வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, August 27, 2009

சுஜாதாவும் மூன்று புத்தகங்களும்

ஒவ்வொரு காலக்கட்டத்தில் எனக்கு ஒருவர் பைத்தியம் பிடிக்கும். இந்த பைத்தியம் தெளிய வேண்டும் என்றால் அவர்கள் எனக்கு தேகட்டும் அளவிற்கு அனுபவித்து விடுவேன். கொஞ்சம் நாள்களில் இந்த பைத்தியம் தெளிந்துவிடம். ஆனால், அந்த பைத்தயம் இன்னொருவர் மீது பாயும்....

ஐயோ...மேலே இருக்கு பத்தி... டபுள் மினிங் மாதிரி தெரியுதா...!

ஓ.கே !

ஒவ்வொரு காலத்தில் ஒரு எழுத்தாளர் மீது பைத்தயமாக இருப்பேன். அந்த எழுத்தாளர் எழுதிய புத்தகங்களை தேடி பார்த்து, அளுப்பு தட்டும் வரை படிப்பேன். வைரமுத்து, கண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன்....... என்று நான் பைத்தியமாக திரிந்த எழுத்தாளர் பட்டியல் நீட்டலம். இப்போது எனக்கு பிடித்திருப்பது சுஜாதா பைத்தியம்.... எழுத்தாளர் சுஜாத பைத்தியம்ங்க....

நியாயமாய் பார்த்தால் இவர் எழுதிய புத்தகங்களை நான் முன்பே படித்திருக்க வேண்டும். ஆனால், எனக்கு இப்போது தான் இவர் மீது அதிக ஈடுபாடு வந்துள்ளது.

சமிபத்தில் நான் படித்த சுஜாதாவின் மூன்று புத்தகங்கள்

நிர்வாண நகரம்
விசா பப்ளிகேஷன்ஸ், விலை.70, பக்கம் - 136

சென்னை நகரத்தையே பழி வாங்க நினைக்கிறான் சிவராஜ். அதை தொடர்ந்து சென்னையில் நீதிபதி, மருத்துவர், அரசியல்வாதி என்று மூன்று பேர் தொடர்ந்து இறக்கிறார்கள். இதை செய்தது 'நான் தான்' என்று சிவராஜ், 'ஜீவராசி' என்ற பெயரில் போலீஸ்க்கு கடிதம் அனுப்புகிறான். சென்னை பழிவாங்க நினைக்கும் 'ஜீவராசி'யை வழக்கறிஞர் கணேஷ், வசந்த் எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்பது மீதி கதை.

சுஜாதா நாவலில் எனக்கு அதிகம் பிடித்திருப்பது அவருடைய 'Characterisation'. கதாப்பாத்திரத்தை வாசகர் மனதில் நன்றாக பதியவைத்துவிடுவார். அந்த பாத்திரம் அடுத்து என்ன செய்ய போகிறது என்ற ஆர்வத்தையும் தூண்டிவிடுவார். குற்றவாளி யார் என்று கண்டு பிடிக்க அதிக கஷ்டமிருக்காது. வாசகரால் யூகிக்க முடியும். ஆனால், அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் புத்திசாலி தனமான பாத்திரங்களை வடித்திருப்பது தான் சுஜாதாவின் ஸ்பேஷலிட்டி.

எழுத்தும் வாழ்க்கையும்
உயிர்ம்மை பதிப்பகம், விலை.85, பக்கம் - 168



சுஜாதாவின் வாசகர் அவரின் எழுத்தின் வாழ்க்கையோடு பயண செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் இது. அவரின் நாற்பது வருட எழுத்துல வாழ்க்கையை படிக்க முடியவிட்டாமல், அம்பலத்தில் அவர் எழுதிய கட்டுரை தொகுப்பை படிக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதே...!

'மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைக்கு வார்த்தையல்ல. கருத்துக்கு கருத்து'

கவிதையின் நோக்கம் உபதேசம் அல்ல. உபதேசம் இருந்தால் அதை ஒலித்து வைக்கப்பட வேண்டும்.

கல்வியும், சம்பாத்தியத் திறமையும் சாதி நீக்கத்துக்கு முக்கியமானகருவி.


இப்படி சுஜாதாவின் பல 'நச்' வரிகள் இது பல உண்டு.

புதிய நீதி கதைகள்
உயிர்ம்மை பதிப்பகம், விலை.90, பக்கம் - 156



ஜேம்ஸ் தர்பர், ஆம்ப்ரோஸ் பியர்ஸ் போன்றவர்கள் சொன்ன சில ஈசாப் கதைகளை சுஜாதா தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். சிறு வயதில் நாம் கேட்ட, கேட்காத பல கதைகள் இந்த புத்தகத்தில் உள்ளது. அம்பலம் மின் இதழில் வெளிவந்த இந்த கதைகளை உயிர்மை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளனர்.

நாம் கேட்ட கதையை மொழிபெயர்த்து ஏன் சுஜாதா இந்த புத்தகத்தில் தன் நேரத்தை செல்விட்டார் என்று தெரியவில்லை. சுஜாதாவுக்காக இந்த புத்தகத்தை ஒரு முறை படிக்கலாம்.

சுஜாதாவின் புத்தகங்களை பற்றி இன்னும் சொல்லலாம். நான் சொன்னது மிகவும் குறைவு. நீங்கள் படித்து அனுபவித்து பாருங்கள்.

தமிழ்10.காம் கீரிடம் !!

வணக்கம் நண்பர்களே,

இந்த வார தமிழ்10 இணையதளத்தின் கீரிடம் பெறும் பதிவர் நான் தான்...!

நன்றி தமிழ்10.காம்.

அன்புடன்,
குகன்


என்ன பதிவு போடுவது தெரியாமல் இருந்தேன். சரி... இதையே ஒரு பதிவாக போட்டுவிட்டேன் :-)

Tuesday, August 25, 2009

கலைஞரின் பள்ளி நினைவுகள்



1.

ஒரு முறை 'கடவுள்' என்ற தலைப்பில் கலைஞரின் பள்ளியில் ஒரு பேச்சு போட்டி நடந்தது. அதில் கலைஞர் அவர்கள் மிக பிரமாதமாக பேசினார். அவர் பேசி முடித்த பிறகு அவருக்கு போட்டியாக கலந்து கொண்ட மாணவருக்கு நடுக்கமாக இருந்தது. பேசாமல் ஒடிவிடலாம் என்று கூட நினைத்தான். எப்படியோ தைரியம் வர வழைத்துக் கொண்டு அந்த மாணவன் மேடை ஏறினான். அந்த மாணவன் தன் பேச்சை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தான். இறுதியாக, "இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்" கூறுவதற்கு பதிலாக - "இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்" என்றானாம். அரங்கமே ஒரு நிமிடம் அதிர்ந்தது. அந்த மாணவன் தன் தவறை உணர்ந்த சொன்ன போது, எல்லோரும் சிரித்தனர்.

***

2.

கலைஞர் அவர்கள் இளம் வயதில் சிறு சிறு கூட்டங்களில் பேசி பழகி இருந்தாலும் பெரிய கூட்டங்களை காணும் போது ஆரம்ப காலத்தில் சிறிது நேரம் நடுங்வாராம். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது 'நட்பு' என்ற தலைப்பில் முதல் மேடை பேச்சை நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்பு கிடைத்த சந்தோஷம் மனதில் இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் நடுங்கினார். அப்போது அவரது தமிழாசிரியர்களில் ஒருவரும், மகாவித்துவானாக விளங்கக் கூடியவருமான தண்டபாணி தேசிகர் அவர்கள் கலைஞருக்கு தேவையான குறிப்புகளை வழங்கினார். அந்த குறிப்புகள் பெற, திருவாரூரில் இருக்கும் அவரது வீட்டை தேடி நாலைந்து முறை சென்று வந்திருக்கிறார். அவர் தந்து உதவிய குறிப்புகளை அப்படியே எழுதி கோவையாக மனபாடம் செய்தார். இரண்டு மூன்று நாட்களாக எழுதிய குறிப்புகளை வீட்டின் முன் இருக்கும் தூண்கள், சுவர்கள் முன் நின்று எல்லாம் பேசி பழகினார். தன் வீட்டார் அனைவரையும் தாழ்வாரத்தில் உட்கார வைத்து, முற்றத்து மையத்தில் நின்று பேசிக் காட்டி ஒத்திகை நடத்தினார்.

இப்படி பல கடுமையான பயிற்சிக்கு பிறகு அவர் பள்ளியில் 'நட்பு' தலைப்பில் பேசிய போது மிக பெரிய பாராட்டு பெற்றது. அவரது முதல் மேடை பேச்சிலேயே அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

Monday, August 24, 2009

எதிர் வீட்டு தேவதை



நான் குருடன் என்று உன்னை பார்த்த பிறகு தான் தெரிந்துக் கொண்டேன். எதிரில் இருந்த உன்னை இத்தனை நாள் பார்க்காமல் நான் இருந்திருக்கிறேனே....!! என் நண்பர்கள் இன்று தான் உருப்படியாக ஒரு நல்ல காரியம் செய்தனர். உன்னை கண்டெடுத்து எனக்கு காட்டியவர்கள் அவர்கள் தான். என் வண்டியை ஸ்டார்ட் செய்த அடுத்த நோடியில் தெரு முனையை தாண்டி விடுவேன். அதனால் என்னவோ எதிர் வீட்டில் தேவதை குடியிருந்தும் நான் பார்க்காமல் இருந்துவிட்டேன். அவள் எனக்காவே இந்த பூமியில் ஒதுக்கப்பட்டவள் போன்ற உணர்வு...! உன்னுடன் வாழ்வதற்காகவே நான் பிறவி எடுத்தேன் என்ற ரகசியத்தை புரிந்து கொண்டேன்.

அவள் கண்ணில் படும் படி பல முறை தெருவோரம் நடந்தேன். அவள் வீட்டை கடக்கும் போது தெருவில் அனைவரும் காதில் விழும் படி வண்டி ஹாரன் அடித்தேன். அவளை தவிர மற்றவர்கள் பார்வை தான் என் மீது விழுந்தது. அவள் வீட்டில் இருக்கிறாளா இல்லையா என்று தெரியாமல் இப்படி பல சேட்டைகள் செய்தேன். ஆனால், ஒன்றும் பலனில்லை.

எத்தனையோ காதல் படங்களை பார்த்தாலும், காதல் புத்தகங்கள் படித்தாலும்... எனக்காக ஒரு காதல்.. ஒரு பெண் என்று பார்க்கும் போது தான் நம் காதலுக்கு ஒரு உருவம் கிடைக்கிறது. என் காதலுக்கு உருவம் கொடுத்த தேவதை அவள் தானே.. !!

என் காதல் பார்வையை விட அவள் பார்வையில் காதல் அதிகமாகவே தெரிந்தது. நான் அவள் வீட்டை கடக்கும் போது பார்த்த பார்வையும், கன்ன குழி சிரிப்பும்.... யப்பா ! என்னை விழுங்கி விடும் அளவிற்கு இருந்தது. மேல் மாடியில் இருந்து அவள் என்னை எட்டி பார்ப்பதும், நான் தலையை கோதியப்படி அவளை பார்த்து சிரித்தும் தெருவை கடப்பேன்.

வேலி போட்டு பார்த்து ரசிக்கும் மாம்பழத்தை போல தினமும் அவளை பார்த்து பார்த்து ரசிக்க தான் முடிந்தது. அவள் எப்போது அம்மாவுடன் அல்லது அண்ணாவுடன் தான் வீட்டை விட்டு வருவாள். நான் சமிஞை செய்தும் புரிந்து புரியாமல் புன்னகைத்தப்படி நடப்பாள். ஒரு நிமிடம் நின்றால் போதும் நான் நினைத்ததை எல்லாம் சொல்லிவிடுவேன். சந்தர்ப்பம் அமையாமல் தவித்தேன்.

இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தால், அவள் வேறு ஒருவனுக்கு மாட்டிவிட்டால் என்ன செய்வது. ஒரு காகிதம் எடுத்தேன். கவிதை எழுத முயற்சித்தேன். முடியவில்லை. வீண் விபரிதத்தை செய்யாமல் என் செல் நம்பரை எழுதி அவள் பார்க்கும் படி வீசினேன். அவளும் எடுத்தாள். அந்த கணதில் இருந்து என் செல்போன் மணி எப்போது அடிக்கும் என்று காத்துக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போது அவளுடைய அழைப்பாக இருக்குமோ என்று ஆர்வமாக எடுத்தேன். அவள் அந்த காகிதத்தை கிலித்து போட்டாளா அல்லது எடுக்காமல் குப்பையில் விழுந்ததா என்று தெரியாமல் தவித்தேன்.

ஒரு வாரம் கடந்தது. அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையே போய்விட்டது.

செத்து கிடந்த என் நம்பிக்கைக்கு 'ஆக்ஸிஜன்' கொடுப்பது போல் மணி அடித்தது...

" நீங்க ராமசந்திர தானே..." என்று எதிர் முனையில் ஒரு பெண்ணின் குரல்.

அவளே தான். எத்தனை முறை அவள் அம்மாவிடம் பேசும் போது கேட்டிருப்பேன். என் பயரை அவள் உச்சரித்தபோது மெய் எழுத்துக்கள் எல்லாம் உயிர் கொண்டு வந்தது. உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் வாழ தொடங்கியது.

" சொல்லுங்க..." என்று ஆவலாக கேட்டேன்.

"ஒரு நிமிஷம் " என்று சொன்னாள். கொஞ்ச நேரத்தில் இன்னொரு பெண் குரல் கேட்டது.

"டேய்... நீ தான் ராமசந்திரனாடா...." என்று மிரட்டும்படி இருந்தது அந்த குரல். நிச்சயமாக அவள் அம்மா இல்லை. குரல் அச்சுருத்துவது போல் இருந்தாலும் இளமையாக தான் தெரிந்தது.

"டேய்...நாயே... லூசூ... பண்ணாட..." என்று இன்னும் வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளை இடியும் மின்னலுமாக பொழிந்தாள்.

அவள் பேசி முடித்ததும், இன்னொரு பெண் பேசினாள்.

" டேய் ! கசுமாலாம்.... டுபுக்கு...." என்று ஆண் சொல்ல கூச்சப்படும் வார்த்தைகளை சொல்லி திட்டினாள்.

அடுத்து இன்னொரு பெண் என்று தன் தோழி படைகளிடம் கொடுத்து என்னை மட்டுமில்லாமல் குடும்பத்தையே சேர்த்து வருத்தெடுத்தார்கள். கோபத்தில் போனை வைத்த போது கூட விடாமல் அவர்கள் அழைப்பு மணி, எனக்கு சாவு மணி போல் ஒலித்தது.

ஒரு பெண்ணின் செல் நம்பர் கிடைத்தால் ஒருவன் மட்டும் தான் பேச ஆசைப்படுவான். ஆனால், ஆணின் நம்பர் பெண்ணுக்கு கிடைத்தால் அவனை போட்டு தாக்க கொலைவெறியோடு பல பெண்கள் அலைவதை அன்று தான் உணர்ந்தேன்.

முகத்தில் வழியும் வேர்வையை துடைத்து விட்டு, என் செல்போனுக்கு புது சிம் வாங்க சென்றேன்.

Saturday, August 22, 2009

நா.முத்துக்குமார் : அ'ன்னா ஆ'வன்னா

உயிர்மை பதிப்பகத்தின் கவிதை தொகுப்பு நூல் என்பதால் பின் நவீனத்துவ கவிதைகளை அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால், இந்த நூல் உரைநடை வடிவில் எழுதப்பட்ட கவிதை.

திரைப்பட பாடலில் ஊன்றிவிட்டவர்களுக்கு தங்கள் கருத்து, ஏக்கம், ஆதங்கம் - இது போன்ற கவிதை புத்தகங்களில் தான் சொல்ல முடிகிறது. வரிகளை மாற்ற சொல்லவும், மற்றவர் சொல்லும் வார்த்தைகளை போடவும் இதில் யாரும் தலையிட முடியாது. இந்த கவிதை தொகுப்பில் நா.முத்துகுமார் தான் ஒரு சினிமா எழுத்தாளர் என்று பிம்பத்தில் இருந்து விடுபட்டு சராசரி மனிதன் மனதில் இருக்கும் நினைவுகளை, ஏக்கங்களை பிரதிபலித்து எழுதியிருக்கிறார்.

இந்த கவிதை நூலில் நான் ரசித்த ஒரு சில வரிகள்.

"தனலட்சு தட்டச்சுப் பயிலகம்" தலைப்பில்

காயத்ரிகளுக்கு வய்தானாலும்
காயத்ரி என்ற பெயருக்கு
வயதாவதேயில்லை

ஐந்தாம் வகுப்பு 'அ' பிரிவு தலைப்பில்

நாங்கள் படித்த அதே பள்ளியில்
ஆசிரியராக பணியாற்றுகிறான்
"நெனச்ச் வேலையே செய்யுறே
எப்படியிருக்க மாப்ளே ?" என்றேன்,
சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால்
என் கையைப் பிடித்து
"படிச்சி முடிச்சதும்
என்ன ஆகப்போறீங்க"ன்னு
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை" என்றான்.

சபையறிதல் தலைப்பில்

கல்யாணத்தில்
கலந்துக் கொள்வதைக் கூட
நகைகள் தான் தீர்மானிக்கின்றன

தம்பியின் நாட்குறிப்பிலிருந்து ஒரு ஞாயிற்றுக்கிழமை தலைப்பில்

"தம்பியாய் இருப்பதன் கஷ்டம்
தம்பிக்கு தான் தெரியும்"
என்று தனக்குள் சொல்லியப்படி
வாலாட்டுகிறது நாய்

பல கவிதைகள் பாலியத்தின் பிரதிபலிப்பை உணர்த்துகிறது. வாழ்க்கையில் நாம் எவ்வளவு தூரம் சென்றாலும் பாலியம் ஒரு நிழல் தொடர்வதை இந்த புத்தகம் காட்டுகிறது.

இறுதியாக,'புத்த[க]யா' என்ற தலைப்பில் அவர் எழுதிய சில வரிகள்....

புத்தக வரிகளில்
கோடு போட்டுப் படிக்கிறார்கள்
எங்கேயோ இருக்கும் எழுத்தாளனுக்கு
இங்கிருந்தே கைகுலுக்கிறார்கள்

இந்த பதிவில் நான் சொன்ன நா.முத்துக்குமாரின் கவிதைகள் அனைத்தும் கோடு போட்டு இருந்த இடத்தில் அவருடன் கைகுலுக்கிய கவிதைகள்.

விலை.60, பக்கங்கள் : 96
உயிர்மை பதிப்பகம்

LinkWithin

Related Posts with Thumbnails