வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label காலச்சுவடு. Show all posts
Showing posts with label காலச்சுவடு. Show all posts

Monday, July 14, 2014

பீமாயணம் : தீண்டாமையின் அனுபவங்கள்

இந்திய அரசியலில் ஒடுக்கப்பட்டோரின் குரலும் அரசியல் சாசனத் உருவாக்கியவருமான பி.ஆர்.அம்பேத்கர் வரலாறு பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. காந்திப்படத்தை பெருமையாய் ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒளிப்பரப்பும் அளவிற்கு அம்பேத்கர் படம் தொலைக்காட்சியில் அதிகளவில் ஒளிப்பரப்பாததே சாட்சி.


காந்தி, நேரு, பட்டேல் போன்ற தேசியத் தலைவர்கள் மக்களது நினைவில் பதியவைக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் காந்தியை விட அதிக சிலை அம்பேத்கருக்கு தான் இருக்கிறது. ஆனால், அம்பேத்கர் இன்னமும் சாதித் தலைவர் என்ற வட்டத்துக்குள் மக்கள் மனதில் இருக்கிறார்.

வழக்கமான வரலாற்று வடிவில் நூல் இல்லாமல், தற்காலத்தில் இரண்டு பேர் தீண்டாமைப் பற்றி பேசுவது தொடங்குகிறது. அம்பேத்கர் தீண்டாமையால் சந்தித்த அவமானங்கள், அதனால் அவருக்கு ஏற்ப்பட்ட விபத்து என்று அவரைப் பற்றி கேள்விப்படாத ஒரு சில தகவல் இந்த நூலில் கிடைத்தது. அதற்கு தகுந்தாற்போல் வித்தியாசமான ஓவியங்களும் இடம் பெற்றுயிருக்கிறது.

இதில் இடம்பெற்ற நாம்தேவ் தாஸ்ஸின் மொழிப்பெயர்ப்பு கவிதை மனதை கவர்க்கிறது.

”எருமைகளைக் கூட தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள். ஆட்டு உரோமத்தை கத்தரிப்பார்கள். ஆனால். மஹரின் தலைமுடியைக் கத்தரிக்க மாட்டார்கள். அதைவிட அவன் கழுத்தையே அறுப்பார்கள்.”

”மற்ற பையன்கள் தண்ணீர் குடிக்கலாம். விலங்குகள் கூட வயிறு முட்டக் குடிக்கலாம். ஆனால், எனக்கு தாகம் எடுக்கும் போது கிராமமே பாலைவனமாக மாறிவிடுகிறது.”

இந்த புத்தகம் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டதா அல்லது பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதா என்ற குழப்பம் இருக்கிறது. வித்தியாசமான ஓவியங்களுடன் அம்பேத்கரின் வாழ்க்கை சம்பவங்களை சொல்கிறார்கள். இதை வைத்து குழந்தைகளுக்காக புத்தகம் என்று சொல்ல முடியவில்லை. இடையில், சமக்காலத்தில் தலித்துகளுக்கு எதிராக நடந்த பத்திரிக்கை செய்திகள் சேர்த்துள்ளனர். “அம்பேத்கர் காலத்தில் இருந்தது. இப்போது இல்லை” என்று வாதம் செய்பவர்களுக்கு தகவலாக கொடுத்திருக்கிறார்கள்.

இந்த நூலின் உண்மையான வாசகன் யார் என்பதில் கொஞ்சம் சந்தேகத்தை எழுப்புகிறது.

**

பீமாயணம் : தீண்டாமையின் அனுபவங்கள் 
கலை : துர்காபாய் வ்யாம், சுபாஷ் வ்யாம் 
கதை : ஸ்ரீவித்யா நடராஜன், எஸ்.ஆனந்த் 
காலச்சுவடு பதிப்பகம்
Rs.245 

இணையத்தில் வாங்க... 


Tuesday, August 13, 2013

பட்டு - அலெசாண்ட்ரோ பாரிக்கோ

உலகின் தலை சிறந்த நாவல். வாசித்திக்க வேண்டிய நாவல். மனிதனின் மகத்துவத்தை எடுத்துறைக்கும் கதை. என்று எந்த பெரிய வார்த்தைகள் மூலம் இந்த புத்தகத்தை அலங்கரிக்க போவதில்லை. மிக சிறந்த நாவல் பட்டியலிலும் இது இடம் பெற போவதில்லை. அதற்கு மாறாக உங்கள் ஆள் மனதை எதோ ஒன்று செய்யும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும்.



முன்னால் இராணுவ வீரனான ஹெர்வே ஜான்கர் தன் புதிய தொழிலுக்கான பட்டு வியாரத்துக்காக தன் மனைவி ஹெலனை விட்டு பிரிந்து உலகின் கடைசியான ஜப்பானுக்கு செல்கிறான். அங்கு, விலைமாதுவான பிளான்ச்சி என்ற பெண்ணை பார்க்கிறான். அவளை தொடாமலே அவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது. அவளிடம் இருந்து ஜப்பானிய மொழியில் ரகசியமான கடிதம் ஜான்கருக்கு கிடைக்கிறது. அந்த கடித்தத்தின் வார்த்தைகள் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. அந்த கடிதம் அவனை மீண்டும் கடல் கடந்து செல்ல வைக்கிறது. அந்த கடிதத்தின் அர்த்தம் புரிந்ததும், ஹெர்வே ஏற்பட்ட குற்றவுணர்வு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

ஆரம்பத்தில், யாரோ ஒருவரின் டைரிக் குறிப்புகளில் அனுமதிப் பெற்று கொண்டு நுழைந்த உணர்வு இருந்தது. ஹெர்வே பயணிக்கும் போது, நாம் அவனுடன் பயணிக்கவில்லை. ஆனால், அவனுள் பிளான்ச்சி மீது காதல்/காமம் மட்டும் நம்மிடம் தோன்றிவிடுகிறது. பிளான்ச்சி கடிதம் படிக்க படிக்க…. நாமும் ஹெர்வேவாக மாறிவிடுகிறோம். கடிதத்தின் ரகசியத்தை பிளான்ச்சி சொல்லும் ஹெர்வேவுக்கு இருக்கும் நமக்கும் வருகிறது.

சுகுமாரனின் மொழிபெயர்ப்பை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். குறிப்பாக கீழ் இருக்கும், வாசகங்கள் நம்மை பாதிப்புள்ளாக்குகிறது.

உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பறவைகளைக் கூண்டில் நிரப்பு. உனக்கு நல்லது ஏதாவது நடக்கும் நாளில் அவற்றைத் திறந்து விட்டு அவை பறந்து போவதை பார்.

என்னால் அவனை தடுக்க முடியாது. போக வேண்டும் என்று அவன் வற்புறுத்தும் போது என்னால் செய்யக்கூடியது அவன் திரும்பி வருவதற்கான இன்னொரு காரணத்தை அவனுக்குக் கொடுப்பதுதான்.

போர் விலையுயர்ந்த விளையாட்டு. உங்களுக்கு நான் தேவை. எனக்கும் நீங்கள் தேவை. 

ஏதோ ஒன்றைத் தீவிரமாக விரும்பி அதற்காக உயிரை விடுவதை நான் ஒரு போதும் அனுபவித்ததில்லை

நம் அருகில் இருப்பவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்பு, காதலை அவர்கள் மரணத்திற்கு பிறகு தெரிந்துக் கொள்ளும் வலியைத் தான் இந்த கதை உணர்த்துகிறது.

இந்நாவல் பிரெஞ்சு – கனடிய இயக்குநரான ஃப்ரான்ஸ்வா கியார்த் இயக்கத்தில் ‘SILK’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.


நூல் வாங்க 

விலை. ரூ. 95. பக். 120
காலச்சுவடு பதிப்பகம்

LinkWithin

Related Posts with Thumbnails