பெண்ணே உந்தன் அருகில்
நட்பின் பெருமையை உணர்ந்தேனே !
உன்னை நான் பிரிகையில்
காதலின் கொடுமையை அறிந்தேனே !
வருங்கால மணவாளனை பற்றி
கனவுகளைச் சொன்னாய் !
உன் காதலனாகத் தகுதியில்லை என்று
மறைமுகமாகக் காட்டினாய் !
உன் கனவு நாயகனுக்குத் தகுதியை
பயில நான் பல முறை முயன்றேன் !
எனக்கென்று ஒரு தனித்தன்மையை
இருப்பதை மறந்தேன் !
நட்பைக் கொண்டு
என் காதலை வென்றாய் !
நட்பாலே
என் காதலைப் பூட்டினாய் !
நானும், நீயும் நினைத்ததால்
நமக்குள் நட்பு வந்தது !
நான் நினைத்ததை
நீ நினைக்கும் வரை
நம்முள் காதல் வாராது !
நான் நினைத்ததை
நீ நினைக்கும் வரை...
நட்பாலே
என் காதல் பூட்டி இருக்கட்டும் !
நட்பின் பெயரில்
என் காதல் பாதுக்காக்கப் படட்டும் !
வீடு நெடுந்தூரம் - Short film
Book, Movies Offers
To Buy my books in flipkart
Wednesday, April 29, 2009
Tuesday, April 28, 2009
டிராபிக் ஜோக்ஸ்
டிராபிக் காஸ்டபிள் : வேகமாக வந்திருக்க... கோர்ட்ல கட்டுனா நூறு! இங்க கொடுத்தா அம்பது
ஓட்டுநர் : சார்... என் கிட்ட பணம் இல்ல
டிராபிக் காஸ்டபிள் : வேற என்ன இருக்கு...
ஓட்டுநர் : கிரடிட் கார்ட் இருக்கு..
டிராபிக் காஸ்டபிள் : நோ பிராப்ளம்... நாங்க எல்லா கிரடிட் கார்ட் அக்ஸப்ட் பண்ணுவோம்
ஓட்டுநர் : ????
****
டிராபிக் காஸ்டபிள் : வண்டிய நிருத்து... இன்ஷூரன்ஸ் பேப்பர் எடு..
ஓட்டுநர் : இன்ஷூரன்ஸ் நேத்தோட முடிஞ்சு போச்சு... போன சிக்னல்ல அம்பது ரூபா கொடுத்தேன்
டிராபிக் காஸ்டபிள் : அவங்க ஒயர்லஸ்ல தகவல் சொன்னதால தான் உங்க வண்டிய நிருத்துறேன்.. பணத்த எடு.
ஓட்டுநர் : ????
*****
ஓட்டுநர் : அது என்ன சார்...சரியா 99 ரூபா லஞ்சமா கேக்குறீங்க..?
டிராபிக் காஸ்டபிள் : இந்த மாசம் லஞ்சம் வாங்குற டார்கெட் தொடுறதுக்கு... அவ்வளவு தான் பாக்கி
*****
ஓட்டுநர் : என்ன சார் இவ்வளவு பணம் கேக்குறீங்க... உங்க சீனியர் ஆபிஸர் கிட்ட கம்ளைன்ட் பண்ணுவேன்
டிராபிக் காஸ்டபிள் : நானாவது இவ்வளவு கேட்டேன். என் சீனியர் டபுளா கேப்பாரு
ஓட்டுநர் : %$#^$#^$
********
ஓட்டுநர் : சார்.. ஏன் சிவப்பு, பச்ச சிக்னல் மாத்தி மாத்தி எறியுது ?
டிராபிக் காஸ்டபிள் : யாராவது கிராஸ் பண்ண... 'சிக்னல் கிராஸிங்' சொல்லி ஃபைன் போடுறதுக்கு...
ஓட்டுநர் : சார்... என் கிட்ட பணம் இல்ல
டிராபிக் காஸ்டபிள் : வேற என்ன இருக்கு...
ஓட்டுநர் : கிரடிட் கார்ட் இருக்கு..
டிராபிக் காஸ்டபிள் : நோ பிராப்ளம்... நாங்க எல்லா கிரடிட் கார்ட் அக்ஸப்ட் பண்ணுவோம்
ஓட்டுநர் : ????
****
டிராபிக் காஸ்டபிள் : வண்டிய நிருத்து... இன்ஷூரன்ஸ் பேப்பர் எடு..
ஓட்டுநர் : இன்ஷூரன்ஸ் நேத்தோட முடிஞ்சு போச்சு... போன சிக்னல்ல அம்பது ரூபா கொடுத்தேன்
டிராபிக் காஸ்டபிள் : அவங்க ஒயர்லஸ்ல தகவல் சொன்னதால தான் உங்க வண்டிய நிருத்துறேன்.. பணத்த எடு.
ஓட்டுநர் : ????
*****
ஓட்டுநர் : அது என்ன சார்...சரியா 99 ரூபா லஞ்சமா கேக்குறீங்க..?
டிராபிக் காஸ்டபிள் : இந்த மாசம் லஞ்சம் வாங்குற டார்கெட் தொடுறதுக்கு... அவ்வளவு தான் பாக்கி
*****
ஓட்டுநர் : என்ன சார் இவ்வளவு பணம் கேக்குறீங்க... உங்க சீனியர் ஆபிஸர் கிட்ட கம்ளைன்ட் பண்ணுவேன்
டிராபிக் காஸ்டபிள் : நானாவது இவ்வளவு கேட்டேன். என் சீனியர் டபுளா கேப்பாரு
ஓட்டுநர் : %$#^$#^$
********
ஓட்டுநர் : சார்.. ஏன் சிவப்பு, பச்ச சிக்னல் மாத்தி மாத்தி எறியுது ?
டிராபிக் காஸ்டபிள் : யாராவது கிராஸ் பண்ண... 'சிக்னல் கிராஸிங்' சொல்லி ஃபைன் போடுறதுக்கு...
Monday, April 27, 2009
"நான் வில்லனாக தான் நடிப்பேன்"- நடிகர் புஷ்பராஜ் பேட்டி
பிரபல வார இதழ் நிருபர் தங்கள் இதழில் நடிகர் புஷ்பராஜ் பேட்டியை பிரசுரம் செய்ய ஆசைப்பட்டு அவரை காண சென்றார். தேநீருடன் உபசரித்த நடிகர் புஷ்பராஜ் நிருபர் கேள்விக்கு பதில் சொல்ல தயார் ஆனார்.
நிருபர் : உங்க டைட் ஷெடுல்ல எங்களுக்கு டைம் ஒதுக்குனது ரொம்ப நன்றி...!
புஷ்ப்பராஜ் : ( கையில படமே இல்ல. என்ன பண்ணுறது) உங்கள மாதிரி இதழ்ல என் பேட்டி வரதுக்கு எனக்கும் ரொம்ப பெருமையா இருக்கு..!
நிருபர் : சரி... பேட்டிக்கு போவாமா ஸார்...!
புஷ்ப்பராஜ் : கண்டிப்பா...!
நிருபர் : ஹீரோவ அறிமுகமான நீங்க இப்போ வில்லனா நடிக்கிருங்க... ஏன் இந்த திடீர் முடிவு. மறுபடியும் ஹீரோவா நடிப்பிங்களா ?
புஷ்ப்பராஜ் : ( நான் என்ன ஹீரோவா நடிக்க மாட்டேனா சொன்னேன். எவனும் ச்சான்ஸ் தர மாட்டேங்கிறான்) ஹீரோவா நடிக்கிறது விட வில்லனா நடிக்கிறது ரொம்ப கஷ்டம். எல்லா படத்திலையும் ஹீரோனா நாலு பாட்டுக்கு டான்ஸ், அஞ்சு பாட்டுனு போய்டலாம். வில்லனா அப்படியில்ல ஒவ்வொரு படத்துல கொலைய வித விதமா பண்ணணும். ரேப் பண்ணனும். ஹீரோ கிட்ட அடிவாங்குறது மட்டும் இல்லாத, அவங்க அம்மா, தங்கச்சினு குடும்பத்துகிட்ட அடிவாங்குற மாதிரி சீன் வரும். அது எல்லாம் என்ன மாதிரி திறமையான கலைஞன் தான் செய்ய முடியும்.
சாகுற மாதிரி சீன் பார்த்த கூட வில்லன் பாத்திரம் தான் ரொம்ப வசதி. ஹீரோ அடிப்பட்டாலும் கடைசி வரைக்கும் சண்டை போடனும். தூப்பாகி குண்டு பட்டாலும், அவனே கத்திய வச்சி குண்டு எடுத்து ட்ரிட்மென்ட் எடுக்கனும். சாகும் போது துடிச்சு, கஷ்டப்படு, இம்சப்பட்டு செத்தா தான் ஜனக ஏத்துப்பாங்க ! ( ஜனக ஏத்துப்பாங்களோ இல்லையோ டைரக்டர் அப்ப தான் டேக் 'ஓ.கே' சொல்லுவாரு )
வில்லன் அவ்வளவு கஷ்டப்பட தேவையில்ல... படம் முழுக்க ஜாலியா, வசதியா வரலாம். பொண்ணுங்க, சுமோ, பங்களா ரொம்ப சந்தோஷமா இருக்கலாம். ஹீரோ ஒரு கத்தி வீசினாலும், தூப்பாகியால ஒரு குண்டு சுட்டாலும் டக்குனு செத்திடலாம். ரொம்ப சிரமப்படாம சாகலாம்.
ஹீரோ பணக்காரணாகனும்னா ரொம்ப கஷ்டப்படு உழைக்கனும். ‘விக்கரம்’ மாதிரி டரைக்டர் தான் ஒரே பாட்டுல பணக்காரனாக்குவாரு. மத்தவங்க பட முழுக்க ஹீரோவ ரொம்ப கஷ்டப்படு உழைக்க வைப்பாங்க. வில்லன் ஒரு சீன்ல பணக்காரன் ஆகலாம். எம்.பி, எம்.எல்.ஏ, மந்திரி உதவி வச்சி அடுத்த சீன்ல பணக்காரன் ஆகலாம். நம்ப ‘தமிழ் சினிமா’ பொருத்த வரை வில்லன் பெரும்பாலும் பணக்காரங்களா தான் இருப்பாங்க ! வில்லன முன்னுக்கு கொண்டு வர நேர்வழியே கிடையாது. குறுக்கு வழியில தான் முன்னுக்கு வருவான்.
இது எல்லாத்துக்கு மெல வில்லன நடிக்கிறதுக்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கு. ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் இல்ல இரண்டு ஹீரோயினோட தான் டூயட் பாடமுடியும். அதுவும் மெயின் ஹீரோயின் தொடமா நடிக்க வேண்டியது இருக்கும். ஆனா வில்லன் அப்படியில்ல... ஒவ்வொரு சீன்லையும் பத்து பொண்ணுங்களோட வரலாம். பெரிய பட்ஜெட் படமா இருந்தா ‘பிகினி’ போட்ட பொண்ணுங்க கூட வருவாங்க. இப்படி சந்தோஷமா, ஜாலியா இருந்துட்டு கடைசியா ஒரு சீன் மட்டும் அடிவாங்கி சாகனும். ஹீரோ ஒரு பொண்ண கட்டி பிடிக்குறதுக்காக படம் முழு கஷ்டப்பட்டு அடிவாங்கி ஜெய்க்கனும்.
ஒரே சமயத்துல வில்லனா நாலைஞ்சு படம் நடிக்கலாம். ஹீரோவ ஒண்ணு, இரண்டு படம் தான் நடிக்கம் முடியும்...
புஷ்பராஜ் பேசிக் கொண்டு இருக்க நிருபர் எழுந்து செல்ல தொடங்கினார்.
புஷ்பராஜ் : எங்க பதில் சொல்லி முடிக்கிறதுகுள்ள கலம்பிட்டீங்க....?
நிருபர் : இந்த பதிலே எங்க வார இதழ்ல இரண்டு பக்கம் வரும். இன்னும் நீங்க பேசி எல்லாம் பதிவு பண்ணா, அடுத்த வாரம் இதழ்ல முழுக்க உங்க பேட்டி மட்டும் தான் வரும்.
புஷ்பராஜ் நிருபரையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
நிருபர் : அடுத்த வாரம் வந்து இன்னொரு கேள்வி கேட்கிறேன். இத மாதிரி பதில் சொல்லுங்க. 'ஹாய் புஷ்பராஜ் !' சொல்லி இரண்டு பக்கம் உங்களுக்காக ஒதுக்கி தரோம்.
இப்படி சொல்லிவிட்டு நிருபர் 'எஸ்' ஆனார்.
“ஓ...இப்படி தான் எல்லாரும் 'பத்தி' எழுத்தாளரானங்களா...” என்று நடிகர் புஷ்பராஜ் மனதில் நினைத்துக் கொண்டார்.
நிருபர் : உங்க டைட் ஷெடுல்ல எங்களுக்கு டைம் ஒதுக்குனது ரொம்ப நன்றி...!
புஷ்ப்பராஜ் : ( கையில படமே இல்ல. என்ன பண்ணுறது) உங்கள மாதிரி இதழ்ல என் பேட்டி வரதுக்கு எனக்கும் ரொம்ப பெருமையா இருக்கு..!
நிருபர் : சரி... பேட்டிக்கு போவாமா ஸார்...!
புஷ்ப்பராஜ் : கண்டிப்பா...!
நிருபர் : ஹீரோவ அறிமுகமான நீங்க இப்போ வில்லனா நடிக்கிருங்க... ஏன் இந்த திடீர் முடிவு. மறுபடியும் ஹீரோவா நடிப்பிங்களா ?
புஷ்ப்பராஜ் : ( நான் என்ன ஹீரோவா நடிக்க மாட்டேனா சொன்னேன். எவனும் ச்சான்ஸ் தர மாட்டேங்கிறான்) ஹீரோவா நடிக்கிறது விட வில்லனா நடிக்கிறது ரொம்ப கஷ்டம். எல்லா படத்திலையும் ஹீரோனா நாலு பாட்டுக்கு டான்ஸ், அஞ்சு பாட்டுனு போய்டலாம். வில்லனா அப்படியில்ல ஒவ்வொரு படத்துல கொலைய வித விதமா பண்ணணும். ரேப் பண்ணனும். ஹீரோ கிட்ட அடிவாங்குறது மட்டும் இல்லாத, அவங்க அம்மா, தங்கச்சினு குடும்பத்துகிட்ட அடிவாங்குற மாதிரி சீன் வரும். அது எல்லாம் என்ன மாதிரி திறமையான கலைஞன் தான் செய்ய முடியும்.
சாகுற மாதிரி சீன் பார்த்த கூட வில்லன் பாத்திரம் தான் ரொம்ப வசதி. ஹீரோ அடிப்பட்டாலும் கடைசி வரைக்கும் சண்டை போடனும். தூப்பாகி குண்டு பட்டாலும், அவனே கத்திய வச்சி குண்டு எடுத்து ட்ரிட்மென்ட் எடுக்கனும். சாகும் போது துடிச்சு, கஷ்டப்படு, இம்சப்பட்டு செத்தா தான் ஜனக ஏத்துப்பாங்க ! ( ஜனக ஏத்துப்பாங்களோ இல்லையோ டைரக்டர் அப்ப தான் டேக் 'ஓ.கே' சொல்லுவாரு )
வில்லன் அவ்வளவு கஷ்டப்பட தேவையில்ல... படம் முழுக்க ஜாலியா, வசதியா வரலாம். பொண்ணுங்க, சுமோ, பங்களா ரொம்ப சந்தோஷமா இருக்கலாம். ஹீரோ ஒரு கத்தி வீசினாலும், தூப்பாகியால ஒரு குண்டு சுட்டாலும் டக்குனு செத்திடலாம். ரொம்ப சிரமப்படாம சாகலாம்.
ஹீரோ பணக்காரணாகனும்னா ரொம்ப கஷ்டப்படு உழைக்கனும். ‘விக்கரம்’ மாதிரி டரைக்டர் தான் ஒரே பாட்டுல பணக்காரனாக்குவாரு. மத்தவங்க பட முழுக்க ஹீரோவ ரொம்ப கஷ்டப்படு உழைக்க வைப்பாங்க. வில்லன் ஒரு சீன்ல பணக்காரன் ஆகலாம். எம்.பி, எம்.எல்.ஏ, மந்திரி உதவி வச்சி அடுத்த சீன்ல பணக்காரன் ஆகலாம். நம்ப ‘தமிழ் சினிமா’ பொருத்த வரை வில்லன் பெரும்பாலும் பணக்காரங்களா தான் இருப்பாங்க ! வில்லன முன்னுக்கு கொண்டு வர நேர்வழியே கிடையாது. குறுக்கு வழியில தான் முன்னுக்கு வருவான்.
இது எல்லாத்துக்கு மெல வில்லன நடிக்கிறதுக்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கு. ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் இல்ல இரண்டு ஹீரோயினோட தான் டூயட் பாடமுடியும். அதுவும் மெயின் ஹீரோயின் தொடமா நடிக்க வேண்டியது இருக்கும். ஆனா வில்லன் அப்படியில்ல... ஒவ்வொரு சீன்லையும் பத்து பொண்ணுங்களோட வரலாம். பெரிய பட்ஜெட் படமா இருந்தா ‘பிகினி’ போட்ட பொண்ணுங்க கூட வருவாங்க. இப்படி சந்தோஷமா, ஜாலியா இருந்துட்டு கடைசியா ஒரு சீன் மட்டும் அடிவாங்கி சாகனும். ஹீரோ ஒரு பொண்ண கட்டி பிடிக்குறதுக்காக படம் முழு கஷ்டப்பட்டு அடிவாங்கி ஜெய்க்கனும்.
ஒரே சமயத்துல வில்லனா நாலைஞ்சு படம் நடிக்கலாம். ஹீரோவ ஒண்ணு, இரண்டு படம் தான் நடிக்கம் முடியும்...
புஷ்பராஜ் பேசிக் கொண்டு இருக்க நிருபர் எழுந்து செல்ல தொடங்கினார்.
புஷ்பராஜ் : எங்க பதில் சொல்லி முடிக்கிறதுகுள்ள கலம்பிட்டீங்க....?
நிருபர் : இந்த பதிலே எங்க வார இதழ்ல இரண்டு பக்கம் வரும். இன்னும் நீங்க பேசி எல்லாம் பதிவு பண்ணா, அடுத்த வாரம் இதழ்ல முழுக்க உங்க பேட்டி மட்டும் தான் வரும்.
புஷ்பராஜ் நிருபரையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
நிருபர் : அடுத்த வாரம் வந்து இன்னொரு கேள்வி கேட்கிறேன். இத மாதிரி பதில் சொல்லுங்க. 'ஹாய் புஷ்பராஜ் !' சொல்லி இரண்டு பக்கம் உங்களுக்காக ஒதுக்கி தரோம்.
இப்படி சொல்லிவிட்டு நிருபர் 'எஸ்' ஆனார்.
“ஓ...இப்படி தான் எல்லாரும் 'பத்தி' எழுத்தாளரானங்களா...” என்று நடிகர் புஷ்பராஜ் மனதில் நினைத்துக் கொண்டார்.
Saturday, April 25, 2009
பிரம்மிக்க வைத்த சிறுவன்
பள்ளி, புத்தகம் எல்லாவற்றையும் விட ஒருவனுக்கு வாழ்க்கை எவ்வளவு கற்று தரும் என்பதற்கு இந்த சிறுவன் ஒரு மிக பெரிய உதாரணம்.
அவனை யூ ட்யூப்பில் பார்க்க..
அவனை யூ ட்யூப்பில் பார்க்க..
Friday, April 24, 2009
பசி
24 மணி நேரம் பிரௌசிங் !
அடையாளம் இல்லாத நாற்காலி !
ஸ்டேடஸ் என்ற பெயரில்
வீனாக்கிய காகிதங்கள் !
மற்றவர் முகத்தை விட
அதிகமாய் பார்த்த கணினி !
விரல் நுணி
வாசித்த கீ போட்...
வாதங்களை தனிப்பட்ட முறையில்
எடுத்துக் கொள்ளாத சில நண்பர்கள் !
நேரம் கெட்ட நேரத்தில்
காபி மெஷினில் குடித்த காபி !
தவறுகளை குறித்து வைத்து கொண்டு
சம்பள உயர்வு சமயத்தில்
நினைவு படுத்தும் மேலாளர்கள் !
இயந்திரங்களோடு இந்திரமாய்
இருந்து விட்ட வாழ்ந்துவிட்ட போதிலும்
‘நான் மனிதன்’ என்று உணர்த்துகிறது
- ‘பசி’ !!
அடையாளம் இல்லாத நாற்காலி !
ஸ்டேடஸ் என்ற பெயரில்
வீனாக்கிய காகிதங்கள் !
மற்றவர் முகத்தை விட
அதிகமாய் பார்த்த கணினி !
விரல் நுணி
வாசித்த கீ போட்...
வாதங்களை தனிப்பட்ட முறையில்
எடுத்துக் கொள்ளாத சில நண்பர்கள் !
நேரம் கெட்ட நேரத்தில்
காபி மெஷினில் குடித்த காபி !
தவறுகளை குறித்து வைத்து கொண்டு
சம்பள உயர்வு சமயத்தில்
நினைவு படுத்தும் மேலாளர்கள் !
இயந்திரங்களோடு இந்திரமாய்
இருந்து விட்ட வாழ்ந்துவிட்ட போதிலும்
‘நான் மனிதன்’ என்று உணர்த்துகிறது
- ‘பசி’ !!
Subscribe to:
Posts (Atom)