வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, February 26, 2020

The Forgetten Army - Web Series

ஐ.என்.ஏ குறித்து சொல்லும்போது நேதாஜியோடு தொடர்புடையாதாகவே படங்கள் வந்திருக்கிறது. அல்லது கதையில் ஐ.என்.ஏ ஒரு பகுதியாக வந்திருக்கிறது.

‘The Forgetten Army‘ ஐ.என்.ஏ தொடங்குவதற்கும், முடிந்தப் பிறகுமான படம்.

சிங்கப்பூரில் ஜப்பானியர்களால் கைதான இந்திய பிரிட்டிஷ் இராணுவத்தினர் ஐ.என்.ஏவில் சேர்கிறார்கள். பலருக்கு ஜப்பானியர்கள் தங்களை எப்படி நடத்துவார்கள், அவர்கள் தங்களை பயன்படுத்துகொள்வார்கள் என்ற அச்சமிருந்தது. ஆனால், நேதாஜியின் பேச்சை கேட்டு பலரும் ஆரம்பவமாக ஐ.என்.ஏவில் சேர்கிறார்கள்.



பர்மா வரை முன்னேறிய ஐ.என்.ஏ ஜப்பானின் தோல்வியால் போரில் முன்னேற முடியாமல் போகிறது. அனைவரையும் முடிந்த வரை பர்மாவுக்குள் தப்பி செல்லுங்கள் என்று அறிவுரைக் கூறப்படுகிறது. ஒரு சிலர் பிரிட்டிஷ் படையை எதிர்கொள்ள வேண்டும் என்று போரிட்டு இறக்கிறார்கள். 1996ல் பர்மாவில் யுத்தத்திற்காக நிலைமை மாறாமல் அப்படியே இருக்கிறது.

இரண்டு காலக்கட்டத்தில் கதை தொடர்புபடுத்திய திரைக்கதை அமைந்திருக்கிறது.

ஒரு காலத்தில் ஐ.என்.ஏ சமூக விரோதிகளாக பார்க்கப்பட்டார்கள் என்பதையும், இன்றைய போராளிகள் சமூக விரோதிகள் என்று முத்திரை குத்தப்படும் சூழ்நிலை மாறவேயில்லை.

சுதந்திர அடையும் போராட்டத்தை விட பெற்ற சுதந்திரத்தை தக்க வைத்துகொள்ளும் போராட்டம் மிகவும் கடினம் என்பதை ‘The Forgetten Army‘ web series உணர்த்துகிறது.

Monday, February 10, 2020

கலாவிக் ( அறிவியல் புனைவு)

சுஜாதா பிறகு தமிழில் அறிவியல் புனைவு இவ்வளவு ஜாலியாக யாரும் எழுதியில்லை.

இரண்டு மணி நேரத்தில் வாசித்து விடலாம்.ஆகஸ்ட், 2020 புவி கிரகத்தில் ஐந்து பேர் கொண்ட குழு அண்டார்டிக்காவில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். 2368 கி.பி ஆண்டில் கலாவிக் என்ற கிரகத்தில் இயந்திர மனிதனை டாக்டர் நீனா என்ற பெண் ஆராய்ச்சி செய்கிறாள். புவியில் இருக்கும் விஞ்ஞானியில் நினைவுகள் கலாவிக் கிரகத்தில் இருக்கும் இயந்திர மனிதனுக்கு வருகிறது. இயந்திர மனிதனுக்கு இருக்கும் நினைவுக்குள் புவி கிரகத்தில் இருக்கும் விஞ்ஞானிக்கு வருகிறது. இரண்டு நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் நடக்கிறது.

எதிர்காலத்தில் இருந்த ஒருவனுடைய நினைவு எப்படி நிகழ்காலத்தில் வாழும் மனிதனுக்கு வந்தது? நிகழ்காலத்தில் வாழும் மனிதனின் நினைவு எப்படி எதிர்காலத்தில் வாழும் இயந்திர மனிதனுக்கு வந்தது? டாக்டர் நீனா, விஞ்ஞானிகள் எல்லோரும் குழம்புகிறார்கள். அதன்பிறகு என்ன என்பதை நாவலை வாசிக்கவும்.

இலக்கிய நாவல், வரலாற்று நாவல், குடும்ப பெண்கள் நாவல் என்று அதற்காக தனி வாசகர் கூட்டம் இருக்கிறது. ஆனால், அறிவியல் புனைவுக்கு வாசகர்கள் இருந்தாலும் அவர்களுக்கான படைப்புகள் தொடர்ந்து வராமல் இருப்பது துரதிஷ்டம்தான். அந்த துரதிஷ்டத்தை போக்க “கலாவிக்” சரியான நாவலாக இருக்கும்.

நாவலின் குறை என்று சொன்னால் புத்தகத்திற்கு பயன்படுத்திய Fontம், பக்க வடிவமைப்பும் தான் சொல்ல வேண்டும். மிகவும் சுமார்.

ணையத்தில் வாங்க...

Thursday, March 14, 2019

தைரியமே ஸ்ரீ லட்சணம் !!

’பாபநாசம்’ படம் வெளிவந்த சமயம். 

ஒரு பெண் எழுத்தாளரிடம் பேசும் போது அவர் கூறியது, 

“பாபநாசம் தவறான கருத்த சொல்லுது. தான் குளிக்கிறத படம் எடுத்தவன நினைச்சு அந்த பொண்ணு எதுக்கு பயப்படனும். எதுக்காக கொலை செய்யனும்? தான் குளிக்கிறத அனுமதியில்லாம படம் எடுக்குற ஆண்ணுக்கு இல்லாத வெக்கமும் பயமும், பெண்ணுக்கு எதுக்கு வரனும்? இதுல அந்தப் பொண்ணு மேல என்ன தப்பு இருக்கு? தப்புயில்லாத போது எதுக்கு பயப்படனும்” 

“அந்த வீடியோ வந்தா தன் குடும்பத்துக்கு அவமானம் நினைக்கிறது இயல்பு தானே!” என்றேன். 

“அந்த அவமானத்த இன்னும் எத்தன நாளைக்கு இந்த சினிமா விதைக்கப் போகுது. அவள் அனுமதியில்லாம எடுக்குற வீடியோவுக்கு அவ எப்படி பொறுப்பாக முடியும். வீடியோ எடுத்தவன திட்டனும். போலீஸ் கம்ளைண்ட் கொடுக்கனும். அப்படிதான் படம் எடுக்கனும். அப்போதான் இந்த நிலமை மாறும்.” என்றார். 

ஒரு வேலை ’பாபநாசம்’ படத்தில் அந்தப் பெண் தைரியமாக இருந்திருந்தால்… 

”உனக்கு தெரியாம. நீ குளிக்கிறத வீடியோ எடுத்திருக்கேன். நான் சொன்னப்படி கேக்கலனா… நான் நெட்டுல போட்டுடுவேன்.” 

“போட்டுக்கோ போடா…” என்று அந்தப் பெண் தைரியமாக சொல்லி அவள் வேறு வேலை பார்க்க சென்றிருந்தால், அவன் இணையத்தில் வீடியோவை பகிர்ந்திருப்பான். தைரியமானப் பெண் கண்டிப்பாக காவல்துறைக்கு புகார் கொடுத்திருப்பாள். இன்னும் தைரியமானப் பெண்ணாக இருந்திருந்தால், அவன் இணையத்தில் ஏற்றும் முன்பே புகார் கொடுத்திருப்பாள். 

 வீடியோ எடுத்தவன் கைது செய்யப்பட்டிருப்பான். அவனுடைய குடும்பம் ஊர் முன்னால் அசிங்கப்பட்டிருக்கும். 

இணையத்தில் ஏற்றப்பட்ட குளிக்கும் வீடியோவை இரண்டு நாட்களில் நீக்கிவிடலாம். அதை எடுத்தவன் வாழ்நாள் முழுக்க பெற்றவர்களை கூட சந்திக்க முடியாமல் தவத்திருப்பான். 

அன்று அந்தப் பெண் எழுத்தாளர் சொன்னதை பொள்ளாச்சி கற்பழிப்பு சம்பவத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கிறேன். நான்கு பேர் கைதால் இந்தப் பிரச்சனை முடியப் போவதில்லை. இன்னும் நமக்கு தெரியாமல் எங்கோ ஒரு பெண்ணுக்கு அநீதி நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

பொள்ளாச்சி சம்பவத்தை ஒரு தந்தையாக எதோ ஒரு நாள் செய்தியாக இதை கடந்துப் போகமுடியாது. 

ஒரு வேலை காதலிக்கும் போது, அந்தப் பெண் அனுமதியோடு எடுத்த வீடியோவை வைத்து மிரட்டினால்… அந்தப் பெண் பயப்பட்டுதான் ஆக வேண்டுமே ! என்று நீங்கள் கேட்கலாம்.

அந்தப் பெண் காதலித்த நபர் தவறானவன். அந்த போலி காதலின் மிரட்டலுக்கு பயப்படுவதை விட பெற்றோர்களிடம் சொல்லி இரண்டு அடி வாங்கிகொள்வது நல்லது. அந்த பிரச்சனையில் மீண்டு வர வழி கிடைக்கும். 

போலீஸோ அல்லது அடியாளோ வைத்து மிரட்டினால் வீடியோ எடுத்தவனே தனது மொபைலிலிருந்து டெலிட் செய்வான். அதையும் மீறி அவன் வெளியிட்டால் என்ன செய்வது? சொந்த கணக்கில் tweet போட்டதை Admin போட்டதாக சொல்லும் உலகத்தில் வாழ்கிறோம். அந்த வீடியோவில் நீங்கள் இல்லை என்று மறுப்பது பெரிய விஷயமில்லை. 

Good Touch, Bad Touch சொல்லிக் கொடுப்பது போல் இந்த டிஜிட்டல் உலகத்தில் பெண் பிள்ளை தைரியத்தை அதிகமாக சொல்லி வளர்க்க வேண்டும். ஒரு முறை இதுப் போன்ற ஆட்களின் மிரட்டலுக்கு பயந்தால், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தை அவன் தீர்மானிப்பான் என்பதை புரிய வைக்க வேண்டும். 

பெண்களுக்கு தெரியாமல் பெண்களை வீடியோ எடுத்ததில் அவர்களின் தவறேதுமில்லை. ஆனால், மோசடி ஆட்களின் மிரட்டலுக்கு அடிபணியும் போது தான் பெண்களின் வாழ்க்கைக்கான தவறுகள் தொடர்கிறது. இதை பெண் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். 

”உன் அனுமதியில்லாம இல்ல அனுமதியோட… உன்ன போட்டோ, வீடியோ எடுத்தா அதுக்கு நீ பொறுப்பு இல்ல. தைரியமா இரு. எங்க கிட்ட வந்து சொல்லு.” என்று பெண் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுப்பது பெற்றோர்களின் கடமை. 

”ஒரு பெண்ணை அவள் அனுமதியில்லாமல் வீடியோ/போட்டோ எடுத்தால், உன்ன அரஸ்ட் பண்ணி ஜெய்யில போடுவாங்க. உன் வாழ்க்கையே பொய்விடும்” என்று ஆண் பிள்ளைகளுக்கு பயமுறித்து வளர்க்க வேண்டும். 

தைரியமாக வளர்க்க பெண் பிள்ளைகளை பயமுறுத்தி வளர்ப்பதும், தவறு செய்ய பய முறுத்தாமல் ஆண் பிள்ளைகளை தைரியமா வளர்க்கும் வரை இந்தப் பிரச்சனைகள் தொடரும்.

Wednesday, November 28, 2018

We Can Books இரண்டாம் ஆண்டில்

நாளை (நவம்பர் 29) We Can Books முதல் வருடத்தை நிறைவு செய்து இரண்டம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

ஒரு அலுவலகத்தில் பணிப்புரிந்து கொண்டு இதையெல்லாம் செய்கிறோமே என்ற சிறு உறுத்தல். ஒரே சமயத்தில் இரண்டு இன்னிங்ஸ் ஆடுபவன் மீது இந்த சமூகம் எப்போதும் பொறாமையை கண்ணோட்டத்தோடு பார்க்கும். இதையெல்லாம் மீறி புத்தகக் கடை எப்படி நடத்தப்போகிறோம் என்ற அச்சம் உள்ளூர இருந்தது. 





புத்தகக் கடை தொடங்கலாம் என்று யோசனை வரும் போது பலர் கூறியது கூட்டம் நடத்துவதற்கான இடமாக இருக்க வேண்டும். நூல் வெளியிட்டு விழா, விமர்சனக் கூட்டம் நடத்துங்கள். பிரபலங்களை அழையுங்கள். இன்று பல புத்தகக் கடை அப்படி தான் பிரபலமாகியிருக்கிறது. அப்ப்பப்பா.. எத்தனை யோசனைகள். அறிவுரைகள். 

முதலில் என்னால் புத்தகக் கடை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. மாத சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட கடைக்கு செலவு செய்யக் கூடாது என்று எனக்கு நானே வைத்துகொண்ட நிபந்தனை. முதலில் என் மேல் எனக்கு இருக்கும் சந்தேகத்தை தன்னம்பிக்கையாக மாற்ற வேண்டும். இரண்டாவது, எனக்கு நான் வைத்துகொண்ட நிபந்தனையை நான் மீறக் கூடாது. 

புத்தகக் கடை என்றால் வாடிக்கையாளர்கள் வர வேண்டும். அதுவும் தி.நகரில் கடை. வாடகை அதிகம். உதவிக்கு வேலை ஆள் ஒருவர். அவருக்கு சம்பளம். அதுவும் புத்தகத்துறையில் ஆர்வமானவராக இருக்க வேண்டும். எப்படியும் மாதம் ரூ.35000-40000 வரை செலவு இருக்கும். 

குகன். ஒரு தனி மனிதன். எந்த இலக்கிய அமைப்பின் ஆதரவில்லை. அரசியல் பின்னனி கிடையாது. பூர்வீக சொத்து என்று எதுவுமில்லை. இங்கிருந்து வந்தவன் என்று என்னை அடையாளம் காட்ட முடியாது. 

”ஒரு இலக்கிய அமைப்போடு சேர்ந்து செயல்படுங்கள். அவர்கள் மூலம் பல வாடிக்கையாளர்கள் வருவார்கள்” என்றார்கள். அது தற்காலிகமாக வருமானத்தை கொடுக்கும். ஆனால், நான் செல்லவிருக்கும் தூரத்திற்கு பயணத்திற்கு ஒரு இலக்கிய அமைப்பு ஆதரவு மட்டும் போதாது. அப்படி என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் விரும்பவில்லை. 

 பலர் கொடுத்த யோசனைகள், அறிவுரைகள் ஒதுக்கிவிட்டு எனக்கு தோன்றிய ஒரு யோசனை தான் “Book Distributors”. 

பெரிய பதிப்பகங்களில் புத்தகங்களை மொத்தமாக அதிக கழிவில் வாங்கி புத்தக விற்பனையாளர்களுக்கு விற்பது. எதிர்காலத்தில் பதிப்பகங்களை விட சொந்தமாக நூல் வெளியிடும் எழுத்தாளர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அவர்களால் எல்லாக் கடைகளுக்கும் புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாது. புத்தக விற்பனைக்கென்று ஒரு அலுவலகம் வைத்துகொள்ள முடியாது. அப்படி செய்ய முயற்சித்தால் அந்த எழுத்தாளரின் எழுதும் நேரத்தை பாதிக்கும். இந்த விஷயத்தை மனதில் வைத்து கொண்டு தொடங்கப்பட்டது தான் “We Can Books”. 

தற்போது வம்சி புக்ஸ், எதிர் வெளியீடு, மஞ்சுல், வளரி வெளியீடு என்று நான்கு பதிப்பக நூல்களை புத்தக விற்பனையாளர்களுக்கு (Cash & Carry Basisல்) கொடுத்து வருகிறோம். இன்னும் சில எழுத்தாளர்களில் புத்தகங்களை விநியோகம் செய்கிறோம். 

புத்தக விநியோகக்கடை என்பதால் வாசகர்கள் நேரடியாக வந்தால், புத்தகம் கொடுக்க மாட்டோம் என்பதில்லை. எங்களுக்கு புத்தக விற்பனையாளர்கள் எந்த அளவுக்கு தேவையோ, வாசகர்களில் நேரடி ஆதரவு தேவை. 

இரண்டாம் வருடத்தில் நுழைவது வெற்றி அல்ல… வெற்றியை நோக்கியப் பயணம். 

முகவரி : 
We Can Books 
57, Ground floor, PMG Complex, 
Near T.Nagar Bus Terminus 
T.Nagar, Chennai - 600017 
www.wecanshopping.com 
Ph : 9940448599, 044 - 4286 7570

Wednesday, August 8, 2018

புதிய பராசக்தி

இந்த நீதிமன்றம் பல வழக்குகளை கண்டுள்ளது, புதுமையான மனிதர்களை கண்டுள்ளது. இந்த வழக்கும் விசித்திரமானது அல்ல… 

வழக்காடவந்தவனும் நானும் புதுமையாவன் அல்ல… கோயிலில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கினேன், கடவுள் இல்லை என்று கூறினேன். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினேன். இப்படியெல்லாம் குற்றச் சாட்டப்பட்டிருக்கிறேன். 

நீங்கள் எதிர்ப்பார்ப்பீர்கள் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. இல்லை நிச்சமயாக இல்லை.

கோயிலில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கினேன். அனைத்து சாதியினர் புன்னியம் கிடைக்கவேண்டும் என்பதற்காக அல்ல. கோயில் ஒரு சாதியினருக்கு சொத்தாக மாறிவிடக்கூடாது என்பதற்காக. 

கடவுள் இல்லை என்று கூறினேன். அவர் எனக்கு அருள் வழங்காததற்காக அல்ல. கடவுள் என்ற பெயரில் பக்தியை வியாபாரமாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக… 

பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினேன். பெண்களின் வாக்குவங்கிகாக அல்ல. பெண்கள் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக… 

உனக்கு ஏன் அக்கரை. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கரை. என்று கேட்பீர்கள். 

நான் பாதிக்கப்பட்டவில்லை. நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட இல்லை. 

நடிப்பு என்பீர்கள். என் நடிப்பிலும் நல்ல எண்ணமே கலந்துள்ளது. 

ஆகாரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல. என்னை குற்றவாளி என்கிறீர்களே… இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும். 



பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருகின்றன. 

தென்றலை தீண்டியதில்லை நான். தீயை தாண்டியிருக்கிறேன். 

கேளுங்கள் என் கதையை. தீர்ப்பு எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள். தமிழ்நாட்டிலே இந்த திருவாரூலிலே பிறந்தவன் நான்.

தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதிவிலக்கா? சென்னை என் உயிரை வளர்த்தது. அண்ணாவின் தம்பியாக்கியது. ஐந்துமுறை முதல்வராக்கி அழகு பார்த்தது. ஆறாம் முறை முதல்வராக்கி காவிகளுக்கும், பச்சை இலைக்கும் சவாலாக இருக்கலாம் என்று தேர்தலில் போட்டியிட்டேன். 

தம்பியாக இருந்த ஒருவன் ம.ந.கூட்டனி என்ற பெயரில் எதிர்கட்சி அம்மையாரை முதல்வராக்கினார். அவர்கள் சரியான ஆட்சி செய்தார்களா? செய்யும் ஒவ்வொரு வேலையும் லஞ்சத்தை தட்சணையாக கேட்டார்கள்.

மருத்துவனையில் அந்த அம்மையார் அனுமதிக்கப்பட்ட எல்லாவற்றையும் மர்மமாகவே நடத்தினர். முதல்வர் உயிரோடு இருக்கிறாரா என்ற மக்களின் கேள்விக்கும் பதிலளிக்காமல் இருந்தார்கள். 

முதல்வர் மரணத்திற்கு பிறகு முதல்வர் பதவியை பச்சை குழந்தை பந்தை தூக்கி விளையாடுவது போல் விளையாடினார்கள். இந்தியளவில் தமிழனின் மானத்தை பறக்கவிட்டார்கள். கூவத்தூர் ரெஸார்ட்டில் குடித்தனம் நடத்தினார்கள். 

’திராவிடம்’ என்ற பெயரில் சுயமரியாதை வளர்த்து ஆட்சி செய்தவன் முன் அடிமைகள் மத்தியிலிருப்பவர்களுக்கு அடிப்படிந்தனர். GST, Sterlite, NEET, எட்டு வழி சாலை என்று மக்கள் பிரச்சனைக்கு மௌனமாக இருந்தனர். 

மோடி வருகைக்கு கருப்பு கொடிக்காட்டினோம், 2ஜி வழக்கை காட்டி பயமுறுத்தினர். வழக்கில் வென்றெடுத்தோம். செயல் தலைவரை ஆட்சியை கலைக்காததால் செயல்ப்படாத தலைவர் என்றனர். 

வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார். 

இல்லை யார் வழக்கிற்க்கும் இல்லை. அதுவும் என் வழக்குதான். தமிழ்நாட்டு மக்களின் வழக்கு.

தமிழ் மொழிக்காக வாழ்க்கை முழுதும் போராடினேன். வங்கியிலும், தேர்விலும் ஹிந்தியை கட்டாயமாக்கினார்கள். போராடினேன். திருநங்கைகளுக்கு வாக்குரிமை வழங்கினேன். பெண்களை மானபங்கப்படுத்துவர்களுக்கு அடைக்களம் கொடுத்தார்கள். போராடினேன். 

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தேர்தலில் முன்னுரை வழங்கினேன். மாட்டிறைச்சி என்ற பெயரில் பிற்படுத்தப்பட்டவர்களை தாக்கினான். போராடினேன். 

விமர்சனங்களுக்கு பதிலளித்து பழக்கப்பட்டவன் நான். கேள்வி எழுப்பும் விமர்சனர்களை மதத்தின் பெயர் கொண்டே அடக்க முயன்றனர். போராடினேன். 

போராடினேன்… போராடினேன்… நான் மடிந்தப் பிறகும் கல்லறை செல்லும் வரை போராடினேன். எனது போராட்டத்தின் கோரிக்கை நிறைவேற்றியிருக்க வேண்டும். சமூக சமநிலை உருவாக்கியிருக்க வேண்டும். அவர்கள் தான் செய்தார்களா ? நான் எதிர்த்ததை அனைத்தும் மீண்டும் கொண்டு வந்தார்கள்.

பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்? வாக்களித்த வாக்காளர்களின் குற்றமா ? நாம் தேர்வு செய்யாதவர்கள் ஆண்டு கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும் மக்களின் குற்றமா ? 

சாமியார்களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் காவிகள் குற்றமா? 

இந்த குற்றங்கள் களையப்படும் வரை கருணாநிதிகள் குறைய போவதில்லை. 

எனக்கு ஒதுக்குவதாக சொன்ன இரண்டு எக்கர் நிலத்தை பத்திரமாக பாதுகாத்துகொள்ளுங்கள். நாளை தமிழ்நாட்டு மக்கள் இந்த இடத்தை உங்கள் சடலத்திற்கு கூட தராமல் போகலாம்.

அடிமைகளை விரட்டுகள். காவிகள் தானாக திரும்பி செல்லும்…. 

வாழ்க திராவிடம்.

LinkWithin

Related Posts with Thumbnails