வைத்து பதிப்பவர் ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகத்தின் உதயகண்ணன். 



நான் ‘நண்பன்’ என்பதால் என்னுடைய நூல்களை பதிப்பிக்க கேட்டால் ‘முடியாது’ என்று தான் சொல்வார். நான் எழுதும் வாழ்க்கை வரலாறு, அரசியல் நூல்களுக்கு அவர் பதிப்பகத்தில் இடம் கிடையாது. கவிதை, கதை, நாவல், மொழியாக்கம் போன்ற இலக்கியப் படைப்புகளுக்கே முன்னுரை. படைப்பில் கொஞ்சமாவது இலக்கியத்தரம் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர். பல வருடங்கள் போராட்டத்திற்கு பிறகே சென்ற வருடம் நான் எழுதிய ‘பெரியார் ரசிகன்’ (நாவல்) பதிப்பித்தார். 

தற்போது, ம.காமுத்திரை நூல்களை வம்சி புக்ஸ், எதிர் வெளியீடு பதிப்பகங்கள் வெளியிடுகிறது. மீரான் மைதீன் எழுதிய ‘அஜ்னபி’ நாவலை காலச்சுவடு வெளியிட்டுயிருக்கிறது. இவர்களின் முதல் நூலை வெளியிட்டது ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பகம் தான். 

 பதிப்புலகத்தில் பதினைந்து வருடம் மேல் இயங்கி வருகிறார். இவர் பதிப்பித்த பல நூல்களுக்கு தமிழக அரசு விருது, பாரத் ஸ்டேட் வங்கி விருது, கவிதை உறவு விருது கிடைத்திருக்கிறது. ஆனால், இன்னும் இவருக்கு பாபஸி உறுப்பினர் வழங்கப்படாமல் இருப்பது கொஞ்சம் வருத்தமான விஷயம். 

இப்படி, One-Man Army யாக செயல்ப்பட்டு வரும் உதயகண்ணனுக்கு நேற்று அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருந்திருக்கும். காரணம், ஆ.மாதவன் எழுதி உதயகண்ணனின் ‘அன்னை ராஜேஸ்வரி’ பதிப்பித்த ‘இலக்கியச் சுவடுகள்’ நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. பல வருடங்கள் பதிப்பகம் நடத்திய உதயகண்ணனுக்கு நேற்று தான் அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. 


ஆ.மாதவனை பலர் பாராட்டியிருப்பார்கள். பலருக்கு அந்த நூலை பதிப்பித்தவர் யார் என்று கூட தெரிந்திருக்காது. இந்த பதிவின் மூலம் ‘இலக்கியச் சுவடுகள்’ நூலை பதிப்பித்த பதிப்பாளர் உதயகண்ணனை நான் வாழ்த்துகிறேன். 

LinkWithin

Related Posts with Thumbnails