வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

Wednesday, February 22, 2017

துருவங்கள் பதினாறு ( 2016 )

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு கொலை நடக்கிறது. அதை விசாரிக்கும் காவல் அதிகாரி, அவரின் உதவிக்கு புதிதாக வேலைக்கு சேர்ந்த கான்ஸ்டெபிள். அவர்களின் விசாரணை தான் கதை. 

ஒரு ப்ளாட், ரகுமான் வீடு, காவல் நிலையம், சாலை என்று இதைச் சுற்றிதான் கதைகளன் அமைந்திருக்கிறது. அதற்குள் பல முடிச்சுகளோடு கதை தொடங்குகிறது. ஒவ்வொரு முடிச்சுகள் அவிழ்க்கும் போது அழகான விளக்கம் என்று திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது. 



படத்தில் கடைசிக் காட்சி வரை கேள்விகளும், அதற்கான விடையோடு பார்வையாளனை சீட் நுணியில் அமர வைக்கிறது. இறுதியாக சொல்லப்படும் கதை… அது வரை திரையில் காட்டப்பட்ட கதைக்கும், விவாதிக்கப்பட்ட சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லாத விஷயமாக இருக்கிறது. 

படம் முடிந்து இரண்டு மணி நேரமாக கதையின் திரைக்கதை மனதில் ஓட்டிப்பார்த்தேன். எல்லா மூடிச்சுகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன். மிகவும் ரசித்த விஷயம், கதையை யார் கோணத்தில் சொல்கிறோமோ அவர்கள் தான் நமக்கு நாயகர்களாக தெரிவார்கள். இதேக் கதையை பாதிக்கப்பட்டவன் பார்வையில் இருந்து பார்த்தால் ’உண்மை’ என்று தான் தெரிகிறது. 

Simple and Neat Screenplay என்பதற்கு மிக சிறந்த உதாரணம் “துருவங்கள் பதினாறு”. 

Horrer Thriller என்று சொல்லி பெய்ப்பட சீசனில் இப்படி ஒரு Investigative Thriller படம் தமிழில் பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. யார் கண்டது ”துருவங்கள் பதினாறு ” மூலம் அடுத்து Investigative Thriller பட சீசன் ஆரம்பிக்கலாம் !!! 

எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பார்த்தப்படம். தனது அடுத்தப்படத்தில் பார்வையாளனை அதிகம் எதிர்ப்பார்க்க வைத்திருக்கிறார் கார்த்திக் நரேன். வாழ்த்துகள் !!!

Sunday, October 9, 2016

தேவி ( 2016 ) - திரை விமர்சனம்

விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன் படங்களுக்கு மத்தியில் Comeback நாயகன் பிரபு தேவா களம் இறங்கியிருக்கிறார்.

படத்தில் பேய் இருக்கிறது. ஆனால், பயமுறுத்தவோ, பழிவாங்கவோ, கொலை செய்யவோ இல்லை. கதாப்பாத்திரங்களோடு கதாப்பாத்திரமாக வருகிறது. அதுவும் உருவம் இல்லாமல் வருகிறது.



எப்படி பேய் பிடித்தது, பேய் பிடிக்கும் முன் பயமுறுத்தும் formalities காட்சிகள் எல்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் வழக்கமான பேய்-காமெடி படமில்லை. காமெடிப் படம்.

பேய் பிடித்திருக்கிறது என்று நமக்கு உணர்த்திவிட்டு நேராக கதைக்கு சென்றிருக்கிறார்கள்.

பிரபு தேவாவுக்கு நல்ல Comeback படம். இளம் நாயகர் கொஞ்ச ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

தமன்னா ஹிந்திப்படத்திற்கான கவர்ச்சியை காட்டியிருக்கிறார். ( படம் ஹிந்தியிலும் வெளியாகுவதால் இருக்கலாம்.)

100 % காமெடிப் படம். குடும்பத்தோடு பார்க்கலாம்.

Monday, June 20, 2016

இறைவி - திரைவிமர்சனம்

புத்தகக் கண்காட்சி சமயத்தில் வெளிவந்ததால் இந்தப் படத்தை பார்க்க முடியவில்லை. இப்போது தான் பார்க்க நேரம் கிடைத்தது.

ஆண் கதாப்பாத்திரத்தை கொண்டு பெண்ணியத்தை பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த வித்தியாச திரைமொழிக்காகவே வாழ்த்தலாம். குழந்தைகள் தவிர்த்து குடும்பத்தோடு பார்க்கலாம்.

எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி நடிப்பை பற்றி பலர் பாராட்டிவிட்டார்கள். ஆதனால், அதைக் கடந்து மற்றவர்கள் சொல்லாததை சொல்ல விரும்புகிறேன்.



முதல் பாதியில் வரும் மலர் பாத்திரம் என்னை மிகவும் வசீகரித்தது. சினிமாவில் காதல் வேறு, காமம் வேறு என்று காட்டிய முதல் பாத்திரம் இது தான். “என் கணவனை உறுகி உறுகி காதலிச்சேன்” என்று சொல்லும் பெண், தன் உடல் தேவைக்கு ஒரு ஆண் தேடிக் கொள்வதை பல ஆண்களுக்கு பிடிக்காமல் போகலாம். வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண், இன்னொரு திருமணம் மூலம் தான் வாழ வேண்டும் என்று சமூகம் எதிர்ப்பார்ப்பதை உடைத்திருக்கிறார்.

அடுத்து வடிவுக்கரசி பாத்திரம். முதல் காட்சியில் வசனம் பேசிவிட்டு, படம் முழுக்க படுத்தப் படுக்கையில் இருக்கிறார். அவர் குணமடைவார் என்று கணவர் ராதா ரவி காத்திருக்கிறார். ஒரு குடும்பத்தலைவி இல்லையென்றால் அந்த குடும்பம் எப்படி சீரழியும் என்பதை அந்த பாத்திரத்தை வைத்து உணர்த்துகிறார்.

வாழும் வயதில் கணவனை பிரிந்திருக்கும் பெண்ணுக்கு எவ்வளவு போராட்டமோ, வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தில் மனைவியை பிரிந்து வாழும் கணவனின் வாழ்க்கை போராட்டமாக இருக்கும் என்பதை ராதாரவி பாத்திரம் காட்டுகிறது.

தயாரிப்பாளர் பாத்திரம் மட்டும் நிறைய லாஜிக் உதைக்கிறது. கடன் வாங்கி படம் எடுத்தவன், அரை வாங்கியதற்காக தானும் நஷ்டப்பட்டு, அடுத்தவனையும் அழிக்க நினைப்பானா ? என்பது சந்தேகம் தான்.

ஒரு ஆண் தவறு செய்யும் முன் தன்னை நம்பி ஒரு பெண் இருக்கிறாள் என்பதை உணர்ந்தால், பல தவறுகள் நடக்காது. அப்படி அந்தப் பெண்ணை நினைக்காமல் தவறு செய்ய தொடங்கினால், தன்னையும் மட்டுமில்லாமல் தன்னை சார்ந்தவர்களையும் சேர்த்து பாதிக்கும் என்பதை ‪‎இறைவி‬ காட்டியிருக்கிறது.

ஒரு ஆண்ணை தவறு செய்யாமல் இருக்க வைப்பதே ’பெண்’ தான். (தவறு செய்ய வைப்பதும் பெண் தான். ஆனால் இதில் காட்டவில்லை).

 படம் Slow தான். ஆனால், Bore இல்லை.

LinkWithin

Related Posts with Thumbnails