வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Roman Polaski. Show all posts
Showing posts with label Roman Polaski. Show all posts

Friday, October 31, 2014

THE GHOST WRITER (2010)

Roman Polanski யின் Carnage படத்தைப் பற்றி பதிவிடும் போது ’கோஸ்ட் ரைட்டர்’ படத்தை பற்றிய சில குறிப்புகள் சொல்லியிருந்தேன்.

ஒரு படத்தை விவாதிக்கும் போது அந்த படத்தின் கதையை முழுவதுமாக சொல்லக் கூடாது என்று நினைப்பவன் நான். அதுவும் மர்ம படங்கள் என்றால் முக்கியமான மர்ம முடிச்சை பற்றி வெளியே சொன்னால் ஸ்வாரஸ்யம் போய்விடும் என்று சொல்வதில்லை. ஆனால், ’கோஸ்ட் ரைட்டர்’ படத்தைப் பற்றி பேசும் போது கண்டிப்பாக இந்த இரண்டையும் சொல்லிதான் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், அந்த படத்தின் பின்னிருக்கும் அரசியல் களன்.


ஆரம்பக் காட்சியில், மர்மமான முறையில் ஒரு எழுத்தாளர் இறந்ததில் இருந்து படம் தொடங்குகிறது. அந்த எழுத்தாளர் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் அடம் லாங்யின் வாழ்க்கை வரலாற்றை எழுத வந்தவன். அமெரிக்கத் தொடுத்த போரில் பிரிட்டன் பிரதமராக இவர் ஆதரித்திருக்கிறார். அதனால், ‘போர் குற்றவாளி’ என்று இவரது அமைச்சரவையில் இருந்தவர்களே விமர்த்தார்கள். தனது வாழ்க்கை வரலாறு நூல் மூலம் அனைத்து விமர்சனத்திற்கும் பதில் கூற வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், அடம் லாங் தனது வாழ்க்கை வரலாற்றை எழுத புது எழுத்தாளரை நியமிக்கிறார்.

முன்னாள் பிரதமர் வாழ்க்கை வரலாற்றை எழுத 'கோஸ்ட்' வருகிறார். அதாவது, பிரதமர் எழுதுவது போல் அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும். புத்தகத்தில் பிரதமரின் பெயர் இருக்கும். எழுதியவரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படாது. புது எழுத்தாளர் முன்னாள் பிரதம மந்திரி ஒய்வு விடுதியில் தங்க வைக்கப்படுகிறார். தனது ஓய்வு நாட்கள் முடிவதற்குள், புத்தகத்திற்கு தேவையான தகவலை பெற்று எழுத வேண்டும் என்று அடம் லாங் சொல்கிறார்.

முன்பு வந்த எழுத்தாளர் பாதிக்கு மேல் முடித்து வைத்திருந்ததார். இருந்தாலும் அது முழுமையானதாக இல்லை. ஆரம்பத்தில் இருந்து புதிதாக தொடங்க வேண்டும் என்கிறார். அங்கு இருந்து எந்த குறிப்புகள் வெளியே எடுத்தச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த ஓய்வு விடுதியில் நடக்கும் சில விஷ்யங்கள் அவனுக்கு மர்மமாக இருக்கிறது.

இறந்துப் போன எழுத்தாளர் இறக்கும் முன் பிரதம மந்திரியோடு வாக்குவாதம் செய்திருக்கிறான். தன் மேல் சுமத்த பட்ட போர்க் குற்றத்திற்கு புத்தகத்தில் விளக்கம் சரியாக அளிக்கவில்லை என்று கோஸ்ட் நினைக்கிறான். இறந்த எழுத்தாளர் காரில் சாகும் போது ஹார்வட் பேராசிரியரை பார்த்துவிட்டு வந்திருக்கிறார். கோஸ்ட்டும் அந்த பேராசிரியரை சந்தித்து என்ன நடந்தது என்று விசாரிக்கிறான்.

இதற்கிடையில், முன்னாள் பிரதம மந்திரி அடம் லாங்யின் மனைவியோடு கோஸ்ட்டுக்கு நெருக்கம் ஏற்ப்படுகிறது. அவள் மூலம் சில தகவல்கள் கோஸ்ட் தெரிந்துக் கொள்கிறான்.

பல முக்கிய அரசியல் தகவல் தெரிந்துக் கொண்ட கோஸ்ட் முன்னாள் பிரதமர் அடம் லாங்கிடம் சொல்லலாம் என்று நினைக்கும் போது போருக்கு எதிராக போராட்டக்காரர்களிடம் இருந்த ஒருவன் அவரை சுட்டுக் கொண்டு விடுகிறான். காவலர்களும் சுட்டவனை கொன்று விடுகிறார்கள். முன்னாள் பிரதமர் மீது ‘போர் குற்றம்’ இருந்த நிலையில் அவர் இறந்தது பெரிய சர்ச்சையை கிளப்புகிறது.

அடம் லாங் இறப்பதகு முன் எழுதிய நூல் என்பதால், அவரது வாழ்க்கை வரலாறு விற்பனையில் சாதனை படைக்கிறது. இறந்த பழைய எழுத்தாளரின் சில குறிப்புகள் புத்தகத்தில் சேர்க்கப்பட்டாமல் இருந்தது. கோஸ்ட் அந்த இறந்த எழுத்தாளரின் குறிப்புகள் மீண்டும் ஒரு முறை பார்க்கும் போது ஒரு தகவல் கிடைக்கிறது. அதை கண்டதும் அதிர்க்கிறான்.

"முன்னாள் பிரதமரின் மனைவி சி.ஐ.ஏ ஏஜேன்ட். அவளை ஹார்வர்ட் பல்கலலைக்கழகத்தில் இருப்பவர் பயன்படுத்திக் கொண்டார்" என்று இருக்கிறது. அதாவது, பிரிட்டன் பிரதமரின் மனைவி உதவி மூலம் தங்கள் தேவைக்கு ஏற்றார் போல் அமெரிக்கா பயன்படுத்தி கொண்டது. அவரை போர் குற்றம் செய்ய வைத்திருக்கிறது. தனக்கு இந்த உண்மை தெரிந்துவிட்டது என்பதை ஒரு பேப்பரில் எழுதி பிரதமர் மனைவிக்கு கொடுக்கிறான்.

கோஸ்ட் வெளியே செல்லும் போது, விபத்து நடந்தது போல் சத்தம் கேட்கிறது. கோஸ்ட் கையில் இருந்த காகிதங்கள் பறக்க, நடைப்பாதையில் நடந்தவர்கள் அதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

அரசியலில் எத்தனையோ மர்மங்கள் இருக்கிறது. அரசியல் கொலைகளில் அதைவிட மர்மங்கள் நிறைந்திருக்கிறது. மோகந்தாஸ் காந்தி படுகொலை, ஜென்னடி படுகொலை தொடங்கி இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி படுகொலை வரை இன்னும் எத்தனையோ படுகொலைகளில் தெரியப்படாத உண்மைகள் இருக்கின்றன. அதை அறிந்து கொள்ள ஸ்வரஸ்யம் இருக்கும். அதே சமயம் அதன்பின் ஆபத்தும் இருக்கிறது.

சில அரசியல் உண்மைகள் சாமான்யனுக்கு தெரியக் கூடாது. அதை தான் எல்லா அரசாங்கம் விரும்பும். அப்படி தெரிந்துக் கொண்டால் தற்கொலையும், விபத்துக்களும் இந்த படத்தில் முடிவில் வருவது போல் தான் நடக்கும்.

அமெரிக்காவை விமர்சனம் செய்வது போல் இருந்ததால் இந்த படம் ஆஸ்கருக்கு பரிசீலனை செய்யப்படவில்லை. ஆனால், மற்ற இடங்களில் பல விருதுகள் வாங்கி இருக்கிறது. 

இந்த படத்தை யாரும் இந்திய மொழியில் எடுக்க முடியாது. எடுத்தால் தடைவிதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ( இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக சொன்னதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.)

Thursday, October 9, 2014

Roman Polaski இயக்கிய Carnage (2011)

"சம்சாரம் ஒரு மின்சாரம்" படத்தை போல் ஏன் உங்களால் மீண்டும் ஒரு படத்தை இயக்க முடியவில்லை” என்று இயக்குனர் விசுவிடம் ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு விசு, "அந்த படத்தை இயக்கும் போது விசு ஒரு சராசரி டைரக்டர். பஸுல தான் போவேன். நிறைய ஜனங்க கிட்ட பேசுவேன். அவங்க கஷ்டத்த பத்தி கேட்பேன். இப்போது இருக்கும் விசு பணக்காரன். கார்ல தான் போரான். பணக்காரங்க கிட்ட தான் அதிகம் பழக வேண்டியதாக இருக்குது. அதனால சராசரி குடும்ப பிரச்சனை இப்போ அவனால எடுக்க முடியல" என்றார்.

ஒவ்வொரு இயக்குனருக்கு இப்படி ஒரு "Saturation Point" இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவில் இந்த "Saturation Point" இருந்து இயக்குனர்கள் மீண்டு வந்திருக்கிறார்களா என்பது சந்தேகம். கே.பாலசந்தர், பாரதிராஜா, பாக்கிராஜ் போன்ற பெரிய இயக்குனர்கள் கூட அந்த “Saturation Point”ல் சரி செய்ய முடியாமல் சின்னத்திரைக்கு சென்றுவிட்டார்கள்.

ஆனால், ஒரு சில இயக்குனர்கள் ஆராம்பக் கால தோல்விகளில் இருந்து மீண்டு வந்து பெரிய இயக்குனர்களாக வந்திருக்கிறார்கள். அவர்களின் குறிப்பிட தகுந்தவர் ரோமன் போளாஸ்கி.

**


நான்கு பேர். ஒரு வீட்டில் படத்தை முடிக்க வேண்டும். உடனே பிட்டு படம் தான் எடுக்க வேண்டும் என்று கிண்டலாக நினைக்க தோன்றும். அதையும் தாண்டி இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று யோசிக்க வைக்கிறார் ரோமன் போளாஸ்கி.

தலைப்பு போடும் போது ஒரு பூங்காவில் ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனை பேஸ்பால் பேட்டால் அடித்துவிடுகிறான்.

அடுத்த காட்சி, ஒரு பிளாட்டில் அடிவாங்கிய சிறுவனின் பெற்றோரிடம் சமரசம் செய்து, அவர்கள் மன்னித்துவிட்டதாக கடிதம் பெற அடித்தவனின் பெற்றோர்கள் வருகிறார்கள். ஆரம்பத்தில் இரண்டு பெற்றோர்களும் சமரசமாக பேச, பிறகு ஒரு வார்த்தை இரண்டு பெண்களுக்குள் சண்டை வருகிறது.

இரண்டு பெண்கள் போடும் சண்டையை கணவன்மார்கள் தடுத்து சமரசம் செய்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஒருவரின் வளர்ப்பை இன்னொருவர் குறை சொல்கிறார்கள். மீண்டும் சண்டை வருகிறது. இரண்டு பெற்றோர்களின் சண்டை ஒரு கட்டத்தில் தம்பதியர்களுள்ளே வாக்குவாதத்தை உருவாகிறது. இத்தனை நாள் தம்பதியர்களுக்குள் இருந்த விரக்தியும் வெளிப்படுகிறது. நடுவில் தொலைப்பேசி வந்து தொல்லைக் கொடுகிறது.

75 நிமிடங்கள் ஒரே ப்ளாட்டில் நான்கு பேருக்கும் நடக்கும் வாக்குவாதம் தான் படம். ஒவ்வொரு முறையும் பிரச்சனை தீர்ந்தது என்று நினைக்கும் போது, எதோ ஒரு வார்த்தை மீண்டும் பிரச்சனையை உருவாக்கிறது. கடைசியில் எப்படி சமரசமாக போகிறார்கள் என்று ஆர்வத்திலையே படத்தை முடித்திருக்கிறார்.

 பெரியவர்கள் பேசும் போது சிறுவர்கள் தலையிடக் கூடாது என்று எப்படி சொல்கிறோமோ, சிறுவர்களின் சண்டையில் பெரியவர்கள் தலையிடக் கூடாது. அதையும் மீறி தலையிட்டால் பெரியவர்கள் சண்டையாக மாறிவிடும் என்பதை இந்தப் படம் காட்டுகிறது. டைட்டானிக் கனவு தேவதை கேட் வின்செண்ட் ஒரு சிறுவனுக்கு அம்மாவாக பார்க்க வைத்தது சங்கடமாக இருந்தது. மற்ற மூன்று நடிகர்கள் தொலைக்காட்சி தொடரில், படங்களில் சிறு வேடத்தில் நடிப்பவர்கள்.

**

ரோமன் போளாஸ்கி ஆரம்பக் காலத்தில் ஹிட்ச்காக் போலவே பல மர்மப்படங்களை இயக்கினாலும் அவர் அளவுக்கு இவரால் புகழ் பெற முடியவில்லை. ‘சைனா டவுன்’ மட்டுமே அவருக்கு ஆஸ்கர் விருது பெற்று தந்தது. “ரோஸ்மேரி பேபி” பலரது பாராட்டுக்குறிய படமாக இருந்தது.

மூன்று ஆஸ்கர் விருது பெற்ற பியானிஸ்ட் (Pianist – 2002 ) படத்திற்கு பிறகு ரோமன் போலாஸ்கியின் படங்கள் அதிக கவனம் பெற தொடங்கின. அதன் பிறகு அவரது முந்தைய படங்களும் பலர் பேசப்பட்டது.

2010ல் இவர் இயக்கிய ‘கோஸ்ட் ரைட்டர்’ (Ghost Writer) படத்தை யாராவது இந்திய மொழியில் படம் எடுத்தால், கண்டிப்பாக தடைவிதிப்பார்கள். அதிபரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வரும் எழுத்தாளர், அந்த அதிபர் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுப்பிடிப்பது தான் படம். இந்திய அரசியல் சூழலை எடுத்துக் கொண்டால் ராஜிவ் காந்தி, சோனியா காந்தியை தான் நினைவுப்படுத்தும்.

இப்போது ரோமன் போலாஸ்கிக்கு 81 வயதாகிறது. ‘Carnage’ படம் எடுக்கும் போது அவருக்கு 78 வயது. இந்த வயதில் எப்படியெல்லாம் யோசிக்கிறார் வியக்காமல் இருக்க முடியாது. இன்னும் திரைத்துறையில் இருந்து ஓய்வு பெறாமல் இயக்கிக் கொண்டு இருக்கிறார்.

10, 20 லட்சத்தில் படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் சரியான வசனங்களுடன் ’Carnage’ படத்தை தமிழில் எடுக்க முயற்சிக்கலாம். அதேப் போல் Low Budget படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் ரோமன் போளாஸ்கியின் ஆரம்பக் கால மர்ம படங்களை பார்க்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பிலே பல படங்களை இயக்கியிருக்கிறார். 

பின் குறிப்பு : 
நீங்களே மற்ற படங்களை தமிழில் எடுக்கலாம் என்று ஏன் பரிந்துரை செய்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். 

நல்ல படங்களை பரிந்துரை செய்யாததால் தான் மோசமான படங்களை தமிழாக்கம் செய்து பார்வையாளாரான நம்மை கஷ்டப்படுத்துகிறார்கள். அதற்கு நாமலே நல்ல படங்களை இயக்குனர்கள் எடுத்து சொல்வோம்.

அது மட்டுமில்லாமல் இயக்குனர்கள் காப்பி அடித்து படம் எடுப்பதால் தான் நம்மால் பேஸ்புக், டிவிட்டரில் எழுத முடிகிறது. அதை நாம் மறந்திவிடக் கூடாது.

LinkWithin

Related Posts with Thumbnails