வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Dr.Babasaheb Ambedkar. Show all posts
Showing posts with label Dr.Babasaheb Ambedkar. Show all posts

Monday, July 14, 2014

பீமாயணம் : தீண்டாமையின் அனுபவங்கள்

இந்திய அரசியலில் ஒடுக்கப்பட்டோரின் குரலும் அரசியல் சாசனத் உருவாக்கியவருமான பி.ஆர்.அம்பேத்கர் வரலாறு பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. காந்திப்படத்தை பெருமையாய் ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒளிப்பரப்பும் அளவிற்கு அம்பேத்கர் படம் தொலைக்காட்சியில் அதிகளவில் ஒளிப்பரப்பாததே சாட்சி.


காந்தி, நேரு, பட்டேல் போன்ற தேசியத் தலைவர்கள் மக்களது நினைவில் பதியவைக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் காந்தியை விட அதிக சிலை அம்பேத்கருக்கு தான் இருக்கிறது. ஆனால், அம்பேத்கர் இன்னமும் சாதித் தலைவர் என்ற வட்டத்துக்குள் மக்கள் மனதில் இருக்கிறார்.

வழக்கமான வரலாற்று வடிவில் நூல் இல்லாமல், தற்காலத்தில் இரண்டு பேர் தீண்டாமைப் பற்றி பேசுவது தொடங்குகிறது. அம்பேத்கர் தீண்டாமையால் சந்தித்த அவமானங்கள், அதனால் அவருக்கு ஏற்ப்பட்ட விபத்து என்று அவரைப் பற்றி கேள்விப்படாத ஒரு சில தகவல் இந்த நூலில் கிடைத்தது. அதற்கு தகுந்தாற்போல் வித்தியாசமான ஓவியங்களும் இடம் பெற்றுயிருக்கிறது.

இதில் இடம்பெற்ற நாம்தேவ் தாஸ்ஸின் மொழிப்பெயர்ப்பு கவிதை மனதை கவர்க்கிறது.

”எருமைகளைக் கூட தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள். ஆட்டு உரோமத்தை கத்தரிப்பார்கள். ஆனால். மஹரின் தலைமுடியைக் கத்தரிக்க மாட்டார்கள். அதைவிட அவன் கழுத்தையே அறுப்பார்கள்.”

”மற்ற பையன்கள் தண்ணீர் குடிக்கலாம். விலங்குகள் கூட வயிறு முட்டக் குடிக்கலாம். ஆனால், எனக்கு தாகம் எடுக்கும் போது கிராமமே பாலைவனமாக மாறிவிடுகிறது.”

இந்த புத்தகம் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டதா அல்லது பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதா என்ற குழப்பம் இருக்கிறது. வித்தியாசமான ஓவியங்களுடன் அம்பேத்கரின் வாழ்க்கை சம்பவங்களை சொல்கிறார்கள். இதை வைத்து குழந்தைகளுக்காக புத்தகம் என்று சொல்ல முடியவில்லை. இடையில், சமக்காலத்தில் தலித்துகளுக்கு எதிராக நடந்த பத்திரிக்கை செய்திகள் சேர்த்துள்ளனர். “அம்பேத்கர் காலத்தில் இருந்தது. இப்போது இல்லை” என்று வாதம் செய்பவர்களுக்கு தகவலாக கொடுத்திருக்கிறார்கள்.

இந்த நூலின் உண்மையான வாசகன் யார் என்பதில் கொஞ்சம் சந்தேகத்தை எழுப்புகிறது.

**

பீமாயணம் : தீண்டாமையின் அனுபவங்கள் 
கலை : துர்காபாய் வ்யாம், சுபாஷ் வ்யாம் 
கதை : ஸ்ரீவித்யா நடராஜன், எஸ்.ஆனந்த் 
காலச்சுவடு பதிப்பகம்
Rs.245 

இணையத்தில் வாங்க... 


Monday, May 14, 2012

அம்பேத்கார் கேலி சித்திரம் - ஒரு பார்வை

பாடதிட்டத்தில் இருக்கும் நேரு, அம்பேத்கார் கேலி சித்திரம் சமிபக்கால ஊடகத்தின் பரப்பரப்பாக பேசப்படும் ஒரு விஷயம். அம்பேத்கார் புகழை இழிவுப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் சித்திரம், கண்டிப்பாக பாடத்திட்டதில் இருந்து நீக்க வேண்டிய ஒன்று தான். வருகால சங்கதியர்களுக்கு, அதுவும் குறிப்பாக பின்தங்கிய மாணவர்கள் தங்கள் சமுகத்திற்காக உழைத்த தலைவரை தவறாக நினைக்க கூடும்.

ஆனால், எல்லோர் மனதில் எழும் கேள்வி – ஆறுபது வருடங்கள் முன் வரைந்த சித்திரம் அப்போது விமர்சனத்துக்கு உட்படுத்தாமல் இப்போது ஏன் இவ்வளவு சர்ச்சை கிளம்பியுள்ளது ?



ஒரு முறை, கேலி சித்திரம் வரைந்த சங்கர் தொகுத்த நூலுக்கு பிரதமர் நேரு “ Don’t Spare me sankar !” என்று சொல்லியிருக்கிறார். அதவாது, நான் பிரதமர் என்பதால் உன் கேலி சித்திரத்தில் என்னை விட்டு விடாதே என்று அர்த்தத்தில். சுதந்திர இந்தியாவில் புது சட்டத்தை அமைக்க அம்பேத்காரை நேரு உட்பட பலர் அவரை நெருக்கிக் கொண்டு இருந்தனர். ஆனால், அம்பேத்கார் ஒவ்வொரு சட்டத்தை பார்த்து பார்த்து பொறுமையாக அமைத்தார். அதனால், இப்படி ஒரு கேலி சித்திரம் வரைந்ததாக ஒரு பார்வை இருக்கிறது.

சுதந்திர இந்தியாவை, நேருவும், அம்பேத்காரும் வேகமாக இழுத்து செல்லாமல் நத்தைப் போல் மெதுவாக செல்கின்றனர்.நேரு சவாரி செய்யாமல் அம்பேத்காரை வேலை வாங்குகிறார் என்ற இன்னொரு விமர்சனமும் உண்டு. சங்கரின் கேலி சித்திரத்தின் நேருவும் தப்பவில்லை என்பதை ஓய்வுப் பெற்ற ஒரு முத்த பத்திரிகையாளர் மூலம் தெரிந்துக் கொண்டேன்.


அதனால், இந்த கேலி சித்திரம் ஆறுபது வருடங்கள் முன்பு பெரிய கேள்வியோ, சர்ச்சையோ சந்திக்க வில்லை. அன்று இருந்தவர்களின் மனநிலை வேறு. ஆனால், இப்போது சர்ச்சை கிளப்பி உள்ள முக்கிய காரணம் பார்க்கின்றவர்களின் பார்வையும், அதை செயல்படுத்த நினைத்த நல்ல உள்ளங்களும் தான். அம்பேத்காரைப் பற்றி தவறாக எண்ணம் மாணவர்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற நினைப்பவர்கள் தான் காரணம்.


டிசம்பர் 6, தேர்வு செய்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாபர் மசூதியை இடித்த காரணம் அன்று அம்பேத்காரின் நினைவு தினம் என்பதால் தான் என்ற எண்ணம் பலரது மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இந்த கேலி சித்திரம் நேரு குதிரைப் போல் வேக செயல்படக்கூடிய சட்டத்தை எதிர்பார்க்க, அம்பேத்கார் நத்தைப் போல் மெதுவாக செயல்படும் சட்டத்தை அமைத்தார் என்ற அர்த்தில் பரப்ப அந்த (ஆரிய) நல்ல உள்ளங்களுக்கு தோதாக இருக்கும்.

ஆறுபது ஆண்டு காலம் சட்டத்துறையில் செயல்பட்ட எல்லா தவறுகளை அம்பேத்கார் மீது சுமத்திவிட்டு, மற்றவர்கள் தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கிவார்கள். பின்தங்கியவர்களை முன்னுக்கு கொண்டு வந்த குற்றத்திற்காக அம்பேத்கார் ஆறுபது வருடம் கலித்து இந்த பழியை சுமக்க வேண்டியதாக இருக்கும்.

இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது. அடுத்த ஆண்டு இந்த கேலி சித்திரம் நீக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். எங்கள் அம்மாவிடம் இந்த பொருப்பை ஒப்படைத்திருந்தால், பாடப் புத்தகத்தில் இருந்து அந்த பக்கத்தை கிழித்து கொடுக்க சொல்லியிருப்பார். கிழித்துப் போடுவதற்கு சமச்சீர் பாட புத்தகத்தில் இருக்கும் கலைஞர் கவிதையா என்ன ?


Friday, December 30, 2011

உலக சினிமா : Dr.Babasaheb Ambedkar

ஒவ்வொரு வருடமும் தூர்தர்ஷனில் அல்லது ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் 'காந்திஜி' படம் போடுவார்கள். ஒரு வெள்ளையன் காந்தியாக நடித்திருந்தாலும் காந்தியின் வரலாற்று படமாக அதை போற்றி டி.வியில் போட்டுக் கொண்டுயிருக்கிறார்கள். 1982 ல் வெளிவந்த காந்தி திரைப்படம், எத்தனை முறை தொலைக்காட்சியில் போட்டியிருப்பார்கள் என்று கணக்கே இல்லை. காந்தியை பற்றியும் அவரது கொள்கையை பற்றியும் மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரமாக 'காந்தி' படம் இருக்கிறது. ஆனால், அம்பேத்கரை பற்றி 2000ல் வெளியான படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மகாராஷ்ட்ரா அரசின் நிதி உதவியோடு 1998ல் எடுக்கப்பட்ட 'அம்பேத்கர்' திரைப்படம் 2000ல் தான் வெளிவந்தது. 1998ல் சிறந்த கலைப்படத்திற்கும், சிறந்த நடிகர் ( மம்மூட்டி) க்கான தேசிய விருதை இந்த படத்திற்கு கிடைத்தது. மற்ற கலைப் படம் போல் இல்லாமல் அம்பேத்கர் படம் வசூலிலும் ஒரளவு நன்றாகவே இருந்தது.



காந்தி, அம்பேத்கர் இரண்டு படங்களிலும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை தான் பதிவு செய்கிறது. காந்தி படத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அம்பேத்கர் படத்தில் பல உண்மைகள் வெட்டப்பட்டுள்ளது.

‘காந்தி’ படத்தில் காந்தி வில்லன் என்று எடுத்துக் கொண்டால் வெள்ளையன். அவனை விரட்டி அடிப்பதே காந்தியின் போராட்டமாக இருக்கும். ஆனால், அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் வில்லன் என்று எடுத்துக் கொண்டால் அது ‘காந்திஜி’ தான். இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெள்ளைக்காரனே சிறப்பு சலுகை தர முன்வந்தும், காந்திஜி அதை எதிர்க்கிறார். தன் உயிரை ஆயுதமாக்கி பூனா பேக்ட் ஒப்பந்தத்தில் அம்பேத்கரை கையெழுத்திட வைக்கிறார்.

அம்பேத்கர், காந்தி இருவருக்குள் பல பணிப் போர் இருக்கிறது. ஆனால், 3 மணி நேர திரைப்படத்தில் ஓரளவு பதிவு செய்திருக்கிறார். சரி.. படத்திற்கு வருவோம்.

தலித்தை இந்து மதத்தில் இருந்து பிரித்து விட்டால் எதிர்காலத்தில் இந்தியாவில் இந்து மதம் சிறுபான்மையினராக மாறிவிடுமோ என்று காந்தி அஞ்சுகிறார். அதே சமயம் தலித்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சரியாக காலமாகும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்கிறார். இன்று வரை, பல கிரமங்களில் அந்த காலத்திற்காக தான் காத்திருயிருக்கிறார்கள்.

மழைக்கு கோயிலுக்குள் ஒதுங்கிய தலித்தின் மரணத்தில் கதை தொடங்குகிறது. அமெரிக்காவில் தன் பட்டப்படிப்பு படிக்கும் அம்பேத்கர் அமெரிக்காவில் வாழும் கருப்பர்களையும், இந்தியாவில் வாழும் தீண்டாமையை ஒப்பிட்டு பேசுகிறார். பரோடா அரசு நிதி உதவியில் படிக்கும் அம்பேத்கர் தன் படிப்பு முடித்ததும் பத்து வருடம் பரோடா மஹானத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை. ஆனால், படிப்பு முழுமை பேராமலே பரோடா அரசுக்கு வேலை செய்ய அழைப்பு வருகிறது.

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்ததால் வீடு கிடைக்காமல் அவதைப்படுவதும், தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மரியாதை இல்லாமல் நடத்துவதும், தூசிப்படிந்த அறை தங்குவதும் போன்ற அவமானங்களை சந்திக்கிறார். பின்பு, பரோடா மன்னர் பத்து வருடம் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொள்கிறார். தன் மனைவி ரமாபாய்யுடன் வறுமையில் வாடுகிறார். தன் நான்கு குழந்தைகளை இழக்கிறார்.

வழக்கறிஞர் பட்டம் பெற்ற அம்பேத்கர் தன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறார். தீண்ட தகாதவர்களை அணியாக திரட்டி மகாத்தில் இருக்கும் குளத்தில் நீர் குடிக்கிறார். பிராமினர் சஹரபுத்தேவுடன் சேர்ந்து மனு தர்மத்தை எரிக்கிறார். அனைத்து ஐரோப்பிய சைமன் கமிஷனில் பம்பாய் மகான அமைப்பு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். அம்பேத்கர் காங்கிரஸ் பற்றி தன் அதிருப்தி கருத்துக்களை தெரிவிக்கிறார். இதை கேள்வி பட்ட காந்தி அம்பேத்கரை பார்க்க அழைக்கிறார்.

காந்தி, அம்பேத்கர் சந்திப்பில் இருந்து அக்‌ஷன் படத்திற்கு உண்டான விருவிருப்பு இந்த கலை படத்தில் இருக்கிறது. காந்திக்கு எதிராக பல வசனங்கள் இந்த படத்தில் பார்க்க முடிந்தது.

“He is not Mahatma. He is an moderm politican"

" மகாத்மா வருவார்கள். போவார்கள். ஆனால் காலம் காலமாக தீண்டப்படாதவன் தீண்டப்பட்டாமல் ஒதுக்கப்படுகிறான்"


காந்தியிடம் " அடிக்கடி உண்ணாவிரதத்தை ஆயுதமாக பயன்படுத்தாதீங்க..."

இன்னும் பல வசனங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்க்க தோன்றுகிறது. சென்சார் போர்ட்டின் கை வண்ணம் தெரிகிறது.

காந்தி, அம்பேத்கர் முதல் சந்திப்புக்கு பிறகு, காந்தி தன் காரியதரிசியிடம் “ என்னது அம்பேத்கர் மார் இனத்தை சேர்ந்தவரா ? நான் அவரை பிராமனர் என்று நினைத்தேன். நீங்கள் ஏன் சொல்லவில்லை” என்று கோபப்படுகிறார். இந்த வசனத்தில் பல அர்த்தங்கள் உள்ளது.

தனி நாடு கேட்கும் ஜின்னாவிடம் தன் அதிருப்தியை தெரிவிக்கிறார். காங்கிரஸ் உறுப்பினர் இல்லாத அம்பேத்கர், காந்தி சிபாரிசால் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்கிறார். ( காந்தி அம்பேத்கர் பெயர் சொல்லும் போது, நேருவின் முகம் மாறுவதை சற்று உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்). இந்து மதத்தை புரக்கணிக்க போவதாக அறிவிப்பு விட, ஒவ்வொரு மதத்தினரும் அம்பேத்கரை தங்கள் மதத்திற்கு அழைக்கிறார்கள். குறிப்பாக, கிறித்துவ மதத்தினருக்கு அம்பேத்கர் கேட்கும் கேள்வி சென்சார் போர்ட் வெட்டாமல் விட்டதை பாராட்டியாக வேண்டும்.

தனது உடல்நலம் கவனித்துக் கொள்ள சாராத கபீரை மணந்துக் கொள்கிறார். சுதந்திர இந்தியாவின் சட்டங்கள் வகுக்கிறார். இந்து கோட் சட்டத்தை கொண்டு வர நினைக்க, போதிய ஆதரவு இல்லாதததால் அந்த சட்டம் அமலாக்க அவரால் முடியவில்லை. தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார். இந்து மதத்தின் அதிருப்தியால் ஐந்து லட்ச ஆதரவாளர்களோடு புத்த மதத்தை தழுவிகிறார்.

புத்தகர் மதம் தழுவிய இரண்டு மாதத்தில் இறந்து விட்டதாக எழுத்துக்கள் வர படம் முடிகிறது. இன்னும் பல இடங்கள் தீண்டாமை உள்ளது என்பதையும் படம் முடிவில் எழுத்துக்களை ஓட விட்டிருக்கிறார்கள்.

இந்த படம் மக்களிடம் கொண்டு செல்லாமல் இருந்ததற்கு இரண்டு காரணம். ஒன்று, அரசு தயாரிப்பு. இன்னொரு, நான் சொல்ல வேண்டியதில்லை. பலருக்கு தெரிந்த காரணம் தான்.

இப்படத்தை விமர்சனம் செய்வதை விட பலருக்கு கொண்டு செல்வதே நோக்கம் என்பதால், படத்தில் பணியாற்றிய இயக்குனர், நடிகர் பற்றி அதிகம் குறிப்பிட விரும்பவில்லை.

இப்படம் இணையத்தில் இருப்பதை பரிந்துரை செய்த நண்பர் கார்க்கிக்கு என் நன்றிகள் பல..

இந்த படத்தை முழுமையாக பார்க்க...

LinkWithin

Related Posts with Thumbnails