ஜே.எஸ்.ராகவன்
கிழக்கு பதிப்பகத்தின் ஆரம்பகால நூல் என்பதை முதல் பக்கத்தில் இருந்த மைலாப்பூர் விலாசத்திலேயே புரிந்துக் கொண்டேன். அண்ணா நகர் டைம்ஸ் இதழில் ஜே.எஸ்.ராகவன் அவர்கள் எழுதிய 'தமாஷா வரிகள்' கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளனர். கிழக்கு பதிப்பகத்தின் புத்தக பட்டியலை பார்க்கும் போது ஜே.எஸ்.ராகவன் புத்தகங்களை பார்த்திருக்கிறேன். வாங்கி படிக்கலாம் என்று நினைக்கும் போதெல்லாம் கிழக்கு பதிப்பகத்தின் வேறு புத்தகங்கள் கண்ணில் பட அதை வாங்கி விடுவேன். அதுமட்டுமில்லாமல், நகைச்சுவை புத்தகங்கள் ஒரு முறைக்கு மேல் படிக்க நினைத்தாலும் ஆர்வம் வருவதில்லை என்பது இன்னொரு காரணம். எதோ கண்ணிமரா நூலகத்தின் புன்னியத்தில் இந்த நூலை எடுத்து படித்தேன்.
ரொம்ப எதிர்பார்த்து எடுத்ததாலோ என்னவோ என் எதிர்பார்ப்பை பாதி கூட புர்த்தி செய்யவில்லை. இருந்தாலும், சில நல்ல நகைச்சுவை கட்டுரைகள் பிடிக்காமல் இல்லை.
"உலகமே தட்டையா ?" கட்டுரையில் ஒரு அம்மா கடையில் தட்டை பற்றி கேட்பதும், கடைக்காரன் 'இல்லை' என்று சொல்லுகிறார். அந்த அம்மா விடாமல் கடைக்காரனை தொல்லை பண்ணி தட்டை கேட்கிறார். கடைக்காரனும் கஷ்டப்பட்டு தேடி கொண்டு வந்து அந்த அம்மாவிடம் கொடுக்க கலர், அளவு பார்த்து விட்டு 'நானே செய்துகிறேன்' என்று சொல்கிறார். இவ்வளவு நேரம் அந்த அம்மா 'தட்டை' கேட்டதற்கு காரணம் ஒரு மாதிரி வடிவத்திற்காக தான்.
"வாக்கிங் விநாயகர்" கட்டுரையில் தோப்பை குறைக்க விநாயகரை காலையில் வணங்க வேண்டும். ( ஞான பழத்தை வாக்கிங் போய் பெற்றதால் 'வாக்கிங் விநாயர்'). வேடன் கண்ணப்பன் மாதிரி விநாயகரை காலில் ஷூ போட்டுக் கொண்டு கும்பிடலாம். ( லேசு போட்ட ஷூவை லேசில கழட்ட முடியுமா).
இந்த புத்தகத்தில் ரசிக்க தக்க நகைச்சுவை கட்டுரை என்றால் "சொல்லாதே வாய் திறந்து" தான். மேடையில் வரவேற்புரை செய்பவர் ஒவ்வொருவரை அறிமுகம் படுத்தும் போதும் அவரை தன் மனதுக்குள் திட்டுகிறார். ஒரு இடத்தில் "பட்டங்கள் பல வாங்கியவர்" என்று சொல்லி தன் மனதுக்குள் " பட்டங்கள் தான் வாலோடு பறக்கும். ஆனால், இவர் பட்டங்களுக்காக ஆவலாக பறப்பவர்" என்று குமுறுகிறார்.
அதே ஒரு சில கட்டுரைளில் இருக்கும் நகைச்சுவை துணுக்குகளை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.
*. தேவர்கள் வேடமிட்டு வந்ததால் அந்த இடத்திற்கு பெயர் "வேடம்" தாங்கல்.
*. தூண்டு எப்போதுமே மல்டி பர்பஸ். குடை, கைகுட்டை......
*. போன்ல லவ் தான் பண்ணுவாங்க... இன்டர்வியூமா எடுப்பாங்க....
*. 'அருள்மிகு ஆசிரியசாமி' கட்டுரையில் படைக்கும் கடவுளே புகழ்ச்சிக்கும், துதிக்கும் மயங்கும் போது படைக்கும் கதைகளை பரிசீலிக்கும் ஆசிரியர்கள் இதில் வேறுபடுவார்களா...?
*. 'எங்கே கேள்வி - பதில் ?' கட்டுரையில் உண்ட உணவிலுள்ள கலோரிகளை எரிக்காமல் வாகனங்களில் உள்ள எரிபொருள்களை எரித்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பில்லை இவ்வகை வாகனப் பிரியர்கள் அதிகரித்து வரும் நிலையில் வாகங்கள் தவிர்த்து நடக்க வேண்டும்.
பல கட்டுரைகள் விவேக் போல் 'மேசேஜ்' சொல்லும் முயற்சியில் நகைச்சுவை தொலைந்துவிடுகிறது. ஒரு சில கட்டுரைகளில் ஒண்ணுமே இல்லை என்று தோன்றுகிறது.
"கிச்சு கிச்சு" கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டி தான் சிரிக்க வைக்கிறாங்க.... :)
விலை.60.
கிழக்கு பதிப்பகம்
வீடு நெடுந்தூரம் - Short film
Book, Movies Offers
To Buy my books in flipkart
Thursday, February 26, 2009
Tuesday, February 24, 2009
சாரு நிவேதிதாவின் 'தீராக்காதலி'
பதிவர் வட்டத்தில் அதிகம் பேசப்படும் எழுத்தாளர் என்றால் அது ‘சாரு நிவேதிதாவாக’ தான் இருக்க முடியும். அவரை சூடாக விமர்சிப்பவர்கள் அவர் எழுதிய 'ஸீரோ டிகிரி' மீதும், 'ராஸ லீலா' மீதும் பலர் முன் நிருத்தி உள்ளனர். பலருக்கு அவருடைய கட்டுரை தீரனும், தேடல்களும் தெரியாமல் இருக்கிறது. அவருடைய தேடலை புரிந்துக் கொள்ள நினைப்பவர்கள் 'தீராக்காதலி' நூலை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
காலத்தால் மறந்து விட்ட 'சூப்பர் ஸ்டார்' எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கை வரலாற்றில் இருந்து புத்தகம் தொடங்குகிறது. அவர் நடித்த 'அரிசந்திரா' (மூன்று தீபாவளி கண்ட படம்) இன்றும் எந்த படங்களாலும் முறியடிக்க முடியாத சாதனை படமாக இருக்கிறது. கொலை வழக்கில் கைதாகி, அதனால் தன் சொத்தும், புகழும் இழந்தவர் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் விடுதலையான பிறகு சியாமளா (1952), புது வாழ்வு (1957), சிவகாமி (1959) என்று மூன்று படங்கள் நடித்திருக்கிறார். இந்த படங்களுமே தோல்வியடைந்தன. காலத்திற்கேற்ற படங்கள் அவர் நடிக்காமல் பாட்டை நம்பி படம் எடுத்ததால் அவர் தோல்விக்கு காரணம் என்ற இந்த நூலில் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
அன்றைய 'சூப்பர் ஸ்டார்' பாகவதர் போல், நடிப்பு திலகத்திற்கு பி.யு.சின்னப்பா இருந்திருக்கிறார். இவர் கதநாயகனாக நடித்த 'சதிலீலாவதியில் தான் M.G.R, N.S.K அறிமுகம் ஆகியுள்ளனர்.
அடுத்து இந்த நூலில் இடம் பெற்றவர் 'இசை மன்னர்' என்று கருதப்பட்ட எஸ்.ஜி.கிட்டப்பா அவர்கள். குடித்து குடித்து இள்மையிலே தன் வாழ்க்கை முடித்துக் கொண்ட இசை மாமேதை. இறுதி நாட்களில் அவர் எழுதிய கடிதங்களும் இந்த நூலில் இடம் பெறுகின்றன.
உண்மையில் இந்த நூலின் நாயகி சொன்னால் "தீராக்காதலி" இருந்த (வாழ்ந்த) நடிகை கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் தான். இன்று வரை பலர் மனதில் அவ்வையாராக வாழ்ந்து கொண்டு இருக்கும் சுந்தராம்பாள் அவர்களின் இளமைக்காலம் மிகவும் சோகமானவை. நல்ல குரல் வளம் கொண்ட சுந்தராம்பாள் அவர்கள் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டார். கிட்டப்பாவுடன் சட்ட ரீதியான திருமணம் நடக்காவிட்டாலும் அவர் மரணத்திற்கு பிறகு சாமியாராக தான் வாழ்ந்திருக்கிறார். கிட்டப்பா 28வது வயதில் இறக்கும் போது சுந்தராம்பாளுக்கு வயது 25 ! கும்பிடுவதற்கு இரண்டு கைகள் வேண்டும். காதலுக்கு இரண்டு உள்ளங்கள் வேண்டும். அந்த விஷயத்தில் சாரு சொல்வது போல் சுந்தராம்பாள் அவர்கள் "ஒரு தனி பிறவி தான்".
வில்லனாக நடித்த எம்.ஆர்.ராதா இந்த புத்தகங்களில் சொல்லும் இரண்டு சம்பவங்கள் மூலம் நாயகனாக தெரிகிறார்.
1. எம்.ஆர்.ராதா நாடகம் நடத்தும் ஊர்களில் அதிக வசதிகளை எதிர்பார்க்க மாட்டார். " நமது நாடங்களை நடத்துபவர்கள் மிகவும் ஏழைகள். இந்த நாடகத்தைக் கொண்டு தான் கடனை அடைக்க வேண்டும். ஒரு வாரத்திற்காவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களிடம் ரொம்ப வசதிகள் எதிர்பார்க்காதீர்கள் !" என்று கூறுயவர்.
2. 1956ல் கலைஞரை எதிர்த்து எம்.ஆர்.ராதாவை நிற்குமாறு வற்புற்த்திய கி.வீரமணியிடம் " கருணாநிதி நம்ப ஆளாச்சே.... அதோடு, அய்யாவுக்கு தேர்தலெல்லாம் பிடிக்காது. அதெல்லாம் அயோக்கியத்தனம்னு சொல்லியிருக்காரு..." என்று கூறி மறுத்துவிட்டார் எம்.ஆர்.ராதா
எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரையில் எல்லாம் நமக்கு தெரிந்த விஷயத்தை தான் சொல்லியிருக்கிறார். புத்திதாக ஒன்றுமில்லை. நூலின் வணிக நோக்கத்திற்காகவே எம்.ஜி.ஆர் பற்றின கட்டுரை சேர்க்கப்பட்டது போல் தெரிகிறது.
அட்டைப்படத்தில் சினிமா கலைஞர்களையும், புத்தகத்தில் 'தீராக்காதலி' என்ற தலைப்பை பார்த்ததும் அவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றியதாக இருக்கும் என்ற ஆவல் இருந்தது. ( ஒரு வேலை எழுதியது சாரு நிவேதிதா என்பதால் அப்படி தோன்றியிருக்கலாம்). நாம் மறந்த கலைஞர்களை நினைவு படுத்தும் வகையில் இந்த நூல் இருக்கிறது.
விலை. 80
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு.
அபிராமபுரம், சென்னை - 18.
காலத்தால் மறந்து விட்ட 'சூப்பர் ஸ்டார்' எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கை வரலாற்றில் இருந்து புத்தகம் தொடங்குகிறது. அவர் நடித்த 'அரிசந்திரா' (மூன்று தீபாவளி கண்ட படம்) இன்றும் எந்த படங்களாலும் முறியடிக்க முடியாத சாதனை படமாக இருக்கிறது. கொலை வழக்கில் கைதாகி, அதனால் தன் சொத்தும், புகழும் இழந்தவர் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் விடுதலையான பிறகு சியாமளா (1952), புது வாழ்வு (1957), சிவகாமி (1959) என்று மூன்று படங்கள் நடித்திருக்கிறார். இந்த படங்களுமே தோல்வியடைந்தன. காலத்திற்கேற்ற படங்கள் அவர் நடிக்காமல் பாட்டை நம்பி படம் எடுத்ததால் அவர் தோல்விக்கு காரணம் என்ற இந்த நூலில் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
அன்றைய 'சூப்பர் ஸ்டார்' பாகவதர் போல், நடிப்பு திலகத்திற்கு பி.யு.சின்னப்பா இருந்திருக்கிறார். இவர் கதநாயகனாக நடித்த 'சதிலீலாவதியில் தான் M.G.R, N.S.K அறிமுகம் ஆகியுள்ளனர்.
அடுத்து இந்த நூலில் இடம் பெற்றவர் 'இசை மன்னர்' என்று கருதப்பட்ட எஸ்.ஜி.கிட்டப்பா அவர்கள். குடித்து குடித்து இள்மையிலே தன் வாழ்க்கை முடித்துக் கொண்ட இசை மாமேதை. இறுதி நாட்களில் அவர் எழுதிய கடிதங்களும் இந்த நூலில் இடம் பெறுகின்றன.
உண்மையில் இந்த நூலின் நாயகி சொன்னால் "தீராக்காதலி" இருந்த (வாழ்ந்த) நடிகை கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் தான். இன்று வரை பலர் மனதில் அவ்வையாராக வாழ்ந்து கொண்டு இருக்கும் சுந்தராம்பாள் அவர்களின் இளமைக்காலம் மிகவும் சோகமானவை. நல்ல குரல் வளம் கொண்ட சுந்தராம்பாள் அவர்கள் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டார். கிட்டப்பாவுடன் சட்ட ரீதியான திருமணம் நடக்காவிட்டாலும் அவர் மரணத்திற்கு பிறகு சாமியாராக தான் வாழ்ந்திருக்கிறார். கிட்டப்பா 28வது வயதில் இறக்கும் போது சுந்தராம்பாளுக்கு வயது 25 ! கும்பிடுவதற்கு இரண்டு கைகள் வேண்டும். காதலுக்கு இரண்டு உள்ளங்கள் வேண்டும். அந்த விஷயத்தில் சாரு சொல்வது போல் சுந்தராம்பாள் அவர்கள் "ஒரு தனி பிறவி தான்".
வில்லனாக நடித்த எம்.ஆர்.ராதா இந்த புத்தகங்களில் சொல்லும் இரண்டு சம்பவங்கள் மூலம் நாயகனாக தெரிகிறார்.
1. எம்.ஆர்.ராதா நாடகம் நடத்தும் ஊர்களில் அதிக வசதிகளை எதிர்பார்க்க மாட்டார். " நமது நாடங்களை நடத்துபவர்கள் மிகவும் ஏழைகள். இந்த நாடகத்தைக் கொண்டு தான் கடனை அடைக்க வேண்டும். ஒரு வாரத்திற்காவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களிடம் ரொம்ப வசதிகள் எதிர்பார்க்காதீர்கள் !" என்று கூறுயவர்.
2. 1956ல் கலைஞரை எதிர்த்து எம்.ஆர்.ராதாவை நிற்குமாறு வற்புற்த்திய கி.வீரமணியிடம் " கருணாநிதி நம்ப ஆளாச்சே.... அதோடு, அய்யாவுக்கு தேர்தலெல்லாம் பிடிக்காது. அதெல்லாம் அயோக்கியத்தனம்னு சொல்லியிருக்காரு..." என்று கூறி மறுத்துவிட்டார் எம்.ஆர்.ராதா
எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரையில் எல்லாம் நமக்கு தெரிந்த விஷயத்தை தான் சொல்லியிருக்கிறார். புத்திதாக ஒன்றுமில்லை. நூலின் வணிக நோக்கத்திற்காகவே எம்.ஜி.ஆர் பற்றின கட்டுரை சேர்க்கப்பட்டது போல் தெரிகிறது.
அட்டைப்படத்தில் சினிமா கலைஞர்களையும், புத்தகத்தில் 'தீராக்காதலி' என்ற தலைப்பை பார்த்ததும் அவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றியதாக இருக்கும் என்ற ஆவல் இருந்தது. ( ஒரு வேலை எழுதியது சாரு நிவேதிதா என்பதால் அப்படி தோன்றியிருக்கலாம்). நாம் மறந்த கலைஞர்களை நினைவு படுத்தும் வகையில் இந்த நூல் இருக்கிறது.
விலை. 80
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு.
அபிராமபுரம், சென்னை - 18.
Sunday, February 22, 2009
நவீன இராமாயணமும், அரசியலும்
காட்சி - 1
இராமர் : அனுமான் ! இலங்கைக்கு சென்று இராவணனை எச்சரித்து விட்டு. என் சீதைக்கு ஆருதல் சொல்லிவிட்டு வா....
அனுமான் : எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். பேசாமல் சீதையை நானே அழைத்து வந்து விடுகிறேன்.
இராமர் : அது என் வீரத்திற்கு இழுக்கு... என் சீதையை நான் தான் மீட்பேன்
அனுமான் : சிறு பிள்ளை போல் அடம் பிடிக்காதே இராமா... நான் சீதையை மீட்டு வந்தால் பிரச்சனை இத்தோடு முடிந்து விடும்.
இராமர் : என் சொல் படி கேட்பது தான் உன் வேலை.
அனுமான் : (மனதுக்குள்) மேல் அதிகாரிகள் எப்போது தான் தனக்கு கீழ் இருப்பவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க போகிறாரோ...
அனுமான் தன் வாலை கலட்டி வைத்தார்.
இராமர் : ஏன் வாலை கலட்டி விட்டாய்..?
அனுமன் : நேற்று சுட்டி டி.வியில் 'இராமாயணம்' படம் பார்த்தேன். என்னை போன்ற உருவம் உள்ள ஒருவனின் வாலை எரித்தார்கள். எதற்கு வம்பு என்று கலட்டி விட்டேன்.
இராமர் : சபாஷ் சரியான சிந்தனை
அனுமான் : நேற்று நீங்கள் பி.எஸ்.வீரப்பா படம் பார்த்தீர்களா..???
இராமர்: ம்.. வெட்டி பேச்சு பேசாமல். இதோ என் மோதிரத்தை சீதைக்கு காட்டு. அப்போது தான் அவள் உன்னை என்னை சேர்ந்தவன் என்று நம்புவாள்...
அனுமான் : பெண்களின் சந்தேகம் பற்றி எனக்கு தெரியாதா...!!
இராமர் : ம்ம்ம்.. சீக்கிரம் செல்...
அனுமான் : சரி... இராமா...
காட்சி – 2
இராவணன் அரசபை
இராவணன் : யார் நீ...?
அனுமான் : நான் அனுமான். இராமனின் தூதுவன்.
இராவணன் : எதற்காக இங்கே வந்தாய் ?
அனுமான் : முதலில் தூதுவனுக்கான மரியாதை கொடுத்து நாற்காலி போடுங்கள்.
இராவணன் : எனக்கு சமமாக உனக்கு நாற்காலியோ... ஆ..ஆ (சிரிப்போலி அரங்கமே அதிர்கிறது...)
அனுமான் : ( மனதுக்குள் ) அவசரப்பட்டு வாலை இந்தியாவில் வைத்து விட்டேனே. இப்போது நாற்காலிக்கு எங்கு போவது…?
அப்போது ஒருவன் வந்து அனுமானுக்கு நாற்காலி போடுகிறார்.
இராவணன் : யார் நீ...??
அவன் : நான் ABT Parcel service ஆளு... இவர் எங்க Brand Ambassador. இவருக்கு என்ன என்ன தேவையோ நாங்க தான் ஸ்பான்சர் பண்ணுறோம்.
இராவணன் : ஓ.. ஸ்பான்சரை கையோடு அழைத்து வந்துவிட்டாயா... நீ வந்த நோக்கம் என்ன...??
அனுமான் : சீதையை இராமனிடம் ஒப்படைத்து விட்டு. அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
இராவணன் : மறுத்தால்.....
அனுமான் : என் இராமரை போரில் நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்.
இராவணன் : போருக்கு தயார் என்று உன் இராமனிடம் போய் சொல்....
அனுமான் : என் இராமனை எதிர்க்கும் அளவிற்கு வீரம் நிறைந்த படை உன்னிடம் உண்டா....?
இராவணன் : இல்லை தான். ஆனால், இந்தியாவில் இருந்து போர் உத்தரவு வராது என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படியே போர் பற்றி யோசித்தாலும் அடுத்த ஆட்சி வந்துவிடும். நடந்ததை மறந்துவிடுவார்கள்.
அனுமான் : (மனதுக்குள்) (நம் பலவீனத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான்) சரி.. நாம் யுத்தகளத்தில் சந்திப்போம்.
காட்சி - 3
அனுமான் வீர ஆவேசமாக பேசிவிட்டு சீதையை பார்க்க ஆசோகவனத்திற்கு சென்றார்.
அனுமான் : வணக்கம் தாயே... நான் அனுமான். இராமனின் விசுவாசி.
சீதை : உன்னை எப்படி நம்புவது
அனுமான்: இதோ இராமரின் கொடுத்த மோதிரம்.
சீதை : இதே மாடல் மோதிரம் தான் அவர் வைத்திருக்கிறார். ஆனால், இது போலி போல் தெரிகிறதே. அவரது மோதிரம் சொக்க தங்கம் ஆயிற்றே...
அனுமான் : என்ன போலி மோதிரமா...??
( தன் மனதுக்குள் இராமனை அழைத்து பேசுகிறார்.)
அனுமான் : இராமா ! ஏன் போலி மோதிரம் கொடுத்தீர்கள் ?
இராமன் : தங்கம் விலை பதினைந்தாயிரம் தாண்டிவிட்டது. உன்னை நம்பி எப்படி கொடுப்பது...
அனுமான் : என் இராமரா என்னை சந்தேகம் படுவது. நான் தீக்குளித்தே ஆக வேண்டும்...!
அந்த சமயத்தில் இராவணன் அங்கு வருகிறார்.
இராவணன் : அனுமான் ! இன்னும் இந்தியாவுக்கு செல்ல வில்லையா...! இலங்கையில் தமிழர்களை தான் கொல்லுவோம். வட இந்தியர்களை கொல்ல மாட்டோம். உயிர் மேல் ஆசை இருந்தால் ஓடிவிடு...
காட்சி - 4
அனுமான் உயிருக்கு பயந்து இந்தியாவுக்கு வருகிறார். இராமனிடம் நடந்தை எல்லாம் சொல்லுகிறார்.
இராமர் : அனுமான் ! யுத்தத்திற்கு நம் படையை தயார் படுத்து. இலங்கைக்கு, இந்தியாவுக்கும் பாலம் அமைத்து அதில் நாம் செல்லுவோம்.
ஒருவன் : நீங்கள் பாலம் கட்ட நாங்க அனுமதிக்க மாட்டோம்.
அப்போது ஒருவன் வந்து எதிர்த்து குரல் எழுப்புகிறார்.
இராமன் : யார் நீ...?
அரசியல்வாதி : நான் அரசியல்வாதி ! பாலத்தை வைத்து தான் நாங்கள் அரசியல் பண்ணுகிறோம். இராமரே வந்து பாலம் அமைக்க நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம். எங்கள் உத்தரவு இல்லாமல் நீங்கள் தனியாக சண்டை போடவோ அல்லது பாலம் கட்டவோ முடியாது.
இராமன் : அனுமான் ! இது என்ன புது பிரச்சனை..?
அனுமான் : அப்போதே..இராவணன் சொன்னான். இந்தியாவில் அவ்வளவு எளிதில் போர் உத்தரவு வராது என்று. ஆரம்பமே பிரச்சனை தொடங்கி விட்டது. இவர்கள் பேசி போர் உத்தரவு போடுவதற்குள் நீங்கள், நான், இராவணன் அனைவரும் கிழவர்களாகி விடுவோம்.
அரசியல்வாதி : சந்தோஷம்.... இராவணன் கிழவனானதும் சீதையை அவனே இந்தியாவில் விட்டு விடுவான். எங்கள் ஆட்சி தான் சீதையை மீட்டது என்று சொல்லி மீண்டும் அடுத்த முறை ஆட்சிக்கு வருவோம்.
அனுமான் : பேசாமல் நாம் இங்கையே இருந்து விடுவோம் இராமா
இராமன் : அதை பற்றி தான் நானும் யோசிக்கிறேன்.
இராமர் : அனுமான் ! இலங்கைக்கு சென்று இராவணனை எச்சரித்து விட்டு. என் சீதைக்கு ஆருதல் சொல்லிவிட்டு வா....
அனுமான் : எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். பேசாமல் சீதையை நானே அழைத்து வந்து விடுகிறேன்.
இராமர் : அது என் வீரத்திற்கு இழுக்கு... என் சீதையை நான் தான் மீட்பேன்
அனுமான் : சிறு பிள்ளை போல் அடம் பிடிக்காதே இராமா... நான் சீதையை மீட்டு வந்தால் பிரச்சனை இத்தோடு முடிந்து விடும்.
இராமர் : என் சொல் படி கேட்பது தான் உன் வேலை.
அனுமான் : (மனதுக்குள்) மேல் அதிகாரிகள் எப்போது தான் தனக்கு கீழ் இருப்பவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க போகிறாரோ...
அனுமான் தன் வாலை கலட்டி வைத்தார்.
இராமர் : ஏன் வாலை கலட்டி விட்டாய்..?
அனுமன் : நேற்று சுட்டி டி.வியில் 'இராமாயணம்' படம் பார்த்தேன். என்னை போன்ற உருவம் உள்ள ஒருவனின் வாலை எரித்தார்கள். எதற்கு வம்பு என்று கலட்டி விட்டேன்.
இராமர் : சபாஷ் சரியான சிந்தனை
அனுமான் : நேற்று நீங்கள் பி.எஸ்.வீரப்பா படம் பார்த்தீர்களா..???
இராமர்: ம்.. வெட்டி பேச்சு பேசாமல். இதோ என் மோதிரத்தை சீதைக்கு காட்டு. அப்போது தான் அவள் உன்னை என்னை சேர்ந்தவன் என்று நம்புவாள்...
அனுமான் : பெண்களின் சந்தேகம் பற்றி எனக்கு தெரியாதா...!!
இராமர் : ம்ம்ம்.. சீக்கிரம் செல்...
அனுமான் : சரி... இராமா...
காட்சி – 2
இராவணன் அரசபை
இராவணன் : யார் நீ...?
அனுமான் : நான் அனுமான். இராமனின் தூதுவன்.
இராவணன் : எதற்காக இங்கே வந்தாய் ?
அனுமான் : முதலில் தூதுவனுக்கான மரியாதை கொடுத்து நாற்காலி போடுங்கள்.
இராவணன் : எனக்கு சமமாக உனக்கு நாற்காலியோ... ஆ..ஆ (சிரிப்போலி அரங்கமே அதிர்கிறது...)
அனுமான் : ( மனதுக்குள் ) அவசரப்பட்டு வாலை இந்தியாவில் வைத்து விட்டேனே. இப்போது நாற்காலிக்கு எங்கு போவது…?
அப்போது ஒருவன் வந்து அனுமானுக்கு நாற்காலி போடுகிறார்.
இராவணன் : யார் நீ...??
அவன் : நான் ABT Parcel service ஆளு... இவர் எங்க Brand Ambassador. இவருக்கு என்ன என்ன தேவையோ நாங்க தான் ஸ்பான்சர் பண்ணுறோம்.
இராவணன் : ஓ.. ஸ்பான்சரை கையோடு அழைத்து வந்துவிட்டாயா... நீ வந்த நோக்கம் என்ன...??
அனுமான் : சீதையை இராமனிடம் ஒப்படைத்து விட்டு. அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
இராவணன் : மறுத்தால்.....
அனுமான் : என் இராமரை போரில் நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்.
இராவணன் : போருக்கு தயார் என்று உன் இராமனிடம் போய் சொல்....
அனுமான் : என் இராமனை எதிர்க்கும் அளவிற்கு வீரம் நிறைந்த படை உன்னிடம் உண்டா....?
இராவணன் : இல்லை தான். ஆனால், இந்தியாவில் இருந்து போர் உத்தரவு வராது என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படியே போர் பற்றி யோசித்தாலும் அடுத்த ஆட்சி வந்துவிடும். நடந்ததை மறந்துவிடுவார்கள்.
அனுமான் : (மனதுக்குள்) (நம் பலவீனத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான்) சரி.. நாம் யுத்தகளத்தில் சந்திப்போம்.
காட்சி - 3
அனுமான் வீர ஆவேசமாக பேசிவிட்டு சீதையை பார்க்க ஆசோகவனத்திற்கு சென்றார்.
அனுமான் : வணக்கம் தாயே... நான் அனுமான். இராமனின் விசுவாசி.
சீதை : உன்னை எப்படி நம்புவது
அனுமான்: இதோ இராமரின் கொடுத்த மோதிரம்.
சீதை : இதே மாடல் மோதிரம் தான் அவர் வைத்திருக்கிறார். ஆனால், இது போலி போல் தெரிகிறதே. அவரது மோதிரம் சொக்க தங்கம் ஆயிற்றே...
அனுமான் : என்ன போலி மோதிரமா...??
( தன் மனதுக்குள் இராமனை அழைத்து பேசுகிறார்.)
அனுமான் : இராமா ! ஏன் போலி மோதிரம் கொடுத்தீர்கள் ?
இராமன் : தங்கம் விலை பதினைந்தாயிரம் தாண்டிவிட்டது. உன்னை நம்பி எப்படி கொடுப்பது...
அனுமான் : என் இராமரா என்னை சந்தேகம் படுவது. நான் தீக்குளித்தே ஆக வேண்டும்...!
அந்த சமயத்தில் இராவணன் அங்கு வருகிறார்.
இராவணன் : அனுமான் ! இன்னும் இந்தியாவுக்கு செல்ல வில்லையா...! இலங்கையில் தமிழர்களை தான் கொல்லுவோம். வட இந்தியர்களை கொல்ல மாட்டோம். உயிர் மேல் ஆசை இருந்தால் ஓடிவிடு...
காட்சி - 4
அனுமான் உயிருக்கு பயந்து இந்தியாவுக்கு வருகிறார். இராமனிடம் நடந்தை எல்லாம் சொல்லுகிறார்.
இராமர் : அனுமான் ! யுத்தத்திற்கு நம் படையை தயார் படுத்து. இலங்கைக்கு, இந்தியாவுக்கும் பாலம் அமைத்து அதில் நாம் செல்லுவோம்.
ஒருவன் : நீங்கள் பாலம் கட்ட நாங்க அனுமதிக்க மாட்டோம்.
அப்போது ஒருவன் வந்து எதிர்த்து குரல் எழுப்புகிறார்.
இராமன் : யார் நீ...?
அரசியல்வாதி : நான் அரசியல்வாதி ! பாலத்தை வைத்து தான் நாங்கள் அரசியல் பண்ணுகிறோம். இராமரே வந்து பாலம் அமைக்க நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம். எங்கள் உத்தரவு இல்லாமல் நீங்கள் தனியாக சண்டை போடவோ அல்லது பாலம் கட்டவோ முடியாது.
இராமன் : அனுமான் ! இது என்ன புது பிரச்சனை..?
அனுமான் : அப்போதே..இராவணன் சொன்னான். இந்தியாவில் அவ்வளவு எளிதில் போர் உத்தரவு வராது என்று. ஆரம்பமே பிரச்சனை தொடங்கி விட்டது. இவர்கள் பேசி போர் உத்தரவு போடுவதற்குள் நீங்கள், நான், இராவணன் அனைவரும் கிழவர்களாகி விடுவோம்.
அரசியல்வாதி : சந்தோஷம்.... இராவணன் கிழவனானதும் சீதையை அவனே இந்தியாவில் விட்டு விடுவான். எங்கள் ஆட்சி தான் சீதையை மீட்டது என்று சொல்லி மீண்டும் அடுத்த முறை ஆட்சிக்கு வருவோம்.
அனுமான் : பேசாமல் நாம் இங்கையே இருந்து விடுவோம் இராமா
இராமன் : அதை பற்றி தான் நானும் யோசிக்கிறேன்.
Friday, February 20, 2009
பாலுணர்வு கதை : அவளும் நானும் ஒர் இனம் - 2
முதல் பாகம்
" எனக்கு இரண்டு வயசு இருக்கும் போது அம்மா இறந்துடாங்க. அப்பா தான் என்ன வளர்த்தாரு. ஒரு ஆம்பில மாதிரி கராத்தே, ஜிம்னு எல்லாத்திலையும் என்ன என்கரேஜ் பண்ணது அப்பா தான். ஒரு ஆம்பள மாதிரி தான் என்ன வளர்த்தாரு. நானும் ஒரு ஆம்பளைக்கு இருக்குற தைரியத்தோடு வளர்ந்தேன். அதனாலையே எனக்கு ஆம்பளைங்க மேல ஈர்ப்பு இல்ல. அப்புறம், நா காலேஜ் படிக்கும் போது அவரும் இறந்துட்டாரு..."
" அடிபாவி... நா என்ன கேள்வி கேக்குறேன். நீ என்ன பதில் சொல்லுற. உன் கதை கேக்கவா இவ்வள்வு தூரம் வந்தேன்.." என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
என் முகம் ஒரு மாதிரியாக இருப்பதை உணர்ந்துக் கொண்டாள்.
" என்ன ரொம்ப போர் அடிக்கிறேனா...???"
"அப்படி எல்லாம் இல்ல..."
" நா நேரா உங்க கேள்விக்கு பதில் சொல்லுறேன். எங்க அப்பா செத்ததுக்கு அப்புறம் என் பிரண்ட்டோட அப்பா தான் என்ன படிக்க வச்சாரு. சொந்த மக மாதிரி பாத்திக்கிட்டாரு. நாங்க ரெண்டு பேரும் உண்மையான பிரண்ட்ஸ்னு அவங்க அப்பா, அம்மா ரொம்ப நம்பினாங்க. ஆனா ! எங்களுக்குள்ள பிரண்ஷிப் மீறின உறவு இருந்ததுனு அவங்களுக்கு தெரியாது..."
ரம்யா சொல்லுவதை ஒவ்வொன்றாக பேப்பரில் எழுதினேன். அவள் நான் எழுதுவதை கவனித்துக் கொண்டு மேலும் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
" என் பிரண்ட யார் தப்பா பார்த்தாலும் சரி, கிண்டல் பண்ணுலும் சரி நா அவங்கள சும்மா விட்டதில்ல. என் பிரண்ட சைட் அடிச்ச இரண்டு பசங்கள பப்ளிக் ப்ளேஸ்ல அடிச்சிருக்கேன்." என்று தன் தொழி மீது இருந்த காதலை கூறினாள்.
" உங்க ஆசைக்கு எப்படி உங்க தோழி சம்மதிச்சாங்க....??" என்றேன்.
" எனக்கு எப்படி ஆம்பளைங்க மேல் ஈர்ப்பு இல்லையோ. என் பிரண்டுக்கு ஆம்பளைங்கனா பயம்.
என் கிட்ட எல்லாத்தையும் சொல்லுவா. நா அவள தொட்டு தொட்டு பேசுறது அவளுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. ஒரு நாள் நாங்க இரண்டு பேரும் எக்ஸாமுக்கு கம்பைன் ஸ்டடி பண்ணும் போது அவங்க அப்பா, அம்மா ஊருக்கு போய் இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது 'அது' நடந்திடுச்சு. எங்க ரெண்டு பேருல நான் தான் ஆண். அவ தான் பெண்..." என்றாள்.
யப்பா...யப்பா... அவள் சொல்ல சொல்ல.. எனக்குள் எதோ செய்வது போல் இருந்தது. இவ்வளவு அழகான பெண் எந்த ஆண்ணின் மீதும் ஈர்ப்பு இல்லை என்று சொல்லும் போது ஆண் இனத்திற்கே இழப்பு என்று தோன்றியது.
" உங்க இரண்டு பேருக்கு இன்னும் 'உறவு' இருக்கா...
" இப்படி கடைசி வரைக்கும் இருந்திருலாம் நினைச்சோம். ஆனா, எங்க 'உறவு' அவங்க அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சு. என்ன வீட்ட வீட்டு அனுப்பிச்சிடாங்க. அவளுக்கும் கல்யாணம் அயிடுச்சு. " என்று தன் 'லெஸ்பியன்' கதையை சொல்லி முடித்தாள்.
எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. விபச்சாரம் வயிறு பிழைப்பு நடத்தும் தொழில் என்று சொன்னால் கூட விபச்சாரிகள் மீது ஒரு கருணை வரும். அவர்கள் கதைக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு சோகம் இருக்கும். ஆனால், ஒரு பெண் தன்னை 'லெஸ்பியன்' என்று சொல்லிக் கொள்ள அசாத்திய துணிச்சல் வேண்டும். வெளிப்படையாக அவள் சொன்ன பிறகும் இந்த சமுதாயம் அவளை எப்படி பார்க்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
"சொல்லுறேனு தப்பா நினைக்காதீங்க.... ஒவ்வொரு ஆண்ணும் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காம கஷ்டப் படுறாங்க. இப்படி பொண்ணுங்க ஆண் துணை வேண்டாம்னு நினைச்சா... நம்ப நாட்டுல அடுத்த தலைமுறைக்கு ஒண்ணு இருக்காது. " என்று நான் சொல்லி முடிப்பதற்குள் ரம்யா கோபமாக பேச தொடங்கினாள். " ஜன தொகையில இந்தியா இரண்டாவது இடத்துல இருக்கு. இப்படி நாங்க எல்லாரும் 'லெஸ்பியன்' உறவு வச்சிகிட்டாலும் இந்தியாவுக்கு இராண்டுவது இடத்துல இருந்து மூனாவது இடத்துக்கு போக ரொம்ப நாள் ஆகும்."
அவள் சொன்ன பதிலில் எனக்கு சிரிப்பு தான் வந்தது. உணர்ச்சி பூர்வமாக ஒருவர் பேசும் போது நான் சிரித்தால் நன்றாக இருக்காது என்பதற்காக அமைதியாக எனக்கு இருந்த இன்னொரு சந்தேகத்தையும் கேட்டேன்.
" ஒரு சின்ன சந்தேகம். ஒர் இன சேர்க்கை தப்புனு நீங்க நினைச்சது கூட பார்த்த தில்லையா..." என்றேன்.
" லெஸ்பியங்குறது என்னோட பெட் ரூப் விஷ்யம். அத மத்தவங்க எட்டி பார்க்குறது தான் தப்பு. என்னோட உணர்வுகள் நான் கொலை பண்ண விரும்பல. நா எதுக்கு தைரியமா உங்களுக்கு இன்டர்வியூ கொடுத்தேனா.... என்ன மாதிரி பல பெண்கள் தங்கள் உணர்வுகள கொல்ல முடியாம ஒரு ஆண கல்யாணம் பண்ணிகிட்டு வாழுறாங்க. சில பேர் தற்கொலை பண்ணிக்கிறாங்க. என்னோட பேட்டி அவங்களுக்கு தைரியத்த கொடுக்கும்." என்று மிக துணிச்சலோடு கூறினாள்.
நான் அவளையே உற்று பார்த்தேன். அவள் முகத்தில் சலனமில்லை. குற்ற உணர்ச்சி என்பது சிறிது கூட இல்லை. அவள் உருவத்தில் மட்டுமே பெண்ணாக இருக்கிறாள். நிஜமாகவே தைரியத்தில் ஆண்ணை விட மிஞ்சியவள் என்று புரிந்துக் கொண்டேன்.
எனக்கு அவளிடம் தொடர்ந்து பேச வேண்டும் போல் இருந்தது. என் கேள்விக்கு அவள் பதில் சொல்லும் போது எனக்கு இன்னொரு கேள்வி பிறக்கிறது.
" மேடம். உங்க கிட்ட கடைசி கேள்வி....கேக்கலாம்மா...." என்றேன்.
"சொல்லுங்க...."
" உங்க பிரண்ட் இப்போ எப்படி இருக்காங்க... அவங்க புருஷனோட சந்தோஷமா இருக்காங்களா....!"
" இல்ல... அவ இன்னும் என்னை நினைச்சிட்டு அப்படியே இருக்குறா...." என்றாள்.
"அப்படியேனா.....?????? புரியல்ல..."
"இன்னும் அவ புருஷன் கூட 'உறவு' இல்லமா தான் இருக்கா...." என்றாள்.
" நீங்க தப்பா நினைக்கலேனே... உங்க பிரண்டையும் நான் இன்டர்வியூ பண்ணனும். அவங்க அட்ரஸ் போன் நம்பர் கிடைக்குமா...?" என்று கேட்டேன்.
அவள் அட்ரஸ், போன் நம்பர் கொடுக்க நீண்ட நேரம் யோசித்தாள்.
" கவல படாதீங்க. உங்கள பத்தி எழுதும் போது கற்பனை பேரு வச்சி தான் எழுதுவேன். அவங்களுக்கு, உங்களுக்கும் எந்த பிரச்சனையும் வராது. அதுக்கு நான் கிராண்டி..:" என்று அவளுக்கு என்னை பற்றின நம்பிக்கை கொடுத்தேன்.
" நா போன் நம்பர் கொடுக்கனும்னு அவசியமில்ல. என் பிரண்டு உங்க ஓய்ப் வர்ஷா தான். ரொம்ப பயந்திட்டு இருந்தா. நான் தான் அவளுக்கு தைரியம் சொல்லி உங்கள கான்ட்டேக் பண்ணி எங்க விஷயத்த பத்தி உங்களுக்கு சொன்னேன்.
" என்னது....? என் மனைவி லெஸ்பியனா........!!!!!!!!!!!" அதிர்ச்சியுடன் தலைசுற்றலும் வந்தது.
" சுந்தர் ! இப்போ என்ன முடிவுடா எடுக்க போறே...???" என்று எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன்.
சுந்தர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று நீங்களாவது சொல்லுங்கள் ????
" எனக்கு இரண்டு வயசு இருக்கும் போது அம்மா இறந்துடாங்க. அப்பா தான் என்ன வளர்த்தாரு. ஒரு ஆம்பில மாதிரி கராத்தே, ஜிம்னு எல்லாத்திலையும் என்ன என்கரேஜ் பண்ணது அப்பா தான். ஒரு ஆம்பள மாதிரி தான் என்ன வளர்த்தாரு. நானும் ஒரு ஆம்பளைக்கு இருக்குற தைரியத்தோடு வளர்ந்தேன். அதனாலையே எனக்கு ஆம்பளைங்க மேல ஈர்ப்பு இல்ல. அப்புறம், நா காலேஜ் படிக்கும் போது அவரும் இறந்துட்டாரு..."
" அடிபாவி... நா என்ன கேள்வி கேக்குறேன். நீ என்ன பதில் சொல்லுற. உன் கதை கேக்கவா இவ்வள்வு தூரம் வந்தேன்.." என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
என் முகம் ஒரு மாதிரியாக இருப்பதை உணர்ந்துக் கொண்டாள்.
" என்ன ரொம்ப போர் அடிக்கிறேனா...???"
"அப்படி எல்லாம் இல்ல..."
" நா நேரா உங்க கேள்விக்கு பதில் சொல்லுறேன். எங்க அப்பா செத்ததுக்கு அப்புறம் என் பிரண்ட்டோட அப்பா தான் என்ன படிக்க வச்சாரு. சொந்த மக மாதிரி பாத்திக்கிட்டாரு. நாங்க ரெண்டு பேரும் உண்மையான பிரண்ட்ஸ்னு அவங்க அப்பா, அம்மா ரொம்ப நம்பினாங்க. ஆனா ! எங்களுக்குள்ள பிரண்ஷிப் மீறின உறவு இருந்ததுனு அவங்களுக்கு தெரியாது..."
ரம்யா சொல்லுவதை ஒவ்வொன்றாக பேப்பரில் எழுதினேன். அவள் நான் எழுதுவதை கவனித்துக் கொண்டு மேலும் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
" என் பிரண்ட யார் தப்பா பார்த்தாலும் சரி, கிண்டல் பண்ணுலும் சரி நா அவங்கள சும்மா விட்டதில்ல. என் பிரண்ட சைட் அடிச்ச இரண்டு பசங்கள பப்ளிக் ப்ளேஸ்ல அடிச்சிருக்கேன்." என்று தன் தொழி மீது இருந்த காதலை கூறினாள்.
" உங்க ஆசைக்கு எப்படி உங்க தோழி சம்மதிச்சாங்க....??" என்றேன்.
" எனக்கு எப்படி ஆம்பளைங்க மேல் ஈர்ப்பு இல்லையோ. என் பிரண்டுக்கு ஆம்பளைங்கனா பயம்.
என் கிட்ட எல்லாத்தையும் சொல்லுவா. நா அவள தொட்டு தொட்டு பேசுறது அவளுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. ஒரு நாள் நாங்க இரண்டு பேரும் எக்ஸாமுக்கு கம்பைன் ஸ்டடி பண்ணும் போது அவங்க அப்பா, அம்மா ஊருக்கு போய் இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது 'அது' நடந்திடுச்சு. எங்க ரெண்டு பேருல நான் தான் ஆண். அவ தான் பெண்..." என்றாள்.
யப்பா...யப்பா... அவள் சொல்ல சொல்ல.. எனக்குள் எதோ செய்வது போல் இருந்தது. இவ்வளவு அழகான பெண் எந்த ஆண்ணின் மீதும் ஈர்ப்பு இல்லை என்று சொல்லும் போது ஆண் இனத்திற்கே இழப்பு என்று தோன்றியது.
" உங்க இரண்டு பேருக்கு இன்னும் 'உறவு' இருக்கா...
" இப்படி கடைசி வரைக்கும் இருந்திருலாம் நினைச்சோம். ஆனா, எங்க 'உறவு' அவங்க அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சு. என்ன வீட்ட வீட்டு அனுப்பிச்சிடாங்க. அவளுக்கும் கல்யாணம் அயிடுச்சு. " என்று தன் 'லெஸ்பியன்' கதையை சொல்லி முடித்தாள்.
எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. விபச்சாரம் வயிறு பிழைப்பு நடத்தும் தொழில் என்று சொன்னால் கூட விபச்சாரிகள் மீது ஒரு கருணை வரும். அவர்கள் கதைக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு சோகம் இருக்கும். ஆனால், ஒரு பெண் தன்னை 'லெஸ்பியன்' என்று சொல்லிக் கொள்ள அசாத்திய துணிச்சல் வேண்டும். வெளிப்படையாக அவள் சொன்ன பிறகும் இந்த சமுதாயம் அவளை எப்படி பார்க்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
"சொல்லுறேனு தப்பா நினைக்காதீங்க.... ஒவ்வொரு ஆண்ணும் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காம கஷ்டப் படுறாங்க. இப்படி பொண்ணுங்க ஆண் துணை வேண்டாம்னு நினைச்சா... நம்ப நாட்டுல அடுத்த தலைமுறைக்கு ஒண்ணு இருக்காது. " என்று நான் சொல்லி முடிப்பதற்குள் ரம்யா கோபமாக பேச தொடங்கினாள். " ஜன தொகையில இந்தியா இரண்டாவது இடத்துல இருக்கு. இப்படி நாங்க எல்லாரும் 'லெஸ்பியன்' உறவு வச்சிகிட்டாலும் இந்தியாவுக்கு இராண்டுவது இடத்துல இருந்து மூனாவது இடத்துக்கு போக ரொம்ப நாள் ஆகும்."
அவள் சொன்ன பதிலில் எனக்கு சிரிப்பு தான் வந்தது. உணர்ச்சி பூர்வமாக ஒருவர் பேசும் போது நான் சிரித்தால் நன்றாக இருக்காது என்பதற்காக அமைதியாக எனக்கு இருந்த இன்னொரு சந்தேகத்தையும் கேட்டேன்.
" ஒரு சின்ன சந்தேகம். ஒர் இன சேர்க்கை தப்புனு நீங்க நினைச்சது கூட பார்த்த தில்லையா..." என்றேன்.
" லெஸ்பியங்குறது என்னோட பெட் ரூப் விஷ்யம். அத மத்தவங்க எட்டி பார்க்குறது தான் தப்பு. என்னோட உணர்வுகள் நான் கொலை பண்ண விரும்பல. நா எதுக்கு தைரியமா உங்களுக்கு இன்டர்வியூ கொடுத்தேனா.... என்ன மாதிரி பல பெண்கள் தங்கள் உணர்வுகள கொல்ல முடியாம ஒரு ஆண கல்யாணம் பண்ணிகிட்டு வாழுறாங்க. சில பேர் தற்கொலை பண்ணிக்கிறாங்க. என்னோட பேட்டி அவங்களுக்கு தைரியத்த கொடுக்கும்." என்று மிக துணிச்சலோடு கூறினாள்.
நான் அவளையே உற்று பார்த்தேன். அவள் முகத்தில் சலனமில்லை. குற்ற உணர்ச்சி என்பது சிறிது கூட இல்லை. அவள் உருவத்தில் மட்டுமே பெண்ணாக இருக்கிறாள். நிஜமாகவே தைரியத்தில் ஆண்ணை விட மிஞ்சியவள் என்று புரிந்துக் கொண்டேன்.
எனக்கு அவளிடம் தொடர்ந்து பேச வேண்டும் போல் இருந்தது. என் கேள்விக்கு அவள் பதில் சொல்லும் போது எனக்கு இன்னொரு கேள்வி பிறக்கிறது.
" மேடம். உங்க கிட்ட கடைசி கேள்வி....கேக்கலாம்மா...." என்றேன்.
"சொல்லுங்க...."
" உங்க பிரண்ட் இப்போ எப்படி இருக்காங்க... அவங்க புருஷனோட சந்தோஷமா இருக்காங்களா....!"
" இல்ல... அவ இன்னும் என்னை நினைச்சிட்டு அப்படியே இருக்குறா...." என்றாள்.
"அப்படியேனா.....?????? புரியல்ல..."
"இன்னும் அவ புருஷன் கூட 'உறவு' இல்லமா தான் இருக்கா...." என்றாள்.
" நீங்க தப்பா நினைக்கலேனே... உங்க பிரண்டையும் நான் இன்டர்வியூ பண்ணனும். அவங்க அட்ரஸ் போன் நம்பர் கிடைக்குமா...?" என்று கேட்டேன்.
அவள் அட்ரஸ், போன் நம்பர் கொடுக்க நீண்ட நேரம் யோசித்தாள்.
" கவல படாதீங்க. உங்கள பத்தி எழுதும் போது கற்பனை பேரு வச்சி தான் எழுதுவேன். அவங்களுக்கு, உங்களுக்கும் எந்த பிரச்சனையும் வராது. அதுக்கு நான் கிராண்டி..:" என்று அவளுக்கு என்னை பற்றின நம்பிக்கை கொடுத்தேன்.
" நா போன் நம்பர் கொடுக்கனும்னு அவசியமில்ல. என் பிரண்டு உங்க ஓய்ப் வர்ஷா தான். ரொம்ப பயந்திட்டு இருந்தா. நான் தான் அவளுக்கு தைரியம் சொல்லி உங்கள கான்ட்டேக் பண்ணி எங்க விஷயத்த பத்தி உங்களுக்கு சொன்னேன்.
" என்னது....? என் மனைவி லெஸ்பியனா........!!!!!!!!!!!" அதிர்ச்சியுடன் தலைசுற்றலும் வந்தது.
" சுந்தர் ! இப்போ என்ன முடிவுடா எடுக்க போறே...???" என்று எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன்.
சுந்தர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று நீங்களாவது சொல்லுங்கள் ????
Wednesday, February 18, 2009
பாலுணர்வு கதை : அவளும் நானும் ஒர் இனம்
(இது பாலுணர்வு சம்மந்தப்பட்ட கதை மட்டுமே...! பாலுணர்வை தூண்டும் கதையல்ல...!! )
"வர்ஷா...ஆபிஸ்க்கு டைம் ஆச்சி. லன்ட்சு ரெடியா" என்று என் மனைவி வர்ஷாவை அவசர படுத்தினேன். எங்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. ஒவ்வொரு விஷயங்களையும் எனக்காக பார்த்து பார்த்து செய்வாள். என் அம்மா கூட இப்படி கவனித்ததில்லை. அன்பின் உருவாக இருந்தாள். 'அந்த' விஷயம் மட்டும் எங்களுக்குள் நடக்க வில்லை என்றாலும், அவள் காட்டிய கனிவு, புன்னகை எதிலும் கலப்படமில்லாதவை.
திருமணமான புதிதில் அவளுக்கு ‘இந்த’ உறவில் விருப்பமில்லாமல் இருந்தாள். நானும் அவளை கட்டாய படுத்தவில்லை. அதன் பின் என் வேலை தொல்லைகள் எங்கள் உறவுக்கு தடைப்போட்டது. பத்திரிக்கை நிருபரான நான் பல நாட்கள் இரவு வரை வேலை செய்ய வேண்டும். இரவு இரண்டு, மூன்று மணி கூட வீட்டுக்கு வந்திருக்கிறேன். புன்னையுடன் கதவு திறந்து என்னை வரவேற்பாள். ஒரு முறை கூட நான் காலதாமதமாக வந்ததிற்கு திட்டியதில்லை. என்னிடம் ஒர் இரு வார்த்தைகள் பேசி விட்டு தூங்கிவிடுவாள். இருவரும் ஒரே படுக்கையில் தான் படுக்கிறோம். ஆனால், உறவு கொள்வதில்லை.
வர்ஷா எனக்கு கொடுத்த லன்ட்சை எடுத்துக் கொண்டு அவசரமாக என் பத்திரிக்கை ஆபிஸ்க்கு சென்றேன்.
" என்ன சுந்தர் ! இவ்வளவு லேட்டு....??" என்றார் எடிட்டர்.
" ஏன் ஸார் ! கேக்க மாட்டிங்க. வேலைய முடிச்சிட்டு நைட் லேட்டா தான் வீட்டுக்கு போனேன். அதுக்கு பாராட்டாதீங்க. லேட்டா வந்ததுக்கு மட்டும் கேள்வி கேலுங்க..." என்று சகித்துக் கொண்டான்.
" சரி ! கோச்சிக்காத... அந்த பொண்ணுங்க எல்லாம் வைட் பண்ணுறாங்க. சீக்கிரம் போய் கவர் பண்ணு..." என்று சொல்லி எடிட்டர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
தினமும் இப்படி யாரையாவது கவர் பண்ண வேண்டிய வேலையை கொடுத்து விட்டு அவர் போய் விடுவார். எல்லாம் சரி செய்தியையும் சேகரித்த பிறகு வெட்டுவதற்கு மட்டும் சரியான நேரத்தில் வந்துவிடுவார்.
" வா சுந்தர் போவோம்மா... டைம் ஆச்சு..." என்றான் கேமிராமேன்.
" இவன் அடுத்த தொல்லை...." என்று மனதில் நினைத்துக் கொண்டு கேமிராமேனனுடன் சென்றேன்.
எங்கள் அலுவலக விருந்தினர் அறையில் காத்திருந்த பெண்களிடம் பேட்டி எடுப்பதற்காக அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்றோம். மொத்தம் ஆறு பெண்கள் இருந்தார்கள். அனைவரும் பாலியல் தொழில் செய்பவர்கள். பாலியல் தொழிலாளர்களை பற்றி ஒரு செய்தி தொகுப்புக்காக அவர்களை அழைத்திருந்தோம். பொதுவாக இது போன்ற விஷயங்களுக்கு நிருபர்கள் தேடி செல்வார்கள். என் எடிட்டருக்கு இது போன்ற விஷயங்களில் அனுபவம் அதிகம். அவர்களை அலுவகத்திற்கே அழைத்து வந்து பேட்டி எடுக்க வைத்துவிட்டார்.
அந்த ஆறு பெண்களில் இரண்டு பெண்கள் அதிக கவர்ச்சியுடன் உடை அணிந்திருந்தனர். எங்கள் இருவரையும் 'உறவுக்கு' அழைப்பது போல் அவர்கள் பார்வை இருந்தது. நான் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால், கேமராமென் அந்த இரண்டு பெண்களை வலைத்து வலைத்து போட்டோ எடுத்தான். எப்படி எடுத்தாலும் பத்திரிக்கையில் போடும் போது முகத்தை மறைத்து தான் போடுவோம். இருந்தாலும், புகைப்படம் எடுப்பது எங்கள் சம்பிரதாயம்.
ஒரு வழியாக பாலியல் தொழிலாளர்களை பேட்டி எடுத்து விட்டு நான் அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். பேட்டி கொடுத்ததற்காக எடிட்டர் அந்த பெண்களுக்கு ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினார்.
அவர்கள் கூறியதை செய்தியாக தொகுத்து எடிட்டருக்கு அனுப்பினேன். எல்லாம் வேலை முடிவதற்குள் மாலை ஆறு மணியானது. இன்றாவது வீட்டுக்கு சீக்கிரம் செல்லலாம் என்று வண்டி எடுக்க சென்றேன். என் செல்போன் மணி ஒலித்தது. எடுத்தேன்.
" ஹலோ... சுந்தர் இருக்காருங்களா.." எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்.
" ஆமாங்க.... சுந்தர் தான் பேசுறேன். சொல்லுங்க என்ன விஷயம்..." என்றேன்.
" என் பேரு ரம்யா. நீங்க பாலியல் பத்தின செய்தி போட போறதா கேள்வி பட்டேன். அத பத்தி உங்க கிட்ட பேசனும்...." என்றாள்.
இவளும் ஒரு பாலியல் தொழிலாளியாக தான் இருப்பாள். பேட்டிக் கொடுப்பதால் நூறு ரூபாய் வருகிறது என்றால் சும்மாவா ???
"ஸாரி மேடம்...! இப்போ தான் ஆறு செக்ஸ் வொர்க்கர் இன்டர்வியூ எடுத்து நீயூச் கம்போஸ் பண்ணேன். அடுத்த வீக் வேணும்னா நா உங்கள கான்டக்ட் பண்ணுறேன்..." என்றேன்.
" நான் செக்ஸ் வொர்க்கர் இல்ல.... லெஸ்பியன் !" என்றாள்.
எனக்கு தூக்கி வாறி போட்டது. 'பாலியல்' பற்றின செய்தி என்றவுடன் 'செக்ஸ் வொர்க்கர்' மட்டும் தான் நினைவுக்கு வருகிறார்கள். ஓர் இன சேர்க்கை ( லெஸ்பினயன், கே ) போன்றவர்கள் ஏன் நினைவுக்கு வருவதில்லை என்ற கேள்வி எனக்குள்ளே கேட்டு கொண்டேன். ஒரு பெண் தான் விபச்சாரி என்று சொல்வதை விட 'லெஸ்பியன்' என்று சொல்லுவதற்கு அதிக துணிச்சல் வேண்டும். கண்டிப்பா இந்த பெண்ணை இன்டர்வியூ எடுத்தே ஆகனும் என்று தோன்றியது.
" உங்கள எங்க பார்க்கலாம்...." என்றேன்.
" நுங்கபாக்கம்ல இருக்குற இஸ்பானி சென்டர்க்கு வர முடியுமா..." என்றாள்.
" பக்கத்துல தான் இருக்கீங்களா... நான் பத்து நிமிஷத்துல வந்திடுறேன்...." என்று சொல்லி வண்டியை எடுத்தேன். அவளிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை மனதில் ஒரு முறை சொல்லிக் கொண்டே வந்தேன். பத்து நிமிடத்தில் வர இடத்திற்கு ஐந்தே நிமிடத்தில் வந்து விட்டேன்.
இஸ்பானி சென்டரில் பல அழகான பெண்கள் நின்றுக் கொண்டு இருந்தார்கள். செல்போனுக்கு கால் வந்த நம்பருக்கு தொடர்பு கொண்டேன். என் எதிரில் நின்ற ஒரு பெண் தன் செல்போனை எடுத்தாள்.
" ஹலோ நான் ரம்யா பேசுறேன். வந்துடீங்களா....!!" என்றாள்.
அந்த பெண் தான் ரம்யா என்று உறுதி செய்துக் கொண்டேன்.
பக்கத்தில் இருப்பவளுக்கு போன் போட்டு அம்பது பைசா தண்டம் என்று நினைத்துக் கொண்டேன். அங்கு இருந்த ஒரு காபி ஷாப்பில் இருவரும் சென்று அமர்ந்தோம். சிம்ரன் தேகமும், ஸ்ரீ தேவி முகமும், ரம்பா உதடும் என்று மொத்த கோடம்பாக்கமே அவள் உருவத்தில் வந்து நின்றது. "ச்சே... போன வாரம். சினிமா கவரேஜ் பண்ணதுல இருந்து வர்ணனையில கூட சினிமா நடிகை தான் வரனுமா !" என் மனதில் நினைத்துக் கொண்டேன்.
" நீங்க எப்போ இருந்து லெஸ்பியனா இருக்கீங்க....?" என்றேன்.
எத்தனை வருஷமா எழுதுறீங்க, டான்ஸ் அடுறீங்க என்று கேள்வி கேட்டு தொடங்கி எனக்கு அதே மாதிரியான கேள்வி தான் அவளிடமும் வந்தது.
(தொடரும்.....
கொஞ்சம் பெரிய கதை என்பதால் அடுத்த பதிவில் முடிவடையும் )
"வர்ஷா...ஆபிஸ்க்கு டைம் ஆச்சி. லன்ட்சு ரெடியா" என்று என் மனைவி வர்ஷாவை அவசர படுத்தினேன். எங்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. ஒவ்வொரு விஷயங்களையும் எனக்காக பார்த்து பார்த்து செய்வாள். என் அம்மா கூட இப்படி கவனித்ததில்லை. அன்பின் உருவாக இருந்தாள். 'அந்த' விஷயம் மட்டும் எங்களுக்குள் நடக்க வில்லை என்றாலும், அவள் காட்டிய கனிவு, புன்னகை எதிலும் கலப்படமில்லாதவை.
திருமணமான புதிதில் அவளுக்கு ‘இந்த’ உறவில் விருப்பமில்லாமல் இருந்தாள். நானும் அவளை கட்டாய படுத்தவில்லை. அதன் பின் என் வேலை தொல்லைகள் எங்கள் உறவுக்கு தடைப்போட்டது. பத்திரிக்கை நிருபரான நான் பல நாட்கள் இரவு வரை வேலை செய்ய வேண்டும். இரவு இரண்டு, மூன்று மணி கூட வீட்டுக்கு வந்திருக்கிறேன். புன்னையுடன் கதவு திறந்து என்னை வரவேற்பாள். ஒரு முறை கூட நான் காலதாமதமாக வந்ததிற்கு திட்டியதில்லை. என்னிடம் ஒர் இரு வார்த்தைகள் பேசி விட்டு தூங்கிவிடுவாள். இருவரும் ஒரே படுக்கையில் தான் படுக்கிறோம். ஆனால், உறவு கொள்வதில்லை.
வர்ஷா எனக்கு கொடுத்த லன்ட்சை எடுத்துக் கொண்டு அவசரமாக என் பத்திரிக்கை ஆபிஸ்க்கு சென்றேன்.
" என்ன சுந்தர் ! இவ்வளவு லேட்டு....??" என்றார் எடிட்டர்.
" ஏன் ஸார் ! கேக்க மாட்டிங்க. வேலைய முடிச்சிட்டு நைட் லேட்டா தான் வீட்டுக்கு போனேன். அதுக்கு பாராட்டாதீங்க. லேட்டா வந்ததுக்கு மட்டும் கேள்வி கேலுங்க..." என்று சகித்துக் கொண்டான்.
" சரி ! கோச்சிக்காத... அந்த பொண்ணுங்க எல்லாம் வைட் பண்ணுறாங்க. சீக்கிரம் போய் கவர் பண்ணு..." என்று சொல்லி எடிட்டர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
தினமும் இப்படி யாரையாவது கவர் பண்ண வேண்டிய வேலையை கொடுத்து விட்டு அவர் போய் விடுவார். எல்லாம் சரி செய்தியையும் சேகரித்த பிறகு வெட்டுவதற்கு மட்டும் சரியான நேரத்தில் வந்துவிடுவார்.
" வா சுந்தர் போவோம்மா... டைம் ஆச்சு..." என்றான் கேமிராமேன்.
" இவன் அடுத்த தொல்லை...." என்று மனதில் நினைத்துக் கொண்டு கேமிராமேனனுடன் சென்றேன்.
எங்கள் அலுவலக விருந்தினர் அறையில் காத்திருந்த பெண்களிடம் பேட்டி எடுப்பதற்காக அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்றோம். மொத்தம் ஆறு பெண்கள் இருந்தார்கள். அனைவரும் பாலியல் தொழில் செய்பவர்கள். பாலியல் தொழிலாளர்களை பற்றி ஒரு செய்தி தொகுப்புக்காக அவர்களை அழைத்திருந்தோம். பொதுவாக இது போன்ற விஷயங்களுக்கு நிருபர்கள் தேடி செல்வார்கள். என் எடிட்டருக்கு இது போன்ற விஷயங்களில் அனுபவம் அதிகம். அவர்களை அலுவகத்திற்கே அழைத்து வந்து பேட்டி எடுக்க வைத்துவிட்டார்.
அந்த ஆறு பெண்களில் இரண்டு பெண்கள் அதிக கவர்ச்சியுடன் உடை அணிந்திருந்தனர். எங்கள் இருவரையும் 'உறவுக்கு' அழைப்பது போல் அவர்கள் பார்வை இருந்தது. நான் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால், கேமராமென் அந்த இரண்டு பெண்களை வலைத்து வலைத்து போட்டோ எடுத்தான். எப்படி எடுத்தாலும் பத்திரிக்கையில் போடும் போது முகத்தை மறைத்து தான் போடுவோம். இருந்தாலும், புகைப்படம் எடுப்பது எங்கள் சம்பிரதாயம்.
ஒரு வழியாக பாலியல் தொழிலாளர்களை பேட்டி எடுத்து விட்டு நான் அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். பேட்டி கொடுத்ததற்காக எடிட்டர் அந்த பெண்களுக்கு ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினார்.
அவர்கள் கூறியதை செய்தியாக தொகுத்து எடிட்டருக்கு அனுப்பினேன். எல்லாம் வேலை முடிவதற்குள் மாலை ஆறு மணியானது. இன்றாவது வீட்டுக்கு சீக்கிரம் செல்லலாம் என்று வண்டி எடுக்க சென்றேன். என் செல்போன் மணி ஒலித்தது. எடுத்தேன்.
" ஹலோ... சுந்தர் இருக்காருங்களா.." எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்.
" ஆமாங்க.... சுந்தர் தான் பேசுறேன். சொல்லுங்க என்ன விஷயம்..." என்றேன்.
" என் பேரு ரம்யா. நீங்க பாலியல் பத்தின செய்தி போட போறதா கேள்வி பட்டேன். அத பத்தி உங்க கிட்ட பேசனும்...." என்றாள்.
இவளும் ஒரு பாலியல் தொழிலாளியாக தான் இருப்பாள். பேட்டிக் கொடுப்பதால் நூறு ரூபாய் வருகிறது என்றால் சும்மாவா ???
"ஸாரி மேடம்...! இப்போ தான் ஆறு செக்ஸ் வொர்க்கர் இன்டர்வியூ எடுத்து நீயூச் கம்போஸ் பண்ணேன். அடுத்த வீக் வேணும்னா நா உங்கள கான்டக்ட் பண்ணுறேன்..." என்றேன்.
" நான் செக்ஸ் வொர்க்கர் இல்ல.... லெஸ்பியன் !" என்றாள்.
எனக்கு தூக்கி வாறி போட்டது. 'பாலியல்' பற்றின செய்தி என்றவுடன் 'செக்ஸ் வொர்க்கர்' மட்டும் தான் நினைவுக்கு வருகிறார்கள். ஓர் இன சேர்க்கை ( லெஸ்பினயன், கே ) போன்றவர்கள் ஏன் நினைவுக்கு வருவதில்லை என்ற கேள்வி எனக்குள்ளே கேட்டு கொண்டேன். ஒரு பெண் தான் விபச்சாரி என்று சொல்வதை விட 'லெஸ்பியன்' என்று சொல்லுவதற்கு அதிக துணிச்சல் வேண்டும். கண்டிப்பா இந்த பெண்ணை இன்டர்வியூ எடுத்தே ஆகனும் என்று தோன்றியது.
" உங்கள எங்க பார்க்கலாம்...." என்றேன்.
" நுங்கபாக்கம்ல இருக்குற இஸ்பானி சென்டர்க்கு வர முடியுமா..." என்றாள்.
" பக்கத்துல தான் இருக்கீங்களா... நான் பத்து நிமிஷத்துல வந்திடுறேன்...." என்று சொல்லி வண்டியை எடுத்தேன். அவளிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை மனதில் ஒரு முறை சொல்லிக் கொண்டே வந்தேன். பத்து நிமிடத்தில் வர இடத்திற்கு ஐந்தே நிமிடத்தில் வந்து விட்டேன்.
இஸ்பானி சென்டரில் பல அழகான பெண்கள் நின்றுக் கொண்டு இருந்தார்கள். செல்போனுக்கு கால் வந்த நம்பருக்கு தொடர்பு கொண்டேன். என் எதிரில் நின்ற ஒரு பெண் தன் செல்போனை எடுத்தாள்.
" ஹலோ நான் ரம்யா பேசுறேன். வந்துடீங்களா....!!" என்றாள்.
அந்த பெண் தான் ரம்யா என்று உறுதி செய்துக் கொண்டேன்.
பக்கத்தில் இருப்பவளுக்கு போன் போட்டு அம்பது பைசா தண்டம் என்று நினைத்துக் கொண்டேன். அங்கு இருந்த ஒரு காபி ஷாப்பில் இருவரும் சென்று அமர்ந்தோம். சிம்ரன் தேகமும், ஸ்ரீ தேவி முகமும், ரம்பா உதடும் என்று மொத்த கோடம்பாக்கமே அவள் உருவத்தில் வந்து நின்றது. "ச்சே... போன வாரம். சினிமா கவரேஜ் பண்ணதுல இருந்து வர்ணனையில கூட சினிமா நடிகை தான் வரனுமா !" என் மனதில் நினைத்துக் கொண்டேன்.
" நீங்க எப்போ இருந்து லெஸ்பியனா இருக்கீங்க....?" என்றேன்.
எத்தனை வருஷமா எழுதுறீங்க, டான்ஸ் அடுறீங்க என்று கேள்வி கேட்டு தொடங்கி எனக்கு அதே மாதிரியான கேள்வி தான் அவளிடமும் வந்தது.
(தொடரும்.....
கொஞ்சம் பெரிய கதை என்பதால் அடுத்த பதிவில் முடிவடையும் )
Subscribe to:
Posts (Atom)