வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, February 29, 2012

அந்த மூன்று பெண்கள் - 7

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5 அத்தியாயம் 6

மாமா இன்று ஊரில் இல்லை. அவர் ஊரில் இல்லாத போது நான் அவருடைய புல்லட்டை பயன்படுத்தலாம். மாமா வண்டி எடுத்து பழகி கொள் என்று தான் சொல்வார். அம்மாவுக்கு தான் எப்போதும் பயம். நான் சைக்கிளில் சென்று வரும் வரை வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருப்பாள்.

முதல் தடவையாக புல்லட்டை கல்லூரிக்கு எடுத்து செல்வதால் நான் பரூக்கையும் என்னுடன் அழைத்து செல்ல நினைத்தேன். நேற்றே அவனிடம் நான் வந்து அழைத்து செல்ல போவதை சொல்லிவிட்டேன். எனக்காக அவன் காத்துக் கொண்டு இருப்பான். அம்மாவிடம் சொல்லிவிட்டு நான் புல்லட்டை எடுத்து கொண்டு பரூக் வீட்டுக்கு சென்றேன்.

பரூக் வாப்பா பாட்ஷா திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டு இருந்தார். என்னை பார்த்து சிரித்து, உள்ளே ஒரு பார்வை பார்த்தார்.

" பரூக் ! சந்திரு பேட்டா வந்தாச்சு. சீக்கிரம் வா....." என்று அவனை அழைத்தான்.

" உள்ள வா சந்திரு..." என்று சொல்லி திண்ணையில் உட்கார சொன்னார். " படிப்பு எல்லாம் எப்படி இருக்கு. பரூக் நல்லா படிக்கிறானா..." என்று தன் மகனை பற்றி என்னிடம் கேட்டார்.

ஒவ்வொரு பெற்றோர்க்கும் தங்கள் பிள்ளைகள் பற்றின ஏதாவது ஒரு கவலை வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்த பிறகும் பெற்றோர்கள் வெவ்வேறு கவலைகளை மாறினாலும், 'கவலை' என்ற ஒரு விஷயத்தை மனதில் வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் எந்த பெற்றோர்களும் விதி விளக்கல்ல.

" நல்லா படிக்கிறான்....!" என்றேன்.

" அவன பத்தின கவலை தான் எங்களுக்கு. அவனுக்கு ஒரு வழி பண்ணி வச்சிட்டா நான் சீக்கிரம் அல்லா கிட்ட போய்டுவேன். " என்று கவலை கலந்த குரலில் சொன்னார்.

" என்ன வாப்பா இப்படி பேசுறீங்க.. பரூக் நல்லா இருக்குறத பார்க்க தான் போறீங்க..." என்றேன்.

நாங்கள் பேசிக் கொண்டு இருக்கையில் பரூக் வெளியே வந்தான். 'போவோம்மா' என்றப்படி சைகை காட்டினான்.

" நாங்க கலம்புறோம் வாப்பா..." என்று இருவரும் சொல்லி விட்டு சென்றோம். பரூக்கின் அம்மா ஆயிஷா வெளியே வந்து " ஜாக்கிரதையா பார்த்து போங்கப்பா..." என்றார்.

நாங்கள் இருவரும் புல்லட்டில் சென்றோம். பரூக்கின் வாப்பா கடலூரில் அருகே மீன் வியாபாரம் செய்து கொண்டு இருந்தவர். வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்படவே சிதம்பரத்திற்கு வந்தார். பரம்பரை வீடும், அதில் வரும் வாடகையில் தான் அவர்கள் குடும்பமே ஒடுகிறது. வியாபாரத்தில் தோல்வியுற்று பரூக்கின் அப்பா நொடிந்து போனதை பற்றி பலமுறை பரூக் என்னிடம் சொல்லியிருக்கிறான்.

" என்னடா சும்மா வர.... வாப்பா ஏதாச்சி தப்பா பேசினாறா....??" பரூக் கேட்டான்.

" சச்சே... அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. பாவம் அவர் கஷ்டத்த யார் கிட்டையாவது சொல்லனும். என் கிட்ட சொன்னாரு அவ்வளவு தான். இதில என்ன தப்புயிருக்கு..." என்றேன்.

" அப்போ எதுக்கு எதுவும் பேசாம்ம வர..." என்றான்.

" சில சமயம் உன்ன பார்த்தா பொறாமையா இருக்கு...." என்று என் மனதில் இருப்பதை கூறினேன்.

நான் சொன்னதை கேட்டு கோபப்படுவான் என்று நினைத்தேன். ஆனால், அவன் தன்னை அறியாமல் சிரித்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

" எதுக்குடா சிரிக்குற.." என்று கேட்டேன்.

" என்னை பார்த்து பொறாமை படுற முதல் ஆள் நீ தான். அதான் சிரிச்சேன்" என்றான்.

" உங்க வாப்பா கஷ்டப்பட்டாளும் உங்க கூட இருக்காரு. நாங்க இவ்வளவு வசதியா இருந்தாலும் சின்ன வயசுல அப்பா என் கண் முன்னாடி செத்தது என்னால மறக்க முடியல்ல..." என்று என் சோகத்தை சொன்னேன்.

" சாரிடா... உன்ன கஷ்டப்படுத்தனும் சொல்லல..." என்று குரல் தாழ்த்தி பரூக் பேசினான்.

என்னால் இதற்கு மேல் பேச முடியவில்லை. இருவரும் பேசிக் கொண்டே புல்லட்டில் கல்லூரிக்கு வந்து விட்டோம். நாங்கள் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்து நான் முதல் பார்த்த குடுமி வைத்த பையன் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டு இருந்தான். நாங்கள் இருவரும் அவனை கண்டுக் கொள்ளாமல் வகுப்புக்கு சென்றோம்.

பேராசிரியர் பாலசுந்தர் வகுப்பு. என் கல்லூரியில் எனக்கு மிகவும் பிடித்த பேராசிரியர். அவர் வகுப்புக்கு தவறாமல் சென்று விடுவேன். அவரிடம் பாடத்தை தவிர மற்ற விஷயங்களை பேசுவது எனக்கு பிடிக்கும். அவ்வளவு தகவல்களையும் விரல் நுணியில் வைத்திருப்பார்.மொழிப் போரில் ஈடுப்பட்டவர் என்று ஒரு முறை பரூக் கூறியிருக்கிறான். அப்படி என்றால் இவர் தி.மு.கவை சேர்ந்தவராக தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இன்று அவர் வகுப்பில் பாடத்தில் இல்லாத ஒன்றை பற்றி பேச போவதாக சொன்னார். அப்படி என்ன சொல்ல போகிறார் என்ற ஆர்வத்துடன் அமர்ந்திருந்தேன்.

" நீங்கள் எத்தனை பேர் சிதம்பரம் நடராஜன் கோயில் சென்று இருக்கிறீர்கள் ? " என்று கேட்டார்.

நான் சிதம்பரத்திலே பிறந்து வளர்ந்தவன். வாரத்துக்கு ஒரு முறையாவது நடராஜன் கோயில்லுக்கு போகாமல் இருந்ததே இல்லை. ஒவ்வொரு மாணவர்கள் ஒவ்வொரு எண்ணிகையை சொல்ல என்னால் மட்டும் சரியாக சொல்ல முடியவில்லை.

" இத்தனை முறை சென்ற நீங்கள். அங்கு திருப்பாவை வாசித்து பார்த்திருப்பீர்களா...?" என்று கேட்டார்.



இதுவரை அதை பற்றி யோசிக்காத நான் அவர் சொன்ன பிறகு யோசித்து பார்த்தேன். ஆம்... நடராஜன் கோயிலில் தமிழ் திருப்பாவை யாரும் பாடி நான் பார்த்ததில்லை. "ஏன் அப்படி ?" என்று நான் கேட்கும் முன் அவரே பதில் கூறினார்.

" தமிழுக்கு நாம் கொடுக்கும் மாரியாதை அவ்வளவு தான். தமிழை தாய் மொழியாக கொண்ட மாநிலத்தில் பிறந்த நாம், ஏன் கோயிலில் சமஸ்கிரத்தில் அர்ச்சனை செய்யப்படுகிறது ஒரு முறையாவது யோசித்து பார்த்திருப்பீர்களா...? " என்று இன்னொரு கேள்வி கேட்டார்.

நான் இதுவரை யோசிக்காததை எல்லாம் இவர் சொல்லிக் கொண்டு இருந்தார். நம் மாநிலத்தில் தாய்மொழி தமிழ் என்றால் மற்ற மொழி அந்நிய மொழி தானே?? ஏன் சமஸ்கிரத்தில் அரச்சனை செய்ய வேண்டும். "நம் கடவுளுக்கு தமிழ் தெரியுதா என்ன...?" என்று எனக்குள் கேட்டு கொண்டேன்.

" தமிழை பேசி விட்டு தமிழை எதிர்க்கும் ஒரே இனம் தான் பார்ப்பன இனம். அவர்களுக்கு தெய்வ பாஷையான சமஸ்கிரத்தில் அரச்சனை செய்தால் தான் கடவுளுக்கு காது கேட்கும். மற்ற பாஷையில் அர்ச்சனை செய்தால் கடவுளுக்கு காது கேட்காதாம்" என்று பூஜை முறையை கேலி செய்தார்.

அண்ணாதுரை தான் கடவுள் இல்லை என்று சொல்பவர் என்று மாமா சொல்லியிருக்கிறார். இவரும் அதே மாதிரி சொல்ல வருகிறார் போல் தெரிந்தது.

" மாணவர்களே ! தமிழை பாடமாக கொண்ட நீங்கள். சமுதாயத்தில் பார்ப்பனர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் சொல்லும் கடவுளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் " என்று சொன்னார்.

அவர் பேச பேச எனக்கு கேட்க வேண்டும் போல் இருந்தது. அவர் பேசுவதை கேட்டு யாராவது தலைமை பேராசிரியரிடம் பாலசுந்தர ஆசிரியரை பற்றி சொல்லிவிட்டால் நிலைமை என்ன ஆகும் என்று கவலை இல்லாமல் இருந்தார்.

" கடவுள் 'இல்லை' என்று சொல்பவன் 'இல்லை' என்ற ஒற்றை வார்த்தையில் நிறுத்திவிடுகிறான். 'கடவுள் இருக்கிறான்' என்று சொல்பவன் ஏன் உழைக்க வேண்டும். கடவுளே மூன்று வேலை உணவு வைத்துவிடுவாரே ! உழைத்தால் தான் உணவு என்று தெரிந்தவர்களுக்கு, வணங்கி வராத கடவுளுக்காக ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்" என்றார்.

இன்று ஒரு முடிவோடு தான் கல்லூரிக்கு வந்திருக்கிறார் என்று புரிக்கிறது. பார்ப்பனர்களையும், சமஸ்கிரத மொழியையும் இப்படி கடுமையாக சாடி பேசினார். அவர் சொன்ன பல விஷயங்கள் என்னை சிந்திக்க வைத்தது. ஒரு வேலை இதற்கு பேர் தான் 'பகுத்தறிவா' என்று நினைத்துக் கொண்டேன்.
" கடவுள் வணங்குபவன் கடவுள் எங்கே இருக்கிறார் என்று ஆன்மீக தேடலில் வாழ்க்கையை செலவு செய்கிறான். கடவுள் இல்லை என்று நினைப்பவன் 'இல்லை' என்று ஒரு சொல்லை சொல்லிவிட்டு தன் வாழ்க்கையில் இருக்கும் மற்ற வேலைகளை கவனிக்கிறான்." என்றார். தொடர்ந்து, " கடவுள் இல்லை என்று சொல்பவனை விட, கடவுள் இருக்கிறார் என்று சொல்பவன் தான் கடவுளை அதிகமாக அவமாணம் படுத்துகிறான்." என்று தன் பேச்சை தொடர்ந்து கொண்டே இருந்தார்.

ஒரு முறை 'கம்பராமாயணம்' பற்றி வகுப்பெடுக்கும் போது அதில் வரும் பாடலை எடுத்திருந்தார்.

'தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை,
தீவினை என்ன நீத்து, சிந்தனை, முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா.

ராமனின் சிறப்புகளை மற்ற எல்லா இடத்திலும் கூறி, ராமனின் பெருமையை மிக ஆணித்தரமாக நிலைநாட்டி விட்டு, வெகு சுலபமாக, ஆயிரம் ராமருக்கு ஈடாகா என்ற ஒரு சொல்லில் பரதனின் குணத்தை குறிப்பால் உணர்த்திய பாடல். கம்பனின் பாடலை அழகான நெஞ்சில் பதியவைக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அதானாலே அவரை எனக்கு அவரை பிடிக்கும். இதுவரை பிடித்ததை விட இன்று தான் அவரை எனக்கு அதிகமா பிடித்தது. எவ்வளவு விஷயங்கள் பேச்சிலே சிந்திக்க வைத்திருக்கிறார்.

" பேராசிரியர் எப்படி புரட்சிக்கரமாக பேசுகிறார் என்று நினைக்கிறீர்களா. இன்று முதல் நான் வேலையில் இருந்து ஓய்வு பெருகிறேன். இது தான் என் கடைசி வகுப்பு. இன்று ஒரு நாள் என் மனசாட்சிக்கு தகுந்தாற்போல் பாடம் எடுத்த திருப்தி உள்ளது" என்று இன்பம் கலந்தத சோகத்தில் பாலசுந்தரம் பேராசிரியர் சொன்னார்.

எவ்வளவு பெரிய பேராசிரியர். மிக பெரிய விஷயத்தை சர்வசாதாரனமாக சொல்லியிருக்கிறார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதில் ஈட்டி போல் விழுந்தது. இதுவரை இப்படி "ஒரு வகுப்பை ஏன் எடுத்ததில்லை. இதற்கு முன் ஒரு முறை கூட பார்ப்பனர்களை பற்றி பேசியதில்லை..." என்று என் மனதில் நினைத்துக் கொண்டேன்.

" இது வரை பார்ப்பனர்களை பற்றி பேசாமல் அமைதியாக இருந்த நான், இப்போது இப்படி பேசுகிறேன் என்றால் எனக்கு கிடைக்க போகும் ஓய்வு தான். இனி எனக்கு வேலை விட்டு செல்ல வேண்டுமோ என்ற பயமில்லை." என்று சொல்லிவிட்டு வகுப்பை விட்டு சென்றார்.
இதுவரை பேராசிரியர் பாலசுந்தரத்துக்கு தன் வேலை ஒரு விலங்காக இருந்திருக்கிறது. அந்த விலங்கு உடைந்த சந்தோஷம் அவர் பேச்சி தெரிந்தது.

நான் அவரிடம் பேச வகுப்பை விட்டு வெளியே வந்தேன். தன் கொள்கை பரப்புவதில் மிக தீவிரமாக இருப்பதால், அவர் செல்லும் பாதையை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

பகுத்தறிவு பக்கம் என் மனம் செல்ல தொடங்கிய போது பெரிய இடி வந்து இறங்கியது. அது எனக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டிற்கே இடி போல் அமையும் செய்தி !

Tuesday, February 28, 2012

உலக சினிமா : The Japanese Wife

இணைய புரட்சி பிறந்த இந்த உலகத்தில் எந்த இடுக்கட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் தொடர்பு கொள்ள முடிகிறது. நட்பு கொள்ள முடிகிறது. காதல் செய்ய முடிகிறது. இணையம் மூலம் வாசனையை மட்டுமே நம்மால் உணர முடிவதில்லை. விரைவில் அதற்கும் வழி கிடைத்தாலும் வியப்போன்றுமில்லை. ‘இணையதளம்’ என்ற மிடியெட்டர் இருப்பதால் நேரில் பார்க்காமல் பரஸ்பர அன்பை பரிமாறிக் கொள்ள முடிகிறது. ஆனால், இணையம், தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் காதலை, அன்பை பரிமாறிக் கொள்ள உதவியது கடிதங்கள் மட்டும்.



இராணுவத்தில் நாட்டுக்கு வேலை செய்யும் கணவன் தன் மனைவிக்கு முத்தம் அனுப்பியது கடிதத்தில் தான். வெளியூரில் இருக்கும் ஒருவனின் கடிததிற்காக சொந்தபந்தங்கள் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது என்று சொல்லு அளவிற்கு நம் அறிவியல் வளர்ந்து விட்டது. நாம் அனைவரும் மறந்து விட்ட கடித போக்குவரத்து நினைவுப்படுத்தி அதன் மூலம் மெல்லிய காதலை சொல்லியிருக்கும் படம் " The Japanese Wife ".

ஜப்பானில் இருந்து தபாலில் சட்டர்ஜிக்கு பரிசு வருவதில் இருந்து படம் தொடர்கிறது. பரிசு பொருளை தன் அறையில் நிரப்பி ஜப்பானில் இருக்கும் தன் மனைவி மியகே எழுதிய கடிதத்தை வாசிக்கிறான். ஆசிரியர் பணி செய்யும் மியகே கடிதத்தில் தங்கள் எண்ணங்கள், கருத்துக்கள், இலக்கியம் என்று பரிமாரிக் கொள்கிறார்கள். பதினைந்து வருடங்களாக ஒருவரை ஒருவர் பார்க்கமால் கணவன், மனவியாக வாழ்ந்திருக்கிறார்கள். தங்கள் திருமண ஒப்பந்தத்தையும் கடிதம் மூலமே பரிமாரிக் கொள்கிறார்கள்.

பார்க்காமல் வளர்ந்த சட்டர்ஜியின் காதலுக்கு விதவை பெண் சந்தியா மூலம் சிறு சோதனை வருகிறது. சந்தியாவின் எட்டு வயது மகன் சட்டர்ஜியிடம் தந்தை பாசத்துடன் பழகுவதை சந்தியா பார்க்கிறாள். தன்னையும் அறியாமல் சட்டர்ஜி மீது காதல் கொள்கிறாள். ஆனால், சட்டர்ஜி பார்க்காத தன் மனைவிக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. புற்று நோயால் பாதிக்கப்பட்ட மியகே தன் பணிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சிகிச்சைக்காக செல்கிறாள். மியாகேயின் புற்றுநோய்க்காக குணமாக உள்ளூர் மருத்துவரிடம் விசாக்கிறான் சட்டர்ஜி. நோயாளியை நேரில் பார்க்காமல் எந்த உதவியும் செய்ய முடியாது என்கிறார் மருத்துவர். வீட்டு திரும்பும் வழியில் புயல் மழையில் நனைகிறான் சட்டர்ஜி. கடும் காய்ச்சலில் பாதிக்கபட்ட சட்டர்ஜியை கிராமத்தில் இருந்து கல்கத்தா மருத்துவர்களிடம் அழைத்து சென்றால் குணப்படுத்தலாம் என்கிறார்கள். ஆனால், கடும் புயல், வெள்ளத்தின் காரணமாக கிராமத்தில் இருந்து யாரும் சட்டர்ஜியை அழைத்து செல்ல முன் வரவில்லை. சட்டர்ஜியும் இறக்கிறான்.

இறுதியில், மொட்டைத்தலையுடன் விதவை கோலத்தில் மியகே சட்டர்ஜியின் கிராமத்துக்கு வருகிறாள். சந்தியா மியகேவுக்கு சட்டர்ஜியின் அறையை காட்டுகிறாள். அறை முழுக்க தான் அனுப்பிய பரிசு பொருள் நிறம்பி இருப்பதை பார்ப்பதில் படம் முடிகிறது.


பெங்காலி எழுத்தாளர் குணால் போஸ் எழுதிய ” The Japanese Wife” சிறுகதை தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதையை திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் அபர்னா சென். எழுத்தாளர் குணால் போஸூம் ஒரு காட்சியில் தோன்றுகிறார். வங்கால இயக்குனர்களில் மிக குறிப்பிட வேண்டிய இயக்குனர் அபர்னா சென். முதல் முறையாக அடுத்தவர் கதைக்கு திரைக்கதை அமைத்து படம் எடுத்திருக்கிறார்.

பார்க்காமல் காதல் படமான ’காதல் கோட்டை’ என்ற தேசிய விருது படத்தை பார்த்த நமக்கு பெரிய பாதிப்பு ஏற்ப்படுத்தாது மிக முக்கிய காரணம். ஆனால், கதாநாயகன் பாத்திரத்தை தூக்கிப்பிடிப்பது போல் ரைமா சென்னை (சந்தியா பாத்திரம்) மணந்துக் கொள்ளாமல் பார்க்காத தன் மனைவிக்கு விஸ்வாசமாக இருக்கிறான். அதேப் போல், நாயகி அப்படி நடந்துக் கொள்கிறாளா என்பதை தெளிவாக காட்டவில்லை.

இந்த படம் நல்ல பொழுதுப் போக்கு படம் இல்லை என்றாலும், ஒரு கவிதை வடிவிலான படம் என்பதற்கு மாற்று கருத்து இல்லை.

குணால் பாசு எழுதிய "The Japanese Wife" சிறுகதை நூலை வாங்க... இங்கே அழுத்தவும்.

The Japanese Wife படத்தின் சி.டியை வாங்க...

Monday, February 27, 2012

அந்த மூன்று பெண்கள் - 6

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5

அப்படி இப்படி என்று மூன்று மாதங்கள் கல்லூரி வாழ்க்கை ஓடிவிட்டது.

கல்லூரி முடித்து விட்டு வீட்டுக்கு போகாமல் உணவகத்திற்கு சென்றேன். அம்மா கல்லா பெட்டியில் அமர்ந்திருந்தாள்.

"அம்மா...! மாமா எங்கே...?" என்றேன்.

" உள்ள சமையல் அறையில மாணிக்கம் மாமா கிட்ட பேசிக்கிட்டு இருக்காரு..."

என் சைக்கிளை நிறுத்தி விட்டு சமையல் அறைக்கு சென்றேன். அங்கு மாணிக்கம் மாமா ராமா மாமாவும்விடம் எதோ சொல்லி கொண்டு இருந்தார்.

" இங்க பாரு... நல்ல இடம். பாரு சீக்கிரம் முடிச்சிடு. புரியுதா..." என்று மாணிக்கம் மாமா சொல்ல ராமா மாமா தலையை தலையை ஆட்டினார்.

எனக்கு மனதில் பயம் வந்தது. இப்போது தான் கல்லூரியில் சேர்த்தார்கள் அதற்குள் எனக்கு திருமண பேச்சா...!! ஐயோ மாமாவை எதிர்த்து என்னால் ஒண்ணும் செய்ய முடியாது. மேல் படிப்பு படிப்பு படிக்க முடியாது என்ற சொன்னதற்கு கண் கலங்கி நின்றார். படிக்கும் எனக்கு திருமணம் வேண்டாம் என்றால், " நாங்க எல்லாம் பத்து, பதினைஞ்சு வயசுல தான் கல்யாணம் பண்ணிகிட்டோம்னு" அம்மா சொல்லுவாள். மாணிக்கம் மாமா கூடவே இருக்கிறார். மாமாவை ஊக்கப்படுத்து பேசவைப்பார். யாராவது எனக்கு சாதகமாக ஒருவர் பேசினால் தானே என்னால் எனக்கு நடக்க போகும் திருமணத்தை நிருத்த முடியும்.

என்ன செய்வது..? எப்படி எனக்கு நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்துவது ? என்று மனதில் சிந்தித்தப்படி சமையல் அறையை விட்டு வெளியே வந்தேன். நான் வந்து , சென்றதை மாணிக்கம் மாமாவும், ராமா மாமாவும் கவனிக்கவில்லை.

மாணிக்கம் மாமா வந்தாலே இப்படி தான். எதாவது என்னை யோசிக்க வைத்து விடுவார். ஆயிரம் கேள்விகளை மனதில் விதைத்து விட்டு சென்றுவிட்டார். நான் தான் சிந்தித்துக் கொண்டு குழம்புகிறேன்.

" என்னடா மாமாவ பார்த்தியா...?"

" இல்ல. மாணிக்கம் மாமா கிட்ட முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்காரு..." என்றேன்.

" எத பத்தி..?" என்று என்னிடமே அம்மா கேள்வி கேட்டாள்.

அம்மாவுக்கு தெரியாமல் மாமா எனக்கு சம்மந்தம் பார்க்கிறாரா...? நான் சிறுவன் என்று என்னிடம் கேட்காமல் இருக்கலாம். என் வாழ்க்கையை பற்றி அம்மாவிடம் பேசாமல் மாணிக்கம் மாமா நேராக ராமா மாமாவிடம் பேசிவிட்டாரா என்ன...? மாமா சம்மதித்து விட்டால் அம்மா சம்மதித்து விடுவார் என்று மாணிக்கம் மாமா நினைத்து விட்டாரோ என்னவோ...!!

எனக்கு என்னானது..? எனக்குள்ளே பல கேள்விகள் கேட்டு கொண்டு இருக்கிறேன். ஒரு கேள்வி கூட மாமாவிடம் கேட்க தைரியமில்லை.

ராமா மாமாவிடம் பேசிவிட்டு மாணிக்கம் மாமா வெளியே வந்தார். என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, அம்மாவிடம் "வரேன் தங்கச்சி..!" என்று சொல்லி சென்றார்.

எனக்கு அவர் கோபமாக இருந்தது. இன்று இரவு மாமா என்னிடம் என்ன சொல்ல போகிறார், நான் எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை.

மாணிக்கம் மாமா சைக்கிள் எடுக்கும் போது திரும்பி ராமா மாமாவிடம் " ராமா ! நான் சொன்னத நல்ல யோசிச்சு பாரு. நல்ல இடம் விட்டுடாதே ! நாளைக்கு பாக்கலாம் " என்று சொல்லி சென்றுவிட்டார்.

" என்ன அண்ணே ! என்ன விஷயமா அவரு வந்திட்டு போறாரு..." என்று மாமாவிடம் கேட்டாள்.

" எல்லாம் நல்ல விஷயம் தான். வீட்டுக்கு போய் பேசலாம் " என்று சிரித்தப்படி சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார்.

அம்மாவுக்கு வயதாகிவிட்டது. அவர்கள் பேசுவதை வைத்து என் திருமணத்தை பற்றி பேசுகிறார்கள் என்று கூட யூகிக்க முடியவில்லை. எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கவில்லை. எனக்கு திருமணம் நடக்க கூடாது. அதே சமயம் மாமாவை எதிர்த்து பேசவும் கூடாது. இந்த இரண்டில் ஒன்று தான் சாத்தியம்.

நான் வீட்டுக்கு போகாமல் உணவகத்திலேயே இருந்தேன். இரவு வேலை. உணவகம் முட போகும் நேரம்.

" சந்திரு ! நீ அம்மாவ கூட்டிட்டு வீட்டுக்கு போ. நான் எல்லாத்தையும் பூட்டிட்டு வரேன் " என்றார்.

நான் பதில் சொல்வதற்கு முன்பே அம்மா கல்லா பெட்டியில் இருந்து எழுந்து உணவகம் சாவியை மாமாவிடம் கொடுத்தார்.

அம்மா சைக்கிள் எடுக்க சொல்வது போல் சைகை காட்ட, நான் சைக்கிள் எடுத்துக் கொண்டு வீட்டு வந்து விட்டேன். எப்போதும் கால தாமதமாக வரும் மாமா இன்று பார்த்து கொஞ்சம் சீக்கிரமாக வந்து விட்டார். சிரித்த முகத்தோடு வீட்டுக்குள் நுழைந்தார்.

" இந்திரா ! உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்.." என்றார்.

நான் அப்படியே மெதுவாக படுக்கை அறைக்குள் சென்றேன். உடனே, மாமா " என்னடா உள்ள போற. இன்னும் சின்ன பையனா நீ. உனக்கும் குடும்ப பொருப்பு வரனும்" என்றார்.

சந்தேகமேயில்லை. என் திருமணத்தை பற்றி தான் பேச போகிறார். நான் எதுவும் தவறாக பேசாமல் இருக்கனும்.

" சாய்ந்திரம் மாணிக்கம் வந்தான்ல... ஒரு பழைய ஹோட்டல் விலைக்கு வருதான். முப்பதாயிரம் சொன்னான். வாங்குறியா கேட்டான். நான் உன்ன கேட்டு சொல்லுறதா சொல்லிட்டேன். என்னம்மா சொல்லுற" என்றார்.

என்னது ஹோட்டலா...? சாய்ந்திரம் நீங்க ஹோட்டல் வாங்குற பத்தியா பேசிட்டு இருந்தீங்க. அப்பா கடவுளே ! நான் இவ்வளவு நேரம் என்னனமோ யோசித்து என் நேரத்த வீணாக்கிட்டேனே !

" அண்ணே ! அவ்வளவு பணம் நமகிட்ட இருக்கா...?" என்றார்.

" பத்து வருஷம் மேல இந்த தொழில் பண்ணுறோம். அதுல வந்த லாபம் கொஞ்சம் சேர்த்து வச்சு பணம் இருபதாயிரம் இருக்கும்" என்றார்.

மாமா கிட்ட இவ்வளவு பணம் இருந்திருக்கா. தெரிந்திருந்தால் மோட்டார் கார் வாங்க சொல்லியிருப்பேனே...!

"வீட்டு செலவுக்கு நீங்க கொடுத்த பணம் கொஞ்சம் சேர்த்து வச்சு, இரண்டாயிரம் இருக்கும்" என்றாள்.

இது வரை மாமா செலவுக்கு கொடுத்த பணத்தை எதுவும் நான் சேர்த்து வைக்கவில்லை. என்னால் நம்பிக்கையான வார்த்தைகள் மட்டுமே சொல்ல முடிந்தன.

" பரவாயில்ல இந்திரா ! மீதி எட்டாயிரம் கடன் வாங்கிக்கலாம். மாணிக்கம் கடன் வாங்கி தரதா சொன்னான். " என்றார்.

மாமா சொல்லி முடித்ததும் அவர் முகத்தில் சந்தோஷத்தை அளவிட முடியாது. நான் தான் எனக்கு திருமணம் பேசுகிறார்கள் என்று நினைத்து புலம்பி கொண்டு, இப்போது அசடு வழிய நின்றுக் கொண்டு இருந்தேன்.

" என்னடா ஒரு மாதிரிய நிக்குற..." என்று என்னை பார்த்து கேட்டார்.

" நான் என்ன நினைத்தேன் என்று சொன்னால், நானே வம்பில் சென்று மாட்டி கொள்வது போல் இருக்கும்" என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

"ஒண்ணுமில்ல மாமா. வகுப்புல சொன்ன பாடத்த பத்தி நினைச்சிட்டு இருக்கேன்" என்று சொல்லி சமாளித்தேன்.

" ஹோட்டல் வாங்குற விஷயமா நான் அங்க இங்க அலைய வேண்டியது இருக்கு. சாய்ந்திரமான வியாபாரத்த கவனிச்சுக்க " என்று சொல்லிவிட்டு அவர் படுக்க சென்று விட்டார்.

நல்ல வேலை நான் நினைத்தது போல் எந்த பிரச்சனையும் நடக்கவில்லை. நானும் நிம்மதியாக படுக்க சென்றேன். எனக்குள் என்னையும் அறியாமல் கல்யாண ஆசை வந்துவிட்டதோ ? அதனால் தான் இப்படி எல்லாம் சிந்திக்கிறேனா ?

இரண்டு மாமாவும் ஹோட்டலை வாங்க அங்கும் இங்கும் அழைந்தார். ஆனால், அவர்களுக்கு சொன்ன இடத்தில் பணம் கிடைக்கவில்லை. அப்போது தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

மாமாவிடம் சொன்னேன். " ஏன் மாமா ? நாம தான் ஹோட்டல் வாங்க போறோமே. பேசாம இப்ப இருக்குற கடைய வித்தா அதுல கொஞ்சம் பணம் வரும்ல.." என்றேன்.

இந்த யோசனை மாமாவுக்கு முன்பே வந்திருக்கிறது. முதல் முதல் தொடங்கிய தொழில். லாபத்தில் ஓடுவதை எதற்கு விக்க வேண்டும் என்று நினைத்தார். கேட்ட இடத்தில் பணம் கிடைக்காததால், வேறு வழியில்லாமல் உணவகத்தை வித்து ஹோட்டலை வாங்கினார்.

லாபத்தில் ஓடிய உணவகம் என்பதால் நல்ல விலைக்கு போனது. வந்த பணத்திலும், கையில் இருந்த பணத்திலும் ஹோட்டல் வாங்கிவிட்டோம். கையில் இருந்த கொஞ்ச பணத்தையும் வைத்து ஹோட்டலை புதுமை படுத்தினோம்.

ஹோட்டல் வேலை எல்லாம் நல்லப்படியாக முடிந்தது. என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க வேண்டியதாக இருந்தது. 'ராமா உணவகம்' என்று நடத்தியதால் 'ஹோட்டல் ராமா ' என்று வைப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், மாமா இதற்கு சம்மதிக்கவில்லை.

" நிறைய செலவு பண்ணியிருக்கோம். எல்லாரையும் கவர மாதிரி பேரு வை" என்றார்.

அவர் சொன்னவுடம் என் மனதில் ஒரு தோன்றியது. கண்டிப்பா இந்த பெயரை சொன்னால் மாமா மறுக்க மாட்டார். அவரால் மறுக்கவும் முடியாது.

" இன்னொரு பேரு இருக்கு சொல்லவா..."

" சொல்லு..."

" ஹோட்டல் அண்ணா..!" என்றேன்.

மாமா முகத்தில் எந்த யோசனையுமில்லை. அந்த பேர் தான் மதராஸ் மாநிலத்தையே ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கிறது. என்னை கட்டியணாஇத்து 'ஹோட்டல் அண்ணா' என்று பெயர் பலகைய தயார் செய்ய சொன்னார்.

புது ஹோட்டல் பெயர் பலகைக்கு பூ போட்டு அலங்காரம் செய்திருந்தோம். சாப்பிடும் அறையில் வண்ண வண்ண துணிகளை தொங்க விட்டுயிருந்தோம். 'வறுமை' என்ற வார்த்தை எங்கள் குடும்பத்தில் இருந்து மறைய தொடங்கியது. கொஞ்ச நாளில் மாமா புல்லட் ஒன்றை வாங்கினார். நானும் ஓட்டி பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது.

மாமாவை பார்த்தால் எனக்கு பெருமையாக இருந்தது. எங்களை காப்பாற்ற ஒரு உணவகம் தொடங்கினார். இப்போது ஒரு ஹோட்டலுக்கே உரிமையாளராகிவிட்டார். இன்று சிதம்பரத்தில் சொல்லி கொள்ளும் அளவில் 'ஹோட்டல் அண்ணா' இருக்கிறது.

கல்லூரி முடித்து விட்டு ஹோட்டலுக்கு வந்தேன். மாமா அங்கு சாப்பிட வந்தவர்களுக்கு எல்லோருக்கும் இனிப்பை இலவசாமாக வழங்கினார். மாமாவுக்கு அதிக சந்தோசம் வந்தால் இனிப்பு வாங்கி வந்து தான் பார்த்திருக்கிறேன். இப்போது கொஞ்சம் வசதி வந்து விட்டதால் எல்லோருக்கு கொடுக்கிறார் போலும்..!

மாமா என்னை பார்த்ததும், மாமா என் வாயில் இனிப்பை தினித்தார். என்னால் சாப்பிட முடியாமல் சாப்பிட்டேன்.

" என்ன மாமா விஷயம்...?"

" ஊரே கொண்டாடிட்டு இருக்கு. என்ன விஷயம் தெரியல்ல..."

இன்று தீபாவளியுமில்லை, பொங்கலுமில்லை. எதற்காக இவ்வளவு சந்தோஷப்படுகிறார் என்று தெரியாமல் விழித்தேன்.

" அண்ணாதுரை தேர்தல்ல ஜெய்ச்சிட்டார். இப்போ அவர் தான் முதலமைச்சர்" என்றார். அவரே முதல்வர் ஆனது போல் எல்லோரிடமும் தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

Wednesday, February 22, 2012

அந்த மூன்று பெண்கள் - 5

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4

அண்ணாமலை பலகலைக்கழகத்தில் எனக்கு மாணவனாய் முதல் நாள் அனுபவம் சற்று வித்தியாசமாக இருந்தது. பள்ளிப்பருவத்தில் உடலில் காயம் பட்டாலும் மனதில் யாரையும் நான் வெறுத்துதில்லை. மாலை வரும் வரை எல்லோரும் மைதாணத்தில் விளையாடுவோம். மதம், ஜாதி என்னை தீண்டிப்பார்த்ததில்லை. இதற்கு முரண்பாடான அனுபவத்தை தான் பலகலைக்கழகத்தில் சந்தித்தேன்.

அண்ணாமலை கலைக்கல்லூரி எங்கள் பலகலைக்கழகத்தில் ஒரு பிரிவு. அங்கு இசை, வரலாறு, மொழி என்று பல பிரிவிகளுக்காக மாணவர்கள் படிக்க வசதியாக நூல்களும், ஆசிரியர்களும் இருக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் நுழைந்தவுடன் குடுமிப் போட்ட ஒருவனை பார்த்தேன். அவன் உருவத்தை பார்த்ததும் புரிந்துக் கொண்டேன் சிதம்பர தீட்சதர் குடும்பத்தை சேர்ந்தவன் என்று ! நடராஜர் கோயிலில் இவர்கள் வைத்தது தான் சட்டம். மூல கடவுளை பார்க்க சட்டையை கலட்டி கொண்டு செல்ல வேண்டும், பிரசாத்தை கொடுத்து விட்டு தட்சனை வாய் திறந்து அவர்களே கேட்பதும் இப்படி பல விஷயங்களை நான் பார்த்திருக்கிறேன். மாமா உணவகம் தொடங்கி இதுவரை குடுமி வைத்தவர்கள் யாரும் வந்து சாப்பிட்டதில்லை. இதற்கு எல்லாம அர்தம் இந்த கல்லூரியில் தான் எனக்கு புரிந்தது.

" முதல் பி.ஏ வரலாறு வகுப்பு எங்க தெரியுமோ...?" என்றான் அந்த குடுமி வைத்த மாணவன்.

" தெரியாது. நீங்க வரலாறு மாணவனா.." என்றேன்.

" அமா. நீங்க என்ன படிக்கிறேள் ? என்று கேட்டான்.

"பி.ஏ தமிழ்." என்றேன்.

என்னை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்றான். 'தமிழ்' என்று தானே சொன்னேன். அதற்கு என்னை ஏன் இப்படி ஒரு முறைப்பு பார்த்தான் என்று புரியவில்லை.

கல்லூரி வளாகத்தை சுற்றி அங்காங்கே மரங்கள் இருந்ததால் நிழலில் நிற்க மிக சௌகர்யமாக இருந்தது. அப்போது ஒருவன் அவனே என்னிடம் வலிய வந்து பேசினான்.

" வணக்கம். என் பேரு பரூக்" என்றான்.

பெயரை வைத்து மதத்தை சொல்லும் நாட்டில் பிறந்து விட்டோம் என்று தோன்றியது. அவன் பெயர் என் மனதில் பதிவாகும் முன்பு அவன் மதம் என் மனதில் பதிவாகிவிட்டது. அவன் பெயர் சொன்ன பிறகு நானும் பதிலுக்கு என் பெயரை சொல்ல வேண்டும் என்று சற்று நேரம் கலிந்து தோன்றியது.

" என் பெரு சந்திரசேகர்." என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

" நீங்க பி.ஏ தமிழா..." என்றான்.

"ஆமா... உங்களுக்கு எப்படி தெரியும் !" என்று கேட்டே.

" நீங்க அந்த தீட்சதர் பையன் கிட்ட பேசுனத கேட்டேன். நானும் பி.ஏ தமிழ் தான்." என்றான்.

" ஓ.! நம்ப க்ளாஸ் எங்க இருக்கும்னு தெரியுமா."

" ம்.. தெரியும். வாங்க போவாம். க்ளாஸ்க்கு நேரமாச்சு." என்று பரூக் பேசி முடித்தவுடன் இருவரும் வகுப்பு சென்றோம்.

வகுப்பில் நுழைந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கல்லூரிக்கு நுழைந்த போது குடுமி வைத்த மாணவர்கள் பல பேர் இருந்தார்கள். ஆனால், எங்கள் வகுப்பில் மட்டும் ஏன் குடுமி வைத்த ஒரு மாணவன் கூட இல்லை. அவர்களில் ஒருவனுக்கு கூடவா தமிழ் பிடிக்காமல் போனது. நான் யோசித்துக் கொண்டு இருக்கும் போது பேராசிரியர் வகுப்புக்குள் நுழைந்தார்.

" வணக்கம் மாணவமணிகளே...! என் பெயர் பாலசுந்தரம். உங்களுக்கு தமிழ் இலக்கியம் எடுக்க போகும் பேராசிரியர்." என்றார்.

எல்லோரும் அவர் சொல்வதை பார்த்துக் கொண்டு இருந்தோம்.

" நான் இந்த கல்லூரியில் பத்து வருடங்களாக பணியாற்றுகிறேன். இப்போது என்னை பற்றி இது போதும். இப்போழுது நீங்கள் ஒவ்வொருவராக எழுந்து உங்களை அறிமுகம் செய்துக் கொள்ளுங்கள்." என்றார்.

ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து, அவர்கள் பெற்றோர் பெயரையும் சொன்னார்கள். நான் பரூக் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். இப்போது பரூக் முறை.

" என் பேரு பரூக். அப்பா பேரு பாட்ஷா. அம்மா பேரு ஆயிஷா..." என்றான்.

அடுத்து நான்.

" என் பேரு சந்திரசேகர். அப்பா பேரு நாதன். அம்மா பேரு இந்திராணி. அப்பா உயிரோட இல்லை." என்று சொல்லி முடித்தேன். அப்பா உயிருடன் இல்லை என்று ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை. சொல்லவேண்டும் என்று தோன்றியது. மற்றப்படி பரிதாபத்தை தேடிக் கொள்ள சொல்லவில்லை. நான் சொன்னது ஒருவிதத்தில் நல்லது தான். யாரும் என்னிடம் வந்து 'அப்பா என்ன செய்கிறார்' என்று கேட்க மாட்டார்கள்.

பேராசிரியர் பாலசுந்தரம் என்னை பரிதாபமாக பார்க்கவில்லை. அது மட்டும் என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

முதல் நாள் கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்றேன். முதல் நாள் கல்லூரிக்கு சென்றதால் அம்மா மாமாவுடன் செல்லவில்லை வீட்டிலேயே இருந்தார். என் வருகைக்காக காத்திருந்தார். நான் வந்ததும்.. ஆரத்தி தட்டுன் வந்தார்.

"என்ன அம்மா... நான் என்ன சண்டைக்கா போய்ட்டு வரேன்..." என்று கேலியாக கேட்டேன்.

" நம்ப குடும்பத்துல யாரும் பட்டப்படிப்பு படிப்போம்னு நினைச்சு கூட பார்த்ததில்ல. நீ தான் முதல் தடவையா படிக்கிற. அதான்.." என்றார்.

" அம்மா !! இன்னைக்கு தான் முதல் நாள். பட்டம் வரத்துக்கு இன்னும் மூனு வருஷம் ஆகும்." என்றேன்.

" பட்டம் வரம்போது வரட்டும். என் பையன் பட்டப்படிப்பு படிக்கிறான். எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா..." என்று என்னை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள்.

அப்பா அம்மாவை விட்டு சென்று இருக்க கூடாது. அவர் உயிருடன் இருந்திருந்தால் மாமா இவ்வளவு கஷ்டம் ஏற்ப்பட்டு இருக்காது. அப்பாவுக்கு எதற்கு அவசரமாக கடவுளிடம் சென்றார் என்று தெரியவில்லை. அம்மா சொன்னது போல் கடவுள் தான் மாமா உருவத்தில் வந்து எங்களை இன்று வரை வாழவைக்கிறார்.

அம்மா முகத்தில் இவ்வளவு சந்தோஷம், பூரிப்பு நான் பார்த்ததேயில்லை.

இரவில் வேலையெல்லாம் முடிந்து மாமா உணவகத்தை சாத்தி விட்டு வீட்டுக்கு வந்தார். கையில் வரும் போதே இனிப்பு பலகாரங்கள் எடுத்து வந்தார். அவர் இனிப்போடு வருவார் என்று எனக்கு முன்பே தெரியும். காலையிலேயே இனிப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். முதல் நாள் வகுப்பு பரபரப்பில் நான் சீக்கிரம் என்று விட்டேன்.

" என்ன மருமகனே ! முதல் நாள் வகுப்பு எப்படி இருந்திச்சு" என்று கேட்டப்படி வாயில் இனிப்பை தினித்தார்.

"நல்ல போச்சு மாமா..." என்று இனிப்பை சாப்பிட்டு கொ ண்டே பேசினேன்.

"ஸ்நேகிகங்க யாராவது கிடைச்சாங்களா...?" என்று கேட்டார்.

" ம்... பரூக்னு ஒரு பையன்..." என்றேன்.

பெயரை கேட்டது அம்மா, " ஏன்டா ! பாய் பசங்க கிட்ட பேசுற. அவங்க அசைவம் சாப்பிடுறவங்க..." என்றார்.

அவர்கள் அசைவம் சாப்பிடுவதும், நான் அவர்களிடம் பேசுவதும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை. நான் பேசுவதற்குள் மாமா, " மனுஷங்க தான் முக்கியம். நம்ப கடைக்கு பாய்ங்க சாப்பிட வந்தா விரட்டியா அடிக்கிறோம்." என்று எனக்கு சாதகமாக பேசினார்.

என் கையில் சாவியை கொடுத்து, "மருமகனே ! இனிமே நீ காலேஜ்க்கு சைக்கிள்ல தான் போறே..." என்று கொடுத்தார். மாமா புது சைக்கிள் வீட்டுக்கு எடுத்து வந்ததை அப்போது தான் பார்த்தேன். புது சைக்கிளை பார்த்த கொஞ்ச நேரத்தில் மாணிக்கம் மாமா என் மாமாவின் சைக்கிலை எடுத்து வந்தார்.

அவர் வாங்கி தந்த புது சைக்கிளில் எங்கள் தெருவை சுற்றி வந்தேன். என்னுடன் பயணம் செய்ய புது நண்பன் கிடைத்த சந்தோஷத்தில் புது சைக்கிளுக்கு முத்தம் கொடுத்தேன்.

சந்தோஷமாக சைக்கிள் வாங்கிக் கொடுத்த மாமா... என் வாழ்க்கையை திசை திருப்ப போகும் முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails