வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Kim Ki Duk. Show all posts
Showing posts with label Kim Ki Duk. Show all posts

Wednesday, October 26, 2016

உலக சினிமா : Beautiful (2008)

‘ஆழகான பெண்ணை நம்பாதே’ என்ற வாசத்தை ஆட்டோவில் எழுதப்பட்டிருப்பதை படித்திருப்போம். உண்மையிலேயே பெண்ணின் அழகு ஆண்களுக்கு ஆபத்தாக இருக்கிறதா ? இல்லை. பெண்ணின் அழகை தேடிப் போகும் ஆண்களுக்கு தான் ஆபத்தாக இருக்கிறது. உண்மையில் பெண்ணின் அழகு ஆண்களைவிட சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தான் ஆபத்தாக இருக்கிறது.

ஆண்களுக்கு ஆபத்து என்று சொல்வது கூட அந்தப் பெண் தனக்கு வரும் ஆபத்தை அடுத்தவர் மீது திருப்பிவிடுவது மூலம் தன்னை அவள் தற்காத்துக் கொள்கிறாள். 

கிம்-கி-டுக் கதை எழுதியப்படம். அவரின் உதவியாளரும், புது இயக்குனருமான ஜுஹ்ன் ஜெய்-ஹங் இயக்கியிருக்கிறார். படத்தை கிம் கி டுக் இயக்கவில்லை என்ற குறை தவிர, அவரது படத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது. அதாவது அவரின் ’உடல் அரசியல்’.

ஒரு வேலை கிம்-கி-டுக் இயக்கி, ஜுஹ்ன் ஜெய்-ஹங் பெயரை இயக்குனராக போட்டுவிட்டாரோ என்று தோன்றும். கதையும், அதன் காட்சியமைப்பும் எல்லாம் கிம்-கி-டுக்கின் சாயல் அதிகமாக இருக்கும்.

ஒரு பெண்ணுக்கு அழகு எவ்வளவு பெரிய சாபம் என்பதை தனது கதையில் யூன்-யியாங் பாத்திரம் மூலம் காட்டுகிறார்.



ஆரம்பக்காட்சியில், யூன்-யியாங்யை பொறாமை கண்களால் அவளது தோழி பார்க்கிறாள். அவளை போல் தான் அழகில்லை என்பதை ஏக்க மூச்சு விடுகிறாள். யூன்-யியாங்யை வெறுப்பேற்ற தனது காதலனை அறிமுகம் செய்கிறாள். ஆனால், அவளுடைய காதலன் ஏற்கனவே யூன்-யியாங்கிடம் காதலை சொல்லி, அவள் ஏற்காமல் மறுத்திருக்கிறாள். 

அவள் எங்கு சென்றாலும் ஆண்களின் கண்ணில் ஒரு காமப்பார்வை பார்ப்பதை அவள் உணர்கிறாள். அதை கடந்து தனது இயல்பு பணிகளை யூன் செய்கிறாள். 

அவளது அப்பார்ட்மெண்ட் காவலாளி யூன் – சீயோல் அவளை ஒரு தலையாய் காதலிக்கிறான். அதேப் போல், யூன்-யியாங்யை இன்னொருவன் அவளுக்கே தெரியாமல் ஒருதலையாய் காதலிக்கிறான். யூன் தோழியின் காதலன் யூன்-யியாங்யிடம் தவறாக நடந்துக் கொள்ள, யூன் – சீயோல் அவனை அடிகிறான். இதனால், யூன்-யியாங்யின் தோழிக்கு அவள் மீது வெறுப்பு அதிகமாகிறது. அவர்களுக்குள் நட்பு முறிகிறது. 

மன வருத்தத்தில் தனது அப்பார்ட்மெண்ட்டுக்கு வரும் யூன், ஒரு தலையாய் காதலித்தவன் அவளுக்கு தொல்லை கொடுக்கிறான். அவனது காதலை அவள் மறுக்க, வெறிக் கொண்டு அவளை கற்பழிக்கிறான். காவலர்கள் அவனை கைது செய்கிறார்கள். 

அப்போது அவளை கற்பழித்தவன், “நான் தவறு செய்ததற்கு காரணமே உன்னுடைய அழகு தான் காரணம்.” என்கிறான். 

தான் கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சியில் மீள முடியாமல் சாலையில் நடக்கும் போது மயக்கம் போட்டு கீழே விழ, அவளை காப்பாற்ற ஆண்கள் ”நான், நீ” என்று போட்டிப் போடுகிறார்கள். ஆண்கள் தன்னை மொய்ப்பதற்கு காரணம் தன்னுடைய அழகு தான் என்று வெறுப்படைகிறாள். தன் அழகை எப்படியாவது சிதைத்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். 

தனது உடல் ஏடையை ஏற்றுக்கொள்வதற்காக வெறித்தனமாக உண்கிறாள். ஏடைப்போடும் உணவு பொருள் வாங்க வழியில்லாத போது திருடி உண்கிறாள். ஆனால், அவள் திருடிய பொருளுக்கு யூன் – சீயோல் பணம் கொடுக்கிறான். திருடிய பொருளை கழிவறையில் வெறித்தனமாக சாப்பிடும் போது வயிற்று வலியில் மயங்கி விழுகிறாள். 

அப்போது, யூன் – சீயோல் வந்து அவளை பார்க்க, தன்னையறியாமல் அவளுக்கு முத்தம் கொடுக்கிறான். தன் தவறை உணர்ந்து, தன்னை தானே கண்ணத்தில் அடித்து அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான். 

அவளை பரிசோதித்த மருத்துவரும் அவளை பரிசோதிப்பது போல் மார்ப்பகங்களில் கை வைக்கிறான். யூன்-யியாங் சுதாரித்து கொண்டு மருத்துவரை தடுக்க, அவர் அதிகமாக சாப்பிட்டதால் வயிறு வலி வந்தது என்று சொல்லி சமாளிக்கிறான். 

வீட்டுக்கு வரும் யூன்-யியாங் தன்னை ஒல்லியாக்கி கொள்வதில் முடிவு எடுக்கிறாள். அதற்காக மாத்திரை சாப்பிடுகிறாள். உடற்பயிற்சி செய்கிறாள். உணவு குறைத்துக் கொள்கிறாள். அவள் தன்னை வருத்திக் கொண்டு செய்யும் காரியத்தால் தன்னை பலவீனமாக்கிக் கொள்கிறாள். உடற்பயிற்சியின் போது மயங்கிவிழுகிறாள். 

அவளை காப்பாற்றிய யூன் – சீயோல் அவளை போட்டோ எடுக்கிறான். பின்பு தனது அறையில் அவளது புகைப்படங்களை மாட்டி அழகுப் பார்க்கிறான். 

இன்னொரு பக்கம், தனது செய்கையால் யூன்-யியாங் தன்னை பலவீனமாக்கி வருவதை உணர்கிறாள். அவள் சாதாரனமாக உண்ணும் உணவுக்கூட அவளுக்கு செரிக்காமல் வாந்தி வருகிறது. கண்ணாடியில் தனது முகத்தை பார்க்கும் போது, எப்படி தன்னை தானே சிதைத்துக் கொள்ள முயற்சித்திருக்கிறேன் என்பதை புரிந்துக்கொள்கிறாள். 

தன் அழகு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதை அவள் தடுக்க நினைக்கிறாள். அதிகமாக மேக்-கப், ஆண்களை கவரும்ப்படியான கவர்ச்சி உடையில் செல்கிறாள். ஒரு ஆண் அவளிடம் சிரித்து பேச, அவளும் அவனுக்கு இனங்கி உறவுக்காக கழிவறைக்கு செல்கிறாள். ஆனால், அங்கு சென்றதும் அவள் மனம் மாறுகிறது. அவனிடம் தப்பிக்க அவனை தாக்குகிறாள். அடிவாங்கியவன் யூன்-யியாங்யை தாக்க முயற்சிக்க, அப்போது யூன் – சீயோல் அங்கு வந்து அவளை காப்பாற்றுகிறான்.

யூன்-யியாங்னுக்கு தன்னை கற்பழித்தவன் பின் தொடர்வது போன்ற பிரம்மை ஏற்படுகிறது. சிறுசிறுக அவள் மன சிதைவு ஏற்படுவதை யூன் – சீயோல் புரிந்துக்கொள்கிறான். அதனால், அவளை நிழல் போல் தொடர்கிறான். மனசிதைவில் அவள் தாக்க நினைக்கும் ஆண்களையும் காக்கிறான். அவள் வீட்டுமுன் நாய் போல் கிடக்கிறான். 

யூன்-சீயோல் யூன்-யியாங் மீது காதல் இருந்தாலும், எல்லா ஆண்களை போல அவள் உடல் மீது ஆசை இருக்கிறது. யூன்-யியாங்க்கு யூன்-சீயோல் மீது பரிவு வருகிறது. ஆனால், அவளின் மனம் யாரையும் ஏற்பதாக இல்லை. சீயோல் அவளை காப்பாற்ற முடியாமல் செயலற்றவனாக இருக்கிறான். அதனால், தனது கை தூப்பாக்கியை அவளது கரத்தில் ஓட்டி வைக்கிறான். மயக்கத்தில் இருக்குன் யூன்-யியாங்னுடன் உடலுறவு கொள்கிறான். 

மயக்கத்தில் இருந்து விழிக்கும் யூன்-யியாங் புன்னகையுடன் அவனை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால், ஒரு கட்டத்தில் தன் கையில் இருக்கும் தூப்பாக்கியால் அவளை சுட்டுக்கொள்கிறாள். கொஞ்ச நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் யூன்-யியாங் இறந்த யூன் – சீயோல் உடலை பார்த்து அலருகிறான். 

கை தூப்பாக்கியோடு வெளியே வரும் யூன்–யியாங் கண்ணில் படும் ஒவ்வொரு ஆண்ணையும் சுட்டுக்கிறாள். அவள் கண்ணுக்கு ஒவ்வொரு ஆண்ணும் அவளை கற்பழித்தவன் போல் தெரிகிறது. யூன்–சீயோல்லை சுட்டதற்கு காரணம் இது தான் என்பது புரிகிறது. அப்போது, அங்கு வரும் காவலர்கள் அவளை சுட, அவள் இறக்கிறாள். 

பிரேதப் பரிசோதனையில் யூன்–யியாங்யின் உடல் நிர்வணமாய் கிடக்க, பரிசோதனை செய்யும் மருத்துவரும் அவளின் உடலை புணர, படம் முடிகிறது. 

அழகான பெண்ணின் உடலுக்கு அவள் இறந்தப்பின்னும் ஆண்களிடம் இருந்து விடுதலை கிடைப்பதில்லை என்பதை படம் நமக்கு காட்டுகிறது. பெண்ணுக்கு எதிராக நடக்கும் வன்முறை, அவளை எந்த அளவுக்கு பாதிக்கிறது, அதனால் தன்னை தானே வெறுக்க தொடங்குகிறாள் என்ற உண்மையை “Beautiful” படம் உணர்த்துகிறது. 

பெண்ணுக்கு இலைக்கப்படும் பாலியல் கொடுமை அவர்களின்  உடலை மட்டுமல்ல. மனதையும் சேர்த்து பாதிக்கிறது. ஆண்ணின் பாலியல் உணர்வுக்காக உயிரை, வாழ்க்கையை இழந்தப் பெண்கள் ஏராளம். அவர்களிடம் தங்களை காப்பாற்றிக் கொள்ள பெண்கள் அழகை ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

செடியில் இருக்கும் அழகிய ரோஜா பார்ப்பது அழகாக இருக்கும். அதை பரிப்பதில் இருந்து அது தனது மரணத்தை நோக்கி பயணிக்கிறது. ஏறக்குறைய பெண் உடல் மீது நடத்தப்படும் வன்முறையும் பூவை பரிப்பதற்கு சமம் தான். வன்கொடுமையில் இருந்து மீண்டு வந்த பெண் இயல்பாக வாழ்ந்தாலும், வாழும் ஒவ்வொரு நாளும் உடலாலும், மனதாலும் நரகத்தையும், மரணத்தின் வலியையும் அனுபவித்து வருகிறாள்.

Friday, May 13, 2016

உலக சினிமா : Coastal Guard

தேசப்பற்று என்பது தானாக விரும்பி வர வேண்டியது. உணர்வுப்பூர்வமாக உணர்ந்து புரிந்துக் கொள்ள வேண்டியவை. அதேப் போல், தேச சேவை தானாக விரும்பி செய்ய வேண்டிய ஒன்று. அதற்கான மனநிலையை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும், உடலை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். கற்பனைகளும், வார்த்தைகளும் தேசபக்தியை ஊட்டிவிட்டு பக்குவற்றவர்களை தேவைக்கு அதிகமான பயிற்சியெல்லாம் அளித்தால் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதற்கு “Coastal Guard” மிக சிறந்த உதாரணம். 

தென் கொரியா, வட கொரியாவின் எல்லை கடலோர பகுதியாக Saemangeum.

அந்த கடலோரப்பகுதியில், மீன் பிடிப்பவனாக ச்யோல் கு இருக்கிறான். அவனுக்கு மீ யோங் என்ற தங்கை உண்டு. அவள் கில் என்பவனை காதலிக்கிறாள். எல்லைப் பகுதியில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு எதிரான விமர்சனம் இருப்பது போல் அந்த பகுதியில் இருக்கும் இராணுவ வீரர்கள் மீது இருக்கிறது. அவர்களால் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பது அந்தப் பகுதி பொது மக்களின் கருத்து. 

கடலோர எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவனாக காங் ஹாங் இருக்கிறான். வட கொரியா உளவாளியை எப்படியாவது பிடிப்பது தான் அவனுடைய வாழ்நாள் லட்சியம். சக வீரர்கள் இந்த பகுதியில் எந்த உளவாளியும் ஊடுரூவதில்லை என்று சொல்லியும் அவன் ஏற்பதாக இல்லை.

யுத்த சாயத்துடன் யுத்திற்காக தன்னை தயார் நிலையில் வைத்துக் கொண்டு கடலோர பகுதியை காவல் காக்கிறான். 

ஒரு முறை, காங் ஹாங் தனது நண்பனோடு செல்லும் போது அவனுக்கும் ச்யோல் கு என்ற மீனவனுக்கும், வாக்குவாதம் முற்றுகிறது. அப்போது, ச்யோல் கு “எங்கள் வரி பணத்தை நீங்கள் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இங்கு உளவாளிகளே கிடையாது. உங்களிடம் இருப்பது வெத்து தூப்பாக்கி” என்கிறான். 

கோபத்தில், காங் ஹாங் “நான் உங்களை சுட நீங்கள் உளவாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறான். ஒரு கட்டத்தில், இருவரும் அடித்துக் கொள்ளும் வரை செல்கிறார்கள். பிறகு, அந்த பகுதியில் இருப்பவர்கள் அவர்களில் சண்டையை தடுக்கிறார்கள். 

காங் ஹாங் எப்படியாவது ஒரு உளவாளியை பிடித்துவிட வேண்டும் என்று எண்ணம் வலுப்பெறுகிறது. 



இதற்கிடையில், ச்யோல் கு கில்லிடம் குடிப் போதையில் இராணுவ எல்லைக்குள் சென்று வந்தால் தனது சகோதரி உனக்கு தான் என்று கூறுகிறான். போதையில் ச்யோல் உறங்கிய பிறகு, மீ யோங் கில்லை அழைத்துக் கொண்டு இராணுவ எல்லைக்குள் நுழைகிறாள். கில் செல்ல தயங்கியும், அவள் மீது கொண்ட காதலால் செல்கிறான். அங்கு இருவரும் கலவியில் ஈடுப்படுகிறார்கள். 

காங் ஹாங் வீரத்தை நிரூப்பிக்கும் வகையில் அந்த கடற்கரையில் மனித நடமாடும் சத்தம் கேட்கிறது. யாரோ எல்லைக்குள் புகுந்துவிட்டனர் என்று தனது தூப்பாக்கியை தயார்ப்படுத்துகிறான். தூரத்தில் தெரியும் உருவத்தை குறிப்பார்த்து சூடுகிறான். அப்போது, ஒரு பெண் கத்தும் குரல் கேட்கிறது. தூப்பாக்கி, பெண் குரல் என்று அந்த எல்லைப்பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்து விழிக்கிறார்கள். 

இறந்த சடலத்தில் அருகே மீ யோங் அழுது கொண்டிருப்பதை ஹாங் பார்க்கிறான். அவர்கள் கலவி ஈடுப்பட்டிருக்கும் போது ஏற்ப்பட்ட சத்தத்தை தவறாக புரிந்துக் கொண்டு கில்லை சுட்டிருக்கிறான். தான் செய்த தவறை நினைத்து வருந்துகிறான். குற்றவுணர்வில் தவிக்கிறான். 

அடுத்த நாள், இராணுவ முகாம்மில் விசாரணை நடக்கிறது. அந்த பகுதி மக்கள் ஹாங்யை அடிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் தூப்பாக்கி காட்டி அவர்களை தங்கள் முகாமை விட்டு வெளியே துறத்துகிறார்கள். தனது கடமையை செய்ததற்காக ஹாங்க்கு ஏழு நாள் விடுமுறை கொடுக்கப்படுகிறது. அந்த பகுதி மக்களால் ஏற்படுத்தப்பட்ட காயத்தால் வழியும் இரத்ததை பார்த்து கொண்டு செல்கிறான். 

குற்றவுணர்வில் அவனால் முன்பு போல் இயல்பாக இருக்க முடியவில்லை. ஊருக்கு செல்லும் வழியில் ஒரு குழந்தையின் தூப்பாக்கியை உடைக்கிறான். தன் நண்பர்கள் மீது கோபப்படுகிறான். காதலியிடம் அன்பாக பேச மறுக்கிறான். அதனால் காதலியை விட்டு பிரிக்கிறான். 

மன உலைச்சலில் ஹாங் விடுமுறை முடிகிறது. எல்லைப்பகுதிக்கு வேலைக்கு வரும் போது ச்யோல் குவால் தாக்கப்படுகிறான். மீ யோங் தனது மனநிலை இழந்து பைத்தியமாக இருப்பதை பார்த்து, மேலும் குற்றவுணர்வில் தவிக்கிறான். 

தன் மீது இருக்கும் கோபத்தை தனது சக இராணுவ வீரர்கள் மீது காட்டுகிறான். வெறித்தனமாக அடிக்கிறான். இரவு நேரத்தில் தூப்பாக்கியோடு போது மக்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல முயற்சிக்கும் போது, மற்ற இராணுவ வீரர்கள் அவனை தடுக்க, தனது தூப்பாக்கியை வானத்தை நோக்கி சுடுகிறான். 

முரட்டு தனமாக நடந்துக் கொள்ளும் ஹாங் இனி இராணுவ வேலைக்கு தகுதியற்றவன் என்று சான்றிதழ் வழங்கி அவனை வேலையை விட்டு அனுப்புகிறார்கள். புத்தி பேதலித்த மீ யோங் அடிக்கடி இராணுவ எல்லைக்குள் நுழைகிறாள். அவள் ஒவ்வொரு முறை இராணுவ முகாமுக்குள் நுழையும் போது, ஒரு இராணுவ வீரனால் கற்பழிக்கப்படுகிறாள். தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவள் விளையாட்டு தனமாக இருக்கிறாள். 

ஒரு கட்டத்தில், மீ யோங் கற்பமாகிறாள். இந்த உண்மையறிந்த அவளது ச்யோல் கு இராணுவ முகாமுக்கு கோபமாக செல்கிறான். அங்கிருக்கும் கேப்டன் உதவியோடு தன் தங்கையோடு தவறாக நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இராணுவ தண்டனை வாங்கி கொடுக்கிறான். ஆனால், அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையால் பிறக்க போகும் குழந்தைக்கு என்ன பயனுமில்லை என்பதை சொல்கிறான். அதற்கு தான் ஒரு வழி செய்கிறேன் என்று கேப்டன் உறுதியளிக்கிறான். 

அன்றிரவு, மீ யோங் இராணுவ மருத்துவ முகாமுக்கு இழுத்து வரப்பட்டு கருக்கழைப்பு செய்கிறார்கள். ஹாங் தடுக்க நினைத்தும் முடியவில்லை. செயலற்றவனாக இருப்பதை தன் மீது கோபப்படுகிறான். 

கருகழைக்கப்பட்ட மீ யோங் மேலும் வெறிப்பிடித்தவள் போல் செயல்படுகிறாள். ச்யோல் கு வளர்க்கும் மீன்களை உயிருடன் கடித்து உண்கிறாள். தன் தங்கையில் நிலைமைக்கு காரணமாக இராணுவ வீரர்களை கொல்ல வேண்டும் என்று ச்யோல் கு தாக்க முயற்சிக்க இராணுவ வீரர்கள் அவனை கடுமையாக தாக்குகிறார்கள். அன்றிரவு ஒவ்வொரு இராணுவ வீரனும் மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருகிறார்கள். 

எதிரிகள் ஊடுரூவல் இருக்கிறது. உளவாளி அல்லது எதிரிகள் கடல் எல்லைப்பகுதிக்குள் நுழைந்துவிட்டார்கள் என்று பாதுகாப்பு பலப்படுத்துகிறார்கள். பகலில் கடுமையான பயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால், அப்படியும் அன்று இரவு இன்னொரு இராணுவ வீரன் இறக்கிறான். அப்போது அவர்களை தாக்குவது ஹாங் என்று தெரிகிறது. 

காட்சி மாறுகிறது. மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில் இராணுவ உடையுடன் ராணுவ வீரர்கள் ஓய்வு நேரத்தில் பாடும் பாடலல் ஒன்றை காங் ஹாங் பாடிக்கொண்டிருக்கிறான். பாடலைப் பாடி முடித்துவிட்டு, இராணுவ பயிற்சி செய்கிறான். மக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக கூடுகிறார்கள். அப்போது, தனது துப்பாக்கியில் இருக்கும் கத்தியால் ஒருவனை தாக்கியவுடன், குடியிருந்த மக்கள் பிதியடைகிறார்கள். அவனைப் போலீஸ் தூப்பாக்கியோடு சுற்றி வளைக்கிறது. கேமரா, காங் ஹாங்கின் முகத்தை க்ளோஸப்பில் காட்ட, துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. 

அடுத்து, ராணுவ வீரர்கள் அனைவரும் சந்தோஷமாக வாலிபால் விளையாடும் காட்சியின் பின்னணியில், இந்தப் பாடல் பாட, படம் முடிகிறது.

கிம் கி டுக்கின் மிக நேர்த்தியான படங்களில் இதுவும் ஒன்று. துண்டான இரண்டு நாடுகளில் எல்லை பகுதி. தங்கள் நாட்டை காப்பாற்ற தென் கொரியாவில் கட்டாய இராணுவம் கொண்டு வரப்படுகிறது. உளவாளி, எதிரி ஊடுரூவல் இல்லாத போதும் போருக்கான பயம் இராணுவத்திற்காக செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை தொலைத்து கடுமையான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. தங்கள் இயல்பு தன்மையில் இருந்து மாறவும் முடியாமல், மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளும் போது மன பிழவு ஏற்படுகிறது. 

அதேப் போல், எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் இராணுவ வீரர்கள் எப்போது தூப்பாக்கியோடு நடமாடி அச்சத்தை ஏற்படுத்துவதால் மக்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது. எந்த நேரத்தில் அவர்கள் என்ன செய்வார்களோ எண்ணம் பொது மக்கள் மனதில் இருந்துக் கொண்டே இருக்கும். ஜனநாயகப்படி முறையான கேள்வியோ, அதற்கான பதிலோ அவர்களிடம் கேட்டு பெற முடியாது என்ற அச்சம் அவர்களிடம் ஒட்டிக் கொண்டே இருக்கும். 

 இந்தப்படத்தில் கிம் கி டுக் நேரடியாக தனது நாட்டை விமர்சனம் செய்கிறார். தென் கோரியாவில் இந்த படம் அதிகம் கவனம் பெறவில்லை. ஆனால், உலக அளவில் பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம்.  

Friday, April 22, 2016

உலக சினிமா : Birdcage Inn

உங்கள் வீட்டின் எதிரே ஒரு விபச்சாரி இருக்கிறாள். தினமும் அவளோடு தங்குவதற்கு ஆண்கள் வந்து போகிறார்கள். சில சமயம் எதிர் வீட்டில் இருக்கும் கூச்சல் சத்தம் உங்கள் வீடு வரை கேக்கிறது. அப்போது உங்களுடைய மனநிலை என்ன ? 

நான் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுப்பேன் என்று கூறி நல்லவர் போல் நடிக்கலாம். ஆனால், உங்கள் மனதில் அவளோடு ஒரு இரவு தங்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கும். அதற்கான விலையை அவளிடம் பேசத் தோன்றும். அதே சமயம் உங்கள் வீட்டு பெண்களுக்கு அந்த விஷயம் தெரியக் கூடாது என்ற அச்சமும் இருக்கும். 

இது ஆண்களுக்கான மனநிலை. மாற்ற முடியாது. ஒரு பெண் தன் வீட்டு எதிரில் விபச்சாரி தங்கியிருப்பதை எப்படி ஏற்றுக் கொள்வாள் ? தன் வீட்டின் இருக்கும் ஆண்களை அவளிடத்தில் காப்பாற்ற நினைப்பாள். அவளை அங்கிருந்து துரத்திவிடதான் நினைப்பாள். ஆனால், அவளால் அதிக ஆதாயம் இருக்கும் போது அவளை ஒரு பெண்ணால் எப்படி ஒதுக்கிவிட முடியும். வெளியே சிரித்து நடித்து, உள்ளுக்குள் கோபத்தை வளர்த்துக் கொள்வாள்.



விபச்சாரி எதிர் வீட்டில் இருக்கும் ஆண் – பெண் மனநிலையை கடந்து மூன்றாவது முக்கியமான ஒருவரின் மனநிலை இருக்கிறது. அந்த விபச்சாரியின் மனநிலை. இரவில் பணத்துக்காக ஒருவரோடு இருந்து, மறுநாள் மற்றவர்கள் போல் இயல்பான வாழ்க்கை வாழலாம் என்று நினைக்கும் போது, மற்றவர்கள் அவளை பார்க்கும் பார்வை எப்படி இருக்கும் ? பகலாக இருந்தாலும் இரவில் செய்யும் வேலையை தான் செய்ய வேண்டும் என்ற சுற்றியிருக்கும் பார்வைகள் நினைக்கும். தன்னுடைய செயல்பாடு நியாயம் சொல்ல முடியாமல், அவர்களின் பார்வையை கடந்து செல்ல முடியாமல் அந்த விபச்சாரியின் மனம் தள்ளாடிக் கொண்டு இருக்கும். 

அந்த விபச்சாரி தங்கியிருக்கும் எதிர் வீட்டில் அவள் வயதுடைய ஒரு பெண் அவளை எப்படி பார்ப்பாள் ? அவளோடு எப்படி பழகுவாள் ? அவர்களுக்குள் எப்படிப்பட்ட உறவு இருக்கும் ? இப்படி ஒரு விபச்சாரிக்கும், சாராசரி குடும்ப பெண்ணுக்கும் இருக்கும் உறவை சொல்வது தான் "Birdcage Inn" படத்தின் கதை.  

கடற்கரை சிறு ஹோட்டல் விடுதி. ஒரு பெண், தனது சாமான்களை எடுத்துக்கொண்டு கிளம்பிக்கொண்டிருக்கிறாள். அவள் எதிரில் இன்னொரு பெண் சாமான்களோடு உள்ளே வருகிறாள். அந்தப் புதிய பெண், கிளம்பிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்துக் கையசைத்து, வழியனுப்புகிறாள். ஆனால், கிளம்பும் பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. 

புதிதாக வந்த பெண்ணின் பெயர் ஜின்-ஆ. புதிதாக வந்த இடத்தின் அழகை ரசிக்க கடற்கரை பாறை மீது அமர்கிறாள். அப்போது கண்கள் சொருகி கடலில் விழ, ஒருவர் அவளை காப்பாற்றுகிறார். மீண்டும் விடுதிக்கு வரும் ஜின்-ஆ தன் சம வயதில் இருக்கும் ஒரு பெண் அவளை முகம் சுளுத்து பார்க்கிறாள். அவள் “Birdcage Inn” நடத்தும் முதலாளியின் மகள் ஹ்யே – மி. 

அந்த விடுதியை நடத்தும் முதலாளிக்கு உதவாத கணவன். பள்ளிக்கு செல்லும் பதின்ம வயதில் ஹ்யூன்- வூ என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறாள். இரவில் தங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவோடு, ஜின்-ஆவும் விருந்தாக இருக்கிறாள். அது தான் ஜின்-ஆவின் தொழில் என்பது நமக்கு அப்போது தான் புரிகிறது. 

அந்த விடுதி மூலம் வரும் வருமானத்தில் அதை நடத்து பெண்மணி தனது மகன், மகளை படிக்க வைக்கிறாள். குடும்பமும் நடத்துகிறாள். ஆனால், அவளின் கணவன் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. அவனால் ஜின்-ஆ கற்பழிக்கப்படுகிறாள். ஆனால், அதை அவளது மனைவியிடம் கூறவில்லை.

பதின்ம வயது மகன் ஹ்யூன்- வூ புகைப்பட போட்டிக்காக அவளை நிர்வாணப்படத்திற்கு போஸ் கொடுக்க வற்பூறுத்திக் கொண்டே இருக்கிறான். ஜின் – ஆ பல முறை மறுத்தும் அவன் கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் கடற்கரை படகில் அவன் புகைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ் கொடுக்க, அவளோடு உறவு கொள்ள கட்டாயப்படுத்துகிறான். ஜின் – ஆ மறுத்தும் அவன் விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் அவளும் இணங்கிறாள். 

அந்த வீட்டில் இரண்டு ஆண்கள் இப்படி இருக்க, முதலாளி பெண்மணியோ அவளை பணம் சம்பாதித்துக் கொடுக்கும் கருவியாக பார்க்கிறாள். தனக்கு நட்பாக பழகக்கூடியவள் ஹ்யே – மி என்று நினைத்து, அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி கொடுக்கிறாள். ஆனால், ஹ்யே – மி ஜின் – ஆவின் நட்பை ஏற்றுக் கொள்ளவில்லை. 

இதற்கு நடுவில், ஹ்யே – மிவுக்கு ஒரு காதலன் இருப்பது தெரியவருகிறது. ஹ்யே – மி உடல் உறவுக்கு அழைக்க, திருமணத்திற்கு முன் கிடையாது என்று மறுக்கிறாள். ஹ்யே – மி உறவுக்கு மறுத்த சோகத்தில் போதையோடு ஜின் – ஆவுடன் உறவுக்காக செல்கிறான். 

ஜின் - ஆ வாழும் அறையை பார்க்க ஹ்யே – மி உள்ள நுழைகிறான். அங்கு இருக்கும் பொருட்கள், படங்கள் எல்லாம் பார்த்து அவள் மீது இரக்கம் பிறக்கிறது. தன் சம வயதில் இருக்கும் ஒரு பெண் வாழும் வாழ்க்கை நினைத்து அவள் மீது பரிதாபம் பிறக்கிறது. 

அந்த சமயத்தில் ஹ்யூன்- வூ ஜின் – ஆவை எடுத்த நிர்வாணப்படம் பத்திரிகையில் வெளியாகிறது. அவளின் முன்னாள் தரகர் பத்திரிகையாளர் கொடுத்தப் பணத்தில் பங்குக்கேட்கிறான். தனக்கு யாரும் பணம் தரவில்லை என்று ஜின் – ஆ சொல்லியும் அவன் நம்ப மறுகிறான். கோபத்தில் ஜின் – ஆவை அடிக்கவும் செய்கிறான். அந்த சமயத்தில் ஹ்யே – மி அவளை காப்பாற்றுகிறாள். 

அந்த தரகர் திரும்பவும் பணத்திற்காக வருவேன் என்று சொல்லி செல்கிறான். விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஜின் – ஆ தற்கொலை செய்து கொள்ள தனது கையை அறுத்துக் கொள்கிறாள். ஆனால், சரியான நேரத்தில் ஹ்யே – மி அவளை காப்பாற்றுகிறாள். அந்த வீட்டில் இது வரை கிடைக்காத அன்பும், கனிவும் ஹ்யே – மி மூலம் கிடைக்கிறது. 

ஹ்யே – மி ஜின் – ஆவை கை கட்டோடு அழைத்து வந்து தனது அறையை காட்டுகிறாள். அப்போது, விடுதிக்கு ஒரு வாடிக்கையாளர் வர ஜின் – ஆ பதிலாக ஹ்யே – மி அந்த வாடிக்கையாளரோடு உறவுக் கொள்கிறாள். 


கதை என்று எடுத்துக் கொண்டால் ஒரே இடத்தில் வாழும் சமய வயதுடைய இரண்டு பெண்கள். ஒரு பெண்ணை வெறும் உடலாக பார்க்கிறார்கள். அதன் மூலம் வரும் ஆதாயத்தை மட்டும் அனுபவிக்கிறார்கள். இன்னொரு பெண்ணிடம் அன்பாக நடத்துகிறார்கள். இந்த இரண்டு பெண்களை நடத்தும் மனிதர்கள் அவர்களுக்குள் ஒரு பாசப்பினைப்பை உருவாக்குகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தனது காதலனுடன் இழக்க விரும்பாத தனது கண்ணித்தன்மையை, ஜின் – ஆவுக்காக இழக்கிறாள். 

மற்ற இயக்குனர்களை காட்டிலும் கிம் கி டுக் இதில் தான் வேறுபட்டு இருக்கிறார். ஏதார்த்த வாழ்க்கை இப்படி நடக்குமா என்ற கேள்வியோடு அதை நடத்தி காட்டி நம்மை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்வார். அதை ஏற்றுக்கொண்டால் நாம் கணத்த மனதோடு செல்ல வேண்டும். ஏற்கக்கூடாது என்று நினைத்தால் நாம் கிம் கி டுக்கை முழுவதுமாக புரக்கணிக்க வேண்டும். 

இரண்டு பெண்ணின் வாழ்க்கை காட்டிய கிம் கி டுக்கின் “Birdcage Inn” படைப்பை உங்களால் புரக்கணிக்க முடியாது என்பது தான் உண்மை.

LinkWithin

Related Posts with Thumbnails