வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Friday, March 27, 2015

அடைக்கபட்ட கதவுகளின் முன்னால்…

22 வருடகளுக்கு மேல் முடிவதையாத ஒரு தாயின் போராட்டத்தை சொல்லும் புத்தகம். 

இராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் பிரபாகரன் உயிரோடு (?) இல்லை. அதை செய்த சிவராசன், தனு உயிருடன் இல்லை. கொலைக்கு உடந்தையாக இருப்பவர்களை மட்டும் இத்தனை வருடங்கள் சிறையில் இருக்கிறார்கள். 




பேரறிவாளன் குற்ற மற்றவன், குற்றவாளி என்கிற வாதம் தேவையில்லாதது. இனி அதைப் பற்றி பேசி எந்த பலனுமில்லை. தனது பாதி வாழ்க்கையை சிறையில் தண்டனையாக கழித்தவனுக்கு உதவியாக இருக்கப் போவதுமில்லை. அவனின் மிச்ச வாழ்க்கையாவது தன்னுடன் இருக்க வேண்டும் என்கிற ஒரு தாயின் விருப்பத்தை புரிந்துக் கொள்ள இந்த நூல் உதவுகிறது. 

ஈழத்துக்கு பிறகு பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் உயிர்கள் தான் தமிழ்நாட்டில் அதிக அரசியல் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த அரசியலுக்கும், இவர்களின் வழக்கும் முடிவுக்கு வரவருவதாக தெரியவில்லை. 

மூவர் உயிரின் அரசியலுக்கு பின்னால் ஒரு தாயின் போராட்டம் இருக்கிறது. தனது மகனை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற போராட்டம். 

அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கிறது. இதில் எது வெல்லும் என்று அவரவர் பண பலத்தை பொருத்தது. இந்த நியாயங்களுக்கு நடுவில் ஒரு அபலத் தாயின் குரல் சராசரி மக்கள் காதில் படுவது மிகவும் கடினம். அப்படி காதில் வாங்கியவர்கள் முடிந்தவரை நான்கு காதுகளுக்கு எடுத்துச் செல்லலாம். 

இதில் இந்த தாய் வெற்றி பெற்றாலும், இழந்த 22 வருடங்கள் மீண்டு வரப்போவதில்லை என்கிற சோகம் இருந்துக் கொண்டே இருக்கும்.

Tuesday, October 21, 2014

இலக்கியம் மாறுமா ? - அ.ஞா.பேரறிவாளன்

தூக்குத் தண்டைக்கும், அரசியலுக்கும் நடுவில் மாட்டி தவிக்கும் பேரறிவாளன் எழுதிய புத்தகம் “இலக்கியம் மாறுமா ?”

சங்கக் காலத்தில் நடந்த சிலப்பதிகாரத்தில் நடந்த அநீதியும், தற்காலத்தில் காவல் நிலையங்களில் நடக்கும் அநீதியையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.



தவறு செய்யாத கோவலன் மீது திருட்டு பழி சுமத்தி கொல்லப்படுவதையும், அதேப் போல் தற்காலத்தில் 'அழகர்சாமி' என்ற அப்பாவி மீது திருட்டு பழி சுமத்தி கோர்ட்டில் விசாரணை நடத்தப்படுவதையும் சரியான ஒப்பிட்டாக இருக்கிறது.

சிறுகதை வடிவில் இல்லாமல் நாடக வடிவத்தில் எழுதியிருக்கிறார். பொது நிகழ்ச்சியில் மேடை நாடகமாக போட விரும்புபவர்கள் இந்த நாடகத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

கடைசியாக முடிக்கும் போது…

”ஆயிரம் ஆயிரம் 
  ஆண்டுகளின் பின்னும் 
  அநீதிகள் 
  தொடரவே செய்கின்றன. 
  ஆயினும் 
  அநீதிக்கான தீர்வுகள் மட்டும் 
  திசையறியாமல் திண்டாடுகிறது” 

- என்று சொல்லி முடிக்கிறார்.

பேரறிவாளன் - சிறை கம்மிகளுக்கு பின்னால் ஒரு எழுத்தாளனாக இருக்கிறார். அவரை தான் விடுதலை செய்ய முடியவில்லை. அவரது எழுத்துக்களையாவது விடுதலை செய்து, மக்களிடம் கொண்டு செல்வோம்.

**
இலக்கியம் மாறுமா ?
- அ.ஞா.பேரறிவாளன்
பக்கங்கள் : 60 விலை. ரூ.50

வெளியீடு :
திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்
11, கே.கே. தங்கவேல் தெரு,
பெரியார் நகர்,
சோலையார் பேட்டை – 635851
அலைப்பேசி : 94430 58565

Thursday, September 12, 2013

வன்னி யுத்தம் - கடைசி நேரப் பயணம்

 ”ஈழம்”

இன்று வரை கனவு தேசமாகவே இருக்கிறது. உலக நாடுகளும் அதை கனவாகவே வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. பணமோ, தங்கமோ இருக்கும் தேசமில்லை. ஆனால், இலங்கை பிரியக்கூடாது என்பதில் மட்டும் எல்லா நாடுகளும் ஒரே மாதிரியாக யோசிக்கிறது. ஆசிய நாடுகள் தங்கள் ஆயுதம் விற்க இலங்கையை நல்ல வியாபார தளமாக மாற்றிக் கொண்டது. அதில், இலங்கை அர்சு வெற்றிப் பெற்ற பிறகு, வேறு வியாபாரங்கள் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

வன்னி யுத்தம் ஈழத்தை முன் வைத்து வந்த நூல் அல்ல... ஈழப் போராட்டத்தை பற்றின கடைசி நாட்களை பற்றியது. விடுதலைப் புலிகளை பற்றின விமர்சனங்கள், அலசல்கள் என்று சொல்லலாம். ஆனால், இதை எல்லாம் ஏற்றுக் கொண்டு, திருத்தி மீண்டும் போராட அவர்களால் முடியாது. 

ஈழப் போராட்டத்தை அங்கு இருக்கும் ஈழத் தமிழர்கள் எப்படி பார்த்தார்கள், போராட்டத்தில் அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகள் என்று பல விஷயங்கள் இந்த நூல் சொல்கிறது.



குறிப்பாக சில பகுதிகள்…..

“இந்த நூல் ஈழப் போராட்டம், விடுதலை, சுதந்திரம் போன்ற மந்திரச் சொற்கள் வறிய கூலிக் குடும்பங்களை சார்ந்த இளைஞர்களின் ஏற்படுத்திய தாக்கங்கள் மேட்டுக்குடி இளைஞர்களிடம் ஏற்படுத்தவில்லை ! அவர்கள் எப்போதும் மேட்டுக்குடியாகவும் அளும் வர்க்கமாக கருதிக் கொண்டார்கள் என்ற கருத்தை முன் வைக்கிறது.”

 அத்தியாயம் 6ல், மாமிச பொங்கல், பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டாலும் சைவ வேளாளர், வன்னி மெட்டு குடியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல் விமர்சனங்களாக புலிகளுக்கு எதிராக முன் வைக்கும் கருத்துக்கள் இலங்கை இனவாத அரசுக்கு சாதகமாக அமைகிறது.”

தமிழ் தேசிய போராட்டங்களுக்கு சம்மந்தமான விமர்சனங்கள் கோட்பாடு ரீதியான தர்மங்களை மீற தாக்குதல்களாகவே இருக்கிறது. 

ஆரம்ப காலங்களில் சிறுவர் புலிகளில் இணைந்தார்கள். புலிகளும் ஏற்றுக் கொண்டார்கள். அதற்காக காரணத்தை பக், 59, அத்.9.

குழந்தை இராணுவம் பற்றி ஆரம்ப காலத்தில் புலிகளின் சிறுவர்கள் இருந்தார்கள். ஆனால், 18 வயது கீழ் புலிகளின் சேர்ப்பதில்லை என்று அவர்களுக்கு பின்பற்றினார்கள்.

வன்னியில் நல்லிரவில் ஒரு பெண் தனியாக நடக்கலாம். வேலையில்லா திண்டாட்டம் இல்லை, (பக்.52)

சிங்களவர்கள் தமிழர்கள் மீது எவ்வளவு வெறுப்புடன் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அத்தியாயம். 20ல் ஒரு பகுதி.

”காயத்துடன் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட சிங்கள வீரர்கள் யுத்த மரபுப்படி நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அந்த இராணுவ வீரனை அன்புடன் கவனித்துக்கு ஐயர் அவனிடம் ‘ ஒரு வேளை நான் உன் ஊருக்கு வந்தால், நீ உனக்கு என்ன தருவாய் ?” என்ற கேட்டதற்கு, “ நீ ஒரு தமிழன்; நீ என் ஊருக்கு வந்தால் உன்னை நான் சுடுவேன்’ என்று தனது வன்மத்துடன் பதில் சொன்னான். 

சகோதர இனத்தின் சோகங்களையும், கோரத்தனமாக மரணங்களையும், ஈழத்தின் அவலத்தையும் சிங்கள பட்டாசு சத்ததால் எவ்வளவு நாள் மறைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

மனித நேயம் இறந்த மண்ணில் மனித உரிமையைப் பற்றி பேசப் போகும் காமன்வெல்த் மாநாடு….!!!

சிங்களர்கள் ஈழத்தில் நடத்தியது யுத்த வெறியல்ல, வர்த்தகத்தின் திமிர். காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது போல் தன் மீது இருக்கும் இனப்படுகொலை கரையை சிங்களவர்கள் துடைத்துவிடுவார்கள். வர்த்தக வாய்ப்பை பார்த்து வல்லரசு நாடுகளும் ஆதரவு தெரிவிக்க தொடங்கிவிடுவார்கள்.இறந்த தமிழர் உயிர்களின் எண்ணிக்கை புள்ளிவிபரங்களாக இருக்கும்.

நூலை இணையத்தில் வாங்க.....

வன்னி யுத்தம்
ரூ.125. பக். 336
விகடன் பிரசுரம்

Friday, August 10, 2012

டெஸோ - விமர்சனத்துக்கு அப்பால் !!!!!!!

[இந்த கட்டுரை தொடங்கும் முன் ஒன்று தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். நான் கலைஞரின் இலக்கிய மேடைப்பேச்சு ரசிகனே தவிர, தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. தி.மு.கவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.]

ஆக்ஸ்ட் 12 டெஸோ மாநாடு அறிவித்ததும், கலைஞர் ஈழ மக்களுக்காக இப்பொது ஏன் கண்ணீர் வடிக்கிறார் ? போர் சமயத்தில் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று ஈழ ம்க்களை காப்பாற்றி இருக்க வேண்டாமா ? இது வெறும் முதலை கண்ணீர் என்று பல விமர்சனங்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. இனிமேலும் வரும்.

முதலில் ஒன்று தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். ஈழப் பிரச்சனையால் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும், யாருக்கும் ஓட்டு வங்கி பெருகவில்லை. பெருக போவதில்லை. இலங்கைப் போர் உச்சத்தில் இருக்கும் போது, 2009ல் நடந்த பாராளமன்ற தேர்தலில் தி.மு.க போட்டியிட்ட 18 இடங்களில் 16 இடங்கள் வெற்றிப் பெற்றது. [ காங்கிரஸ் 18ல் 9 இடங்கள் வெற்றி பெற்றதே என்று கேட்கலாம். இந்த வெற்றியே அவர்களுக்கு அதிகம். இந்த கதை இங்கு வேண்டாம்.]

ஈழப்பிரச்சனை அதிகம் பேசி வை.கோ எந்த தேர்தலிலும் சொல்லிக் கொள்ளும் படியாக பெரிய வெற்றிப் பெறவில்லை. கலைஞர் டெஸோ மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தினாலும், அடுத்த நான்கு ஆண்டு தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி தான். பாராள மன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது. அதற்குள் மக்கள் டெஸோ மாநாட்டை மறந்துவிடுவார்கள். அரசியல் ரிதியாக கலைஞருக்கோ அல்லது தி.மு.கவுக்கோ டெஸோ மாநாடு எந்த பயனும் இல்லை.


பெரும்பான்மையான தமிழக மக்கள் ஈழப்பிரச்சனையை பக்கத்து நாட்டு பிரச்சனையாக தான் பார்க்கிறார்கள். ஈழப்போரில் கலைஞர் மௌனமாக இருந்தது குற்றம் என்றால், எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக கலைஞரின் ஒரு ரூபாய் அரிசி வாங்கி மக்கள் அதைவிட குற்றவாளிகள். இதை ஈழத்தை வைத்து அரசியல் செய்யும் துணிச்சலாக சொல்வார்களா !!!!

**

கலைஞருக்கு எதிரான விமர்சனம்

ஈழத்தின் வீழ்ச்சி... தமிழர்களின் ஒற்றுமையின்மையே !!!!! ராஜபக்ஷேக் கூட அடுத்த இடத்தில் தான் வருகிறார். 40,000 தமிழர்கள் இறந்தும், அங்கு இருக்கும் அரசியல் கட்சிகள் இன்னும் தனித் தனியாக தான் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து சென்று பார்த்த தூது குழுவினர்களை தனித்தனியாக தான் பார்த்தார்கள். பாதிக்கப்பட்ட அவர்களே இன்னும் ஒற்றுமையில்லாமல் இருக்கும் போது, இங்கு இருக்கும் தமிழ்நாடு என்ன செய்ய முடியும் ?

இன்னும் பிரபாகரன் வருவர். ஐம்பதேழு வயதில் புது இராணுவம் அமைத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஈழம் மீட்பார் என்று அரசியல் நடத்துபவர்கள், ஏன் இருக்கும் ஈழ தமிழ் உயிர்களை மீட்க அல்லது காக்க எந்த நடவடிக்கை இல்லை ? பிரபாகரன் இருக்கும் போது ஈழம் சென்று போட்டோ எடுத்துக் கொண்டவர்கள், இப்போது ஏன் அங்கு சென்று அவர்களுக்கான உதவியை செய்யவில்லை. இவர்களில் வை.கோ கொஞ்சம் பரவாயில்லை. ஈழ நாட்டுக்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற ஆக்கப்பூர்வமாக பேசுகிறார். மற்றவர்கள் ம்ம்ம்.

ஈழப்போர் முடியும் போது கலைஞர் முதலமைச்சாராக இருந்தார். அவ்வளவு தான். கலைஞர் விமர்சனம் செய்பவர்கள் ஏன் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்யவில்லை ? 1987ல் ராஜீவ் - ஜெயவர்தனே - பிரபாகரன் ஒப்பந்தம் செய்யும் போது எம்.ஜி.ஆர் எங்கு சென்றார். உடல்நலம் சரியில்லாமல் இருந்தால், அவரது கட்சி என்ன நிலைப்பாட்டில் இருந்தது ? அந்த ஒப்பந்தத்தில் இருப்பது எல்லாம் அவர் எற்றுக் கொண்டாரா ? புலமைப்பித்தன் ‘இலங்கை பிரச்சனையில் ராஜீவ் காந்தி எம்.ஜி.ஆரை மிரட்டினார்’ என்று கூறினாரே ! அதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து என்ன பதில் ? என்று பல கேள்விகள் கேட்கலாம். ஆனால், மீண்டும் இது ஒரு விமர்சன கட்டுரையாக முடியும். நமது நோக்கம் அதுவல்ல.

ஈழப்போர் பொருத்தவரை மத்திய அரசு என்ன நிலைப்பாடில் இருந்ததோ, மாநில அரசு அதே நிலைப்பாடில் தான் இருந்தது. இந்திரா காந்தி ஆதரித்த போது ஆதரித்தார்கள் (எம்.ஜி.ஆர்). ராஜீவ் எதிர்க்க தொடங்கியதும் மௌனமானார்கள். அன்று முதல் இன்று வரை தமிழ முதலமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர், கலைஞர் மௌனமாக தான் இருந்தார்கள்.

கலைஞர் மீது அதிகம் வைக்கப்படும் விமர்சனம் இது தான். ஈழப்போர் சமயத்தில் கலைஞர் மத்தியில் இருந்து தனது ஆதரவை திரும்ப பெற்று இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அனைத்து மாநிலங்களும் தமிழகம் உட்பட கலைஞரை வசைப்பாடியிருப்பார்கள். நாடு முழுக்க மறு தேர்தல் நடந்திருக்கும். தமிழ்நாட்டுக் கூட மக்களே கலைஞரை தீட்டி தீர்த்து இருப்பார்கள். தன் மாநில மக்களே ஆதரிக்காத ஒன்றை கலைஞர் செய்ய வேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும் ?

இன்று கூடாங்குளத்தில் அனு மின்நிலையத்திற்காக போராடும் மக்களுக்கு சென்னையில் என்ன ஆதரவு இருந்தது ? முல்லை பெரியால் நீர் போராடும் விவசாயிகளுக்கு வேலூரில் இருந்து என்ன ஆதரவு கிடைத்தது ? சென்னையில் வாழ அதிகமாக பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களுக்கு ( என்னையும் சேர்த்து) மத்தியில் கூடாங்குளத்தில் என்ன நடந்தால் என்ன மனநிலை தான் பலருக்கும். மக்கள் ஆதரவு, மக்கள் ஒற்றுமை இல்லாத எந்த போராட்டமும் வெற்றிப் பெறாது.

***

டெஸோவில் விவாதிக்கப்பட வேண்டியது

டெஸோ வில் தனி ஈழம் கோரியோ அல்லது இலங்கை அரசை வசைப்பாடியோ, இருக்கும் உயிர்களுக்கு பிரச்சனை உண்டு பண்ணுவதற்கு பதிலாக அவர்களை காக்க எடுக்கப்படும் கூட்டம். நாளையே ஈழம் மலர வேண்டும் என்று துடிப்பவர்கள் அங்கு வாழ மக்கள் வேண்டும் என்று யோசிக்க வேண்டும் !!

முதலில் மக்களை காப்போம், பிறகு ஈழத்தை மீட்டு கொள்ளுங்கள். ஈழத்தில் அகதி முகாமில் பலரது குரல், " எங்களை வாழ விடுங்கள்" என்று கெஞ்சும் நிலையில் விடுப்பட வேண்டும். அதை முதலில் செய்ய வேண்டும்.

இந்திய ஊடகங்கள் ஈழப்பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் தமிழகத்தில் இரண்டு கட்சிகள் கையில் தான் உள்ளது. ஒன்று தி.மு.க, இன்னொன்று அ.தி.மு.க. வேறு எந்த கட்சியும் காட்டு கத்து கத்தினாலும் தமிழகம் தாண்டி கேட்காது. தி.மு.க ஈழப்பிரச்சனை கையில் எடுத்துள்ளதை, ஆதரித்து இருக்கும் ஈழ உயிர்களை காப்பாற்ற வேண்டும். டெஸோவில் முக்கியமான விவாதிக்கப்பட வேண்டியதாக நாம் கருதுவது....

1. இந்தியாவுக்கு குடிபெயர்ந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கினால் இந்தியாவில் நிம்மதியான அவர்களால் வாழ முடியும்.

2.போரில் பாதிக்கப்பட்ட இடங்களை சரி செய்து, மீண்டும் தமிழ் மக்கள் வாழ வழி வகுக்க வேண்டும். குறிப்பாக கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை அமைத்துதர வேண்டும். இலங்கை அரசுக்கு பணம் தேவைப்பட்டால், ஆயுதம் வழங்கிய கையால் பண உதவி செய்ய இந்திய அரசு தயாராக இருக்க வேண்டும்.

3.போரால் உடலால், மனதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். தொழில், வேலை போன்றவற்றை விவாதிக்கப்பட வேண்டும்.

4.போர் முடிந்து மூன்று வருடங்களாகியும், பல ஆயிரக்கணக்கான ஈழ தமிழர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு உதவி செய்ய வேண்டும்.

5. தங்க வீடு வசதி செய்துக் கொடுத்து, அவர்களும் இலங்கை முதல் தர குடி மக்களாக நட்த்த வேண்டும்.

இன்னும் விவாதிக்க எவ்வளவோ உள்ளது. ஆனால், ”கலைஞர் சொல்லியாச்சு ஈழம் உறுதியாச்சு” போன்ற பேனர் வாசகங்கள் மீண்டும் அரசியலாக்க தான் பார்க்கிறார்கள். கலைஞர் கவனத்தை பெற டெஸோவை விமர்சனமாக்குகிறார்கள்.

ஈழப்பிரச்சனை வைத்து யார் அரசியல் செய்தாலும், ஒன்று தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள். ஈழத்தால் உங்களுக்கு ஒரு ஓட்டுக்கூட அதிகமாக கிடைக்க போவதில்லை. இதைப் பற்றி எதையும் டெஸோவில் விவாதிக்கப்படவில்லை என்றால்.... இதுவும் சாதான மாநாடாக தான் முடியும்.

[ தனி ஈழம் பற்றி பேசவில்லை. ராஜபக்‌ஷே மீது போர் குற்றம் சுமத்த வேண்டும் போன்ற வாதங்களை கொஞ்ச நாளுக்கு பேசாமல் இருப்பது, அங்கு இருக்கும் தமிழர்களுக்கு நல்லது. இப்போதை அங்கு அகதி முகாமில் இருக்கும் தமிழர்களுக்கு இந்த இரண்டும் பலனில்லை.]

 **

இதற்கு மேலும், ”கலைஞர் துரோகி, அவர் எப்படி ஈழத் தமிழருக்காக மாநாடு நடத்தலாம் என்று கேட்பவர்கள், ஈழப் பிரச்சனைக்கான மாநாடு யார் நடத்த வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள். வை.கோ, சீமான், பழ.நெடுமாறன் என்று கூறலாம். எத்தனையோ மாநாடுகள் அவர்கள் நடத்திவிட்டார்கள். போர் முடிந்து மூன்று வருடத்தில், அங்கு எந்த முன்னேற்றமும் இல்லை. கொட நாடு சென்ற அம்மா நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா !! தராளமாக நடத்தட்டும். யார் வேண்டாம் என்றார்கள்.

[விட்டா... சோனியா காந்தி, ராஜபக்‌ஷே நடத்த வேண்டும் என்று இவன் சொல்லுவான் என்று விமர்சிப்பீர்கள். ஆட்சியில் இருப்பவர்கள் போராட தொடங்கிவிட்டால் அவர்கள் இருக்கும் பதவிக்கு மரியாதை கிடையாது.]

நம் கருத்து இருக்கும் ஈழ உயிர்களை பாதுகாக்க வேண்டும். உலகளவில் ஈழப்பிரச்சனை எடுத்து செல்ல வேண்டும். அவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும். அதை யார் செய்தால் என்ன ?

Tuesday, May 29, 2012

மேதகு பிரபாகரனின் புரட்சிகரச் சிந்தனைகள்


இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி

சுதந்திரம் என்பது பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளும் ஒரு வியாபாரப் பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றி கொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை.

எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும் போது, முழு உலகமே கவலை கொள்ளலாம்ல் கண்டனங்கள் தெரிவிக்கலாம்; கண்ணீர் வடிக்கலாம். ஆயினும், எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது சுதந்திரத்தை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு, விடுதலைப் போராளிகளாகிய நம்முடையது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


வீழ்ந்தவர்கள் எல்லாம் விதையாகிப் போனதால் தான் விடுதலைப் போர் இன்றும் தொடர்கின்றது.

வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தி அல்ல. அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்து சூத்திரப் பொருளும் அல்ல, வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஒரு வெளிப்பாடு, மனிதனே வரலாற்றைப் படைக்கிறான். மனிதனே தனது தலைவிதியையும் நிர்ணயிக்கிறான்.


 
உலகில் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்கமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுமக்களே.

விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளர்களாக இராது, நேரடிப் பங்காளிகளாக மாற வேண்டும்.

உயிரோடு எதிரிகளின் கைகளில் பிடிபடுவதைவிட கௌரவமாகச் சாவதை விரும்புகிறோம்.

நாம் சமாதானத்திற்கும் தயார். போருக்கும் தயார். நாம் சமாதானத்தின் கதவை திறப்பதா? அல்லது யுத்தத்தின் பாதையில் செல்வதா ? என்பதை எதிரி தான் தீர்மானிக்க வேண்டும். நாம் சமாதானத்தின் கதவுகளை திறந்து விட்டிருக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் மக்களிடமிருந்து வேறுப்பட்டவர்கள் அல்லர்; விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். புலிகள் தான் மக்கள். மக்கள்தான் புலிகள்.

பிரிவினைவாதம் என்பது தவறான சித்தாந்தம். இதனை எங்கள் போராட்டத்திற்கு பிரயோகிக்க முடியாது. எங்கள் இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடி வருகிறோம்.

தமிழீழக் காவல் துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப் பிடித்து கூண்டில் நிறுத்துவது தமிழீழக் காவல்துறையின் நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் லட்சியமாகும்.

மாவீரர் நாள் எமது தேசத்தின் துக்க நாள் அல்ல; நாம் கண்ணீர் சிந்திக் கவலை கொள்ளும் சோக நாளும் அல்ல. இன்றைய நாள், ஒரு தேசிய எழுச்சி நாள், எமது தேசம் சுதந்திரம் வேண்டி உறுதி பூணும் புரட்சித் தினம்.

எமது விடுதலைப் போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாக நிற்க வேண்டும்.

இந்தியாவின் உதவியை நம்பி மட்டுமல்லாது ஏதேனும் ஒரு வெளியார் உதவியை நம்பி நாம் விடுதலை போரைத் துவக்கவில்லை. நாம் உயிருள்ளவரை போராடுவோம். நான் இறந்தால், வேறு ஒருவர் அப்பொறுப்பை ஏற்றுக் கொள்வார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சொன்னது போல் எந்த ஒரு விடுதலைப் போராளியும் தன்னால்தான் விடுதலை கிடைக்கும் என தன்னை ஏமாற்றிக் கொள்ள முடியாது. விடுதலையைப் பெறாமல் இன்றைய தலைமுறை இறந்தால், அடுத்த தலைமுறை அப்போரைத் தொடரும்

எதிரிகளை மன்னிப்பதோ தண்டிப்பதோ கடவுள் செய்வார்… அவர்களை கடவுளிடம் அனுப்பும் வேலையை மட்டுமே நாம் செய்ய வேண்டும்



வெளியீடு

மேதகு பிரபாகரனின் புரட்சிகரச் சிந்தனைகள்
தமிழன் பாபு
பக்:128, ரூ.60/-
வள்ளலார் பதிப்பகம்
போளூர் – 606 803
திருவண்ணாமலை மாவட்டம்.
பேசி : 99404 48599

Friday, May 4, 2012

தேசிய விலங்கு : பாலா

ஒரு கவிதை நூலுக்கு அதிகம் பேர் அணிந்துரை எழுதிய பிரிவு என்று கின்னஸ் சாதனையில் இருந்தால் கண்டிப்பாக இந்த நூலை பரிந்துரை செய்யலாம்.

வைகோ
பழ.நெடுமாறன்
காசி ஆனந்தன்
அறிவுமதி
சீமான்
வே.ஆனைமுத்து
கொளத்தூர் மணி
தியாகு
வ.கௌதம்
பாரதி கிருஷ்ணகுமார்
மற்றும்
நக்கீரன் கோபால்

- என்று 11 பேர் அணிந்துரை எழுதியுள்ளார்கள். கவிதைகளை விட அணிந்துரை படிக்கவே அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆண்டு மலர் படிக்கும் எண்ணம் தொற்றிக் கொள்கிறது. அதே சமயம் எந்த கவிதையும் குறை சொல்லுவதற்கு இல்லை.

பிரபாகரனின் அட்டைப்படம், தலைப்பும் இந்த கவிதை நூலை வாசிக்க வைத்தது. நக்கீரனின் அவ்வபோது ‘நச்’ கவிதைகளில் பாலா எழுதியுள்ளார். அதன் பிரபதிபலிப்போ என்னவோ ஒவ்வொரு கவிதைகளும் ‘நச்’ என்று ஐந்து, ஆறு வரிகளில் எழுதியுள்ளார்.

முன்னொரு காலத்தில்
முறத்தால்
புலி விரட்டிய
தமிழச்சி…
இன்று புலியாகிவிட்டாள்…!

ஈழ கனவு சிலருக்கு பேச்சாகவும், வீரமாக வரும்... தோழர் பாலா கவிதையாக வந்துள்ளது. கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய ‘பிணம் தின்னும் தேசம்’ ஈழ கவிதை நூலுக்கு பிறகு நான் வாசித்த ஈழ கவிதை நூல் இது தான்.

தமிழர்களின் ஒற்றுமையின்மை ஒற்றுமையின் சின்னமான காக்கை வைத்தே சொல்லியிருக்கிறார்.

காக்கைகள்
காலி செய்து விடும்
தமிழகத்தை விட்டு,
ஒற்றுமையில்லாத
தமிழனை பார்த்து
ஒரு வேளை நாமும்
கெட்டுப் போவோம் என்று… !

இனப்படு கொலையில் ராஜபக்சே ஹிட்லருக்கு குருவாக இருக்கிறார் என்பதை இந்த வரி கவிதைகள் சொல்லும்.

இனவெறியில்
ஹிட்லருக்கு கொடுக்கலாம்
ராஜபக்சே
பட்டம்…!

ஹிட்லரும் வல்லரசு உதவியோடு இனப்படு கொலை செய்திருந்தால் அவருக்கு இந்த உலகம் கதாநாயகன் பட்டியலில் சேர்த்திருக்கும். இன்று ராஜபக்சேவுக்கு தெரிந்தது ஹிட்லருக்கு தெரியாமல் போனது.

கள்ளத்தோனி இறந்த உயிர்களை எட்டு வார்த்தை கவிதையில் உருக்கமாக சொல்லியிருக்கிறார் பாலா.

படகுகளில்
சில சமயம்
சவாரி
பல சமயம்
சமாதி…!

ஒரு முறை வனப்புலி அழிந்து வருவதை பற்றின ஆவணப்படம் ஒன்று அறிவுப்பு பார்த்தவும், என் நண்பர் ஒருவர் ‘விடுதலைப் புலிகள்’ பற்றின படமா ? என்று கேட்டார். இந்த கேள்வி கேலியாக இருந்தாலும், அதனுள் ஒழிந்து இருக்கும் உண்மை எவ்வளவோ இருக்கிறது.

வனப்புலிகளுக்காக
வருந்தும் தேசமே
எம்
இனப்புலிகள்
அழிப்பிற்கு மட்டும்
உன் துப்பாக்கி
உதவியோ ?

காட்டில் மான் வேட்டை அனுமதியில்லை. புலிகளை கொன்றால் சட்டப்படி குற்றம். கடலுக்கு மீன் பிடிக்க 45 நாட்கள் தடைக்கூட உள்ளது. ஆனால், மூன்று வருடங்களாக இடைவேளை இல்லாமல் ஈழ தமிழர்கள் கொடுமைப்படுத்து வருதை மட்டும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக தமிழர்கள் !!!

மனிதர்கள் மதம் மாறும் மத்தியில் கடவுளை மதம் மாற்றியது போன்ற கற்பனையை கண்டிப்பாக பாராட்டலாம்.

கண்ணை மூடிக்கிடக்கும்
புத்தனே !
கண்களைத் திற
உன்னை
யுத்த மதத்திற்கு மாற்றிவிட்டார்கள்

அதிக பக்கங்கள் கொண்ட அணிந்துரையும், விலையும் மட்டுமே என்னை முகம் சுழிக்க வைத்தது. மற்றப்படி இந்த கவிதைகளை அரை மணி நேரத்தில் வாசித்துவிடலாம். ஒவ்வொரு கவிதைகளும் ஈழ உணர்வை பதிவு செய்ததோடு இல்லாமல் வாசகர்களையும் உணர வைத்திருக்கிறார்.

***
நூல் விபரம் :
 
தேசிய விலங்கு
பாலா

பக். 62, விலை. ரூ.60/-
விசை பதிப்பகம்
98652 80440

Monday, March 19, 2012

கூடுகள் சிதைந்தபோது :அகில்

அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ சிறுகதை தொகுப்புக்கு பிறகு நான் படித்த ஈழ சிறுகதை நூல் ‘கூடுகள் சிதைந்தபோது’. ஈழத்தின் புனைக்கதை என்று சொல்ல மனம் வரவில்லை. எங்கோ ஈழத்தில் அல்லது கனடாவில் இப்படி நடந்திருக்கும் என்று தோன்றும் அளவிற்கு கதைகள் உள்ளது. இந்நூலில் மோத்தம் பதிநான்கு கதைகள்.

1.வலி
கனடாவில் வாழும் ஈழ தமிழன் மயூரன் அசைவம் இல்லாமல் உணவு இறங்காது. ஹாக்கியில் கனடா வெல்ல வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு கனடா வாசியாக மாறிவிட்டவன். அவன் அசைவம் சாப்பிடுவதை கைவிடும் காரணத்தை சொல்லும் கதை.

2. அம்மா எங்கே போகிறாய் ?
ஈழத்தில் விசாலாட்சியிடம் பாசமாய் இருந்த மகன், மகள் கனடாவில் தங்களுக்கென்று குடும்பம் வந்ததும் சுயநலமாக மாறுகிறார்கள். விசாலாட்சியின் பென்ஷன் பணத்திற்காக இருவரும் உருமை கோருகிறார்கள். இறுதியில் விசாலாட்சி என்ன முடிவு எடுக்கிறாள் ?
என்பது தான் கதை.



3. பதவி உயர்வு
பிரிகேடியர் சில்வா சிங்கள இராணுவத்தில் ஜென்ரல் பதவி அடைய பல உயிர்களை கொன்றவன். அவன் மகன் அசோகா சில்வாவுக்கு உயிரின் அருமையஒ உணர்வது தான் கதை.

4. ரேடியோப்பெட்டி
முதுமைக் காதலுக்கு நினைவுச் சின்னமாக இருக்கும் ரேடியோப்பெட்டியை இயங்க வைக்க துடிக்கும் ஒரு மூதாட்டியின் முயற்சியும், அவரது காதலும் தான் கதை.

5 பெரிய கல் வீடு
சிங்கள இராணுவத்தால் ஈழத்தில் எத்தனையோ வீடுகள் போலிவு இழந்துள்ளது. பல கல்வீடுகள் கல்லாக மாறுயுள்ளது. அவர்களின் குண்டுகளுக்கு தப்பிய பெரிய கல்வீடு உரிமைக்காக வேண்டுவதே கதை.

9. கூடுகள் சிதைந்தபோது
இந்த நூலின் தலைப்பில் அமைந்த கதை. நெஞ்சை நெகிழ வைக்கும் களம். சிங்கள குண்டுகளுக்கு பயந்து தன் அன்பு மனைவி, குழந்தை பிணத்தை விட்டு ஓடிவந்தவனின் குற்றவுணர்வுடன் புலம்புகிறான். தான் தப்பி வந்ததை நினைத்து தன்னை தானே நொந்துக் கொள்கிறான்.

12. அண்ணாநகரில் கடவுள்

இந்த நூலின் சென்னையை கதைக்களமாக கொண்ட ஒரே கதை. படிக்கும் போது புதுமைபித்தனின் கதை ( ‘கடவுளும், கந்தசாமியும்’ என்று நினைக்கிறேன்), கடவுள் படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அண்ணாநகரில் இறங்கிய கடவுள் மனிதர்கள் நம்பாமல் புறக்கணிப்பது தான் கதை.

ஓர் இதயத்திலே, உறுத்தல் போன்ற கதைகள் வேறு களத்தில் படித்த ஞாபகம் இருந்ததால் என்னை பெரிதாக கவரவில்லை.

கண்ணீர் அஞ்சலி, கிறுக்கன், இது இவர்களின் காலம், வெளியில் எல்லாம் பேசலாம், தேடல் போன்ற சிறுகதைகளை நூல் வாங்கி படித்துக் கொள்ளுங்கள்.

பல கதைகள் கனடாவை கதைக்களமாக கொண்டுள்ளது. ஈழத்தைப் பற்றி பல பதிவுகள் நூலாக வந்துள்ளது. ஆனால், ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் கதையை பதிவு செய்யும் நூல் மிக அறிதாக உள்ளது. புனைக்கதை மூலம் அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) பதிவு செய்துள்ளார். இவர் 1991 இல் புலம்பெயர்ந்து இந்தியா, இலண்டன் ஆகிய நாடுகளில் சில காலங்கள் வசித்து தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். www.tamilauthors.com என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார்.

34 பக்கங்கள் அணிந்துரை, என்னுரை என்று வாசகன் படித்து விட்டு முதல் கதையை படிக்க வேண்டியதுள்ளது. 3 பேரின் அணிந்துரை அவசியம் அற்றது என்று தோன்றுகிறது.

கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களில் வாழ்க்கையை "கூடுகள் சிதைந்தபோது" சிறுகதை நூல் மூலம் பதிவு செய்த அகிலின் முயற்சி பாராட்டியாக வேண்டும்.

இந்த நூலை வாங்க.... இங்கே.

கூடுகள் சிதைந்தபோது
அகில்
பக் : 184, விலை. 120/-
வம்சி புக்ஸ்
19, டி.எம் சாரோன்
திருவண்ணாமலை,
செல் : 94448 67023, 04175-251468

Thursday, October 20, 2011

முள்வலி : தொல். திருமாவளவன்

ஈழ நாடு மலர வேண்டும் என்று விரும்பிய கோட கோடி தமிழர்களில் நானும் ஒருவன். ஆயுத போராட்டம் சிறந்த வழி என்று எதிரிய நமக்கு உணர்த்திய பிறகு, அந்த பாதையில் ஈழம் மலரும் என்று இருந்தேன். 2009ல் தேர்தல் முடிவு அடுத்த ஐந்தாண்டுக்கான இந்திய வளர்ச்சியை கேள்விக்குறியாக்கியது போல், ஈழக் கனவையும் கேள்விக் குறியாக்கியது. பிரபாகரன் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் அவரை தவிர்த்து ஈழத்தை தனியாக பார்க்க முடியாது என்பது நிதர்சன உண்மை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? இல்லையா ? என்ற விவாதத்தை தவிர்த்து அடுத்து மிஞ்சிய உயிர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

அதே சமயம், ஈழத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் நடத்தும் எந்த ஒரு கட்சி (இந்த நூலின் ஆசிரியர் உட்பட) மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.

போருக்கு பிறகு இலங்கைக்கு சென்ற ஆறு பேர் கொண்ட குழுவில் திருமாவை தவிர வேறு யார் தகவல் சொன்னாலும் நம்பும் படியாக இருக்காது. காரணம், மற்ற ஐவர் காங்கிரஸ், தி.மு.க கட்சியினர். தங்கள் ஆட்சிக்கு பாதிக்க அளவில் தான் தகவல் வெளியே விடுவார்கள். இந்த நூலில் கூட, திருமா தி.மு.க வுடன் தனது உறவு பாதிக்க கூடாது என்பதில் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார்.



அதிகம் பேச வேண்டும் என்று நினைத்த இடத்தில் கூட்டம் முடிந்து விட்டதாக குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார். திருமாவால் மாவட்ட ஆட்சியாளரை டி.ஆர்.பாலு கண்டித்துள்ளார். கலைஞரிடம் அதைப் பற்றி குறிப்பிடும் போது அவரை ‘டேரர்’ பாலு என்றே குறிப்பிட்டுள்ளார். கலைஞரும் நகைச்சுவை உணர்வுடனே எடுத்துக் கொண்டார்.
’போருக்கு பிறகு ஈழம்’ என்ற பதிவில் இந்த புத்தகம் இடம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை . இதில் தகவல் மறைக்க பட்டிருக்கலாம். ஆனால், மிகைப்படுத்தி சொல்லப்பட்ட தாக தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராம சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரவூஸ் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்கள், ‘பிளாட்’ இயக்கத் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத் தலைவர் சிறீகரன் ஆகியோரையெல்லாம் 10-10-2009 அன்று மாலை ‘இந்தியா அவுஸ்’ என்ற தூதருக்கான இல்லத்தில் சந்தித்தோம். தனித்தனியே அந்த சந்திப்புகள் நடந்தன. தமிழினத்துக்கு இவ்வளவு பெரிய பாதிப்புகள் நேர்ந்துள்ள நிலையிலும், தமிழருக்கான இயக்கத் தலைவர்கள் நம்மை சந்திக்க ஒன்றாக வரவில்லையே என்று வருந்தினேன்.

என்ற திருமா மன வருத்தத்தோடு மூன்றாவது அத்தியாயம் தொடங்குகிறது. அவருக்கு மட்டுமல்ல, மிஞ்சிய உயிர்களை காப்பாற்ற நினைக்கும் அனைவருக்குமே இது வருத்தம் தரும். இவர்களது ஒற்றுமையின்மையில்லாமல் அகதி மீட்பு பணியில் கால தாமதம் ஏற்படலாம்.
பல இடங்களில் 2002, 2004ல் ஈழத்து வந்து சென்ற தன் பயண நினைவுகளை குறிப்பிடுகிறார். 2004 பயணத்திற்கும், 20009 பயணத்திற்கும் ஒரே வித்தியாசம், அன்று வரவேற்றது விடுதலை புலிகள், இன்று வரவேற்பவர் சிங்களவர்கள்.

சில முகாம்களை வீடியே பதிவு செய்வதை கண்டித்த போது அதை கவலைப்படாமல் படம் பிடித்தேன் என்கிறார். ஆனால், அதை ஊடகப்பார்வைக்கு கொடுக்கப்பட்டதா என்று இதுவரை தெரியவில்லை.

திருமா வீடியோ பதிவு செய்யும் போது, ஒரு பெரியவர் அவரிடம்,
”எங்களை வைத்து நீங்கள் அரசியல் பண்ணுகிறீர்கள். பிராந்திய நலனுக்காக எங்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறீர்கள். இந்தியாவும் உலக நாடுகளும் எங்களை ஏமாற்றிவிட்டன. நாங்கள் யாரும் புலிக்கொடி பிடித்தவர்கள் இல்லை. அப்பாவி சனங்கள் ! எங்களுக்குப் புலிச் சாயமில்லை. நான் சொல்லுவேன். திருமாவளவனுக்கு புலிச் சாயமுண்டு. புலிக்காக நீங்கள் இந்தியாவில் கொடி பிடிக்கிறவர், நாங்கள் அப்படியில்லை. ஆனாலும், எங்களை இப்படி முள்வேலிக்குள் ஏன் இந்த அரசாங்கம் அடைத்து வைத்துக் கொடுமை செய்கிறது. எங்களை எங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள்; அது போதும் !”.

” எங்களுக்கு நம்பிக்கையில்லை. காங்கிரசும் தி.மு.கவும் ஒன்று போலத்தான் தெரிகிறது”

”எங்கள் கை, காலை வைத்து நாங்கள் உழைத்துப் பிழைத்துக் கொள்வோம். எங்களை விட்டால் போதும். வேறொன்றுமே வேண்டாம். இப்படிக் கையேந்திப் பிழைக்க கேவலமாக இருக்கிறது !”

”பாம்புக் கடியால் பல பேர் இறந்திருக்கிறார்கள். ஏராளமான அளவில் பாம்புகள் உள்ளன. கொசுக்கடியும் தாங்க முடியவில்லை”


தன் உள்ள குமுறலைக் கொட்டியுள்ளார் அந்த பெரியவர். முகாமில் உள்ளவர்கள் தங்கள் முகாமில் வசதியின்மை பற்றி குறிப்பிட்டும் போது அங்குள்ள அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.

ராஜபக்‌ஷேவுடன் சந்திப்பின் போது, இராணுவத்தைப் பற்றி பஷிலிடம் கேளுங்கள் என்றார். பஷில் குழு கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதில் தான் அளித்திருக்கிறார். இவர்களிடம் என்றைக்கும் தெளிவான பதில் வராது என்பது நாம் அறிந்த்து என்றாலும், அழித்தவனிடம் சென்று தமிழர் பாதுகாப்பை பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் வருத்ததுக்குரியது.

இந்த நூலை முடிக்கும் போது, ‘அண்ணன் இருக்கிறார்’, ‘ ஈழம் மலரும்’ என்ற நம்பிக்கை வார்த்தைகளில் முடிக்கிறார். இப்போது தேவை நம்பிக்கை வார்த்தையல்ல... இருக்கும் உயிர்களை காப்பாற்றும் செயல் திட்டங்கள். முகாமில் இருப்பவர்களுக்கான விடுதலை. அவர்களுக்கான வாழ்வாதாரம்.

முகாமில் ஒரு பெரியவர் திருமாவிடம், “”எங்கள் கை, காலை வைத்து நாங்கள் உழைத்துப் பிழைத்துக் கொள்வோம். எங்களை விட்டால் போதும். வேறொன்றுமே வேண்டாம். இப்படிக் கையேந்திப் பிழைக்க கேவலமாக இருக்கிறது !” என்றார்.

இந்த நிலைமை மாறினால் போதும்.


பக் : 142, விலை. ரூ.65/-
விகடன் பிரசுரம்,
757, அண்ணா சாலை,
சென்னை - 600 002

Thursday, May 20, 2010

'மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம் ' - சிங்கள தளபதி

லண்டன்: எங்களால் பிடிக்கப்பட்ட, எங்களிடம் வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்த அனைத்துத் தமிழர்களையும் சித்திரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தோம் என ஈழப் போரின் கடைசிக் கட்டத்தின்போது களத்தில் இருந்த ராணுவ தளபதி ஒருவரும், ஒரு ராணுவ வீரரும் சானல் 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.

மேலும் தமிழ் இளைஞர்களை கைகளையும், கண்களையும் கட்டி துப்பாக்கிகளால் பின்னாலிருந்து கொடூரமாக ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற காட்சிகளை இந்த ராணுவ வீரர்தான் படம் பிடித்து சானல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ளார் என்றும் சானல் 4 தெரிவித்துள்ளது.

பிரபாகரனின் இளைய மகன் சித்திரவதை செய்து கொலை:

இதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகனை உயிருடன் பிடித்து கொடூரமாக சித்திரவதை செய்து, பிரபாகரன் இருப்பிடத்தை அறிந்து கொண்ட பின்னர் அந்த சின்னஞ் சிறுவனையும் மிகக் கொடூரமாக ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் அந்த சிங்கள ராணுவ வீரர் கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை முன்பு சானல் 4 வெளியிட்டது.

கண்களையும், கைகளையும் கட்டிய நிலையில் பின்னாலிருந்து மிருகத்தனமாக தலையில் சுட்டு அந்தத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இது உண்மையான வீடியோதான் என பின்னர் நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அந்த வீடியோ தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெறும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை ராணுவ சிப்பாய் மற்றும் போர் முனையில் இருந்த ராணுவ தளபதிகளில் ஒருவருடைய பேட்டியை தற்போது சானல் 4 வெளியிட்டுள்ளது.

அதில் அந்த ராணுவ வீரர் கூறுகையில், எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் யாரையும் உயிருடன் வைத்துப் பாதுகாக்க்கும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை. எனவே அனைவரையும் படுகொலை செய்து விட்டோம். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்க வேண்டும்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்தபோது, அவர்களை முதலில் கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். அதன் பின்னர் கொலை செய்தோம்.

போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம் என்றார்.

இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் சனல் 4 செய்தி நிறுவனம் கேட்டபோது,

இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர் அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.

சானல் 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான வீடியோவை அனுப்புங்கள். அதன் பின்னர்தான் அது குறித்து கருத்து கூறமுடியும்.

இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார் என்று இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய வீடியோ தகவல் குறித்து சானல் 4 தொலைக்காட்சியின் வெளியுறவு செய்தியாளர் ஜோனதன் மில்லர் கூறுகையில், புரட்சிகளையும், மக்கள் எழுச்சியையும் அடக்க இனிமேல் உலக நாடுகள் இலங்கை மாடலை உதாரணமாக எடுத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஈவு இரக்கமின்றி சரணடைந்தவர்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ள இலங்கைப் படையினரின் செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் வைக்கப்பட்ட வேட்டு ஆகும் என்றார்.

சரணடைய வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை அப்படியே சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சேதான் உத்தரவிட்டார் என்று முன்பு பொன்சேகா கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது சானல் 4 வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பேட்டிஅளித்துள்ள ராணுவ அதிகாரியும், வீரரும் கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளும், விடுதலைப் புலிகளும், பா. நடேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் படுகொலை செய்யப்பட கோத்தபயாதான் காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.

கோத்தபயாதான் இதைச் செய்ய உத்தரவிட்டார் என்பதற்கு மேலும் உறுதியான ஆதாரம் கிடைத்தால், ஹிட்லரை விட மிக மிக மோசமான கொலைகாரனாக கோத்தபயா உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சர்வதேச பிரச்சினைகளுக்கான குழுமம், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை தேவை என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ தகவல் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது- சர்வதேச சமுதாயம் சீரியஸாக இதை கருதி செயல்பட்டால்.

நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

Sunday, October 18, 2009

ஈழ கவிஞன்

எதற்காக எனக்கு பாராட்டு ?
யாருக்கு வேண்டும் உங்கள் பூ மாலை.. ?

என் கையாளகாத தனத்திற்கு
எதற்கு விருது ?
புலம் பேர்ந்தவர்களின்
புலம்பலை பதிவு செய்ததற்கு
சால்வை எதற்கு ?

மிஞ்சியவர்களை
காப்பாற்ற முடியாமல்
பேனா பிடித்து
எழுதும் என் போன்றோர்களால்
உணர்வுகளை மட்டுமே
தட்டி எழுப்ப முடியும் !
உயிர்களை அல்ல...!!

எதற்காக எனக்கு பாராட்டு ?
யாருக்கு வேண்டும் உங்கள் பூ மாலை.. ?

**

பாப்லோ நெருடா கவிதைகள் படிக்கும் போது எனக்கு தோன்றிய கவிதை.

Tuesday, October 6, 2009

படித்ததில் பிடித்தது : ஈழ கவிதைகள்

நண்பர் ஒருவர் எனக்கு SMSயில் ஈழ கவிதைகளை அனுப்பியிருந்தார். அதில் எனக்கு பிடித்த கவிதையை தொகுத்து பதிவு ஏற்றியுள்ளேன்.



முடி சூடிய தமிழினம்
முள்வேளி கம்பிக்குள் !

- ஈழபாரதி, புதுக்கோட்டை

**

சிங்கள பெண்கள்
உதட்டு சாயம்
ஈழ தமிழர் குருதியில் !

- கணேசன், காங்கேயம்

**

பணிக்கூடம் உடைத்து
தொப்புல் கொடி அருத்தார்கள்
துடிக்கிறது ஈழம் !

- அமீர்ஜான், திருநின்றவூர்

**

அம்மனமாய் தமிழன்
அகிலமே பதைக்கிறது
உடன் பிறப்புக்கு தமிழ் மாநாடு !

- ஏழைதாசன், புதுக்கோட்டை - 2

**

புத்த தேசத்திற்கு
ஆயுதம் கொடுத்தது
காந்தி தேசம் !

- எஸ்.விஜயகுமார், புதுக்கோட்டை

**

ஆனாதையாக அமைதி
தத்தெடுக்க துடிக்கும் ஈழம் !

- ஜஸ்டின், கொடைக்கானல்.

LinkWithin

Related Posts with Thumbnails