வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, September 21, 2009

கலைஞர் எழுத்துகளை வெட்டிய சென்சார் போர்ட் !!

இன்று சென்சாரின் 'A' Certificate வாங்கி படம் வெளிவருவதை பெருமையாக பல தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், பழைய தமிழ் சினிமா வசனத்தில் கூட அரசியல், ஆபாசம் இருக்க கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறது என்பதற்கு நான் படித்த இரண்டு சம்பவங்களை குறிப்பிட விரும்புகிறேன். இந்த சம்பவத்திலும் வெட்டப்படுவது கலைஞர் அவர்கள் எழுதிய எழுத்துகள் தான் !



1.

கலைஞர் அவர்கள் திருச்சி சிறைச்சாலை இருந்த நேரம். அவர் வசனம் எழுதிய 'திரும்பி பார்' படம் சென்சாருக்குச் என்ற போது இரண்டாயிரம் அடி வெட்டி விடச் சொல்லிவிட்டார்கள். 'திரும்பிபார்' படத்தின் கதை.... காதலித்த பெண் தந்தையை மணந்துக் கொள்கிறார். இருந்தும், அவளை அன்னையாக பார்க்காமல் காதலியாக பார்க்கும் இளைஞன் பற்றிய கதை. இதில், 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அன்னையை காதலிக்கும் இளைஞனாக நடித்திருப்பார். காதலியாகவும், முதியவரை மணந்த மனைவியாகவும் 'பத்மினி' அவர்கள் நடித்திருப்பார்.

இப்போழுது அந்த பாடத்தை யார் பார்த்தாலும் அதிலே வெட்டுவதற்கு எதுவும் இல்லை என்று தான் சொல்லுவார்கள். அன்றைய தேதியில் வெட்டினால் தான் படம் வெளியாகும் என்ற நிலைமை. இதை கேள்விப்பட்ட மார்டன் தியேட்டர் பட அதிபர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் கலைஞரை சிறைச்சாலைக்கு வந்து பார்த்து "நான் படத்தை வெளியிடப் போவதில்லை" என்றார்.

உடனே, கலைஞர் " வெளியிடுங்கள்" என்று சொன்னார்.

"இரண்டாயிரம் அடியை வெட்டிவிட்டு எதை வெளியிடுவது ?" என்றார்.

"எந்தெந்த வசங்களை வெட்ட சொல்கிறார்கள்?" என்று கலைஞர் கேட்டார்.

சில வசனங்களைச் சொல்லி, இதையெல்லாம் வெட்டச் சொல்கிறார்கள் என்றார். அதிலே ஒரு வசனம்.

"கொள்கை முழக்கம் செய்வதற்காக கோபுரமேறி நிற்கின்ற தலைவர்களே ! அந்த கொள்கையிலிருந்து எத்தனை முறை நீங்கள் வழுக்கி விழுந்திருக்கிறீர்கள். ஒரு முறை திரும்பி பாருங்கள்". இது தலைவர்களுக்காகச் சொல்லப்பட்டது. அந்த காலத் தலைவர்களும் சரி, இந்த காலத் தலைவர்களும் சரி கொள்கையிலிருந்து வழுக்கி விழும் தலைவர்களுக்காக எழுதப்பட்டது. அதை வெட்டிய சென்சார் அதிகாரி " கோபுரத்திலிருந்து ராமானுஜர் கீழே குதித்தார். அதைக் கருணாநிதி கிண்டல் செய்திருக்கிறார். கோபுரத்திலிருந்து விழுந்த தலைவர்களே என்று சொல்லுவது ராமானுஜரைத்தான். ஆகவே அதை அனுமதிக்க மாட்டோம் " என்று கூறி வெட்டி விட்டார்கள்.

படம் வெளியிட முடியாது என்று டி.ஆர்.சுந்தரம் முடிவெடுத்த போது எவி.எம்., எஸ்.எஸ்.வாசன் அவர்கள் அவரை அழைத்து சென்று சென்சார் அதிகாரியோடு மறுபடியும் சமாதானம் செய்து 2000 அடி என்பதை 1500 அடி என்று வெட்டி, 500 அடியைக் காபாற்றிக் கொடுத்து அந்த படத்தை வெளியிட்டார்கள்.

2.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 'காஞ்சி தலைவன்' என்ற படத்திற்கு கலைஞர் வசனம் மட்டும் இல்லாமல் பாடலும் எழுதியிருக்கிறார்.

அதில், எம்.ஜி.ஆர். அவர்கள் 'காஞ்சி மன்னனாக' நடித்திருந்தார். எதிரி நாட்டு படைகளை எதிர்த்து எம்.ஜி.ஆர் படைகள் செல்லும் போது 'வெல்க காஞ்சி... வெல்க காஞ்சி... வெல்க வெல்கவே...' என்ற பாடல் எழுதியிருந்தார்.

இந்த பாடலை கேட்ட சென்சார் அதிகாரி, " இதில் வரும் வெல்க காஞ்சி என்பதை யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்கள்.

எம்.ஜி.ஆர்., கலைஞர் என்று பலர் கூறியும், சென்சார் அதிகாரி இந்த பாடலை "பிரச்சார பாடலாக" இருப்பதால் மறுத்தார்.

இறுதியில், அந்த பாடல் 'வெல்க நாடு... வெல்க நாடு... வெல்க வெல்கவே...' என்று மாற்றப்பட்டு வெளியிட்டார்கள்.

'வெல்க நாடு' என்பதால் எதிரி படைக்கும் இதும் பொருந்தும் என்று அந்த பாடலை கலைஞரே கிண்டலாக சொன்னார்.

Sunday, September 20, 2009

ஒரு தந்தையின் கனவு



பேனா எடுத்தேன்
கவிதை எழுதுவதற்கு...
பிஸிக்ஸ் பாடம் படி
என்று கட்டளையிட்டார் !

கிரிக்கெட் விளையாட
மட்டையை எடுத்தேன்
கணிதப்பாடத்தில்
கவனம் செலுத்து என்றார் !

கல்லூரிக்கு செல்ல
இரு சக்கர வாகனம் கேட்டேன்
கார் வாங்கி தருவதாக
சொல்லி காலத்தை கடத்தினார் !

நடனம் கற்றுக்கொள்ள
அனுமதி கேட்டேன்
நாற்பது மதிப்பெண் எடுத்த
பாடத்தை சுட்டிக் காட்டினார் !

ஒரு கண்ணதாசன்
ஒரு சச்சின்
ஒரு மைக்கில் ஜாக்சன்
எல்லாம் சேர்ந்த கலவையில்
உருவாக கனவு கண்டேன் !
மாத சம்பளம் வாங்குவது
அமைதியான வாழ்க்கை
என்று அறிவுரை கூறினார் !

எத்தனையோ கனவுகள்
பால்யத்தில் பவணி வந்த வேளையில்
தந்தையின் கனவுக்கு
உயிர் கொடுக்க செலவு செய்தேன் !

என் கனவுகள் எல்லாம்
கனவாகி போனாலும்
இறுதியாக...
ஒரு கனவு உயிரோடு இருக்கிறது
என் மகன் நிறைவேற்றுவான் என்று !

Saturday, September 19, 2009

சிவாஜி கணேசனின் கடைசி கண்ணீர் நாட்கள் !

சமிபத்தில் நான் படித்த புத்தகங்களில் என்னை அதிகம் பாதித்தது நடிகர்..... அல்ல எழுத்தாளர் சிவகுமார் அவர்கள் எழுதிய 'இது ராஜப்பாட்டை அல்ல' புத்தகம். அந்த புத்தகத்தை பற்றி தனி பதிவு போட வேண்டும். ஆனால், இப்போது நான் குறிப்பிட விரும்புவது அவர் எழுதிய 'சிவாஜி' கணேசன் பற்றின கட்டுரை.

1.
சிவகுமார் ஓவியம் வரைவார் என்பதை தெரிந்த சிவாஜி தன் அம்மா படத்தை வரைந்து தர சொல்லி கேட்டிருந்தார். காலப்போக்கில் சிவகுமார் அவர்கள் அதை மறந்துவிட்டார். மீண்டும் ஒரு முறை சிவகுமாரை சிவாஜி சந்திக்கும் போது, " கவுண்டரே ! என்னடா இப்படி ஏமாத்திக் கிட்டிருக்கே. அம்மா படத்தை வரைஞ்சு கொடுக்கச் சொன்னேனே... மறந்துட்டியா ? அம்மா ரொம்ப நாள் தாங்க மாட்டாங்கடா..." என்று சிவாஜி சொல்லும் போதே மனதை கசியவைக்கிறார்.

2.
'இனி ஒரு சுதந்திரம்' படம் பார்த்த சிவாஜி, " உன் படம் பார்த்தேன். பிரம்மாதமா பண்ணியிருக்க. 'கப்பலோட்டிய தமிழன்' உயிரை கொடுத்துச் செய்தேன். தமிழ் நாட்டு ஜனங்க எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்கும்க் குழைச்சிட்டிருக்காங்க" என்று சொல்லும் போது, படம் தோல்வி அடையும் என்பதை எந்த நடிகனும் இவ்வளவு வெளிப்படையாக நடித்தவரிடம் சொல்ல மாட்டார்கள். இதில் அவருடன் உங்களுக்கு இருக்கும் நெருக்கம் தெரிகிறது.



3.
'உறுதிமொழி' படப்பிடிப்பில் தன் மகன் பிரபுவை பார்க்க குடும்பத்தோடு வந்த போது, 'கவுண்டரே ! சிவாஜி கணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேன்" என்று குரல் தடதமுக்க சொல்ல, " அண்ணே ! என்ன பேச்சு பேசுறீங்க..! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுல தான் நாங்க விளையாடுகிறோம். எந்த கொம்பனும் இந்த தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிக்க முடியாது ?", என்றார் சிவகுமார்.

அப்படியா நினைக்கிறே ?

"இது என் தாய்மேல் சத்தியம் ! தொழில் மேல் சத்தியம் " என்றார் .

"எல்லாரும் அப்படி நினைப்பாங்களா ?" சிவாஜி கேள்வி சிவகுமாரை கண் கலங்க வைத்துவிட்டது.

சிவாஜி கேட்ட கேள்வி படிக்கும் வாசகன் என்னை கண்கலங்க வைத்து விட்டது.

4.

சீங்கப்பூரில் மயங்கி விழுந்த சிவாஜி சென்னை அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளித்தனர். ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புது ரத்தம், புது பொழிவுடன் திரும்பினார். அப்போது சிவகுமார் தன் குடும்பத்துடன் சிவாஜியை பார்க்க செல்கிறான். ஒரு நாற்காலியை எடுத்து சிவாஜி அருகே அமர்கிறார்.

"நாமெல்லாம் 'Once Upon a time Actor' சிவா ! எல்லாம் முடிஞ்சு போச்சு. நம்பலை இப்போ யார் ஞாபகம் வச்சிருக்கா...! சிங்கபூர்ல பாரு அஞ்சாயிரம் அடி திரையில கட்டபொம்மன் காட்சியை போடுறான். அஞ்சாயிரம் பேரு விசில் அடிக்கிற்ன்."

"தங்கபதுமை... ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே' போட்டா அவனவன் சாமி ஆடுறான். 'தங்கபத்தம்' அரங்கமே குலுங்குது !"

"சிவா ! வாட் என் ஃபைன் மூவமெண்ட் ! உங்க அண்ணன் அப்போ ஏன்டா சாகல ? இப்போ எதுக்கு உயிரோட வந்தேன் ?" என்று சிவாஜி சொன்ன போது கண்ணில் நீர் முட்டி தள்ளியது.


சிவகுமார் அவர்கள் சிவாஜியுடன் தன் அனுபவத்தை பகிவதை படிக்கும் போது என்னையும் அறியாமல் என்னை எதோ செய்தது.

பிஷ்மரை படு வைத்த அர்ஜூனன் சந்தோஷப்பட வில்லை. அவர் கால்களில் கண்ணீர் சிந்தி அழுதான். ஒரு நடிகனின் நல்ல படம் தோல்வி அடையும் என் போன்ற ரசிகர்களிலும் மனம் வருந்துகிறோம்.

நல்ல திறமை மிக்க கலைஞனுக்கு ஓய்வு எவ்வளுவு பெரிய கொடுமை என்று இந்த கட்டுரையில் என்னால் உணர முடிகிறது.யார் யாரோ நடிக்கிற படத்தை பார்த்த ரசிகர்கள் 24 மணி நேரம் சினிமா, நாடகம் இரண்டிலும் நடிப்பை பற்றி யோசித்த பழைய நடிகர்களை மறந்த குற்ற உணர்வு உருத்துகிறது.

தமிழ் படித்த ஒவ்வொரு மனிதனுக்கு இலக்கிய தாகம் மனதின் ஓரத்தில் மறைந்திருக்கும். வேலை சுமை, குடும்ப சூழ்நிலை என்று சமாளிக்க நேரம் சரியாக இருக்கும் நேரத்தில் பலருக்கு எழுதவோ படிக்கவோ நேரம் இருப்பதில்லை. வேலை ஓய்வுக்கு பிறகு ஒரு சிலர் தங்கள் இலக்கிய தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்கள்.ஒரு நடிகனுக்கும் இலக்கிய தாகம் இருப்பது 'இது ராஜப்பாட்டை அல்ல' புத்தகம் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

கே.பாலசந்தர் சொல்லுவது போல்

'நடிப்பிற்கு இலக்கணமும் அகராதியும் சிவாஜி என்றால்,
நடிகனுக்கு இலக்கணமும் அகராதியும் சிவகுமார் !'

Sunday, September 13, 2009

சிறுகதை பயிற்சி பட்டறை.. சூப்பர் !

இன்று உரையாடல் அமைப்பினர் நடத்திய சிறுகதை பயிற்சி பட்டறை இனிதே நன்றாக நடந்து முடிந்தது.

பயிற்சி பட்டறையில் முதலில் பாஸ்கர் சக்தி அவர்கள் பேசினார்.

அவர் பேசும் போதும் போது "எழுதிய கதை வாசகன் உணர வேண்டும். அதை உணர்த்துவதற்காக தூக்கலான வார்த்தைகள் இருக்க கூடாது" என்றார்.

கதைகளுக்கு திட்டமிட்ட வரம்புகள் எதுவும் இல்லை என்பதை கூறினார். அதற்கு எடுத்துக்காட்டாக 'தக்கலி' என்ற கதையை கூறினார்.

ஒரு எழுத்தாளன் தன் உறவினர்களுடன் செல்லும் போது வாசகர்களை சந்திப்பதை நகைச்சுவையாக கூறினார்.

பாஸ்கர் சக்தி பேசி முடித்த பிறகு தேநீர். அதை அடுத்து யுவன் சந்திரசேகர் அவர்கள் பேசினார்.

அவர் எழுதிய 'கானல் நதி' நாவலை படித்த பிறகு மிகவும் சீரியஸான மனிதர் என்று நினைத்தேன். வாசகர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கு பதில் சொல்லும் போது நகைச்சுவையாக பதிலளித்தார்.

தொடங்கும் போதே கதைக்கும், சம்பவத்திற்கும் உள்ள வேறுபாட்டை கூறினார்.'சம்பவம் கதையானால் தான் ஸ்வாரசியம். காரணம், ஒரு சம்பவம் வந்த பத்திரிகை செய்தி அடுத்த நாள் பழமையாகி விடுகிறது. கதை எந்த காலத்திலும் படிக்க கூடியது' என்றார்.

ஒரு கதையை ஆலோசனை கேட்டு செயல்படுத்தப்படும் வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் 1700 ஆலோசனைகள் வரும். அதில் நமக்கு ஏற்ற ஆலோசனையை ஏற்று கதை எழுதுவதற்கு பதிலாக, முன்பே நம் கற்பனைக்கு தகுந்த போல் கதை எழுதிவிட்டால் நேரத்தை தவிற்கலாம் என்று கூறினார்.

சாலமன் பாப்பையா தனக்கு வகுப்பு எடுத்த அனுபவத்தை மிக நகைச்சுவையாக கூறினார். குறிப்பாக 'எழுப்பு-தொடுப்பு-முடிப்பு' என்று சொல்லும் 'பு'வில் இன்னொரு முக்கியமான 'பு' 'தலைப்பு' என்று சொல்லும் இடத்தில் அருமை.

கதை எழுதுவது 'நிகழ்வுகளை ஸ்வாரஸ்யமாக சொல்லுவது அல்ல. கற்பனைகள் சேர்ந்து சொல்லுவது தான் கதை என்று அவர் பேச்சின் சாரம் இருந்தது.

'I am that' - J.Krishnamoorthy
பிறகு - பூமணி
நெய்வேதியம்
Future Shock

போன்ற புத்தகங்களை பற்றி கூறினார்.

அதன் பிறகு மத்திய சாப்பாடு. 'Non-Veg' இடெம் இரண்டு தான். 'Veg' யில் 'Gobi Machurian' கலக்கியிருக்கிறார்கள்.

மத்திய சாப்பாடு பிறகு, தேவதாஸ் அவர்கள் 'மொழிபெயர்ப்பு சிறுகதைகள்' பற்றி பேசினார்.

உண்ட மயக்கம் என்பதால் அவர் பேசிய பெரும் பகுதி மனதில் பதியவில்லை. கேள்வி - பதில் பகுதியில் விழித்துக் கொண்டு அவர் சொல்லும் விளக்கத்தை கேட்டேன்.

இறுதியாக பா.ரா அவர்கள் பேசினார்.

தன் Laptop மூலம் முன்பே இதை தான் பேச வேண்டும் என்று திட்டமாக வந்ததால் சரியான நேரத்திற்கு பேசி முடித்தார்.

நாம் அனுப்பும் எல்லா கதைகளும் படிக்கிறார்களா ? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக முதல் பத்தி படிப்பார்கள் என்றார். படிப்பவரை உள்ளே இழுக்கும் பட்சத்தில் தொடர்ந்து படிப்பார்கள் என்று கூறினார்.

அவர் 'PPT'யில் எனக்கு மிகவும் பிடித்த ஸ்லைட் 'உதவி ஆசிரியர் எப்படிப்பட்டவர் ?' என்பது தான்.

பெருமாலும் அடிப்பட்டவர்கள், கஷ்டஜீவிகள்
பெருமாலும் இரக்க சுபாவம் கொண்டவர்கள்
பெருமாலும் நல்லவர்கள்
பெருமாலும் விரக்தி கொண்டவர்கள்
பெருமாலும் குடும்பக்கதைகளை விரும்புகிறவர்கள்
பெருமாலும் நல்ல முடிவுகளை விரும்புகிறவர்கள்
பெருமாலும் நல்ல எழுத்தாளனை கண்டு பிடித்து விடமாட்டோமா என்று ஏங்குபவர்கள்

கதைகளுக்கு முடிவை சொல்லுவதை விட சொல்லாமல் விடுவது நல்லது என்ற கருத்தையும் கூறினார்.

சிறுகதை பயிற்சி பட்டறைக்கு பதிவர்களுக்காக ஏற்பாடு செய்ய நண்பர் பைத்தியக்காரன்.... சிவராமன் அவர்களுக்கு நன்றி.

உடனே நான் 'சிறுகதை' எழுதனும் எங்க பேனா.....????????

Thursday, September 10, 2009

சாமியாரின் மூக்குடைத்த நடிகர் !

பிரபல நடிகர் ஒருவர் சாமியாரை பார்க்க சென்றிருந்தார். பேச்சு வழக்கில் அந்த சாமியார், "விபச்சாரம் செய்த பணத்தை புண்ணியம் பெற செலவழிப்பது போன்ற தான், சினிமாகாரன் செய்யும் இந்த தர்ம காரியங்கள்" என்று நடிகனை பார்த்து சொன்னார்.

ரொம்பவும் அடக்கி வைத்திருந்த தன் உணர்வுகள் அந்த நடிகனுக்கு பிய்த்துக் கொண்டு வந்தன.

" ஐயா ! இவ்வளவு தூரம் ஒட்டு மொத்தமாகச் சினிமாக்காரனை நீங்கள் கேவலப்படுத்திய பிறகு ஒன்றைச் சொல்வதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். துறவியாக வாழும் உங்களைவிட நடிகன் மேலானவன். குடும்பஸ்தனாக வாழ்ந்து, சிற்றின்ப சுகங்கள் அனைத்தையும் அனுபவித்து ஒய்ந்து முடியாத வயதில் நீங்கள் துறவியாகியுள்ளீர்கள் ! பிள்ளைகள் பெற்றிருக்கிறீர்கள். பேரக் குழந்தைகள் உள்ளனர்."

" ஊரைவிட்டு ஒதுங்கி அசிரமம் போட்டு அமர்ந்து சலங்களுக்கும் அவலங்களுக்கும் இடம் கொடாத சூழ்நிலையில் வாழ்கிறீர்கள். இந்த வயதில் இந்த சுழ்நிலையில் துறவறத்தைக் கடைப்பிடிப்பது அவ்வளவு பெரிய காரியமாக படவில்லை."

"நான் சினிமாக்காரன்...! கூத்தாடி தான். எதையும் அனுபவிக்க ஆசைப்படும் வயது, வசதி வனப்பு எனக்கு இருக்கிறது...! 25 வயதாக இருந்தபோதும் 15 வயது பெண் கதாநாயகி, 40 வயதாகும் போதும் 15 வயதில் புதுப்பெண் கதாநாயகி...! பொழுது கிளம்பி விழும்வரை விதி விதமாக பெண்களோடு, விரும்பாவிட்டாலும் நான் நடித்தாக வேண்டும். கட்டிப் பிடிக்க வேண்டும் ! உருள வேண்டும்."

" மனிதன் அனுபவிக்க ஆசைப்படும் அனைத்து இன்பங்களும் போகங்களும் என்னை சுற்றி நர்த்தனம் புரிகின்றன. நான் ஸ்ரீ ராம பிரானுமல்ல, புத்தனுமல்ல. ஒரு சராசரி மனிதன். சினிமா எனக்குத் தொழில். என்னை சுற்றி இருப்பவை எல்லாம் காட்சிப் பொருட்கள். அவை அனுபவிக்க அல்ல." என்ற மனப்போக்கை வளர்த்துக் கொண்டு போர்க்களத்தின் நடுவே புத்த பிட்சுவாக வாழ்ந்து கொண்டுவரும் நான், உங்களை விட மேலானவன் தான். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு வேகமாக வந்துவிட்டார் அந்த நடிகர்.

அந்த நடிகர் சிவகுமார்.

தகவல் : "இது ராஜப்பாட்டை அல்ல" புத்தகம்

LinkWithin

Related Posts with Thumbnails