நேற்று முன் தினம் (26.9.09), இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தேன். வழக்கம் போல் இந்தியா அணி சோதிப்பியது. கொஞ்ச நேரத்தில் மழை வந்து ஆட்டத்தை பாதித்திருந்தது. மழை நிற்க வேண்டும் என்று பலர் ஆர்வமாக கடவுளை வேண்டினர். காரணம், இதில் இந்தியா வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்கு முன்னேற முடியும். அப்போது, Times Nowவில் இந்தியா விளையாடிய 42.3 ஓவர்களை கடுமைகாக விமர்சித்தனர்.
பிரவின் குமார் 'ரன் அவுட்' விட்டதை, அடிப்படை கூட தெரியாமல் Stump முன்னாடி நின்றதையும், சச்சின் டைவ் அடித்ததையும் கடுமையாக விமர்சித்தார்கள். கிட்ட தட்ட 'அடிப்படையே' தெரியாமல் விளையாடுவதாக பேசிக் கொண்டார்கள். இதை சொன்னது கிரிக்கெட் ரசிகர்கள் அல்ல... இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரன் மோரே !!
விளையாட்டு இன்னும் முடியவில்லை. மழை நின்றால் மீண்டும் இந்தியா சிறப்பாக விளையாடலாம். அதற்குள் இந்தியா தோல்வி அடைந்து விட்டது போல் விமர்சித்து Times Now டி.வி. ஒளிபரப்பினர். ஒரு வேலை இந்த ஆட்டம் தொடங்கி இந்தியா விளையாடி இருந்தால், 'What a amazing performance !!' என்று புகழாரம் சூட்டியிருப்பார்கள்.
வெற்றியோ தோல்வியோ விளையாட்டில் சகஜம். இந்தியா தோல்வி பெரும் போது கிரிக்கெட் வீரர்கள் வீடு தாக்கப்படுவதும், உருவ பொம்மை எரிப்பதற்கும் இது போன்ற ஊடகங்களும் ஒரு காரணமாக தான் இருக்கின்றன.
விமர்சிப்பது தவறில்லை. ஆனால், ஆட்டம் முடியாமல் இருக்கும் போது பாமரன் போல் கடுமையான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.
வீடு நெடுந்தூரம் - Short film
Book, Movies Offers
To Buy my books in flipkart
Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts
Wednesday, September 30, 2009
Tuesday, September 25, 2007
அப்தூல் கலாம் கண்ட கனவு இந்தியா:2020 நிறைவெறிவிட்டது....!!!
தலைப்பை படித்ததும் இந்தியா வல்லரசு நாடாகிவிட்டது என்று நினைத்தீர்களா...!! இல்லை... இந்தியா 20- 20 உலக கோப்பை வெற்றி பெற்றதை தான் சொன்னேன். 6 மாதம் முன்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் படு தோல்வி அடைந்து முதல் சுற்றில் இருந்து வெளி ஏறிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியினர்கள் புது போலிவுடன் 20- 20 உலக கோப்பையில் இறுதி சுற்றுக்கு நுழைந்து இரண்டு அணியகளும் மிக சிறப்பாக விளையாடினார்கள். தோல்வி பெற்ற பிறகு... இந்திய அணிக்கு மாபெரும் வெற்றி !!!
அப்தூல் கலாம் கண்ட கனவு இது தான். தோல்வியின் போது துவண்டு போகாமல் இளைஞர்கள் துடித்து எழுந்து வெற்றி கதவை நோக்கி ஓட வேண்டும். நகைச்சுவைக்காக கிரிக்கெடை அப்தூல் கலாம் கனவோடு இணைத்து பேசினாலும், கனவு மெய்பட போராட்டம் மிகவும் முக்கியம். அப்தூல் கலாம் அவர்கள் எட்டு பேர் தேர்வாகும் தேர்வில் ஒன்பதாவது இடம் தான் அவருக்கு கிடைத்தது. தோல்வியின் போது அவர் துவண்டு இருந்தால், இன்று நாள் இதழ்களில் தலைப்பு செய்தியாக இருந்திருக்க மாட்டார்.அப்தூல் கலாம் - " தோல்வியின் போது தன் வெற்றி இது இல்லை, தனக்காக வேறு வெற்றி கத்துக் கொண்டு இருக்கிறது" என்று நினைத்தார்.
தோல்வியின் போது வரும் கோபமும், வேதனையும் இருந்தால் அடுத்த வெற்றியை நாமே தள்ளி வைக்கிறோம். தோல்வியில் வெற்றி பெற்றவர்களில் அப்தூல் கலாம் அவர்கள் முன் உதாரணம்.
( உலக கோப்பை தோல்வியின் போது தோனி வீட்டை உடைத்தவர், இப்பொது தோனிக்கு வீடு கட்டி கொடுப்பார்களா...!! )
அப்தூல் கலாம் கண்ட கனவு இது தான். தோல்வியின் போது துவண்டு போகாமல் இளைஞர்கள் துடித்து எழுந்து வெற்றி கதவை நோக்கி ஓட வேண்டும். நகைச்சுவைக்காக கிரிக்கெடை அப்தூல் கலாம் கனவோடு இணைத்து பேசினாலும், கனவு மெய்பட போராட்டம் மிகவும் முக்கியம். அப்தூல் கலாம் அவர்கள் எட்டு பேர் தேர்வாகும் தேர்வில் ஒன்பதாவது இடம் தான் அவருக்கு கிடைத்தது. தோல்வியின் போது அவர் துவண்டு இருந்தால், இன்று நாள் இதழ்களில் தலைப்பு செய்தியாக இருந்திருக்க மாட்டார்.அப்தூல் கலாம் - " தோல்வியின் போது தன் வெற்றி இது இல்லை, தனக்காக வேறு வெற்றி கத்துக் கொண்டு இருக்கிறது" என்று நினைத்தார்.
தோல்வியின் போது வரும் கோபமும், வேதனையும் இருந்தால் அடுத்த வெற்றியை நாமே தள்ளி வைக்கிறோம். தோல்வியில் வெற்றி பெற்றவர்களில் அப்தூல் கலாம் அவர்கள் முன் உதாரணம்.
( உலக கோப்பை தோல்வியின் போது தோனி வீட்டை உடைத்தவர், இப்பொது தோனிக்கு வீடு கட்டி கொடுப்பார்களா...!! )
Thursday, April 12, 2007
அப்போ ஹீரோ இப்போ ஜீரோ
1983 உலகக் கோப்பை வென்ற பிறகு ஒவ்வொரு உலகக் கோப்பையும் இந்தியாவுக்கு கனவு கோப்பை தான். எத்தனை முறை எரிந்தாலும் மீண்டும் பறக்கும் ப்னிஃக்ஸ் பறவைப் போல் பல முறை கனவு தகர்ந்து மீண்டும் இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்ற ரசிகர்களின் ஆசை.
1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்களை கூவித்தார் ராகுல் ட்ராவிட். 2003ஆம் ஆண்டு இந்தியா இறுதி சுற்று வரை அழைத்து சென்ற கங்குலிக்கு லட்சக்கணக்கில் பரிசுகள் வழங்கப்பட்டது. அதே உலகக் கோப்பையில் சச்சின் டென்டுல்கர் அதிக ரன்கள் கூவித்ததற்காக பல பரிசுகள் வாங்கினார். இப்படி, நெற்று வரை இந்திய அணியில் ஹீரோவாக இருந்தவர்கள்.... இன்று வெறும் ஜீரோவாக தெரிகிறார்கள். ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் அதிக ரன்களை கூவிப்பது இந்திய வீரராக இருப்பார். ஆனால், இந்த முறை அந்த பெருமைக் கூட இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.
தோல்விக்கு காரணம் இந்திய அணியின் பொருப்பற்ற தன்மையாக இருந்தாலும்.... அதை உருவாக்கி கொடுத்தவர்கள் கிரிக்கெட் ரசிகர்களும், பத்திரிக்கைகளும், விளம்பர நிறுவனங்களும் தான்.
ஒரு போட்டியில் சதம் அடித்தால் போதும். மன்னர், ராஜாதி ராஜன், சூரன், வீரன் என்று பல புகழ் மாலைகள். விளம்பரப் படங்களும், விளம்பர நிறுவனத்தின் பணங்களும் கூவிக்கின்றன. சாதிக்கும் முன்பே பல புகழ் மாலையில் அவர்களை சாதிக்க விடாமல் செய்து விடுகிறோம்.
வந்த புதிதில் அகர்கரை அடுத்த ‘கபீல் தேவ்’ என்று புழந்தார்கள். அதன் பிறகு அவர் விளையாட்டில் தோய்வு தான் காணப்பட்டது. ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட் வீழ்த்திய கும்ளேவை ‘ஜம்போ’ என்று புழந்தார்கள். அதன் பிறகு தன் பௌளிங்கில் அதிக ரன்களை தான் கொடித்தார். 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடங்கும் முன்பே டென்டுல்கர் உருவப்படம் பொருந்திய பெரிய தங்க நாணயம் டென்டுல்கருக்கு வழங்கப் பட்டது. அந்த ஆண்டு டென்டுல்கர் தந்தை இறந்ததால் அவர் சரியாக விளையாட முடியவில்லை. அதிகம் புகழ்ந்து நன்றாக ஆடக் கூடியவர்களை கூட பல்லத்தில் தள்ளி விட்டது ரசிகர்களும், பத்திரிக்கைகளும் தான்.
“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்” என்பார்கள். இந்திய வீரர்களுக்கு புகழ் தான் விஷம். பத்திரிக்கைகளும், ரசிகர்களும் அதிகமாய் புகழ்ந்தே அவர்களை ஹீரோவாக்கினார்கள். இப்போது அவர்களை ஜீரோவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் தகுதி உள்ளவராக இருந்தாலும் அதற்கு தகுந்தால் போல் புகழ வேண்டும்.
சமிபக் காலமாக இந்திய வீரர்கள் சரியாக ஆடவில்லை என்பது தான் உண்மை. ஆனால், பத்திரிக்கைகளும், ரசிகர்களும் இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்று நம்பியதும், அதை பற்றி எழுதியதும் தவறு என்று இப்போழுது உணர்ந்திருப்பார்கள். அதிகமாய் புகழ்ந்தது தவறு செய்த ரசிகர்கள் அதிகமாய் அவர்களை அவமானப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
உருவப் படத்தை எரித்தும், இந்திய வீரர்களை தவறான வார்த்தைகளை பேசிக் கொண்டு இருந்த ரசிகர்கள் இந்த முறை அவர்களை அவமானப் படுத்தும் விதம் மிகவும் வேதனையாக உள்ளது. தோனி வீட்டை உடைத்தும், ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் உருவப்படத்தை சவ ஊர்வலம் போல் தூக்கி சென்று சுடுக்காட்டில் எரிப்பதும், இணையத்தளத்தில் இந்திய வீரர்கள் பிச்சை எடுப்பதுப் போல் அமைப்பதும் என்று பல காரியங்கள் செய்கிறார்கள்.
NDTV யில் அதிக ஊழல்க் கோண்ட பட்டியலில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம். எப்போதாவது ஊழல் செய்த அரசியல்வாதியின் வீட்டை உடைத்திருப்பார்களா ? கிரிக்கெட் விளையாடுபவர்கள் பெரும்பாலானவர்கள் பணக்காரர்கள். ஒன்று விளையாட்டில் சம்பாதித்து இருப்பார்கள் அல்லது விளம்பரத்தில் சம்பாதித்து இருப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகள் பணம் சம்பாதிக்க தான் அரசியலுக்கே வருகிறார்கள். அரசியல்வாதிகள் சம்பாதிக்கும் பணம் பெரும் பாலும் ஊழல் பணம் தான். கிரிக்கெட் வீரர்களை பேசியது போல் ஒரு நாளாவது ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பொது மக்கள் பகிரங்கமாக தாக்கி பேசியிருப்பார்களா...? நாளை இந்திய அணிக்கு ஒரு ஹீரோ கிடைப்பார்கள். ஆனால் அரசியலில்.....?
( நன்றி : தமிழ்.சிஃபி.காம் (tamil.sify.com/general/worldcup07/fullstory.php?id=14426315) மற்றும் நம் உரத்தசிந்தனை :ஏப்ரல்,2007 )
1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்களை கூவித்தார் ராகுல் ட்ராவிட். 2003ஆம் ஆண்டு இந்தியா இறுதி சுற்று வரை அழைத்து சென்ற கங்குலிக்கு லட்சக்கணக்கில் பரிசுகள் வழங்கப்பட்டது. அதே உலகக் கோப்பையில் சச்சின் டென்டுல்கர் அதிக ரன்கள் கூவித்ததற்காக பல பரிசுகள் வாங்கினார். இப்படி, நெற்று வரை இந்திய அணியில் ஹீரோவாக இருந்தவர்கள்.... இன்று வெறும் ஜீரோவாக தெரிகிறார்கள். ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் அதிக ரன்களை கூவிப்பது இந்திய வீரராக இருப்பார். ஆனால், இந்த முறை அந்த பெருமைக் கூட இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.
தோல்விக்கு காரணம் இந்திய அணியின் பொருப்பற்ற தன்மையாக இருந்தாலும்.... அதை உருவாக்கி கொடுத்தவர்கள் கிரிக்கெட் ரசிகர்களும், பத்திரிக்கைகளும், விளம்பர நிறுவனங்களும் தான்.
ஒரு போட்டியில் சதம் அடித்தால் போதும். மன்னர், ராஜாதி ராஜன், சூரன், வீரன் என்று பல புகழ் மாலைகள். விளம்பரப் படங்களும், விளம்பர நிறுவனத்தின் பணங்களும் கூவிக்கின்றன. சாதிக்கும் முன்பே பல புகழ் மாலையில் அவர்களை சாதிக்க விடாமல் செய்து விடுகிறோம்.
வந்த புதிதில் அகர்கரை அடுத்த ‘கபீல் தேவ்’ என்று புழந்தார்கள். அதன் பிறகு அவர் விளையாட்டில் தோய்வு தான் காணப்பட்டது. ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட் வீழ்த்திய கும்ளேவை ‘ஜம்போ’ என்று புழந்தார்கள். அதன் பிறகு தன் பௌளிங்கில் அதிக ரன்களை தான் கொடித்தார். 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடங்கும் முன்பே டென்டுல்கர் உருவப்படம் பொருந்திய பெரிய தங்க நாணயம் டென்டுல்கருக்கு வழங்கப் பட்டது. அந்த ஆண்டு டென்டுல்கர் தந்தை இறந்ததால் அவர் சரியாக விளையாட முடியவில்லை. அதிகம் புகழ்ந்து நன்றாக ஆடக் கூடியவர்களை கூட பல்லத்தில் தள்ளி விட்டது ரசிகர்களும், பத்திரிக்கைகளும் தான்.
“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்” என்பார்கள். இந்திய வீரர்களுக்கு புகழ் தான் விஷம். பத்திரிக்கைகளும், ரசிகர்களும் அதிகமாய் புகழ்ந்தே அவர்களை ஹீரோவாக்கினார்கள். இப்போது அவர்களை ஜீரோவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் தகுதி உள்ளவராக இருந்தாலும் அதற்கு தகுந்தால் போல் புகழ வேண்டும்.
சமிபக் காலமாக இந்திய வீரர்கள் சரியாக ஆடவில்லை என்பது தான் உண்மை. ஆனால், பத்திரிக்கைகளும், ரசிகர்களும் இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்று நம்பியதும், அதை பற்றி எழுதியதும் தவறு என்று இப்போழுது உணர்ந்திருப்பார்கள். அதிகமாய் புகழ்ந்தது தவறு செய்த ரசிகர்கள் அதிகமாய் அவர்களை அவமானப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
உருவப் படத்தை எரித்தும், இந்திய வீரர்களை தவறான வார்த்தைகளை பேசிக் கொண்டு இருந்த ரசிகர்கள் இந்த முறை அவர்களை அவமானப் படுத்தும் விதம் மிகவும் வேதனையாக உள்ளது. தோனி வீட்டை உடைத்தும், ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் உருவப்படத்தை சவ ஊர்வலம் போல் தூக்கி சென்று சுடுக்காட்டில் எரிப்பதும், இணையத்தளத்தில் இந்திய வீரர்கள் பிச்சை எடுப்பதுப் போல் அமைப்பதும் என்று பல காரியங்கள் செய்கிறார்கள்.
NDTV யில் அதிக ஊழல்க் கோண்ட பட்டியலில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம். எப்போதாவது ஊழல் செய்த அரசியல்வாதியின் வீட்டை உடைத்திருப்பார்களா ? கிரிக்கெட் விளையாடுபவர்கள் பெரும்பாலானவர்கள் பணக்காரர்கள். ஒன்று விளையாட்டில் சம்பாதித்து இருப்பார்கள் அல்லது விளம்பரத்தில் சம்பாதித்து இருப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகள் பணம் சம்பாதிக்க தான் அரசியலுக்கே வருகிறார்கள். அரசியல்வாதிகள் சம்பாதிக்கும் பணம் பெரும் பாலும் ஊழல் பணம் தான். கிரிக்கெட் வீரர்களை பேசியது போல் ஒரு நாளாவது ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பொது மக்கள் பகிரங்கமாக தாக்கி பேசியிருப்பார்களா...? நாளை இந்திய அணிக்கு ஒரு ஹீரோ கிடைப்பார்கள். ஆனால் அரசியலில்.....?
( நன்றி : தமிழ்.சிஃபி.காம் (tamil.sify.com/general/worldcup07/fullstory.php?id=14426315) மற்றும் நம் உரத்தசிந்தனை :ஏப்ரல்,2007 )
Subscribe to:
Posts (Atom)