வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன். Show all posts
Showing posts with label ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன். Show all posts

Tuesday, September 15, 2015

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் - 5 : இரண்டாம் கெய்சரின் மரணம்

1941. 

இரண்டாம் உலகப் போர் பரப்பரப்பாக நடந்துக் கொண்டு இருந்த சமயம். நாலாகப் பக்கமும் ஜெர்மனியின் நாஜி கொடி வெற்றிக் கரமாக பரந்துக் கொண்டிருந்த நேரம். ஹிட்லர் சாதாரண மனிதரில்லை. நிஜமாகவே ஜெர்மனியை ரட்சிக்க வந்த தேவதூதன் என்று சொல்லும் அளவிற்கு வெற்றிகள் குவிந்தது அல்லது அதற்கான அறிகுறியாவது தெரிந்துக் கொண்டு இருந்தது. 

ஹிட்லர் தளபதிகளுடன் யுத்தத்தை குறித்து ஆலோசனை செய்துக் கொண்டு இருந்தார். அப்போது, ஒருவன் ஹிட்லரின் அனுமதிப் பெற்று உள்ளே வந்தார்.

“ஹெயில் ஹிட்லர்” என்று சொன்னப்பிற்கு தனது கையில் இருக்கும் காகிதத்தை ஹிட்லரிடம் கொடுத்தார். அதை திறந்து படிக்கும் போது ஹிட்லர் அதிர்ச்சியடைந்தார். 

அந்த செய்தி யுத்தத்தை குறித்து எதாவது இருக்கிறதா என்று ஹிட்லரின் தளபதிகள் கேட்டனர். ஆனால், அவர் அமைதியாக இருந்தார். 

சிறிது நேரம் கழித்து மௌனமாக தனது தளபதிகள், “ஜெர்மனியின் மன்னர் இரண்டாம் கெய்சர் காலமானார்” என்றார். 

ஹிட்லரோடு இருந்த தளபதிகளுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி என்பதை விட வியப்பாக இருந்தது. அதற்கு காரணம்…. கெய்சரின் மரணச் செய்தி அல்ல… ஹிட்லரின் நடவடிக்கை. 



இறந்துப் போன கெய்சருக்கு 81 வயது இருக்கும். முதல் உலகப் போர் முடிந்ததும், ஜெர்மனி முழுவதுமாக சரணந்து, பொருளாதாரத்தில் அதாளப்பாதத்தில் தள்ளி விட்டுவிட்டு நெதர்லாந்தில் குடிபெயர்ந்துக் கொண்டார். ஒவ்வொரு நாளும் ஜெர்மன் மக்கள் பசியிலும், பஞ்சத்திலும் மாண்டுக் கொண்டு இருந்தனர். அந்த நிலையிலும், பிரான்ஸூக்கு முதல் உலகப்போரில் நஷ்ட ஈடுக் கொடுப்பதை பற்றி ஜெர்மனிக்கு ஆணை வந்துக் கொண்டு இருந்தது. 

தன்னால் ஜெர்மனி பெரிய நஷ்டத்தை சந்தித்தது நினைத்து கெய்சர் கவலைப்படவில்லை. நெதர்லாந்தில் சந்தோஷமாக இருந்தார். எதோ ஹில்டர் தலைத்தூக்கிய பிறகு ஜெர்மனி வேகுண்டு எழுந்திருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது. 

முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்கள், கம்யூனிஸ்டுகள் என்று சர்வக் காலமும் சொல்லிக் கொண்டு இருக்கும் ஹிட்லர் கெய்சர் மீது மரியாதை வைத்திருந்தார். 

“அவர் மன்னராக இருக்கும் போது அவர் படையில் இராணுவ வீரனாக இருந்திருக்கிறேன். சரணாகதியை எந்த மன்னரும் விரும்ப மாட்டார். ஜெர்மனி சரணடைய வேண்டும் என்று முடிவு எடுக்கும் போது அவர் மனம் எவ்வளவு பாடுப்பட்டிருக்கும். பல தலைமுறைகளாக ஆண்டவர்களுக்கு மனம் துவண்டுப் போய்யிருக்கும்” என்று ஹிட்லர் அவருக்காக வருந்தினார்.

ஹிட்லருக்கு யூதர்கள், கம்யூனிஸ்டுகள் மீது இருக்கும் கோபத்தில் பாதிக் கூட மன்னர் மீது இல்லை. இரக்கமும், அனுதாபம் மட்டுமே இருக்கிறது. யூதர்களின் சூழ்ச்சியால் தானே அவர் போரில் சரணடைய வேண்டியதாக இருந்தது. இல்லையென்றால், மன்னர் இறுதி வரைப் போராடிப்பார் என்று ஹிட்லரின் கருத்தாக இருந்தது. 

அது மட்டுமில்லாமல், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள் யுத்தத்தை தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள். மன்னர் யுத்தத்தின் ஒவ்வொரு போக்கையும் தீர்மாணித்தவர்.

 என்ன தான் இருந்தாலும், அவர் ஜெர்மனியில் மன்னர். ஜெர்மனியின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், நாகரிகத்திற்கும் மன்னரின் குடும்பம் அரும்பாடுப்பட்டிருக்கிறது. அதற்கு ஜெர்மனியியும், நாஜி வீரர்கள் என்றும் கடமைப்ப்பட்டிருக்கிறது. 

ஜெர்மனியை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றாலும், ஜெர்மனைப் பார்த்து பல நாடுகள் அஞ்சினாலும், பெரிய சர்வதிகாரியாக ஹிட்லர் திகழ்ந்தாலும்… அவரை தன் நாட்டின் மன்னராக தான் நினைத்தார். 

”இறந்த மன்னரின் கெய்சரின் உடலை ஜெர்மனுக்கு எடுத்து, தகுந்த அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்” என்று ஹிட்லர் கூறினார். 

 ”யுத்த வேலைகள் ஆயிரம் இருக்கிறது. எவ்வளவு இராணுவப் படை அனுப்ப வேண்டும், எங்கு என்ன ஆயுதம் அனுப்ப வேண்டும், திட்டங்கள் வகுக்க வேண்டும், தாக்குதல் பற்றி பேசியாக வேண்டும். இதைப் பற்றியெல்லாம் பேசுவதை விட்டு, சராசரி அரசியல்வாதிப் போல் ஓடிப்போன மன்னரை ஜெர்மனிக்கு எடுத்து வந்து அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறாரே. இது இப்போதைக்கு தேவையா. அவருக்காக ஹிட்லர் மரியாதை செலுத்தினாலும், அவர் மீது இருக்கும் விமர்சனம் மாறிவிடப் போகிறதா” என்பது ஹிட்லரின் தளபதிகள், வேலையாட்கள் நினைத்துக் கொண்டனர். ஒருவருக்கும் ஹிட்லர் முன் நின்று பேச தைரியமில்லை.

ஜெர்மனியில் முதல் உலகப் போரின் தோல்வியின் வஞ்சம் தான் இரண்டாம் உலகப் போர் என்று சொல்லி வந்த நிலையில், இரண்டாம் கெய்சர் மீது ஹிட்லருக்கு இருந்த மரியாதையை இதை காட்டுகிறது. 

ஆனால், இரண்டாம் கெய்சர் ஜெர்மனிக்கு செல்வதை விரும்பவில்லை. ஜெர்மன் துருப்புகள் மீது வெறுப்பு கொண்டிருந்தார். எக்காரணத்திற்காகவும் தனது உடல் ஜெர்மனுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று கூறியிருந்தார். அவரின் விருப்பப்படி அவர் இறந்தப் பிற்கு அவரது உடலை ஜெர்மனுக்கு அனுப்பப்பாமல் நெதர்லாந்திலேயே அடக்கம் செய்தனர். இருந்தாலும், நாஜிகள் அவருக்கு செலுத்த வேண்டிய இறுதி மரியாதையை செலுத்தினர். 

ஹிட்லர் ஜெர்மனியை பெரிய வல்லரசாக மாற்றப் போவதை பார்க்காமல் இரண்டாம் கெய்சர் இறந்துவிட்டார் என்ற வருத்ததை போக்க தான், அவரது உடலாவது ஜெர்மனியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதை அவர் விரும்பவில்லை என்ற வருத்தத்தை காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை இரண்டாம் உலக யுத்தம் அவரின் நேரத்தை எடுத்துக் கொண்டு இருந்தது. 

முன்னாள் ஜனாதிபதிக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற ஒரு அரசியல் தலைவர் கண்ணீர் சிந்தி அழும் போது, நடிக்கத் தெரியாத மனிதர் என்று இணையதளம் புகழாரம் சூட்டினார்கள். அவர் நல்லவர் என்றால், பல வச்சரசு நாடுகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் போது தனது பழைய மன்னருக்கு இறுதி மரியாதைக் கொடுக்க நினைப்பது அதை விட பெரிய உயர்ந்த குணம்.

உதவியது :

Inside the Third Reich - Albert Speer
ஹிட்லர் : சொல்லப்படாத சரித்திரம் - முகில்

 https://en.wikipedia.org/wiki/Wilhelm_II,_German_Emperor

Thursday, April 18, 2013

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் – 4: ஜெர்மானியர்கள் நடத்திய யூத இனப்படுகொலை

பாகம் - 1, பாகம் -2, பாகம் -3 

யாரோ ஒரு கும்பல் ஒரு தலைவரை கொல்லப்படுகிறார் என்றால் அந்த குழுவுக்கு எதிராக அந்த தலைவர் செயல்ப்படுகிறார் என்று அர்த்தம். அல்லது அந்த குழுவுக்கு எதிரான கொள்கைக்கு ஆதரவு அளிக்கிறார் என்று அர்த்தம். மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, லிங்கன் என்று எல்லா அரசியல் கொலைகளும் இந்த இரண்டு காரணங்களில் அடங்கிவிடும். மூன்றாவது ஒரு காரணம் இருக்கிறது. கொலை முயற்சி வெற்றி பெற்றால் பெரும்பாலும் இந்த காரணங்கள் வெளியே தெரிவதில்லை. ( உதாரணத்திற்கு, சஞ்சய் காந்தி மரணம்). அதே கொலை முயற்சி தோல்வி அடைந்தால் அதற்கான காரணம் வெளியே தெரிய வரும், அப்படி கொலை முயற்சி தோல்வி அடைந்ததில் ஹிட்லருக்கு தன்னை சுற்றி இருப்பவர்கள் புரிய வைத்தது.

ஹிட்லரை கொல்ல நினைத்தது யூதர்களோ, கம்யூனிஸ்டுகளோ, நேச நாட்டு உளவாளிகளோ இல்லை. ஹிட்லருடன் பக்க பலமாக இருந்த ஜெர்மனிய ஜெனரல். அதிஷ்டவசமாக ஹிட்லர் தப்பினாலும், அவருடன் இருக்கும் சில பாதுகாவலகளும், இராணுவ தளபதிகளும் கொல்லப்பட்டார்கள்.

அந்த சம்பவத்துக்கு பிறகு ஹிட்லரின் அழிவை விரும்புபவர்கள் ஏராளமான அதிகாரிகளும் இராணுவ தளபதிகளும் இருக்கிறார்கள் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் நிரூபணாமாகியிருக்கிறது. ஆனால், அந்த தளபதிகள் போருக்கு எதிரானவர்கள் என்பதை ஆராய வேண்டும்.

மனித உயிர்களுக்கு மதிப்பு கொடுப்பதாக இருந்தால், ஹிட்லரின் தளபதிகள் யூத உயிர்களை கொல்லுவதற்கு பல தொழிற்நுட்பத்தை கண்டுபிடித்திருக்க மாட்டார்கள். வதை முகாம்களுக்கு ஹிட்லர் எள் என்றால் எண்ணெய்யாக நின்று இருக்க மாட்டார்கள். ஹிட்லரின் கட்டளைக்கு ஆதரவு தெரிவிக்காமல் போராட்டமோ, கிளர்ச்சியிலோ யாரும் இறங்கவில்லை. ஹிட்லரின் கட்டளையை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் மனதில் இருக்கும் வன்மத்தையும் சேர்த்து தான் யூதர்கள் மேல் செலுத்தினார்கள்.


ஹிட்லர் தவறு செய்யவில்லை, அவர்கள் தளபதிகள் தவறு செய்தார்கள் என்கிறீர்களா ? என்று கேட்கலாம். அப்படி சொல்லவில்லை. ஒரு நல்ல திட்டத்தை அரசு கொண்டு வருவதாக அதை செயல்படுத்த அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிதாக இருக்கும் போது யூத அழிவு திட்டத்தை எப்படி அவ்வளவு கட்சிதமாக நிறைவேற்ற முடிந்தது என்பதை யோசிக்க வேண்டும்.

இன்று, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை எடுத்துக் கொள்வோம். ராஜபக்ஷே என்ற தனி மனிதனை எதிர்த்தா போராட்டம் நடக்கிறது. ராஜபக்ஷே இல்லை என்றால் தமிழர்களுக்கு விடிவுக்காலம் பிறந்துவிடுமா ? பல வருடங்கள் மேல் நடக்கும் ஈழப் போராட்டத்தில் எத்தனையோ அதிபர், பிரதமர்கள் சந்தித்துவிட்டார்கள். யாரும் தமிழர்கள் உயிர்களை மதிக்கவில்லை என்பது தான் உண்மை. தங்கள் நாட்டிலே பல உயிர்கள் இறப்பதை எந்த சிங்கள கட்சியோ, அமைப்போ எதிர்த்து பேசவில்லை. ஆக, சிங்களர்களின் எண்ணத்தை ராஜபக்ஷே பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறார். தமிழர்களின் இனப்படுகொலையில் ‘ராஜபக்ஷே’ என்ற தனிமனிதன் மீது சிங்களர்கள் தப்பித்துவிட முடியாது.

அதேப் போல், யூத இனப்படுகொலையில் ‘ஹிட்லர்’ என்ற தனி மனிதன் மீது ஒட்டு மொத்த பழியையும் போட முடியாது. யூத இனப்படுகொலையை நடத்தியது ஜெர்மனியர்கள்…. ஹிட்லர் என்ற தனிமனிதன் அல்ல.

கொலைவெறி, யூத வன்மம் கொண்ட ஜெர்மனிய இராணுவ தளபதிகள் ஹிட்லரை கொன்று அமைதியா கொண்டு வந்திருப்பார்கள் ? இன்னொரு இராணுவ அதிகாரியை சர்வதிகாரியாக பதவியில் அமர்த்தி நேச நாடுகளோடு உடன்படிக்கை செய்து மேலும் பல கொடுமைகள் செய்திருப்பார்கள்.

ஹிட்லர் மீது இருக்கும் மிக பெரிய பழியே யூத இனப்படுகொலை தான். ஆனால், இந்த பழியை ஒட்டுமொத்த ஜெர்மானியர்கள் சுமக்க வேண்டும், ஹிட்லர் என்ற தனிமனிதனில்லை என்பதை விளக்கியிருக்கிறேன்.

தமிழர்கள் ஒரு பக்கம் இனப்படுகொலையில் இறக்கிறார்கள். பலர் இனப்படுகொலைக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இவன் என்ன காலவதியான யூத இனப்படுகொலைக்கும், அதுவும் ஹிட்லருக்கு வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கிறான் என்பதை உங்கள் உள் உணர்வு கேட்பது புரிகிறது. முந்தைய இனப்படுகொலையின் சரியான புரிதல் இல்லாமல் இருந்ததற்கான காரணம் தான், இன்று இனப்படுகொலை உலகமயமாக்கி விட்டது. இன்று, ஒவ்வொரு கண்டத்திலும் இனப்படுகொலை சம்பவம் நடந்திருக்கிறது. நடந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், இனப்படுகொலைக்காக ஹிட்லர் மட்டும் தான் இதில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

உயிருடன் இருந்து இனப்படுகொலையில் எத்தனையோ பேர் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். ஐ.நா முதல் கொண்டு பல உலக நாடுகள் அமைதியாக இருக்கிறது. இவர்களை காட்டிலும் ஹிட்லர் நல்லவர் தான்.

**

குறிப்பு :

ஒரு பக்கம் இனப்படுகொலை பற்றி கட்டுரை எழுதுபவன், இன்னொரு பக்கம் யூத இனப்படுகொலை செய்த ஹிட்லருக்கு ஆதரவாக எழுதுகிறான் என்று நீங்கள் என்னை விமர்சிக்கலாம். இனப்படுகொலையை எந்த உருவத்தில் நடந்தாலும் அதை என்னால் ஆதரிக்க முடியாது.

யூத இனப்படுகொலையின் நம்முடைய தவறான புரிதலும், ஹிட்லரையே நல்லவராக்கிவிட்டவர்கள் இன்றைய அரசியல் சூழலில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டவே "ஹிட்லரும் நல்லவர் தான்" என்ற தொடரின் நோக்கம். 


Thursday, May 17, 2012

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் - 3 : ஸ்விஸ் வங்கி பணத்தை மீட்ப்பு

பாகம் - 1, பாகம் -2

ஹிட்லர் இருபதாம் நூற்றாண்டின் ராஜபக்சே. இந்த உலகில் எல்லா நாடுகளில் இருந்து இவரை பற்றிய புத்தக வந்துள்ளது. யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலக போரும் நீக்கிவிட்டு ஹிட்லர் வரலாறு பார்த்தால் நிச்சயம் அவர் ஒரு வரலாற்று நாயகன். அவர் செய்த மிக பெரிய இரண்டு தவறு அவரின் சாதனையை மறைத்துவிட்டது.

உலக நாடுகளுக்கு வில்லனாக இருந்த அவர் ஜெர்மனியர்களுக்கு நாயகன் என்பதற்கு ஒரு சுவையான தகவல்.

1929ல் வால் ஸ்டிரீட் வர்த்தகத்தில் ஏற்பட்ட கடும் சரிவும், ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கமும், மக்கள் பலர் வேலை இழந்தனர். பணக்காரர்கள் தங்கள் பணத்தை வரியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைத்தனர்.

1933ல் பதவிக்கு வந்த ஹிட்லர் தனது நாட்டின் பணம் அந்நிய நாட்டில் இருப்பது அவரை கோபப்படுத்தியது. தனது வழக்கமான ஸ்டைலில் ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் மரண தண்டனை என்று அறிவித்தார்.


ஒரு தனி குழு அமைத்து ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் பண முதலைகளை கண்டு பிடித்தார். வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணங்களை தன் நாட்டு கொண்டு வந்து, பதுக்கியவர்களுக்கு மரண தண்டனை வழங்கினார். இதில் ஜெர்மனியர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யூதர்கள். ஜெர்மனியர்களை விட யூதர்களே அதிகம் பணம் பதிக்கி வைத்துள்ளார்கள்.

அரசாங்கத்தை ஏமாற்றி ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களை எப்படி கண்டு பிடித்தார் ?

ஒரு பெரும்புள்ளி ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்பார் என்று சந்தேகப்பட்டால் அவர் பெயரை சொல்லி அவர் கணக்கில் பணம் போட செல்வார்கள். அங்கு அவர் வங்கி கணக்கு இல்லை என்று சொன்னால் பிரச்சனை இல்லை. ஆனால், இவர் இங்கு தான் கணக்கு வைத்திருக்கிறார் என்று சொன்னால் தீர்ந்த்து விஷயம்.

வாடிக்கையாளர் பெயரை சொல்லி பணத்தை போட்டு, அவர் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு ஆண்டாக பணம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் பெற்றுவிடுவார்கள். ஸ்விஸ் வங்கியில் இருக்கும் பணத்தை ஜெர்மனுக்கு கொண்டு வருவதோடு இல்லாமல், பணம் பதுக்கி வைத்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

1938க்கும் 1945 இடைப்பட்ட கால கட்டத்தில் அப்படிக் கொண்டு செல்லப்பட்ட தங்கம் சுமார் நூரு டன் என்றும், ஸ்விட்சர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பணத்தின் மதிப்பு ஆறு பில்லியன் என்று மதிப்பிடப்படுகிறது.

ஹிட்லரால் இனப்படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் பலர் ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்துள்ளனர். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு பிறகு இறந்த யூதர்களின் வாரிசுகளுக்கு புது வாழ்க்கை தொடங்க பணம் தேவைப்பட்டது. அவர்கள் ஸ்விஸ் வங்கியிடம் பணம் பெற நினைக்கும் போது அவர்களால் முடியவில்லை. எந்த ஆதாரம் இல்லாததால் ஸ்விஸ் வங்கி பணம் தர மறுத்துவிட்டது.

ஸ்விஸ் பணம் கிடைக்காத யூதர்கள் ‘Holocaust Victim’ என்ற அமைப்பை உருவாக்கி ஸ்விஸ் வங்கியிடம் தங்கள் மூதாதயரில் பணம் பெற முயற்சித்தனர். போதிய ஆதாரம் காட்டினால் பணம் தருவதாக கூறினார்.

கொத்துக் கொத்தாக இறந்த யூதர்களுக்கு யார் டெத் சர்ட்டிபிக்கேட் கொடுப்பது ? பல வருடங்களாக இரண்டாம் உலகப் போர் இறந்த யூதர்களின் பணம் ஸ்விஸ் வங்கியிலே இருந்து வருகிறது.

12000 பேர் கொண்ட ‘Holocaust Victim’ குழு அமெரிக்க அரசிடம் முறையிட்டது. பல போராட்டகளுக்கு பிறகு 1997ல் ஸ்விஸ் வங்கி போதிய ஆதாரங்கள் காட்டினால் பணம் தருவதாக ஒத்துக் கொண்டது.

யோசித்து பாருங்கள் சுதந்திரம் பெற்று இவ்வளவு வருடங்களில் எத்தனை ஊழல்கள். பி.ஜே.பி கட்சி வெளிநாட்டில் பதுக்கி வைத்த கருப்பு பணத்தைப் பற்றி பேசு போதெல்லாம காங்கிரஸ் அரசு ஆர்வம் காட்டியதில்லை. 2G , CWG, ஆதர்ஷ் என்று ஊழல் பட்டியல் பெறுகியது தவிர ஊழல் பணத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வர முயற்சி அவர்கள் செய்ததில்லை.

நம் நாட்டில் பசி என்ற பெயரில் எத்தனையோ பேர் இறக்கிறார்கள். ஆனால், அரசியவாதிகள் பலர் ஸ்விஸ் வங்கியில் தங்களது பணத்தை பதுக்கி வைத்து அவர்களும் அனுபவிக்காமல் இருக்கிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் பணத்தை தன் நாட்டுக்கொண்டு வந்த ஹிட்லர் நல்லவரா ? தானும் அனுபவிக்காமல், மற்றவர்களும் அனுபவிக்காமல் பணம் பதுக்கி வைக்கும் நம் அரசியல் தலைவர்கள் நல்லவர்களா ?



கட்டுரைக்கு உதவி நூல் :
ஸ்விஸ் பேங்க் – எஸ். சந்திரமௌலி

Saturday, November 29, 2008

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் - இரண்டாவது பாகம்

'ஹிட்லரும் நல்லவர் தான்' என்ற தலைப்பில் வலைப்பதிவு எழுதியிருந்தேன். நண்பர் ராபின் அவர்கள் நான் ஹிட்லருக்கு வக்காளத்து வாங்கும் வழக்கறிஞர் என்று நினைத்துக் கொண்டாரோ என்னோவோ தெரியவில்லை. "கெட்டவர்களை நல்லவர்களாகவும் சித்தரிக்கும் மனப்பான்மை" என்று கூறி கண்டித்திருந்தார். அவர் கண்டித்தற்காகவே 'ஹிட்லரை' பற்றிய இந்த வலைப்பதிவில் எழுதியுள்ளேன். ஹிட்லர் நல்லவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளையும் நாம் பார்க்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

முந்தைய பதிவு ஹிட்லரை ஆதரிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. ‘அமெரிக்காவை காட்டிலும் ஹிட்லர் நல்லவர்’ என்று சொல்ல வந்தேன். ஆனால், இந்த பதிவு ஹிட்லருக்கு இருந்த நல்ல எண்ணத்தை சொல்லுவதே என் நோக்கம். அதற்கு முக்கிய காரணம், ஹிட்லருக்கு தன் தாய் நாட்டின் மீது இருந்த தேசப்பற்று யாருக்கும் தங்கள் தாய் நாட்டின் மீது இருந்திருக்காது.

ஒருவன் நொய்டாவில் எத்தனை சிறுமிகள் பாலியல் கொடுமையில் கொன்று புதைத்திருக்கிறான். இங்கிலாந்தில் பதினாறு வயதில் இருக்கும் பெண்கள் எண்பது சதவீதம் பேர் கற்பத்தை கலைத்துக் கொள்கிறார்கள். சிறு வயதில் பாலியல் ரிதியாக பாதிக்கப்படும் சிறுமிகளை பாதுக்காக்க பாலிய திருமணத்தை ஆதரித்தார் ஹிட்லர். பாலிய திருமணத்தால் பாலியல் ரிதியானா எண்ணங்கள் மாறிவிடிகிறது. சிறு வயதில் இருந்து பாலியல் உணர்ச்சி வளர்வதால் வாலிபவ பருவத்தில் பெண்களை கற்பழிப்பது, சிறிமிகளை கொலை செய்வது என்று மனதில் வளர்த்துக் கொள்கிறார்கள். இது போன்ற தவறுகளை தடுக்க பாலியல் திருமணமே சரியான வழி என்பது ஹிட்லரின் கருத்து. (பாலியல் திருமணத்தை நான் ஆதரிக்கவில்லை என்பதை இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.)

மூன்று தலைமுறை முன்பு நம் நாட்டில் பாலியல் திருமணம் இருந்திருக்கிறது. கணவனை இழந்த சிறுமிகளை உடன் கட்டை எரிப்பதும், மொட்டை அடித்து காவி உடை அணிவிப்பதும் போன்ற கொடுமைகள் நடந்து உள்ளன. விதவைகளுக்கு பாதுகாப்பு இல்லாத வாழ்க்கையாக அன்று இருந்துள்ளது.(இதை எடுத்துக் காட்டியதே அன்றைய "பராசக்தி" படம் தான்.) இந்த கொடுமைகளை தவிர்க்க பாலிய விவாகம் அரசால் ரத்து செய்யப் பட்டது. ஆனால், நொய்டா சிறுமிகளை பாலியல் கொடுமையில் கொன்றது, மருத்துவம் பார்க்க வந்த பெண்களை நிலப்படம் எடுத்த மருத்துவர், போலி சாமியார்கள் மன்மத லீலைகள் இது போன்ற செய்திகளை தினமும் செய்திதாளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். பாலியல் விவாகம் இருந்த காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்காது. பாலியல் உணர்ச்சி கட்டுப்படுத்தும் முயற்சியில் பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. இதை எல்லாம் படிக்கும் போதும், கேட்கும் போது பாலிய விவாகமே பரவாயில்லை தோன்றும் அளவிற்கு பல செய்திகள் நம் மனதை கொள்கிறது.

பாலியல் திருமணத்தை ஆதரித்த ஹிட்லரின் எண்ணம் பலருக்கு கோமாளித்தனமாக தெரிந்தாலும், பாலியல் கொடுமைகளை ஒழிக்க நினைத்த அவரது குணத்தை பார்க்க வேண்டும். ஹிட்லர் பாலியல் கொடுமைகளை ஒழிக்க பாலியல் விவாத்தை மட்டும் சொல்லவில்லை. சரியான தேக பயிற்சி, சண்டை பயிற்சி மூலம் பாலியல் உணர்ச்சிகளை குறைக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். தேக பயிற்சி மூலம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியும் என்று இன்றைய மருத்துவம் கணடறிந்த உண்மை. ஆனால், 1920 ஆம் ஆண்டுகளிலே ஹிட்லை இதை பற்றி எழிதியிருக்கிறார். இன்று மருத்துவம் சொல்லும் உண்மை, அன்றே ஹிட்லர் தெளிவுப்படுதியிருக்கிறார்.

ஹிட்லர் பாலியல் உணர்ச்சியில் தவறு செய்ய நினைத்த வாலிபர்களை தேக பயிற்சி செய்து இராணுவத்தில் சேர்வதற்கு உற்சாகமுட்டினார். இன்று எத்தனையோ இளைஞர்கள் மென்பொருளிலும், வன் பொருளிலும் வேலை செய்ய விரும்புகிறார்கள். அரசாங்கமும் அதற்கு தகுந்த உதவிகளை செய்து வருகிறது. ஆனால், ஹிட்லர் இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதில் தான் உற்சாகமுட்டினார். மற்ற நாடுகளை பிடிக்க இராணுவத்தை பலப் படுத்தும் சுயநலம் ஹிட்லருக்கு இருந்தாலும், இளைஞர்களை தவறான பாதையில் செல்லாமல் நாட்டுக்காக சேவை செய்ய தூண்டிய பொதுநலமும் இருந்தது. பல இளைஞர்களுக்கு இராணுவத்தில் வேலைக் கொடுத்தால் ஜெர்மனியில் வேலையில்லாத திண்டாட்டம் ஹிட்லர் காலத்தில் ஒழிந்தது. (அமெரிக்கா இன்றும் தங்கள் நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியாமல் தவிப்பதை நினைத்து பாருங்கள்.)

இன்று நம் நாட்டில் இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தோமோ, ஹிட்லர் தன் நாட்டு இளைஞர்களை செயல் படுத்தி காட்டினார். நண்பர் கமல் சொன்னது போல் என்னதான் கொலைகாரனாக, கொடுங்கோலனாக இருந்தாலும் ஹிட்லர் காலத்தில் தான் ஜெர்மனி மிகப்பெரிய நாடாக வளர்ந்தது.

Thursday, November 13, 2008

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன்

காதுவரை மீசை வளர்த்தால் வீரம் என்று நினைத்தவர்கள் மத்தியில் தன் அரை இன்ச் மீசையில் உலகை அளந்தவன். ‘ஹிட்லர்’ என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது சர்வாதிகாரமும், அவன் செய்த கொலைகளும் தான். அடிப்படையில் நல்ல ஒவியர், ஜெர்மன் நாட்டின் படை வீரன் என்று தன் வாழ்க்கையை தொடங்கினான். ஒரு உலகத்தை வியக்கும் அளவிற்கு மட்டுமல்லாமல், அச்சுருத்தும் அளவிற்கு வளர்ந்தான். இன்றும் ஹிட்லரை கெட்டவனாகத் தான் உலகம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.



சரித்திர பக்கங்கள் வெற்றியாளர்களை மட்டுமே கொண்டாடுகிறது. தோல்வி அடைந்தவர்களை மிகவும் கெட்டவனாகவும் அல்லது கோமாளியாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். தோல்வியாளர்களின் சரித்திரத்தை யாரும் படிக்க விரும்புவதில்லை. வெற்றியாளர்கள் மீது எல்லோரும் கவனம் செலுத்துகிறார்கள். கிரிக்கெட் எடுத்துக் கொண்டாலும் ஆஸ்திரலேய அணி வெற்றி பெற்றால் அவர்கள் வெற்றி கையாண்ட விதத்தை சொல்கிறார்கள். தோல்வி அடைந்தால் அவர்கள் செய்த தவறுகளை சொல்கிறார்கள். பங்காதேஷ், கென்யா போன்ற வலுயில்லாத அணிகளை பற்றி யாரும் விமர்சனம் செய்வதில்லை. இவர்கள் வலுவான அணியிடம் வெற்றி பெற்றால், குறுட்டு அதிஷ்டம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

என்னை பொருத்த வரையில் ஹிட்லரும் ஒரு வெற்றியாளர் தான். ஒரு விடுதியின் காப்பாளர் விடுதியை கண்டிப்பாக வைத்துக் கொண்டால் அந்த காப்பாளருக்கு ஹிட்லர் என்ற புனைப் பெயர் வைப்பார்கள். ஆசிரியர் கண்டிப்பாக இருந்தாலும் அவர்களும் இதே பெயர் தான்.
வீட்டில் தந்தை சொல்வது தான் செய்ய வேண்டும். யாரும் அவரை எதிர்த்து பேசக் கூடாது என்று இருந்தால், அந்த வீட்டில் ‘ஹிட்லர் ராஜ்ஜியம்’ என்றே கேலி செய்கிறோம்.ஹிட்லரை நாம் மறைமுகமாக அங்கிகரித்திருக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி.

ஹிட்லரின் சர்வாதிகாரத்தை கேலிப் பேசுபவர்கள், இன்னும் ஒவ்வொரு நாட்டு ராணுவத்திலும் ஹிட்லர் முறையை தான் பயன் படுத்துகிறார்கள். ஹிட்லரின் சர்வாதிகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றாலும், ராணுவத்தில் சர்வாதிகார ஆட்சியை தான் பின்பற்றுகிறார்கள். போர் நடக்கும் போது வீரனின் தாய் அல்லது மனைவி இறந்தாலும் அவன் போருக்கு தான் செல்ல வேண்டும். இந்த முறைகள் எல்லாம் ‘ஹிட்லர்’ கையாண்டது.

எந்த வேலையாகயிருந்தாலும் வேலை பிடிக்கவில்லை என்றால் மிக எளிதில் வேலையை விட்டு வெளியே வந்துவிடலாம். இராணுவத்தில் மட்டும் வேலையை விட்டு வருவது அவ்வளவு எளிதல்ல. காரணம், இராணுவத்தில் வேலையாக கருவதில்லை, நாட்டின் சேவையாகவே கருதுகிறார்கள். ஒருவர் குடும்பத்துகாக போரை விட்டு சென்றால், மற்றவர்களும் தங்கள் குடும்பத்தை நினைக்க தொடங்கி விடுவார்கள். இதனால் போரில் கிடைக்கும் வெற்றியை பாதிக்கும்.

போர் சமயத்தில் ஒருவனின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து ஊருக்கு அனுப்பினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி ஊருக்கு செல்ல பார்ப்பார்கள். அதனால், இராணுவத்துறையில் மட்டும் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் நாட்டின் வெற்றியை மட்டும் மனதில் வைத்திருக்க வேண்டும். இராணுவ வீரர்கள் சற்றும் மனதளராமல் இருப்பதற்காக சர்வாதிகார முறையை கையாள்கிறார்கள். சர்வாதிகார முறை இருப்பதால் எல்லா வீரர்களும் தங்கள் மேலாளர்களின் கட்டளை கீழ்பணிவது தங்கள் கடமையாக கொண்டுள்ளனர். இராணுவ விதிப்படி மேலாளர் கட்டளை கீழ் பணியாதவர்கள் தண்டிக்கிறார்கள். அந்த சமயத்தில் ஜனநாயகத்தையும், மனித உணர்வுகளையும் பற்றி பேசிக் கொண்டு இருந்தால் கார்கில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது. இராணுவத்துறையில் மட்டும் ஹிட்லர் கையாண்ட சர்வாதிகார முறையே சரியானது.
இராணுவத்துறை தவிர வேறு எதிலும் சர்வாதிகார ஆட்சி செய்வது தவறானது. ஜனநாயகத்திற்கு எதிரானது. ஹிட்லர் தன் சர்வாதிகார ஆட்சியை இராணுவத்தில் மட்டுமே செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் மக்கள் மீது செலுத்தியதால் சரித்திர பக்கங்களில் அவரை கொடுங்கோளனாக பார்க்கிறார்கள்.

ஹிட்லர் தன் ஆட்சியில் பல நல்லதுகளை செய்துயிருக்கிறார். அவைகள் ஒவ்வொன்றும் மற்ற நாடுகள் பின் பற்ற வேண்டிய ஒன்றாகும். ஒரு வேளை தன் ஆட்சி காலத்தில் முதல் நான்கு ஆண்டுகளில் ஹிட்லர் இறந்திருந்தால், உலகில் பெரும் தலைவர்களின் ஹிட்லர் பெருமையாக போற்ற பட்டிருப்பார். ஆனால், அதிகார பலம் தலைக்கு எறியதில் தலைக்கால் தெரியாமல் ஆடியதால் அவர் செய்த நன்மை யார் கண்ணுக்கும் தென்படுவதில்லை.

ஒசமா பில்லெடனுக்காக அமெரிக்க தாலிபன் நாட்டை எதிர்க்கும் விதமாக போர் செய்தது. இரண்டாம் உலகப்போரை ஹிரோஷிமா, நாகசாக்கியை அனுகுண்டு மூலம் அழித்தது முதல் தாலிபம் நாட்டை போர் வரை அமெரிக்கா உலகத்தின் காவலர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு லட்ச யூதர்களை கொன்ற ஹிட்லர் கேட்டவன் என்றால், ஜப்பானின் இரண்டு நகரத்தை அழித்த அமெரிக்காவை என்னவென்று சொல்வது ? தனி ஒரு மனிதனை பிடிக்க முடியாமல், அந்த நாட்டின் அப்பாவி மக்களை கொன்ற அமெரிக்காவின் போரில் எதாவது நியாயம் உண்டா ? மற்ற நாடுகளும் அமெரிக்காவிற்கு பயந்தே ஆதரிக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி அமெரிக்கா ஒன்றும் அறியாத மக்களை தான் கொன்று குவிக்கிறது. தாலிபன் வீரர்களை நிர்வானப்படுத்தி அமெரிக்க வீரர்கள் செய்ய செயலை செய்தித்தாளில் பார்த்திருக்கிறோம். இப்படி கொடுமை செய்பவர்கள், ஐ.நா.சபையில் உலக அமைதியை பற்றி இவர்கள் பேசுவதை மற்ற நாடுகள் கேட்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் மன வேதனையில் அமெரிக்காவைக் காட்டிலும் ஹிட்லரே பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது.

தாலிபன் நாட்டு உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நாடு என்று உலக அரசியலில் பேசும் அளவிற்கு செய்தது அமெரிக்கா. ஒரு வேளை அமெரிக்கா நிலைமை சரியும் போது ஹிட்லரை பேசுவது போல் அமெரிக்காவையும் பேசுவார்கள் போல் தெரிகிறது.

ஹிட்லரின் இறந்த பிறகே அவன் ஆட்சியை பலர் விமர்சனம் செய்கிறார்கள். உயிருடன் இருக்கும் போது அவரை எதிர்த்து பேச யாருக்கும் தைரியமில்லை. அமெரிக்காவில் யார் அதிபராக வந்தால் அவர்கள் குணத்தின் நிறம் மாற போவதில்லை. அவர்களை காட்டிலும் 'ஹிட்லர்' நல்லவர் தான்.

LinkWithin

Related Posts with Thumbnails