வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label திருநங்கை. Show all posts
Showing posts with label திருநங்கை. Show all posts

Tuesday, September 9, 2014

வெள்ளை மொழி - ரேவதி

இன்றைய இணையப் புரட்சியில் ஹார்மோன்களைப் பற்றியும், உடலில் வரும் மாற்றங்களைக் குறித்தும், அதன் பாதிப்பு குறித்தும் தெரிந்துக் கொள்ளவோ, புரிந்துக் கொள்ளவோ முடிகிறது. ஆனால், 80களில் இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தான் பெண் என்று உணர்ந்து பெற்றோர்களால், சகோதரர்களால் புறக்கனிக்கப்பட்டு தனக்கான அங்கிகாரத்தை தேடி அளைந்த திருநங்கை ரேவதி அம்மாவின் சுயவரலாறு தான் “வெள்ளை மொழி”.


திருநங்கைக் குறித்து வந்த “நான் வித்யா”, சு.சமுத்திரத்தின் “வாடா மல்லி” போன்ற புத்தகங்களில் தன்னை பெண் என்று உணர்ந்த தருணம் முதல் பெண்ணாக மாறும் வரை அதற்காக அவர்கள் சந்தித்த போராட்டம் நீண்டதாக இருக்கும். அதில் திருநங்கையினர் பெண்ணாக மாறிய பிறகு சந்தித்த சவால்களை அந்த இரண்டு நூல்களில் அலசப்பட்டதைவிட “வெள்ளை மொழி” யில் மிக நீண்டதாகவே கூறப்பட்டிருக்கிறது.

பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு வட நாட்டுக்கு சென்று தனக்கு நிர்வாண ஆப்ரேஷன் செய்து கொண்டதில் இருந்து, பாலியல் தொழில், பிச்சை எடுப்பது, பெங்களூரில் வேலை, திருமணம், பெற்றோர்களுடன் சொத்துரிமை, டிரைவிங் லைசன்ஸ் பெறுவது என்று நித்தம் ஒவ்வொரு நாளும் தன் வாழ்க்கையை சந்தித்த சவால்களை ரேவதி அம்மா பதிவு செய்திருக்கிறார்.

திருநங்கையராக மாறிய பல திருநங்களுக்கு ரேவதி அம்மா வாழ்க்கை ஒரு முன் உதாரணம். அதன் பதிவே இந்த புத்தகம்.

புறக்கனிப்பு தவிர மிகப் பெரிய தண்டனை ஒரு மனிதனுக்க்கு மரணத்தால் கூட கொடுக்க முடியாது. அப்படி ஒரு தண்டனையை தங்கள் வாழ்நாள் முழுக்க திருநங்கையர்கள் அனுபவித்து வருகிறார்கள். எத்தனையோ அவமானங்களையும், கொடுமைகளையும் தாண்டி இன்று ஒரு சில திருநங்கையர்கள் மட்டுமே ஒரளவு சாதித்திருக்கிறார்கள். அவர்கள் சாதனை முழுமையடைய வேண்டும் என்றால் இன்னும் சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரமும் வழங்க வேண்டும்.

ஒரு இடத்தில் வாடகைக்கு வீடு எடுப்பதில் இருந்து, இரு சக்கர வாகனத்திற்கு லைஸென்ஸ் வாங்குவது, சொத்துரிமை கேட்பது, திருமணத்திற்கு அங்கிகாரம், வேலை அங்கிகாரம் என்று எவ்வளவோ சவால்கள் அவர்களை சுற்றி இருக்கிறது. அத்தனை சவால்களை இந்த நூலில் ரேவதி அம்மா வாழ்க்கை மூலம் தெரிகிறது.

இந்த சமூகத்தில் ஒரு பெண் சந்திக்கும் பாலியல் கொடுமைகளை விட திருநங்கையர்கள் சந்திக்கும் பாலியல் கொடுமைகள் மிக அதிகம். பாலியல் தொழில் அல்லது பிச்சை எடுப்பது இந்த இரண்டு தொழிலை தவிர இந்த சமூக அவர்களுக்கு விட்டு வைக்கவில்லை.

பிச்சைப் போட்டு ஒதுங்கி செல்லும் மௌனமாக மக்கள் ஒரு புறம். இச்சைக்காக தேடி வரும் ஆண்கள் இன்னொரு புறம். இரண்டும் நடுவில் தங்களுக்கான வாழ்க்கையை தேட முடியாமல் தவிக்கின்றனர். 

முடிந்தளவில் பிச்சைப் போட்டு ஒதுங்கி செல்லும் மௌனமாக மக்கள் மனதில் இருக்கும் மனிதத்தை இதுப் போன்ற புத்தகங்கள் தட்டி எழுப்பும் நம்புவோம்.

**
வெள்ளை மொழி - ரேவதி 
அடையாளம் வெளியீடு
Rs.200 

LinkWithin

Related Posts with Thumbnails