வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label கடல் புறா. Show all posts
Showing posts with label கடல் புறா. Show all posts

Thursday, April 23, 2009

'கடல் புறா' - மூன்றாம் பாகம் சுருக்கம்

கடல் புறா மூன்றாம் பாகம் இரண்டு பகுதியாக பார்ப்போம்.

அஷயமுனை கைது செய்யப்பட்ட பலவர்மனுடன் இளையபல்லவன் கடலில் பயணம் செய்துக் கொண்டு இருக்கிறான். அப்போது இரண்டு கலிங்கத்து மரகலத்துடன் போர் புரிந்து அவன் கைப்பற்றுகிறான். இளையபல்லவன் கைப்பற்றிய மரக்கலத்தில் காஞ்சனை, குணவர்மனும் கைதிகளாக இருப்பதை பார்த்து இருவரையும் விடுவிக்கிறான். கடல் புறா 'கடல் மோகினி' நோக்கி செல்வதை கேள்விப்பட்ட பலவர்மன் அஞ்சி நடுங்கிறான். கடல் புறாவை திருப்பவும் சொல்கிறான். ஆனால், அவன் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் 'கடல் மோகினி' நோக்கி செல்கிறான் இளையபல்லவன்.

தமிழர்கள் வசம் இருந்த கடல் மோகினி கங்கதேவன் என்னும் தலைவன் கலிங்கத்தை ஆதரிக்கும் ஸ்ரீ விஜயத்தின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதை தெரிந்துக் கொள்கிறான். உண்மை அறிந்த இளையபல்லவன் தன் மரக்கலங்களில் கலிங்கத்துக்கு கோடியை பறக்க விட்டு கடல் மோகினிக்கு செல்கிறான். குணவர்மனை ரகசிய அறையில் வைத்து விட்டு, காஞ்சனையை மஞ்சளழகி என்று கங்கதேவனிடம் அறிமுகம் செய்து வைக்கிறான். பலவர்மனை பார்த்தவுடன் கொன்று விட துடிக்கும் கங்கதேவன் அவர்கள் அரச காரியத்திற்காக அவர்களை எதுவும் செய்யாமல் தன் தீவில் தங்க வைக்கிறான்.

தன் தீவுக்கு வந்த இளையபல்லவனை, அவன் உபதளபதிகளையும் விருந்துக்கு அழைக்கிறான் கங்கதேவன். விருந்துக்கு வந்தவர்கள் உள்ளே நுழைந்ததும் கங்கதேவன் கைது செய்கிறான். கங்கதேவன் ஆபத்தான எதிரி என்று முன்பே யுகித்த இளையபல்லவம் தான் அகூதாவின் தளபதி என்று அறிமுகம் படுத்துகிறான். அதுமட்டுமல்லாமல் கடாரத்தை கொள்ளையடிக்க தன்னுடன் கூட்டனி சேரும்ப்படி ஆசை வார்த்தை காட்டுகிறான்.

இளையபல்லவனை ஒப்பந்ததை ஏற்றுக் கொள்ள மஞ்சளழகி என்று அறிமுகப்படுத்தப்பட்ட காஞ்சனையை கேட்கிறான். தன் ஆபத்தான நிலைமை உணர்ந்த இளையபல்லவன் காஞ்சனை மீது தனக்கு பற்று இல்லாதது போல் காட்டிக் கொள்கிறான். இதனால், இருவரும் கூட்டு சேர்கிறார்கள். அதே சமயம் கங்கதேவன் மாலுமிகளிடம் காஞ்சனையுடன் யார் தவறாக நடந்துக் கொண்டாலும் அவர்களை உயிருடன் விட மாட்டேன் என்று கூறுகிறான்.

இளையபல்லவன் குணவர்மனை கங்கதேவனிடம் ஒப்படைத்து சிறை வைக்கிறான்.இளையபல்லவன் சதி திட்டத்தை அறிந்த கடாரத்தின் இளவரசியான காஞ்சனை கோபம் கொள்கிறாள். காஞ்சனை இளையபல்லவனிடம் கோபமாக வாதம் செய்ய கங்கதேவன் அவளை கை பிடித்து தன் மாளிகை அழைத்து செல்ல பார்க்கிறான். இளையபல்லவன் கங்கதேவனிடம் காஞ்சனையை விடும் படி சொல்கிறான். அவன் மறுக்க, இருவரும் சண்டையிடுக்கின்றனர். இறுதியில் இளையபல்லவன் கங்கதேவனை கொன்று விட்டுகிறான். காட்டில் ஒலிந்திருந்த தமிழர்களுடம் இளையபல்லவனுக்கு ஆதரவாக வருகின்றனர்.



ஒன்பது மாதம் பிறகு....

கலிங்கத்துக்கு ஆதரவாக இருந்த ஸ்ரீ விஜய தீவுகளை கைபற்றிவிட்டு காஞ்சனையை பார்க்க கடாரத்துக்கு செல்கிறான் இளையபல்லவன். ஆனால், அவனுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்துக் கொண்டு இருப்பதை அப்போது தான் தெரிந்துக் கொள்கிறான். தனது நண்பனான அநபாயன் வீரராஜேந்திர தேவர் ஆணைப்படி தன்னை கைது செய்ய வந்திருப்பதை ஒரு வீரன் தெரிவிக்கிறான்.

அதே சமயம் அநபாயன் கைது செய்து சிறையில் வைக்கும் போது அங்கு தப்பிக்கவும் திட்டம் கொடுக்கிறான். ஆனால், இளையபல்லவன் அதை செய்ய மறுக்கிறான். அதனால், அநபாயன் அமீரின் துணையோடு இளையபல்லவனை மயக்கடைய செய்து காஞ்சனையுடன் அஷயமுனைக்கு கடல் புறாவில் அனுப்புகிறான்.

மயக்க தெளிந்த இளையபல்லவன் கடல் புறாவில் தன் தலைமையை மதிப்பு இல்லை என்று உணர்கிறான். தன் தந்திரத்தால் அமீர், கண்டிதேவன் இருவரையும் கடல்புறாவை ஸ்ரீ விஜய்த்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 'மலையூர்' பக்கம் திருப்பிவிடுகிறான். முதலை வாயில் இருப்பதை உணர்ந்த அமீர், மீண்டும் இளையபல்லவனை தலைமை ஏற்க்கும்மாறு கூறுகிறான்.

கடல் புறா விஜயசந்திரன் என்னும் உபதளபதி தலைமையில் மலையூர் படைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர். விஜயசந்திரப் ஆபாரா போர் திறமை கடல் புறா ஒரளவு சேதமானது. ஆனால், இறுதியில் இளையபல்லவனே வெல்கிறான். கைது செய்யப்பட்ட விஜயசந்திரனிடன் அவன் தளபதிக்கு கடிதம் எழுத சொல்கிறான். அவனும் எழுதிக் கொடுக்கிறான். அந்த கடிதத்தை இளையபல்லவனே எடுத்துக் கொண்டு மலையூர் தளபதியை சந்திக்க செல்கிறான்.

அங்கு சென்றவுடன், அவனுக்கு பெரும் அதிர்ச்சி. மலையூருக்கு தலைவனல்ல.. தலைவி...அதுவும் 'மஞ்சளழகி' அந்த இடத்தில் அமர்ந்திருந்தாள். அதன் பிறகு ஜெயவர்மன் தன்னை மகளாக ஏற்றுக் கொண்டுவிட்டார் என்பதையும், அவளிடம் மலையூரை கட்டுப்பாட்டில் விட்டதையும் தெரிந்துக் கொள்கிறான்.

மஞ்சளழகி இளையபல்லவன் மீது இருந்த காதலால் அவனுடைய கடல்புறாவை அழிக்காமல் விட்டுவிடுகிறாள். தந்தை ஆணைப்படி கேட்கும் உபதளபதியின் கவனைத்தை திசை திருப்ப உதவுகிறாள். இதனால், எந்த பெரிய யுத்தமில்லாமல் மலையூரை இளையபல்லவன் கைப்பற்றுகிறான்.

மலையூர் கைப்பற்றிய கையோடு ஜெயவர்மனின் ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்கிறான். போரில் வெற்றி பெற்ற இளையபல்லவனுக்கு பரிசாக வீரராஜேந்திர தேவர் வண்டை குறுநிலத்தை பரிசாக அளிக்கிறான். காஞ்சனை, மஞ்சளழகி இருவரையும் மணக்கிறான் இளையபல்லவன்.

மூன்றாம் இனிதே முடிவடைந்தது !!

Saturday, April 18, 2009

'கடல் புறா'- இரண்டாம் பாகம் சுருக்கம்

கடல் கொள்ளையரான இளையபல்லவன் தன் உப தளபதிகளான அமீர், கண்டிதேவனுடன் அஷயமுனை தீவை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கிறான். முதல் பாகத்தில் படைத்தலைவனாக வந்த இளையபல்லவன் எப்படி கடல் கொள்ளைக்காரனாக ஆனான் விளக்கத்தை தன் சொல்கிறான். கலிங்கத்துடன் நட்புறவு வைத்திருக்கும் ஸ்ரீ விஜயத்தின் கடற்படை பலத்தை சிதைக்கவே தான் கடல் கொள்ளையனான அகூதாவுடன் ஒராண்டு பயிற்சி எடுத்ததை சொல்கிறான். இப்போது தன் லட்சிய பாதையை நோக்கி தன் உபதளபதிகளுடன் அஷயமுனை தீவைக்கு வருகிறான்.

அஷயமுனை தீவு அதன் தலைவன் பலவர்மன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அஷயமுனை ஸ்ரீ விஜயத்துக்கு ஆதரவாக இருப்பதை தெரிந்தும் இளையபல்லவம் தன் உபதளபதிகள் உதவியில்லாமல் தனியாக தீவுக்குள் செல்கிறான். முதலில் அவனை கொல்ல நினைக்கும் பலவர்மன், இளையபல்லவன் அகூதாவின் பெயரை பற்றி சொன்னதும் அஞ்சுகிறான். தன்னுடன் நட்புறவு வைத்துக் கொண்டால் அஷயமுனை தீவு பாதுகாக்கப்படும் என்பதையும் இளையபல்லவன் சொல்கிறான். அப்போது பலவர்மனுடைய வளர்ப்பு மகள் மஞ்சளழகி அங்கு வருகிறாள்.



அந்த தீவில் பௌர்ணமி திருவிழா நடக்கும் சமயத்தில் இளையபல்லவன் வந்தால் அவனுக்கு புர்வகுடி தலைவனான வில்வலனால் ஆபத்து வருமா என்று பலவர்மனும், மஞ்சளழகியும் அஞ்சுகிறார்கள். மஞ்சளழகி அந்த திருவிழா வில்வலன் செய்யும் கொடுமைகளையும், கொலைகளையும் பற்றி சொல்கிறாள். ஒரு வேலை வில்வலன் இளையபல்லவனை கொன்றாலும் அஷயமுனைக்கு ஆபத்து இருப்பதை பலவர்மன் உணர்ந்தான். ஆனால், இளையபல்லவன் எதற்கும் அஞ்சாமல் அந்த விழாவில் தன் உபதளபதிகளுடன் கலந்துக் கொள்கிறான்.

திருவிழாவில் மஞ்சளழகி ஆடும் போது இளையபல்லவனை நோக்கி ஒருவன் குறுவாள் வீசும் போது உபதளபதி அமீர் தன் குறுவாள்ளால் கொல்கிறாள். இதை பார்த்த வில்வலன் கோபன் கொண்டு இளையபல்லவன் சண்டைக்கு அழைத்து தோல்வியும் அடைகிறான். தோல்வியுற்ற வில்வலன் பலவர்மனிடன் இன்னும் சிறு நாட்களில் அஷயமுனையை அழித்துவிடுவதாக சுழ்ழுரைத்து செல்கிறான்.

அஞ்சி நடுங்கிய பலவர்மன் ஒரு திட்டம் போடுகிறான். தன் மகளை இளையபல்லவனுக்கு திருமணம் செய்து வைத்தாள் தன் கோட்டை பாதுகாக்கும் தளபதி கிடைக்கிறான். அவன் திருமணத்துக்கு மறுத்தால் தன் மகளிடம் தவறாக நடந்து கொண்டான் என்று சொல்லி கொன்றுவிடலாம் என்று திட்டம். பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவனை யாராக இருந்தாலும் அகூதா மன்னிக்கமாட்டான் என்பதை அந்த தீவில் உள்ளவர்கள் அனைவருக்கு,ம் தெரிந்த உண்மை.

மஞ்சளழகி தன் தந்தையின் இந்த திட்டத்தை பற்றி சொல்கிறாள். ஒன்று திருமணம் அல்லது மரணம் என்ற நிலையில் இளையபல்லவன் தள்ளப்படுகிறான். அவளை திருமணம் செய்துக் கொள்ள இளையபல்லவன் சம்மதிக்கிறான். அதுமட்டுமல்லாமல், தன் கப்பலில் இருக்கும் செல்வத்தை எல்லாம் பலவர்மன் செல்வத்துடன் இணைத்து சேந்தனை பாதுக்காக்கும் படி சொல்கிறான். அஷயமுனை இருக்கும் மக்களுக்கு போர் வில்வலனை எதிர்க்கும் போர் பயிற்சியும் கொடுக்கிறான்.

இதற்கிடையில், மஞ்சளழகி வைத்து பலவர்மன் ஆடும் அரசியல் பகடையை பார்த்து இளையபல்லவன் மனதில் சந்தேகம் எழுகிறது. அவள் பலவர்மனின் வளர்ப்பு மகள் பிறகு தெரிந்துக் கொள்கிறான். தன் உபதளபதி கண்டிதேவனை தன் கப்பலை மாற்றியமைக்க சொல்கிறான். கண்டிதேவன் கொள்ளை கப்பலை புறாவடிவத்தில் மாற்றியமைக்கிறான். அதற்கு ஒரு மாதம் நேரமும் எடுத்துக் கொள்கிறான். மாற்றியமைத்த கப்பலுக்கு 'கடல் புறா' என்ற பெயர் வைக்கிறான் இளையபல்லவன்.

இளையபல்லவன் அஷயமுனையில் எல்லா வகை மதுக்களையும் சுவைத்து பார்க்கிறான். அவன் குடிப்பதை பார்த்து பலவர்மன் இளையபல்லவன் முழு குடிகாரனாக மாறிவிட்டதை நினைத்து சந்தோஷப்படுகிறான். என்னென்றால், பலவர்மன் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவை மறைமுக இளையபல்லவன் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறான் என்று தெரிந்துக் கொண்டான். வில்வலனை நேரம் பார்த்து தன் தீவை தாக்கும்படி பலவர்மனே யோசனை சொல்கிறான். மஞ்சளழகி மூலம் அஷயமுனையில் காவலை குறைக்க வைக்கிறான் பலவர்மன். இளையபல்லவன் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் என்று பலர் வியந்தனர்.

இளையபல்லவன் குடிபழக்கத்துக்கு அதிகம் அடிமையாகிறான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலவர்மன் அவன் குடிக்கும் மதுவில் விஷம் கலக்கிறான். ஆனால், இளையபல்லவன் மது அறிந்திருந்தாலும் நிதானம் இழக்கவில்லை என்பது அப்போது தெரிந்தது. தன் உபதளபதிகளுக்கு ரகசிய உத்தரவுப்படி வில்வலனை தாக்குதலை எதிர்கொள்ள போருக்கு தயாராக இருந்தனர்.

வில்வலனை கொன்று அஷயமுனை பாதுக்காக்க படுகிறது. யுத்தம் முடிந்த பிறகு அகூதா வருகிறான். மஞ்சளழகி தன் சகோதரி மகள் என்று இளையபல்லவனிடம் கூறுகிறான். அதுமட்டுமல்ல.... தன் சகோதரியை பலவர்மனும், ஜெயவர்மனும் சேர்ந்து கடத்தி சென்றனர் என்றும், மஞ்சளழகியின் தந்தை ஜெயவர்மன் என்றும் உண்மையை சொல்கிறான். அகூதா பலவர்மனை கொல்ல நினைக்கும் போது இளையபல்லவன் அவனை தடுத்து தனக்கு உதவியாக கடல் பயணத்துக்கு அழைத்து செல்கிறான். மஞ்சளழகியிடம் அஷயமுனையை ஒப்படைத்து விட்டு கடல் புறாவில் பயணம் மேற்கொள்கிறான்.

இரண்டாம் பாகத்தில் நச் வசனங்கள்..

மஞ்சளழகி இளையபல்லவனை சந்தித்த போது....

மஞ்சளழகி : நீங்கள் மாவீரன்...!

இளையபல்லவன் : நன்றி

மஞ்சளழகி : உங்களுக்கு அடக்கமும் இருக்கிறது..

இளையபல்லவன் : நன்றி

மஞ்சளழகி : வெட்கமும் இருக்கிறது உங்களுக்கு..

இளையபல்லவன் : சில சமயங்களில் அந்தக் குணம் ஆண்களுக்கும் தேவையாயிருக்கிறது.

மஞ்சளழகி : உங்களுக்கு விஷமமும் இருக்கிறது..

இளையபல்லவன் : என்ன ?

மஞ்சளழகி : நீங்கள் மாவீரன் என்றேன் - அடக்கத்தை காட்டினீர்கள். உங்களுக்கு அடக்கமிருக்கிறதென்றேன் - வெட்கத்தை காட்டினீர்கள். வெட்கமிருக்கிறதென்றேன் -என்னை குத்திக் காட்டி உங்களுக்கு விஷமமும் உண்டு என்பதை நிரூபித்தீர்கள்.

இளையபல்லவன் : ஏன் ?

மஞ்சளழகி : அடக்கம் வீரத்துக்கு அடையாளம். வெட்கம் பண்பாட்டுக்கு அடையாளம். விஷமம் ரசிகத் தன்மைக்கு அடையாளம்.


காஞ்சனை மீது இளையபல்லவனுக்கு காதல் இருப்பதை பற்றி மஞ்சளழகி கேட்க.. அதற்கு இளையபல்லவன் "மனம் ஒன்றுதான். எனக்கு அது சிக்கி இருக்கும் சிறைகள் இரண்டு. அது எப்பக்கம் இழுபடுமோ தெரியாது".

இறுதியில் இளையபல்லவம் மஞ்சளழகியை விட்டு பிரியும் போது, " இந்த அலையை போல தான் நீங்களும் என்ற அன்றே சொன்னேனே..? அலையும் என்னைத் தொட்டுவிட்டுப் போகிறது. நீங்களும் அப்படித்தான் போகிறீர்கள்." என்கிறாள். இதே வார்த்தையை மூன்றாம் பாகத்திலும் இளையபல்லவன் நினைத்து மஞ்சளழகிகாக வருந்துவது வாசகர்களை இரண்டாம் பாகத்தை நினைவுப் படுத்த வைக்கிறார்.

Thursday, April 16, 2009

சாண்டில்யன் எழுதிய 'கடல் புறா' - முதல் பாகம் சுருக்கம்

சமிபத்தில் ஒரு நாவலை படிக்க நான் இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டதில்லை. மூன்று பாகங்கள் கொண்ட இந்த சரித்திர நாவல் வீரராஜேந்திரன் காலத்தில் 'தமிழ் - கலிங்க' எல்லை விவகார சமயத்தில் நடக்கிறது. கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தில் புரிந்த அட்டூழியங்களுக்கு காரணம் ஏன் இருக்க கூடாது என்ற சிந்தனையில் இந்த நாவல் பிறந்ததுள்ளது. அநபாய குலோத்துங்கனின் ஸ்ரீ விஜயப் பயணத்தையும் இந்த நாவலில் சாண்டில்யன் சேர்த்துள்ளார்.

சரித்திர நிகழ்வுகளை வைத்து நாவலாக படிக்கும் அனுபவம் மிகவும் வித்தியாசமான ஒன்று. அதுவும் இந்த நாவலில் கப்பல் பயணத்தை பற்றி விபரிக்க போதும், போர் கப்பல் அமைப்புகளை பற்றி சொல்லும் போதும் நடுகடல் பயணத்தில் இருப்பது போல் இருந்தது.

இருபத்தியைந்து பதிப்பு அச்சான நாவலை பற்றி இதற்கு மேல் விளக்க எனக்கு தகுதியில்லை என்று தான் தோன்றுகிறது.



கதை சுருக்கத்துக்கு போவோம்.

புகார் நகரத்தில் இருந்து வீரராஜேந்திர சோழரின் சமாதான ஒலையுடன் பாலூர் பெருந்துறைக்கு சோழர்களில் படை தலைவனான இளையபல்லவன் என்று அழைக்கப்படும் கருணாகர பல்லவன் வருகிறார்.

அங்கு சுங்க அதிகாரியான சேந்தன் இளையபல்லவனை போகாமல் தடுத்து பாலூர் பெருந்துறையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்குகிறார். சோழர் இளவரசர் அநபாயன் கைது செய்யப்பட்டதையும், அவர் அந்த சிறைசாலையில் இருந்து தப்பித்ததையும் கூறுகிறார். இளையபல்லவனை ஒரு ரகசிய அறையில் மறைத்து வைக்கிறார் சேந்தன்.

கலிங்க படை தன்னை வருவதை உணர்ந்த இளையபல்லவன் தப்பித்து விருந்தினர் விடுதிக்கு நுழைக்கிறார். அங்கு, கடாரத்து இளவரசியையும் காஞ்சனாதேவியையும், அவள் தந்தை குணவர்மனையும் சந்திக்கிறார். குணவர்மனை கொல்லும் சதி நடப்பதை பற்றி இளையபல்லவன் சொல்கிறார். ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை ஆழும் ஜெயவர்மன் குணவர்மனின் சகோதரன். ஜெயவர்மன் கலிங்கத்துடன் நட்புறவு வைத்திருப்பதால் , கலிங்கத்தின் பாலூரில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை குணவர்மன் உணர்கிறார்.

குணவர்மனிடம் பேசிக் கொண்டு இருந்த போது 'வெண் புறா' அநபாயனின் செய்திக் கொண்டு அந்த அறைக்கு வருகிறது. புறா வந்த சில நாழிகளில் ஒரு காவலன் அநபாயன் அழைப்பதாய் சொல்லி அழைத்து செல்ல , அவனை கைது செய்ய தயார் நிலையில் கலிங்கத்து அரசன் பீமன் இருந்தான். சுங்க அதிகாரி போர்வையில் இருந்த சோழர் தூதன் சேந்தனும் கைது செய்யப்பட்டான்.

மறு நாள் மரணத்தை பற்றி நினைத்த சேந்தனை பார்த்து இளையபல்லவம் அநபாயன் நம்மை காப்பாற்ற வருவார் என்று நம்பிக்கை கொடுக்கிறார். இளையபல்லவனும், சேந்தனும் நீதிமன்றத்தில் அனந்தவர்மன் முன் நிறுத்தப்படுகின்றனர். அப்போது, அநபாயன் அனந்தவர்மன் முன் தோன்றி அவர்களை விடுவிக்க சொல்கிறார். காஞ்சனாதேவி அனந்தவர்மன் மார்ப்புக்கு குறிவைத்து வில்லோடு நின்றாள்.

தப்பித்து வந்த இளையபல்லவன் காஞ்சனை தன்னை காதலிப்பதை பற்றி தெரிந்துக் கொள்கிறார். பாலூரில் இருந்து தப்பிக்க அநபாயன் கடல் கொள்ளையரான அகூதா, அவன் சீடனான அமீர், கண்டிதேவன் உதவியை நாடுகிறார். அவர்களும் திட்டம் வகுத்து காஞ்சனையும், குணவர்மனையும் பாதுகாப்பாக தப்பிக்க வைக்கிறார்கள். ஆனால், அவர்கள் தப்பி செல்வதை பார்த்த பீமன் தன் படையோடு பின் தொடர்ந்து செல்கிறான். அவர்களை திசை திருப்ப இளையபல்லவன் அவர்களோடு சண்டை போடுகிறான். பலத்த காயங்களுடன் உயிரை துச்சமாக மதித்து இளையபல்லவன் சண்டை போட்டுக் கொண்டு இருக்க, இளையபல்லவன் நிலையை நினைத்து கடலில் காஞ்சனை பயணம் செய்வது போல் முதல் பாகம் முடிகிறது.

முதல் பாகத்தில் காட்சி விபரங்களை விட மிகவும் ரசித்தது வசனங்களை தான்.

காஞ்சனை அறையில் மறைந்திருந்த இளைபல்லவனை பார்த்து...
" நீ எதிரியா...?" காஞ்சனை.

"இல்லை"

" அப்படியானால் கள்வனாயிருக்க வேண்டும்"

"கள்வனுமல்ல..."

"அப்படியானால் தமிழனா ?"

இந்த கேள்வி மேலும் பிரபிப்பையே அளித்தது இளையபல்லவனுக்கு."கள்வனாயிராவிட்டால் தமிழனாயிருக்க வேண்டுமா ?" என்று வினவினான். தமிழர்களைத்தான் சில நாள்களாகக் கலிங்க அதிகாரிகள் சிறைக்குள் தள்ளி வருகிறார்கள்.


குணவர்மன் இளையபல்லவனிடம் தன் கதையை சொல்லும் போது, " இது உலக விசித்திரம். வேண்டாதவனிடம் பதவி ஒட்டிக் கொள்கிறது. வேண்டுபவனை வெட்டி விலக்கி தள்ளுகிறது." என்கிறார்.

நீதி மன்ற விசாரனையின் போது...

அனந்தவர்மன் " சோழர் வேறு இனம்; கலிங்கம் வேறு இனம்"
இளையபல்லவம் : மாந்தர் அனைவரும் ஒரே இனம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். தவிர இன்னொரு நாட்டவரின் அதிக்கத்தைவிட ஓர் இனம் தன் இனத்தின் மீதே நடத்தும் ஆதிக்கம் மிகக் கொடுமையானது. சரித்திரம் இதற்குச் சான்று.."
அனந்தவர்மன் : சரித்திரம் இதுவரை காணாத புதிய சான்றுகளை கலிங்கம் அளிக்கும்.


இந்த வசனத்தை படிக்கும் போது ஈழ பிரச்சனைக்கு கலிங்கம் முன் உதாரணமாக இருக்கின்றது என்று தான் தோன்றியது. பல இடங்களில் இப்படி பல ‘நச்’ வசனங்களும் உள்ளன.

பல ஆங்கில படத்தில் இருந்து கதை, வசனத்தை தழுவும் தமிழ் இயக்குநர்கள், இது போன்ற நாவல்களில் இருந்து கதை, வசனங்களை உரிமை வாங்கி எடுத்தால் எழுதுபவர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

புத்தக வாசகர்கள் ‘கடல் புறா’ கண்டிப்பாக படிக்க வேண்டிய சரித்திர நாவல்.

LinkWithin

Related Posts with Thumbnails