வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Monday, March 1, 2010

நாகரத்னா புக் ஸ்டால் !

நேற்று (28.2.10), உரத்த சிந்தனை இலக்கிய அமைப்பு தனது 26ஆம் ஆண்டு விழாவை சென்னை எல்.எல்.ஏ லைப்பரரியில் நடந்தது. பொதுவாக இது போன்ற நிகழ்ச்சியில் ஸ்டால் போட இவர்கள் அனுமதிப்பத்தில்லை. சென்ற வருடம், வெள்ளி விழா அண்டு என்பதால் புத்தக சந்தை வைத்தார்கள். உரத்தசிந்தனை உறுப்பினர் புத்தகங்கள் எல்லாம் வைத்து கண்காட்சி நடத்தினார்கள். நல்ல வரவேற்று கிடைத்தது. இந்த வருடம் புத்தக சந்தை எடுத்து நடத்த அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

சென்ற வருடம் சாதான உறுப்பினர் என்ற முறையில் நான் தான் புத்தக சந்தையின் வேலைகளை கவனித்தேன். இந்த ஆண்டு, நான் உறுப்பினர் மட்டுமல்லாமல் செயர்குழு உறுப்பினர் என்ற கூடுதல் பொறுப்பு. எப்படியாவது புத்தக சந்தை எடுத்து நடத்த வேண்டும் என்று பொது செய்லாளர் உதயம்ராம் அவர்களிடம் அனுமதி கேட்டிருந்தேன்.

ஆண்டு விழாவுக்காக பல வேலைகள் இருந்ததால் அவரால் உறுதியான பதில் சொல்ல முடியவில்லை. நானும் அதன் பிறகு அவரிடம் கேட்பதை விட்டுவிட்டேன்.

நிகழ்ச்சிக்கு முன் தினம் இரவு, பதிவர் ஒருவர் 'ஸ்டால் போடுலையா' என்று கேட்டார். நான் நடந்ததை சொன்னேன். மீண்டும் ஒரு முறை கேட்டு பாருங்க என்றார். இது போன்ற நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். அவர் நெருங்கிய நண்பர் என்பதால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்த்தேன். இந்த முறை என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு எந்த தடங்கல் வராமல் புத்தகசந்தை அமைக்க அனுமதி அளித்தார்.

ஒரே இரவில் பேனர், நாகரத்னா பதிப்பக புத்தகங்கள், நண்பர்களின் ஒரு சில புத்தகங்கள் என்று வாங்கி கண்காட்சிக்காக தயார் செய்தேன். ஆனால், மீண்டும் ஒரு சிக்கல் வந்தது.

நான் செயற்குழு உறுப்பினர் என்பதால், ஆண்டு விழா நிகழ்ச்சியில் எனக்கு ஒரு சில முக்கிய பொறுப்புகளும் இருந்தது. என்னால் ஒரே சமயத்தில் இரண்டு இடத்திலும் இருக்க முடியாத நிலை. இது வேலைக்கு நண்பர்களிடம் வேலை வாங்குவதும் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

ஆனால், எனக்கு புத்தக சந்தை ஆலோசனை வழங்கிய நண்பரே எனக்கு உதவியாக அவரது நண்பரை வரவழைத்தார்.

நாகரத்னா பதிப்பக புத்தகங்களையும் சேர்த்து 13 தலைப்புகள் அடங்கிய புத்தகங்கள் மட்டும் தான் வைக்கமுடிந்தது. ஆனால், எதிர்பார்த்ததிற்கு மேல் நல்ல வரவேற்பு கிடைத்தது. ( குறிப்பாக, 'எனது கீதை' எடுத்து போன நூல்கள் விற்றது).

அந்த பதிவர் நண்பர் இன்னும் யார் என்று சொல்லவில்லையே....!!

'கேபிள் சங்கர்' தான்.

அவருக்கு நான் நன்றி சொல்லபோவதில்லை.

காரணம், என் பதிப்பகத்தின் சிறப்பு ஆசிரியரே இனி அவர் தானே..!!

Tuesday, October 6, 2009

கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா - ஓர் எதிர்வினை

கேபிள் சங்கர் அவர்களின் 'கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா' பதிவை படித்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவருக்கு இவ்வளவு குறுகிய பார்வை என்பதை இந்த பதிவு காட்டிவிட்டது. அதுமட்டமில்லை... எம்.ஆர்.பியை விட 3 ரூபாய் அதிகமாக கொடுப்பது தான் அவர் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. கேபிள் சங்கர் இவ்வளவு சுயநலமானவர் என்று நான் நினைக்கவில்லை.



டாஸ்மாக் கடையில் ஒரு ப்ளாஸ்டிக் க்லாஸ்யின் (அசல் விலை 1 ரூ.) விலை 2.5 ரூபாய். ஒரு வாட்டர் பாக்கெட்டின் (அசல் விலை 1 ரூ) விலை 2.5 ரூபாய். ஆக, ஒரு க்வாட்டர் குடிப்பவன் கண்டிப்பாக ப்ளாஸ்டிக் க்லாஸ், தண்ணீர் இல்லாமல் குடிக்க முடியாது என்பதால் அவன் வாங்கி தான் திற வேண்டும். இதில் 3 ரூபாய் டாஸ்மாக் கொள்ளை அடிக்கிறான். ஒரு நாளைக்கு 200 பேர் குடிக்கிறார்கள் என்றால், 600 ரூபாய். மாதத்திற்கு 18,000 ரூபாய்.

டாஸ்மாக்கில் கடை போட்டு முட்டை, சிக்கன் விற்பவன் தனக்கு ஆகும் விற்பனையில் இருந்து 2 சதவீதம் அரசுக்கு கொடுக்க வேண்டும். ஆதாவது நீங்கள் வாங்கும் சிக்கன், மட்டன், பீப், கடலை, ஆம்லேட் எல்லாவிற்றில் இருந்து இரண்டு சதவீதம் கொடுக்க வேண்டும். டாஸ்மாக் கடையில் வாங்கி குடிப்பவர்கள் யாரும் பில் வாங்குவதில்லை. ஒரு நாளுக்கு இவ்வளவு தான் சேல்ஸ் என்று சொன்னாலும் நம்பி தான் ஆக வேண்டும். அதில், டாஸ்மாக் அநியாய லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இது எல்லாம் போக் நீங்கள் குடித்து விட்டு பாட்டில் அங்கேயே வைத்து விட்டு வந்தால், பழைய கடையில் ஒரு பாட்டில் ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறான். ஒரு நாளுக்கு 200 பாட்டில் என்றால் 200 ரூபாய். ஒரு மாதத்திற்கு 6000 ரூபாய். வருடத்திற்கு 72,000 ரூபாய்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக... இரவு 10 மணிக்கு கடையை மூட வேண்டும். ஆனால், 9:45 மணிக்கு 'Closed' என்பான். நீங்கள் கேட்டால், அக்கௌண்ட்ஸ் பார்த்து மூட வேண்டும் என்பான். கொஞ்சம் குரலை உயர்த்தி செட்டு சேர்ந்து கத்தினால் கொடுப்பான். சில சமயம் செட்டு சேரவில்லை என்றால்... அவ்வளவு தான். தர மாட்டான். 10 மணிக்கு மேல், 60 ரூபாய் க்வாட்டரை அங்கு சிக்கன் கடை போட்டவன் 100 ரூபாய்க்கு விற்பான். அந்த சமயத்தில் குடிக்க வேண்டும் என்று நினைப்பவன் சொல்லும் விலையில் வாங்கி தான் ஆக வேண்டும். இதில் டாஸ்மாக் அநியாய அநியாயத்திற்கு லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இவர்களிடம் பங்கு வாங்குவதற்கு போலீஸ் காத்திருப்பு தனி கதை...!!

டாஸ்மாக்கில் இத்தனை விஷயம் இருப்பதை Part-time குடிகாரனான எனக்கு இவ்வளவு தெரியும் போது, ஒரு Full-time (?) சீனியர் குடிமகனான நீங்கள் சொல்லாமல் விட்டதை என்னால் மன்னிக்க முடியாது. இன்னும் நான் ஏதாவது சொல்லாமல் விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Sunday, October 4, 2009

கவிதை, கதை எழுதுபவர்கள் எங்கே ???

'நான் சொந்தமாக பதிப்பகம் தொடங்க போறேன்.என்ன செய்யலாம் ?' என்று கேட்டேன். அவர், 'நல்ல தானே இருந்த. என்னப்பா ஆச்சு..?' என்று கிண்டலாக கேட்டார்.

உண்மையாக புத்தகம் எழுதுவதை விட புத்தகம் வெளியீடுவது அதை விட சிரமம் என்று அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.

பதிவு போடாமல் இதை சாதிக்க வேண்டும் என்று இருந்தேன். வேறு வழியில்லாமல் என் விரதத்தை விட்டு பதிவு போடுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் படைப்பை அனுப்புங்கள்.

நாகரத்னா பதிப்பகம் சார்பில் வெளியீடப்படும் இரண்டு தொகுப்பு நூல்

'ஒரு நிமிட கதை'- சிறுகதை தொகுப்பு

1.கதை ஒரு பக்க அளவில் இருக்க வேண்டும். அதிகப்படி 250 வார்த்தைகள் இருக்கலாம்.

2.கதை எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆபாசமான கதைகள் இருக்க கூடாது. அவ்வளவு தான்.

3.தேர்வு செய்யப்படும் கதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.

'காந்தி வாழ்ந்த தேசம்'- கவிதை தொகுப்பு

1. 24 வரிகள் மேல் இருக்க கூடாது.

2. காந்தி வாழ்ந்த காலம், இப்போதைய இந்தியா, காந்தி அரசியல், காந்தி இல்லாத அர்சியல் என்று எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.

3. ஹைக்கூ, மரபு, புதுகவிதை - எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், 24 வரிகள் மேல் தாண்டக்கூடாது.

தயவு செய்து காந்தியை தாக்கி கவிதை எழுத வேண்டாம்.

( சத்தியமாக நான் காந்தியவாதி இல்லை. ஆனால், அவரை பற்றி தொகுப்பு நூல் போட வேண்டும் என்று தோற்றியது. அதான், இந்த தலைப்பு....!!)

4. தேர்வு செய்யப்படும் கவிதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 20.10.09

படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
TO :nagarathna_publication@yahoo.in
CC : kannan.gurumurthy@gmail.com போடவும்.

பொது விதிமுறைகள்.

நீங்கள் அனுப்பும் படைப்புகள் யுனி கோட்டில் இருக்க வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்புபவர்கள் 'In-text' மெயிலாக அனுப்பவும். Download செய்யும் போது சில சமயம் பிரச்சனை வரலாம். உங்கள் படைப்பை Attachment யில் அனுப்புவதை தவிர்க்கவும்.

தயவு செய்து பதிவில் போட்ட படைப்புகளை அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்பு தேர்வாகாத பட்சத்தில், நீங்கள் உங்கள் படைப்பை பதிவில் போட்டுக் கொள்ளுங்கள்.

இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் நீங்கள் அனுப்பும் கவிதைக்கும், கதைக்கும் உதவி தொகை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

நன்றி,

அன்புடன்,
குகன்

பி.கு : மேலும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Thursday, September 24, 2009

கதை கதையாம் காரணமாம் !!

சிறுகதை பயிற்சி பட்டறையில் கொடுத்த புத்தகம். நண்பர் சிவராமன் மட்டும் இந்த புத்தகம் கொடுக்கவில்லை என்றால், இது போன்ற புத்தகங்களை வாசித்திருப்பேனே என்பது சந்தேகம் தான். போதுவாக, நான் எழுத்தாளர்களின் நேர்காணலை விரும்பி வாசிப்பதில்லை. காரணம், எழுத்தாளரின் எழுத்துகளை நம் கையில் வைத்திருந்தாலும், எழுத்தாளனை தூரத்தில் வைத்திருப்பது தான் ஒரு வாசகனுக்கு நல்லது. பல ஏமாற்றங்களை தவிர்க்க முடியும்.

சில எழுத்தாளர்கள் அவர்கள் எழுதியதற்கும், நடை முறையில் இருப்பதற்கும் நேர் எதிராக இருப்பார்கள். அது அவர்களின் சொந்த விஷயம். படிக்கும் வாசகன் தான் ஏமாறப்படுகிறான். முடிந்தவரையில் எழுத்தாளர்கள் தள்ளி நின்று வாசிப்பேன். இது என்னுடைய அறிவுரை அல்ல... அனுபவம்.

சரி... புத்தகத்திற்கு வருவோம். இந்த புத்தகத்தில் வரும் பெரும்பாலான எழுத்தாளர்கள் தலித் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் அல்லது தலித் சமூகத்தை பற்றி எழுதுபவர்கள். 19 எழுத்தாளர்களின் பேட்டியை ஒருங்கிணைத்து புத்தகம் தொகுப்பது மிக பெரிய காரியம். சமிபத்தில் புத்தக தொகுப்பில் ஈடுப்படும் போது அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.

இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த நேர்காணல் ‘ச.தமிழ்செல்வன் ‘ பேட்டி தான்.

'மன்னரை பாடமாட்டேன் மகேசனைத் தான் பாடுவேன்' என்று சொன்ன தியாகையின் குரல் முற்போக்கானது என்கிறோம். 'கடவுளை மட்டுமே பாடுவேன் மனிதனைப் பாடமாட்டேன்' என்று பின்னை வந்த குரலை பிற்போக்கு என்கிறோம். மனிதனைப் பாட வந்த பாரதியை முற்போக்கானவன் என்போம். காலத்தில் வைத்துத்தான் சொல்ல முடியும்.

முற்போக்கான சிந்தனை அழகாக விளக்கியிருக்கிறார். தமிழ்செல்வனின் எழுத்துக்களில் மட்டுமல்ல பேட்டியிலும் கிராமத்து வெப்பக் காற்று வீசுகிறது.

“தான் பிறந்த சொந்த சாதிக்குத் துரோகம் செய்யவும் தயங்காத மனநிலை உள்ளவன் தானே உண்மையான படைப்பாளி. அவன் எழுதலாம்.”

நல்ல அறிவுரை. ( ம்.... கண்டிப்பா என் சமூகத்தை திட்டி ஒரு கதை எழுதனும். )

“'உன் நண்பனைச் சொல். உன்னைச் சொல்கிறேன்' என்கிற ஆங்கில பழமொழி போல, 'எழுத்தாள யார் என்று சொல். அவன் எழுதியதை படிக்காமலே விமர்சிக்கிறேன்' என்கிற போக்கும் உள்ளது.” என்று சு.சமுத்திரம் சொல்லும் போது படிக்காமல் எழுத்தாளர்களை விமர்சிப்பவர்களை இரண்டு வரியில் விளக்கிவிட்டார்.

'சோலை' சுந்தர பெருமாள், “குடியரசு தலைவராக ஒரு தலித் வர முடிகிறது. ஆனால், பஞ்சாயத்து தலைவராக ஒரு தலித் வர முடியவில்லை.” என்று சொல்லும் போது, ஒருவன் வளராமல் இருப்பதற்கு சாதியை காரணம் காட்டும் மன போக்கினை உணர்த்துகிறார். இன்னும் பல கிராமத்தில் இப்படி தான் இருக்கிறது இதில் சொல்லும் பல எழுத்தாளர்களின் பேட்டியில் புரிந்துக் கொள்ள முடிகிறது.

கடைசி பக்கம், இமையன் 'பச்' மிகவும் அருமை.

எழுத்தாளன் என்பவன் வியாபாரி அல்ல; தொழில் நுட்பக்காரணுமல்ல. எழுத்தாளன் முதலில் விட வேண்டியது எழுத்தாளன் என்கிற திமிரை. இலக்கியம் எதையும் சொல்லக் கூடாது. உணர்த்த வேண்டும் என்பதை இன்றைய எழுத்தாளர்களுக்கு தெரிய வேண்டும்.

இதில் பல எழுத்தாளர்கள் தாமரை, செம்மலர் இதழில் எழுதியவர்கள். மூன்று தலைமுறையை சேர்ந்த கதாசிரியர்களுடன் பயணம் செய்த அனுபவம் இந்த புத்தகம் கொடுக்கிறது.

எத்தனை நாவல் நான் வாசிக்காமல் இருக்கிறேன். எத்தனை எழுத்தாளர்கள் பற்றி தெரியாமல் இருக்கிறேன். இன்னும் நான் சரியான வாசகனே இல்லை என்று உணர்த்துவது போல் இருந்தது இந்த புத்தகம். முடிந்தவரை இதில் சொல்லப்படும் பத்து நாவலையாவது படித்துவிட வேண்டும்.

பயிற்சி பட்டறைக்கு வந்தவர்கள் யாராவது இந்த புத்தகம் படிக்காமல் இருந்தால்........... தயவு செய்து படியுங்கள்

சூரியசந்திரன்
விலை.120, பக்கங்கள்.224
சந்தியா பதிப்பகம்.

Sunday, September 13, 2009

சிறுகதை பயிற்சி பட்டறை.. சூப்பர் !

இன்று உரையாடல் அமைப்பினர் நடத்திய சிறுகதை பயிற்சி பட்டறை இனிதே நன்றாக நடந்து முடிந்தது.

பயிற்சி பட்டறையில் முதலில் பாஸ்கர் சக்தி அவர்கள் பேசினார்.

அவர் பேசும் போதும் போது "எழுதிய கதை வாசகன் உணர வேண்டும். அதை உணர்த்துவதற்காக தூக்கலான வார்த்தைகள் இருக்க கூடாது" என்றார்.

கதைகளுக்கு திட்டமிட்ட வரம்புகள் எதுவும் இல்லை என்பதை கூறினார். அதற்கு எடுத்துக்காட்டாக 'தக்கலி' என்ற கதையை கூறினார்.

ஒரு எழுத்தாளன் தன் உறவினர்களுடன் செல்லும் போது வாசகர்களை சந்திப்பதை நகைச்சுவையாக கூறினார்.

பாஸ்கர் சக்தி பேசி முடித்த பிறகு தேநீர். அதை அடுத்து யுவன் சந்திரசேகர் அவர்கள் பேசினார்.

அவர் எழுதிய 'கானல் நதி' நாவலை படித்த பிறகு மிகவும் சீரியஸான மனிதர் என்று நினைத்தேன். வாசகர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கு பதில் சொல்லும் போது நகைச்சுவையாக பதிலளித்தார்.

தொடங்கும் போதே கதைக்கும், சம்பவத்திற்கும் உள்ள வேறுபாட்டை கூறினார்.'சம்பவம் கதையானால் தான் ஸ்வாரசியம். காரணம், ஒரு சம்பவம் வந்த பத்திரிகை செய்தி அடுத்த நாள் பழமையாகி விடுகிறது. கதை எந்த காலத்திலும் படிக்க கூடியது' என்றார்.

ஒரு கதையை ஆலோசனை கேட்டு செயல்படுத்தப்படும் வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் 1700 ஆலோசனைகள் வரும். அதில் நமக்கு ஏற்ற ஆலோசனையை ஏற்று கதை எழுதுவதற்கு பதிலாக, முன்பே நம் கற்பனைக்கு தகுந்த போல் கதை எழுதிவிட்டால் நேரத்தை தவிற்கலாம் என்று கூறினார்.

சாலமன் பாப்பையா தனக்கு வகுப்பு எடுத்த அனுபவத்தை மிக நகைச்சுவையாக கூறினார். குறிப்பாக 'எழுப்பு-தொடுப்பு-முடிப்பு' என்று சொல்லும் 'பு'வில் இன்னொரு முக்கியமான 'பு' 'தலைப்பு' என்று சொல்லும் இடத்தில் அருமை.

கதை எழுதுவது 'நிகழ்வுகளை ஸ்வாரஸ்யமாக சொல்லுவது அல்ல. கற்பனைகள் சேர்ந்து சொல்லுவது தான் கதை என்று அவர் பேச்சின் சாரம் இருந்தது.

'I am that' - J.Krishnamoorthy
பிறகு - பூமணி
நெய்வேதியம்
Future Shock

போன்ற புத்தகங்களை பற்றி கூறினார்.

அதன் பிறகு மத்திய சாப்பாடு. 'Non-Veg' இடெம் இரண்டு தான். 'Veg' யில் 'Gobi Machurian' கலக்கியிருக்கிறார்கள்.

மத்திய சாப்பாடு பிறகு, தேவதாஸ் அவர்கள் 'மொழிபெயர்ப்பு சிறுகதைகள்' பற்றி பேசினார்.

உண்ட மயக்கம் என்பதால் அவர் பேசிய பெரும் பகுதி மனதில் பதியவில்லை. கேள்வி - பதில் பகுதியில் விழித்துக் கொண்டு அவர் சொல்லும் விளக்கத்தை கேட்டேன்.

இறுதியாக பா.ரா அவர்கள் பேசினார்.

தன் Laptop மூலம் முன்பே இதை தான் பேச வேண்டும் என்று திட்டமாக வந்ததால் சரியான நேரத்திற்கு பேசி முடித்தார்.

நாம் அனுப்பும் எல்லா கதைகளும் படிக்கிறார்களா ? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக முதல் பத்தி படிப்பார்கள் என்றார். படிப்பவரை உள்ளே இழுக்கும் பட்சத்தில் தொடர்ந்து படிப்பார்கள் என்று கூறினார்.

அவர் 'PPT'யில் எனக்கு மிகவும் பிடித்த ஸ்லைட் 'உதவி ஆசிரியர் எப்படிப்பட்டவர் ?' என்பது தான்.

பெருமாலும் அடிப்பட்டவர்கள், கஷ்டஜீவிகள்
பெருமாலும் இரக்க சுபாவம் கொண்டவர்கள்
பெருமாலும் நல்லவர்கள்
பெருமாலும் விரக்தி கொண்டவர்கள்
பெருமாலும் குடும்பக்கதைகளை விரும்புகிறவர்கள்
பெருமாலும் நல்ல முடிவுகளை விரும்புகிறவர்கள்
பெருமாலும் நல்ல எழுத்தாளனை கண்டு பிடித்து விடமாட்டோமா என்று ஏங்குபவர்கள்

கதைகளுக்கு முடிவை சொல்லுவதை விட சொல்லாமல் விடுவது நல்லது என்ற கருத்தையும் கூறினார்.

சிறுகதை பயிற்சி பட்டறைக்கு பதிவர்களுக்காக ஏற்பாடு செய்ய நண்பர் பைத்தியக்காரன்.... சிவராமன் அவர்களுக்கு நன்றி.

உடனே நான் 'சிறுகதை' எழுதனும் எங்க பேனா.....????????

Thursday, August 27, 2009

தமிழ்10.காம் கீரிடம் !!

வணக்கம் நண்பர்களே,

இந்த வார தமிழ்10 இணையதளத்தின் கீரிடம் பெறும் பதிவர் நான் தான்...!

நன்றி தமிழ்10.காம்.

அன்புடன்,
குகன்


என்ன பதிவு போடுவது தெரியாமல் இருந்தேன். சரி... இதையே ஒரு பதிவாக போட்டுவிட்டேன் :-)

Sunday, August 16, 2009

சிங்கை நாதனை காப்பாற்றுவோம் !!

சக வலைப்பதிவர் திரு.சிங்கை நாதன் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக 33 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.

மேலும் தகவலுக்கு இங்கே செல்லுங்கள்.


பண உதவி செய்ய வேண்டிய முகவரி:

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

Friday, July 3, 2009

பைத்தியக்காரன்.. கொஞ்சம் கூல் ப்ளீஸ் !

‘Rabbit Proof Fence’ என்ற உலகம் படம் காட்ட போகும் என் நண்பர் பைத்தியக்காரனுக்கு நன்றி... !! அவசியம் வந்து கலந்துக் கொள்கிறேன்.

"சாரு: ஹிட்லர் ரிட்டர்ன்ஸ்" என்ற பதிவில் சாருவை வன்மத்தில் உச்சில் சென்று திட்டியதை படித்தேன். அதை கண்டிக்கவோ, அறிவுரை கூறவோ விரும்பவில்லை இல்லை.

சாரு நாகார்ஜுனன் மீது வைத்தது இரண்டு குற்றச்சாட்டுகள்.

முதல் குற்றம்

“அன்றைக்கு என்னுடன் முதல் தொகுதி மட்டுமே வெளியிட்டிருந்தவர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரேம்-ரமேஷ், கோணங்கி, சாருநிவேதிதா போன்ற பலரும் இன்று பல நாவல்களின் ஆசிரியர்களாக மாறிவிட்டார்கள். இன்று புதியதாக நிறைய எழுத்தாளர்கள் எழுத வந்திருக்கிறார்கள். இந்தப் பத்து வருடங்களில் என்ன ஆகி இருக்கிறது என்று பார்த்தோமேயானால் பொதுவான ஒரு Trend என்பதில்லை” என்று நாகார்ஜுனன் பேட்டியளித்திருக்கிறார்

இதை படித்தது சாதான வாசகனுக்கே கோபம் வரும். சாருக்கு கோபம் வருவது தவறொன்றுமில்லை.

எழுத்தாளர்கள் மனித உணர்ச்சிக்களை பதிவு செய்கிறார்கள். உலகத்தை அறிமுகம் செய்பவர்கள். சிந்தனையை தூண்டிவிடுபவர்கள். எந்த பலனும் எதிர்பார்க்காமல் எழுதுபவர்கள். அவர்களை பார்த்து “பொதுவான ஒரு Trend என்பதில்லை” என்றால் யாருக்கு தான் கோபம் வராது. ‘எழுத்து’ ஒன்று சினிமா இல்லை. ஒருவன் 'காதல்' படம் எடுத்தால் அதே ட்ரெண்ட்டில் நாலு பேர் படம் எடுத்து கல்லா நிரப்பிவதற்கு.... ! ‘தவம்’ போல் ஒரு சிலர் எழுதி வருகிறார்கள். அவர்கள் எதுவும் யாரிடம் இருந்து எதிர்பார்ப்பதில்லை. எழுத்தை ‘பணம்’ என்று நினைப்பவர்கள் தான் ‘Trend’ பற்றி யோசித்து ‘கல்லா’ நிரப்ப வேண்டும்.

நாகார்ஜுனன் ‘ஸீரோ டிகிரி’ பற்றி சொல்லாததால் தான் சாரு "Mummy Returns!” " என்ற பதிவு எழுதியதாக குற்றம் சுமத்துவது அபத்தம். எப்போதும் தன் எழுத்தை பற்றியும், தன் புத்தகத்தை பற்றியும் மற்றவர்கள் பேச வேண்டும் என்று நினைப்பதற்கு....சாரு ஒன்று அரசியல்வாதியல்ல... எழுத்தாளர். அவருக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் அவர் குடும்பத்தை இழுத்து கேவலப்படுத்தாமலாவது இருங்கள்.

இரண்டாவது குற்றம்.

என்னை அதிகம் கோபப்படுத்தியது " எஸ்.ராமகிருஷ்ணன் பாபா படத்திற்கு வசனம் எழுதியதாக” நாகார்ஜுனன் சொன்னது தான். உங்கள் தவறை மின்னஞ்சலில் சொல்லாமல் தனி பதிவு மூலம் சொல்லுவதற்கு காரணம் இது தான்.

சுஜாதாவிற்கு பிறகு எந்த வம்புக்கும் போகாதவர் எஸ்.ராமகிருஷ்ணன் தான். அதிக வாசகர்களை கவர்ந்து வருபவரும் ராமகிருஷ்ணன் தான். தமிழக அரசு விருது பெற்ற 'நெடுங்குருதி', பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட 'உப பாண்டவம்', 'துணையெழுத்து' போன்ற புத்தகங்களை பத்தாண்டுகளில் நாகார்ஜுனன் வாசித்திருக்க நியாயமில்லை. ( நாகார்ஜுனன் ஒருவர் இருப்பதே அறிமுகம் செய்தது எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு தான்.)

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தை யாராலும் உதாசினம் செய்ய முடியாது. நம் மனதின் ஏக்கம். உள்ளூர நாம் பல நாள் குமுறியது. பல நாள் ஒலித்து வைத்து வேதனை. எல்லாம் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து மூலம் உணர்ந்திருக்கிறேன். அவர் எழுத்தை வாசித்தவர்களின் அனுபவமும் இதுவாக தான் இருக்கும். அவரை பாமரன் போல் 'பாபா படத்துக்கு வசனம் எழுதியதாக' சொல்லுவது....சிறுபுள்ள தனம்.

இந்த இரண்டு குற்றத்திற்கும் நீங்கள் பதில் சொல்லாமல் சாருவை தனிப்பட்ட முறையில் அவர் குடும்பத்தையும் சேர்த்து எழுதியது மிகவும் அநாகரிகமானது. நாகார்ஜுனன் ஆதரவாளர் என்ற முறையில் அவர் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை சொல்லலாம். கருத்து சண்டை இருக்கலாம். தனிப்பட்ட முறையில் குடும்பத்தை பற்றி பேசுவது, எழுதுவது.... தேவையில்லாதது. தேவையற்றது.

சாருவின் எழுத்துக்கள் சமிபக்காலமாக வம்பு சண்டையாக இருப்பது உண்மை. 'சாரு' - எப்போது பழையப்படி எழுத போகிறார் என்று ஏங்கும் வாசகர்களில் நானும் ஒருவன். சாரு அவர்கள் 'வம்பு சண்டை' பதிவுக்கு நேரத்தை விரணயம் செய்வதற்கு, 'தப்புத்தாளங்கள்', 'ஸீரோ டிகிரி' போன்ற புத்தகங்களுக்கு இரண்டாம் பாகம் எழுதினால் வாசகர்களான நாங்கள் சந்தோஷப்படுவோம்.

இதை எல்லாம் சொல்வதால் 'நான் - சாரு ஆதரவாளர்' என்று நினைக்க வேண்டாம். நான் 'எஸ்.ராமகிருஷ்ணனின் தீவிர வாசகன்' என்ற முறையில் தான் இந்த பதிவை எழுதினேன்.

‘No tension’- பைத்தியக்காரன்.. கொஞ்சம் கூல் ப்ளீஸ்.....!!

டிஸ்கி : சாருவை பற்றி தப்பா எழுதினால் 'நூறு ஹிட்' விழும் தெரியும். ஆனா... 'நூறு பின்னூட்டம்' வரும்னு பைத்தியக்காரன் பதிவில் இருந்து தெரியுது...!! எத்தன பேரு தான் அவர திட்டுறது. அவரும் வழிக்காத மாதிரி இருக்குறது...!!

LinkWithin

Related Posts with Thumbnails